Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 02.03.2010 அன்று ஒலிபரப்பாகிய யாழ்ப்பாணச் செய்தியாளரின் கருத்தாய்வு http://www.yarl.com/articles/files/100302_eraa_thurairatnam.mp3

  2. அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 02.03.2010 அன்று ஒலிபரப்பாகிய யாழ்ப்பாணச் செய்தியாளரின் கருத்தாய்வு http://www.yarl.com/articles/files/100302_jaffna_reporter.mp3

  3. அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 02.03.2010 அன்று ஒலிபரப்பாகிய கொழும்புச் செய்தியாளரின் செய்தித் தொகுப்பு. http://www.yarl.com/articles/files/100302_colombo_reporter.mp3

  4. இலங்கை அரசினால் கைதுசெய்யப்பட்ட போராளிகளில் 4ஆயிரம் பேர் மாயம் TUESDAY, 02 MARCH 2010 17:24 செய்திகள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளை தற்போதைய நிலையில் விடுதலை செய்ய முடியாது என சிறிலங்கா படையைச் சேர்ந்த பிரிகேடியர் சுகந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். போராளிகளை விடுதலை செய்யும் படி சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட மனித உரிமைகள் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே அரசின் இந்தக் கருத்து வெளிவந்துள்ளது. தற்போது 10,732 பேர் தம்மால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள ரணசிங்க இவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்பே விடுவிக்கப்படுவர் என்றும் இதற்கு பல ஆண்டுகள் செல்லலாம் எனவும் தெரிவித்திருக்கிறார். இதனி…

    • 0 replies
    • 948 views
  5. சீனாவின் ஆதிக்கத்தில் தமிழர்களின் கச்சத்தீவு [படங்கள் செவ்வி] கச்சத்தீவு தேவாலய திருவிழாவிற்கு தமிழக உறவுகள் சென்ற பொழுது அங்கே சீன எழுத்துக்களுடைய கூடாரங்களையும் பொருட்களையும் கண்டுள்ளார்கள். அவர்கள் மீனகம் ஊடகத்துக்கு அளித்த செவ்வியும் படங்களும் இணைக்கப்பட்டுள்ளன. Read more: http://meenakam.com/2010/03/02/%e0%ae%9a%e0%af%80%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae/#ixzz0h0rFdztt ஆடியோ மற்றும் மேலதிக படங்கள்: http://meenakam.com/2010/03/02/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0…

    • 7 replies
    • 1.9k views
  6. தேர்தலில் வாக்குப் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம். ஏப்றல் மாதம் 8ம் திகதி நடைபெறப்போகும் சிறிலங்காவின் நாடாளுமன்றத்தேர்தலில் வாக்குப்பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தேர்தல்கள் செயலகம் முடிவு செய்துள்ளது. இம்முறை ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகமான கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும் போட்டியிடுவதனால் வாக்குச் சீட்டின் நீளம் அதிகமாக காணப்படுவதனால் வாக்குப்பெட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு நிலைமை கடந்த அதிபர் தேர்தலிலே இடம்பெற்றதாகவும் மேலதிகமான வாக்குப்பெட்டிகள் சில வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. அத்தோடு தோர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களது இல…

    • 1 reply
    • 510 views
  7. மத்திய வெளியுறவு இணை அமைச்சர் சசிதரூர் பிரதமருடன் சவுதி அரேபியா சென்றிருந்தபோது, அளித்த பேட்டியில் இந்தியா பாகிஸ்தான் இடையே சவுதி அரேபியா மத்தியஸ்தம் செய்யலாம் என்று சர்ச்சைக்குரிய கருத்தை கூறினார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என்றார். இது தொடர்பாக பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜபேத்கர் ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், சசிதரூர் தொடர்ந்து இது போன்று பொறுப்பற்ற முறையில் பேசி வருகிறார். அவர் மத்திய வெளியுறவு அமைச்சராக இருப்பவர். எனவே அவர் பேசுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர் சொல்லும் கருத்துக்களுக்கு பிரதமர்தான் பொறுப்பேற்க வேண்டும். இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் 3வது நாடு தலையிடக்…

  8. பிரித்தானியாவில் கடந்த 24ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட “உலகத் தமிழர் பேரவை” அமைப்பின் மாநாட்டின் இறுதிநாள் நிகழ்வில் அமெரிக்காவின் பிரபல மனித உரிமை ஆர்வலரும், அரசுத் தலைவர் வேட்பாளரும், அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவிற்கு மிகவும் நெருங்கியவருமான வணக்கத்திற்குரிய அடிகளார் ஜெசி ஜக்சன் (Jesse Jackson) கலந்து கொண்டார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு லண்டன் கனறிவூப் பகுதியில் அமைந்துள்ள “பிரித்தானிய பன்னாட்டு நட்சத்திர விடுதியில்” இந்த அமைப்பின் முதலாவது மாநாட்டின் இறுதி நிகழ்வும், இராப்போசன விருந்தும் இடம்பெற்றிருந்தது. இந்த நிகழ்வில் அமெரிக்க கறுப்பின மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தவரும், அந்த மக்களின் விடுதலைக்காக ஜோர்ஜ் புஸ்ஸிற்கு எதிராக அரசுத் தலைவ…

  9. சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைகளுக்கு ஐ.நா. அதிகாரிகள் மீளவும் வற்புறுத்து "சனல் - 4' வீடியோ நாடா மிக முக்கிய ஆதாரம் என்கின்றனர் 2010-03-02 05:17:17 கொழும்பு, மார்ச் 02 இலங்கையின் உள்நாட்டு மோதலின் இறுதித் தருணங்களில் இடம்பெற்றிருக்கக் கூடிய யுத்தக் குற் றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் இடம் பெறவேண்டும் என ஐக்கிய நாடுகளின் மூத்த அதி காரிகள் இருவர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.அவர்களில் ஒருவர் ஐ.நா வின் தற்போதைய அதிகாரி. மற் றவர் ஏற்கனவே இலங்கையில் ஐ.நா. அதிகாரியாகப் பணியாற்றி யவர் என்பது குறிப்பிடத்தக்கது. "சனல் 04' தொலைக்காட்சியினால் காண்பிக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகள் நிச்சயமாக யுத் தக் குற்றங்கள் இடம்பெற்றமையை உறுதி செய்கின்றன என…

  10. திரு. சம்பந்தன் அவர்களே! பேசுங்கள், எல்லோரோடும் மனம் திறந்து பேசுங்கள்!! தமிழீழ மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பாரிய இழப்புக்களுடன் பலவீனப்பட்டு, முடங்கிப் போயுள்ளார்கள். அவர்களது நம்பிக்கை நட்சத்திரங்கள் கண்முன்னே உதிர்ந்து வீழ்ந்துவிட்ட காட்சிக்குப் பின்னர் நம்புவதற்கு எதுவுமற்றவர்களாக, நடை பிணங்களாக மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கான அரசியல் தளத்திலும் தற்போது அவ நம்பிக்கைகளே அதிகரித்துச் செல்லுகின்றது. ஆயுத பலத்தை நம்பி அணிவகுத்த அந்த மக்கள், அரசியல் பலத்தையும் தொலைத்து விடுவோமோ? என்று அங்கலாய்க்கின்றனர். ஈழத் தமிழர்களின் அரசியல் சக்தியாக முள்ளிவாய்க்கால் வரை முன்னின்று போராடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தடுமாற்றம் கொண்டு திசைமாறிச் செல்ல முற்படுகின…

  11. புலம்பெயர்ந்து வாழும் மக்களுடன் கடல் கடந்த தமிழ்த்தாயகம் குறித்துப்பேச நாம் தயார் -கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செவ்வாய்க்கிழமை, 02 மார்ச் 2010 00:25 பி.எம்.முர்ஷிதீன் EXCLUSIVE புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் எம்முடன் கடல் கடந்த தமிழ்த்தாயகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தால் நாம் அதற்கு முக்கியத்துவம் வழங்குவோம் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் செயலாளர் நாயகம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்மிரர் இணையதளத்திற்கு சற்றுமுன் அளித்த பிரத்தியேகப்பேட்டியில் தெரிவித்தார். புலம்பெயர்ந்த மக்கள் தனித்தாயகம் அமைப்பது குறித்துப்பேசுவது ஜனநாயகத்தின் அடிப்படையிலானது என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்…

  12. அமைச்சர்களை குறைக்க ஏன் அடுத்த தேர்தல் வரை காத்திருக்கவேண்டும்? ரணில் கேள்வி அரசாங்கத்தில் 106 அமைச்சர்களும், அமைச்சரவையில் 50 அமைச்சர்களும் இருப்பதாகவும் ஏனையவர்கள் அமைச்சரவை உரிமையற்ற அமைச்சர்களாகவும் பிரதி அமைச்சர்களாகவும் இருப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த 106பேரும் பொதுமக்களுக்கு பெரும் சுமையாக இருப்பதாகவும் ஒருவருக்கு 5 வாகனங்கள் வீதம் வழங்கப்பட்டுள்ளதாகவும், பாராளுமன்ற அனுமதி இன்றி மாதாந்தம் தங்களது சம்பளத்தை ஒரு லட்சம் ரூபாவால் அதிகரித்துக்கொண்டுள்ளதாக தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, இவற்றை குறைக்க ஏன் அடுத்த தேர்தல் முடியும் வரை இருக்கவேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் அதிபர் பிரேமதாஸ செய்தத…

  13. மேலும் ஒரு தொகுதி ஏதிலிகள் அவுஸ்த்திரேலியாவுக்குள் தஞ்சம் ஈழத்தமிழர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும் ஒரு தொகுதி சட்டவிரோத குடியேற்றவாசிகள் அவுஸ்த்திரேலியாவுக்குள் தஞ்சம் புகுந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கி்னறன. இவ்வாறு 58 பேர் அவுஸ்த்திரேலிய படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அவுஸ்த்திரேலியாவின் கிறிஸ்மல் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துளள்னர். அங்கு இடப்பற்றாக்குறை உள்ளதால் மேலும் புதிய தங்குமிடங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அங்கிருந்து மீனகம் நிருபர் தெரிவித்துள்ளார். Read more: http://meenakam.com/2010/03/02/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF…

  14. இதுவரை நடந்த தமிழீழ விடுதலைக்கான வாக்கெடுப்பின் நிலவரம். யுரோப்பில் நடந்த வாக்கெடுப்பில்(விருப்பம் தெரிவிப்பு!) கிடைத்த பலன். வாக்களித்தோர் தொகை விகிதாசாரத்தில்...30% இலங்கை தமிழர் சுதந்திரமாக வாழ விரும்புவோர்...68% இலங்கை தமிழர் சிங்களவரின் கீழ் வாழ விரும்புவோர்...29% என்ன செய்வது எண்டு தெரியாதவர்கள்...3%

    • 4 replies
    • 1k views
  15. இலங்கையில் இந்தியத் தலையீடு உடனடியாக இடம்பெற வேண்டிய தவிர்க்க முடியாத நிகழ்வு [ ஞாயிற்றுக்கிழமை, 28 பெப்ரவரி 2010, 15:25 GMT ] [ புதினப் பணிமனை ] இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகத் தொடர்ந்த கொடூரமான இனப் போரின் பின்னர், இலங்கைத் தீவில் அமைதி நிலவும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. போர் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் நாட்டில் பெரும் குழப்பங்கள் ஏதும் இடம்பெறாது என்றும் இதுநாள் வரைக்கும் கவனிக்காது கைவிடப்பட்டிருந்த பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் இலங்கை தனது முழுக் கவனத்தையும் செலுத்தும் எனவும் ஊகிக்கப்பட்டது. போர் அற்ற அமைதியான ஒரு சூழலில், புதிய இன முரண்பாட்டுக்கான சாத்தியம் பெர…

    • 6 replies
    • 1k views
  16. சிறிலங்கா இராணுவத்துக்கு சீன அரசாங்கம் ஒரு தொகுதி இராணுவத் தளபாடங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இந்த இராணுவத் தளபாடங்களை சிறிலங்கா அரசிடம் கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று காலை கொழும்பில் சிறிலங்கா பிரதமரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்ற சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவிடம் சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யங் சூபிங், இராணுவ தளபாடங்களை சம்பிரதாயபூர்வமாக கையளித்தார். சீனாவின் இராணுவ தளபாட உதவிகளை வழங்கும் இந்த நிகழ்வில் வைத்து ஒரு தொகுதி கண்ணிவெடி அகற்றும் கருவிகளே பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டன. அதேவேளை சீனா வழங்கியுள்ள இராணுவ தளபாட உதவிகளில் சுமார் 50 மில்லியன ரூபா பெற…

    • 3 replies
    • 674 views
  17. பயங்கரவாத ஜனநாயகத்தின் புதிய தோற்றம்.. தற்போது அமலில் இருப்பது வர்த்தக ஜனநாயகம்.. அறிவு கெட்ட பாதையில் சென்றால் புதுமாத்தளனை புலம் பெயர் நாடுகளிலும் சந்திக்க நேரலாம்… உலகத்திற்கு ஜனநாயகத்தை அறிமுகம் செய்தவர்கள் கிரேக்கர்கள். ஆட்சிக்கு ஒருவரைத் தேர்வு செய்ய மரத்தடியில் கூடினார்கள், அதிகமாக யாருக்கு ஆதரவாக மக்கள் கைகளை உயர்த்தினார்களோ அவரே ஆட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுதான் ஜனநாயகத் தேர்தலும், மக்களாட்சியும் உருவான வரலாறாகும். கிரேக்கர்கள் சிறந்த சிந்தனைவாதிகள் என்றாலும் அவர்களிடம் மிகப்பெரிய சிந்தனைத் தவறு இருந்தது. காரணம் கிரேக்கத் தத்துவ ஞானிகளில் ஒருவர் கூட பெண் கிடையாது. பெண்களை சிந்திக்க உரிமையற்றவர்கள் என்று கருதிய அவர்களுடைய சிந்தனைய…

    • 1 reply
    • 1k views
  18. Should the Tamil Diaspora get involved with the reconstruction work in the north east? When there is no sign of reconciliation being visible, following the post war situation and the recent Presidential election? [sunday, 28 February 2010 19:49] News “In our zeal for political reform we must be on our guard” Sir Pon Arunachalam’s. A word of caution as there is an ominous sign lay in wait? Thus, we wish to emphasise to our entrepreneurial members of the Tamil Diaspora that as long as “Mahavamsa Ideology” exists within the Srilankan establishments there can be no progress in the reconciliation between the two communities. Haven’t we learnt many bitter …

    • 1 reply
    • 664 views
  19. முன்னாள் போராளிகளை விடுவிக்கவும் முடியாது! பராமரிக்க நிதியும் போதாது! என்கிறது சிறீலங்கா அரசு தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை பல நாட்டு உதவியுடன் அழித்து, கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள போராளிகளை பராமரிக்க தம்மிடம் இருக்கும் நிதி போதாது என சிறீலற்காவின் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதானத்த றணசிங்க தெரிவித்துள்ளார். தாம் இவர்களுக்கு உதவியளிக்க மாத்திரம் மாதம் 88 மில்லியன் ரூபாய்களை செலவழிப்பதாக தெரிவித்துள்ள அவர் சர்வதேச தொண்டு நிறுவனங்களும் புலம் பெயர் தமிழர்களும் அவர்களுக்கான புனர்வாழ்வு மற்றும் தொழில் பயிற்சிகளை வழங்க உதவ வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளை விடுவிக்க தமக்கு மேலும் கால…

    • 0 replies
    • 472 views
  20. தமிழ்த் தேசியத்திற்குப் பொறி வைக்கும் சிறிலங்கா புலனாய்வுத்துறை திகதி: 28.02.2010 // தமிழீழம் சிறிலங்கா இராணுவக் கட்டமைப்பு குழு மோதல்களால் பலம் இழந்துள்ளது. ஆனால் புலனாய்வுத்துறை மாத்திரம் விடாப்பிடியாக செயற்பட்டு வருகின்றது. தமிழ்த் தேசியம் நன்றாக வேர்விட்டு ஒங்கி வளர்வதைக் கண்டு சிறிலங்கா அரசு அச்சம் அடைந்துள்ளது. எதுவிதப்பட்டாயினும் தமிழீழத்தில் தேசிய எழுச்சி மீண்டும் தோன்றாமல் தடுப்பது அரசின் அண்மைக்காலத் திட்டமாக இருக்கிறது. இதற்க்காக அது பெருமளவு பணத்ததை புலானாய்வுத்துறைக்கு வழங்கி ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. சிறிலங்கா புலனாய்வுத்துறை வகுத்துள்ள செயற் திட்டங்களை மூன்று தலைப்பின் கீழ் கொண்டு வரலாம் - 1) தமிழீழத் தா…

    • 7 replies
    • 1.2k views
  21. புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் ஒருங்கிணைந்து செயற்பட அமெரிக்கா விருப்பம் பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டின் வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் ஒருங்கிணைந்து செயற்பட அமெரிக்கா விரும்புவதாக அமெரிக்காவின் கிழக்கு, மத்திய மற்றும் தென்ஆசிய பிராந்திய வெளிவிவகார உறவுகளுக்கான துணைக்குழுவின் தலைவர் செனட்டர் பொன் கசே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அமெரிக்காவின் தென்ஆசிய பிராந்திய வெளிவிவகார உறவுகளுக்கான துணைக்குழுவின் தலைவராகிய நான் சிறீலங்காவில் நடைபெற்றுவந்த துன்பமான போரை ஆராய்ந்து வந்துள்ளேன். இடம்பெயர்ந்த மக்களின் நெருக்கடிகள் தொடர்பாகவும், போரின் பின்னரான அபிவிருத்த…

    • 10 replies
    • 1.1k views
  22. எரித்திரியாவுடன் தாம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த இராஜதந்திர உறவுகள் சில ஊடகங்களின் அறிக்கைகளினால் முறிவடைந்துள்ளதாக சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும், குமரன் பத்மநாதன் வழங்கிவரும் தகவல்கள் எமது புலானாய்வுப்பிரிவினருக்கு பெரும் பயனுள்ளவை எனவும் கோத்தபாயா ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்கா அரசு எரித்திரியாவின் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த முயன்றிருந்தது. ஆனால் சில ஊடகங்கள் அண்மையில் வெளியிட்ட அறிக்கைகளால் அது முறிவடைந்துள்ளது. தற்போது எரித்திரியா எல்லா வழிகளையும் மூடியுள்ளது. அவர்கள் எங்களுடன் பேச விரும்பவில்லை. அவர்களுடனான உறவுகள் முற்றாக துண்டிக்கப்…

    • 17 replies
    • 2.4k views
  23. சிறிலங்கா பெண்களை சுற்றுலா விசாக்கள் மூலம் சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று திட்டமிட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் குழுக்கள் தொடர்பாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக சிறிலங்காவின் வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது. இதுபோன்ற துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி தப்பி வந்த பெண் ஒருவர் இதுதொடர்பாக தகவல் வழங்கியுள்ளதாக சிறிலங்காவின் வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கிறது. இதுதொடர்பாக விசாரணைகளை செய்யும் பொறுப்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் வழங்கப்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது. பெண்களை ஒன்று திரட்டி தொழில் பெற்றுத்தருவதாக கூறி தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொண்டு இந்த குழுக்கள் பெண்களை கீழத்தரமான முறையில் நடத்துவதாகவும், இவ்வாறான துன்பு…

    • 2 replies
    • 1.3k views
  24. இன, மொழி, கலாசார ஒற்றுமையாலும் அயல்நாடு என்ற வகையிலும், ஒரு காலத்தில் இந்தியாவை மிகவும் நேசித்த ஈழத் தமிழ் மக்கள் மனத்தில் இன்று அழிவுகளும், சிதைவுகளும் மட்டுமே எஞ்சியுள்ளது. நண்பர்களாக இருந்தவர்கள் இன்று எதிரிகளாகிவிட்டனர். வியந்து போற்றியவர்கள் செல்லாக்காசாக பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இவர்களை மறந்து, சீனர்களை நம்ப துணிந்து விட்டனர். மிக நீண்ட காலமாக இன வன்முறை - ஒடுக்கல்களுக்கு ஆளாகி வந்த தமிழர், தமக்கு நிம்மதியான தீர்வுக்கு இந்தியாவை நம்பியிருந்தனர். ஆனால், 1987 - 1990 காலத்தில் இந்திய இராணுவத்தின் அட்டூழியங்கள் 50% ஆன தமிழரை உளமார பாதித்தது. தொடர்ந்து இந்திய அரசு தனது நலனை மட்டும் முன்னிறுத்தியது மட்டுமல்லாது, ஈழத்தமிழனின் அழிப்புக்கும் துணை போனது. அமைதி ப…

    • 29 replies
    • 3.3k views
  25. அண்மையில் தமிழ் மக்களின் அரசியல் நிலமைகள் பற்றி எனது ஊடகத்துறை நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பு பற்றி அவர் ஒரு குற்றச்சாட்டை வைத்தார். தமிழ் டயஸ்போறாவுடன் (tamil diaspora) பேசி ஏன் ஒரு முடிவுக்கு வருகிறார்கள் இல்லை. மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் தரப்பின் கருத்துக்களை புறம் தள்ளி விட்டு அரசியல் நடத்தலாம் என கருதுகிறார்களா என்ற தொனியில் அவர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். தமிழ் தேசியக்கூட்டமைப்பு மீது மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் ஊடகங்களில் இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மீது மிகக்காரசாரமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. மொத்தத்த…

    • 14 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.