Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதன்கிழமை, நவம்பர் 3, 2010 வெள்ளைக் கொடி விவகார வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படிருக்கும் இந்த வேளையில், குறித்த விடயம் தொடர்பில் விமர்சனக் கட்டுரைகளை வரைய வேண்டாமென ஊடகவியலாளர் பெட்ரிகா ஜேன்ஸிற்கு கொழும்பு மேல் நீதிமன்ற மூன்று நீதியரசர்கள் குழு எச்சரித்துள்ளது. வெள்ளைக் கொடி விவகார வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதியரசர் தீபாலி விஜேசுந்தர உள்ளிட்ட மூன்று நீதியரசர்கள் குழு முன் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கின் பிரதான சந்தேகநபரான் சரத் பொன்சேகா நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டிருந்தார். இதன்போது பிரதான சந்தேகநபர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி நலின் உத்துவஹெட்டி பெட்ரிகா ஜேன்ஸிடம் குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டார். நீதிமன்றில்,…

  2. தமிழீழ தேசிய விடுதலையை நெஞ்சில் சுமந்து தலைவரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்து வீரகாவியமாகிவிட்ட மாவீரர்களை நினைவு கூறும் விதமாக தேசிய எழுச்சி நாளான மாவீரர் நாள் யேர்மனியில் 28.11.2010 அன்று டோர்ட்மூண்ட் நகரில் மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ளதென்பதை யேர்மனி வாழ் மக்களுக்கு அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துக்கொள்கிறார்கள். மாவீரர்நாள் நடைபெறும் முகவரி இன்னும் சில நாட்களில் அறியத்தரப்படும். நன்றி : http://eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=3191:---28112010----&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

  3. புதன்கிழமை, நவம்பர் 3, 2010 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிங்கள அக்கிரமிப்பு படைகளின் யாழ். கட்டளைத் தலைமையகம் பல்வேறு விசேட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளதாம். யாழ். மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தலைமையில் துரையப்பா மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனராம். இந்த கழியாட்ட விழாவில் அனைவரையும் பங்குபற்றுமாறு சிங்கள படைகள் கேட்டுள்ளனர். போரினால் காயப்பட்ட மனங்களை ஆற்றுப்படுத்தும் முயற்சியாகவே இப்படியான நிகழ்வை பார்க்கவேண்டும் என விளக்கம் வேறு அளித்து வருகின்றனர் சிப்பாய்கள். போகின்ற போக்கைப்பார்த்தால் கோயில் திருவிழாக்களையும் சிங்களப் படையினர் ஸ்பொன்சர் பண்ணி செய்வார்கள் போல் தெரிகின்றது. அடுத்த வருடம் நல்லூர் தேர் திருவிழா…

  4. Nov 3, 2010 / பகுதி: செய்தி / மாற்றுக் கருத்துக்களை வெளியிட்டால் அரசாங்கத்தால் கைது செய்யப்படுவர் - ஐதே.க குற்றச்சாட்டு தமக்கு அடிபணியாதோரை அடக்குவதற் காக அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி யின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப் பினர் பாலித ரங்கேபண்டார தெரிவித்துள்ளார். நாட்டினதும், பொதுமக்களினதும் பாது காப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத் தின் கடமை என்ற போதிலும்,அதற்காக மக் களின் உரிமைகள் நசுக்கப்படுவதனை ஏற் றுக்கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.மாற்றுக் கருத்துக்களை வெளியிடுவோர் இன்று கைது செய்யப்படுவதாகவும், உண்மையில் பாதுகாப்பு செலவினம் அதிகரிக்கப் பட்டதன் மூலம் மக்களுக்கு நன்மை கிட்டாது எனவும் அவர் தெரிவித்துள…

  5. Nov 3, 2010 / பகுதி: செய்தி / தமிழ் அரசியல் கைதியொருவர் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் கொழும்பு மகஸின் சிறைச் சாலையில் தடுத்துவைக்கப்பட் டுள்ள தமிழ் அரசியல் கைதியயாரு வர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். விசுவமடு முல்லைத்தீவை சேர் ந்த 42 வயதுடைய குணரெட்ணம் மனோகரன் என்பவரே தன்னை விடுதலை செய்யக்கோரி நேற்றுக் காலை 7.00 மணி தொடக்கம் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள கைதியின் கோரிக் கையில் பின்வருமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.கடந்த 26.10.2008 அன்று விசுவமடு முல்லைத்தீவில் வைத்து பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு …

  6. வலிகாமத்தில் படையினரின் புதிய காவலரண்கள் நவ 3, 2010 வலிகாமத்தின் பல பகுதிகளிலும் படையினர் புதிய காவலரண்களை அமைத்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சமான மனநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யுத்தம் நடைபெற்ற காலங்களில் காவலரண்கள் அமைக்கப்படாத இடங்களிலேயே தற்போது புதிதாக காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆனைக்கோட்டைச் சந்தி, ஆனைக் கோட்டை பள்ளத் தடி,கட்டுடைச் சந்தி, சுழிபுரம் சந்தி ஆகிய இடங்களில் இந்தக் காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளன sangathie

  7. நவம்பர் மாதம் தமிழர் வாழ்விலும் தமிழீழ வரலாற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்த மாதமாகும். எமது தமிழீழ மண்ணுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் லெப்டினன்ட் சங்கர் அண்ணா அவர்கள் அன்று தன்னை ஆகுதியாக்கி தமிழீழப் போராட்டத்தின் முதல் மாவீரர் ஆனார் .அன்று தொட்டு இன்றுவரை ஆயிரம்மாயிரம் மாவீரர்கள் தமிழீழ விடுதலைக்கு வித்திட்டு ஈழத்தமிழர் நெஞ்சில் அணையாத் தீபங்களாகிய மாவீரர்களை நினைவுகூறும் மாதம் நவம்பர் மாதமாகும். நவம்பர் மாதம் எமது தமிழீழ மண்ணுக்காய் மரணித்த மாவீரர்களை மனதில் நிறுத்தி அவர்கள் வழியில் தமிழர்கள் நிமிர்கின்ற மாதமாகும். மாவீரர்களின் உயரிய தியாகங்களே தமிழீழத்தின் உரமாக, தொடரும் போராட்டத்தை முன்னெடுக்கும் இளையோரின் உயிருக்குள் உறைந்திருக்கின்றன. தமிழீழத்தின் எதிர்கா…

    • 0 replies
    • 487 views
  8. ஈழப் பிரச்னையை நீர்த்துப் போகச் செய்தவர் கருணாநிதி என்கிற குற்றச்சாட்டை தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள் தமிழீழ ஆதரவாளர்கள். பதிலுக்கு ‘‘சகோதர யுத்தம்தான் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குக் காரணம்’’ என்கிறார் கருணாநிதி. இந்நிலையில், ‘‘ஈழப்போராளி குட்டிமணியை காட்டிக் கொடுத்தவர் கருணாநிதி’’ என்று பழ.நெடுமாறன் பேசியிருப்பது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 25-ம் தேதி ராணி சீதை மன்றத்தில் நடந்த கவிஞர் காசி ஆனந்தனின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பழ.நெடுமாறன், வைகோ, அ.தி.மு.க இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் பழ.கருப்பையா என பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.பேச்சில் ஹைலைட்டாக இருந்தது பழ.நெடுமாறனின் பேச்சுத்தான். கருணாநிதி ஈழப்போ…

  9. முகவரி தந்த தலைவன் பிரபாகரன், தமிழ்த் தேசிய அடையாளம் நவம்பர் 27 - இணையத்தில் அகல் அஞ்சலி செலுத்துவோம் நீக்ரோக்களுக்கு அடுத்தபடியாக, ஆங்கிலேயர்களால் கொத்தடிமைகளாக பயன்படுத்தப்பட்ட ஓர் இனம் தமிழினம் தான். மலேசியா(சிங்கப்பூர்,) பர்மா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, பிஜி போன்ற பல காலனியாதிக்க பிரதேசங்களை வளப்படுத்த, 200 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழர்கள் அங்கெல்லாம் “ஓட்டிச்” சொல்லப்பட்டனர். இந்திய இனங்களிலேயே இந்தச் “சிறப்பைப்” பெற்ற ஒரே இனம் தமிழினம் தான். எனவே, இந்திய இனங்களிலேயே, கணிசமான அளவு பல வெளிநாடுகளில் வாழும் ஒரே இனம், தமிழினம் தான். இலங்கையிலே வந்தேறி சிங்களவர், மண்ணின் மைந்தர்களான தொல்குடித் தமிழர்களை வதை செய்ய, இந்தியா தனது விடுதலை நாள் முதல் இன்றுவரை, உதவியது …

  10. பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் நினைவு நாள் இன்று Posted by: on Nov 2, 2010 தமிழீழத்தின் தளபதிகளில் ஒருவனாகவும், அரசியல் தலைவனாகவும் இருந்து தமிழர்களின் வாழ்வில் விடிவைப்பெற்றுத்தர துடியாய் துடித்து உலகெலாம் ஓடித்திரிந்த எமது அன்புக்குரிய பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவை அணைத்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழினத்தின் இருப்புக்காக, அதன் மூச்சுக்காக உழைத்த அந்த உத்தமன் இன்று எம்மத்தியில் இல்லாவிட்டாலும், அனைவரினதும் மனங்களில் குடிகொண்டுள்ளான். இவனது நினைவுடன் நாம் ஒன்றுபட்டு இறுதிவரை விடுதலைக்காக உழைப்போம். அதுவே விடுதலைக்காக போராடி களத்தில் வீழ்ந்த மாவீரர்களுக்கு செய்யும் அஞ்சலியாகும். பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் வீரமரணம் குறித்து தம…

  11. ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 17 பிக்கு மாணவர்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டமைக்கும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த 29 பேர் கைதுசெய்யப்பட்டமைக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றது. பல்கலைக்கழக உபவேந்தரின் சதிமுயற்சியினாலேயே 17 பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிக்கு மாணவர் ஒருவர் தெரிவித்தார். உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடுவதற்கு முயற்சித்ததாகவும் ஆனால், அவர் அங்கு இல்லாததால் உயர் கல்வி அமைச்சின் செயலாளரை இன்று தாம் சந்தித்துக் க…

    • 0 replies
    • 466 views
  12. வெள்ளைக் கொடி வழக்கு விசாரணைக்காக இன்று நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட சரத் பொன்சேகாவை நெருங்கிச் செல்வதற்கு ஊடகவியலாளர்களை பொலிசார் அனுமதிக்கவில்லை. அவரைப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதாக இருந்தாலும் தூரத்தில் இருந்தே எடுத்துக் கொள்ளுமாறு பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் கண்டிப்பான தொனியில் ஊடகவியலாளர்களிடம் எச்சரித்திருந்தார். அத்துடன் சரத் பொன்சேகா நீதிமன்ற வளாகத்தினுள் நுழைந்தவுடன் அவரை ஊடகவியலாளர்கள் உட்பட யாரும் நெருங்க முடியாத வண்ணம் சீருடை மற்றும் சிவில் உடை தரித்த பெருமளவான பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஆயினும் பொலிசாரின் கடுமையான கண்டிப்பையும் மீறி ஊடகவியலாளர்கள் சரத் பொன்சேகாவை நெருங்கிச் சென்று புகைப்படம் எடுத்திருந்தனர். பொன்சே…

    • 1 reply
    • 1.3k views
  13. விடுதலைப் புலிகள் தடை நீட்டிப்பு விவகாரம்: தீர்ப்பு தள்ளிவைப்பு விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடையை நீட்டிப்பது தொடர்பான தீர்ப்பாயத்தின் விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடையை நீட்டிப்பது தொடர்பாக நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையிலான தீர்ப்பாயம் விசாரணை நடத்தி வருகிறது. புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையில் நேரில் ஆஜராகி வைகோ முன் வைத்த வாதம்: தமிழ் ஈழத்தை அடைவதற்காக விடுதலைப் புலிகள் போராடுவது தமிழ்நாட்டையும் அதில் சேர்த்துகொள்வதற்காகவே என்றும், இவர்களது போராட்டத்தால் இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல்,…

  14. வரலாற்றுத் தவறுகளை மறந்து செயற்படலாகாது [ தினக்குரல் ] - [ Nov 01, 2010 18:55:18 GMT ] அமைதிச் சூழ்நிலையைப் பயன்படுத்தி தென்பகுதியிலிருந்து ஏ9 வீதியூடாக யாழ்ப்பாணத்தை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிப்பது போன்றே இச்சுற்றுலாப் பயணிகளினால் ஏற்படும் பிரச்சினைகளும் யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதை அண்மைக்கால சம்பவங்கள் மூலம் அறியக் கூடியதாகவுள்ளது. கலை, கலாசார சீரழிவுகள் மட்டுமன்றி திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், இன முறுகல்கள் ஏற்பட்டு விடக்கூடிய பாரதூரமான சம்பவங்களும் கடந்த சில நாட்களுக்கிடையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளமை அமைதியை, சமாதானத்தை, இன சௌஜன்யத்தை விரும்புவோர் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தைய…

  15. இலங்கைக் கடல் படையினரின் தாக்குதலில் இந்தியாவின் தமிழக மீனவர்கள் 15 பேர் வரை நேற்று காலை மோசமாக காயம் அடைந்துள்ளார்கள் என்று தமிழ் நாட்டில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ் நாடு கரையோர பகுதி மீனவர்கள் சங்க தலைவர் NJ Bose இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சர்வதேச கடலோர எல்லைக்கு அருகில் உள்ள நடுக்கடலுக்கு பக்கத்தில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்றும் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் வெறும் கையோடு திரும்பி வந்திருக்கின்றனர் என்றும் இம்மீனவர் சங்க தலைவர் தெரிவித்து உள்ளார்.http://www.tharavu.com/2010/11/15.html

    • 2 replies
    • 656 views
  16. இலங்கை அரசோடு இணைந்த யாழ்ப்பாணத்தில் நடிகை அசின் நடத்திய கண் சிகிச்சை முகாமில் சிகிச்சை பெற்ற பலர் கண் பார்வை இழந்துள்ளனர். இதற்குப் பொறுப்பேற்று நடிகை அசின் பதில் சொல்ல வேண்டும். இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கு விழா (ஐஃபா), தமிழ்த் திரைப்பட உலகம், தமிழர் இயக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிர்ப்பால் படுதோல்வியில் முடிந்தது. அதன் பிறகு இந்தி நடிகர் சல்மான் கானுடன் இணைந்து நடித்த ‘ரெடி’ திரைப்பட படபிடிப்பிற்காக இலங்கை சென்ற நடிகை அசின், படபிடிப்பு முடிந்ததும் இலங்கை அரசின் விருந்தினராக தங்கியிருந்தார். அப்போது சிறிலங்க அதிபர் ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்சவின் உதவியுடன் தமிழர் பகுதிகளில் கண் சிகிச்சை முகாம் நடத்தச் சென்றா…

    • 1 reply
    • 1.1k views
  17. வணக்கம், Gather Page இணையத்தளம் மாணவர்களின் கல்வி கணணிமயப் படுத்தவேண்டும் என்பதனையும் தரமான கல்வி இலவசமாக கிடைக்க வேண்டும் என்பதனையும் அடிப்படையாகக் கொண்டு ITSO அமைப்பினரினால் 2010 புரட்டாதி மாதம் ஆரம்பிக்கப்பட்டது. எமது சமூகம் போரினாலும் வேறு பல காரணிகளினாலும் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. கடந்த காலங்களில் வெளிவந்த சாதாரண , உயர்தர மற்றும் 5 ம் ஆண்டு புலமைப் பரீட்சை முடிவுகளும் அதனயே உறுதிப் படுத்துகின்றன. வறுமை, அதிகரித்துச் செல்லும் கல்விக் கட்டணங்கள், தரமான கல்விச் சேவை இலவசமாக கிடைக்காமை போன்ற பல்வேறு காரணிகளால் எமது மாணவர்கள் தமது கல்வியினை தொடர முடியாது கஷ்டப்படுகின்றனர். இதற்க்கான தீர்வாகவே Gather Page இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்ட…

    • 7 replies
    • 11.7k views
  18. திங்கட்கிழமை, நவம்பர் 1, 2010 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்கு பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் லா கோர்னியூவ் நகரில் நினைவுச் சிலை ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பாரிஸிலுள்ள தமிழர்கள் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இந்த விடயம் குறித்து தகவல் அறிந்த பிரான்ஸிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் உடனடியாக சிலை அமைக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்துமாறு பிரான்ஸ் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் குறித்து நாம் வெளிவிவகார அமைச்சில் வினவியபோது வெளிவிவகார அமைச்சும் அதனை உறுதி செய்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அரசியல் பிரிவுப் பொற…

  19. 02.11.2000 அன்று முல்லைக் கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்பட்ட வழங்கல் நடவடிக்கையை முறியடிக்க வந்த சிறிலங்கா கடற்படையின் சுற்றுக்காவல் கலங்களை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சல்மான்(இரும்பொறை), லெப்.கேணல் கதிர்காமரூபன்(பெத்தா), மேஜர் இலக்கியன், கப்டன் குமாரவேல், கப்டன் சதாசிவம், கப்டன் வல்லவன் ஆகிய கடற்கரும்புலிகளினதும், லெப்.கேணல் சதீஸ்குமார் உட்பட்ட கடற்புலிகளினதும் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாய்மண்ணின் விடியலுக்காய் கடற்தாயின் மடியில் காவியமான இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.

  20. முல்லைத்தீவு மீனவர்களின் வலைகளைச் சேதப்படுத்தும் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள். தடுத்து நிறுத்துமாறு மீள்குடியேற்ற பிரதி அமைச்சரிடம் கோரிக்கை‐ முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மீனவர்கள் கடலுக்குள் தடைகளின்றி சென்று மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், பெரும் எண்ணிக்கையில் அத்துமீறி வருகின்ற இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகளினால் தமது வலைகள் சேதமாக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அத்துமீறி கரையோரம் வரையில் வந்து மீன்பிடிக்கின்ற இந்திய மீனவர்களின் வருகையைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு முல்லைத்தீவு மீனவர்கள் மீள்குடியேற்ற பிரதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். யுத்தமோதல்கள் மற்றும் இடப்பெயர்வு காரணமாக அனைத்…

    • 4 replies
    • 710 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.