ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143281 topics in this forum
-
தமிழ் மண்ணின் விடிவிற்காக தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தந்து களமாடி வித்தான மாவீரர்களின் நினைவாய் தமிழர் தாயகமெங்கிலும் மாவீரர் நினைவாலயங்கள் அமைக்கப்பட்டு அவை புனிதமாகப் பேணப்பட்டு வந்தமையும் தமிழ் உறவுகள் உணர்வு பூர்வமாக அந்த நினைவாலயங்களுக்குச் சென்று தமது வணக்கங்களை செலுத்தி வந்ததும் அனைவரும் அறிந்ததே. தாயகத்தில் அண்மையில் ஏற்பட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்து உலக நாகரீகங்களுக்கெல்லாம் முரணாக சிங்கள அரசாங்கத்தினால்; எமது மாவீரர் துயிலுமில்லங்கள் சிதைக்கப்பட்டு உருத்தெரியாமல் அழிக்கப்பட்ட செய்தி உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை மட்டுமன்றி மனித நேயத்தை மதிக்கின்ற அனைவரையும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளன. மாவீரர்கள் மயானங்களைச் சிதைப்பதன் மூலமும் ஆவணங…
-
- 1 reply
- 1.3k views
-
-
மன்னாரில் அடை மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு வீரகேசரி இணையம் 11/25/2010 6:08:56 PM மன்னாரில் நேற்று புதன் கிழமை மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வந்தமையினால் மன்னாரின் பல கிராமங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதோடு மக்கள் இன்று இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். சாந்திபுரம், எமிழ்நகர், நூறுவீட்டுத்திட்டம், எழுத்தூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மன்னார் நகரப்பகுதியில் உள்ள பல வீடுகளும் மழை நீரில் முழ்கியுள்ளது. இந்நிலையில் மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையும் மழை நீரில் மூழ்கியுள்ளது. பாடசாலையினைச் சூழ மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் பாடசாலை மாணவர்கள் பெரு…
-
- 0 replies
- 458 views
-
-
புத்தரின் புனித தந்தத்தை தமிழ் மக்கள் வணங்குகின்றனரா? – நோர்வேயின் சந்தேகம் நவ 25, 2010 கண்டி தலதா மாளிகையில் உள்ள புத்தரின் புனித தந்தத்தை அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களும், வெளிநாட்டவர்களும் வணங்குகின்றனரா என்ற கேள்வியை சிறீலங்காவுக்கான நோர்வே தூதுவர் திருமதி ஹில்டே ஹரால்ஸ்ரட் எழுப்பியுள்ளார். நேற்று (24) தலதா மாளிகைக்கு பயணம் மேற்கொண்ட தூதுவர் தலதா மாளிகையின் பிரதம பௌத்த துறவியிடம் இந்த கேள்வியை எழுப்பியிருந்தார். எனினும் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் உட்பட பெருமளவான மக்கள் அங்கு தினமும் வருவதாகவும், அவர்கள் புனிததந்தத்தை வணக்குவதாகவும் மதகுரு நிலமே பிரதீப் டெல பண்டாரா தெரிவித்துள்ளார்.…
-
- 0 replies
- 674 views
-
-
Nov 25, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / மாவீரர் தினத்தை கொண்டாடுமாறு யாழில் துண்டுப்பிரசுரம் நாளை மறுதினம் (27) நடைபெறும் மாவீரர் தினத்தை உணர்வுபூர்வமாக கொண்டாடுமாறும், தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி உயிர்நீத்த விடுதலைப்புலிகளுக்கு அஞ்சலி செலுத்துமாறு தெரிவித்தும், இன்று (25) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தினுள் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன. உந்துருளியில் வந்தவர்கள் இந்த துண்டுப்பிரசுரங்களை அவசரமாக விநியோகித்துவிட்டு சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறீலங்கா இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தினுள் இந்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது அங்கு பரபரப்பை ஏற்ப…
-
- 0 replies
- 773 views
-
-
ஒரு போதும் என்னை முஸ்லிமாக உணர்ந்ததில்லை http://www.ponguthamil.com/mugangal-nirangal/mugangalnirangalcontent.asp?sectionid=3&contentid={1F2161FE-F8D7-4AAA-9252-2C5786BD87D4}
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ். வாகன விபத்தில் பெண்ணொருவர் பலி வீரகேசரி இணையம் 11/25/2010 1:19:52 PM யாழ்ப்பாணம் கே.கே.எஸ்.வீதி பன்றிக்கோட்டுப் பிள்ளையார் கோவில் சந்தியில் இன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு சைக்கிளில் சென்ற பெண்ணொருவர் மீது இலங்கை மின்சார சபையின் வாகனம் மோதியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். வண்ணார்பண்ணை முருகமூர்த்தி வீதியைச் சேர்ந்த சோபா நோபல் என்னும் 32 வயதான பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார். சடலத்தை யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர். _
-
- 1 reply
- 421 views
-
-
வத்தளையில் காணாமல் போன வர்த்தகர் சடலமாக மீட்பு _ வீரகேசரி இணையம் 11/25/2010 3:44:02 PM வத்தளையில் பகுதியில் நேற்று புதன்கிழமை காணாமல் போன வர்த்தகர் இன்று வெள்ளவத்தையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று காலை 10 மணியளவில் தலைமயிர் வெட்டுவதற்காக சென்ற வர்த்தகர் ஒருவர் காணாமல் போனதாக வத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று வர்த்தகர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வத்தளை அல்விஸ் டவுன் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய கணபதி குணரத்தினம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். __
-
- 0 replies
- 516 views
-
-
ஐ. நா. நிபுணர் குழுவுக்கு முறைப்பாடுகள் சமர்ப்பிக்க வேண்டிய கெடு முடிய இன்னும் 22 நாள்களே எஞ்சியிருக்கின்றன இந்த நிபுணர் குழு கடந்த யூன் 21 ஆம் நாள் நியமிக்கப்பட்து. அப்போது பான் கீ மூன் விடுத்த அறிக்கையில் பொறுப்புடமை ஒன்றுதான் சிறீ லங்காவில் நிரந்தர அமைதிக்கும் நல்லிணக்கத்துக்கும் அவசியமான அடித்தளமாக இருக்கிறதாக தான் நம்புவதாகவும் இந்த நிபுணர் குழு மூலம் அய்யன்னா அதற்கான ஆக்கபூர்வமான பங்களிப்பை செலுத்த முடியும் என்று குறிப்பிட்டார். அய்யன்னா நிபுணர் குழுவின் பணிகள் நான்கு மாதங்கள் கழித்து கடந்த செப்தெம்பர் 18 ஆம் நாளே தொடங்கியது. இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பிலான விசாரணைகளின் போது பன்னாட்டுச் சட்டங்கள் பின்பற்றப்பட்டனவா? என்பது தொடர்பாகவும் இ…
-
- 1 reply
- 839 views
-
-
ஈழநாதம் ஞாயிற்றுகிழமை, நவம்பர் 21, 2010 கற்களாய் உம்மை நட்ட காணிகளில் தேடுகின்றோம், ஒரு புற்களைக்கூட காணோம், நிர் மூலமாய்க் கிடக்கின்றன. நெய்விளக்குப் பந்தங்கள் நின்றெரிந்த திருவிடங்கள் எந்தப் பூதம் விழுங்கியது. எங்கள் கண்மணிகள் பெருநாள் வாரத்தின் ஐந்தாம் நாள் இன்று. உள்ளுக்குள் ஒரு சுடர் ஏற்றுவோம்! ஓ.............மாவீரர்களே கண்ணயரா கண்மணிகளே விண்ணேறிப்போனவரே விலாசமின்றிப்போவீரோ? பனிக்கின்றன விழிகள் பதைக்கின்றது நெஞ்சம் நினைக்க நினைக்க என்னென்னோ எல்லாம் செய்கிறது உடம்பில் ஆற்றாமல் அழுகின்றோம் அழுத படி தொழுகின்றோம்: அறிவீரோ? ஓ............மாவீரச் செல்வங்களே கற்களாய் உம்மை நட்ட காணிகளில் தேடுகின்றோம் ஒரு புற்களைக்கூட காணோம் நிர் மூலம…
-
- 3 replies
- 874 views
-
-
வியாழக்கிழமை, நவம்பர் 25, 2010 இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து எச்சரிக்கையுடனும் பல நிபந்தனைகளுடனும் விடுவிக்கப்பட்டு தற்போது கிளிநொச்சியில் கடமை புரியும் டாக்டர் சிவபாலன் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு சாட்சியம் அளித்துள்ளார். ஆரம்பத்தில் சாட்சியம் அளிக்க மறுத்துள்ளபோதும் பலரின் வற்புறுத்தலின் பேரில் இவர் வாக்கு மூலம் அளித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் இவரின் சகோதரர் உட்பட டாக்டர் சிவபாலன் பயணம் செய்து கொண்டிருந்த போது பிறிதொரு வாகனத்தால் மோதப்பட்டு இவரது சகோதரர் படுகாயமடைந்தார் டாக்டர் சிவபாலன் காயம் இன்றி பிழைத்துக்கொண்டார். என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தனது சாட்சியத்தில் பெருமளவான தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை சுதந்திர போராட்ட வீரர்களாக கருதி அ…
-
- 0 replies
- 1.3k views
-
-
வியாழக்கிழமை, நவம்பர் 25, 2010 எமக்கு உரிமையில்லாத இடங்களில் தேவையற்ற வகையில் பௌத்த விகாரைகளை அமைக்கக் கூடாது என்று ஐ.தே.கவின் தவிசாளர் காமினி ஜயவிக்கிரம பெரேரா நேற்று நாடாளுமன் றில் கூறினார். நாடாளுமன்றில் நேற்று இடம் பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: எந்த மதமாக இருந்தாலும் நாம் அதை மதிக்கவேண்டும். எமக்கு உரிமையில்லாத இடங்களில் பௌத்த விகாரைகளை அமைக்க வேண்டிய தேவை எமக்கில்லை. மக்களிடையே குரோ தத்தை ஏற்படுத்தி மீண்டும் ஒரு பயங்கரவாதம் உருவாக நாம் இடமளிக்கக்கூடாது. யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் ஏன் அப்படியான தொரு நிலைக்கு அடித்தளமிடுகிறீர்கள்? இலங்கை சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த …
-
- 0 replies
- 686 views
-
-
வியாழக்கிழமை, நவம்பர் 25, 2010 இலங்கை விஜயத்தின் போது கிருஷ்ணா தமிழ்க் கட்சிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலை மையிலான குழுவுடன் ஞாயிறு முற்பகல் 10 மணிக்கு பேச்சு இடம்பெறும். தமிழ்க் கட்சிகளின் அரங்கமும் அதே தினம் காலை 9 மணிக்கு இந்தியா இல்லத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவைச் சந்திக்கவுள்ளது. இதேவேளை, அமைச்சரின் யாழ்ப்பாண விஜயத்துக்கான ஆயத்தங்கள், ஏற்பாடுகளைக் கவனிக்கும் முகமாக நேற்று இந்தியத் தூதரக அதிகாரிகள் இருவர் யாழ்.நகர் வந்தனர். அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளனர். யாழ். நகரில் பிரதி இந்திய தூதரகத்தை இந்திய வெளிவிவகார அமைச்சர் 27…
-
- 0 replies
- 478 views
-
-
வியாழக்கிழமை, நவம்பர் 25, 2010 வடக்கில் நிலைகொண்டுள்ள ஒரு இலட்சம் இராணுவத்தினருக்கும் சீன அரசின் உதவியுடன் அங்கேயே வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதாகத் தெரிவித்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.அப்பாத்துரை விநாயகமூர்த்தி வடக்கில் அறிவிக்கப்பட்டுள்ள அதியுர் பாதுகாப்பு வலயங்களுக்கு பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளதா எனவும் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வரவுசெலவுத்திட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; வடக்கின் 30 வீதமான பகுதியான வலிகாமம் வடக்கு ஆதியுயர் பாதுகாப்பு வலயமென்ற பெயரில் இராணுவத்தின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது.48 கிரா…
-
- 0 replies
- 585 views
-
-
இலங்கை செல்லும் கிருஷ்ணாவுக்கு கருணாநிதி கடிதம் சென்னை, நவ.24,2010 இலங்கை தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு, அதிகார பங்கீடு தொடர்பாக உரிய ஆலோசனைகள் நடத்தி சரியான தீர்வுகள் காண வேண்டும் என்றும், அதன் மூலம் இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைகளையும், நலன்களையும் காப்பாற்ற வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சரை முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார். மூன்று நாள் அரசு முறைப் பயணமாக வியாழக்கிழமை இலங்கை செல்லும் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் அனுப்பியுள்ளார். அதன் விவரம் வருமாறு: "இலங்கை செல்லும் நீங்கள் இலங்கை தமிழர்கள் தொடர்பாக சில முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இலங்கையில் 30 ஆ…
-
- 7 replies
- 912 views
-
-
யாழில் சிங்கள வகுப்புக்கள் - 51 ஆவது படையணி ஆரம்பித்துள்ளது நவ 24, 2010 Font size: Decrease font Enlarge font வடபகுதியை முற்றுமுழுதாக சிங்களமயப்படுத்தி வரும் சிறீலங்கா அரசு அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு சிங்கள மொழியையும், பௌத்த மதத்தையும் திணிக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. யாழ் குடாநாட்டின் பொதுநிர்வாகம் அனைத்தையும் தமது கையில் எடுத்துள்ள சிறீலங்கா படைத்தரப்பு தற்போது சிங்கள மொழிக்கான பாட வகுப்புக்களையும் 51 ஆவது படையணியிடமே ஒப்படைத்துள்ளது. மானிப்பாய் பகுதியில் நிலைகொண்டுள்ள 51 ஆவது படையணியின் 3 ஆவது பிரிகேட் படையினரின் அனுசரணையுடன் தமிழ் மக்களுக்கான சிங்கள வகுப்புக்கள் மானிப்பாய் மகளிர் கல்லூரியில் கடந்த 6 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 530 views
-
-
Nov 24, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / இரண்டாவது பதவிக் காலத்தில் மகிந்தவின் பலம் எப்படி? – நாளை லண்டனில் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன உரை என்.எஸ்.எஸ்.பி கட்சியின் பொதுச் செயலர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன நாளை (வியாழக்கிழமை) லண்டனில் பொதுமக்களைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருப்பதாக, பிரித்தானிய தமிழர் பேரவை கடந்த வாரம் அறிவித்திருந்தது. இரண்டாவது பதவிக் காலத்தில் மகிந்தவின் பலம் எப்படி என்ற தலைப்பில் கலாநிதி விக்கிரமபாகு உரையாற்ற இருப்பதுடன், இதனைத் தொடர்ந்து மக்களின் கேள்விகளுக்கு பதலளித்து, மக்களின் கருத்துக்களையும் அவர் கேட்டறிய இருக்கின்றார். இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் மக்களிற்கான அரசியல் த…
-
- 0 replies
- 539 views
-
-
பொலிஸாரால் கூட்டாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட இலங்கைத் தமிழ் பெண் தற்கொலை செய்த விவகாரம் மீண்டும் சூடு! புதன், 24 நவம்பர் 2010 10:30 இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள ராயனூர் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த இலங்கைத் தமிழ் யுவதி ஒருவர் கடந்த மார்ச் மாதம் பொலிஸாரால் கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பின் தீக்குளித்து தற்கொலை செய்த விவகாரம் தற்போது மீண்டும் சூடு பெற்றுள்ளது. பத்மாவதி (வயது-28) என்பவரே பொலிஸாரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பின் தற்கொலை செய்தவர் ஆவார். இவரது கணவன் குமார். கரூரில் இருவருடங்களுக்கு முன் இரு குழந்தைகள் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டமை தொடர்பாக சந்தேகத்தில் குமாரையும் பசுபதி பாள…
-
- 3 replies
- 1.3k views
-
-
Nov 24, 2010 / பகுதி: செய்தி / கடத்தப்பட்ட ஊடகவியலாளர் மட்டக்களப்பில் அரச விழாவில் பங்கேற்பு? பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட ஐ.பி.சி, தீபம் மற்றும் ஜீ.ரி.வி ஆகிய ஊடகங்களில் பணியாற்றிவரும் திருலோகச்சந்தர் (37) என்ற ஊடகவியலாளர் கொழும்பில் உள்ள விமானநிலையத்தில் வைத்து கடத்தப்பட்டதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் அவர் தற்போது சிறீலங்கா அரசுடன் இணைந்து மட்டக்களப்பில் இடம்பெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டுள்ளதாக சில இணையத்தளங்களை மேற்கோள்காட்டி சிறீலங்காவில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. சுகவீனமுற்றுள்ள தனது குடும்பத்தினரை பார்ப்பதற்காக அவர் சென்றதாகவும், அதன்போது கடந்த புதன்கிழமை (17) அவரை சிறீலங்கா பு…
-
- 0 replies
- 657 views
-
-
http://www.yarl.com/files/101123_jaffna_reporter.mp3 நன்றி: ATBC
-
- 3 replies
- 1.1k views
-
-
மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசின் கொள்கைகளுக்கு பான் கீ மூன் எதிர்ப்பு: [Wednesday, 2010-11-24 12:53:40] மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசாங்கம் பின்பற்றி வரும் கொள்கைகளுக்கு ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கடைபிடிக்கும் சில கொள்கைகள் திருப்தி அடையக் கூடிய வகையில் அமையப் பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆயுதப் போராட்டங்களின் போது பொதுமக்களை பாதுகாப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயங்களை அவர் தெரிவித்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் தொண்டுகளை மேற்கொண்டு வரும் நிறுவனங்களும், தன்னார்வ த…
-
- 3 replies
- 696 views
-
-
Nov 24, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / வத்தளையில் தமிழ் வர்த்தகர் கடத்தப்பட்டார்? வத்தளையில் பகுதியில் வர்த்தகர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணியளவில் தலைமயிர் வெட்டுவதற்காக சென்ற வர்த்தகர் ஒருவரே காணாமல் போயுள்ளார். வத்தளை அல்விஸ் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய கணபதி குணரத்தனம் என்பவரே காணமல் போயுள்ளார். pathivu
-
- 1 reply
- 504 views
-
-
http://www.yarl.com/files/101123_vithyatharan.mp3 நன்றி: ATBC
-
- 6 replies
- 1.9k views
-
-
புலம்பெயர் தமிழ்க் குழுக்களின் ஊடான சிங்கள தேசத்தின் போர் வியூகம்! Posted by: on Nov 24, 2010 முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் ஆயுத பலத்தை நிர்மூலமாக்கியாகிவிட்டது. போர்க் களத்தில் நின்று போர் புரிந்த விடுதலைப் புலிப் போராளிகளை அழித்தாகிவிட்டது. சிங்கள இனவாதத்திற்கு எதிராகச் செயற்படக் கூடியவர்கள் என்ற சந்தேகிக்கப்படும் அனைவரையும் முடிந்தவரை தேடிப் பிடித்துக் கொன்றாகிவிட்டது. தப்பிப் பிழைத்த தமிழ் மக்களை முள்வேலி முகாம்களுக்குள் முடக்கி, சித்திரவதைகளுக்குள்ளாக்கி அவர்களது மனோ பலத்தைச் சிதைத்தாக்கிவிட்டது. சிங்கள அரசு எதிர்பார்த்த சிங்கள பௌத்த சிறிலங்காவிற்குள் ஈழத் தமிழர்கள் அடிமைப்படுத்தப்பட்டாகிவிட்டது. எல்லாவற்றையும் பக்காவாகச் செய்து முடித்து, தி…
-
- 4 replies
- 949 views
-
-
யாழ்க்குடாநாட்டில் மீன்பிடியில் ஈடுபடுகின்ற தென்னிலங்கைச் சிங்கள மீனவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டியுள்ளது‐GTN செய்தியாளர் 24 November 10 03:04 pm (BST) யாழ்க்குடாநாட்டில் மீன்பிடியில் ஈடுபடுகின்ற தென்னிலங்கைச் சிங்கள மீனவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டி விட்டதாக உள்ளுர் மீனவ அமைப்புக்கள் எச்சரித்துள்ளன. மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன எந்தக் காரணத்தைக் கொண்டும் தென்னிலங்கை மீனவர்களை யாழ்ப்பாணத்தில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டாமென அறிவிப்பினை விடுவித்திருக்கின்றார். ஆனாலும் கடற்றொழில் நீரியல் திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வமற்ற வகையில் விடுவிக்கப்படுகின்ற அறிவித்தல்களை அடுத்து அவர்கள் குடாநாட்டில் பல பகுதிகளிலும் மீனபிடியில் ஈடுபடுவத…
-
- 0 replies
- 492 views
-
-
அன்பு நிறை நெஞ்சங்களே... மாவீரர் நாள் நினைவுகளை இணையவலைப் பரப்பிலும் கொண்டு செல்ல உங்கள் ஆதரவு தேவை. நீங்கள் சார்ந்த இணையத் தளங்கள் - facebook போன்ற சமூக வலைப் பின்னல்களில் மாவீரர் நினைவுகள் தாங்கி வர வழி செய்திடுக. நன்றி. facebook அன்பர்களுக்கு.. (Profile picture) blogspot / wordpress / வேறும் இணையத்தள நிர்வாகிகளுக்கு..
-
- 1 reply
- 950 views
-