Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 19 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற வாலிபர், வலது பக்கம் திரும்பிக் கொண்டிருந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு, வீதியோரம் இருந்த தொலைபேசிக் கம்பத்தில் மோதியுள்ளார். சிறுமி படுகாயமடைந்த நிலையில் சங்கானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் தற்போது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சிலாலையைச் சேர்ந்த 19 வயதுடைய பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார். மானிப்பாய் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://thinak…

  2. 04 SEP, 2023 | 12:56 PM (இராஜதுரை ஹஷான்) எரிவாயு விலை சூத்திரத்துக்கு அமைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை திங்கட்கிழமை (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவினாலும், 5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 58 ரூபாவினாலும், 2.3 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 26 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. புதிய விலை திருத்தத்துக்கு அமைய 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 3127 ரூபாவாகவும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 1256 ரூபாவாகவும், 2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை 587 ரூபாவாகவும் விலை நிர்ணயிக்கப்பட்…

  3. படகில் சென்று தமிழகத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தீர்மானம்! இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து இந்தியாவுக்கு படகு மூலம் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினர் அறிவித்துள்ளனர். யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர். இது குறித்து சம்மேளனத்தின் தலைவர் புனித பிரகாஸ், கருத்துத் தெரிவிக்கையில் ” கடந்த முதலாம் திகதி இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறலை கண்டித்து ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாண மாவட்ட செயலாளரிடம் மகஜரொன்றை கையளித்தோம். குறித்த மகஜர் கை…

  4. (நா.தனுஜா) இலங்கைக்கான இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சனிக்கிழமை (2) நாட்டை வந்தடைவார். இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத் தொடர்புகள் குறித்து ஆராய்வதே அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயத்துக்கான நோக்கம் என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. நாட்டில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (3) வரை தங்கியிருக்கும் அவர் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவிருப்பதுடன், இதன்போது இலங்கையுடனான இந்தியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்புத் தொடர்புகள் குறித்து விரிவாக ஆராயவுள்ளார். அதுமாத்திரமன்றி, இந்திய பாதுகா…

  5. யாழ் மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் திறப்பு September 3, 2023 தேர்தல் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்கவால் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. அதன்போது, அலுவலகத்தில் பெயர்ப்பலகை, நினைவுப் படிகம் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. . தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள், தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்கா, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன், யாழ்ப்பாண மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சி.அமல்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர். https://globaltamilnews.net/2023/194791/

  6. கராப்பிட்டிய வைத்தியசாலையில் எட்டு மாதக் கைக்குழந்தையின் துயர மரணத்தைத் தொடர்ந்து, மூளைக்காய்ச்சல் நோய் சமூகத்தில் பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் பற்றிய கவலைகள் எழுந்துள்ளன. சமீபத்தில் காலி சிறைச்சாலையில் இந்த நோய் முதலில் கண்டறியப்பட்டது. மூளைக்காய்ச்சல் நோய் போன்ற அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட சிசு, கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சனிக்கிழமை (26) உயிரிழந்துள்ளது. காலி சிறைச்சாலைக்குள் பரவி வரும் மூளைக்காய்ச்சல் நோயினால் மரணம் நேரிட்டதா என சுகாதார அதிகாரிகள் தற்போது ஆராய்ந்து வருகின்றனர். எவ்வாறாயினும், இந்த மரணம் மூளைக்காய்ச்சல் நோயுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கும் அதே வேளையில், அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என சுகாதார ச…

  7. 03 SEP, 2023 | 09:47 AM (நா.தனுஜா) இலங்கையில் கலவரமொன்று மூண்டால், அதனை அடக்குவதற்கு வரும் இந்திய இராணுவம் மீண்டும் நாட்டைவிட்டுத் திரும்பிச்செல்லாது. ஏனெனில் சீனா போன்ற பிற வெளிநாட்டுசக்திகள் இலங்கையில் ஆதிக்கம் செலுத்துவதை அறிந்துகொண்டால் இந்திய இராணுவம் திரும்பிச்செல்ல விரும்பாது என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் மீண்டும் இனக்கலவரமொன்று வந்தால் அதனைத் தடுப்பதற்கு இந்திய இராணுவம் வரும் என்றும், அவ்வாறு வந்தால் அந்த இராணுவம் நாட்டிலிருந்து மீண்டும் திரும்பிச்செல்லாது என்றும் சி.வி.விக்கினேஸ்வரன் கூறியிருப்பதாக வெளியாகியுள்ள செ…

  8. கடந்த வாரம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பான புதிய தகவல்கள் ‘ஸ்டேட் சீக்ரெட்ஸ்’ அலைவரிசைக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி அடுத்த சில வாரங்களுக்குள் எகிப்து செல்ல கோட்டா திட்டமிட்டுள்ளார். ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறிய கோத்தா இரண்டு தடவைகள் துபாய், மியான்மர் போன்ற நாடுகளுக்கு உல்லாசப் பயணங்களுக்காக சென்றிருந்தார். இம்முறை எகிப்து செல்கிறார் . தனது எகிப்து பயணத்தின் போது பெரும் அனுபவமாக கருதப்படும் நைல் நதியை ஒட்டிய ‘நைல் குரூஸ்’ பயணத்தில் கோட்டாவும் இணைந்து கொள்ள திட்டமிட்டுள்ளார். https://thinakkural.lk/article/271554

  9. 03 Sep, 2023 | 12:07 PM திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரை அமைக்கப்படவுள்ளதை எதிர்த்து இன்று (03) மனித சங்கிலிப் போராட்டமொன்று திருகோணமலை, சாம்பல் தீவு பாலத்துக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோருடன் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர். இதன்போது குறித்த விகாரை அமைக்கப்படவுள்ளதை எதிர்க்கும் வகையில், “பௌத்தர்கள் இல்லாத இடத்தில் பௌத்த விகாரை எதற்கு?”, “பெரியகுளம் விகாரை கட்டுமானத்தை உடனடியாக நிறுத்து”, “தொல்லியல் திணைக்களம் பௌத்தத்துக்கு மட்டுமா?”, “தொல்லியல் திணைக்களமே …

    • 2 replies
    • 304 views
  10. 31 AUG, 2023 | 05:27 PM குருந்தூர் மலை விவகாரத்தில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளைகளை மதிக்காது நிர்மானப் பணிகள் இடம்பெற்றுள்ளன, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளைகளை மதித்து நடைமுறைப்படுத்தவில்லை என முல்லைத்தீவு நீதிமன்று கட்டளை வழங்கியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியிலே அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை உள்ளிட்ட கட்டுமான பணிகள் தொடர்பிலான வழக்கின் கட்டளைக்காக இன்று வியாழக்கிழமை (31) திகதி யிடப்பட்டிருந்தது. அந்த வகையிலே இன்றைய தினம் (31) குருந்தூர் மலை தொடர்பிலான AR/673/18 என்கின்ற வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. …

  11. 03 SEP, 2023 | 09:51 PM (எஸ்.ஆர்) இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கான சர்வதேச முயற்சிகளில் ஜப்பானின் பங்கேற்பை பாராட்டுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜப்பானின் என்.எச்.கே ஊடகத்திற்கு நேர்காணல் வழங்கிய போதே ஜனாதிபதி இந்த விடயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் பல விடயங்கள் குறித்து பேசியுள்ள அவர், இலங்கையின் கடன் நெருக்கடியைத் தீர்க்கும் நோக்கில் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்ட புதிய சர்வதேச கட்டமைப்பிற்கு ஜப்பான் இணை தலைமைத்துவம் வழங்குகின்றது. ஜப்பானின் இந்த பணி, சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பிற்கும் வசதியாக அமைந்துள்ளது. 'சுதந்திரமான மற்றும் திறந்த இந…

  12. 03 SEP, 2023 | 03:46 PM வவுனியா மாமடு குளத்தின் நீரேந்து பகுதியில் 5 வயது மதிக்கத்தக்க யானையொன்று சேற்றினுள் புதையுண்ட நிலையில், அதனை மீட்கும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, வவுனியா மாமடு குளத்தின் நீரேந்து பகுதியில் மாடு மேய்க்க சென்ற கிராமவாசி ஒருவர், சேற்றில் புதையுண்ட நிலையில் யானை ஒன்று உயிருக்குப் போராடுவதை அவதானித்துள்ளார். இதனையடுத்து மாமடு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன், யானையை மீட்பதற்கான நடவடிக்கையில் வனஜீவராசிகள் திணைக்களம், பொலிஸார் மற்றும் கிராம மக்கள் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். https:/…

  13. சுமார் 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான முயற்சியில் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் வைத்தியர் விஜயரத்ன சிங்கம் தர்ஷன் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை (02) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இருக்கும் வைத்தியர்களில் 95 வீகிதத்துக்கு மேற்பட்டவர்கள் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர். இலங்கை பொருத்தவரையில் வைத்தியத்துறை சம்பந்தப்பட்ட பெரும்பான்மையினை நாங்கள் பிரதிபலிக்கின்றோம், இவ்வாறான ஒரு தொழிற்சங்கமாக இருக்கின்ற படிவால் நாங்கள் சுகாதாரத்துறை சம்பந்தமான பிர…

  14. (நா.தனுஜா) தமிழர் வாழ்விடங்களில் பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதன் மூலம் மத ரீதியான முறுகல்களைத் தோற்றுவித்து இனப்பிரச்சினையைத் தீவிரப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ள தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், எனவே இலங்கைக்குத் தொடர்ந்து கால அவகாசம் வழங்குவதை விடுத்து, இம்முறை கூட்டத்தொடரில் வலுவான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி வரையான ஒரு மாதகாலத்துக்கு நடைபெறவுள்ளது. இந்த அமர்வின் தொடக்க நாளான 11ஆம் திகதியன…

  15. அமெரிக்காவில் இம்மாத நடுப்பகுதியில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 78ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள பேச்சாளர் பட்டியலின்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றவுள்ளார். இந்த பொதுச் சபைக்கூட்டத் தொடரில் உலகத் தலைவர்களும், இளம் தலைவர்களும் கலந்துக்கொள்ளவுள்ளனர். இம்முறை பொது சபைக் கூட்டம் “நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல…

  16. இவ்வாண்டில் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களுக்குள் ஏற்றுமதி வருமானமானது 10.3 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 6,891 மில்லியன் அமெரிக்க டொலராக ஏற்றுமதி வருமானம் பதிவாகியுள்ளது. பெற்றோலிய உற்பத்திகள் சார்ந்து ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதற்கமைய, பெற்றோலிய உற்பத்திகள் சார்ந்த ஏற்றுமதி வருமானம் 24.5 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. https://thinakkural.lk/article/271510

  17. புதிய முறையில் மீண்டும் வரும் QR முறை! தேசிய எரிபொருள் அனுமதி அட்டை 'க்யூஆர்' அமைப்பு எதிர்காலத்தில் மேம்பட்ட நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்டு, தரவு சேகரிப்பு மற்றும் தரவு பகுப்பாய்வுக்கான கருவியாக செயல்படுத்தப்படும் என்று மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் QR முறையை அறிமுகப்படுத்தியதன் நோக்கம் அப்போது நிலவிய எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக இருக்கும் வளங்களை முகாமைத்துவம் செய்து விநியோக திட்டமாக அமுல்படுத்துவதே என அமைச்சர் கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டுகிறார். அப்போது நிலவி வந்த சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகளை சமாளித்து நெருக்கடிகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு மக்களின் வாழ்க்கை ஸ்தி…

  18. 29 AUG, 2023 | 01:06 PM அமெரிக்காவின் மேரிலான்ட் நகர செனட்டர் கிறிஸ் வன் ஹோலன் (Senator Chris Van Hollen) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இது குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது டுவிட்டரில் குறிப்பிடுகையில், அமெரிக்காவின் மேரிலான்ட் நகர செனட்டர் கிறிஸ் வன் ஹோலனை நான் வரவேற்று கௌரவித்தேன். இவர் இலங்கையின் மிக நீண்டகால நண்பராவார். இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்த கடுமையாக உழைத்தவர். இந்த வாரம், செனட்டர் கிறிஸ் வன் ஹோலனும் நானும் இணைந்து இலங்கையின் பொருளாதார மீட்சியை ஆராயவுள்ளோம். அத்துடன் மேம்பட்ட பங்காளித்துவத்திற்கான வழிகளைப்…

  19. 02 SEP, 2023 | 05:53 PM ஆர்.ராம் இந்திய இழுவைப்படகுகள் மற்றும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத கடற்றொழில்களால் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக வடமாகாண தமிழ் பேசும் பிரதிநிதிகள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து தரப்பினரின் கவனத்திற்கும் எடுத்துச் செல்ல வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அதே நேரம், என்னுடன் அரசியல் பேதங்களைக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல் வாதிகள் அவற்றை மறந்து வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் விடயத்தில் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருந்தால் தமிழகப் பயணத்தில் நான் பங்கேற்பதற்கு தயராகவே உள்ளேன் என…

  20. 15 ஏக்கர் அரச காணியை இரவோடு இரவாக துப்பரவு செய்ய முயன்ற நபர்கள் adminSeptember 1, 2023 மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில் குளம் பகுதியில் சுமார் 15 ஏக்கர் அரச காணியை சட்ட விரோதமான முறையில் இனம் தெரியாத நபர்கள் நேற்று வியாழக்கிழமை (31) இரவு ஜே.சி.பி இயந்திரங்களை பயன்படுத்தி துப்பரவு செய்த நிலையில், காவல்துறையினா் மற்றும் இராணுவத்தினர் குறித்த பகுதிக்குச் சென்ற நிலையில் ,இயந்திரங்கள் கைவிட்ட நிலையில் தப்பிச் சென்றுள்ளனர். மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில் குளம் பகுதியில் உள்ள அரச காணியை இனம் தெரியாத நபர்கள் சிலர் ஜே.சி.பி இயந்திரங்களை பயன்படுத்தி காடுகளை அழித்து காணியை துப்புரவு செய்து கொண்டு இருப்பதாக இலுப்பைக்கடவை காவல்த…

    • 4 replies
    • 767 views
  21. Published By: VISHNU 01 SEP, 2023 | 09:08 PM சீனாவா இந்தியாவா எனக்கேட்டால் இந்தியாவிற்கே முன்னுரிமை என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார் கைத்தொழில் அமைச்சு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபை என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள யாழ்ப்பாண கைத்தொழில் கண்காட்சியில் கலந்து கொண்ட நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் கடற்தொழில் அமைச்சரிடம் கேள்வி கேட்டபேதே அவர் இதனை தெரிவித்தார். சீனக் கப்பல் இலங்கை வருகை தரவுள்ளமை தொடர்பில் இந்த விடயம் ஒரு பேசு பொருளாகவுள்ளது, இந்த நிலையில் நீங்கள் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் விஐயம் மேற்கொண்டு வந்துள்ளமையால் உங்களின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர்களால் கேட்ட போது …

  22. வவுனியா மாவட்ட வைத்தியசாலைகளில் இருந்து 11 வைத்திய நிபுணர்களும், 08 வைத்தியர்களும் வெளிநாடு சென்றுள்ளதாக வவுனியா மாவட்ட அரச வைத்திய சங்க கிளை செயலாளர் வைத்தியர் அரங்கன் தெரிவித்தார். வவுனியா பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் கடந்த வருடம் 6 ஆம் மாதத்தில் இருந்து இதுவரை ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளார்கள். இதன்படி வைத்தியர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் சென்றுள்ளார்கள். விசேட வைத்திய நிபுணர்கள் 272 பேர் சென்றுள்ளனர். பொருளாதார நெருக்கடி, வேலை செய்வதற்கான பொருத்தமான வளங்கள் இன்மை, இடவசதிகள் போதாமை போன்றனவே இதற்கு காரணம். தற்போது …

  23. கிழக்கு மாகாணத்தில் 2 வருட காலமாக பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கு வழங்கப்பாடாதிருந்த நிரந்தர நியமனமானது, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் 886 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது. ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு கடந்த காலத்தில் நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டது. ஆனால் பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்குள் உள்வாங்கப்பட்ட போதிலும், அவர்களுக்கான நிரந்தர நியமனங்கள் இரண்டு வருட காலமாக வழங்கப்படாமல் தற்காலிக நியமனத்திலே பணியாற்றி வந்தனர். இந்நிலையில் ஆளுநர் செந்தில் தொண்டமான், பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களை மாகாண சபைக்குள் உள்வாங்கி அவர்களுக்கான நிரந்தர நியமனங்ளை வழங்கி வைத…

  24. வடக்கு தென்னை முக்கோண வலயத்தை உருவாக்குவதன் அங்குரார்ப்பண நிகழ்வும், சர்வதேச தென்னை விழாவும், தென்னை வளர்ப்பாளர்களை கெளரவிக்கும் நிகழ்வும் இன்று சனிக்கிழமை (02) கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் பளை மாதிரி தென்னை தோட்டம் பகுதியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் ராமேஸ் பத்திரன, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லொஹான் ரத்வத்த, நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், தெங்கு அபிவிருத்தி சபை அதிகாரிகள், தென்னை உற்ப்பத்தியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன்போது, தென்னை செய்கையாளர்களுக்கு ஒரு ஏக்கர் தென்னை செய்கைக்கான தென்னைங்கன்றுகளும், உள்ளீடுகளும் வழங்கப்பட்டது. …

  25. Published By: VISHNU 01 SEP, 2023 | 09:04 PM யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் வெள்ளிக்கிழமை (01) முதல் 24 மணி நேர சேவையை வழங்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய பிராந்தியத்தின் செயலாற்று முகாமையாளர் லம்பேட்ட தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சரும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவிடம் 24 மணிநேர சேவையை ஏற்படுத்தவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறு கோரிக்கைக்கு முன்வைக்கப்பட்டது. அதற்கு அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினரது கவனத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.