Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முல்லைத்தீவில் புலிகளின் தங்கத்தைத் தேடித் தொடரும் அகழ்வுப்பணி! முல்லைத்தீவில் புதைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் மற்றும் தங்கங்களை கண்டெடுக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள அகழ்வுப் பணியானது இன்று மீண்டும் தொடரப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் தங்க நகைகள் இருப்பதாக தெரிவித்து முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் நேற்று பிற்பகல் ஆரம்பமாகிய அகழ்வு பணியானது மாலையுடன் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற அகழ்வுப் பணிகளில் எந்தவொரு ஆயுதங்களோ, நகைககளோ மீட்கப்படாத நிலையில் இன்று (26) காலை 9 மணியளவில் மீண்டும் இரண்டாவது நாளாக அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு நீதிவான் நீ…

  2. உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராகக் கருதப்படும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘முரளி-800’ திரைப்படத்தை திரையிட இலங்கை திரைப்படக் கண்காட்சி சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ‘முரளி-800’ திரைப்படம் வரும் அக்டோபர் 6 ஆம் திகதி முதல் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. ‘முரளி-800’ திரைப்படத்திற்காக கொழும்பு சினமன் லேக் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன, முரளியின் மீதான மரியாதையின் அடையாளமாக இலங்கை சினிமா சட்டமும் விசேட அனுமதியளித்து மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக …

  3. இலங்கைக்கு 10 ரயில் என்ஜின்களை வழங்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. ரயில்வே பொது மேலாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ். குணசிங்க இந்த ரயில் என்ஜின்கள் கடன் உதவியாக இலங்கைக்கு பெறப்படும் என குறிப்பிட்டுள்ளார். இந்த என்ஜின்களை கொண்டு வருவதற்கு முன், ரயில்வே துறை அதிகாரிகள் குழு இந்தியா சென்று தர சோதனை செய்ய உள்ளது. என்ஜின்கள் இல்லாததால் அடிக்கடி ரயில் இயக்கம் தடைபடுவதாக வும் பழைய என்ஜின்கள் பழுது நீக்கப்பட்டு இயக்கப்பட்டாலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இயந்திரக் கோளாறு காரணமாக பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/274081

  4. மட்டக்களப்பு ஷரிஆ பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுக்கு இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்லூரி பொறுப்பு - பாதுகாப்பு சபை கூட்டத்தில் தீர்மானம்! kugenSeptember 24, 2023 மட்டக்களப்பு - புனானியில் நிர்மானிக்கப்பட்டுள்ள ஷரிஆ பல்கலைக்கழகத்தின் உரிமத்தை எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு தொடர்ந்தும் வழங்கவும் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு அதிகாரத்தை ஹோமாகமவில் அமைந்துள்ள இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்லூரிக்கு வழங்கவும் பாதுகாப்பு சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரத்தில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கியூபா மற்றும் அம…

  5. Published By: RAJEEBAN 25 SEP, 2023 | 09:53 AM சீனாவின் ஆராய்ச்சிக்கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து அமெரிக்கா கரிசனை வெளியிட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியை சந்தித்தவேளை விக்டோரியா நூலண்ட் இது குறித்த அமெரிக்காவின் கரிசனையை வெளியிட்டுள்ளார். இது குறித்து பதிலளித்துள்ள வெளிவிவகார அமைச்சர் நடுநிலை நாடு என்ற வகையில் வெளிநாட்டு கப்பல்கள் விமானங்கள் இலங்கைக்குள் தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதிப்பது தொடர்பில் நிலையான செயற்பாட்டு முறையொன்றை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் அனைத்து நாடுகளுடனும் ஒரேமாதிரியான அணுகுமுறையையே இலங்கை பின்பற்றுகின்றது என தெரிவித்துள்ள வெள…

  6. யாழ்.வேலனை மத்திய கல்லூரியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அறிவித்தல் ஒன்று தற்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. “கல்லூரி வளாகத்தினுள் அசைவ உணவுகளை தவிர்த்துக்கொள்ளவும்” என மாணவர்களுக்கு பாடசாலை நிர்வாகம் வழங்கியுள்ள அறிவித்தலே இந்த சர்ச்சைக்கு காரணமாக மாறியுள்ளது. அத்தோடு இந்த விடயம் தற்போது சமூக ஊடகங்களிலும் விவாதப் பொருளாகியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மாணவர்கள் பலரும் போசாக்கு குறைப்பாட்டால் பாதிக்கு உள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக மாணவர்களின் கல்வி செயற்பாடு பாதிக்கப்பட்டுள்ளதாக பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். மாணவர்களின் போசாக்கு மற்றும் ஊட்டச்சத்து குறித்து ஐக்கிய ந…

  7. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சேர்.பொன்.இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடத்தினால் நடத்தப்படும் சங்கீதத்தில் சிறப்பு நுண்கலைமாணி மற்றும் நடனத்தில் சிறப்பு நுண்கலைமாணி கற்கை நெறிகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான உளச்சார்புப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுத் திகதி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பல்கலைக்கழக அனுமதித் தேவைகளைப் பூர்த்தி செய்த மாணவர்கள், குறிப்பிட்ட கற்கை நெறிகளுக்கான விசேட தகுதிகளைக் கொண்டிருக்கும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதற்கான முடிவுத் திகதி கடந்த 21 ஆம் திகதி என அறிவிக்கப்பட்ட…

  8. Published By: DIGITAL DESK 3 25 SEP, 2023 | 01:07 PM யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் தாய்ப்பால் அருந்தி விட்டு, ஏணையில் உறங்கிய 03 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. கி.ஹரிகரன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. தாய் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) தாய்ப்பால் கொடுத்து விட்டு, குழந்தையை ஏணையில் உறங்க வைத்துள்ளார். நீண்ட நேரமாக குழந்தை எழும்பாததால், சந்தேகம் அடைந்து குழந்தையை எழுப்பிய போது, குழந்தை அசைவற்று இருந்துள்ளது. அதனையடுத்து, குழந்தையை சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். https://www.virakesari.lk/article/165398

  9. நிலத்தில் ‘சுழற்காற்று’ நிலை அல்லது நீரில் சுழற்காற்று, வெள்ளம் ஏற்பட்டால் அதன் அருகில் கூட செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த சூறாவளி மற்றும் சுழற்காற்றுகளின் பொது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாவதால் இது ஆபத்தான நிலை என்றும் இதன்போது அருகிலுள்ள அனைத்தும் இதில் இழுக்கப்படும் , எனவே இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும் போது, புகைப்படம் எடுப்பது அல்லது வீடியோ பதிவு செய்வது போன்ற ஆபத்தான செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) பம்பலப்பிட்டிக்கு அண்மித்த கடற்பகுதியில் ஏற்பட்ட தும் அவ்வாறானதொரு ஆபத்தான நிலையே என அவர் தெரிவித்துள்ளார். மிகவு…

  10. 25 SEP, 2023 | 10:38 AM (எம்.மனோசித்ரா) திருகோணமலையில் உள்ள கைத்தொழில் வலயத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்திய, இலங்கை அரசாங்கங்கள் நெருக்கமாகச் செயற்பட வேண்டுமென்பதை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இரு நாடுகளுக்கும் இடையே படகு சேவைகளை விரைவில் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவின் , மும்பையில் ஒக்டோபர் 17-19 வரை நடைபெறவுள்ள உலகளாவிய கடல்சார் இந்திய உச்சி மாநாட்டுக்காக இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் கொழும்பில் கடந்த வாரம் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, கடல்சார் துறையில…

  11. எமது ஒற்றுமை சீர்குலைக்கப்படுமானால் கிழக்கில் திருமலை, அம்பாறை தமிழர்களின் நிலை மிக மோசமாகும் : பா.உ. த.கலையரசன் By kugen எந்த சந்தர்ப்பத்திலும் எமது ஒற்றுமை சீர்குலையக் கூடாது என்று கருதுபவன் நான். ஏனெனில் அவ்வாறு ஒற்றுமை சீர்குலைக்கப்படுமானால் கிழக்கில் தமிழர்களின் நிலை மோசமாகும். அதிலும் அதிகம் பாதிக்கப்படப் போகின்ற மாவட்டங்களாக அம்பாறை திருகோணமலை மாவட்டங்களே இருக்கும் என்பதை ஒவ்வொருவரும் விளங்கிக் கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். பாண்டிருப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் த…

  12. கிழக்கு ஆளுநருடன் சாணக்கியன் சந்திப்பு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் குகதாசன் ஆகியோர் சந்தித்துள்ளனர். இவ் சந்திப்பின் முக்கிய காரணம் மயிலத்தமடு மாதவனை போன்ற பிரதேசங்களில் இடம்பெறும் தமிழருக்கு சொந்தமான காணி அபகரிப்பு தொடர்பில் கால்நடை அமைப்புக்கள், பண்ணையாளர்களினால் தொடர்ச்சியாக நடந்துவரும் அறவழிப் போராட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் தங்கள் போராட்டத்திற்கு வரவேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக அவரிடம் ஆவணம் கையளிக்கப்பட்டது. எனிலும் இவ் காணிகளானது மகாவலி அதிகார சபைக்கு உ…

  13. Published By: DIGITAL DESK 3 24 SEP, 2023 | 09:53 AM ஆர்.ராம் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் சம்பந்தமாக உண்மைகளைக் கண்டறியப்பட வேண்டுமாயின் ஐக்கிய நாடுகளின் பிரசன்னத்துடனான சர்வதேச விசாரணையொன்றே அவசியம் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். உள்நாட்டு போர் நடைபெற்ற காலத்திலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களிலும் கொல்லப்பட்டவர்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதை அரசாங்கம் புறந்தள்ளிவிட்டு தொடர்ந்தும் பொறுப்பின்றிச் செயற்பட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடரி…

  14. கிழக்கு மாகாண ஆளுநர் கவனத்திற்கு... பொலிஸாரின் அனுமதியை பெறாது சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் திலீபனின் நினைவேந்தல் ஊர்வலத்தை நடத்தியது முற்றிலும் தவறு என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளமை எமது கவனத்தை ஈர்த்திருக்கிறது. சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் இவ்வாறு நினைவேந்தல் ஊர்வலத்தை முன்னெடுத்து தேவையில்லாத இனக்கலவரத்தை தூண்டுவதற்கு முயற்சிப்பதாகவும் ஆளுநர் குற்றஞ்சுமத்தியுள்ளார். ''இதுபோன்ற ஊர்வலங்கள் சிங்கள மக்கள் வாழும் ஊர்களில் தவிர்க்கப்பட வேண்டும். ஏனைய இனத்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் பொறுப்புடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக பொலிஸார் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண…

  15. கிழக்கின் அவமானம் பிள்ளையான் - திரிபோலி பிளட்டூன் (கூலிக்கு கொலை செய்யும் படைப்பிரிவு) Vhg செப்டம்பர் 23, 2023 கடந்த இரு நாட்களாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகவும், அது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்ட சமூகம் சார்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தது. நேற்றைய தினம் 22.09.2023 சாணக்கியனின் உரையானது. கிழக்கின் அவமானம் பிள்ளையான் என்னும் சந்திரகாந்தன் பல கொலைகளுக்கு காரணமான ஒருவர் இவர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் அத்துடன் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பிலும் பல கொலைகள் தொடர்பிலும் அசாத் மெளலானாவினால் குற்றம் சாட்டப்பட்ட பெய…

  16. ஈஸ்டர் தாக்குதல்; நாடாளுமன்றத்தில் சஜித் தெரிவித்த கருத்தால் பரபரப்பு! தாஜ் ஹொட்லில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து அவர் தெரிவித்ததாவது” ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சனல் 4 கருத்து வெளியிடும்முன்னரே நாம், தான் பின்னணியில் உள்ளவர்கள் யார், மூலக்காரணம் என்ன என்பது தொடர்பாக பல தகவல்களை வெளியிட்டிருந்தோம். மலல்கொட அறிக்கையை அரசாங்கம் ஒழித்துக் கொண்டிருந்தது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக தான் இது வெளியே வந்தது.தெரிவுக்குழுவின் அறிக்கையில் பகுதி ஒன்றை மட்டும்தான் எமக்கு பார்க்க முடியும். இரண்டாம் பாகத்தைப் பார்க…

  17. ”புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும்” - அலி சப்ரி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில், சர்வதேச அளவுகோல்களின்படி தயாரிக்கப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எதிர்வரும் சில தினங்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். இந்நாட்டு மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் சமநிலையான சட்டமொன்றைக் கொண்டுவரும் நோக்கில் தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டம் திருத்தப்பட்டதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பி…

  18. Published By: DIGITAL DESK 3 23 SEP, 2023 | 07:45 PM ஆர்.ராம் உள்நாட்டில் தொடரும் ஊழல், நீதிபதிகளை அச்சுறுத்தி நீதித்துறை மீதான அடைக்குமுறை, அரசியலமைப்பில் உள்ளவற்றையே நடைமுறைப்படுத்தாது நீடிக்கும் அதிகாரப்பகிர்வு இழுத்தடிப்பு சம்பந்தமாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கிடத்தில் எடுத்துரைத்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி தெரிவித்தார். அமெரிக்காவுக்கான விஜயத்தினை நிறைவு செய்து நாடுதிரும்பியவுடன் இலங்கைகக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கின் அழைப்பின் பேரில் சந்திப்பொன்றை சுமந்திரன் எம்.பி நடத்தியிருந்தார். குறித்த சந…

  19. Published By: DIGITAL DESK 3 23 SEP, 2023 | 07:48 PM ஆர்.ராம் இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாகவும், இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினையும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை நோக்கி நகர்த்துவதற்குரிய அடுத்தகட்டச் சாத்தியப்பாடுகள் தொடர்பில் அமெரிக்கா தீவிரமான கரிசனையுடன் ஆராய்ந்து வருகிறது. குறிப்பாக, இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் ஜுலி சங் மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் தெற்கு மற்றும் ஆசிய விவகாரங்களுக்கான பிரிவினர், ஆசிய விவகாரங்களுக்கான பாதுகாப்பு பிரிவினர், செனட் குழுவின் வெளிவிவகார பிரிவினர் ஆகியோர் இந்த விடயம் சம்பந்தமாக கரிசனைகள் கொள்…

  20. (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை நடத்தினால் அதனையும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன். குண்டுத்தாக்குதல் இடம்பெற்று முடிந்த சம்பவம். எதிர்தரப்பினரது செயற்பாடுகள் சிறுபிள்ளைத்தனமானது என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார். 52 நாள் அரசியல் நெருக்கடியை நீதிமன்றம் தோற்கடித்ததை தொடர்ந்து உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கான 'பிளேன் பி' சிறைக்கூடத்தில் வகுக்கப்பட்டுள்ளது. பிள்ளையானை முறையாக விசாரித்தால் பல விடயங்கள் வெளிவரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற உயிர்த்…

    • 8 replies
    • 841 views
  21. தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிஸாரால் திங்கட்கிழமை (18) நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆறு பேரின் பெயர்கள் பிரதிவாதிகளாக குறிக்கப்பட்டு பொலிஸார் இந்த மனுவை தாக்கல் செய்தனர். தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினரான திலீபன் என்பவரை நினைவுகூறும் செயற்பாடு இலங்கை சோசிலிச குடியரசின் வர்த்தமானி 1721/2ஐயும், 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான தேசிய ஒருமைப்பாடுகள் சட்டத்தையும் மீறுவதாகவும் உள்ளது என்றும், நடத்தப்படும் பேரணியை 1979 ஆம…

    • 3 replies
    • 302 views
  22. ரஷ்யாவுக்கு இலங்கை நட்பு நாடாகவே உள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் ஜனித்த லியனகே தெரிவித்துள்ளார். இக்கட்டான காலங்களில் ரஷ்யா இலங்கைக்கு எவ்வாறு உதவியது என்பது நன்றாக ஞாபகம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் மொஸ்கோவில் இடம்பெற்ற ரஷ்ய – இலங்கை வர்த்தக தரப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பில் வைத்து இலங்கை தூதுவர் இதனைக் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிரான பேச்சுக்களையும் பொருளாதார தடைகளையும் இலங்கை ஆதரிக்காது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை அடுத்து ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை மேற்கத்திய நாடுகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவிற்கு எதிரான பேச்சுக்களையும் பொருளாதார தடைகளையும் இலங்கை ஆதரிக்காது!” https://thina…

  23. 22 SEP, 2023 | 06:39 PM வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள வீட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வீட்டுத்திட்டம் தொடர்பில் இன்றையதினம் (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்படி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் குறைந்த வருமானம் கொண்ட நிரந்தர வீடற்ற குடும்பங்களை இனங்கண்டு வீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத…

  24. கட்டுவன் ஆலயத்திற்கு செல்ல அனுமதி! adminSeptember 23, 2023 யாழ்ப்பாணம் கட்டுவன் காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் தேவஸ் தானம் கடந்த 1990ம் ஆண்டுக்கு பின்னர் 33 வருடங்களுக்கு பின்னர் ஆலயத்தை சென்று பார்வையிடுவதற்கும் ஆலய வழிபாட்டிற்கும் ராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்தனர் கட்டுவன் காசியம்மாள் அம்மன் ஆலய தேவஸ்தானத்தினரால், கல்வி இராஜாங்க முன்னாள் அமைச்சர் விஐயகலா மகேஸ்வரனிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, குறித்த ஆலயத்தினை சென்று பார்வையிடுவதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்த நிலையில், ராணுவத்தினரின் அனுமதியுடன்உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள குறித்த ஆலயத்தினை சென்று பார்வையிட்டதோடு ஆலயத்தில் பூஜை வழிபாடுகளும் குருமார்களினால் முன்னெடுக்கப்பட்…

  25. இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகம் MRI இயந்திரத்தை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கையளித்துள்ளது என தூதரகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜப்பான் கடந்த ஒக்டோபரில் CT ஸ்கேனர் மற்றும் பிற மருத்துவ உபகரணங்களை தேசிய வைத்தியசாலைக்கு வழங்கியதாக தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கண்டறியும் இமேஜிங் திறன்களை மேம்படுத்துவதில் இந்த உபகரணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த அதிநவீன சேர்த்தல்களுடன்,கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மருத்துவ மதிப்பீடுகளில் அதிக துல்லியம் மற்றும் நேரத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என தூதரகம் தெரிவித்துள்ளது. புதிய நன்கொடையைக் கொண்டாடும் வகையில், ஜப்பான் வழங்கிய உபகரணங்களை வைத்திருக்கும் வசதிக்கு “ஜப்பான்-இலங்கை நட்பு நோயறிதல் இம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.