ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
பிரிட்டிஷ் அரசின் இராஜதந்திரமும் – பிரிட்டிஸ் தமிழர்களும் தமிழர்களின் இன்றைய நிலமைக்கு பிரித்தானிய அரசின் அன்றைய நடவடிக்கைகளே காரணம் என்றும் ஆகவே பிரித்தானிய அரசிற்கு இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் பங்குகொள்ள தார்மீக ரீதியான பொறுப்பு உள்ளதென்றும் அதனை தட்டிகழிக்க முடியாதென்றும் பிரிட்டிஷ் தமிழர்கள் வாதிட்டனர். தமது கருத்துக்களை அரசியல் ரீதியாக உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசி தம் வாக்குகளால் பேரம்பேசி பிரித்தானிய பாராளுமன்றம் வரை கொண்டுவந்தனர். பிரித்தானிய அரசும் கூடவே அந்தந்த உள்ளூர் எம்.பிக்களும் தம் வாக்கு வங்கிக்காகவும் கூடவே ஒரு சிலர் உண்மையாக மனிதாபிமான அடிப்படையிலும் தமிழர் பிரச்சினைகளை பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்தனர், குரல்கொடுத்தனர், நிகழ்ச்சிக…
-
- 0 replies
- 620 views
-
-
தாய்லாந்தில் கைது செய்யப்பட்ட தமிழர்களை இரு நாட்களில் கொழும்பு கொண்டு செல்ல திட்டம் http://meenakam.com/?p=11088 தாய்லாந்தில் ஏதிலிகளாக UNHCR இல் பதிவு செய்திருந்த தமிழர்களை கனடிய மற்றும் சிறீலங்கா போலீஸார் கைது செய்துவருகின்றனர். இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் 25 பேரை இரு நாட்களில் சிறீலங்கா கொண்டுசெல்லதிட்டமிட்டுள்ளனர். கடந்த 5 நாட்களாக தாய்லாந்திலுள்ள தமிழர்களை கனடா மற்றும் சிறீலங்கா போலீஸார் தாய்லாந்து போலீஸாரின் ஒத்துழைப்புடன் கைது செய்து வருகின்றனர். அவர்களில் கர்ப்பிணித்தாய்மார்கள் உட்பட பெண்கள் குழந்தைகளும் உண்டு. கைது செய்யப்பட்டவர்களில் இருவர் கைப்பேசி பாவித்தமைக்கு கொடுமையான தண்டனைக்கு இப்பொழுது உள்ளாக்கப்பட்டுள்ளனர். இரு சதுர அடி இடத்தில் …
-
- 0 replies
- 488 views
-
-
திங்கட்கிழமை, 18, அக்டோபர் 2010 (11:31 IST) ராஜபக்சே நடவடிக்கை: தமிழர்கள் அதிர்ச்சி இலங்கையின் கிழக்குப்பகுதியில் உள்ள பெயர்ப்பலகைகளில் தமிழ் எழுத்துக்கள் நீக்கப்பட்டிருப்பது தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையில் தமிழர் பகுதிகளை சிங்கள மயமாக்கிவருவதை ராஜபக்சே அரசு தீவிரப்படுத்திவருகிறது. இலங்கையின் கிழக்குப்பகுதியில் தமிழ் எழுத்துக்கள் நீக்கப்பட்டுவருகின்றன என்ற தமிழ் நாடாளூமன்ற உறுப்பினர் செல்வராசா கூறியுள்ளார். புதிதாக அமைக்கப்பட்டுவரும் சாலை பெயர்பலைகளில் சிங்கள மொழியில் மட்டுமே எழுத்தப்பட்டுவருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக இலங்கை அரசு சாலை நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் இல்லை …
-
- 0 replies
- 615 views
-
-
18.10.1995 அன்று யாழ். வலிகாமம் பகுதியில் சிறிலங்கா படையினரின் சூரியக்கதிர் படைநடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நாவண்ணனின் 15ம் ஆண்டு நினைவு நாளும் 18.10.1997 அன்று புல்மோட்டைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேகப் பீரங்கிப் படகினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் திருமாறன், கப்டன் சின்னவன் ஆகியோரின் 13ம் ஆண்டு நினைவு நாளும் 18.10.2006 அன்று சிறிலங்காவின் காலித்துறை முகத்தில் வைத்து பல கடற்படைக் கலங்களை அழித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் தில்லைச்செல்வி, லெப்.கேணல் அரவிந்தா உட்பட்ட கடற்கரும்புலிகளின் 4ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈக…
-
- 3 replies
- 714 views
-
-
அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்படுள்ள தமிழர்கள் விடுவிக்கப்படலாம் என நம்பப்படுகின்றது. இந்த இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத விடுதலைக்கு அவுஸ்திரேலிய தமிழர் அமைப்புக்களும், மக்களும், தமிழர்கள் அல்லாதவர்களும் ஒத்துழைப்பு நல்கி உள்ளனர். அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் அறிக்கை: http://www.australiantamilcongress.com/en/ தொடர்பு பட்ட செய்திகள்: http://www.smh.com.au/national/release-plan-for-families-in-detention-20101016-16oae.html http://www.abc.net.au/am/content/2010/s3040153.htm
-
- 3 replies
- 622 views
-
-
இலங்கையில் சட்டவிரோதமாக சுமார் 20 ஆயிரம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இருப்பதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனவும் ஆங்கில ஊடகமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறது. உரிய அங்கீகாரமில்லாமல் இவர்கள் தொழிலாளர்களாகவும் வீட்டுப் பணியாளர்களாகவும் சமையல்காரர்களாகவும் பரிசாரகர்களாகவும் பணிபுரிவதாகவும் பல்வேறு நகரங்களிலுள்ள உணவுச் சாலைகளில் பணிபுரிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் புள்ளி விபரம் "உத்தியோகபூர்வ மதிப்பீடு" என்று கூறியுள்ள அந்த ஊடகம் அதேசமயம் உண்மையான தொகையை நாட்டின் குடிவரவுத்துறைத் தலைவர் வழங்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. "நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்போர் தொடர்பாகக் குறிப்பிட்ட சோதனைகளை நாம் …
-
- 1 reply
- 609 views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதும், இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்படவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சி.பி.ஐ.பதில் அளித்துள்ளது. தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் இராணுவத்துக்கு எதிரான போரில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக கடந்த 2009 ஆம் ஆண்டு மே 17ஆம் திகதி சிறீலங்கா அரசு அறிவித்தது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், பிரபாகரன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டதால், பிரபாகரன் பெயர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இதுவரை பிரபாகரன் பெயர் ராஜிவ…
-
- 7 replies
- 2.4k views
-
-
அன்பு உறவுகளே உங்கள் ஆடம்பர சிலவுக்கு ஒதுக்கும் பணத்தில் வறுமையான நிலையில் வாடும் இந்த குடும்பத்துக்கு உதவி செய்யுங்கள். இலங்கையை சேர்ந்த சந்திரகுமார் கடந்த 8 வருடங்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவருக்கு மாதம் இரத்தம் ஏறுவதற்க்கு மட்டும் 12 ஆயிரம் ரூபா செலவாகின்றது .பாடசலைக்கு செல்லும் இரு பிள்ளைகள் படிக்க வசதியில்லாத காரணத்தால் பாடசாலை விட்டு நிற்க்கும் சூழ் நிலை ஏற்பட்டுள்ளது எனவே மனித நேயம் உள்ளவர்களே இந்த குடும்பத்துக்கு உதவி செய்யுங்கள்.(தொடர்புகளுக்கு -0094672229858 மனோ) http://www.tharavu.com/2010/10/blog-post_4392.html
-
- 0 replies
- 1.2k views
-
-
'குற்றவாளி ராஜபக்சேவை அழைத்தது மன்னிக்க முடியாத குற்றம்!' - வைகோ மதிரை: சர்வதேச போர்க்குற்றவாளி என குற்றம்சாட்டப்பட்டுள்ள 'தமிழினக் கொலையாளி' ராஜபக்சேவை அழைத்து இந்திய அரசு கவுரம் செய்தது, மன்னிக்க முடியாத குற்றம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். மதுரையில் இலங்கை தமிழர்கள் போரினால் பட்ட துயரங்களை சித்தரிக்கும் போர் முகங்கள் என ஓவியர் புகழேந்தியின் ஓவியக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதனை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஐ.நா. அவை, ஐரோப்பிய ஓன்றியம் போன்றவை இலங்கை அதிபர் ராஜபக்சேவை, பன்னாட்டு போர் குற்றவியல் கூண்டில் நிறுத்த வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் இந்திய அரசோ, இலங்கை…
-
- 0 replies
- 573 views
-
-
புதுடில்லி: இலங்கையானது மும்மொழிச் சமூகமாக உருவாவதற்கு உதவியளிப்பதற்கான தனது முயற்சிகளின் ஒரு பகுதியாக உயர்மட்டக்குழுவொன்றை இந்தியா இலங்கைக்கு அனுப்பி வைக்கவுள்ளது. இது தொடர்பான தீர்மானம் இந்திய மனிதவலு வள அபிவிருத்தி அமைச்சர் கபில் சிபாலுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிற்கும் இடையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போது மேற்கொள்ளப்பட்டதாக உத்தியோகபூர்வ வட்டாரங்களை மேற்கோள் காட்டி பி.ரி.ஐ. செய்திச்சேவை தெரிவித்தது. அறிவு முன்முயற்சியின் ஓரங்கமான இந்தியாவின் உதவி அமையும்.இலங்கையை மும்மொழி சமூகமாக உருவாக்குவதற்கான உதவியாக இது விளங்கும். அத்துடன் இருநாட்டு பல்கலைக்கழகங்களுக்கிடையிலும் தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் இந்தியாவின் இந்த முன்…
-
- 4 replies
- 1.1k views
-
-
அரசியலிலிருந்து ஓய்வு பெறப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். உடல் நலக் குறைவினால் சம்பந்தன் அரசியலிலிருந்து ஓய்வு பெறப் போவதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. சம்பந்தனுக்கு பதிலாக இளம் தலைவர் ஒருவரை நியமிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேவேளை, அண்மைக்காலமாக நடைபெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் சம்பந்தன் பங்கேற்கவில்லை எனவும், உடல் நலக் குறைவினால் இந்தியாவில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. கட்சித் தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தும் உத்தேசம் கிடையாதென சிரேஸ்ட உறுப்பினர் மாவை.சேனாதிராஜ…
-
- 1 reply
- 930 views
-
-
இலங்கையின் இனப் பிரச்சினையில் இந்தியா எவ்வாறு சம்பந்தப்பட்டது, இதனை எவ்வாறு பயன்படுத்தியது என்பவற்றைப் பார்ப்பதற்கு முன்னதாக தென்னாசிப் பிராந்தியத்தில் இந்தியா பெற்றுள்ள முக்கியத்துவம் என்ன என்பதையும், இந்தியா தன்னுடைய வெளிவிவகாரக் கொள்கையை எவ்வாறு வகுததுக்கொண்டது என்பதையும் பார்ப்பது அவசியம். இலங்கை விவகாரத்தை இந்தியா ஏன் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்டது என்பதைப் பார்ப்பதற்கு இந்தப் பின்னணியைத் தெரிந்துவைத்திருப்பது அவசியமாகும். தெற்காசியப் பிராந்தியத்தைப் பொறுத்தவரையில் இந்தியா புவியியல் ரீதியாக மத்திய இடத்தைப் பெற்றிருக்கின்றது. தென்னாசியாவிலுள்ள ஏனைய நாடுகளுடனான உறவுகளைப் பொறுத்தவரையில் இந்தப் புவியியல் அமைப்பு தனித்துவமான ஒன்றாக உள்ளது. தெற்காசிய…
-
- 5 replies
- 1.4k views
-
-
Oct 17, 2010 / பகுதி: செய்தி / 135 இலட்சம் ரூபாய் செலவில் வன்னி இராணுவ தலைமையகத்தில் கேட்போர் கூடம் பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 135 இலட்சம் ரூபாய் செலவில் வன்னி இராணுவ தலைமையகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இராணுவத்தினருக்குரிய கேட்போர் கூடத்தை இராணுவ தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜயசூரிய நேற்று சனிக்கிழமை காலை திறந்துவைத்தார். இங்கு உரையாற்றிய இராணுவ தளபதி, யுத்தத்தினால் உயிர் நீர்த்த இராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு நீண்ட கால கடன் திட்டம் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளதாகவும் - அங்கவீனமடைந்த படையினரை பராமரிக்க அனுராதபுரத்தில் விடுதி அமைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். pathivu
-
- 0 replies
- 677 views
-
-
ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 17, 2010 எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று ஐரோப்பா செல்கிறார். அவர் தனது இந்த விஜயத்தின் போது சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரத்தில் பொதுநலவாய பாராளுமன்ற குழுவினருடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளார். எதிர்கட்சித் தலைவர் எதிர்வரும் 27ம் திகதிவரை ஐரோப்பாவில் தங்கியுருப்பதுடன், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளுக்கும் விஜயம் செய்யவுள்ளார். இவர் தனது பிரித்தானிய விஜயத்தின் போது பிரதமர் டேவிட் கெமரூன் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை சந்திக்கவுள்ளார். பின்னர் நோர்வே செல்லவுள்ள எதிர்கட்சித் தலைவர் அந்த நாட்டின் சர்வதேச அபிவிருத்தித் தொடர்பான அமைச்சர் எரிக் சொல்ஹேமை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். E…
-
- 1 reply
- 557 views
-
-
இலங்கையின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் புதிய புலனாய்வு அமைப்பு ஒன்றை தொடங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நாடாளுமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்றி இந்த புதிய அமைப்பு தொடங்கப்படும் என்று செய்தி வெளியாகியுள்ளது.புதிய புலனாய்வு அமைப்பு இலங்கை அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படும் என்றும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சேவைப் பிரிவுகள் ஆகியவை கொண்டதாக அந்த அமைப்பு இருக்கும் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.http://www.tharavu.com/2010/10/blog-post_9474.html
-
- 4 replies
- 1.2k views
-
-
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 15, 2010 தாய்லாந்தில் கைதுசெய்யப்பட்ட 130க்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் நாடு கடத்தப்படக்கூடிய சந்தர்ப்பமில்லை என தாய்லாந்து நாட்டிற்கான மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுப் பிரதிநிதி சுனை பாசுக் தெரிவித்துள்ளார். இதே வேளை அப்படி அனுப்பவும் கூடாது எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. தாய்லாந்து அரசின் இந்த நடவடிக்கைக்கு மனித உரிமைகள் குழுக்கள் கண்டனமும் தெரிவித்துள்ளன. இதுதொடர்பில் கருத்து தெரிவித்த தாய்லாந்து வெளிவிவகாரத்தறை ஊடகப்பேச்சாளர் தனி தொங்பஹாடி, கைது செய்யப்பட்டவர்கள் குடிவரவு குடியகழ்வு சட்டத்தை மீறியமையாலேயே கைது செய்யப்பட்டனர் எனத் தெரிவித்துள்ளார். மேலும் ஆட்கடத்தல்களை தவிர்க்கும் முகாமாகவே இந்த நடவடிக்கையினை மேற்கொள்ள…
-
- 1 reply
- 414 views
-
-
பெண் என்றால் பேயும் இரங்கும் என்பது பழைய கதை, ஆனால் பெண் என்ற சொல்லை கேட்டாலே இந்திய தலைவர்கள் குத்தாட்டம் போடுவது புதிய கதை. இந்த புதிய கதையை அரங்கேற்றியிருக்கின்றது சிறீலங்கா அரசு. இது தொடர்பில கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளதாவது: வெளிநாடுகளின் தலைவர்களை தமக்கு சாதகமாக கொண்டுவருவதற்கு “தனிப்பட்ட உறவு” என்ற உறவுமுறைகளை வளர்ப்பது பல நாடுகளின் மரபாக இருந்து வருகின்றது. அதனை மேற்கொள்வதற்கான நிறுவனங்களும் உள்ளன. அந்த வழியை பின்பற்றி இந்திய அரச தலைவர்களை கவிழ்த்துள்ளது சிறீலங்கா அரசு. இந்திய தலைவர்களுடன் தனிப்பட்ட உறவுகளை வளர்த்துக் கொள்வதற்கு இந்திய மங்கை ஒருவரின் நிறுவனத்திற்கு மாதம் 20,000 அமெரிக்க டொலர்களை வழங்கி வருகின்றது சிறீலங்கா அரசு. மிகவும் …
-
- 3 replies
- 2.2k views
-
-
புலிகளின் அமெரிக்க கிளை தலைவர் திடீர் கைது ஏப்ரல் 26, 2007 நியூயார்க்: விடுதலைப் புலிகள் அமைப்பின் அமெரிக்கக் கிளையின் தலைவராக கருதப்படும் கருணாநகரன் கந்தசாமி என்பவரை அமெரிக்க போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் அமெரிக்கப் பிரிவின் இயக்குநராக இருந்து வருகிறார் கந்தசாமி. நியூயார்க்கின் குயீன்ஸ் என்ற பகுதியில் புலிகள் அமைப்பின் அலுவலகம் உள்ளது. இந்த அமைப்பின் நடவடிக்கைகளை கவனித்து வருகிறார் கந்தசாமி. நிதி திரட்டுவது, வழக்குகளுக்கான வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்வது உள்ளிட்ட பணிகளை கந்தசாமி கவனித்து வருகிறார். அமெரிக்க அரசு விடுதலைப் புலிகள் அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவித்து அதை தடை செய்துள்ளது. இந்த நிலையில், விடுதலைப் புலிக…
-
- 8 replies
- 2.6k views
-
-
இலங்கையின் தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன் ஆஜராகி சாட்சியம் சொல்ல மாட்டோம்.” இப்படிக் கூட்டுச் சேர்ந்து காட்டமாக அறிவித்துள்ளன சர்வதேச நெருக்கடிகள் குழு, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை ஆகிய சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள். இலங்கையில் இடம்பெற்றன என்று கூறப்படும் யுத்தக் குற்றங்களை விசாரிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவால் உள்நாட்டில் ஆணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதன் முன் ஆஜராக சாட்சியங்களை வழங்கலாம் என்று இவ்வமைப்புக்களுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்திருந்தது. இலங்கை அரசின் சார்பில் ஆணைக் குழுவின் செயலாளர் எஸ்.எம்.சமரகோன் எழுத்துமூலம் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் இவ்வழைப்பை நிராகரிக்கும் தீர்மானத்தை மூன்று அமைப்புக்களும் எடுத்துள…
-
- 3 replies
- 778 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை அலுவலகம் இன்று காலை கொழும்பு பம்பலப்பிட்டியில் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இவ்வைபவம் இடம்பெற்றது. இவ்வைபவத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். தமிழரசுக் கட்சியின் செயற்குழு இங்கு கூடப்பட்டு சமகால அரசியல் நிலைமைகள் ஆராயப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நாளை இங்கு கூடுகின்றது. http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=12348:2010-10-17-12-14-23&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410
-
- 1 reply
- 765 views
-
-
ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 17, 2010 இரு வேறு நோக்கங்கள் எய்தக்கூடிய நிறிவனங்களை அண்மையில் சிறிலங்கா அரசாங்கம் நாடி ஒப்பந்தகளை செய்துள்ளது. அதிகரித்து வரும் சர்வதேச அழுத்தங்களை தணிக்கவும் , கூடவே இலங்கைக்கு நற்பெயர்களை ஏற்படுத்தி இருக்கின்ற இராஜதந்திர உறவுகளை சீரழியாமல் பலப்படுத்துவதுமே இந்த நிறுவனங்களுடனான ஒப்பங்களின் நோக்கங்களாகும். பிரிட்டனில் மாதாந்தம் 30 ஆயிரம் டொலர்களுக்கு ஆட்களை நியமித்து பெல் பொட்டிங்கர் எனும் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை செய்துள்ளது. இந்த கம்பனி பிரிட்டனில் இலங்கை அரசிற்கு எற்படும் அபகீர்த்தியினை நிவர்ஹ்தி செய்வதும் இங்குள்ள ( பிரிட்டனில்) அரசியல் கட்சிகள் தலைவர்களுடன் செல்வாக்கை பிரயோகித்து இலங்கைக்கு சார்பாக செயற்பட வைப்பதுமே ஆகும். இந்த …
-
- 0 replies
- 763 views
-
-
Oct 17, 2010 / பகுதி: செய்தி / மட்டக்களப்பு - முனைக்காடு எனும் இடத்தில் ஒருவர் சுட்டுக்கொலை மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு எனும் இடத்தில் பொலிஸாரினால் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சுடப்பட்ட குறித்த நபர் வீடொன்றினை எரியூட்டியதற்காக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்ததாகவும், பொலிஸார் அவரை கைதுசெய்தபோது பொலிஸாரின் துப்பாக்கியை பறித்து அவர்களை சுட எத்தனித்தபோதே பொலிஸாரினால் சுடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். pathivu
-
- 0 replies
- 735 views
-
-
ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 17, 2010 தொப்பிக்கலவில் புலிகளின் முகாமை கிழக்கு மாகாண படை நடவடிக்கை மூலம் தாம் கைப்பற்றிவிட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அன்றே அறிவித்துவிட்டது. ஆனால் அந்த முகாமை தாம் கைப்பற்றவில்லை என்றும் 4.5 என்ற குறிச்சொல்லுடன் இயங்கி வரும் முகாமை புலிகள் இரகசியமாக நடாத்தி வந்துள்ளதாகவும் விசேட அதிரடிப்படைப்பிரிவின் இரகசிய பொலிசார் பாதுகாப்பு அமைச்சிற்கு தகவல் கொடுத்துள்ளனராம். கிழக்கு மாகாண படை நடவடிக்கையின் போது இராணுவத்தினர் அந்த முகாமை கைப்பற்றவில்லை என்றும் அதனை புலிகள் இரகசியமாக பயன்படுத்தி வந்துள்ளனர் என்றும் அந்த முகாமில் இருந்துதான் விசேட அதிரடிப்படையினரின் பயிற்சி அதிகாரியாக இருந்த உபுல் செனிவிரட்னாவை கொலை செய்ய பயிற்சிகள் வழங்கப்பட்டு|ள்ளது எ…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறைக்குள் வைத்து கலகம் விளைவிக்க முயன்றார், அல்லது துப்பாக்கியை பறித்தெடுக்க முயன்றார் போன்ற பொய்யான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்து சரத் பொன்சேகாவின் உயிருக்கு ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளக் கூடும். இல்லையென்றால் இயற்கை மரணம் என்று காட்டக்கூடிய வகையில் சூழலை ஏற்படுத்தி சரத் பொன்சேகாவை தானாகவே மரணத்தைத் தேடிக்கொள்ள வைக்கும் முயற்சியில் கூட அரசாங்கம் ஈடுபடலாம். இருப்பினும் எந்த வகையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் சரத் பொன்சேக்கா முன்னெடுத்த ஜனநாயகத்துக்கான போராட்டம் இடைவிடாது தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாக அனோமா கூறியுள்ளார்.http://www.tharavu.com/2010/10/blog-post_7658.html
-
- 0 replies
- 630 views
-
-
கடைசிவரை கணவனும் மனைவியும் களங்களிலேயே வாழ்ந்தார்கள். ஊர் உறவுகள் அவர்களுக்காக வாழ்ந்த பெற்றோர் யாவரையும் துறந்து இலட்சியத்துக்காகவே இறுதிவரை உழைத்தவர்கள். இதயத்தில் ஏந்திய கனவு மெய்ப்பட காவலண்களில் தூக்கம் மறந்த கண்களோடு விழித்திருந்த காலங்களை இன்றும் வேதனையுடன் வெளிப்படுத்தும் இவர்களுக்கு இன்று யாருமேயில்லை. இந்தக் குடும்பத்தின் துயரங்கள் சொல்லில் அடக்கிச் சேமிக்க முடியாத துயரங்கள். அன்றாட உணவு அடிப்படை வசதிகள் ஆடைகள் எல்லாவற்றுக்கும் அடுத்தவரை எதிர்பார்த்திருக்கும் அவலம். கடைசிவரையும் கனவுகள் மெய்ப்படும் நினைவோடிருந்த இருவரும் ஒரே இடத்தில் ஒரே நாளில் காயமடைந்து ஆளையாள் காணாது தொலைந்து போய் மருத்துவமனையில் மீளவும் சந்தித்த போது யாருக்கு யார் ஆறுதல் சொல்வதெனத் த…
-
- 3 replies
- 1.1k views
-