Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மீண்டும் ஜனாதிபதியாக ரணில் ? மீண்டும் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரையில் இறுதி தீர்மானம் எடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஊடகப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து நான் தீர்மானிக்கவில்லை. அது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இலங்கையை வங்குரோத்து நிலையிலிருந்து நீக்குவதே எனது முதன்மையான நோக்கம், அதன் பின்னர் நான் முடிவு செய்வேன். கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பொருளாதாரம் தொட…

  2. 14 NOV, 2023 | 05:15 PM கட்டுநாயக்க விமான நிலையத்தில் தானியங்கி கடவுச்சீட்டு பரிசோதனை இயந்திரங்களை நிறுவும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை 10.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்தில் நடைபெற்றது. கட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்தில் பயணிகளிடத்தில் ஏற்படும் நெரிசல்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் , ஏர்போர்ட்ஸ் மற்றும் ஏர்லைன்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆகியவை இந்த இயந்திர திட்டத்திற்கான நிதி முதலீட்டை வழங்கியுள்ளன. இந்த இயந்திரங்கள் மூலம் பயணிகள் தங்கள் இருக்கைகளை தேர்ந்தெடுக்கவும் போர்டிங் பாஸ் முத்திரையிடுவதற்கும் பயண பையை …

  3. 14 NOV, 2023 | 05:02 PM மன்னார் மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் கனிய மணல் அகழ்வு குறித்தும் கனிய மண் அகழ்வை நிறுத்த அரசு மற்றும் உரிய அமைப்புக்களும் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் மன்னார் மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் இந்த மாவட்டம் முகம் கொடுக்கின்ற பிரச்சனையாக கனிய மணல் அகழ்வு காணப்படுகின்றது. காற்றாலை மின்சாரம் அதற்கு அப்பால் பல்வேறு பிரச்சின…

  4. பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷ சகோதர்கள் காரணம் – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரே காரணம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஸ்மன், நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, பி.பி.ஜயசுந்தர, இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபை உறுப்பினர்கள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட குழுவினரால் தாக்கல் செய்யப்பட்…

  5. காசாவில் போர்நிறுத்தம் அவசியம் என வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் ! காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் அவசியம் என தெரிவித்து ஐநா பொதுச்செயலாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 159 பேர் கடிதம் அனுப்பியுள்ளனர். காசா மீதான இஸ்ரேலிய கொடூரமான தாக்குதல், மருத்துவமனைகளில் கண்மூடித்தனமான தாக்குதல் என்பன சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு போர்க்குற்றம் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகவே சர்வதேச சட்டங்களை அனைத்து நாடுகளும் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 225 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில் 159 பேரின் கையொப்பத்துடன் ஐநா பொதுச்செயலாளருக்கு குறித்த கடிதம் அனுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.…

    • 4 replies
    • 326 views
  6. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்கள் வருடத்திற்கு ஒரு முறை தவறாமல், கண் பரிசோதனையை செய்து கொள்ளுமாறு தேசிய கண் நிபுணர்கள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் மங்கள தனபால இந்த வேண்டுகோளை முன்வைத்தார். நாட்டின் சனத்தொகையில் 3 மில்லியன் பேர் நீரிழிவு நோயாளிகளாக கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.அவர்களில் 3 இலட்சம் பேர் பார்வையை இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/281160

  7. தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தலை நிறுத்துங்கள்! சர்வதேசம் அழுத்தம். இலங்கையில் பணியாற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் அரச அடக்குமுறையில் இருந்து விடுபட்டும் அச்சமின்றியும் செயலாற்ற அனுமதிக்கப்பட வேண்டும் என, அமெரிக்காவில் செயற்படும் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு அமைப்பு சி பி ஜே ( CPJ) அரசிடம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து குறித்த அமைப்பின் ஆசிய நிகழ்ச்சித் திட்டங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் பெஹ் லி யீ கருத்துத் தெரிவிக்கையில்” “இலங்கை அதிகாரிகள் உடனடியாக தமிழ் ஊடகவியலாளர்களான சசிகரன் புண்ணியமூர்த்தி மற்றும் பாலசிங்கம் கிருஷ்ணகுமார் ஆகியோர் மீதான அனைத்து அடக்குமுறைகளையும் கைவிட்டு, அவர்கள் சுதந்திரமாக செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதை உறுதி செய்ய …

  8. ஈஸ்டர் தாக்குதல் : முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செலுத்திய தொகை வெளியானது! ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட தரப்பினரால், இதுவரை 3 கோடியே 68 இலட்சத்து 25 ஆயிரத்து, 88 ரூபாய் நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் காவிந்த ஜயவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவினால் விசாரணை நடத்தப்பட்டு,…

  9. குஷ்பு இலங்கை வரக் கூடாது; புலி ஆதரவாளர்கள் எதிர்ப்பு ‘ஸ்டார்’ நிகழ்ச்சிக்காக இலங்கை செல்ல உள்ள நடிகை குஷ்புவுக்கு, விடுதலை புலி ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன், தமிழக திரைப்பட கலைஞர்கள் அவ்வப்போது இலங்கை சென்று, கலை நிகழ்ச்சிகள் நடத்துவது வாடிக்கை. கடந்த, 2009ல் விடுதலை புலிகள் அமைப்பு முழுமையாக முடக்கப்பட்ட பின், திரைப்பட கலைஞர்கள் இலங்கை செல்வது படிப்படியாக குறைந்தது. அதற்கு அங்கு நிலவிய குழப்பமான அரசியல் சூழலே காரணம். சமீப காலமாக கலை நிகழ்ச்சிகளுக்கு செல்லும் திரைப்பட கலைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு மாதத்துக்கு முன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், கொழும்பில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே கலை நிகழ்ச்சி ந…

  10. ஆதரிக்கும் ஆனால் ஆதரிக்காது: மஹிந்த பதில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) இன்னும் முடிவெடுக்கவில்லை என கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கட்சி இது குறித்து விரைவில் முடிவெடுக்கும் என நேற்று (13) தெரிவித்தார். SLPP தம்மால் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிரேரணைகளை ஆதரிக்கும் என்றும், ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை ஆதரிக்காது என்றும் ஊடகங்களுக்கு நேற்று (13)கருத்து தெரிவித்த போது கூறினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியுடன் வரவு- செலவு திட்ட முன்மொழிவுகள் பற்றி கலந்துரையாடியதா என வினவியபோது, தான் அவ்வாறு எந்தவொரு கலந்துரையாடலிலும் கலந்து கொள்ளவில்லை என்றும், கட்சியில் உள்ள மற்றவர்கள் அத்தகைய கலந்துரையாடலில் கலந்…

    • 1 reply
    • 377 views
  11. Published By: RAJEEBAN 14 NOV, 2023 | 10:27 AM கொக்குத்தொடுவாயிலும் எதிர்காலத்தில் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் மனித புதைகுழி அகழ்வில் ஈடுபடவுள்ளவர்களிற்கு உதவியாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தகட்டு இலக்கங்களும் சீருடைகளும் எனும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது வட இங்கையின் போர்நடந்த பகுதியில் நீர்வழங்கல் பணிக்காக தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் மனிதப் புதைகுழி ஒன்றினை கடந்த 2023 யூன் 29 அன்று கண்டுபிடித்தார்கள். 1990கள் முதல் இப்பகுதியில் பல இராணுவ முகாம்கள் அமைந்திருந்தன. அவர்கள் உடனடியாகவே முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு தகவல்தெரிவித்தார்கள். ந…

  12. Published By: DIGITAL DESK 3 14 NOV, 2023 | 09:46 AM சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த விமானம் நிலவும் மோசமான வானிலையால் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்காது, மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு திரும்பி சென்று தரையிறங்கி உள்ளது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்ட விமானமே, யாழில் தரையிறங்காது மீள சென்னைக்கு திரும்பி இருந்தது. குறித்த விமானத்தில் 24 பயணிகள் பயணித்ததாகவும், அவர்களுக்கான மாற்று பயணச்சீட்டுகள் வழங்கி மாற்று பயண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/1692…

  13. குழுக்களுக்கிடையில் மோதல்; போர்க்களமாக மாறிய உரும்பிராய் வீதி! தீபாவளி நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை உரும்பிராயைச் சேர்ந்த இளைஞர் குழுவுக்கும், ஏழாலையைச் சேர்ந்த இளைஞர் குழுவுக்குமிடையில் ஏற்பட்ட மோதலில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காகச் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணியளவில் உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்துக்கு அருகில் பலாலி வீதியில் நின்றிருந்த உரும்பிராயைச் சேர்ந்த இளைஞர் குழுவுக்கும் வீதியால் ஹன்ரர் ரக வாகனத்தில் பயணித்த ஏழாலையைச் சேர்ந்த இளைஞர் குழுவுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து ஹன்ரர் ரக வாகனத…

  14. Freelancer / 2023 நவம்பர் 13 , மு.ப. 01:24 - 0 - 23 இலங்கையின் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் அகதிகள் போர்வையில் தமிழகத்தில் பதுங்கி இருப்பதற்காக படகு மூலம் தனுஷ்கோடி வந்திறங்கிய நிலையில் கைது செய்த மரைன் பொலிஸார் அவரை சென்னை புழல் சிறையில் தடுத்து வைத்துள்ளனர். தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் அந்நிய நபர்கள் நடமாட்டம் மற்றும் கடத்தல் தடுப்பு தொடர்பாக ரோந்து பணியில் ராமேஸ்வரம் மரைன் பொலிஸார், சனிக்கிழமை (11) காலை ஈடுபட்டு வந்தனர். அப்போது தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் மரைன் பொலிஸாரை கண்டதும் தப்பியோட முயன்ற இலங்கை நபர் ஒருவரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்துள்ளா…

  15. நிதர்ஷன் வினோத் துயிலுமில்லத்தில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற மாவட்ட செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கோரியுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் மாவீரர் துயிலுமில்லங்களில் அதன் வளாகத்துள் தங்குமிடங்கள் அமைத்து நிலை கொண்டுள்ள இராணுவத்தினரால் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நினைவு தின நாட்களிலும் பொது நினைவேந்தல் தினத்திலும் தங்களின் கவலைகள் தீர நினைவு கொள்ள முடியாது துன்பப்படுகின்றனர். யுத்தம் முடிந்து 14 ஆண்டுகள் கடந்தும் நினைவேந்தலில் பூரண சுதந்திரம் கிடைக்காமல் பல்வேறு இராணுவ கெடுபிடிகளுக்குள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அவதியுறுகின்றனர். ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு அமைவாக நினைவேந…

  16. யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் சுமார் 4 ஆயிரம் நாய்களுக்கு விசர் நோய் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்னர். யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட 08 பொது சுகாதார பரிசோதகர் பிரிவிலும் உள்ள வளர்ப்பு நாய்கள் மற்றும் வீதியில் கட்டாக்காலி நாய்களாக திரிந்த நாய்கள் என 3ஆயிரத்து 983 நாய்களுக்கு ஏ.ஆர். வி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேவேளை 290 பெண் நாய்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். யாழ்.மாநகர எல்லைக்குள் 4 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி | Virakesari.lk

  17. காணாமற் போனோரின் உறவினர்களுக்கு இழப்பீடு! வடக்கு மற்றும் கிழக்கில் காணாமற் போனவர்களுக்கான இழப்பீடை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதற்காக மேலும் 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்து உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது யாழ்ப்பாணம் பூநகரி நகர் அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், யாழ்ப்பாணத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கான அடிப்படை பணிகளுக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் …

  18. Published By: VISHNU 13 NOV, 2023 | 03:16 PM அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மறுசுழற்சி நிலையத்துக்கு அருகாமையில் தனியன் யானை ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டதை அடுத்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த யானையை மீண்டும் காட்டுக்கு துரத்தி அடித்துள்ளனர். குறித்த கழிவு கொட்டும் இடத்துக்கு வந்த தனியன் யானை வீதிகளில் செல்வோரை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தது. இதனையடுத்து செயற்பட்ட அதிகாரிகள் யானையை அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைளை துரிதமாக முன்னெடுத்தனர். அண்மைக் காலங்களில் யானை – மனித மோதலால் யானைகளும் மனித உயிர்களும் இழக்கின்ற சந்தர்ப்பங்கள்…

  19. யாழ்.பல்கலைக் கழக நினைவு தூபி விவகாரம்; ஊழியருக்கு எதிராக பேராசிரியர்கள் முறைப்பாடு. யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பாக முகநூலில் பதிவிட்ட பல்கலைக்கழக ஊழியர் ஒருவருக்கு எதிராக பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவந்தவரும், தற்பொழுது கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் கடமையாற்றிவரும் நபருக்கு எதிராகவே இணைய வழி ஊடாக பொலிஸ் மா அதிபருக்கும்( Tell To IGP), யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் குறித்த நபரை காங்கேசன்துறையில் உள்ள பொலிஸாரின் தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலகத்துக்க…

  20. யாகப்பர் ஆலய படுகொலை நினைவேந்தல்! adminNovember 13, 2023 யாழ்ப்பாணம் குருநகர் புனித யாகப்பர் ஆலயம் மீதான விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. ஆலயத்தில் காலை திருப்பலியின் நிறைவில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. அதன் போது உயிரிழத்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் சுடரேற்றி , மலர் தூபி அஞ்சலி செலுத்தினர். கடந்த 1993ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி காலை திருப்பலி வழிப்பாட்டுக்கு மக்கள் கூடியிருந்த வேளை, இலங்கை விமான படையின் “சுப்பர் சொனிக்” விமானங்கள் ஆலயத்தின் மீது குண்டு வீசியதில் ஆலயத்தில் வழிப்பாட்டில் ஈடுபட்டிருந்த 08 வயது சிறுமி உள்ளிட்ட 13 பேர் படுகொலை …

  21. 12 NOV, 2023 | 01:53 PM (எம்.வை.எம்.சியாம்) கடன் வழங்கி எம்மை நசுக்கி இந்து சமூத்திரத்தின் மூலோபாய நன்மைகளை பெற்றுக்கொள்ளவே மேற்கத்தேய நாடுகள் முயற்சிக்கின்றன. இந்த கடன்கள் மூலம் அபிவிருத்தி செய்ய சந்தர்ப்பம் கிடைத்த போதிலும் அவ்வாறான ஒன்று தேவையில்லை. இதுவும் பொருளாதார வங்குரோத்து நிலைக்கு மற்றொரு காரணம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். சர்வதேச கொள்கைகளை உருவாக்கும் போது இது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் சர்வதேச அரங்கில் எமது கோட்பாடுகளுக்கு அமைய ஆற்றல் மிக்க அடையாளத்தை உருவாக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன…

  22. 12 NOV, 2023 | 04:57 PM மாணவனில் செவிப்பறை பாதிக்கப்படும் வகையில் தாக்கிய சக மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். நால்வரில் ஒருவர் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் சிறுவர் சீர்திருத்த பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். ஏனைய மூவரும் இன்று மாலை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். கடந்த புதன்கிழமை மாலை யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நகரில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 13 வயதுடைய மாணவனே தாக்கப்பட்டுள்ளார். அவரது செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் மு…

  23. முல்லைத்தீவில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் தயாராகின்றன! November 12, 2023 முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களும் தயாராக ஆரம்பித்துள்ளது. இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் செய்வதற்கான சிரமதான பணிகள் தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினரால் இன்று (11) ஆரம்பிக்கப்பட்டது. முன்னதாக மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி மலர்வணக்கம் இடம்பெற்றதை தொடர்ந்து சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாண்டும் கார்த்திகை 27 மாவீரர் நாள் உணர்வு பூர்வமாக இடம்பெறும் எனவும் அனைத்து மாவீரர் பெற்றோர் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறும் முன்னாயத்த பணி…

  24. யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி! யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி எதிர்வரும் 8ம் திகதி முதல் 12ம் திகதி வரை இடம்பெறவுள்ளது, ‘யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2023’ என்ற தலைப்பில், யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தினால் நடாத்தப்படும் இந்த போட்டியில் 800க்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் சகல பாகங்களில் இருந்து மாத்திரம் அல்ல தமிழ்நாடு உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச தரத்தில் நடத்தப்படும் சதுரங்க போட்டியில் 150 இற்கு மேற்பட்டவர்களுக்கு பரிசு கிடைக்கும் விதமாக வரையறுக்கப்பட்டு…

    • 1 reply
    • 327 views
  25. அடுத்த ஆண்டுக்கான (2024) ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்ட உரை) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாளை (13) நண்பகல் 12.00 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி நிதி அமைச்சராக வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்கிறார். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை (14) ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஏழு நாட்களுக்கு (ஞாயிறு தவிர்ந்த) விவாதம் நடைபெறும் என பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் திருமதி குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார் . வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இம்மாதம் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இம்மாதம் 22ஆம் திகதி புதன்கிழமை முதல் அடுத்த மாதம் 13ஆம் தேதி …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.