ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
(விசு கருணாநிதி, லோரன்ஸ் செல்வநாயகம்) தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழ கத்தின் உரையில் தெளிவுபடுத் துவதற்கு நான் திட்டமிட்டி ருந்தேன். இதனூடாக எமது திட்டம் சர்வதேச மயப்படுவதைத் தடுப்பதற்காக சிலர் செயற்பட்டு நோக்கத்தைத் திசை திருப்பி விட்டுள்ளனரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வரவு - செலவுத் திட்டம் மீதான விவாதத்தை முடித்து வைத்து ஜனாதிபதி நேற்று உரையாற்றினார். சுமார் 50 நிமிடம் சபையில் பேசிய அவர் மேலும் கூறியதாவது; வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு வரவு - செலவுத் திட்டத்தில் நிதியொதுக்கீடு செய்யப்படவில்லை எனச் சிலர் இனவாத ரீதியாகக் கருத்துக்களைக் கூறியுள்ளனர். பிரித்தானியாவில் இடம்பெற்ற …
-
- 5 replies
- 1.2k views
-
-
முள்ளிவாய்க்கால் படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள்: கொழும்பினை விடவும் புதுடில்லியே அஞ்சுகின்றது [ புதன்கிழமை, 08 டிசெம்பர் 2010, 18:15 GMT ] [ தி.வண்ணமதி ] மே 2009ல் விடுதலைப் புலிகளமைப்பு தோற்கடிக்கப்படுவதற்கு காரணகர்த்தாவாக இருந்தது கோத்தாபய ராஜபக்சதான். எல்லாவற்றையும் விட மேலாக கோத்தாபயவினது இராசதந்திரச் செயற்பாடுகள்தான் சிறிலங்காவினது போர்க்குற்ற விடயத்தில் இந்தியாவினை இன்னமும் வாய்திறக்க முடியாமல் செய்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. இவ்வாறு Ground Report என்னும் இணையத்தளத்தில் 'Vssubramaniam' எழுதியுள்ள அரசியல் ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பான ஆதாரங்களை இந்திய…
-
- 2 replies
- 893 views
-
-
வலிகாமம் வடக்கில் படைத்தரப்பு மீண்டும் மண் அணைகள் அமைப்பு - 10 டிசம்பர் 2010 நலன்புரி அமைப்புக்கள் போர்க்கொடி:- வலிகாமம் வடக்கில் படைத்தரப்பு மீண்டும் மண் அணைகள் அமைப்பு - GTN செய்தியாளர் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் மீண்டும் படைத்தரப்பு அமைக்கத் தொடங்கியிருக்கும் மண் அணைகள் தொடர்பில் இடம்பெயர்ந்த நலன்புரி அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன. அண்மையில் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தின் எல்லைக் கிராமங்களான இளவாலை வடக்கு இளவாலை வடமேற்கு மற்றும் யுத்தகபுரம் ஆகிய 3 கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியமர்வு அனுமதிக்கப்பட்டது. இந்தப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளினை உள்ளடக்கி படைத்தரப்பு புதிய மண் அணைகளை அமைத்து வருகின்றது. இதனா…
-
- 1 reply
- 806 views
-
-
சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி லியூ ஜியாபோவிற்கு நோபல் பரிசு வழங்கியிருப்பது மேற்கு நாடுகளின் பனிப்போர் மனப்பான்மையை காட்டுவதாக சீனா கூறியுள்ளது. சீனாவில் ஜனநாயக ஆதரவாளர் லியூ ஜியாபோவிற்கு இந்தாண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இது சீனாவிற்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. பரிசு வழங்கும் விழாவை புறக்கணிக்குமாறு உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்த சீனா, அந்த விழா, சீனாவில் ஒளிபரப்பப்படுவதை தடுத்து விட்டது. சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடந்த விழாவில் லியூவிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சீனா, இது மேற்கு நாடுகளின் பனிப்போர் மனப்பான்மையை காட்டுவதாக கூறியுள்ளது. http://www.dinamalar.com/Ne…
-
- 2 replies
- 1.2k views
-
-
இலங்கையில் மர்ம விமானம் அச்சத்தில் விமானப்படை! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-11 07:27:57| யாழ்ப்பாணம்] இலங்கையில் நேற்றுக் காணப் பட்ட மர்ம விமானம் ஒன்றின் காரண மாக விமானப்படை வட்டாரங்கள் அச்சத்தில் உறைந்துள்ளதாக செய் திகள் தெரிவிக்கின்றன. அவிசாவளையை அண்மித்த பிரதேசத்திலேயே குறித்த விமானம் தென்பட்டுள்ளது. அப் பிரதேசத்தின் கரந்தெனிய கொஹிலகெதர பிரதேசத்தில் மிக வும் தாழ்வாக பறந்த யஹலிகொப் டர் ஒன்று தரையிறங்க முற்படுவது போன்று தென்னை மர உயரத்துக்கு தாழ்ந்து வந்துள்ளதை பிரதேசவாசி கள் பலர் கண்டிருக்கின்றனர். அதன் பின்னர் யஹலிகொப்டர் திடீரென மேலெழுந்து பறந்துள் ளது. யஹலிகொப்டர் இலங்கை விமானப்படையினரின் யஹலி கொப்டரை ஒத்திருந்ததாக பிரதேச வாசிகள் கூறுகின்றனர். பொல…
-
- 1 reply
- 1k views
-
-
இலங்கைப் போர்க்குற்றவாளிக்கு சமாதனப் பரிசு கொடுத்து மகிழ்ந்த பிலிப்பீன்ஸ் அரசு இலங்கையில் இடம்பெற்ற போரில் பெருமலவிலான படுகொலைகளுக்குப் பொறுப்பாக இருந்த ராணுவ உயரதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் மகிந்த கத்துருசிங்கவுக்கு "குஸி சர்வதேச சமாதானப் பரிசு" கொடுத்து பிலிப்பீன்ஸ் அரசு கவுரவித்தது. நோபெல் சமாதான விருது வைபவத்தை பிலிப்பீன்ஸ், இலங்கை ஆகிய நாடுகள் புறக்கணித்ததோடு அதேநேரத்தில் தமக்குத் தாமே வழங்கவென போட்டிச் சமாதானப் பரிசுகளை பெயரிட்டு வழங்கி வருகின்றன. நோபெல் பரிசுக்கு சமமான ஆசியப் பரிசு என்று இந்தப் போலிச் சமாதான பரிசைப் போற்றியிருக்கும் இலங்கை ராணுவம் மேஜர் ஜெனரல் அவர்கள் சமாதானத்திற்காகப் பாடுபட்டதற்காக அவருக்கு இந்தப் பரிசு கிடைத்ததாகக் கூறியிருக்கிறது. …
-
- 1 reply
- 844 views
-
-
வியேத்நாம் போரின் கொடூரங்களை சொன்ன ‘ஓடி வரும் அந்த சிறுமியின் புகைப்படம்’ (கிம் சுக்) உண்மையை உரைத்த பிறகு போரை நிறுத்த,போராட்டம் நடத்த வேண்டிய அழுத்தத்தை உலகிற்கு கொடுத்தது, போர் முடிந்த பிறகும் அந்த சிறுமி இன்று வரை நம்முடன் உயிரோடு தான் இருக்கிறார். போரின் கொடுமையை தமிழினம் உரத்து கொடுத்த போது திரும்பி பார்க்காத சமூகம் இன்று வெளியாகும் காணோளிகளால் விழிப்படைந்து பார்க்கும் சமயம், அங்கு காப்பாற்ற மக்களும் இல்லை, பச்சைபடுகொலையை உணர்த்திய இசைபிரியாக்களும் இல்லை. பிணமாய் நாமும், படங்களை அவர்களும் துயரப்பட்டு கொண்டிருக்கிறோம். தொடர்ந்து படிக்க
-
- 0 replies
- 979 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு உத்தரவிடுக - 17 அமெரிக்க செனட்டர்கள் கிலரியிடம் கோரிக்கை அண்மையில் விக்கிலீக்கின் மூலம் பகிரங்கப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சிங்கள அரசாங்கம் கடந்த 25 வருட கால சிவில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்ததில் பெருமளவிலான போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருப்பதால் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் உடனடியாக சுதந்திரமான சர்வதேச விசாரணைகளுக்கு உத்தரவிட வேன்டுமென்று 17 அமெரிக்கச் செனட்டர்கள் ஒன்றாக கைய்யொப்பமிட்டு அனுப்பிவைத்துள்ள மகஜரில் கோரியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 58 செனட்டர்கள் அமெரிக்க ஜனாதிபதியிடம் முனவைத்த சுதந்திரமான விசாரணைகளுக்கான கோரிக்கையைத் தொடர்ந்து இந்த மகஜர் கொடுக்கப்பட்டிருக்கிறது. …
-
- 0 replies
- 886 views
-
-
ஆனமடுவ பகுதியில் நேற்று இரவு ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் * Saturday, December 11, 2010, 5:50 ஆனமடுவ, சங்கட்டிக்குளம் சந்தியில் நேற்று இரவு ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.சங்கட்டிக்குளத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான ஸ்டேன்லி சில்வா (வயது 44) எனும் வர்த்தகரே கொல்லப்பட்டுள்ளதாக அடையாளங்கானப்பட்டுள்ளது. நேற்றிரவு 8.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச்சுட்டினால் படுகாயமடைந்த குறித்த நபர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் சிலாபம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது …
-
- 0 replies
- 512 views
-
-
விசேட அதிரடிப்படை முகாம் அமைந்துள்ளது களவாஞ்சிக்குடி நீதிமன்றத்தை இயங்கச்செய்ய இணக்கம் * Saturday, December 11, 2010, 10:05 களவாஞ்சிக்குடியில் இயங்கிய நீதவான் நீதிமன்றத்தை 26 வருடங்களின் பின்னர் மீண்டும் இயங்கச்செய்;ய நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் இணக்கம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமை வியாழக்கிழமை நீதியமைச்சில் சந்தித்தார். அச்சந்திப்பில் களுவாஞ்சிக்குடியில் கடந்த 26 வருடங்களுக்கு முன்னர் இயங்கிய நீதிவான் நீதிமன்றத்தை மீண்டும் இயங்கச் செய்வது தொடர்பாக அவரது கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட இந்த நீதிமன்றத்தை மீண்டும் இயங்கச்செய்யும் வகையில் முதற்கட்டமாக வாரமொர…
-
- 0 replies
- 369 views
-
-
சிங்களவர்கள் பெரும்பான்மையாக மாற தமிழர்களே காரணமானார்கள் ! - பேராசிரியர் கீத பொங்கலன் உரை [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-11 06:47:47| யாழ்ப்பாணம்] பெரும்பான்மை இனம் என தம் மை எண்ணிக்கொண்டு சிறுபான் மைக் கட்டமைப்புக்குள் தமிழர்கள் இருந்துகொண்டதால் சிங்களவர்கள் பெரும்பான்மை இனமாக தோற்றம் பெற்றனர் என கொழும்பு பல்கலைக்கழக அரசறிவியல்துறை பேராசிரியர் ஈ.எஸ். ஐ.கீதபொங்கலன் தெரிவித்தார். பரமேஸ்வராக் கல்லூரி இயக்குனர் சபையினால் சேர் பொன். இராம நாதனின் நினைவுப் பேருரை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.அவர் மேலும் கூறியதாவது, தமிழன் எல்லாவற்றையும் இழந்து விட்ட நிலையிலும் எதையும் இழக்காதவன் போல் இருக்கின்ற இயல்பை எவ்வாறு விமர்சிக்காமல் இருக…
-
- 2 replies
- 753 views
-
-
தலைவரும் வருவார் ஈழமும் மலரும் உலகம் கட்டாயம் உணரும் ! – தூயவன் எமது பாசமிக்க அன்பார்ந்த உலகத்தமிழ் மக்களே! எல்லாம் முடிந்தது, தலைமை அழிந்தது, இனி நாம் அடிமைகள்தான் என்று பலர் எண்ணி கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அது உண்மையல்ல. தமிழீழ தேசத்தில் எங்கே பார்த்தாலும் தமிழர்களுடைய இடங்களில் சிங்களர்கள், சீனர்கள், இந்தியர்கள், வெள்ளையர்கள் மற்றும் பலர் எமது புனித மண்ணை மடிபறித்துள்ளது உண்மைதான். ஆனால் முன்பை விடவும் நாம் நமது தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களின் வழி நடத்துதலில் சர்வ தேசா£தியில் எல்லாத் துறைகளிலும் மிகவும் பலம் பெற்று வருகின்றோம், இது மறுக்க முடியாத, மறைக்க முடியாத உண்மையாகும். எமது தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்கள் தமிழீ…
-
- 0 replies
- 2.1k views
-
-
யாழ்.நகரக் கழிவுகளில் உர உற்பத்தி யாழ். நகரக் கழிவுகளை அகற்றி அக்கழிவிலிருந்து விவசாய தேவைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய உர வகைகளை உற்பத்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட பிரதம அமைப்பாளரும் மத்திய குழு உறுப்பினருமான கலாநிதி வி.தங்கராஜா கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்துள்ள கலாநிதி வி.தங்கராஜா; யாழ். நகரில் சேரும் கழிவு நீரை உரிய முறையில் அகற்றுவதில் பல இடையூறுகள் காணப்படுகின்றன. இந்நிலை தொடருமானால் அங்கு சுகாதார சீர்கேடுகள் ஏற்படக்கூடிய ஆபத்துகள் உள்ளன. இதனால் யாழ்.நகரில் சேரும் கழிவு நீரை குழாய் மூலமாக மண்டைதீவுக்கு எடுத்துச் சென்று அங்கு அதனை உரிய முறையில் உரமாக்கல் முறைகளுக்கு உட்…
-
- 0 replies
- 539 views
-
-
வட.கிழக்கில் 1,865 ச.கி.மீ. பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன: உபய மெதவல வெள்ளிக்கிழமை, 10 டிசம்பர் 2010 15:24 வடக்கு கிழக்கில் ஆயிரத்து 865 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டுள்ளன என்று இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்தார். 'கடந்த வாரத்தில் 3 இலட்சத்து 6 ஆயிரத்து 155 நிலக் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. முல்லைதீவு, யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இராணுவத்தின் பொறியியல் பிரிவு மற்றும் நிலக்கண்ணிவெடி அகற்றும் 7 நிறுவனங்கள் இணைந்து இப்பணிகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது" என்றார் sangamam.com
-
- 1 reply
- 395 views
-
-
அரசின் அறிக்கையில் கே.பியிடம் இருந்து பெறப்பட்ட சொத்து விபரங்கள் மாயம்! சனி, 11 டிசம்பர் 2010 01:59 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் பிரமுகர் கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனிடம் இருந்து பெறப்பட்ட சொத்துக்களின் விபரங்கள் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் வருடாந்த முன்னேற்ற அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். வரவு-செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவர் இவ்வாறு கூறினார். இவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:- ”கே.பியிடம் இருந்து பெறப்பட சொத்துக்களின் விபரங்கள் உள்ளடக்கப்படாது இருப்பதால் இவ்வறிக்கை அரைகுறையான ஒன்று. எனவே இதன் மீது விவாதம் நடத்த…
-
- 0 replies
- 574 views
-
-
புலிகளின் வெடி மருந்துகள், தொலைத் தொடர்புக் கருவிகள் குருநாகலைப் பிரதேசத்தில் மீட்பு [ பிரசுரித்த திகதி : 2010-12-11 06:01:08 AM GMT ] குருநாகலையை அண்மித்த ஹெட்டிப்பொலை பிரதேசத்திலிருந்து வெடி மருந்துகள், பல்வகை துப்பாக்கிகள் மற்றும் வோக்கிடோக்கி கருவிகள் என்பன பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. ஹெட்டிப்பொலையின் நாகொல்லான்கொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்தே அவை மீட்கப்பட்டுள்ளன. அவை புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டவையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. கடற்படையில் பணியாற்றும் ஒருவரின் சகோதரியொருவரே அவற்றை மறைத்து வைத்திருந்தார். கைப்பற்றப்பட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் ரிவோல்வர் மற்றும் …
-
- 0 replies
- 505 views
-
-
சிறைகளிலுள்ள கைதிகள் விடுவிக்கப்படவேண்டும் – நவநீதம்பிள்ளை வலியுறுத்தல் ஜனநாயகத்துக்காகப் பாடுபட்ட சிறைகளிலுள்ள கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவர் நவநீதம்பிள்ளை வலியுறுத்தியுள்ளார். மனித உரிமைகள் தினத்தை முன் னிட்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார். மாற்றுக்கருத்துக்களை கொண் டவர்களின் சுதந்திரத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவரான நவநீதம்பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.சீனாவின் நோபல் சமாதானப் பரிசை வென்றெடுத்த லியூ சியாலோவோ போன்ற மாற்றுக்கருத் துக்களுக்காக போராடுபவர்களை தெளிவாக குறிப்பிட்டுக்காட்டும் வகையில் ஜனநாயகத்தை மேம் படுத்துவதற்காக குரல் கொடுத்ததற்காக சிறையில் வைக்கப்பட்ட சகல கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என அவர் அழ…
-
- 0 replies
- 434 views
-
-
இன்று லெப்.கேணல் மனோஜ் அவர்களின் வீரவணக்க நாளாகும் தலைநகர் ஊற்றெடுத்த உப்பாற்றிலே 1971.02.05 அன்று உப்பாற்று மண்ணின் விடிவிற்காக மட்டுமல்லாமல் தமிழீழ மண்ணின் விடிவிற்காகவும் ஆண் மகன் ஒருவனை ஈன்றெடுத்தாள் அன்னை இராசமணி. தாய் தந்தையருக்கு மூன்றாவது இளம்பிறையாக தோன்றியவனுக்கு வசந்தன் என்று செல்லப் பெயரிட்டார்கள். ஆனால் தன் சமுதாயம் அடக்கி ஒழிக்கப்படுவதைக் கண்ட கண்களும் உடலும் தீப்பிழம்புகள் போல சீறிப்பாய்ந்தன. என் இனிய உள்ளங்களுக்கா இந்த நிலை? இதை மாற்றியமைப்பேன் என்று தன்னுள் ஆணையிட்டான். தன் வீட்டைகாப்பது மட்டுமல்லாமல் தன் இனத்தையும் காக்கப் புறப்பட்டான். எவன் எதிரியோ அவனை கொன்று குவிப்பதுவே அவன் செயல். தனக்கு வேண்டிய பயிற்சிகளை மிக வேகமாக கற்றுத் தேர்ந்…
-
- 5 replies
- 789 views
-
-
"ஒக்ஸ்போர்ட்டுக்குச் சென்றவர் நாட்டின் தலைவரே, நாட்டாமை அல்ல" கெஹகலிய சீற்றம் லண்டன் ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றுவதற்கு கொழும்பிலிருந்து நாட்டாமையை அனுப்பவில்லை எனவும் பொது நலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் நாட்டின் தலைவரேசென்றதாகத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளரும், தகவல், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல, புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பென தடை செய்த பிரிட்டிஷ் அரசு அதன் ஆதரவாளர்களை ஜனாதிபதிக்கு எதிர்ப்புத்தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்ய எப்படி அனுமதித்தது எனவும் கேள்வி எழுப்பினார்.இந்த விவகாரத்தில் பிரிட்டிஷ் சாக்குப் போக்குக் கூறி தப்பித்துக்கொள்ள முடியாதெனவும் அவர் சுட்டிக்காட்டினார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்தச் செய்தியாளர் மாநாடு …
-
- 5 replies
- 1.2k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு – தமிழ்க்கட்சிகளின் அரங்கம் சந்திப்பு தமிழ்த்தேசிய அரங்கம் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடாத்துவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பு உரியமுறையில் கிடைத்துள்ளதாகவும் இந்தச்சந்திப்பு நாளை சனிக்கிழமை பி.பகல் 4மணிக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கொழும்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாகவும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ்பிரேமச்சந்திரன் தெரிவிக்கின்றார். இக்கூட்டத்தில் தமிழ்கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் 10 கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளதுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வு, வடக்கு கிழக்கு மக்களின் மீளக்குடியமர்வு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி அரசுக்கு இதுவிடயங்க…
-
- 1 reply
- 484 views
-
-
இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டன என்று சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழு ஒன்றை கடந்த யூன் மாதம் நியமித்தார். இந்நிலையில் நாம் தமிழர்கள், குறிப்பாக புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் எழுதுகின்ற அதேவேளை ஏனையவர்களையும் எழுத வைக்கவேண்டும். யாரெல்லாம் எழுதலாம். அ) நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் தாமே எழுதலாம் ஆ) உறவுகள், நண்பர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் சார்பில் எழுதலாம் ஒருவர் ஒரு மின்னஞ்சல் மட்டுமே அனுப்பலாம்: அனுப்பவேண்டிய முகவரி - panelofexpertsregistry@un.org இந்த மின்னஞ்சலை வேறு யாரும் பார்க்க முடியாது. காலக்கெடு: டிசெம்பர் 15, 2010 - போர்க்குற்ற…
-
- 1 reply
- 669 views
-
-
அதிரடி பாதுகாப்பு தகவல்களை கசியவிட்டு வருகின்ற விக்கிலீக்ஸ் இணையத்தளம், தற்போது இலங்கை தொடர்பில் மற்றுமொரு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. வட கொரியாவினால் இலங்கை அரசாங்கத்துக்கு ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க திறைசேரியின் அதிகாரி ஸ்டுவார்ட் லெவேயினால், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரகசிய ஆவணம் ஒன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விக்கிலீக்ஸ் வழங்கிய இந்த ஆவணம் தொடர்பிலான தகவல்களை, அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை இன்று வெளியிட்டுள்ளது. இந்த செய்தியின்படி, வடகொரியா இலங்கை அரசாங்கத்;துக்கு அதிக அளவிலான ரொக்கட் லோஞ்சர்களை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது. அமெரிக்காவின்…
-
- 2 replies
- 744 views
-
-
ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் முதல் 5 நாடுகளில் வரிசையில் இலங்கை – மங்கள:- மனித உரிமைகளை மீறும் நாடுகள் பட்டியலில் இலங்கை முன்னணி இடத்திற்கு சென்றிருப்பதாகவும் உலகில் மனித உரிமைகளை மீறும் நாடுகள் பட்டியலில் இலங்கை முன்னணி இடத்திற்கு சென்றிருப்பதாகவும் ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் முதல் 5 நாடுகளில் வரிசையில் இலங்கை இடம்பெற்றிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையினதும் நாட்டின் தமலைவரினதும் தோற்றங்கள் வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு சர்வதேசத்தின் மத்தியில் சீர்கெட்டு போயுள்ள சந்தர்ப்பத்தில், அதற்கான சரியான வழிமுறைகளை கையாள்வதற்கு பதிலாக அரசாங்கம் தனது இராஜதந்திர மற்றும் பொருளாதார இயலாமையை மூடி…
-
- 1 reply
- 580 views
-
-
வவுனியாவில் கிணற்றில் வீழ்ந்து ஆறு வயது சிறுவன் மரணம் * Friday, December 10, 2010, 4:25 வவுனியா சாஸ்திரி கூழாங்குளம் பகுதியில் நேற்றைய தினம் ஆறு வயது சிறுவனொருவன் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளான். குறித்த சிறுவன் நண்பர்களுடன் விளையாடிவிட்டு கைகழுவுவதற்காக எத்தணித்தபோது தவறி கிணற்றில் வீழ்ந்துள்ளார். தற்போது பெய்து வரும் மழை காரணமாக கிணற்றில் அதிக நீர் நிரம்பியுள்ளதால் இரண்டு மணித்தியாலங்களின் பின்னரே சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது இது தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாகவும், இன்று காலை சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா வைத்தியசாலை வட்டாரம் தகவல் tamiltha..c0m
-
- 1 reply
- 323 views
-
-
இலங்கைக்கு அரசுக்கு விடுக்கப்பட்ட முறையான எச்சரிக்கை வெள்ளிக்கிழமை, 10 டிசம்பர் 2010 13:40 லண்டனில் நடைபெற்ற ஜனாதிபதிக்கெதிரான ஆர்ப்பாட்டம் இலங்கைக்கு விடுக்கப்பட்ட முறையான எச்சரிக்கை என்று சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் பயங்கரவாத ஒழிப்புத் தொடர்பான சிரேஷ்ட பேராசிரியர் ரொஹான் குணரத்தின அரசாங்கத்துக்கு சுட்டிக் காட்டுகின்றார். எனவே புலிகளின் பிரச்சாரங்களை முறியடிப்பதற்கு முன்னிலும் பார்க்க முனைப்புடன் வெளிவிவகார அமைச்சு செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகின்றார். அதற்கென பிரசாரம் மற்றும் தொடர்பாடல் வழிமுறைகள் மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் சுட்டிக் காட்டுகின்றார். அது மாத்திரமன்றி வெளிநாடுகளில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களை புலிகளின்…
-
- 0 replies
- 1.1k views
-