ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143169 topics in this forum
-
இலங்கையிலிருந்து அகதிகளாய் வெளியேறிய வேளையில் மலேசியக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ் 75 ஈழத் தமிழர்களும் கொடிய குற்றங்களைச் செய்த கைதிகளைப் போல விலங்கிடப்பட்டு கொடும் சித்திரவதைகளுக்கு உள்ளாகியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 6 பெண்களும் 8 குழந்தைகளும் உள்ளடங்கிய இந்த 75 பேரும் முதலில் அந்தக் கப்பலில் இருந்து இறங்க தயக்கம் காட்டிய போதிலும் பினாங்கு துணை முதல்வர் ராமசாமி அகதிகள் இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட மாட்டார்கள் என வழங்கிய உறுதி மொழியைத் தொடர்ந்தே கப்பலிலிருந்து இறங்கியமை குறிப்பிடத்தக்கது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு கைகளில் விலங்கிடப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் இவர்கள் குறித்து குரல் எழுப்புவதற்…
-
- 0 replies
- 589 views
-
-
ஊடகவியலாளர் மீது இலக்கு பத்திரிகை சுதந்திர தினத்தைக் குறிக்கும் முகமாக எல்லைகளற்ற செய்தியாளர்கள் என்ற ஊடக சுதந்திர அமைப்பு பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊடக சுதந்திரத்துக்கு எதிரானவர்கள் என்று தாங்கள் கருதும் தனிநபர்கள் மற்றும் குழுக்களின் பெயர்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர். உலகின் அனைத்து பாகங்கள் பற்றியும் இந்தப் பட்டியலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தங்களுடைய மதிப்பீட்டில் யார் யார் ஊடக சுதந்திரத்துக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளார்கள் எப்படியான சேதத்தை ஏற்படுத்தியுள்ளார்கள் என்று இந்த அமைப்பு அதில் விபரித்துள்ளது. எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின் தொனி சாடும் விதமாகவும் கேலி செய்யும் விதமாகவும் இருகிறது. …
-
- 0 replies
- 370 views
-
-
தமிழினத்திற்கு அதிகமான தலைவர்கள் தேவையில்லை சிறந்த தலைமைத்துவமே வேண்டும் – பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி மலேசியத் தலைநகர் அம்பாங்கில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டின் எழுச்சி முகாம் சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றிய பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி தமிழினத்திற்கு அதிகமான தலைவர்கள் தேவையில்லை சிறந்த தலைமைத்துவமே வேண்டும் என்றார். உலகத் தமிழினத்திற்கு முற்போக்குச் சிந்தனை மிகவும் அவசியமாகும். அதேவேளை சிந்தனைப் பரிமாற்றங்களை உலகளாவிய நிலையில் உள்ள தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும் தமிழினத்திற்கு அதிகமான தலைவர்கள் தேவையில்லை.சிறந்த தலைமைத்துவமே வேண்டும் என்று பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசா…
-
- 0 replies
- 499 views
-
-
ஐ.எம்.எவ். குழு சிறிலங்கா வருகை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று சிறிலங்கா வரவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவின் விஜயத்தின்போது 2010ம் ஆண்டின் வரவு செலவுத்திட்டம் தொடர்பில் சிறிலங்காவின் அதிபர் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்களிடம் பேச்சு நடாத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்காவின் வரவு செலவுத்திட்டம் வரும் வரையில் தாங்கள் காத்திருப்பதாகவும் இதன் பின்னரே சிறிலங்கா கோரியுள்ள மூன்றாம் கட்ட உதவியினை வழங்குவது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்தக்குழுவின் விஜயம் அடுத்த வாரமளவில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. http://meenakam.com/?p=15398
-
- 0 replies
- 321 views
-
-
கடந்த ஆண்டு வன்னியில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பாரிய இன அழிப்பு நடவடிக்கை நடைபெற்று ஆண்டு ஒன்று நிறைவடைந்து வருகின்ற இந்த மாதத்தில் தமிழகத்தின் சினத்திரை நட்சத்திரங்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்காக யாழ்ப்பாணம், வவுனியா வருகின்றனர் என்ற செய்தி தாயக மக்களை மிகக் கவலைக்குள் தள்ளியுள்ளது. வன்னி அழிப்பின் ஓராண்டினை பாரிய விழாக்களாக ஏற்பாடு செய்து சிங்கள அரசு முன்னெடுத்துவருகின்ற நிலையில் அதன் ஒழுங்குபடுத்தலில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்படாடு செய்யப்பட்டுள்ளன. <P>இதன் அடிப்படையில் இந்திய திரைப்படங்களை உலக கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கோடு நடாத்தப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் (International Indian Film Academy – IIFA Awards) விழாவினையும் இலங்…
-
- 0 replies
- 679 views
-
-
வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் இன்று இரவு அழிப்பு – GTN செய்தியாளருக்கு சிவாஜிலிங்கம் அறிவிப்பு‐ 03 May 10 07:14 pm (BST) வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் இன்று இரவு படையினரால் இடித்தளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனரக வாகணங்களின் உதவியுடன் இந்த அழிப்பு இடம்பெற்றதாக அயலவர்கள் தனக்கு அறிவித்துள்ளனர் என முன்னாள் நாடாளுமண்;ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 1980களின் பிற்பகுதியில் புலிகளால் உருவாக்கப்பட்ட இந்த மாவீரர் துயிலும் இல்லம் 1996ஆம் ஆண்டு படையினரால் முற்றாக இடித்தழிக்கப்பட்டது. 2002 ஆம் அண்டில் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கையுடன் மக்களின் பங்களிப்புடன் முன்பிருந்தவாறே மீண்டும் உருவாக்கப்பட்டது. எனினும் 2…
-
- 2 replies
- 993 views
-
-
14வது ஜீ-15 மாநாட்டின் தலைமைப்பதவி சிறிலங்காவின் அதிபருக்கு ஈரானில் நடைபெறவுள்ள 14வது ஜீ-15 மாநாட்டின் தலைமைப்பதவியை சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ஸவுக்கு வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜீ-15 நாடுகளின் உச்சிமாநாடு எதிர்வரும் 17ம் திகதி ஈரானில் ஆரம்பமாகவுள்ளது. இவ்வாறு ஆரம்பமாகவுள்ள 14வது ஜீ-15 உச்சி மாநாட்டின் போது சிறிலங்காவின் அதிபருக்கும் ஈரான் ஜனாதிபதிக்குமிடையே முக்கிய சந்திப்பும் இடம்பெறவுள்ளது. ஜீ-15 உச்சிமாநாட்டில் இலங்கை கென்யா, சிம்பாவே, ஈரான், அல்ஜீரியா ஆஜென்ரீனா, பிறேசில், சிலி, எகிப்து இந்தியா, இந்தோனேசியா ஜமெய்க்கா, நைஜீரியா, மலேசியா, மெற்சிக்கோ, பெரு, செனகல் மற்றும் வேனிசுவேலா ஆகிய நாடுகள் பங்கேற்கவுள்ளன.13வது ஜீ-15 உச்சிமாநாட்டின…
-
- 4 replies
- 434 views
-
-
இலங்கை மீனவர்களின் படகுகளில் அல்-கைடா இந்தியாவுக்குள் ஊடுருவலாம் மலேசிய நிருபர் செவ்வாய்க்கிழமை, மே 4, 2010 இலங்கை மீனவர்களின் படகுகளில் அசாம் பகுதியூடாக அல்கைடா இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஊடுருவி இருக்கலாம் என இந்திய பொலிஸ் தெரிவித்துள்ளாதாக த எகொனொமிக் ரைம்ஸ் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த செய்தி ஆதாரமற்றது என இந்திய புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன. 167 பேர் கொண்ட அல்-கைடா அணியினர் இவ்வாறு ஊடுருவியுள்ளதாக இந்திய பொலிஸ் தெரிவித்துள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%A…
-
- 6 replies
- 695 views
-
-
இந்தியத்தூதருடனான இன்றைய சந்திப்பு சிநேகப்பூர்வமானதே – சுரேஸ் பிரேமச்சந்திரன் இலங்கைக்கான இந்திய தூதருக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருக்குமிடையிலான சந்திப்பு ஒன்று இன்று மதியம் 12.30 மணியளவில் இந்திய தூதரின் உத்தியோகபூர்வ வாசல்தலத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்து தெரிவிக்கையில் இந்த சந்திப்பு உத்தியோகப்பற்ற சந்திப்பு ஒன்று என்பதுமட்டுமேயன்றி சிநேகபூர்வ சந்திப்பாகவும் அமைந்ததாகவும் தெரிவித்ததுடன் அத்துடன் இந்த சந்திப்பில் எந்தவொரு விடயம் சம்பந்தமாகவும் கலந்தாரயப்படவில்லை என்பதோடு, எந்தவிதமான கோரிக்கைகளையும் தாம் முன்வைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். அத்தோடு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்…
-
- 7 replies
- 709 views
-
-
லண்டனில் நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தல் முடிவுகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டுவருகின்றன. வடமேற்கு லண்டன் விபரம்: 1) சேனாதிராஜா ஜேயானந்தமூர்த்தி 2) டிலக்ஷன் மொரிஸ் 3) பாலாம்பிகை முருகதாஸ் 4) லலிதசொரூபினி பிரித்திராஜ் 5) ஜெயவாணி அச்சுதன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் ஜெயானந்தமூர்த்தி அவர்கள் பெருவாரியான வாக்குகளைப் பெற்றுள்ளார். வடகிழக்கு லண்டன் வேட்பாளர்களில் வெற்றிபெற்றவர்கள்: 1) ஆர்த்தி ஆறுமுகம் 2) சசிதர் மகேஸ்வரன் 3) கவிராஜ் ஷண்முகநாதன் 4) செல்வராஜா செல்லத்துரை 5) கரன் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர். தென்மேற் லண்டன் முடிவுகள் வர உள்ளது. அத்துடன் வெளிமாவட்ட தேர்தலை தேர்தல் அணையகம் ர…
-
- 10 replies
- 1.2k views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் பிரான்ஸ் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கு பிரான்ஸிலிருந்து 10 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக கடந்த 02.05.2010 அன்று நடந்த தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விபரங்கள். தேர்தல் தொகுதி பாரிஸ் 75 திரு. சிவசுப்பிரமணியம் மகிந்தன் 547 வாக்குகள் திரு. சிவகுரு பாலச்சந்திரன் 165 வாக்குகள் திரு. கிரகரி கிறிஸ்ரியன் 109 வாக்குகள் திருமதி. இராசமலர் குணசேகரலிங்கம் 67 வாக்குகள் செல்லுபடியற்றவை 13 வாக்குகள் மொத்த வாக்குகள் 901 தேர்தல் தொகுதி சென் ஏ மார்ன் 77 எஸ்ஸன் 91 திருமதி.குருபரநாதன் சுபா~pனி 1448 வாக்குகள் செல…
-
- 8 replies
- 1.4k views
-
-
மலேசிய அரசு கைது செய்துள்ள 75 தமிழர்களை அவர்களை விரும்பும் நாட்டிற்கு அனுப்பக்கோரி தூதரகத்தில் சீமான் மனு மலேசிய அரசு கைது செய்துள்ள 75 தமிழர்களை அவர்கள் விரும்பும் நாட்டிற்கு உரிய உதவிகள் செய்து அனுப்ப வேண்டும் என்றுக்கோரி நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் சென்னையில் உள்ள மலேசிய தூதரகத்தில் சீமான் தலைமையில் மனு அளித்துள்ளனர். சிங்கள இனவெறி அரசு தமிழர்கள் மீது தொடுத்த போரினால் பாதிப்புற்று, வன்னி வதைமுகாம்களில் அடைக்கப்பட்டு பின் விடுதலையான ஈழத்தமிழர்கள் பெண்கள்,குழந்தைகள் உட்பட 75 பேர், தங்களால் இனி இலங்கையில் வாழ முடியாத நிலையில் வேறு ஏதாவது நாட்டிற்கு அகதிகளாகப் போய் பிழைத்துக்கொள்வோம் என்று கப்பலில் தப்பித்துச்சென்றனர். ஆனால் அப்படிச் சென்றவர்களின் படகை…
-
- 1 reply
- 368 views
-
-
ஓய்வறியா தலைவன் -கண்மணி நெடுந்தூரத்திற்கு அப்பால் இருந்து வரும் பாடலைப்போல தெளிந்த நீரோடை ஒலிக்கிறது. உயரமான மரக்கிளைகளை ஊடுருவி நிலவொளி வருகிறது. இரவு நீண்டு செல்கிறது. அந்த மனிதர் இன்னும் விழித்திருக்கிறார். நாட்டைப் பற்றிய கவலையால் அவர் இன்னும் தூங்கவில்லை. அவர் தொடர்ந்து தமது மண்ணின் விடுதலைக்காக உழைத்தார். இன்றுவரை, இந்த வினாடிவரை அறிவியல் பூர்வமான அவருடைய சிந்தனையும், ஆக்கப்பூர்வமான லட்சியமும், அடக்கமான உழைப்பும், அகலமான பார்வையும், ஆழமான அன்பும் கொண்ட ஒரு மகத்தான மனிதர், நமது தாய் மண்ணின் விடுதலைக்காக, தமிழ் மண்ணின் மானத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறார். அவர் கரங்களில் சுமந்த கருவிகள், பகைவனின் பகை முறித்தது. அவரின் மனங்களில் தோன்றி…
-
- 0 replies
- 948 views
-
-
யாழ் குடாநாட்டில் உள்ள சிறீலங்காப் படையினர் தனியாருக்கு சொந்தமான நிலைகளில் இருந்து பின்வாங்க உள்ளதாக அறிவித்தார் கோத்தபாய. யாழ் குடாவில் இருந்து படைகளை படிப்படியாக விலக்க முன் வந்தாராம் யாழ் குடா சிறீலங்கா படைத்தளபதி. ஆனால் இப்போ யாழ் குடாவில் ஈபிடிபி ஆயுதக் கும்பலால் நடத்தப்படும் படுகொலைகள் கப்பம் அறவிடல்கள் கொள்ளைகள் பாலியல் வல்லுறவுக்கள் சட்டவிரோத செயற்பாடுகளை காரணம் காட்டி தமது முன்னைய அறிவிப்பில் இருந்து இவர்கள் பின்வாங்கியுள்ளனராம். ஈபிடிபி ஆயுதக் கும்பல் சிறீலங்கா அரசின் ஒரு அங்கம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இருந்த போதும் சிறீலங்கா படைகளுக்கான குடா நாட்டு தளபதி ஈபிடிபி ஆயுதக் கும்பலின் செயற்பாடுகள் குறித்து குற்றச்சாட்டுக்களை வெளியிட்டுள்ளார். அந்தள…
-
- 13 replies
- 1.8k views
-
-
சிறிலங்கா முழுவதிலும் வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு சிறிலங்கா முழுவதிலுமுள்ள வைத்தியசாலைகளில் பல மருந்துவகைகளுக்கு பலத்த தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவிக்கின்றது. நோயாளர்கள் முறைப்பாடு செய்யுமளவிற்கு இந்த நிலைமை உக்கிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமளவிற்கு அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. வைத்தியசாலைகளில் தற்போது நிலவும் மருந்துப்பொருட்கள் தட்டுப்பாட்டினை ஆராய்வதற்கு சிறிலங்கா சுகாதார அமைச்சினால் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. மருந்துப்பொருட்களின் தட்டுப்பாட்டை நீக்குவதற்கும் அதற்காக மேற்கொள்ளவேண்டிய நடவடிக…
-
- 0 replies
- 417 views
-
-
அவசரகாலச்சட்டம் நீக்கப்படமாட்டாது – சிறிலங்கா பிரதமர் அவசரகாலச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அவசரகாலச் சட்டம் நீக்கப்படமாட்டாது என சிறிலங்காவின் பிரதமர் தெரிவிக்கின்றார். அவசரகாலச்சட்டம் சம்பந்தமான பிரேரணையை இன்று காலை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் அவசரகாலச் சட்டத்தினை கொண்டு முக்கிய சவால்களை வெற்றிகொள்ள நோ்ந்ததாக தெரிவித்த அவர், சர்வதேச ரீதியில் பயங்கரவாதச் செயல்கள் தொடர்வதனால் இதனை ஒழிப்பதற்கு அவசரகாலச்சட்டம் நீடீக்கப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்’ளார். http://meenakam.com/?p=15348
-
- 0 replies
- 314 views
-
-
வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு அரசுடன் பேசுவோம் - சம்பந்தன் வவுனியா நிருபர் செவ்வாய்க்கிழமை, மே 4, 2010 வடக்கு, கிழக்கு அபிவிருத்தி குறித்து அந்தப் பிரதேச மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எம்முடன் அரசாங்கம் திறந்த மனதுடன் பேசினால் கலந்தாலோசனை நடத்தினால் நாம் எமது முழு ஆதரவையும் வழங்குவோம். பொதுத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர் களு ம் இந்தியத் தூதுவர் அசோக்கே காந்தவின் அழைப்பின் பேரில் அவரை நேற்று நண்பகல் சந்தித்தனர்.அப்போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கண்டவாறு இந்தியத் தூதுவரிடம் உறுதியாகத் தெரிவித்தனர். நட்புரீதியாக இடம்பெற்ற இச்சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம் பந்தன் தலைமையில் நாடாளும…
-
- 0 replies
- 302 views
-
-
நீதிக்கு இது ஒரு போராட்டம் இதை நிச்சயம் உலகம் பாராட்டும் நாடுகடந்த தமிழீழ அரசுக்காய் எமது குரல் ஓங்கி ஒலிக்கும் என்ற நிலைப்பாட்டில் உறுதியுடன் பயணிக்கும் நாம் நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிப்போரையும் குழப்பங்கள் ஏற்படுத்துவோரையும் மக்கள் மத்தியில் இனம்காட்டி உறுதிமிக்க செயற்பாடுகளுக்கு வலுச்சேர்ப்போம். அந்த வகையில் பல எதிர்பார்ப்புக்களோடு சவால்களை எதிர்கொண்டவாறு சூடுபிடிக்கும் தேர்தல் களத்தின் மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கு முடிவெடுத்த எமது குழுமம் தேர்தல் நடக்கும் நாடுகளில் எமது செய்தியாளர்கள் கட்டுரையாளர்கள் ஆய்வாளர்கள் விமர்சகர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து தகவல்களை திரட்டி தேர்தல் கள மதிப்பீடுகளை வெளியுலகிற்கு வெளிப்படுத்த முனைகின்றோம். இத் …
-
- 1 reply
- 906 views
-
-
'அரச பராமரிப்பிலேயே பார்வதி அம்மாள் சிகிச்சை' விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழ்நாட்டில் தங்கி சிகிச்சை பெற வேண்டுமானால், தமிழக அரசின் பாதுகாப்பில் தமிழக அரசு குறிப்பிடும் மருத்துவமனையில், தமிழக அரசின் செலவில் சிகிச்சை பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை புதுடெல்லியில் இந்தியப் பிரதமரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது அவரிடம் இது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கலாம் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருப்பது…
-
- 6 replies
- 1.1k views
-
-
நேற்று நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலில் கனடாவிலிருந்து வெற்றி பெற்றுள்ள திரு. ஈழவேந்தன் அவர்களை eelamweb இணையத்தளத்திற்காக பேட்டி கண்டோம். தேர்தல் வெற்றி, அடுத்த கட்ட நடவடிக்கைகள், இந்திய நிலைப்பாடு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் அவர் தெரிவித்த கருத்துக்கள் இவை: உங்கள் வெற்றி குறித்து உங்கள் கருத்து மிகக் குறுகிய காலமாகக் கனடாவில் வாழும் என் மீது அன்பைப் பொழிந்து எனது கருத்துக்களிலும் கொள்கையிலும் நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கே இந்த வெற்றி சென்றடைய வேண்டும். என்மீது நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ் மக்களின் பிரதிநிதியாய் பணி செய்வேன். நான் பணி செய்யும் காலத்தில் என்னை மொட்டையெனக் கருதினால் தீட்டிப் பயன்படுத்தலாம். கறள் என்றால் தூக்கி வீசலாம…
-
- 3 replies
- 903 views
-
-
ஏப் 30, 2010 மணி தமிழீழம் பார்வதி வேலுப்பிள்ளை எழுதும் அன்பு மடல். மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்ரர் கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்கட்கு! எனது மரியாதைக்கும் மதிப்புக்குமுரிய தமிழக முதல்வர் கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்கட்கு மறைந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் துணைவியார் பார்வதி வேலுப்பிள்ளை எழுதும் அன்பு மடல். நான்நீண்டகாலமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வலது காலும் கையும் செயலற்ற நிலையில் இருந்து வருகிறேன். நான் தமிழ் நாட்டில் இருந்த காலத்தில் முசிறியிலுள்ள டாக்ரர் ராஜேந்திரனிடம் வைத்தியம் பெற்று வந்தேன் ஆனால் 2003 ம் ஆண்டு மே மாதம் இலங்கைக்கு சென்றபடியால் தொடர்ந்து வைத்தியம் செய்ய முடியாமல் போய்விட்டது. வன்னியிலும் இராணுவ முகாமிலும் சரியான மருத்துவ வ…
-
- 54 replies
- 4.7k views
-
-
ஊடகவியலாளர் மீது இலக்கு பத்திரிகை சுதந்திர தினத்தைக் குறிக்கும் முகமாக எல்லைகளற்ற செய்தியாளர்கள் என்ற ஊடக சுதந்திர அமைப்பு பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊடக சுதந்திரத்துக்கு எதிரானவர்கள் என்று தாங்கள் கருதும் தனிநபர்கள் மற்றும் குழுக்களின் பெயர்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர். உலகின் அனைத்து பாகங்கள் பற்றியும் இந்தப் பட்டியலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தங்களுடைய மதிப்பீட்டில் யார் யார் ஊடக சுதந்திரத்துக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளார்கள் எப்படியான சேதத்தை ஏற்படுத்தியுள்ளார்கள் என்று இந்த அமைப்பு அதில் விபரித்துள்ளது. எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின் தொனி சாடும் விதமாகவும் கேலி செய்யும் விதமாகவும் இருகிறது. ஆய…
-
- 0 replies
- 633 views
-
-
குடா நாட்டின் அண்மைய சம்பவங்களை வைத்து இராணுவ பிரசன்னத்தை அதிகரிக்க திட்டம் யாழ் நிருபர் திங்கட்கிழமை, மே 3, 2010 குடாநாட்டில் அண்மைக் காலமாக நடைபெற்று வரும் கொலை, கடத்தல், கப்பம் கோருதல், பாலியல் பலாத்காரம் போன்ற வன்செயல்களைத் தடுப்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் இங்கு உடனடியாக இறுக்கப்படும் என்று யாழ்.பிராந்திய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துரு சிங்க தெரிவித்தார்.மக்கள் நலன்கருதி தாம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைக்கு மக்கள் தமது பூரண ஒத்துழைப்பை நல்கவேண்டும் என்றும் இராணுவத்தால் வேஎண்டுகோள் விடப்பட்டுள்ளது. இராணுவம் தான் அனைத்து சமூக சீர்கேடுகளையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தூண்டிவிட்டு அதில் ஈடுபட்டம் வந்துள்ளது. ஆனால் இப்போ அதனை கட்டுப்படுத்த தாம் நடவட…
-
- 0 replies
- 563 views
-
-
கடந்த ஏப்ரல் 15ந் தேதி தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் ஒரு அடிப்படை இன அழிப்பின் அடையாளத்தை வரைந்து காட்டியது. “பேசப்படாத இனப்படுகொலை, இலங்கையில் போர் குற்றம்” என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பல்வேறு மனித உரிமை ஆர்வளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இதில் இலங்கை நடத்திய மாந்த நேய அடக்குமுறைகளைக் குறித்தும், தமிழர்களின் வாழ்வு பறிக்கப்பட்டதை குறித்தும் பல்வேறு ஆதாரங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் சிலரின் சொற்கள் நமது மனங்களை இடியாய் உலுக்கி எடுக்கிறது. குறிப்பாக தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜசேந்திர சச்சார் குறிப்பிடும்போது, தமிழர்களுக்கு சமத்துவமும், மரியாதையும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், ஒருவேளை இலங்கை அரசு இதை செய்ய தவ…
-
- 0 replies
- 758 views
-
-
இலங்கையின் வழியில் தனது போர்க் குற்ற நடவடிக்கைகளை இந்தியா தொடர்கிறது என்று பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அகில இந்திய ஹுரியத் மாநாடு கட்சியின் தலைவர் சையத் அலி ஷா கிலானி அவர்களது கைதைக் கண்டித்து விடுத்துள்ள அறிக்கை: அகில இந்திய ஹுரியத் மாநாடு கட்சியின் தலைவர் சையத் அலி ஷா கிலானி அவர்கள் நேற்று மத்திய காவல்துறையினரால் ஜம்முவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற விவரங்களை இது வரை காவல்துறை வெளியிடவில்லை. 80 வயதை கடந்த மூத்த தலைவரான அவரின் இருப்பிடம் அறியாமல் காஷ்மீர மக்கள் பெரிதும் கவலை கொண்டுள்ளனர். கடந்த பல ஆண்டு காலமாக காஷ்மீர மக்களின் தன்னுரிமைக்காக தொடர்ந்து போராடி வரும் சை…
-
- 0 replies
- 547 views
-