Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை உள்விவகாரங்களில் ஐ.நா.வின் அநாவசிய தலையீடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பை இலங்கை அரசாங்கமே ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகத் தேசியக் கூட்டணிகுற்றஞ்சாட்டியுள்ளது. கொழும்பு ராஜகீய மாவத்தையிலுள்ள ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினரும் ஜே.வி.பி.பாராளுமன்றக்குழுத் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க இந்த கருத்தை வெளியிட்டார். “ஐ.நா.செயலாளர் யுத்த காலத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. யுத்தத்தின் பின்னரான கால நடவடிக்கைகளின் பொருட்டு இலங்கை அரசாங்கத்துக்கும் ஐ.நா.வுக்கும் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்பாடுகள் நிறைவேற்றப்படவில்லை என்று ஐ.நா. செ…

    • 2 replies
    • 645 views
  2. கொழும்பில் தமிழ் இளைஞர்களைக் கடத்திச் சென்று கப்பம் அறவிடுவது உள்ளிட்ட செயல்களில் மேர்வின் சில்வாவின் வலது கரமாகச் செயற்பட்ட குடு லால் எனப்படும் பாதாள உலகக் கும்பலின் தலைவன் தற்போது இங்கிலாந்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களுக்குள் தன்னைப் போல் பல பாதாள உலகத் தலைவர்கள் அரசியல் வாதிகளின் உத்தரவுக்கிணங்க சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதால் தன்னுடைய உயிருக்குப் பாதுகாப்பில்லை என்றும் தான் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டால் உடனடியாகவே தன்னைக் கொன்று விடும்படி அமைச்சர் மேர்வின் சில்வா உத்தரவிட்டுள்ளதாகவும் தனது விண்ணப்பத்தில் ‘குடு’ லால் குறிப்பிட்டிருக்கிறார். அமைச்சர் மேர்வின் சில்வாவின் திரை மறைவு வன்முறைகளுக்கு தான் துணை நின்…

    • 1 reply
    • 885 views
  3. வன்னி மக்களின் பொருட்கள் சூறையாடப்பட்டு தென்னிலங்கைக்கு எடுத்துசெல்லப்பட்டுள்ளது. ஆனால் மீளக்குடியேற்ற மக்கள் குடியிருக்க இடம் இன்றி விடப்பட்டுள்ளனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சுழிபுரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் மாவை சேனாதிராசாவும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் அதி உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக வெளியேற்றப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்துவருகின்றார்கள். அவர்களை தமது பகுதிகளுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என…

    • 9 replies
    • 658 views
  4. தேசியத்தில்இ கொள்கையில் உறுதியாக உள்ளவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்: ஜெயானந்தமூர்த்தி வடகிழக்கில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டிய அதேவேளை தமிழ் தேசியம் குழிதோண்டிப் புதைக்கப்படாமல் அதைக் கட்டிக் காக்க வேண்டிய கட்டாயத் தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கொள்கையில் உறுதியாகவுள்ளோரை இனங்கண்டு மக்கள் தெரிவு செய்ய வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி சங்கதிக்கு தெரிவித்துள்ளார். "இன்று நாம் ஒரு பொதுத்தேர்தலை சந்தித்துள்ளோம். இத்தேர்தலின் மூலம் வடகிழக்கில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும். அதுவும் எமது அடிப்படை தேசியத்துடனான கொள்கை…

    • 10 replies
    • 807 views
  5. இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளில் ஈடுபட்டதாக அமெரிக்கா மீண்டும் குற்றச் சாட்டு வவுனியா நிருபர் வெள்ளிக்கிழமை, மார்ச் 12, 2010 இலங்கை அரசாங்கம் போரினை முடிவுக்கு கொண்டுவரும் வேளை பொதுமக்களையும் சரணடைந்த புலிகளையும் கொலை செய்துள்ளது. இவ்வாறு அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மனித உரிமைதிணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போரின் போது அகப்பட்ட பொதுமக்களை கொலை செய்துள்ளது. அத்துடன் சரணடைந்த விடுதலைப்புலிகளின் உயர்மட்ட தலைவர்களையும் கொலை செய்துள்ளது. இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும் என கூறியுள்ளது அந்த அறிக்கை. மேலும் இலங்கை அரசாங்க படைகள் அவர்களுடன…

  6. வெள்ளி, மார்ச் 12, 2010 09:39 சிறீலங்காவுக்கு யப்பானும் 250 மில்லியன் டொலர் கடனுதவி சிறீலங்காவில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளுக்கென யப்பான் 250 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க முனவந்துள்ளதாக சிறீலங்காவின் அமைச்சர் காமினி லக்ஸ்மன் பீரீஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: கொத்மலை பகுதியில் மேற்கொள்ளப்படும் நீர்சக்தி மின்உற்பத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் நீர் விநியோக அபிவிருத்திகளுக்காக யப்பான் 250 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்துள்ளது. யப்பானின் இந்த உதவிகள் போர் நடைபெற்ற வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கும் விஸ்த்தரிக்கப்படவுள்ளது. யப்பானின் அனைத்துலக கூட்டுறவு அமைப்பு சிறீலங்காவின் நீர் மின் உற்பத்திக்காக 50 …

    • 5 replies
    • 422 views
  7. வெள்ளி, மார்ச் 12, 2010 02:10 | நைனாதீவில் சோழர் காலத்து ஆலயம் யாழ் குடாநாட்டின் கரையோர தீவுப்பகுதிகளில் ஒன்றான நைனாதீவுப் பகுதியில் சோழர் காலத்து ஆலயம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராட்சி திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: நைனாதீவுப்பகுதியில் கி.மு 10 ஆம் நூற்றாண்டு பழமை வாய்ந்த சோழர் காலத்து ஆலயம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், அது 40 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்டதாகவும் பேராசிரியர் பொ. புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார். ராஜ ராஜ சோழன் மிகவும் பலம் மிக்க அரசனாக 985 தொடக்கம் 1014 காலப்பகுதியில் தஞ்சாவூர் மற்றும் சோழமண்டலம் ஆகிய பகுதிகளை ஆட்சி செய்திருந்தார். நைனாதீவில் கண்டறியப்பட்ட …

    • 4 replies
    • 1.1k views
  8. சிறிலங்காவில் அமுலில் இருக்கும் அவசரகால சட்டத்தை நீக்குமாறு கனடா அரசு கேட்டுள்ளது. இதேவேளை மனிதஉரிமைகள் மீறல்களை முடிவுக்கு கொண்டுவருமாறு அமெரிக்க அரசு சிறிலங்கா அரசை கேட்டுள்ளது. அவசரகால சட்டத்தை நீக்கினால் இரகசிய முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 10 000 இற்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் சந்தேக நபர்களை விடுவிக்கவேண்டிவரும் என சிறிலங்கா அமைச்சர் ஒருவர் முன்னர் கருத்துவெளியிட்டிருந்தார். கனடாவின் வெளிநாட்டலுவல்கள் நாடாளுமன்ற செயற்குழு செயலர் தீபக் ஒபராய் மேற்கண்ட கருத்தை சிறிலங்காவின் உயர் ஸ்தானிகருக்கு தெரிவித்துள்ளார். கொழும்பில் சிறிலங்காவின் உயர் ஸ்தானிகரை சந்தித்த ஒபராய் அவசரகால சட்டத்தை உடனடியாக நீக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். அத்துடன் தமிழ் மக்களின் தே…

  9. தூதரகத் தேவைகளுக்காக சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் உப அலுவலகத்திற்கு செல்லும் இலங்கைத் தமிழர்களிடமிருந்து மோசடியான வழியில் பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் தூதரக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முறையிடுகின்றனர். தூதரகக் கடமைகளைச் செய்வதற்குச் செல்லும் மக்களிடம் உங்களுடைய வேலையைச் செய்து முடிப்பதற்கு உள்ளே இருக்கும் சிங்கள அதிகாரிகள் சிலருடைய உதவியும் தேவைப்படுகிறது என்று சொல்லி அவர்கள் மனது வைப்பதானால் அவர்களிடம் இருக்கும் ரிக்கெற்களை வாங்க வேண்டியிருக்கும் எனச் சொல்லி மக்களைச் சம்மதிக்க வைக்கும் தமிழ் அதிகாரிகள் சுமார் 3000 ரூபாய் தொடக்கம் 10000 ரூபாய் வரையான கொழும்பு – யாழ்ப்பாணம் புகையிரதப் பயண ரிக்கெற்றுகளை விற்பனை செய்து வருகின்றனர். …

    • 3 replies
    • 1.1k views
  10. ஊடகவியலாளர்கள் அடிக்கடி கொல்லப்படுவது மற்றும் கொலைஞர்கள் சுதந்திரமாக தப்பிச் செல்லும் சம்பவங்கள் இடம் பெறும் நாடுகள் பற்றி ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு எடுத்த மதிப்பீட்டில் ஈராக், சோமாலியா, சியறாலியோன் ஆகியவற்றை அடுத்து இலங்கை நான்காம் இடத்தை வகிக்கிறது. ஊடகவியலாளர்கள் கொல்லப்படும் நாடுகளை பொறுத்த மட்டில் இலங்கை 13ஆம் இடத்தில் உள்ளது. மேற்படி சம்பவங்கள் குறித்து விசாரணை செய்ய தவறிய நாடுகள் குறித்து எடுக்கப்பட்ட மதிப்பீடு தொடர்பான குழுவின் 2009ஆம் ஆண்டு அறிக்கையில் இலங்கை எந்தவொரு சம்பவம் பற்றியும் விசாரணை செய்து பொறுப்பானவர்களை கண்டுபிடிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.nerudal.com

  11. இலங்கைக்கு எதிராக மேற்குலகம் செயற்படும் போது மௌனம் காக்க முடியாது: பாலஸ்தீனம் தமது நண்பர் என்ற அடிப்படையில் இலங்கைக்கு எதிராக மேற்குலகம் செயற்படும் போது, மௌனம் காத்திருக்க முடியாது என பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியாகியுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம், மற்றும் ஐரோப்பாவின் சில நாடுகள் என்பன தற்போது இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றன. இந்த நிலை, தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமையை அடுத்தே ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், ஆயுதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களால் இலாபம் காண முடியாது போன நாடுகளே இந்த முனைப்புகளை …

  12. கதிரை சண்டையில் தமிழர் மும்முரம்; நிலங்கள் கவர்வதில் சிங்களவர் தீவிரம் [ வெள்ளிக்கிழமை, 12 மார்ச் 2010, 00:14 GMT ] [ தி.வண்ணமதி ] ஈழம் நோக்கிய தமிழர்களது ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற பின்னர் தமிழர் தாயகப் பகுதிகளில் நில ஆக்கிரமிப்பு என்றுமில்லாதவாறு அதிகரித்திருக்கிறது. ஓமந்தை தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலான யாழ் - கண்டி நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் பெரும்பான்மை இனத்தவர்களின் வியாபார நிலையங்கள் மழைக்காலக் காளான்கள் போல முளைக்கத் தொடங்கிவிட்டன. குறிப்பாக, கிளிநொச்சியின் ஜெயபுரம், முல்லைத்தீவின் பாண்டியன் குளம் என மீள்குடியேற்றம் இடம்பெற்ற வன்னியின் அனைத்துப் பிரதேசங்களிலும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒப்பந்தகாரர்களே வேலைக்கு அமர்த்தப்ப…

    • 2 replies
    • 634 views
  13. வெள்ளிக்கிழமை, 12, மார்ச் 2010 (13:10 IST) ஈழத்தமிழருக்கு செயற்கை கால்கள் வழங்குகிறது இந்தியா இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் ஈழத்தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் கண்மூடித்தனமாக வெறித்தாக்குதலில் ஈடுபட்டது. அதில் சுமார் 50ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் குண்டு காயம் காரணமாக கை, கால்கள் இழந்தனர். பாதிக்கப்பட்ட தமிழர்களில் சுமார் 1 1/2 லட்சம் பேர் இன்னமும் தடுப்பு முகாம்களில் சிக்கி அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி கொடுக்கும் முயற்சிகளில் உலகில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. இலங்கையில் உள் கட்டமைப்பை மேம்படுத்த இந்தியா ஏராளமான உதவிகளை செய்து வருகிறது. இதற்கிடையே போரில் உடல் உறு…

    • 6 replies
    • 741 views
  14. யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு நிலையம் வடமாகாண மக்களின் நன்மை கருதி கடவுச் சீட்டு வழங்கும் நிலையம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் பி.பி. அபயகோன் தெரிவித்தார். கொழும்பைத் தவிர அநுராதபுரம் மற்றும் மாத்தறை ஆகிய நகரங்களில் கடவுச் சீட்டு வழங்கும் காரியாலயங்கள் இப்போது இயங்கிவருகின்றன. தற்போது இலங்கைக்கு அதிகளவில் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் வர ஆரம்பித்துள்ளதால் கடவுச் சீட்டு வழங்கும் நடைமுறையை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் கட்டுப்பாட்டாளர் கூறினார். http://www.sankamam.com/

  15. தமிழக முதல்வர் தலைமையிலான தமிழகம் எம்முடன் இருக்கின்றது: சிறிலங்கா அமைச்சர் இந்தியா எங்களுக்கு ஆதரவாக உள்ளது, தமிழ்நாட்டின் முதலமைச்சர் தலைமையிலான தமிழகமும் எங்களுடன் உள்ளது, எனவே மனித உரிமை பிரச்சனைகளை காட்டி மேற்குலகம் அளிக்கும் அழுத்தங்களை நாங்கள் சமாளிப்போம் என்று சிறிலங்க சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வள அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார். கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கூட்டிய செய்தியாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில் அமைச்சர் ரணவக்க இவ்வாறு கூறியுள்ளார். “இன்று சில மேற்குலக நாடுகள் (மனித உரிமைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக) எமக்கு எதிராக செயற்பட்டுவருகின்றன. இவ…

  16. ஜீ.15 நாடுகளின் அடுத்த தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வீரகேசரி இணையம் _ 3/12/2010 10:27:58 AM Share _Follow Virakesari on Twitter ஜீ.15 நாடுகளின் அடுத்த தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக அரசதகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜீ. 15 அமைப்பில் 17 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த நாடுகளின் உச்சி மாநாடு எதிர்வரும் மே மாதம் நடைபெறும்போது அதன் புதிய தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்படவுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. அல்ஜீரியா, ஆர்ஜன்டீனா, பிரேஸில், சிலி, எகிப்து, இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், ஜமெய்கா, கென்யா, மலேசியா, மெக்ஸிகோ, நைஜீரியா,செனகல், ஸ்ரீலங்கா, வெனிசுலா,மற்றும் ஸிம்பாப்வே ஆகிய 17 நாடுகள் இந்த ஜீ 15 அமைப்…

  17. தன், மார்ச் 10, 2010 08:52 | கடந்த இரண்டு மாதங்களில் 3 மில்லியன் உல்லாச பயணிகள் வடக்கிற்கு பயணம் கடந்த இரண்டு மாதங்களில் 3 மில்லியன் உல்லாசப் பயணிகள் வடக்கிற்குச் சென்றுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சின் அறிக்கை யொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஏ9 பாதை மக்களின் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டதன் விளைவாக நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் பல பாகங்களுக்கும் சென்றுள்ளனர். இவ்வாறு சென்றவர்களின் எண்ணிக்கை 3 மில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வா…

    • 20 replies
    • 1.3k views
  18. http://www.nerudal.com/nerudal.14307.html அபிவிருத்தியா? தமிழர் தன்மானமா? பொதுத் தேர்தலும், ஆய்வுகளும் – ஒரு பார்வை * இவ் விடயம் 11. 03. 2010, (வியாழன்), தமிழீழ நேரம் 12:27க்கு பதிவு செய்யப்பட்டது கட்டுரைகள், செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்தி இலங்கையின் பொதுத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அந்தத் தேர்தலில் போட்டியிடும் தமிழர் தரப்புக்கள், குறிப்பாக தமிழ்த் தேசிய ஆதரவுச் சக்திகள் குறித்து அண்மை நாட்களில் பல வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருவதை அவதானித்துவரும் தமிழ் மக்கள், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இதற்கு ஒரு சில இணையங்களிலும், ஏனைய ஊடகங்களிலும் வெளியிடப்படு…

    • 0 replies
    • 464 views
  19. உயர் பாதுகாப்பு வலய வீடுகள் விரைவில் சொந்தக்காரர்கள் வசம்! இராணுவ தளபதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட தெல்லிப்பளை மற்றும் திருநெல்வேலியில் உள்ள வீடுகள் கட்டடங்கள் மற்றும் வயல் நிலங்களை மீண்டும் அவற்றின் சொந்தக்காரர்களுக்கே கையளிக்கும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் எனஇராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்தார் மக்களுடனான நல்லுறவுகளை தொடர்ந்து பேணும் நோக்கில் இராணுவ அலுவலகமொன்றை யாழ்ப்பாணத்தில் திறந்து வைத்துப் பேசிய போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து அவர் கூறுகையில். தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை மற்றும் தள வைத்தியசாலை ஆகியவை உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து அகற்றப்படும் என்று உறுதியளித்தார். ஒற்றையாட்சியின் கீழ் ஜனாதிபதியின் தலைமைத…

    • 2 replies
    • 610 views
  20. http://www.eelanatham.net/story/Moderators%20should%20raise%20their%20voice%20to%20prevent%20Sinhala%20colonization%20in%20Tamils%27%20homeland சிங்கள குடியேற்றங்களை தடுக்க மொடரேற்றர்ஸ் முன்வரவேண்டும்? தமிழீழ நிருபர் சனிக்கிழமை , மார்ச் 6, 2010 தற்போது விடுதலைப்புலிகளின் பிரசன்னம் இல்லாத நிலையில் அவர்களின் ஆயுத போராட்டம் பின்னகர்த்தப்பட்ட நிலையில்அவர்களின் கொள்கைகள் அல்லது உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழி முறைகள் தவறு என வாதிடுவோர் அதிகரித்துள்ளனர். குறிப்பாக மேற்கத்தைய சமூகம், அரசியல்வாதிகள், மனித உரிமைவாதிகள் இந்த வாதத்தினை முன்னிறுத்தி அதற்கு தமிழ் மக்களின் ஆதரவினை பெறுவதிலும் முனைப்பாக உள்ளனர். இதற்காக உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் MODARETORS என்ற தல…

    • 0 replies
    • 536 views
  21. மகிந்தவுக்கும் தன் மருமகனுக்கும் விசுவாசமாக செயற்படும் பான் கீ மூன்!! போர்க்குற்ற விசாரணைகள் மற்றும் சர்வதேச அழுத்தம் ஆகியவற்றிலிருந்து சிறிலங்காவை காப்பாற்றும் தொடர்ச்சியான முயற்சியில் ஐக்கிய நாடுகள் சபை ஈடுபட்டுவருவதன் பின்னணியில், மிகப்பெரிய குடும்ப அரசியலும் பரஸ்பரம் நட்பு பாராட்டும் நடவடிக்கைகளும் ஒழிந்திருக்கின்றன என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக அந்த வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாவது:- சிறிலங்காவுக்கு எந்த நடவடிக்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபை வெளிப்படையாக எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதில்லை என்பது சகல தரப்பினரும் அறிந்த உண்மை. சிறிலங்கா அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்கள…

    • 0 replies
    • 612 views
  22. இலங்கைப் பிரச்சினை தொடர்பில் பான் கீ மூனின் நடவடிக்கைகளுக்கு அணிசேரா நாடுகள் எதிர்ப்பு இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் நடவடிக்கைகளுக்கு அணி சேரா நாடுகள் அமைப்பு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நிபுணர்கள் குழுவொன்றை அமைக்கும் பான் கீ மூனின் திட்டம் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் கருத்து கோராது பான் கீ மூன், நிபுணர்கள் குழுவை நியமிக்க தீர்மானித்துள்ளதாக அணிசேரா நாடுகள் அமைப்பு கடிதம் ஊடாக அறிவித்துள்ளது. நியூயோர்க்கில் அமைந்துள்ள அணிசேரா நாடுகளின் இணை…

    • 0 replies
    • 600 views
  23. ரங்கல கடற்படை அதிகாரிகளினால் இந்திய மீன்பிடிக் கப்பலொன்று தடுத்துவைப்பு கப்பலின் கப்டன் உள்ளிட்ட அதன் பணியாளர்கள் விளக்கமறியலில்‐ ரங்கல கடற்படை அதிகாரிகளினால் இந்திய மீன்பிடிக் கப்பலொன்று தடுத்துவைத்துள்ளமை காரணமாக இலங்கை ‐ இந்திய நல்லெண்ணம் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஜெனரல் சரத் பொன்சேக்காவின் மருமகன் தனுத்த திலகரத்ன கப்பலொன்றின் உதவியுடன் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருப்பதாக கடற்படைக்கு கிடைத்த தகவலொன்றை அடுத்தே இந்தக் கப்பல் முற்றுகையிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குறித்த இந்தியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பின் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இலங்கை ‐ இந்திய அரசாங்கங்களுக்கிடை…

    • 0 replies
    • 510 views
  24. இலங்கையில் சீன முதலீடுகளும் நிதியுதவிகளும் இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமானநிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்கான நிதியுதவிகளை சீனா வழங்குவது தொடர்பான ஒப்பந்தமொன்று இரு நாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையின் நிர்மாணத்துறை மற்றும் அபிவிருத்தித்துறைகளுடன் தொடர்புடைய மொத்தக் கடன் தொகையில் அரைவாசிக்கும் அதிகமான அளவு சீனாவிடமிருந்தே கிடைத்து வருவதாக கடந்த வாரம் இலங்கை அரசாங்கம் கூறியிருந்தது. நாட்டின் தென் பிராந்தியத்தில் அமைக்கப்படும் இந்த விமான நிலையம் சர்வதேச விமானங்களுக்கான இரண்டாவது தளமாக திகழவுள்ளது. அதிகரித்துவரும் இவ்வாறான பல்வேறு வேலைத்திட்டங்களுக்கும் சீனாவிடமிருந்து இருநூறு மில்லியன் டொலர்கள் வரையான நிதி கிடைக்கின்றது. விம…

    • 4 replies
    • 655 views
  25. சரத் பொன்சேகாவும் அவரது முறைகேடான இராணுவ நடவைக்கைகளும்..... சரத் பொன்சேகா எடுத்த முடிவுகளால் படைகளுக்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக மேலும் புதிய குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளன. அவர் இராணுவத் தளபதியாகப் பதவி வகித்த காலத்தில் இடம்பெற்ற முறைகேடான நடவடிக்கைகள் தொடர்பாக இப்போது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது. இராணுவத் தளபதியாகப் பதவி வகித்த போது இராணுவச் சட்டங்களுக்கு முரணாக அவர் நடந்து கொண்ட சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளே தற்போது ஆரம்பமாகியுள்ளன. அவற்றில் பிரிகேடியர் திலகரட்ணவுக்கு 62 வயது வரை சேவைநீடிப்பு வழங்கப்பட்டு வந்த விவக…

    • 0 replies
    • 622 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.