ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143269 topics in this forum
-
கச்சதீவு மட்டுமல்ல; கடலும் மீனவருக்கே சொந்தம்–TSS Mani இப்போது கச்சதீவை இந்த்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு, இலங்கை தீவை ஆண்டுவரும் சிங்கள அரசுக்கு தாரை வார்த்து கொடுத்ததற்காக, கடும் விமர்சனங்களை மத்திய அரசு எதிர்கொண்டுவரும் வேளை. இந்த கைமாற்றி கொடுக்கப்பட்ட தீவு பிரச்சனை ஒரு அரசியல் முடிவாக எதிர்க்கப்படுவதைவிட, ஒரு சமூகத்தின் வாழ்நிலை பிரச்சனையாக இப்போது பார்க்கப்படுகிறது. அதாவது சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கச்சதீவு இந்தியாவால் திரும்பப்பெறபடவேண்டும் என்று ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதை கொண்டுவந்தவர் தி.மு.க. நாடாளுமன்ற கட்சியின் தலைவரான டி.ஆர்.பாலு. தி.மு.க. கொடுத்த தீர்மானத்தில், அ.இ.அ.தி.மு.க., இடது சாரிகள் உட்பட அனைவரும் கலந்து கொண்ட…
-
- 2 replies
- 2.5k views
-
-
இரத்தக்கறை படைந்த போர்க்குற்ற தலைவரின் மனைவியும் உலகத்திலே சுதந்திரத்திற்காக பாடுபடும் கறுப்பினத்தின் புதிய தலைவரின் மனைவியும் தமது கரங்களை பிடித்துக்குலுக்கிக்கொண்டனர். உணவு மற்றும் மரக்கறிகள் கண்காட்சி வளாகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் 39 நாட்டு தலைவர்களின் துனைவியர்கள் ஒபாமாவின் துணைவியாருடன் போஸ் கொடுத்தனர். 50 ஆயிரத்திற்கு மேலான தமிழீழ பெண்களின் தாலிகளை அறுத்த மஹிந்தவின் மனைவியார் இலங்கையின் முதற்பெண்மணியாம். அவரது கரங்களை பற்றி வாழ்த்து பரிமாறும் ஒபாமாவின் பாரியார் என்ன சொல்லி இருப்பார்.
-
- 0 replies
- 1.3k views
-
-
சனிக்கிழமை , செப்டம்பர் 25, 2010 யாழ். மாவட்டத்தில் விவாகரத்துக்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்துள்ளது என நீதிமன்றப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. விவாகரத்துப் பெறுபவர்களில் அரச ஊழியர்களே அதிகளவானவர்களாக இருக்கின்றார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கவலையுடன் சுட்டிக் காட்டுகின்றார்கள். இந்த ஆண்டில் இதுவரை விவாகரத்துக்கோரி 46 பேர் யாழ். மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 123 ஆக இருந்தது. 30 வயதுக்குட்பட்ட இளம் தம்பதியினரே விவாகரத்துக் கோருவதில் முன்னணியில் திகழ்கின்றனர் எனப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. புரிந்துணர்வின்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இன்மை, பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான …
-
- 0 replies
- 1.3k views
-
-
சனிக்கிழமை , செப்டம்பர் 25, 2010 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இக் கலந்துரையாடலில் மீள் குடியேற்றம், மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயல்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டனவாம். இக்கலண்டுரையாடலின் பின்னர் பத்திரிகையாளர் மா நாடு நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் பான்கி மூன் அதனை நடாத்தவில்லையென கூறப்படுகின்றது. கூடவேமஹிந்தவும் தவிர்த்துக்கொண்டாராம். இந்த கலந்துரையாடலில் மஹிந்தவின் வாரிசும் கலந்துகொண்டார். Eelanatham.net
-
- 0 replies
- 638 views
-
-
43000 பொலிசாருக்கு முறையான பயிற்சியில்லாததால் திறமையாக செயற்பட முடிவில்லை – காவல்துறை மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார். முழுமையான பயிற்சி பெறாமல் பொலிஸ் சேவையில் இருந்த 43000 பொலிசாருக்கு மீண்டும் முறையான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக பொலிஸ் தினைக்களம் தொரிவித்துள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் நடைபெற்ற காலத்தில் எவ்வித பயிற்சிகளும் வழங்கப்படாமல் அவசர அவசரமாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். அவ்வாறு பயிற்சி பெறாத பொலிசாரால் திறமையாக செயற்பட முடியாதென காவல்துறை மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார். பயிற்சிகள் வழங்காது இணைத்துக் கொள்ளப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு ஆறு மாத கால விசேட பயிற்சி அளிக்கப்படவுள்ளதாகவும் பதவி உயர்வ…
-
- 0 replies
- 430 views
-
-
தொடர்ந்தும் அவசரகாலச் சட்டம் நாட்டுக்கு தேவையா?–அதுரலிய ரதன தேரர் யுத்தம் முடிவடைந்த பின் அவசரகாலச் சட்டம் நாட்டுக்கு தேவையற்ற ஒன்று என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.அவசரகாலச் சட்ட நீடிப்பு காலாவதியாகும் நாளை தான் ஆவலோடு எதிர் பார்ப்பதாக அவர் தொரிவித்தார் பயங்கரவாதத்தின் எச்சங்களை அழிப்பதற்கு அவசரகாலச் சட்டம் தொடர் ந்து பங்களிக்குமா என்பது பற்றியும் பாராளுமன்றம் ஆராய வேண்டும் எனபதையும் தான ஏற்றுக் கொள்வதாக தொரிவித்தார் சிங்களவர்கள் தமிழர்கள் என பிரியாமவ் அனைவரும் ஓரணியாக இணைந்து செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழ் சிங்கள மக்களுக்கு இடையிலான உறவை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப…
-
- 0 replies
- 541 views
-
-
சபாநாயகர் சமால் ராஜபக்ஷவுக்கு புதிய பதவி பொதுநலவாய நாடுகள் நாடாளுமன்றின் உப தலைவராக சபாநாயகர் சமால் ராஜபக்ஷ தெரிவானார் 2010 – 2011ம் ஆண்டு காலப்பகுதிக்கான உப தலைவராக சமால் ராஜபக்ஷ கடமையாற்றுவார் கென்யாவின் தலைநகர் நைரோபியில் அண்மையில் பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெற்றது. பொதுநலவாய நாடுகளின் 57 ஆவது பொதுச் சபைக் கூட்டம் அடுத்த வருடம் இலங்கையில் நடைபெறவுள்து. இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடாளுமன்ற கூட்டத்தின் போது; சமால் ராஜபக்ஷ தலைவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. http://meenakam.com/2010/09/25/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8…
-
- 0 replies
- 769 views
-
-
மட்டு.மாவட்டத்தில் அடிக்கடி மின்துண்டிப்பு – மக்கள் அவலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சிறிலங்கா மின்னசார சபை முன்னறிவிப்பு ஏதுமின்றி மின்சாரத்தை துண்டித்து வருவதாக மாவட்ட மக்கள் புகார் தொரிவிக்கின்றார்கள். கல்முனை – திருகோணமலை வீதியின் புனரமைப்பு பணிகள் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், பாதையின் அகலத்தினை அதிகாரிப்பதற்காக வீதி ஓரங்களிலுள்ள மின்கம்பங்கள் பலவற்றை அப்புறப்படுத்தும் நிலை காணப்படுகின்றது. இவ்வாறு பணிகள் நடைபெறும் நிலையில் திடீர் திடீர் என முன்னறிவிப்பு ஏதுமின்றி மின்சாரத்தை துண்டிப்புச் செய்வதனால் மக்களின் அன்றாடத்தேவைகள் பலவும் நிறைவேற்றப்படாமல் போகின்றது. இதுதவிரவும் சில இடங்களில் மின்சார இணைப்புக்களில் ஏற்படும் இடர்களும் உடனடியாக செய்து…
-
- 0 replies
- 404 views
-
-
கிழக்கில் உல்லாசப்பயணிகளின் வருகை அதிகாரிப்பு சிறிலங்காவிற்கு வரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை அதிகாரித்துள்ளதனையடுத்து சிறிலங்கா முழுவதிலுமுள்ள உல்லாச விடுதிகளினால் பெறக்கூடிய வருமானம் அதிகாரி த்துவருவதாக அதன் உரிமையாளர்கள் தொரிவிக்கின்றார்கள். இந்த நிலையில் கிழக்கில் பாசிக்குடா மற்றும் உல்லை போன்ற உல்லாசப்பயணிகளை கவரும் இடங்களில் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளினதும் உள்ளுர் மக்களினதும் வருகை அதிகாரித்துவருவதாக எமது செய்தியாளர்கள் தொரிவிக்கிறார்கள். பாசிக்குடா பகுதியில் அமைந்திருந்த உல்லாச விடுதிகள் யுத்தகாலத்தில் சேதமடைந்திருந்தபோதிலும் அவைகள் இதுவரையில் புனரமைக்கப்படவோ அல்லது புதிதாக நிர் மானிக்கப்படவோ இல்லாத நிலை காணப்படுகின்றது. இதனால், இங்கு வரும் வெளிநாட்டு உல்ல…
-
- 0 replies
- 575 views
-
-
சரத் பொன்சேகாவை பாராளுமன்றத்திற்கு செல்ல இராணுவம் தடுத்துள்ளது –எதிர்க்கட்சிகள் விசனம் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா அவசரகாலச் சட்ட நீடிப்பு தொடர்பான விவாதங்களில் பங்கேற்பதனை இராணுவம் தடுத்து நிறுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன. அவசரகாலச் சட்ட விவாத வாக்கெடுப்பிலேனும் பங்கு பற்றுவதற்கு சந்தர்ப்பம் அளிக்குமாறு எதிர்க்கட்சி நாடாளுமுன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் அனுரகுமார திஸாநாயக்க, விஜித ஹேரத் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தயாசிறி ஜயசேகர ஆகியோர் இவ்வாறு கோரிக்கையை விடுத்துள்ளனர். நாடாளுமன்ற விவாதங்களில் கலந்து கொள்வதற்கு சிறைச…
-
- 0 replies
- 486 views
-
-
லெப்டொப்புகளை நாடாளுமன்றத்திற்குள் இயக்க முடியவில்லை – ரவி கருணாநாயக்க இலங்கை நாடாளுமன்றிற்குள் லெப்டொப்புகளை இயக்க முடியாமல் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சபாநாகாரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்நாடாளுமன்றத்திற்குள் லெப்டொப்புகளை பாவிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும் அதனை இயக்குவதில் தொழில்நுட்ப பிரச்சினையிருப்பதாக அவர்மேலும் தொரிவித்தார் தமது மடிக் கணனியை செயற்படுத்த முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறும் அவர் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த முறைப்பாடு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு தாம் உத்தரவிடுவதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ உற…
-
- 0 replies
- 303 views
-
-
சரணடைந்து காணாமல் போயுள்ள புலித் தலைவர்களின் கதி என்ன? சர்வதேச சமூகம் பதில் தரவேண்டும்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்-போர்க்கைதிகளை விடுவிப்பதற்கான குழு வன்னி இறுதியுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் சென்ற விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர்கள், போராளிகள் பலர் காணாமற் போன செய்திகளால் நாம் வேதனையும் கொதிப்பும் அடைகிறோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் – போர்க்கைதிகளை விடுவிப்பதற்கான குழு வெளியிட்டுள்ள அறிக்கை: சரணடைந்த பின்னர் காணாமல் போயுள்ள விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட தலைவர்களின் கதி என்ன? சர்வதேச சமூகம் பதில் தரவேண்டும்! வன்னி இறுதியுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் ச…
-
- 0 replies
- 370 views
-
-
எழிலன் மனைவியின் சாட்சியம் இராணுவத்தினருக்கு அபகீர்த்தியானதென்று அரசு கூறியுள்ளது.மஹிந்த அமைத்த நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் கிளிநொச்சியில் வைத்து முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி அளித்துள்ள சாட்சியம் இலங்கை இராணுவத்தினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்துள்ளார்.http://www.tharavu.com/2010/09/blog-post_5640.html
-
- 0 replies
- 602 views
-
-
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என்று கூறுகின்றார். அது உண்மை என்றால், அழிக்கப்பட்ட இயக்கத்திற்கு இந்தியாவில் தடை ஏன்? சிறையில் இருக்கும் சீமானை விடுதலை செய்ய வலியுறுத்தி 'கருத்துரிமைக்களம்', சார்பில் கோவையில் நேற்று கூட்டம் ஒன்று நடந்தது. தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.இன்று அவர் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.இதன்போது, "இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் கூறி வருகின்றன. நியூசிலாந்தில் சமீபத்தில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்று கைது செய்யப்பட்டவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்,"விடுதலைப்புலிகள் அமைப்பு என்…
-
- 7 replies
- 1.4k views
-
-
தமிழர் தமிழில் கதைப்பது கூட குற்றமாகும் ... எல்லாவல மேதானந்த தேரர் சொன்னாலும் சொல்வார் போல இருக்கு. இலங்கை வாழ் தமிழர்களின் பிரச்சினைகளில் தலையிடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ இந்தியாவுக்கோ எவ்விதமான உரிமையும் கிடையாது எனவும், அநாவசியமான தலையீடுகளும் அழுத்தங்களும் உறவுகளையே பாதிக்கும் என்றும் ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.விடுதலைப் புலிகளின் நிழல் மனிதர்களுக்கு எதிரான போர் ஒன்றை மீண்டும் ஆரம்பிக்க வேண்டியுள்ளதாக கூறும், ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள், தலைவருமான எல்லாவல மேதானந்த தேரர் இதற்காக அரசாங்கமும் நாட்டு மக்களும் தயாராக வேண்டும் எனவும் கூறினார்.http://www.tharavu.com/2010/09/blog-post_2627.html
-
- 1 reply
- 1.3k views
-
-
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 24, 2010 Selvam Telo தமிழர் பிரதேசங்களில் காணி அபகரிப்புகள் அதிகரித்துள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ளும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழர் பகுதிகளில் ஒரு பிரிவினருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்படுகின்றது. அங்கு விகிதாசார அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். முறையற்ற வேலை வாய்ப்புகளுக்கு எதிராக சட்ட ந…
-
- 3 replies
- 653 views
-
-
இந்தியாவுடன் இணைந்து தாம் உயர்தர புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சிறிலங்கா தெரிவிப்பு தகவல்களை பகிர்ந்துகொள்ளும் ஏற்பாட்டுடன் இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதனால் இலங்கையிடம் உயர்தரத்திலான புலனாய்வு சேவையைக் கொண்டுள்ளது என சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது. இந்தப் பிராந்தியத்தில் காணப்படும் பயங்கரவாத செயல் யாவுமே இந்த சேவையினால் கண்டுபிடிக்கப்படும். இந்தியாவுக்குள் இலங்கை ஊடாக நுழைவதற்கு திட்டமிட்டவாறு 200 லக்ஷர் இ தொய்பா உறுப்பினர்கள் இருப்பதான அமெரிக்காவினால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட அறிக்கை பற்றிய கேள்விக்கு பதில் கூறுமுகமாக அரசாங்க பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல இவ்வாறு தெரிவித்தார். இந்தியாவுடன் நாம் தெளிவான புரிந்துணர்வைக் கொண்டுள்ளோம். இணைந்த கண்காணிப்…
-
- 1 reply
- 670 views
-
-
வெளியார் திணிக்கும் தீர்வுகள் தோல்விகண்டதே அனுபவம்: உள்நாட்டில் உருவாகுவதே வெற்றிபெறும்: ஐ.நா. சபையில் மகிந்த தெரிவிப்பு இலங்கை இனப்பிரச்சினைக்கு வெளிச்சக்திகள் திணிக்கும் தீர்வு விரோதங்களை வளர்த்து தோல்வியடைந்துள்ளது. இதனையே நாம் வரலாறாக கண்டிருக்கிறோம். ஆகவே எந்த ஒரு தீர்வும் உள்நாட்டில் உருவாகினால் மட்டுமே அது வெற்றிபெறும் என்று தான் இன்னும் நம்புவதாக இலங்கை அரசின் தலைவர் மகிந்த ராஜபக்ச கூறினார். ஐ.நா. பொதுச்சபையில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இலங்கைப் பிரச்சினைக்கு உள்நாட்டில் ஏற்படுத்தப்படும் தீர்வைக் காண்பதற்கு சர்வதேச ஆதரவை வரவேற்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். உலக சமாதானத்தை ஏற்படுத்துவதில் ஐ.நாவுக்குரிய ஆணையை குறைத்து மதிப்…
-
- 1 reply
- 820 views
-
-
போரினால் பாதிக்கப்பட்டவர்களிடம் சிறிலங்கா அரசு மன்னிப்பு கோரவேண்டும்: ஆணைக்குழு முன் வர்த்தக சம்மேளன தலைவர் தெரிவிப்பு சிறிலங்காவில் போரினால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் சிறிலங்காவின் முன்னைய அரசுகளின் சார்பிலும் சேர்த்தும் சிறிலங்காவின் தற்போதைய அரசு மன்னிப்பு கோரவேண்டும் என்று சிறிலங்கா வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திர ஜெயரட்ண தெரிவித்துள்ளார். இறுதிப்போரில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தபோதே அவர் மேற்கொண்டவாறு கூறினார். கடந்த 2009 ஆம் ஆண்டு மே முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போரின் பின்னர் அரசினால் மேற்கொள்ளப்பட்ட வெற்றிக்கொண்டாட்டங்கள் போரின…
-
- 2 replies
- 577 views
-
-
சிறிலங்கா காவல்துறையில் இணைந்து கொள்ள நாலாயிரம் தமிழ் இளைஞர்கள் விண்ணப்பம்! நான்காயிரத்திற்கும் அதிகமான தமிழ் இளைஞர்கள் இலங்கை பொலிஸில் இணைந்து கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளதாகவும், இவர்களில் 340 பேர் இலங்கை பொலிஸில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார். தற்போது மேற்படி 340 தமிழ் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இப்பயிற்சி நிறைவடைந்தவுடன் அவர்கள் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் நியமிக்கப்படவுள்ளனர். வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து மேலும் பொலிஸ் உத்தியோகத்தர்களை சேர்க்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இப்பொலிஸ் உத்தியோகத்தர்கள் பரீட்சை ஒன்றின் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும், அவர்களுக்க…
-
- 1 reply
- 979 views
-
-
மகிந்தவின் ஐ.நா. உரையை ஐக்கிய தேசிய கட்சி நிராகரிப்பு சிறிலங்கா அரச தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால் ஐ.நா பொதுச்சபையின் நடத்தப்பட்ட உரையை நிராகரித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையில் வறுமைத் தன்மையை போக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. அபிவிருத்தியை நோக்கிய இலக்கானது தனிநபர் ஒருவரின் வருமானம் வறுமை நிலையை கருத்திற்கொண்டே எடுக்கப்பட வேண்டும். ஆனால் 2006/2007 ஆண்டுகளில் பெறப்பட்ட 17.2 வீதமான அபிவிருத்தியினை அடிப்படையாகக் கொண்டே மகிந்த தனது அபிவிருத்தி நடவடிக்கையை முன்னெடுக்க முயல்கின்றார். இந்நிலையில் நாட்டின் நிலைமை மற்றும் வடக்கு கிழக்கு மக்களின் வறுமை நிலை இதன் போது கருத்திற் கொள்ளபட வில்லையென்று ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி …
-
- 0 replies
- 718 views
-
-
2010 ஆம் ஆண்டு 5 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபெறுகள் வெளியாகியுள்ளன. இதில் திருக்கோவில் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தின் மாணவி மாளவன் சுபதா 193 புள்ளிகளை பெற்று தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடம்பெற்றுள்ளார். இந்தநிலையில், அகில இலங்கை ரீதியில் கண்டி கல்வி வலயத்திற்கு உட்பட்ட கலஹா ராமகிருஸ்ண மத்திய கல்லூரி மாணவன் என்.எஸ்.என்.ஸபீர் 2 வது இடத்தை பெற்றுள்ளார். இவர் 192 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இதேவேளை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த ஜெனிஸ் ஜீட் விதுசன் பிஃகுராடோ 190 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர் அகில இலங்கை ரீதியில் 3 வது இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. முதலிடத்தில் சித்தியடைவேன் என்று கன…
-
- 15 replies
- 1.7k views
-
-
சரணடைந்து காணாமல் போயுள்ள புலித் தலைவர்களின் கதி என்ன? சர்வதேச சமூகம் பதில் தரவேண்டும்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்-போர்க்கைதிகளை விடுவிப்பதற்கான குழு வன்னி இறுதியுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் சென்ற விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர்கள், போராளிகள் பலர் காணாமற் போன செய்திகளால் நாம் வேதனையும் கொதிப்பும் அடைகிறோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் - போர்க்கைதிகளை விடுவிப்பதற்கான குழு வெளியிட்டுள்ள அறிக்கை: சரணடைந்த பின்னர் காணாமல் போயுள்ள விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட தலைவர்களின் கதி என்ன? சர்வதேச சமூகம் பதில் தரவேண்டும்! வன்னி இறுதியுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் சென்ற வ…
-
- 2 replies
- 615 views
-
-
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 24, 2010 ponnakar மஹிந்தவின் ஆணைக்குழு முன்பாக சாட்சியம் அளிக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என மாவை கேட்டுக்கொண்டுள்ளார். இராணுவத்தினரின் கெடுபிடிகளில் இருந்து அவர்களை பாதுகாக்கவேண்டும்'' இப்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அரசிடம் கோரிக்கை விடுத்தார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இந்தக் கோரிக் கையை விடுத்தார். தொடர்ந்து உரையாற்றிய மாவை சேனா திராஜா கூறியவை வருமாறு: ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியம் அளித்த பெற்றோர்கள், "இராணுவத் தினரால் அழைத்துச் செல்லப்பட…
-
- 0 replies
- 618 views
-
-
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 24, 2010 பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்த இராணுவத்தினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலேயே எழிலனின் மனைவி ஆனந்தி சஷிதரனின் கருத்து அமைந்துள்ளது என இராணுவப் பேச் சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்ததன் மூலம் எழிலனின் துணைவியாருக்கு இராணுவத்தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இனிவரும் காலத்தில் சாட்சியம் அளிப்போர் தயக்கத்துடன், உண்மைகளை கூறாது இருப்பதற்கு இராணுவத்தின் இந்த மறைமுக எச்சரிக்கை காரணமாக அமையும் என கூறப்படுகின்றது. எழிலன் உள்ளிட்ட ஏழு சிரேஷ்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் படையினரிடம் சரணடைந்தனர். இவர்களை இராணுவத்தினர் மறைமுகமான இடத்தில் தடுத்து வைத்துள்ளனர் என்று மஹிந்தவின் ஆணைக்குழுவின் முன்னிலையில் தமிழீழ விட…
-
- 0 replies
- 654 views
-