Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 37 கண் சத்திரசிகிச்சை: 2 பேர் முற்றாக பார்வையை இழந்தனர் ரஞ்சித் ராஜபக்ஷ நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நடத்தப்பட்ட 37 கண் சத்திரசிகிச்சைகளில் 17 பேர் பகுதியளவில் பார்வையிழந்துள்ளதுடன் இருவர் பூரண பார்வை இழந்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வைத்தியசாலையில் வியாழக்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது கண் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் கனிஷ்க மேற்குறிப்பிட்ட விடயத்தை குறிப்பிட்டார். சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் வந்தாலும் உண்மை நிலவரத்தை இங்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற அவர், கண்களுக்கு செலுத்தப்பட்ட மருந்துகள் வைத்த…

    • 1 reply
    • 290 views
  2. அமெரிக்க தூதுவர் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுகின்றார் - வெளிவிவகார அமைச்சிடம் அமைப்புகள் கடிதம் 31 AUG, 2023 | 05:38 PM இலங்கையில் அமெரிக்க தூதுவரின் செயற்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவிக்கும் கடிதமொன்றை தேசிய அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலர் வெளிவிவகார அமைச்சிடம் கையளித்துள்ளனர். தேசிய அமைப்புகளின் பிரதிநிதிகளே இந்த கடிதத்தை வெளிவிவகார அமைச்சிடம் கையளித்துள்ளனர். அமெரிக்க தூதுவர் அதிகளவில் இலங்கையின் உள்விவகாரங்களில் செல்வாக்கு செலுத்துகின்றார் எனவும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அரசியல் செயற்பாடுகள் அமைந்துள்ளன எனவும் தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியின் நுவான் பலண்டுவாவ தெரி…

    • 4 replies
    • 435 views
  3. காத்தான்குடி பூர்வீக நூதனசாலை மூடப்படுகிறது! 31 AUG, 2023 | 03:08 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காத்தான்குடி புராதன நூதனசாலை தற்போது உரிய பராமரிப்பின்றி, குப்பைகள் தேங்கிய நிலையில் காணப்படுகிறது. இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தை, வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட இந்த பூர்வீக நூதனசாலைக்கு நாடெங்கிலும் இருந்து பெருமளவினர் அன்றாடம் சென்று பார்வையிடுகின்றனர். இந்த நூதனசாலையை பார்வையிடுபவர்களுக்கான நுழைவுச்சீட்டுகளும் அங்கே வழங்கப்படுகின்றன. பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் இலங்கை முஸ்லிம்களுடன் தொடர்புபட்ட ஆன்மிகம், அறிவியல், வர்த்தகம், வழிபாடு…

    • 9 replies
    • 712 views
  4. 31 AUG, 2023 | 10:38 PM எரிபொருள் விலைகள் இன்று வியாழக்கிழமை (31) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்படுகின்ற நிலையில், அதன் புதிய விலை 361 ரூபாவாகும். 95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 42 ரூபாவினால் அதிகரிக்கப்படுகின்ற நிலையில் அதன் புதிய விலை 417 ரூபாவாகும். ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கப்படுகின்ற நிலையில், அதன் புதிய விலை 341 ரூபாவாகும். சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 01 ரூபாவினால் அதிகரிக்கப்படுகின்ற நிலையில், அதன் புதிய வி…

  5. இலங்கை முழுவதும் செயற்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மானிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை இந்திய அரசு அதிகரித்துள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கூற்றுப்படி, இலங்கையின் பொருளாதார நிலப்பரப்பில் விரைவான மாற்றங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா-இலங்கை உயர் தாக்க சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் (HICDP) கட்டமைப்பின் கீழ் செயற்படுத்தப்பட்டு வரும் 9 தற்போதைய திட்டங்களின் விடயத்தில் நிதி ஒதுக்கீடு 50% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த 9 திட்டங்களுக்கான ஒட்டுமொத்த நிதி அர்ப்பணிப்பு அதிகரிப்புக்குப் பிறகு தற்போது கிட்டத்தட்ட 3 பில்லியன் ரூபாவாக உள்ளது. இந்தத் திட்டங்கள் கல்வி மற்றும் சுகாதாரம் முதல் விவசாயம் வரையிலா…

  6. Published By: DIGITAL DESK 3 01 SEP, 2023 | 03:33 PM இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளத்தினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை (01) காலை 10.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்ட நிறைவில் கடற்தொழிலாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு யாழ் மாவட்ட செயலரிடம் ஒப்படைக்கப்பட்டது. குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்டத்தில் 23,154 கடற்றொழில் புரியும் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் யாழ் மாவட்ட கடற் பகுதியில் …

  7. 31 AUG, 2023 | 08:36 PM (நா.தனுஜா) வட- கிழக்கில் குருந்தூர், தையிட்டி, செட்டிக்குளம், நாவற்குழி போன்ற இடங்களில் அரச அனுசரணையுடன் காணி அபகரிப்புக்கள் இடம்பெறுகின்றன என்ற உண்மை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கையின் ஊடாக வெளிக்கொணரப்படவேண்டும் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரையான ஒருமாதகாலத்துக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்த…

  8. கஜேந்திரகுமாருக்கு எதிரானஅச்சுறுத்தல்கள் - மனித உரிமை ஆணையாளர் கவனம் செலுத்தவேண்டும் என உருத்திரகுமாரன் வேண்டுகோள் 01 Sep, 2023 | 10:36 AM இலங்கை பாராளுமன்றத்தின் தமிழ் உறுப்பினரொருவருக்கெதிரான அவரது அரசியல் செயற்பாடுகள் காரணமான கடும் அச்சுறுத்தலொன்று தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் உயர்ஸ்தானிகருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இலங்கை பாராளுமன்றத்தின் தமிழ் உறுப்பினரொருவருக்கெதிரான அண்மைய அச்சுறுத்தலை உங்கள் கவனத்துக்கு கொண்டு வரும் வகையில் நான் இதை எழுதுகிறேன். வட மாகாணத்திலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரக…

  9. Published By: RAJEEBAN 30 AUG, 2023 | 06:11 PM வலிந்து காணாமலாக்கப்படுதல் குறித்த பாரம்பரியத்திற்கு தீர்வை காண்பது வெறுமனே நீதியுடன் தொடர்புபட்ட விடயம் மாத்திரமில்லை முன்னேற்றம் பேண்தகு அபிவிருத்தி போன்ற பாதையை இலங்கை உருவாக்குவதற்கும் மிகவும் அவசியமானது என ஐக்கியநாடுகளின் இலங்கைக்கான நிரந்தரவதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ரூ பிரான்ஸ் தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, உலகம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை குறிக்கும் நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை இந்த ஈவிரக்கமற்ற குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் - தங்கள் அன்புக்குரியவர்கள் எப்படி உள்ளனர் அவர்களுக்கு என்ன நடந்தது என…

  10. 30 AUG, 2023 | 09:07 PM (நா.தனுஜா) இலங்கை படையினருக்கு அவசியமான பயிற்சிகளை வழங்குவதில் இந்தியா எப்போதும் மிகவலுவான உந்துசக்தியாகத் திகழ்வதாகப் பாதுகாப்புச்செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கும் இலங்கை பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான தொடர்புகளின் 50 வருடப்பூர்த்தியைக் கொண்டாடும் வகையிலான நிகழ்வு கடந்த திங்கட்கிழமை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்புச்செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் இருநாடுகளினதும் இராணுவத்தினருக்கு இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு என்பன நினைவு…

  11. Published By: RAJEEBAN 28 AUG, 2023 | 09:57 AM இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலத்தை கட்டுவதற்கு முன்னர் அதுகுறித்து சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். இரு நாடுகளிற்கும் இடையில் பாலமொன்றை கட்டுவதென்றால் அது குறித்து மக்களின் கருத்தினை அறிவதற்கு சர்வஜனவாக்கெடுப்பைநடத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். வரலாறு முழுவதும் ஆட்சியாளர்களே அந்நியர்களிற்காக நாட்டிற்கு துரோகமிழைத்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் எங்கள் நாட்டின் பகுதிகளை பல நாடுகளிற்கும் சக்திகளுக்கும் விற்பனை செய்கின்றனர் நாட்டிற்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய பல முட்டாள்தனமான மு…

  12. Published By: DIGITAL DESK 3 31 AUG, 2023 | 03:09 PM திருகோணமலை வெருகல் - நாதனோடை பகுதியில் மணல் அகழ்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வெருகல் மக்கள் இன்று வியாழக்கிழமை (31) நாதனோடை பகுதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். வெருகல் - நாதனோடை பகுதியில் 1000 கியூப் மணல் அகழ்வதற்கான அனுமதி தனியார் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவ்விடத்தில் மணல் அகழப்பட்டால் அது வெருகல் ஆற்றின் அணைக்கட்டை உடைக்கும் அபாயம் இருப்பதாகவும், இதனால் மக்களுடைய உடமைகள், வாழ்வாதாரம் என்பன பாதிக்கும் என்பதனால் அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினமும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 28…

  13. ஜனாதிபதி தெரிவிக்கும் நகைச்சுவையான கருத்தை நிறுத்தவும் இந்த நாட்டில் காணாமல் போனவர்கள் என்று ஒன்று இல்லை எனவும் அவர்கள் வெளிநாடுகளில் இருப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். எனவே நீங்கள் ஜனாதிபதி தானே அவர்களை வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரமுடியும், இவ்வாறான நகைச்சுவையை நிறுத்துங்கள். காணாமல் போனவர்களுக்கு இந்த நாட்டில் என்றுமே நீதியை பெற்றுக் கொள்ள முடியாது என சந்தியா பிரதீப் எக்கினா கொட தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று (30) சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தையிட்டு இடம்பெற்று சர்வதேசமே எமக்கு நீதிவேண்டும் என கோரிய ஆர்பாட்ட ஊர்வலத்தில் கடத்தப்பட்டு காணாமல் போன…

  14. இந்தியாவின் அதானி நிறுவனத்திடம் மேலும் ஒரு திட்டம் கையளிக்கப்படவுள்ளது! written by adminAugust 31, 2023 மன்னாரிலும் கிளிநொச்சி – பூநகரியிலும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டமொன்றையும் மின் விநியோகக் கட்டமைப்பொன்றையும் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக, அண்மையில் தயாரிக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரமொன்றை மேற்கோள்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார். 442 மில்லியன் டொலர் முதலீட்டில் மன்னாரிலும் பூநகரியிலும் 500 மெகாவாட் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டங்களை அமைப்பதற்காக இலங்கைக்கும் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை 2022 ஆம் ஆண்…

  15. பௌத்த மதத்திற்கே முன்னுரிமை வழங்குவேன் : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க! பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கும் வகையிலேயே அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி, அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க தேரர்களான, ஆணமடுவே தம்மதிஸ்ஸி தேரர் மற்றும் வெடருவே உபாலி தேரர் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், “நாட்டின் பொருளாதார நிலைமையை பார்க்கும் போது, வங்குரோத்து நாடு என்ற நிலையிலிருந்து நாம் மீண்டு வருகிறோம். வெளிநாட்டு கடன் நீடிப்பு வேலைத்திட்டத்தின் தொடர்ச்சியாக நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமான வேலைத்திட்டங்கள் பலவற்றையும் ஆரம்பித்துள்…

  16. 31 AUG, 2023 | 09:11 AM 28 ஆம் திகதி முதல் இலங்கைக்கு மேல் நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்கின்றமையால் நாட்டின் பலப் பிரதேசங்களில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் எனவும், எதிர்வரும் 07 ஆம் திகதி வரை இந்த காலநிலை தொடரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று வியாழக்கிழமை (31) மதியம் 12.11 மணியளவில் அடப்பங்குளம் (வவுனியா மாவட்டம்), தூதுவெவ (அநுராதபுரம் மாவட்டம்) மற்றும் நிலாவெளி (திருகோணமலை மாவட்டம்) ஆகிய பிரதேசங்களில் சூரியனின் உச்சம் மிகவும் அதிகமாக காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த நாட்களில் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்…

  17. 30 AUG, 2023 | 09:46 PM நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் பெரும் சேவையாற்றிவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் ஆனமடுவே தம்மதிஸ்ஸி தேரர் தெரிவித்தார். துரதிஷ்டவசமான நெருக்கடிக்கு முகம்கொடுத்த இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதி முன்னெடுக்கும் முயற்சிகள் தெடர்பில் சிலருக்கு புரிதல் இல்லாமல் இருப்பது கவலைக்குரியதாகும் என்றும், நாட்டிற்காக ஜனாதிபதி முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்திற்கு மகா சங்கத்தினரின் ஆசிர்வாதம் உறுதியாக கிட்டும் என்றும் அவர் தெரிவித்தார். …

  18. கொழும்பு சிங்களவர்களின் தலைநகரம் – யாரும் உரிமை கோர முடியாது : கம்மன்பில வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம் என்றால் கொழும்பு சிங்களவர்களின் தலைநகரம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை சிங்கள பௌத்த நாடு. இந்த நாட்டில் எந்த இடத்தையும் தமிழர்களுக்குச் சொந்தம் என்று தமிழ் அரசியல்வாதிகள் உரிமை கோர முடியாது. வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம் அல்ல. அங்கு மூவின மக்களும் வாழ்கின்றார்கள். இந்நிலையில், மூவின மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கத் தமிழ் அரசியல்வாதிகள் முயல்கின்றார்கள். இ…

    • 17 replies
    • 1.4k views
  19. இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடும்! அச்சுறுத்திய பௌத்த பிக்கு

    • 10 replies
    • 1k views
  20. லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களுக்கு தென்னிலங்கையில் சிறப்பு விருது வழங்கி கௌரவிப்பு! தகவல் தொடர்புத் துறையில் அழியாத புகழை ஏற்படுத்தியுள்ள சுபாஸ்கரன், இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத தயாரிப்பாளாராகவும் இருந்து வருகிறார். லைக்கா குழுமத்தின் தலைவர் கலாநிதி அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் விஷ்வ கீர்த்தி, ஸ்ரீ அபிமான, ஸ்ரீஜனரஞ்சன தேசாபிமான்ய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த நிகழ்வு வணக்கத்துக்குரிய மகா சங்கத்தினரின் முன்னிலையில், இன்று பிற்பகல் வரலாற்று சிறப்பு மிக்க மாத்தறை வெஹேரே ஸ்ரீ பூர்வராம விகாரையில் இடம்பெற்றிருந்தது. சிறந்த சேவை, உள்ளார்ந்த திறமை மற்றும் தகுதியான நடத்தை ஆகியவற்றை அடிப்பட…

  21. 29 AUG, 2023 | 08:04 PM (இராஜதுரை ஹஷான்) இலங்கையையுடன் இந்தியாவை இணைக்கும் வகையில் பாலம் நிர்மாணிக்கும் யோசனை நாட்டின் அரசியலமைப்பை சவாலுக்குட்படுத்தும் பிற நாட்டுகளுடன் இலங்கையை இணைக்கும் வகையில் பாலம் நிர்மாணித்தால் இலங்கை ஒரு தீவு நாடு என்ற நிலையில் இருந்து நீக்கப்படும். ஆகவே இவ்விடயம் குறித்து சட்ட நிபுணர்கள் விசேட கவனம் செலுத்தி நாட்டு மக்களுக்கு உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார். நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு …

  22. சீனக்கடன்களை மீளச்செலுத்துவதற்கே அமெரிக்க நிதியுதவியைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் : அதனை தமது மக்கள் விரும்பமாட்டார்கள் என்கிறார் அமெரிக்க செனெட் சபை உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலென் 30 AUG, 2023 | 09:03 PM (நா.தனுஜா) இலங்கையுடனான கடன்மறுசீரமைப்புக்கு சீனா இணக்கம் தெரிவிக்காமை பிரச்சினைக்குரிய விடயமாக இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்க செனெட் சபை உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலென், எனவே இலங்கைக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்கும் பட்சத்தில், அந்த நிதியை சீனாவின் கடன்களை மீளச்செலுத்துவதற்கே பயன்படுத்தவேண்டியிருக்கும் என்றும் அதனை அமெரிக்க மக்கள் விரும்பமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்ற…

    • 0 replies
    • 176 views
  23. 30 AUG, 2023 | 01:22 PM வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற சிறுதொழில் முயற்சியாளர்களுக்கென ஒரு சபை அமைக்கப்பட்டு, அது அங்கீகாரம் பெறப்பட்ட ஒரு நிறுவனமாக மாற்றப்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். 'யாழ் முயற்சியாளர் –2023' விற்பனைக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை (29) ஆரம்பமானது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே மாவட்ட செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கூறுகையில், கடந்த மூன்று மாதங்களாக இந்த சுற்றாடலிலே பிரதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான ஒரு சந்தைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. …

  24. வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பமாகவுள்ளது. நாளை பிற்பகல் 3:00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மகோற்சவம் எதிர்வரும் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணிக்கு காலை திருவிழாவும், 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிக்கு பூங்காவனத் திருவிழாவும், 26ஆம் திகதி காலை 8:00 மணிக்கு கைலாச வாகனத் திருவிழாவும், 29ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு சப்பறத் திருவிழாவும், 30ஆம் திகதி காலை 8:00 மணிக்கு தேர்த் திருவிழாவும், 31ஆம் திகதி தீர்த்த திருவிழாவும் இடம் பெறவுள்ளன. பக்தர்களின் வசதி கருதி விசேட போக்குவரத்து, பாதுகாப்பு, சுகாதார வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உற்சவகாலங்களில் ஆ…

  25. இலங்கையின் இரண்டு நீதிமன்றங்களினால் விமானப் பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடியகல்வு கருமபீடத்திற்கு தெரியாமல், பதுங்கி இந்தியாவிற்கு தப்பிச் சென்றிருந்த நிலையில், குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் மீண்டும் அவரை அழைத்து வந்துள்ளனர். அவர் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் 45 வயதானவரே இவ்வாறு மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக யாழ்.மாவட்டத்தின் காங்கேசன்முறை மற்றும் மல்லாகம் நீதவான் நீதிமன்றங்களால் விமான பயணத் தடைகள் விதிக்கப்பட்டு, அவர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடைசெய்திருந்தது. இருந்த போதிலும், செவ்வாய்க்கிழமை (29) இரவு 11.45 மணியளவில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.