ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142985 topics in this forum
-
ஒற்றுமை என்ற வெற்றுக் கோஷத்துடன் மட்டும் கரையேறுவது சாத்தியமாகாது! - ஈழநாடு (பாரிஸ்) முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் இலங்கைத் தீவில் இரண்டாவது அரசியல் யுத்தம் ஆரம்பமாகியுள்ளது. ஈழத் தமிழர்களின் ஆயுத பலம் அழிக்கப்பட்ட பின்னர், சிங்கள இனவாதத்திற்கு எதிராக ஒரு முனைப்படுத்தப்பட்டிருந்த தமிழ்த் தேசியமும் இப்போது பலத்த சிதைவினை எதிர் கொள்ள வேண்டிய நிலையை அடைந்துள்ளது. தமிழர்களின் அரசியல் பலம் சிதைக்கப்படக் கூடாது என்று கருதுபவர்களும் முடிவெடுக்க முடியாத நிலையில் திக்கு முக்காடுகின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற விடுதலைப் புலிகளின் ஆளுமைக்குட்பட்ட அமைப்புக்கெதிராக ஒட்டுக் குழுக்களே போட்டியிட்டன என்பதற்கு மாறாகத் தற்போது, தமிழீழ அரசியல் களம் பலமா…
-
- 4 replies
- 716 views
-
-
விடுதலைப் புலிகள் "யார்" என்பதை மக்களே தீர்மானிப்பார்கள்? [ வெள்ளிக்கிழமை, 26 பெப்ரவரி 2010, 11:57.54 மு.ப | ஊடகப் பணிமனை ] இலட்சிய பயணத்தை உறுதியோடும் உண்மையோடும் முன்னெடுக்கும் விடுதலைப்புலிகளின் பின்னால் மக்களே அணி திரள்வார்கள் - வி.உருத்திரகுமாரன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து அரசியல் ரீதியான வேலைகளில் ஈடுபடுதல் அவர்களுக்கான சட்ட ஆலோசனை வழங்கல் போன்ற பணிகளில் ஈடுபடுவதை அனுமதிக்கவேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணைகளுக்கான தீர்ப்பு இவ்வருட நடுப்பகுதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வி. உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இவ்விசாரணைகள் பற்றி பிபிசிக்கு வழங்கிய நேர்காணலிலேயே நாடு கடந்த தமிழீழ அரசின் இணைப்பாளர் வி. உருத்திரகுமாரன் மேலதிக வி…
-
- 3 replies
- 905 views
-
-
வடபகுதியில் சகல வசதிகளுடனும் கூடிய 7 மேல் நீதிமன்றங்களை ஸ்தாபிக்க அரசாங்கம் தீர்மானம் வடபகுதியில் சகல வசதிகளுடனும் கூடிய 7 மேல் நீதிமன்றங்களை ஸ்தாபிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாங்குளம், ஊர்காவற்துறை, பருத்தித்துறை ஆகிய பிரதேசங்களில் இந்த மேல் நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளதாக நீதி மற்றும் நீதி மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். வட மாகாண மக்களின் அடையாளம் மற்றும் கலாசாரத்திற்கேற்ப இந்த நீதிமன்றங்கள் ஸ்தாபிக்கப்படும். வட மாகாண நீதிமன்றங்களில் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்திற்கு மாத்திரமே நிலையான கட்டிடம் இருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார். ஊர்காவற்துறை, சாவகச்சேரி, மல்லாகம், போன்ற பிரதேசங்களில் நீதிமன்றம் இயங்கிய போதி…
-
- 8 replies
- 693 views
-
-
யாழ்க்குடாநாட்டின் முன்னணி ஊடகவியலாளர் என் பரமேஸ்வரனுக்கு கொலை அச்சுறுத்தல் யாழ்க்குடாநாட்டின் முன்னணி ஊடகவியலாளரான என் பரமேஸ்வரன் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினரிடம் முறையிட்டுள்ளார். இன்று காலை யாழ் வேம்படி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா மக்கள் கட்சி அலுவலகத்தில் தான் பலாத்காரமாக பிடித்து தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் குற்றஞ் சாட்டியிருந்தார். யாழ்ப்பாணத்தில் தற்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் கணவர் விஜயகுமாரணதுங்கவின் ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் அமை;பாளராக இருப்பவர் மகிந்த திலக் குமார உடுகம. இவர் வன்னி மற்றும் யாழ்ப்பாணத்தின் அமைப்பாளராக இருக்கின்றார். ஜனாதிபதியினதும் ஜனாதிபதியின் பாரியாரினதும் நெருங்கிய நண்பரான இவர் …
-
- 2 replies
- 868 views
-
-
சனிக்கிழமை, 27, பிப்ரவரி 2010 (12:36 IST) ஈழத்தமிழரின் மறுவாழ்வுக்கு பட்ஜெட்டில் உரிய அறிவிப்புகள் இல்லை: திருமாவளவன் வேதனை ஈழத்தமிழரின் மறுவாழ்வுக்கு இந்திய பொது பட்ஜெட்டில் உரிய அறிவிப்புகள் இல்லாதது வேதனையளிக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசின் பொது நிதிநிலை அறிக்கையில் 5 சதவீத வட்டியில் விவசாயிகள் கடனுதவி பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வரவேற்கத்தகுந்ததும் பாராட்டுக்குறியதுமாகும். மற்றபடி குறிப்பிட்டுச் சொல்லும்படி பாராட்டுக்குரிய அம்சம் ஏதுமில்லையென்பது ஏமாற்றத்தைத் தருகிறது. அத்துட…
-
- 2 replies
- 531 views
-
-
சம்பந்தன் டக்ளசுடன் கூட்டு வைப்பதே பொருத்தமானது தமிழீழ நிருபர் திங்கட்கிழமை, பெப்ரவரி 22, 2010 Sampanthan தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடிப்படை கொள்கைகளை, கோட்பாடுகளை விட்டு கூட்டமைப்பு விலகுவதாக கூறியுள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தவிர பெரும்பாலானோர் கருத்தும் அதுவாக பேசப்படுகின்றது. ஆனால் சம்பந்தன் கனேடிய வானொலிக்கு அளித்த உரையில் மூன்று முக்கிய விடயங்களை குறிப்பிட்டார். முதலாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் அடிப்படை உரிமைகளை விட்டு போகவில்லை என்றார். இரண்டாவது சுலோகம் எழுப்புபவர்களை வேட்பாளராக நிறுத்த முடியாது என கூறினார். அடுத்ததாக படித்தவர்கள் பண்பானவர்கள் செயற்திறன் உடையவர்களை, நம்பிக்கையுடையவர்களை புதிய வேட்பாளராக நிறுத்த போவதாக கூறினார். …
-
- 24 replies
- 2.4k views
-
-
தமிழர் தாயகத்தின் 31 ஆசனங்களுக்காக 1867 வேட்பாளர்கள் போட்டி: சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும்? [ வெள்ளிக்கிழமை, 26 பெப்ரவரி 2010, 17:47 GMT ] [ கார்வண்ணன் ] எதிர்வரும் ஏப்ரல் 8ம் திகதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல், சிறிலங்காவின் தேர்தல் வரலாற்றில் அதிகளவு கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக அமைந்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 19 ஆசனங்களுக்காக 836 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதுவே மாவட்டம் ஒன்றில் அதிகளவு வேட்பாளர்கள் களமிறங்கிய தேர்தலாகும். இங்கு 22 அரசியல் கட்சிகளும், 16 சுயேட்சைக் குழுக்களுமாக மொத்தம் 38 அணிகள் மோதுகின்றன. அம்பாறை மாவட்டம் அதிகளவு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் …
-
- 12 replies
- 810 views
-
-
ஜீ.எஸ்.பீ.பிளஸ் ஆறுமாத காலத்துக்கு கிடைக்கும்:ஜீ.எல்.பீரிஸ் http://www.virakesari.lk/vira/video/video.asp?key_c=899 நன்றி - வீரகேசரி இணையம்
-
- 2 replies
- 814 views
-
-
சுரேஷ் பிரேமச்சந்திரனின் யாழ்.அலுவலகத்தின் மீது தாக்குதல் சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2010 00:08 பி.எம்.முர்ஷிதீன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகத்தின் மீது சற்றுமுன்னர் வெள்ளை வேனில் வந்தவர்கள் கற்களால் தாக்குதல் நடத்தியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. இதனை உறுதிப்படுத்துவதற்காக சுரேஷ் பிரேமசந்திரனுடன் தொடர்ந்தும் தமிழ்மிரர் இணையதளம் முய்ற்சித்துக்கொண்டிருக்கின்றது. இதேவேளை,கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசாவுடன் சற்று முன்னர் நாம் தொடர்புகொண்டோம்.இதுபற்றிய தகவல் இன்னும் தனக்குக்கிடைக்கவில்லை என்று மாவை சேனாதிராசா தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார். …
-
- 12 replies
- 823 views
-
-
யாழ்ப்பாணத்தின் கடல் நீரேரியில் கடல்தொழில் செய்வதற்கு சிறிலங்காப் படையினரால் மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாசையர் குருநகர் பகுதிகளில் இருந்து கடல்தொழிலுக்கு சென்ற கடல்தொழிலாளர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் மீண்டும் கெடுபிடிகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதன்போது கடல்தொழிலுக்கு செல்லும் படகுகள் அதன் வெளியிணைப்பு இயந்திரத்தின் வலு மற்றும் எத்தனை பேர் செல்கிறன்றார்கள் என்ற பெயர்விபரங்கள் சிறிலங்காப் படையினரிடம் ஒப்படைத்துவிட்டே கடல்தொழிலுக்கு செல்ல வேண்டும் என்று படையினரால் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கடல்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளார்கள். போர் நடைபெற்ற காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாடுகள், போர் முடிந்துவிட்டதாக …
-
- 1 reply
- 747 views
-
-
ஆசியாவின் அழகிய தீவுகளில் ஒன்றான சிறிலங்காவின் உள்நாட்டுப் போரில் 80,000 மக்களின் சாவுக்குக் காரணமாக இருந்தது இனப் பகை, வன்முறை மற்றும் முட்டாள்தனமான தேசப்பற்று வெறி என்பனவாகும். அவற்றின் கடைசிப் பொறியையும் அணைத்து விடுவதற்கு இப்போது கிடைத்துள்ளது போன்ற ஒரு சந்தர்ப்பம், அந்த நாட்டின் 62 வருட கால சுதந்திரத்தில் எப்போதுமே கிடைத்ததில்லை. விடுதலைப் புலிகளின் தோல்வியைத் தொடர்ந்து சிங்கள வெற்றி எக்களிப்பு அலையால் கடந்த தை மாதத்தில் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார் ஒரு குடியரசு அதிபர். அவர் தன்னிச்சைப்படி நடப்பது மேலும் மேலும் அதிகரித்தால், மொத்த சிறிலங்கா மக்களுக்கும் துன்பத்தைத் தரக்கூடிய வகையில் - இந்த அருமையான சந்தர்ப்பம் வீணே …
-
- 0 replies
- 867 views
-
-
சிறிலங்கா அரசு அதிகாரிகளை கிழக்கு திமோர் அழைத்துச் செல்லும் அமெரிக்கா [ வெள்ளிக்கிழமை, 26 பெப்ரவரி 2010, 22:13 GMT ] [ கி.வேணி ] ஒரு நாட்டின் நில உரிமை குறித்தான விடயங்களில் தீர்வு காண பயிற்சியளிக்கும் பொருட்டு, சிறிலங்காவின் மத்திய மற்றும் மாகாண அரசுகளைச் சேர்ந்த சுமார் 13 அரசு அதிகாரிகளை ஒரு கல்விச் சுற்றுலா பயணமாக அமெரிக்கா அழைத்துச் செல்கின்றது. இப்பயண திட்டத்தின்படி உள்நாட்டு மோதல்களிலிருந்து மீண்டு கொண்டிருக்கும் நாடான திமோர்-லெஸ்ரே [Timor-Leste]க்கு அந்த அதிகாரிகளை ஏழு நாட்களுக்கு அழைத்துச் செல்ல அனைத்துலக மேம்பாடுகளுக்கான அமெரிக்க நிறுவனம் [The United States Agency for International Development - USAID] திட்டமிட்டுள்ளது. Rebecca Cohn, USAID கல்…
-
- 1 reply
- 855 views
-
-
'டிகோ' வினை வாங்கிய எடிசலாற் நிறுவனம் - பின்னணியில் கோத்தபாய? WRITTEN BY SARA இலங்கையில் இயங்கிவந்த டிகோ கையடக்கத் தொலைபேசி நிறுவனத்தை ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரதான தொலைபேசி வலையமைப்பான எடிசலாற் நிறுவனம் கொள்வனவு செய்ததன் பின்னணியில் பசில் ராஜபக்ச இருப்பதாக தெரியவந்துள்ளது.ஏடிசலாற் நிறுவனம் நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக தமது பணிகளை ஆரம்பித்தது. இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் தொலைத்தொடர்புகளை ஒழுக்குப்படுத்தும் முன்னாள் தலைவர் பிரியந்த காரியப்பெரும சில எதிர்ப்புகளை வெளியிட்டிருந்த போதிலும் அனுச பெல்பிட்ட அந்தப் பதவியில் அமர்த்தப்பட்ட பின்னர் உடனடியாக அதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இந்தக் கொடுக்கல், வாங்கல்களை சட்டரீதியாக மேற்கொள்வதற்காக எ…
-
- 0 replies
- 804 views
-
-
ஈழத்தமிழரின் நிலை – ‘காய்க்கும் மரம்தான் கல்லெறி வாங்கும்’ POSTED BY VANNI ONLINE FRIDAY, FEBRUARY 26, 2010 ‘முள்ளிவாய்க்கால் முடிவுடன் தமிழ் மக்களின் எதிர்காலமே முடிந்துவிட்டது. இனி அவர்களை நடைபிணங்களாக்கிய பின் தாம் நினைத்ததை எளிதாக முடித்து விடலாம்’ என்ற நப்பாசையுடன் இருந்த சிங்கள பௌத்த இனவாத அரசுக்கும், அதற்கு முண்டு கொடுத்து வந்த, இன்னும் கொடுத்து வரும் இந்தியா, சர்வதேச நாடுகள் ஆகியவற்றுக்கும் இன்று ‘கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது’ போன்ற நிலை உருவாகிறது. உலகம் பூராவும் மாவீரர் நினைவு நாள், முத்துக்குமார் முதல் முருகதாசன் வரை தம்உயிரை அர்பணித்த தியாகிகளின் நினைவுநாட்கள் ஆகியவற்றில் முன்னொரு போதும் இல்லாத அளவில் பெருந்திரளாகக் கூடிய புலம்பெயர் மக்களின் எழு…
-
- 0 replies
- 448 views
-
-
கனடாவில் ஈழத் தமிழர்கள் வன்முறையில் ஈடுபடுவர் என்ற அச்சத்தில் கனேடிய அரசாங்கம்: த ஹிந்துஸ்தான் டைம்ஸ் கனடாவில் உள்ள ஈழத் தமிழ் சமூகம் தொடர்பில், கனேடிய அரசாங்கம் எச்சரிக்கையுடன் இருப்பதாக த ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் கடந்த வருடம் மௌனிக்கப்பட்ட பின்னர், அவர்களின் ஆவேசம் நிறைந்த போக்கு, கனடாவில் வன்முறைகளை ஏற்படுத்தும் என்ற அச்சமான சூழ்நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் சுமார் 300,000 ஈழத் தமிழர்கள் வாழ்கின்றனர். இந்தியாவின் பொற்கோவிலில் இருந்த போராளிகளை வெளியேற்றுவதற்காக 1985ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலை போன்ற தாக்குதலை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுமோ என்ற கவலையை கனேடிய பாதுகாப்பு தரப்ப…
-
- 20 replies
- 2.1k views
-
-
இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியலில் கருணாவிற்கும் இடம் வழங்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா, அநுருத்த ரத்வத்தை, முத்து சிவலிங்கம், திரைப்பட நடிகை மாலினி பொன்சேகா ஆகியோரும் தேசியப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். SOURCE : http://www.eelamweb.com
-
- 3 replies
- 1.4k views
-
-
எத்தகைய குற்றச்சாட்டுக்களின் கீழ் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார்? எத்தகைய குறிப்பான குற்றச்சாட்டுக்கள் என்பது பற்றி நான் பேசப் போவதில்லை. ஏனெனில் ஆதாரங்களின் அடிப்படையில் இராணுவ அதிகாரிகளால் குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டு வருகிறது. வழக்குத் தொடுனரின் பணி அது. இந்த நியாயமான ஒரு விசாரணைக்கு உத்தரவாதம் வழங்க முடியும். ஆனால், இதுவரை எத்தகைய குறிப்பான குற்றச்சாட்டுக்களும் இல்லாத நிலையில் இது தனிப்பட்ட பழிவாங்கல் போலத் தெரிகிறதே? அவ்வாறொன்றும் இல்லை. அவர் இராணுவத்தில் இருந்த பொழுது இராணுவத்திற்கு அவர் ஏற்படுத்திய பாதிப்;புக்கள் குறித்து பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கவில்லை. அந்த நிலையிலேயே அவர் அரசியலுக்குள்ளும் பிரவேசித்திருக்கிறார். அவர் அரசியலுக்கு …
-
- 2 replies
- 1k views
-
-
பாராளுமன்றத்திற்கான தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 8 இல் இடம்பெறவுள்ள நிலையில் 225 எம்.பி.க்களைத் தெரிவு செய்வதற்கானப் போட்டிக்களத்தில் 323 அரசியல் கட்சிகளையும் 312 சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த 7686 போட்டியாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.தேர்தல் நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்வது நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 21 அரசியல் கட்சிகளும் 18 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. 858 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 அரசியல் கட்சிகளும் 12 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. இவற்றின் சார்பில் 324 பேர் களம் இறங்கியுள்ளனர். வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 16 கட்சிகளும் 14 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்…
-
- 1 reply
- 515 views
-
-
http://www.france24.com/en/20100204-reporters-sri-lanka-tamil-tigers-civil-war-refugees-civilians-return-army-probation
-
- 3 replies
- 971 views
-
-
ஏராளமான சுற்றுலா பயணிகள் நூலகத்தை விடுப்பு பார்க்கும் ஆர்வத்துடன் அங்கு வருவதாகவும், நூலகத்திற்கு தேவை வாசகர்களே அன்றி பார்வையாளர்கள் அல்ல என்ற தன் வருத்தத்தையும் தலைமை நூலகர் தெரிவித்துள்ளார். யாழ்பாண நூலகத்தின் தலைமை நூலகர் தனபாலசிங்கம் தன்னைச் சந்தித்த The Christian Science Monitor என்னும் ஊடகத்தின் செய்தியாளரிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்பாணத்தில் மீண்டும் கட்டியெழுப்பப்பட்ட தென்கிழக்கு ஆசியாவின் சிறந்த நூலகம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா..? என்னும் கேள்வியுடன் அச்செய்தியாளர் மேலும் தெரிவித்திருப்பதாவது: தமிழ் மக்கள் வாழும் முக்கிய பகுதியான யாழ்ப்பாணத்தில் குண்டுகளால் தகர்த்தெறியப்பட்ட பல கட்டிடங்களை அழியாத நினைவு சின்னங்களாக வி…
-
- 3 replies
- 853 views
-
-
"வரலாறு என்றுமே நேர் கோட்டில் பயணிப்பதில்லை" மே18ஆம் திகதிக்குப் பின்னர் தமிழ் தேசியப் போராட்டத்தில் உண்டாகியுள்ள தலைமைத்துவ வெற்றிடம், தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளதோடு, தமிழர் உரிமைப் போராட்டத்துக்கு எதிரான அவர்களது செயற்பாடுகளும் வலுவாக அதிகரித்து வருகிறது. அதே வேளை, இந்த தலைமைத்துவ வெற்றிடம் தமிழ் மக்கள் மத்தியில் குழப்ப நிலையையும், விரக்தி மனோ நிலையையும் உருவாக்கி வருகிறது. இது சலிப்பான கருத்துக்களுக்கு வழியேற்படுத்துகிறது. சலிப்பான மனோ நிலை போரட்டம் ஒன்றிற்கு தேவையான உளவுரணை தகர்ப்பதற்கு வழியேற்படுத்துகிறது. ஆக்கபூர்வமான சிந்தனை ஓட்டத்திற்கு உரிய இடம் வழங்கப்படாமை இன்றைய தருணத்தில் தமிழ் …
-
- 5 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம் எப்படியிருக்கிறது? இப்பொழுது யாழ்ப்பாணம் எப்பிடியிருக்கு?’ என்று கேட்டார் புலத்திலிருக்கும் நண்பர் ஒருவர். இதற்கு உடனடியாக என்ன பதிலைச் சொல்ல முடியும்? யாழ்ப்பாணத்திற்கு ஆயிரக்கணக்காக சுற்றுலாப் பயணிகளாக வருகின்ற சிங்களவர்களைப் பற்றிச் சொல்வதா? அல்லது யாழ்ப்பாணத்தில் அதிகரித்திருக்கும் டெங்குக் காய்ச்சலைப் பற்றிச் சொல்லவா? அல்லது யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெருகிக் கொண்டிருக்கும் வங்கிகளைப் பற்றியும் பெரும் வணிக நிறுவனங்களைப் பற்றியும் சொல்வதா? அல்லது வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கும் அரைவாசிப் பேரைப் பற்றியோ அல்லது ‘இந்தத் தேர்தல் வந்து இன்னும் ஒரு ஆறு வருசம் எங்களை அலைக்கப் போகிறது’ என்று சொல்லிவ…
-
- 6 replies
- 1.4k views
-
-
சிறி ஜெயவர்த்தனபுரவில் அமைந்துள்ள சிறிலங்கா நாடாளுமன்ற கட்டடத்தக்கு அண்மையில் சபாநாயகரின் வீட்டுக்கு அருகில் உள்ள ஏரியிலிருந்து அழுகிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை மாலை மீட்கப்பட்ட இந்த சடலம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். சடலத்தை இனம் காணுவதில் சிரமமாக உள்ளதாக காவல்துறையினரின் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பாக ஊடகவியலாளர் ஒருவர் இனம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு காணமல்போயுள்ள நிலையில், மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் இன்று மாலை கொழும்பு ஊடகத்துறையினர் வட்டாரங்களில் மிகுந்த பரபரப்பு நிலவியது. நாடாளுமன்றுக்கு அண்மையிலேயே தமிழ் ஊடகவியலாளர் சிவராம் படுகொலை செய்யப்பட்டு அவரது சடலம் வீசப்…
-
- 2 replies
- 1.2k views
-
-
வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட 520 சிறுவர்களுக்கு இலவச கல்வி, தங்குமிட வசதியை யாழ்.பரியோவான் கல்லூரி [சென்.ஜோன்ஸ்] வழங்கியுள்ளது. சிறுவர்களுக்கான திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதற்கு அதிபர் நலன்விரும்பிகளிடம் ஆதரவு கேட்டு வேண்டுகோள் விடுத்து இருக்கின்றார்.விரிவான திட்ட அறிக்கை: +++ ST. JOHN’S COLLEGE JAFFNA CHILDREN / YOUTH SUPPORT PROGRAMME PRIMARILY IN THE INTERNALLY DISPLACED CHILDREN (FROM WANNI) OF SRI LANKA "Lux In Tenebris Lucet" A Request for Support From the Principal St. John’s College to the Alumni and Friends of the College Dear Johnians and Well Wishers, The following pages …
-
- 6 replies
- 1.5k views
-
-
இலங்கை இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிடையிலான போர் இடம்பெற்ற காலப்பகுதியில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பல நோயாளர்களுக்கு தொற்று, குறிப்பாக எலும்பில் தொற்று ஏற்பட்டிருக்கின்றன. எறிகணைச் சிதறல்களாலும் துப்பாக்கி ரவைகளாலும் ஏற்பட்ட காயங்கள் பல இன்னமும் மாறவில்லை. யுத்த காலத்தில் காயங்களில் அடிக்கடி ஏற்படும் தொற்றுக்கள்: நோயாளர்களைப் பரிசோதித்துக்கொண்டிருந்த எல்லைகளற்ற மருத்துவர் குழு [MSF] இனது எலும்புசார் [Orthopedic] சத்திரசிகிச்சை நிபுணரான மருத்துவர் இங்க ஒஸ்மர் [Dr. Inga Osmers] குறித்த ஒரு நோயாளியின் கட்டில் இருகே சென்று அவரது எக்ஸ்-ரேயினை அவதானித்தார். தசைக்குக் கீழே, எலும்புடன் ஒட்டியதாக ஒரு தகடு இருப்பது அதில் தெளிவாகத் தெரிந்தது. …
-
- 1 reply
- 554 views
-