Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கக் கூட்டத்தில் கைகலப்பு : வவுனியாவில் 7 பேர் கைது! SayanolipavanOctober 28, 2023 வவுனியாவில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க கூட்டத்தில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பாக 7 பேர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அண்மையில் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றிருந்ததுடன் அதில் இருந்த ஒரு பகுதியினர் அதில் இருந்து வெளியேறியிருந்தனர். இந்நிலையில் வெளியேறிய அணியினரை வைத்து வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் வவுனியா மாவட்டத்திற்கான புதிய நிர்வாகத் தெரிவு ஒன்றை மேற்கொள்…

  2. 28 OCT, 2023 | 02:28 PM தையிட்டி நாக தம்பிரான் கோவிலில் சைவ முறைப்படி பொங்கலிட்டு, பக்திப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டபோது இந்த ஒலியானது அருகில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரையின் பிரித் ஓதுதலுக்கு இடையூறாக இருப்பதாகவும், அதனால் பாடல் ஒலிப்பதை நிறுத்துமாறும் காவல்துறையினர் மக்களோடு முரண்பட்டுள்ளனர். இந்நிலையில், அங்கு நின்றிருந்த மூத்த சட்டத்தரணி நடராஜர் காண்டீபன், சட்ட விரோத விகாரையின் பிரித் ஓதும் ஒலியை நிறுத்தும்படி கூறி, காவல்துறைக்கு விளக்கமளித்ததையடுத்து பிரித் ஓதும் ஒலி நிறுத்தப்பட்டு நிலைமை சீரானதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/167952

  3. தினமும் 200 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை! யாழில் ஏன் இந்த நிலைமை? யாழில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் குற்றச் சாட்டில் தினம் 200 க்கும் மேற்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர் மஞ்சுள தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” யாழில் வீதி விபத்துக்கள், போக்குவரத்து நெரிசல்கள் அதிகரித்து உள்ளமையால் யாழ்.மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களில் உள்ள போக்குவரத்து பிரிவு பொலிஸார் விசேட நடவடிக்கைகளை முன்னெடுது்து வருகின்றனர். இதனால் தினமும் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சுமார் 200 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களில் சுமார் 10 …

  4. உலகிற்கு சாந்தியையும் சமாதானத்தையும் போதிக்க வேண்டியவர்களின் தரங்கெட்ட செயற்பாடுகள் தொடர்பில் பௌத்த பீடங்கள் அக்கறை செலுத்த வேண்டும் : அமைச்சர் டக்ளஸ்! kugen தேசிய நல்லிணக்கத்தினை சிதைக்கும் வகையிலான எகதாளப் பேச்சுக்களும் சண்டித்தனங்களும் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தர்மத்தை போதிக்க வேண்டிய சிலரின் தரம் கெட்ட வார்த்தைகளும் செயற்பாடுகளும் வேதனையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தன தேரரின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பாக இன்று சனிக்கிழமை (28) கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், "துரதிஸ்டவசமாக இந்ந…

  5. பெரும்பான்மை இனத்தவர்கள் 7 பேர் யாழ். பல்கலைக்கு நியமனம்! adminOctober 28, 2023 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் உள்ள சிற்றூழியர் பதவி வெற்றிடங்களுக்கு நியமிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடளாவிய ரீதியில் ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற ஆயிரத்து 139 பேர் நியமனத்துக்குத் தகுதி பெற்றவர்கள் எனப் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த 7 பேர் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமிக்கப்படவு…

  6. Published By: DIGITAL DESK 3 28 OCT, 2023 | 10:18 AM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரி இருக்கிறது. முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் ஆணைக்குழுவுக்குக் கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணையின் ஒரு அங்கமாகவே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விளக்கம் கோரப்பட்டுள்ளது. தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்க பல்கலைக்கழகத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவரை நாளை மறுதினம் திங்கட…

  7. Published By: RAJEEBAN 28 OCT, 2023 | 09:36 AM காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திற்குஇலங்கை ஆதரவளித்துள்ளது. ஐக்கியநாடுகள் பொதுச்சபை தீர்மானம் காசாவிற்குள் மனிதாபிமான பொருட்கள் செல்வதற்கு தடையற்ற அனுமதியை வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. பொதுமக்களை பாதுகாத்தல் சட்ட மற்றும் மனிதாபிமான கடப்பாடுகளை நிறைவேற்றுதல் என்ற இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 120 நாடுகள் வாக்களித்துள்ளன-12 நாடுகள் எதிர்த்து வாக்களித்துள்ளன. இந்தியா அவுஸ்திரேலியா கனடா ஜேர்மனி உக்ரைன் உட்பட 45 நாடுகள் வாக்களிப்பை தவிர்த்துள்ளன. அமெரிக்காவும் இஸ்ரேலும் எதிர்த்து வாக்…

  8. 27 OCT, 2023 | 09:41 PM ( எம்.நியூட்டன்) யாழ் மாவட்டத்தில் எத்தனை மதுபான சாலைகள் உள்ளன என தகவலறியும் சட்டமூலம் ஊடாக கேட்டும் பதில் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றச்சாட்டியுள்ளார். யாழ் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (27) ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றபோது மதுவரித் திணைக்களத்தின் செயற்பாடுகள் கலந்துரையாடப்பட்டவேளை அவர் இதனை தெரிவித்தார். மதுவரி திணைக்களத்தின் செயற்பாடுகள் செயலற்று இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்கள். குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஞன் இராமதாதன் உடுப்பிட்டியில் சட்டவிரோதமாக வீடு ஒன்றில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்ட…

  9. பாலஸ்தீனியர்களுக்காகக் குரல் கொடுக்கும் கல்முனை மக்கள்! இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் தீவிரமாகப் போர் இடம்பெற்று வரும் நிலையில், பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கல்முனையில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு அருகேயே குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அப்பகுதி மக்களால் துஆ பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. https://athavannews.com/2023/1355981

    • 2 replies
    • 638 views
  10. அவர் மேற்படி பேட்டியில் தமிழரசுக்கட்சி தொடர்பான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் திருமலையில் கட்சி இரண்டு பிரிவுகளாக செயற்படுகிறது சம்பந்தன் திருமலைக்கு செல்லமுடியாததால் திரு குகதாசன் தனக்கு வேண்டியவர்களை கட்சி கிளைகளை புனரமைத்து நியமித்து வருவதாகவும் சம்பந்தன் தரப்பை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கட்சி இப்போது இருக்கிறதா என்ற கேள்விக்கு தனக்கும் அந்த ஐயம் இருப்பதாகவும் தெரிவித்த சிவஞானம் கட்சி தேய்வடைந்து வருகிறது என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளார். முக்கியமான பகுதியும் முழுமையான பேட்டியும் உங்கள் பார்வைக்காக தொடர்புடைய முன்னைய செய்திகள் சம்பந்தன் …

    • 2 replies
    • 679 views
  11. சம்பந்தன் வளர்த்த கடா அவர் மார்பில் பாய்ந்து விட்டது என அவருக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில் தமிழரசுக்கட்சி கொழும்புக்கிளைத் தலைவரும், கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்திருக்கின்றார். ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரந் குறித்தே அவர் இப்படிக் குறிப்பிட்டுள்ளார். அக்கடிதத்தின் முழு விவரம் அப்படியே வருமாறு:- நீங்கள் வளர்த்த கடா உங்கள் மீது பாய்ந்துவிட்டது. ஆப்பிரஹாம் சுமந்திரனின் தன்னிச் சையான முடிவுகளால் தமிழ்த் தேசியம் தேய்ந்து, கட்சிக்கு ஏற்படுகின்ற பாதிப்பு களைத் தவிர்ப்பதற்காக கடந்த காலத்தில் நான் உங்களுக்கு பல கடிதங்களை எழுதியிருந்தேன். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக நீங்கள் அவரின் மீது எவ்வித ஒழுக்காற்று நடவ…

    • 4 replies
    • 985 views
  12. 27 OCT, 2023 | 09:25 PM கொழும்பு -.புறக்கோட்டை 2 ஆம் குறுக்குத்தெருவிலுள்ள ஆடையகத்தில் தீ பரவியமைக்கான காரணத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஆடையகத்திற்கு சாம்பிராணி தூபம் காட்டுவதற்காக தேங்காய் சிரட்டைகளுக்கு பெற்றோல் ஊற்றி அதனை பற்றவைக்கும் போதே தீ பரவியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பு -.புறக்கோட்டை 2 ஆம் குறுக்குத்தெருவிலுள்ள ஆடையகத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/167912

  13. இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவருடைய முதுமை காரணமாக செயற்பாட்டு அரசியலில் பங்களிப்புச் செய்யமுடியாதிருப்பதன் காரணமாக அவர் தனது பதவியைத் துறக்க வேண்டுமென அக்கட்சியின் பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக கோரியுள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றில் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றபோது, 288 பாராளுமன்ற நாட்களில் வெறுமனே 39 நாட்களில் தான் பாராளுமன்றத்துக்கு இரா.சம்பந்தன் வருகை தந்திருக்கின்றார் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பெறப்பட்டுள்ள தகவல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அவருடைய வருகை வீதம் 13.6சதவீதமாக உள்ள…

    • 0 replies
    • 373 views
  14. 27 OCT, 2023 | 06:12 PM மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் நேற்று (26) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் இன்று (27) உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கார் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் கீரிமலை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஜோசப் சுதர்சன் என்பவர் ஆவார். இந்த விபத்து தொடர்பாக தெரியவருவதாவது : கல்லூண்டாய் பகுதியில் நேற்றிரவு சைக்கிள், மோட்டார் சைக்கிள் மற்றும் கார் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சைக்கிளில் சென்ற நபர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சி…

  15. 21 OCT, 2023 | 04:39 PM காசாவில் இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்டு வரும் யுத்த நெறிமுறைகளையும் மீறிய தாக்குதல்களினால் மிகப்பெரும் மனிதப்பேரழிவுக்கு ஆளாகியிருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அவர்களுக்கு நீதி வேண்டியும், இஸ்ரேலைக் கண்டித்தும் இன்று சனிக்கிழமை (21) யாழ் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினால் அழைப்பு விடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கமும் கலந்துகொண்டு பாலஸ்தீன மக்களுக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தியது. https://www.virakesari.lk/article/167449

  16. Published By: VISHNU 26 OCT, 2023 | 03:25 PM மன்னாரில் மேய்ச்சல் நிலத்துக்காக மிக நீண்ட காலமாக பல்வேறு அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் எழுத்து மூலமும், நேரடியாகவும் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் பயனற்றுப் போயின. ஆகவே அதிகாரிகள் உடன் இவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என கோரி கால்நடை வளர்ப்போர் மகஜர் கையளித்துள்ளனர். வியாழக்கிழமை (26) மன்னாரில் கால்நடை வளர்ப்போர் நடாத்திய கவனயீர்ப்பு போராட்டத்தின்போது மன்னார் மாவட்ட செயலாளருக்கு கையளிக்கப்பட்ட மகஜரில் தெரிவித்திருப்பதாவது, மிக நீண்ட காலமாக பல்வேறு அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் எழுத்து மூலமும், நேரடியாகவும் பல தடவைகள் கோரிக்கைவிடுத்தும் பயனற்றுப் போயின.…

  17. கீரிமலை ஜனாதிபதி மாளிகையை வழங்குவது தொடர்பில் தீர்மானகரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை adminOctober 26, 2023 காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் வியாழக்கிழமை பார்வையிட்டார். குறித்த ஜனாதிபதி மாளிகையானது தனியார் பல்கலைக் கழகத்திற்கு நீண்ட காலக் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அதன் பூர்வாங்க பணிகள் நிறைவடைந்துள்ளதாக ஊடகச் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இன்று ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் குறித்த விடயம் தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டது. அதாவது, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரியினால், தொழில்நுட்ப பூங்கா உட்பட 8 அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்காக காங்கேசன்துறை சீமேந்து தொ…

  18. Published By: DIGITAL DESK 3 27 OCT, 2023 | 11:17 AM (நா.தனுஜா) ஆட்கொணர்வு மனு வழக்கில் சட்டத்தரணிகளால் வேண்டுகோள்விடுக்கப்பட்டதைப்போன்று 2009 மே மாதம் 18 ஆம் திகதி சரணடைந்தவர்களின் பட்டியலை ஒப்படைக்குமாறு 58 ஆவது படைப்பிரிவுக்குக் கட்டளையிடல் உள்ளடங்கலாக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் தாம் சிரத்தையுடன் செயற்படுவதை நிரூபிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டுமென சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து யஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: காணா…

  19. Published By: DIGITAL DESK 3 26 OCT, 2023 | 04:06 PM யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் அண்மையில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தனியார் காணி பெற்றோலிய கூட்டத்தாபனத்திற்கு சொந்தமான காணி என அதிகாரிகள் உரிமை கோரி வந்தமையால் , காணி உரிமையாளர்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டது. அது தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 33 வருட காலத்திற்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த மாங்கொல்லை பகுதியில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியதை அடுத்து , அப்பகுதி மக்கள் தமது காணிகளை அடையாளப்படுத்தி , எல்லைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில், இன்று வியாழக்கிழமை பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் என…

    • 1 reply
    • 604 views
  20. Published By: RAJEEBAN மட்டக்களப்பின் திவுலுப்பொத்தானையிலிருந்து மக்களை வெளியேற்ற முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ள அம்பிட்டியே சுமணரத்ன தேரர் அந்த மக்களை பாதுகாப்பதற்காக இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடியாக தலையிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவிடம் சமர்பித்துள்ள நான்குபக்க கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில்விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பது தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் எட்டப்பட்டுள்ள உடன்படிக்கை காரணமாக விக்கிரமசிங்க ராஜபக்ச அரசாங்கம் தமிழ்தேசிய கூட்டமைப்பு திவுலுபொத்தானையிலும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் உள்ள மக்களை அச்சுறுத்துவதற்கு அனு…

    • 1 reply
    • 285 views
  21. பொலிஸ் வேலை என்பது சில்லறை கடை போன்றது. நிறைய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிவரும். ஆகவே, மணல் கடத்தல் விடயத்தை மாத்திரம் நாங்கள் கண்காணித்துக்கொண்டிருக்க முடியாது. சாதாரண மக்கள் என்ன பிரச்சினை என்றாலும், முதல் முதலாக நாடுவது பொலிஸ் நிலையத்தைத்தான். மக்களுக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளன. நாங்கள் உயிரை பணயம் வைத்துத்தான் கடமை செய்கிறோம் என யாழ்ப்பாண பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் யரூல் தெரிவித்தார். இன்றைய தினம் (26) யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராயும்போது, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், இராணுவத்தை யாழில் நிலைநாட்டுவதற்காகவே பொலிஸார் இவ்வாறு மந்தகதியில் செயற்படுகிறார்கள் என கூறிய…

    • 3 replies
    • 643 views
  22. முகவர் ஊடாக வெளிநாடு செல்ல முற்பட்டு இடைத்தங்கல் நாடுகளில் சிக்கித்தவிக்கும் யாழ்ப்பாணத்தவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள பலரும் பெருமளவு பணத்தை கொடுத்து முகவர்கள் ஊடாக வெளிநாடு செல்ல முயன்று இடைத்தங்கல் நாடுகளில் சிக்கி தவிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பிரான்ஸ்க்கு செல்வதற்காக இருபது இலட்சம் ரூபாய் பணத்தை வெளிநாடொன்றில் உள்ள போலி முகவரிடம் கையளித்து ஏமாந்து போன யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூதாட்டி தற்போது லெபனான் சிறையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிலநாட்களுக்கு முன்னர் கொழும்புத்துறை வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் போலி முகவரை நம்பி ஏமாந்துபோய் லெபனான் நாட்டின் சிறையில் சிக்கியுள்ளதாக செய்தி வெளியாகி இருந்தது. …

    • 7 replies
    • 778 views
  23. சி. வி கே க்கு புதிய பதவி adminOctober 26, 2023 யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள எட்டுத் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவராக வடமாகாண அவைத்தலைவர் சி விகே சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள எட்டுதிட்டங்கள் தொடர்பில் இன்றைய தினம் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது. குறித்த திட்டங்களுக்கான காணிகளை வழங்குவதற்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதி வழங்குமாறு நிறுவனத்தின் பணிப்பாளரால் கோரிக்கை விடுக்கப்பட்ட போது காணி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனை அடுத்து ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரினால் எட்டு திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து, அவை தலைவர் சி வி கே ச…

  24. Published By: DIGITAL DESK 3 26 OCT, 2023 | 10:36 AM தேசிய அடையாள அட்டை (NIC) கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதிக்கான கட்டணம் 1,000 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய அடையாள அட்டைகளின் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதற்கான கட்டணம் இணைய முறையில் சமர்பித்தால் 25 ரூபாயாகவும், பௌதீக ஆவணங்கள் மூலமாகவோ அல்லது ஆணையாளர் நாயகத்துக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய மின்னணு முறை மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட்டால் 500 ரூபாயாகவும் இருக்கும். மேலும், பதிவுச் சான்றிதழைப்…

  25. 25 OCT, 2023 | 07:55 PM (எம்.மனோசித்ரா) விவசாய மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் புரட்சிகர மாற்றத்திற்கான பல்வேறு புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது, பொறியியலாளர்களின் பங்களிப்பு மிக மிக்கியமானது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளின் விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சுக்களின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாகவும் மேலதிக நிபுணத்துவத் தெரிவுகளைப் பெற்றுக்கொள்வதற்கான இயலுமை தொடர்பில் தேடியறிவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று புதன்கிழமை (25) நடைபெற்ற 117 ஆவது இலங்கை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.