ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143218 topics in this forum
-
நெதர்லாந்தில் மேலும் நான்கு மனிதநேயப் பணியாளர்கள் கைது – நெதர்லாந்து வானொலி நெதர்லாந்தில் மேலும் நான்கு தமிழ் மனிதநேயப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, அந்த நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன. இது பற்றி தகவல் வெளியிட்ட நெதர்லாந்து வானொலி, கடந்த ஏப்ரல் மாதம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் நால்வர் பிறெடா (Breda), ரொற்ரெடாம் (Rotterdam), ஹீம்சேர்க் (Heemskerk), ஹேர்லென் ((Heerlen) பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு நிதி சேகரிப்பில் ஈடுபட்டதாகவும் அறிவித்துள்ளது. ஆனால் இது பற்றிக் கருத்துக் கூறிய நெதர்லாந்து தமிழ் அமைப்புக்கள் குறிப்பிட்ட தமிழர்கள் அனைவரும் எந்தவித உதவியும் இன்றித் தவிக்கும் தமிழ் மக்களிற…
-
- 2 replies
- 1.1k views
-
-
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தோருக்கு 50 ஆயிரம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும். இதற்கான நிதி அவர்களுக்கு நேரடியாகவே வழங்கப்படும் என்ற இந்திய அரசாங்கத்தின் கூற்றை இலங்கை மறுத்துள்ளது. இடம்பெயர்ந்தவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான நிதி மக்களுக்கு நேரடியாகவே வழங்கப்படும் எனவும் மத்திய நிதி அமைச்சர் பா. சிதம்பரம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக இன்று கருத்து வெளியிட்ட தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, அரசினூடாகவே நிதி வழங்கப்படும் எனத் தெரிவித்தார். "இந்தியா இலங்கைக்குப் பல வழிகளிலும் உதவி வருகிறது. இடம்பெயர்ந்த மக்களுக்கு 50ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான திட்டத்தை அமைச்சர் சிதம்பரம் முன்வை…
-
- 0 replies
- 924 views
-
-
சுயாதீன விசாரணைக்கு ஆதரவில்லை- பிரிட்டன் அமைச்சர் அலிஸ்டர் பர்ட் பிர்ட்டன் அமைச்சர் அலிஸ்டர் பர்ட் இலங்கை அரசு போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக ஐ.நா மன்ற பொதுச்செயலருக்கு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்று தெற்காசிய விவாகாரங்களுக்கான பிரிட்டிஷ் பிரதி அமைச்சர் அலிஸ்டர் பர்ட் தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் இலங்கை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக்குழு விவாதம் நடைபெற்ற போதே இந்தக் கருத்தை அவர் வெளியிட்டார். அதே நேரம் இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் குறித்த சுயாதீன விசாரணை நடைபெற வேண்டும் என்று எழும் கோரிக்கைகளை அவர் நேரடியாக ஆதரிக்கவில்லை. விவாதத்தைத் துவக்கி வைத்து பேசிய தொழிற்கட்சி உறுப்பினர் சியோபன் ம…
-
- 1 reply
- 1.2k views
-
-
நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதரக ஊழியர்களுக்கும் நோர்வேயிலுள்ள தமிழர்களுக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக நோர்வேத் தூதரகம் தெரிவித்தது. தனிப்பட்ட காரணமாகவே மேற்படி மோதல்ச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் நோர்வேத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டது. கடந்த 10ஆம் திகதி இரவு உணவகமொன்றில் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து, குறித்த இரு குழுவினர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. http://www.tamil.dailymirror.lk/செய்திகள்/3152
-
- 0 replies
- 1.6k views
-
-
கிளிநொச்சி சாந்தபுரம் மக்களும் மாணவர்களும் சொந்த மண்ணில் குடியமர்த்துமாறு போராட்டம் ‐ சிறிது நேரம் பதட்டம் ‐ ஜீரிஎன் செய்தியாளர் கிளிநொச்சி சாந்தபுரத்தித்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தம்மை மீளக் குடியேற்றக் கோரி போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். கிளிநொச்சி சென்ரல் கல்லூரியில் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த மக்களில் 40க்கும் மேற்பட்ட மாணவர்களே 2 மணித்தியாலங்கள் வரை போராடியுள்ளனர். 6 மைல் தொலைவிலுள்ள திருவையாறு பாடசாலைக்கு தினமும் பஸ்ஸில் செல்கின்றவர்கள் இன்று பாடசாலைக்குச் செல்லப் போதில்லை எனக் கூறிய நிலையில் சிறு பதட்டம் நிலவியதாக ஜீரிஎன்னின் வன்னிச் செய்தியாளரும் தெரிவிக்கின்றார். எனினும் படையினர் பயமுறுத்தி மாணவர்களை பாடசாலைக்கு ஏற்றிச் சென்றதாகவும்…
-
- 1 reply
- 761 views
-
-
முஸ்லிம் ஆயுத புரட்சி குழு உருவாக்கம் -பள்ளிவாசல்கள் சோதனை விடுதலை புலிகளின் காலத்தில் இலங்கை இரானுவத்திற்க்கு ஆதரவாக பல முஸ்லிம் ஆயுத குழுக்களை சிங்கள அரசு உருவாக்கி விடுதலை புலிகளுக்கு எதிரான செயல் பாடுகளில் களம் இறக்கி இருந்தது . இறுதி யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் இருபதிற்கு மேற்ப்பட்ட முஸ்லிம் ஆயுதக்குழுக்களிடம் இருந்து அரசினால் ஆயுதங்கள் களையப்பட்டன . இதை அடுத்து இந்தSlave Island பகுதியில் அதிகமாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர் . இவ்விடத்தில் ஆறு பள்ளிவாசல்களும் உள்ளன .இதை அடுத்து அங்கு இலங்கை இராணுவப் புலனாய்வு துறையினர் சென்று சோதனை இட்டதுடன் அந்த பள்ளி வhசல்களிற்குள் யார் யார் இருப்பது யாருடன் தொடர்பு உள்ளது இவற்றிக்கான நிதி உதவி மற்…
-
- 2 replies
- 994 views
-
-
நாளை பொதுவிடுமுறைத் தினமாக அரசாங்கம் அறிவிப்பு _ இராணுவ வெற்றியைக் கொண்டாடும் முகமாக நாளை பொதுவிடுமுறைத் தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவடைந்து ஒருவருடம் பூர்த்தியாகியுள்ள நிலையில், அதனைக் கொண்டாடுவதற்காக நாளைய தினம் விசேட ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=24467 உதவிகள் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களை வெற்றி கொண்ட நாள்.
-
- 0 replies
- 780 views
-
-
ஐ.நா அதிகாரி லின் பஸ்கோ முல்லைத்தீவு சென்றார்: மக்கள் சந்திக்க படையினர் தடை ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார உயரதிகாரி லின் பஸ்கோ இன்று (புதன்கிழமை) முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேரில் சென்று நிலமைகளை அவதானித்துள்ளார். முல்லைத்தீவில் 40 ஆயிரம் பேரை மீளக் குடியேற்றி இருப்பதாக சிறீலங்கா அரசு கூறிவரும் நிலையி;ல், அங்கு சென்ற லின் பஸ்கோ சிறீலங்கா அரசின் மீள் குடியேற்ற நடவடிக்கையைப் பாராட்டி இருப்பதாக அரச தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இதேவேளை, சிறீலங்கா படைகளால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் சிலரே பஸ்கோவைச் சந்திக்கவும், தமது நிலைப்பாட்டை விளக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா படைகள் மற்றும் புலனாய்வுத் துறையினரது பிரசன்னம் காரணமாக மக்கள் தமது உண்மை …
-
- 0 replies
- 633 views
-
-
கடந்தவருடம் சிறீ லங்கா அரசினால் செயற்கைக்கோள் ஏவும் திட்டம் பற்றி அறிவிக்கப்பட்டது. சிறீ லங்காவின் முதலாவது செயற்கைக்கோளிற்கு மறைந்த, புகழ்பெற்ற விஞ்ஞான புனைகதை ஆசிரியர் Sir Arthur C Clarke அவர்களின் பெயரையும் சூட்டுவதாய் கூறப்பட்டது. மேற்கண்ட செயற்கைக்கோள் திட்டம் விபரிக்கப்பட்டு ஏறக்குறைய பதினைந்து மாதங்களின் பின்னர், வியாபார ரீதியாக இலாபகரமாக இல்லாத காரணத்தினால் குறிப்பிட்ட செயற்கைக்கோள் திட்டம் தற்போது கேள்விக்குறிக்கு உள்ளாகியுள்ளதோடு, அது கைவிடப்படக்கூடிய நிலமையும் தோன்றியுள்ளது. +++ Sri Lanka's satellite: Lost in space? By Nalaka Gunawardene Some things that start with a loud bang end with the softest whimper. A current example is Sri Lanka's plan…
-
- 3 replies
- 1.2k views
-
-
சர்வதேசம் இலங்கையினை எந்த விதத்திலும் நிர்ப்பந்திக்க கூடாது. வற்புறுத்தக்கூடாது என்று அகாஷி கூறியுள்ளார்.2002 சமாதான காலத்தில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்பினை சர்வதேச ரீதியாக முடக்குவதற்கும் சமாதான பேச்சுவார்த்தையினை குழப்புவதற்கும் காரணமாக செயற்பட்ட இரு நண்பர்கள் கொழும்பில் சந்தித்தனர். ஜப்பானின் சமாதான ஏற்பாட்டாளரும் மீள்குடியேற்றம், மீள் நிர்மாணத்துறை பிரதிநிதியுமான யசூசி அகாசி - வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் இடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அகாஷி இவ்வாறு கூறியுள்ளார். யப்பான் நிதி உதவி வழங்கும் போது ஒன்றையும் திணிப்பதில்லை அதே போல மற்றைய கொடையாளர்களும் இலங்கையை வற்புறுத்தக்கூடாது என்று கூறியுள்ளா…
-
- 2 replies
- 1.2k views
-
-
வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புலம்பெயர்ந்த மக்களின் உதவிகள் [ செவ்வாய்க்கிழமை, 15 யூன் 2010, 06:34 GMT ] [ வவுனியா செய்தியாளர் ] வன்னியில் நடந்த யுத்தத்தின் போது இடம் பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களிலும் முகாம்களுக்கு வெளியிலும் வசித்தபடி வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் பல மாணவர்கள் கல்வி கற்றுவருகின்றனர். இம்மாணவர்களில் பெற்றோரையும், உறவுகளையும், உடல் உறுப்புகளையும் இழந்த மற்றும் வசதிகளற்ற மாணவர்களிற்கு புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் முதற்கட்ட நிகழ்வு 13.06.10 ஞாயிறு அன்று காமினி மகாவித்தியாலயத்தில் அதன் அதிபர் நடராசா ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த உதவியினை சமாதான…
-
- 3 replies
- 1.1k views
-
-
சமாதானத்துக்கான ஜப்பான் அரசின் விசேட பிரதிநிதி யசூசி அகாசி, ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை இலங்கை வருகின்றார். இத்தகவலை இலங்கைக்கான ஜப்பனிய தூதரகம் தெரிவித்துள்ளது. தனது விஜயத்தின் போது, அரச உயர்மட்ட அதிகாரிகள், பிரதிநிதிகள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களைச் சந்தித்து, இடம்பெயர்ந்தோரை விரைவாக மீள்குடியேற்றுவது தொடர்பாக அவர் கலந்துரையாடுவார். மீள்குடியேற்றப் பகுதிகளுக்கும் யசூசி விஜயம் செய்வார். குறிப்பாக வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் ஜப்பான் உதவியுடன் மேற்கொள்ளப்படும், இடம்பெயர்ந்தோருக்கான திட்டங்கள் தொடர்பான நிகழ்வுகளிலும் அவர் கலந்து கொள்வார். யசூசி அகாசியின் 20 ஆவது இலங்கைக்கான விஜயம் என்பது குறிப்பிடத்தகக்து http://www.vi…
-
- 4 replies
- 780 views
-
-
அமெரிக்காவின் உண்மை முகம் - புலிகளை அழித்ததற்கு மகிந்தவிற்குப் பாராட்டு தமிழீழத்தின் தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்காக தமது உயரிய உயிர்களை ஈகம் செய்து மாபெரும் விடுதலைப் போராட்டத்தை நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்றும், அவர்களை அழித்ததற்கு பாராட்டுத் தெரிவிப்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது. தமிழ் மக்கள் தமது விடுதலைக்கு உதவுவார் என தற்பொழுதும் நம்பியிருக்கும் அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவின் இந்தக் கருத்து அவரது உதவியாளர்கள் மூலம் நேரடியாக சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளமை புலம்பெயர்ந்த மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று கொழும்பில் மகிந்தவைச் சந்தித்த அமெரிக்க அரசுத் தலைவரது சிறப்பு உதவியாளரும…
-
- 5 replies
- 986 views
-
-
கனடியத் தமிழர் தேசிய அவைத் தேர்தலுக்கு தயாராகும் கனடியத் தமிழ் மக்கள் வரும் யூன் 20ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கனடிய தமிழர் தேசிய அவைக்கான தேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ள நிலையில் தேர்தலில் வாக்களிப்பதற்கு கனடியத் தமிழ் மக்களும் தயாராகி வருகின்றனர். தேர்தல் நாளன்றான தேர்தல் செயற்பாடுகளை ஒஉழுங்கமைப்பதில் தேர்தல் ஆணையமான தமிழர் தேர்தலுக்கான கனடியக் கூட்டமைப்பு அலுவலகர்கள் தீவிரமாக இயங்கி வருகின்றனர். தேர்தல் வாக்குச்சாவடிகள், வாக்குச்சாவடி அலுவலர்கர்களுக்கான பயிற்சிகள், வாக்குச் சாவடி ஒழுங்கமைப்புகள், மக்களுக்கான அறுவுறுத்தல்களை வழங்குவதற்கான வழிமுறைகள் என பல செயற்பாடுகளில் அவர்கள் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருந்தது. …
-
- 8 replies
- 802 views
-
-
விழுப்புரம் குண்டுவெடிப்புச் சம்பவம் முழுக்க முழுக்க பிரபாகரன் ஆதரவாளர்களைச் சிக்க வைக்கும் சதியே, என நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கூறியுள்ளார். விழுப்புரம் அருகே தண்டவாளத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி நாம்தமிழர் இயக்க தலைவர் சீமான் இன்று கூறியதாவது: தமிழர்கள் எவரும் இது போன்ற காரியத்தை செய்ய மாட்டார்கள். குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் பிரபாகரனின் தம்பிகள் என்ற துண்டு பிரசுரம் கிடந்ததாக பொலிஸ் சொல்கிறது. பிரபாகரனே வன்முறைக்கு எதிரானவர்தான். 30 ஆண்டுகளாக ஒரு இனத்தின் மீது ஒரு அரசு ஏவிய பயங்கரவாதத்தை எதிர்த்துதான் போரிட்டார் அவரது எதிரிகள் சிங்கள இராணுவமும் இராணுவ தளவாடங்களும்தான். சிங்கள மக்கள் அல்ல. பலாலி விமான தளம் மீது தாக்குதல் நடத்த…
-
- 0 replies
- 811 views
-
-
போர்க்குற்றம் புரிந்தமைக்கு ஆதாரம் இருந்தால் கொண்டுவரட்டும் பார்க்கலாம்: கோத்தபாய சிறிலங்கா படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்பதற்கு ஆதரம் இருந்தால் அவற்றை சிறிலங்கா நீதிமன்றில் சமர்ப்பிக்கலாம். அந்த ஆதாரங்களின் அடிப்படையில் சட்டத்தரணிகள் ஊடாக வழக்கு பதிவு செய்யலாம் என்று சவால் விடுத்திருக்கிறார் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு செயலர் கோத்தபாய ராஜபக்ச. சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்து ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர்குழு ஒன்றை அமைப்பது தொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார பணிப்பாளர் நாளை கொழும்பு செல்லவுள்ள நிலையில் கோத்தபாய ராஜபக்ச மேற்கண்டவாறு…
-
- 1 reply
- 692 views
-
-
வன்னியில் சிங்களத்தினால் தமிழர்களின் லட்சக்கணக்கான வீடுகள் அழித்தொழிக்கப்பட்டு, இன்று அங்குள்ள எஞ்சிய மக்கள் படங்குகளின் கீழும், மரங்களின் கீழும் ஏதிலிகளாக வாழும் சூழ்நிலையில், மிக வேகமாக வன்னியில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்று வருகிறது. வன்னியில் உள்ள தமிழ் பூர்வீக கிராமமான கொக்கிளாயில் 80களில், அங்கிருந்த மக்களை கொன்றொளித்தும், அவர்களின் உடைமைகளை அழித்தும் அப்பகுதிகளில் இருந்து துரத்திய சிங்களம், அங்கு சில சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தியது. மீண்டும் இப்போது லண்டனில் இருக்கும் சிங்கள இனவாத அமைப்புகளினதும், இனவாதிகளினதும் உதவியுடன் கொக்கிளாயில் மீண்டும் சிங்கள குடியேற்றங்களை ஆரம்பித்திருக்கிறது. படங்கள்: சிங்கள இராணுவ இணையத்தளத்திலிருந்து ..
-
- 27 replies
- 2.2k views
-
-
முல்லைத்தீவின் நந்திக்கடலை சீன நிறுவனம் ஒன்றிடம் மீள்வளர்ப்புத் திட்டத்துக்காக ஒப்படைப்பதற்கு சிறிலங்கா அரசு தயாராகி வருகிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் இறுதியாகத் தோற்கடிக்கப்பட்ட நந்திக்கடல் பகுதியில் மீள்வளர்ப்பு மற்றும் மீள்பிடித்திட்டம் ஒன்றில் முதலீடு செய்வதற்கு சீன நிறுவனம் ஒன்று விருப்பம் தெரிவித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சீனர்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் சீபாஸ் எனப்படும் மீன் இனத்தை நந்திக்கடலில் வளர்க்கவும் அவற்றை பிடித்து ஏற்றுமதி செய்வதற்குமான உரிமைiயை வழங்குமாறு சீன நிறுவனம் ஒன்று சிறலங்கா அரசை அணுகியுள்ளது. “அவர்கள் எம்முடன் இது பற்றிப் பேச்சு நடத்தினர். விரைவில் தமது திட்ட வரைபுகளுடன் இங்கு வருவார்க…
-
- 7 replies
- 2k views
-
-
ஏனிந்த இழிநிலையை பார்க்கும் விழி வைத்தாய் இறைவா ஏனிந்த இழிநிலையை பார்க்கும் விழி வைத்தாய் இறைவா ஏனிந்த இழிநிலையை பார்க்கும் விழி வைத்தாய் இறைவா ஏனிந்த இழிநிலையை பார்க்கும் விழி வைத்தாய் இறைவா ஏனிந்த இழிநிலையை பார்க்கும் விழி வைத்தாய் இறைவா ஏனிந்த இழிநிலையை பார்க்கும் விழி வைத்தாய் இறைவா ஏனிந்த இழிநிலையை பார்க்கும் விழி வைத்தாய் இறைவா ஏனிந்த இழிநிலையை பார்க்கும் விழி வைத்தாய் இறைவா
-
- 2 replies
- 1.5k views
-
-
புலிகளின் தலைவர வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்‐ 16 June 10 06:42 am (BST) விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 80 வயதான பார்வதி அம்மாள் கடந்த 10 வருடங்களாக நோய்வாய்ப்பட்டுள்ளார். வல்வெட்டித்துஐற வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரின் உடல் நிலை சற்று மோசமானதை அடுத்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.# http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=25889&ca…
-
- 0 replies
- 1.3k views
-
-
படையினர் மற்றும் ஈ.பி.டி.பி ஆகியோர் தொடர்பிலான சில வழக்குகளை பாரபட்சமின்றியும் துணிவுடனும் மேற்கொண்டுவந்த சாவகச்சேரி, வவுனியா நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், வவுனியா மாவட்ட நீதி மன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நீதிச் சேவை ஆணைக்குழுவால் இடமாற்றங் கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாவகச்சேரி நீதிவானாகப் பணியாற் றும் ரி.ஜே. பிரபாகரன் அக்கரைப்பற்று நீதி மன்றத்துக்கும், வவுனியா நீதிவானாகப் பணியாற்றும் அலெக்ஸ்ராஜா கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்துக்கும் மாற்றப் பட்டுள்ளனர். சாவகச்சேரி நீதிமன்ற நீதிவானாக எஸ். அப்துல்லா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி மாணவன் கபிலநாத் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம…
-
- 0 replies
- 760 views
-
-
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள விவாதம் தொடர்பில் அரசாங்கம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது:- திவயின. இலங்கை இராணுவத்தினர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டமை தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நாளைய தினம் நடைபெறவுள்ள விவாதம் தொடர்பில் அரசாங்கம் தனது கடுமையான எதிர்ப்பை பிரித்தானிய அரசுக்குத் தெரியப்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகளின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான சிங் யா பஹான் மெக் டொனா என்பவரே இந்த விவாதத்தைக் கோரியுள்ளார் என திவயின நாளேடு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய சமுகத்தின் கண்காணிப்பின் கீழ் இலங்கையில் ஈழத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற யோசனையும் கொண்டுவரப்படவுள்ளதாக இலங்கை அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளத…
-
- 0 replies
- 1.1k views
-
-
கடந்த மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மேற்கொண்ட வன்னி விஜயம் தொடர்பான அறிக்கை: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 12 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய வன்னி மாவட்டங்களுக்கும் கிளிநொச்சி மாவட்டத்தினதுமாக மொத்தம் 28 கிராமங்களுக்கு மே மாதம் 21,22,23, 24 ஆகிய திகதிகளில் விஜயம் செய்தது தொடர்பான அறிக்கை. 12 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு வன்னிக்கு மே மாதம் 21,22,23, 24 ஆகிய திகதிகளில் விஜயம் செய்தது. (1) மதியாமடு (2) நைனாமடு (3)நெடுங்கேணி (4) வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ஒலுமடு (5) தட்சணாமருதமடு (6) பாலம்பிட்டி (7) சின்னப்பண்டிவிரிச்சான் (8) ஈச்சலவக்கை (9) மன்னார் மா…
-
- 0 replies
- 655 views
-
-
தமிழக எம்.பிக்கள் விரைவில் இலங்கை வருவர் : அமைச்சர் கெஹெலிய வடக்கு கிழக்கின் உண்மையான நிலவரங்களை நேரில் கண்டறிவதற்காக, அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் தமிழக எம்.பிக்கள் இலங்கை வரவுள்ளனர் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். நேற்று செவ்வாய்க்கிழமை தேசிய ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கை நிலவரங்களை சர்வதேசம் அறிந்துகொள்ள சிறந்ததொரு சந்தர்ப்பத்தை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார் http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=24408
-
- 0 replies
- 557 views
-
-
இலங்கை இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் பிலிப் அல்ஸ்டன் குற்றச்சாட்டு இலங்கை அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடித்துக் கொண்டிருப்பதாகவும் இது குறித்து சர்வதேச சமூகம் திருப்தி காண முடியாது எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் சட்டவிரோதப் படுகொலைகளுக்கான விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் தெரிவித்துள்ளார். தமது நாட்டின் யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்படக் கூடாது என வலியுறுத்தி வரும் இலங்கை மற்றும் இஸ்ரேலின் யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இலங்கை ஜனாதிபதி நியமிக்க உத்தேசித்துள்ள விசாரணைக் குழுவின் நம்பகத் தனமை குறித்து சந்தேகம் தெரிவித்த அஸ்ரன் சர்வதேச ரீதியான விசாரணைகளின் மூலமே உண்மைகளைக் கண்டறிய…
-
- 0 replies
- 655 views
-