Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முல்லைதீவு வைத்தியசாலையின் அகநோக்கி (Endoscopy) இயந்திரம் தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது அனுராதபுர வைத்தியசாலையில் பழுதடைந்துள்ள அகநோக்கி (Endoscopy) உபகரணத்திற்கு பதிலீடாக முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு புலம்பெயர் தமிழர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட அகநோக்கிக் கருவியினை கையளிக்குமாறு மத்திய சுகாதார அமைச்சு கோரவுள்ளதாக சமூக ஊடகங்களிலும் சில இணையத்தளங்களிலும் பரப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என டி முல்லைத்தீவு (மாஞ்சோலை) வைத்தியசாலை பதில் பணிப்பாளர் சண்முகராசா அவர்களைத் தொடர்புகொண்டு வினவியபோது தெரிவித்துள்ளார். இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் குழப்பமடையத்தேவையில்லை என்றும் தெரிவித்துள்ள அவர் இதுவரை அவ்வாறான எந்தவொரு நடவடிக்கைகளும் இடம்பெறவில…

  2. பாடசாலைக்கு ஒழுங்கான வரவில்லை என மாணவியை கண்டித்த ஆசிரியர் மீது மாணவியின் தந்தை உள்ளிட்ட இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (03) தாக்குதல் நடாத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பாடசாலைக்கு ஒழுங்கான வரவில்லை எனும் காரணத்தால் பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள் மாணவியை கண்டித்ததால் , அந்த பாடசாலை நிர்வாகத்துடன் முரண்பட்டு , அந்த பாடசாலையில் இருந்து விலகி, பருத்தித்துறை பகுதியில் உள்ள பிறிதொரு பாடசாலையில் இணைந்து கற்றல் நடவடிக்கையை ஆரம்பித்தார். புதிதாக சேர்ந்த பாடசாலைக்கும் மாணவி ஒழுங்காக சமூகமளிக்கவில்லை. அதனால் பாடசாலை ஆசிரியர் ஒருவர் மாணவியை கண்டித்துள்ளார். இந்நிலையில், பாடசாலைக்கு சென்ற மாணவியின் த…

  3. “சர்வதேச விசாரணை வேண்டாம் ஜனாதிபதியின் கருத்தே எனது கருத்து” – மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விசாரணை வேண்டாம் என்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்துடன் தானும் உடன்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற மத வழிபாட்டை அடுத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை தமக்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் எண்ணம் இல்லை என்றும் புதிய தலைமைத்துவத்தின் கீழ் கட்சி முன்னோக்கி செல்ல வேண்டும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1352302

  4. ”சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்” எமது பிரச்சினைக்கு சில தினங்களுக்குள் தீர்வு வழங்காவிட்டால் வீதி மறிப்பு போராட்டம் செய்வோம். அத்துடன் சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்” என மட்டக்களப்பு கால்நடை பண்ணையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தங்களுக்குச் சொந்தமான மேய்ச்சல் தரைகளை மீட்டுத்தருமாறு கோரியே பண்ணையாளர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்கள் தொடர்ந்து 19வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்போது நீதிமன்ற கட்டளையினை நடைமுறைப்படுத்துமாறும்,கால்நடை பண்ணையாளர்களின் நிலத்தை வ…

  5. 03 OCT, 2023 | 08:06 PM (எம்.மனோசித்ரா) இலங்கையில் அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரிகளாக்கும் நோக்கில் தற்போது நடைமுறையிலுள்ள கல்வியல் கல்லூரிகளை பல்கலைக்கழகப் பீடங்களாக உயர்த்துவதற்காக கடைப்பிடிக்க வேண்டிய நிர்வாக மற்றும் சட்டப் பொறிமுறைகள் தொடர்பாகப் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக 2019.12.04 திகதிய அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய மூத்த பேராசிரியர் குணபால நாணயக்கார தலைமையில் நிபுணத்துவக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவின் பரிந்துரைகள் தற்போதுள்ள 20 கல்வியல் கல்லூரிகளில் 19 கல்லூரிகளை பல்கலைக்கழக வளாகமாக உயர்த்துவதற்கும், அத்துடன் இலங்கை கல்வியியல் பல்கலைக்கழகம் எனும் பெயரில் புதிய பல்கலைக்கழகமொன்றை நிறுவுவதற்கும் ஏ…

  6. Published By: DIGITAL DESK 3 03 OCT, 2023 | 05:46 PM (எம்.வை.எம்.சியாம்) இரவு விடுதி போன்ற அமைப்பைக் கொண்ட மற்றும் தடை செய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தி மாற்றியமைத்து போக்குவரத்து கடமைகளில் ஈடுபடுத்தப்பட்ட 25 சிறப்பு சுற்றுலா பஸ்களின் போக்குவரத்து உரிமங்கள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், போக்குவரத்து விதிமுறைகளுக்கமைய அவை மீளவும் உரிய முறையில் தயார்ப்படுத்தப்படும் வரை அவற்றை போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். கடந்த மாதம் பொலன்னறுவை, புலஸ்திபுர பகுதியில் ஆபத்தான மற்றும் பொதுமக்…

  7. 03 OCT, 2023 | 04:15 PM கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் கரும்புத் தோட்டக் காணி விவசாய நடவடிக்கைகளுக்காக பகிர்ந்தளிக்கப்பட்ட விடயத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். விவசாய காணியற்ற ஏழை மக்களுக்கு காணி பகிர்ந்தளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டபோதும், அவ்வாறு பகிர்ந்தளிக்கப்படவில்லை எனவும் அந்த மக்கள் கூறியுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது : சுமார் 196 ஏக்கர் பரப்பளவு கொண்ட கரும்புத் தோட்டக் காணியானது அதன் ஆரம்ப குத்தகைதாரர்களது குத்தகைக் காலம் நிறைவுற்றதும், அவர்களது உறவினர் ஒருவர் தொடர்ந்தும் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில், அக்காணி விடயத்தில் தலையிட்ட மாவட்ட ஒருங்க…

  8. நாமலின் மின்கட்டணம் செலுத்தப்பட்டது கடந்த காலங்களில் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சைக்குள்ளாகிய நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவத்தின் மின்சார கட்டணம் தொடர்பான செய்திக்கு நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த முற்றுப்புள்ளிவைத்துள்ளார். தங்காலையில் நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவத்திற்கான மின்சார கட்டணம் தொடர்பான செய்தியில், சுமார் 26 இலட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளதாக இலங்கை மின்சார சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. நாமல் ராஜபக்சவின் திருமண வைபவத்தின் 2.6 மில்லியன் மின்சாரக் கட்டணம் நேற்று (02) நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவினால் செலுத்தப்பட்டது. போரை முடிவுக்குக் கொண்டு…

  9. இலங்கை வந்த நான்கு சீன முதலீட்டாளர்கள் கொழும்பு துறைமுக நகர முதலீட்டு திட்டத்தில் முதல் முதலீடாக சீனாவை சேர்ந்த நான்கு முதலீட்டாளர்கள் நேற்று (02) இரவு இலங்கை வந்தடைந்தனர். சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள ஒரு அரை அரச நிறுவனமான C.Z.K. Huarui Cultural and Art Company ஐ பிரதிநிதித்துவப்படுத்தி, அந்த நிறுவனத்தின் பொது மேலாளருடன் மேலும் மூன்று பேர் நாட்டுக்கு வந்துள்ளனர். இந்த முதலீட்டாளர்கள் , 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்து இந்த துறைமுக நகர திட்டத்தில் இரத்தினக்கல் அருங்காட்சியகம், இரத்தினக்கல் பரிசோதனை ஆய்வு கூடம் மற்றும் ஏல மையம் ஆகியவற்றை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த முதலீட்டாளர்கள் குழு இலங்கை மு…

    • 0 replies
    • 653 views
  10. Published By: RAJEEBAN 03 OCT, 2023 | 08:05 AM சனல் 4 ஊடகத்தினை ஏன் புனிதமாக கருதுகின்றீர்கள் என இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க சீற்றத்துடன் ஊடகவியலாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். டிடபில்யூநியுஸ் உடனான பேட்டியின் போது ஜனாதிபதி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் ஈடுபட்டவர்களிற்கும் அரசாங்க உறுப்பினர்களிற்கும் தொடர்புள்ளதாக சனல் 4 வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து செவ்விகாண்பவர் கேள்வி எழுப்பியவேளையே ரணில் விக்கிரமசிங்க சீற்றமடைந்தார்ஃ நீங்கள் ஏன் சனல் 4 புனிதமானது என கருதுகின்றீர்கள் ஏன் அதனை புனிதமாக கருதுகின்றீர்கள் என ஜனாதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு செய்தியாளர்…

  11. 03 OCT, 2023 | 09:44 AM சட்டம் ஒழுங்குகளை கவனத்தில் கொள்ளாத மக்களுடன் நிர்வாகம் செய்ய வேண்டியுள்ளது. நாட்டின் சட்ட ஒழுங்குகள் தொடர்பாக கவனத்தில் கொள்ளாத விசித்திரமான மாவட்டமாக யாழ்ப்பாணம் விளங்குவதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ. சிவபாலசுந்தரன் கவலை தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான தீர்மானமிக்க விசேட கலந்துரையாடல் 02.10.2023 அன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில், இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த மாவட்ட செயலாளர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எத்தகைய சவால்கள் ஏற்பட்டாலும் மாவட்டத்தின் சட்ட ஒழுங்குகளை …

  12. இணைய பாதுகாப்பு சட்டமூலம் குறித்து 7 பரிந்துரைகளை முன்வைத்தது மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய இணைய பாதுகாப்பு சட்டமூலம் குறித்த 07 பரிந்துரைகள் அடங்கிய கடிதத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அல்ஸிக்கு அனுப்பியுள்ளது. மக்களின் இணையப் பாதுகாப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை அங்கீகரித்த அதேவேளை, முன்மொழியப்பட்ட சட்டம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது. இணைய செயற்பாடுகள் தொடர்பாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன், இந்த சட்டமூலம் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்துடன் இணைந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.…

  13. இவ் காணொளியை பார்க்க வயது கட்டுப்பாடு உள்ளதால், யூரியூப் உள்ளே சென்றே பார்க்க முடியும். பார்த்து பலருக்கு பகிர்ந்து தமிழ் தேசியப் போர்வையில், மோசடி செய்யும் கும்பலை தோற்கடிப்போம். யுத்த களத்தில் இறுதி வரைக்கும் நின்று போராடிய தலைவர் மற்றும் அவர் குடும்பத்தினரின் தியாகங்களை கொச்சை படுத்தும் கும்பலை தோலுரிப்போம்.

    • 28 replies
    • 4k views
  14. Published By: DIGITAL DESK 3 02 OCT, 2023 | 03:55 PM யாழ்ப்பாணம் - இந்திய உதவித்துணைத் தூதரகம்,மற்றும் காந்தி சேவா சங்கத்தின் இணைந்த ஏற்பாட்டில் இந்திய நாட்டிற்கு சுதந்திரத்தினை பெற்றுக்கொடுத்த மகாத்மா காந்தி அவர்களின் 154ஆவது ஜனதின நினைவேந்தலான அஞ்சலி இன்று திங்கட்கிழமை (02) யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு முன்பாக இருக்கின்ற மகாத்மா காந்தி சிலையின் முன்பாக இடம்பெற்றது. இவ் நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக யாழ்ப்பாணம் இந்திய உதவித்துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் கலந்துகொண்டு அவரின் திருச்சுருவத்திற்கான மலர்மாலை அணிவித்து நினைவேந்தல் செலுத்தினார். இதில் காந்தி சேவா சங்கத்தினால் வ…

  15. மக்கள் மீதான தாங்க முடியாத வரிச்சுமையைத் தவிர, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இருந்து இலங்கை இதுவரை எதையும் பெறவில்லை என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சர்வதேச கடன்களை மறுசீரமைக்கும் நம்பிக்கையுடன் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியதாகவும், 17 மாதங்களுக்குப் பிறகும் இலங்கையால் ஒரு டொலரில் மறுசீரமைக்கவோ முடி வெட்டவோ முடியவில்லை என்றும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையானது இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்ததன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி நிச்சயமற்றது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின்படி அரசாங்கம்…

  16. Published By: RAJEEBAN 02 OCT, 2023 | 02:42 PM முன்னைய கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் வரிவருமானம் முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்து காணப்பட்டது என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. இலங்கையின் ஆட்சி குறித்த சர்வதேச நாணயநிதியத்தின் அறிக்கையில் இந்த விடயம் இடம்பெற்றுள்ளது. 2022 இல் அப்போதைய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளிற்கு எதிரான தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஊழலே காரணம் என்ற பொதுக்கருத்தினை உருவாக்கின என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. கோட்டாபய ராஜபக்சவின் நிர்வாகத்தின் கிழ் காணப்பட்ட அதிகார அமைப்பு தனித்துவமான நிர்வாக சிக்கல்களை உருவாக்கியது என அந்த அறிக்கை…

  17. Published By: DIGITAL DESK 3 02 OCT, 2023 | 02:58 PM யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் சிறுப்பிட்டிப் பகுதியில் இன்று திங்கட்கிழமை (02) பகல் , முச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர் ஒருவரை ‘பட்டா’ ரக வாகனத்தில் வந்த நபர்கள் துரத்தி துரத்தி வாளால் வெட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பிள்ளைகளின் தந்தையான லக்சன் என்பவர் மீதே வாள் வெட்டு நடத்தப்பட்டுள்ளது. நாயன்மார்கட்டைச் சேர்ந்த குறித்த நபர் சிறுப்பிட்டியில் திருமணம் செய்து வசித்து வருகின்றார். இந்நிலையில், முச்சக்கரவண்டியில் பயணித்த இந்த நபரைரை விரட்டிச் சென்று நேற்றைய தினம் பகல் வாள்வெட்டு நடத்தப்பட்டுள்…

  18. Published By: DIGITAL DESK 3 02 OCT, 2023 | 10:59 AM விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் குற்றவாளிகளைக் பொறிவைக்கும் வகையில் கடந்த வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டு பல மணித்தியாலங்கள் நிறுத்தப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை (1) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கடந்த மாதம் 19 ஆம் திகதி முதல் குடிவரவு அதிகாரிகள் பெற்றுள்ளனர். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முப்படைகளின் தளபதிகள்,…

  19. மைத்திரியும், கோட்டபயவும் TMVPக்கு பணம் வழங்கினர்! ஆசாத் மௌலானா உறுதிப்படுத்தினார் adminOctober 2, 2023 முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்சவும் தாங்கள் ஜனாதிபதியாக மற்றும் பாதுகாப்பு அமைச்சராக பதவிவகித்த காலப்பகுதிகளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்களிற்கு தொடர்ந்து பணம் வழங்கினார்கள் என சனல் 4 ஆவணப்படத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த முக்கிய விபரங்களை வெளியிட்ட ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார். யுத்தத்தின் இறுதித் தருணங்களில் மில்லியன் கணக்கில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களிற்கு பணம் வழங்கப்பட்டது என தெரிவித்துள்ள ஆசாத்மௌலானா, எனினும் அந்தப் பணத் தொகையை ஜனாதிபதி மைத்திரிபால சி…

    • 1 reply
    • 523 views
  20. மலேசியப் படுகொலை – கைதான இலங்கையர்களின் விளக்க மறியல் நீடிப்பு! adminOctober 1, 2023 மலேசியாவில் மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களை மேலும் விளக்கமறியலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மலேசியாவில் வீடொன்றில் படுகொலை செய்யப்பட்ட மூன்று இலங்கையர்களின் சடலங்கள் கடந்த மாதம் 22 ஆம் திகதி பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன. கொலைச் சம்பவம் தொடர்பாக சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட வீட்டின் உரிமையாளரான தம்பதியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொல்லப்பட்ட மூவரில் தம்பதியரின் மகனும் அடங்குவதாகத் தெரிவிக்க…

  21. 01 OCT, 2023 | 11:52 AM முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று (01) காலை 10 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் சங்கத்தினரது போராட்ட இடத்துக்கு முன்பாக இப்போராட்டம் இடம்பெற்றது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'நீதிபதிக்கே உயிரச்சுறுத்தல் உள்ள நாட்டில் எமக்கு நீதி எப்போது?', 'சர்வதேசமே எமக்காக குரல் கொடுக்க எழுந்திரு', 'கையளிக்கப்பட்ட மாணவர்கள் எங்கே?’, ‘குடும்பமாக ஒப்படைக்கப்பட்ட சிறுவர்கள் எங்கே?’, 'தமிழ் குழந்தைகள் என்ன பயங்கரவாதிகளா?', 'சின்னஞ்சிறு சிறார்களும் …

  22. 2030 ஆம் ஆண்டளவில் இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்களை பாதியாக குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறியப்படுகிறது. இராணுவத்தின் இணைந்துள்ளவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் இராணுவத்தினரின் எண்ணிக்கையை சுமார் 100,000 ஆக குறைக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இராணுவத்தை மீளாய்வு செய்வதற்கு ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையில் குழுவொன்றையும் ஜனாதிபதி நியமித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை சுமார் ஒரு இலட்சமாக குறைத்து இராணுவத்தை தொழில்நுட்பமயபடுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அ…

  23. Published By: RAJEEBAN 01 OCT, 2023 | 02:58 PM இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள புகைப்பட ஊடகவியலாளர் (Photo journalist) ஒருவர் தான் இரணைமடுவுக்கு செல்வதை கடற்படையினர் தடுத்து வருகின்றனர் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். எல்கே ஸ்காலியர்ஸ் என்ற அந்த ஊடகவியலாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது. இலங்கைக்கு நான் ஊடகபணிக்காக விஜயம் மேற்கொண்டுள்ளேன், இரணைதீவிற்கு ஊடகபடப்பிடிப்பாளராக நான் செல்வதை கடற்படையினரும் முழங்காவில் உள்ள பாதுகாப்பு தரப்பினரும் தடை செய்கின்றனர். நான் அந்த தீவிற்கு செல்வதற்கான அங்கு சட்டபூர்வமாக பணியாற்றுவதற்கான அனுமதியை பெற்றிருந்தேன் . டுவிட்டரில் பதிவிடவேண்டாம் என கடற்படையினர் என்…

  24. 01 OCT, 2023 | 05:50 PM (ஏ.எல்.எம்.ஷினாஸ்) அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றன. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி - சவளக்கடை பிரதேசத்துக்குள் நேற்று (30) இரவு புகுந்த யானைகள் நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்கு அருகில் உள்ள நெல் களஞ்சியசாலையை துவம்சம் செய்துள்ளன. மேலும், அங்கிருந்த நெல் மூடைகளை நாசப்படுத்தியதுடன் அப்பகுதியில் உள்ள சுற்றுவேலிகளையும் யானைகள் தகர்த்துள்ளன. அதேவேளை அப்பிரதேசத்தை அண்டிய பகுதியிலுள்ள சில பயிர்களுக்கும் பாரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு வேளைகளில் அப்பகுதியில் வசிப்பதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். …

  25. 30 SEP, 2023 | 07:53 PM ஆர்.ராம் சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்துவதற்கு செல்கின்றபோது அதனுடன் செய்யப்பட்டன உடன்பாடுகளை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டிய சூழல் உருவாகும். அதனால் உள்நாட்டில் பாரிய நெருக்கடிகள் ஏற்படும் என்பதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஆரூடமாக கூறியிருந்த நிலையில் தற்போது அவ்வாறான நிலைமைகளே தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்தின் முதலாம் தவணைக் கொடுப்பனவு மீளய்வு தொடர்பில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பீற்றர் புரூவர் தலைமையிலான கருத்துக்கள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.