Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ‘ஆரூர் சோழனின்’ பிரம்மதேயம் திராவிடம் – அரசியலில் ஆரியத்தோடு சமரசமாகி வருகிறது. திராவிட அரசியல் – ஆரிய அரசியலுக்கு அடிபணிந்து கிடப்பது எல்லோருக்குமே தெரியும். இப்போது கலை – பண்பாட்டுத் துறைகளிலும், திராவிடர் அடையாளத்தை ஆரியத்தோடு சமரசம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். ‘திராவிடன்’ என்பது ஆரிய எதிர்ப்பு உணர்ச்சிச் சொல் என்றார் பெரியார். ‘ஆரிய மாயை’ எனும் ஆய்வு நூலில் அண்ணாவும் அதையே வழி மொழிந்தார். ஆனால், பெரியார் – அண்ணாவின் அடையாளம் அரசியலில் தன்னிடம் மட்டுமே இருக்கிறது என்று மார்தட்டும் கலைஞர் கருணாநிதியின் நிலை என்ன? ஜெயலலிதா தன்னை பச்சைப் பார்ப்பனராகவே அடையாளம் காட்டிக் கொள்கிறவர். ‘இந்து’த்துவா, கெள்கையில் ஊறிப் போய் நிற்பவர். அதில் எந்தக் கருத்து மாறுபாடுகளு…

  2. செட்டிபாளையம் முகாம் படையினர் வெளியேற்றம். மட்டக்களப்பு நகருக்கு தெற்கே மட்டக்களப்பு – கல்முனை சாலையில் உள்ள செட்டிபாளையம் சிறிலங்கா விசேட அதிரடிப்படை முகாம் கடந்த வாரம் அகற்றப்பட்டுள்ளது. பொதுமக்களின் வாழ்விடங்கள் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத்துக்குரிய கட்டிடம் மற்றும் நெசவு நிலையத்திற்குரிய கட்டிடங்களை கொண்டு 1990ம் ஆண்டு காலப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இந்த முகாமினை சிறிலங்கா படையினர் விட்டுச் சென்றதுடன் மக்களின் வாழ்விடங்களும் தற்போது உரியவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 1990ம் ஆண்டுகாலப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இந்த முகாம் துவக்க காலத்தில் மிகக்குடுமையான சித்திவதைக்கும் மற்றும் கைது நடவடிக்கைகளுக்கும் பெயர்போன முகாமாக இருந்தது இங்கு குறிப்பி…

  3. மட்டு.வில் காட்டுயானையின் தாக்குலுக்கு ஒருவர் இலக்காகியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் புறபகுதியில் அமைந்துள்ள தாந்தாமலை பிரதேசத்தில் காட்டுயானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் மட்டு. போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 67வயது காத்தமுத்து சோதிலிங்கம் என்பவரே இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியவராவார். நேற்று மாலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக மீனகம் செய்தியாளர் தெரிவித்தார். வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்புகையில் தெரிவத்தை என்னும் காட்டுப்பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றதாக மேலும் தெரியவருகின்றது. http://meenakam.com/2010/10/28/12275.html

  4. புகலிடம் கோருவோர் மீது மிகக்கடுமையான விசாரணை –அவுஸ்த்திரேலியா அவுஸ்த்திரேலியாவில் புகலிடம் கோரும் ஈழத்தமிழ் ஏதிலி மக்களின் விண்ணப்பங்களில் அதிகளவிலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இது சம்பந்தமாக அவுஸ்த்திரேலிய உள்விவகார அமைச்சு விடுத்துள்ள தகவலில் சட்டவிரோதமான முறையில் கடல் வழியைப்பயன்படுத்தி அவுஸ்த்திரேலியாவுக்குள் பிரவேசிக்கும் புகலிடக்கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டு மிகக்கடுமையாக விசாரிக்கப்படுவர். புகலிடம் கோருவதற்கான சரியான காரணம் முன்வைக்கத்தவறும் பட்சத்தில் இலங்கையர்கள் மீளவும் அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்படுவர். கடந்த சில மாதங்களில் அதிகளவிலானான இலங்கை புகலிடக்கோரிக்கையா…

  5. உள்ளுராட்சி திருத்தச் சட்டத்தை எதிர்த்து கூட்டமைப்பு வழக்குத்தாக்கல். உள்ளுராட்சி தேர்தல்களுக்கு எதிராக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நேற்று சிறிலங்காவின் உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் ஒன்றைச் செய்துள்ளது. உள்ளுராட்சி தேர்தல்கள் திருத்தத்தில் சிறுபான்மை இனக்கட்சிகளைப் பாதிக்கும் பல சரத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்து இந்த வழக்குத் தாக்கலினை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு செய்துள்ளது. இந்த உள்ளுராட்சி திருத்தச் சட்ட மூலம் வரவு செலவுத்திட்ட விவாதத்திற்கு முன்னர் வர இருந்த போதிலும் சிறுபான்மை கட்சிகளுடன் பேசி ஒரு இணக்கப்படாட்டிற்கு வர சிறிலங்கா அரசு எண்ணியதால் இந்த தேர்தல் திருத்தச்சட்ட மூல விவாதம் வரவு செலவுத் திட்டத்திற்கு பின்னர் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவ…

  6. வியாழக்கிழமை, அக்டோபர் 28, 2010 vadamaradchi east வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பிரிவில் மீள்குடியேறியுள்ள மக்கள் அங்கு தொழில் வாய்ப்பின்றி அவதிப்படுகின்றனர். வடமராட்சி கிழக்கு பிரதேச மக்களின் பிரதான வாழ்வாதார தொழிலான கடற்றொழில் இன்னமும் முறையாக ஆரம்பிக்கப்படவில்லை. வடமராட்சி கிழக்கு பிரதேசத்தை ஆக்கிரமித்த சிங்களப்படைகள் அங்கு நூற்றுக்கணக்கான பொதுமக்களின் மீன்பிடி படகுகளை கைவசப்படுத்தினர். பின்னர் இதுவரை இந்த படகுகள் பொதுமக்களிடம் ஒப்படைக்கவில்லை. இது குறித்து கடந்த 20 ஆம் திகதி மருதங்கேணி பிரதேசசபையில் நடந்த கூட்டத்தில் கடற்றொழில் சங்கங்களால் கேள்வி எழுப்பட்டது. இதன் போது கருத்துத் தெரிவித்த பிரதேச படைகளின் கட்டளை அதிகாரியான கேணல் ஜெயத்திலக்க இப்பகுதியை …

  7. வடபகுதியில் 4,575 இராணுவக் குடியிருப்புக்கள்? அக் 28, 2010 வடபகுதியில் வன்னியிலும், யாழ் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இதுவரையில் 4,575 வீடுகளை சிறீலங்கா இராணுவம் நிர்மானித்துள்ளதாக சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல்ல தெரிவித்துள்ளார். வடக்கின் வசந்தம் என்ற திட்டத்தின் அடிப்படையில், சிறீலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா தலைமையில், சிறீலங்கா அரசின் துணையுடன் இவை நிர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதனிடையே, இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள இந்த குடியிருப்புக்கள் சிங்கள மக்களுக்கும், இராணுவத்தினரின் குடும்பங்களுக்குமே பெருமளவில் வழங்கப்படுவதாக வன்னி தகவல்கள் தெரிவித்துள்ளன. sangathie

  8. யாழ் நகரப் பகுதியில் அமைந்திருக்கின்ற தந்தை செல்வா நினைவுத் தூபி இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளது ‐ ஜீரிஎன் செய்தியாளர் 27 October 10 03:48 pm (BST) யாழ் நகரப் பகுதியில் அமைந்திருக்கின்ற தந்தை செல்வா நினைவுத் தூபி இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளது. அங்கு அலங்கரிப்பிற்காக வைக்கப்பட்டிருந்த மரங்கள் யாவும் வெட்டி எறியப்பட்டுள்ளன. முற்றுமுழுதான உச்ச பாதுகாப்பிற்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை பல தரப்பிலும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே யாழ் பொதுசன நூலகத்திற்கு சென்றிருந்த சிங்கள சுற்றுலாப்பயணிகள் பொதுசன நூலகத்தை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் வன்ம…

    • 7 replies
    • 1.3k views
  9. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டு சட்டத் திருத்தங்களுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. வட மாகாண சபையின் அனுமதி கோரப்படும் வரை உள்ளூராட்சி மன்றச் சட்டங்களை அமுல்படுத்தக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்ட மூலம், உள்ளூராட்சி மன்ற விசேட சட்ட மூலம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளது. மாகாண சபைகளின் கருத்துக்களை அறிந்து கொள்ளாது எந்தவொரு உள்ளூராட்சி சட்டமூலத்தையும் நிறைவேற்ற முடியாதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்குத் …

    • 1 reply
    • 548 views
  10. Oct 28, 2010 / பகுதி: செய்தி / சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் அவசியம்: பிரித்தானியா பிரதமர் சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் அவசியம் என பிரித்தானியா பிரதமர் டேவிட் கமரோன் தெரிவித்துள்ளார். பிரித்தானியா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சொப்ஹெய்ன் மக்டெனா எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதனிடையே, பெல் பொற்றிஞ்சர் எனப்படும் இராஜதந்திர நிறுவனம் ஒன்றின் மூலம் சிறீலங்கா அரசு தனக்கு நற்பெயரை ஏற்படுத்த முனைவது தொடர்பிலும், சிறீலங்காவுக்கான மனிதாபிமான உதவியாக பிரித்தானியா கடந்த இ…

  11. யாழ்ப்பாணத்தில் நடமாடும் புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த இந்திய வியாபாரிகள் 20 பேர் நேற்று காலை கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிய விஸா இல்லாமல் வியாபாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழேயே அவர்கள் கைதுசெய்யப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம்குறித்து மேலும் தெரியவருவதாவது: நேற்று அதிகாலை 4.30 மணிக்கு இந்திய வியாபாரிகள் தங்கி இருந்த விடுதிகளுக்கு வெள்ளை நிற"ஹைஏஸ்'' வாக னத்தில் சென்று இறங்கிய சிலர் தம்மைக் கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகள் என்று அறி முகப்படுத்திக் கொண்டனர். தொடர்ந்து"அந்த விடுதிகளில் இந்திய வியாபாரிகள் தங்கியிருக் கிறார்களா?'' என்று விசாரித்தனர். விடுதி உரிமையாளர்களின் பதிலுக்குக் காத்திராமல…

    • 1 reply
    • 697 views
  12. சிறீலங்காவுக்கு அண்மையில் உள்ள தளங்களை பலப்படுத்துகிறது அமெரிக்கா அக் 28, 2010 சிறீலங்காவுக்கு தென்புறத்தில் 700 மைல்கள் தொலைவில் உள்ள டியகோ கார்சியா பகுதியில் அமைந்துள்ள தனது படைத்தளத்தை 127 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்கள் செலவில் அமெரிக்கா நவீனமயப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்காவுக்கு தென்புறத்தில் 700 மைல்கள் தொலைவில் உள்ள டியகோ கார்சியா பகுதியில் உள்ள தனது படைத்தளத்தை 127 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்கள் செலவில் நவீனமயப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைந்துள்ள இந்த தீவை பிரித்தானியாவே நிர்வகித்து வருகின்றது. இந்த தளப்பகுதியின் புனரமைப்பு 2013 ஆம் ஆண்டு நிறைவுபெறுவ…

  13. Oct 28, 2010 / பகுதி: செய்தி / மகிந்தா இந்த வாரம் சீனா பயணம் - தகவல்கள் இரகசியமாக பேணப்படுகின்றது சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா இந்த வாரம் சீனா செல்லவுள்ளதா வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் இன்று (28) தெரிவித்துள்ளன. மகிந்தாவின் இந்த பயணம் தொடர்பான தகவல்கள் இரகசியமாக வைக்கப்பட்டபோதும், அது ஊடகங்களுக்கு தெரியவந்ததை தொடர்ந்து வெளிவிவகார அமைச்சு தற்போது அதனை உறுதிப்படுத்தியுள்ளது. எதிர்வரும் மாதம் மகிந்தா ராஜபக்சா தனது இரண்டாவது தவணைக்காலத்தை ஆரம்பிக்கும்போது சீனாவின் ஆதரவுடன் அமைக்கப்படும் அம்பாந்தோட்டை துறைமுகத்தினுள் கப்பல்களை அனுமதிக்கும் விழாவை கொண்டாட சிறீலங்காவும், சீனாவும் தயாராகி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. pathivu

  14. சிறைச்சாலைகளிலேயே போதைப்பொருள் கொள்வனவு விற்பனை நடப்பதாக கூறப்படுகின்றது. இதனை உறுதிப்படுத்தும் முகமாக இன்று போகம்பொரை சிறைச்சாலை அதிகாரி போதைப்பொருள் விற்பனை செய்த வேளை பிடிபட்டுள்ளார். இந்த அதிகாரி 160 ரூபாவிற்கு கொள்வனவு செய்து 360 ரூபா விற்பனைசெய்து வந்ததாக கூறியுள்ளார். இந்த அதிகாரியிடம் ஐந்து தொலைபேசி மற்றும் ஏராளமான சிம் காட் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. http://www.eelanatham.net/story/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%A…

  15. மெனிக்பார்ம் முகாமிற்குள் பௌத்த விகாரை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன ‐ ஜீரீஎன்னின் புலனாய்வுச் செய்தியாளர்‐ 27 October 10 03:34 pm (BST) விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த மெனிக்பார்ம் முகாமிற்குள் பௌத்த விகாரை அமைக்கும் முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடமாகான ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறிக்கு இது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜீரீஎன்னிற்குக் கிடைத்த புலனாய்வுச் செய்திகள் குறிப்பிடுகின்றன. இது தொடர்பில் ஜீரீஎன்னிற்குக் கிடைத்த புலனாய்வுச் செய்திக்கமைய இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள வலை…

  16. கமரன்: இலங்கை விசாரணை தேவை இலங்கையில் நடந்த போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாக குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து உறுதி செய்வதற்கு சர்வதேச, பக்கச்சார்பற்ற விசாரணை ஒன்று அவசியம் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரன் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரான சிவோண் மக்டொனால்ட் அவர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையின் அந்தஸ்தை சர்வதேச மட்டத்தில் உயர்த்துவதற்கு மக்கள் தொடர்பு நிறுவனம் ஒன்றை பயன்படுத்தி எவ்வளவு முயற்சிக்கின்ற போதிலும், அங்கு படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக மேலும் ஆதாரங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் அவை குறித்து உறுதி செய்வதற்கு ஒரு சர்வதேச பக்க…

  17. பலம்கொண்ட சிறிலங்கா - மக்களை மறந்த ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் [ புதன்கிழமை, 27 ஒக்ரோபர் 2010, 08:42 GMT ] [ புதினப் பணிமனை ] 'புதினப்பலகை'க்காக யதீந்திரா கடந்த அறுபது வருடங்களாக ஈழத் தமிழ் மக்களை பிரதநிதித்துவப் படுத்திய அரசியல் தலைமைகள் தாங்கள் சரியென்று நம்பிய ஒரு வழியால் பயணித்து வந்திருக்கின்றன. அந்த காலகட்டத்தின் நமது தலைமுறைகளும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அவற்றுடன் இணைந்து நின்றிருக்கின்றன. இதில் ஒரு முப்பது வருடம் கறுப்புக் கொடி, கடையடைப்பு, சத்தியாகிரகம் என்றெல்லாம் நமது தலைவர்கள் சாத்தியமான வகையில் தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி இருந்தனர் ஆனால் ஒன்றையும் அடைய முடியவில்லை. அடுத்த பகுதி முப்பது வருடங்கள் ரைபிளில் தொடங்கி ஏ.கே.47 …

    • 3 replies
    • 772 views
  18. மஹிந்த - கூட்டமைப்பு சந்திப்பு விரைவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு விரைவில் இடம்பெறலாம் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ சீனாவுக்குச் செல்ல உள்ளார். அதற்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவுடன் பேச்சு நடத்த அவர் திட்ட மிட்டுள்ளார் என அந்த வட்டா ரங்கள் மேலும் தகவல் வெளியிட்டன. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை வர் இரா. சம்பந்தனுடன் நேற்றிரவு தொடர்புகொண்டு கேட்டபோது, ஜனாதிபதி எம்மைச் சந்திப்பது குறித்து இதுவரை எந்தவிதமான தகவலும் எமக்குக் கிடைக்கவில்லை.ஜனாதிபதியிடம் இருந்து தகவல் கிடைக்கும் பட்சத்தில், சந்தித்துக் கலந்துரையாட நா…

  19. இலங்கையில் நடந்த போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாக குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து உறுதி செய்வதற்கு சர்வதேச, பக்கச்சார்பற்ற விசாரணை ஒன்று அவசியம் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரன் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரான சிவோண் மக்டொனால்ட் அவர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையின் அந்தஸ்தை சர்வதேச மட்டத்தில் உயர்த்துவதற்கு மக்கள் தொடர்பு நிறுவனம் ஒன்றை பயன்படுத்தி எவ்வளவு முயற்சிக்கின்ற போதிலும், அங்கு படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக மேலும் ஆதாரங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் அவை குறித்து உறுதி செய்வதற்கு ஒரு சர்வதேச பக்கசார்பற்ற விசாரணை அவசியம் என்ற தனது கர…

    • 0 replies
    • 490 views
  20. புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைத்து இந்தியாவின் ‘ஒப்பரேசன் பூமாலை 2′ Posted by: on Oct 27, 2010 கடந்த வருடம் மே 18 முதல் எந்த முடிவுக்கும் வர முடியாத நிலையில் சிக்கலில் இருந்து இந்தியா தன்னைத்தானே விடுவித்துக்கொள்ளும் முடிவு ஒன்றை எடுத்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், அந்த இயக்கத்தின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகிய இருவரது பெயர்களையும் நீக்குவதாக தடா நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி அறிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டுவிட்டார் என்ற அறிவிப்புடன் சிங்கள தேசம் வெளியிட்ட காட்சிப் பதிவுகளின் உண்மைத் தன்மை குறித்து உலகம் முழுவதும் ஆய…

  21. காப்புறுதி கோரி விடுத்த கோரிக்கை - அரசாங்கம் நிராகரிப்பு அக் 27, 2010 யுத்தத்தின் காரணமாக பொருளாதார ரீதியாக நலிவடைந்த இடம்பெயர் அரசாங்க ஊழியர்கள் காப்புறுதி கோரி விடுத்த கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது. காப்புறுதி கோரி விண்ணப்பித்த - வன்னி மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த நாற்பது வடக்கு அரசாங்க ஊழியர்களது விண்ணப்பங்கள் - காலங்கடந்துவிட்டதாகக் கூறி நிராகரிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்க பேரவையின் தேசிய அமைப்பாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசாங்க ஊழியர்கள் குறித்த நேரத்தில் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய சூழ்நிலையில் இருக்கவில்லை. மேலும் யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னமும் கணக்கெடுக்கப்படவில்லை என்றும் குறித்த நாற்பது பே…

  22. Oct 27, 2010 / பகுதி: செய்தி / இலங்கை மக்களின் சராசரி ஆயுட் காலம் உயர்வடைந்துள்ளது இலங்கை மக்களின் சராசரி ஆயுட் காலம் 74 ஆக உயர்வடைந்துள்ளதென சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டின் புள்ளி விபரத் தகவல்களின் அடிப்படையில் இலங்கை மக்களின் ஆயுட் காலம் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆண்களின் ஆயுட்காலம் 69 ஆகவும், பெண்களின் ஆயுட் காலம் 76 ஆகவும் உயர்வடைந்துள்ளதெனக் குறிப்பிடப்படுகிறது. முதியவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து செல்வதனால் அவர்களை பாராமரிப்பதற்கு முறையான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமென சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. pathivu

  23. யாழ்ப்பாணத்;தில் மீளக்குடியமர்த்தவேண்டுமென கோரி யாழ்.புகையிரத நிலையத்தில் வந்து தங்கியுள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா 1 லட்சம் ரூபா மாதாந்தம் வழங்கப்படுகின்றது என புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜாதிக ஹெல உறுமய மற்றும் அரச ஆதரவு சக்திகளினால் இப்பணம் மாதாந்தம் இவர்களுக்கு வழங்கப்படுகின்றது யாழ்ப்பாணத்தில் தழிழர்களின் விகிதாசாரத்தைக்;குறைப்பதுடன் இனக்கலப்பினை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கைகள் திறை மறைவில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இதுவரையில் சுமார் 200 இற்கும் அதிகமான சிங்களக்குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் தம்மை மீளக்குடியமாத்தவேண்டுமென இங்கு வருகை தந்துள்ளனர் இத்தகவலை கடந்த பாராளுமன்ற தேர்தலில் தழிழ்தேசியக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட வேட்பாரா…

  24. வல்வெட்டிதுறையைச் சேர்ந்த திருமணமான இளம் தாயெருவருக்கு கடந்த முதலாம் திகதி மூன்றாவதாக பெண் பிள்ளையொன்று யாழ். போதனா வைத்தியசாலையில் பிறந்துள்ளது. கடந்த 23 ஆம் திகதி இப்பெண் சிசு இறந்து விட்டது. ஆனால் அப்பகுதி கிராம சேவையாளருக்கோ, பொலிஸாருக்கோ அறிவிக்காமல் குடும்பத்தினரும், உறவினர்களுமாக சேர்ந்து உடுப்பிட்டி கிராமத்தில் உள்ள மயானத்தில் புதைத்து விட்டனர். வல்வெட்டிப் பொலிஸ் நிலையப் பொலிஸாருக்கு இது குறித்து தகவல்கள் கிடைத்தமையை அடுத்து அவர்கள் சிசுவின் தாயை கைது செய்து நேற்று நீதிமன்றில் ஆஜராக்கினர். சிசு வலியால் இறந்து விட்டது என்று தாய் நீதிமன்றில் தெரிவித்தார். இருப்பினும் சிசுவின் மரணத்தில் சந்தேகம் இருக்கின்றமையால் சடலத்தை தோண்டி எடுத்து மரண பரிசோதனை நடத…

    • 0 replies
    • 883 views
  25. சிங்கள மக்களை குடியமர்த்த அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படும் மணியந்தோட்டம் பகுதியில் மீளக் குடியமர்ந்துள்ள பூர்வீகத் தமிழ்க் குடும்பங்கள் இன்றிரவு படையினரால் இரவோடிரவாக விரட்டியடிப்பு‐GTN செய்தியாளர் 25 October 10 09:12 pm (BST) யாழ்ப்பாணத்திற்கு தம்மை மீளக் குடியமர்த்துமாறு கோரி சென்றுள்ள சிங்கள மக்களை குடியமர்த்த அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படும் மணியந்தோட்டம் பகுதியில் மீளக் குடியமர்ந்துள்ள பூர்வீகத் தமிழ்க் குடும்பங்கள் இன்றிரவு படையினரால் இரவோடிரவாக விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். யாழ் மாநகரசபைக்குட்பட்;ட கரையோரக் கிராமம் கொழும்புத்துறை. கொழும்புத்துறையின் வனப்புமிக்க ஒரு பிரதேசம் மணியன்தோட்டம். இங்குள்ள வசந்தபுரம் எனும் கிராமத்தில் இடம்பெற்ற படைநடிவடிக்கைகளை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.