Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 21 OCT, 2023 | 11:00 AM (எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இலங்கையில் இருந்து காஸாவில் போர் நிறுத்தத்தை கோருவது ஆச்சரியமாக இருக்கின்றது பயங்காரதவாதம் என்ற பெயரில் இனப் படுகொலைகளே அங்கு நடக்கின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற இஸ்ரேல் - பலஸ்தீன மோதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதன்போது அவர் மேலும் கூறுகையில், நாங்கள் யூதர்களுக்கு அவர்களின் நாட்டை கொடுக்க வேண்டும். அவர்கள் சமாதானமாக வாழ வேண்டும். அதேபோன்று பலஸ்தீனத்திற்கும் அநீதி ஏற்பட்டுள்ளது. அங்கே…

  2. 23 OCT, 2023 | 06:57 PM (நா.தனுஜா) இலங்கையில் சட்டத்தின் ஆட்சி சீர்குலைவடைந்திருப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் எனும் கட்டமைப்புக்குள் அரச சட்டவாதி செயற்படும் முறை மிக முக்கியமான காரணமாகும். சட்டத்துறை சார்ந்த விவகாரங்களில் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கல் மற்றும் குற்றமொன்றை சட்டத்துக்கு அமைவாகக் கையாளல் ஆகிய இரண்டு பணிகளை சட்டமா அதிபர் முன்னெடுப்பதானது வெளிப்படையாகத் தெரியக்கூடிய முரண்பாடொன்றைத் தோற்றுவித்திருக்கின்றது என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: சர்வதேச நாணய நிதியத்தினால்…

  3. 23 OCT, 2023 | 06:58 PM (நா.தனுஜா) பலஸ்தீன மக்களுடனான தமது ஆதரவை வெளிப்படுத்தி நேற்று ஞாயிற்றுக்கிழமை (22)கொழும்பிலுள்ள பலஸ்தீன தூதரகத்தில் ஒன்று கூடிய பல்மதத்தலைவர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்த பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் ஹம்தல்லா செயிட், காஸா மக்கள் முகங்கொடுத்து வரும் துயரங்கள் குறித்து அவர்களிடம் கண்ணீர் மல்க எடுத்துரைத்தார். ஹமாஸ் அமைப்பினால் கடந்த 7 ஆம் திகதி தென் இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து தீவிரமடைந்துள்ள இஸ்ரேல் - ஹமாஸ் மோதலின் நீட்சியாக கடந்த சில வாரங்களாக காஸாவில் இஸ்ரேலிய படையினர் நடத்திவரும் தாக்குதல்களால் சிறுவர்கள் உட்பட பெருமளவானோர் உயிரிழந்துள்ளனர். இருப்ப…

  4. இஸ்ரேலின் பாதுகாப்பு என்ற பெயரில் இன்னும் எத்தனை பாலஸ்தீன உயிர்களை பறிக்கப்போகின்றீர்கள் - குடியேற்ற காலனித்துவ இஸ்ரேலின் போர் இயந்திரங்களினால் மோசமாக தாக்கப்படும் பாலஸ்தீன மக்களிற்கு தமிழ் ஏதிலிகள் பேரவை தனது ஆதரவை வெளியிட்டுள்ளது ஈழத்தமிழர்கள் நன்கறிந்த இனப்படுகொலை பயங்கரம் காசாவில் இடம்பெறுவதை நாங்கள் அச்சத்துடன் பார்க்கின்றோம் என தெரிவித்துள்ள தமிழ் ஏதிலிகள் பேரவை இலங்கை அரசாங்கத்தின் கரங்களில் தமிழர்கள் 2009 இல் இவ்வாறான இனப்படுகொலையை சந்தித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. இலங்கையின் வடக்குகிழக்கில் அங்கீகாரிக்கப்படாத தேசத்தை உருவாக்கியிருந்த தமிழ்தேசிய விடுதலை இயக்கத்தை முற்றாக அழிக்கும் நடவடிக்கைகளில் இலங்கை இராணுவ…

  5. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடித்தால் பொலிஸாருக்கு 5000 ரூபாய். குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் ஒவ்வொரு பொலிஸ் அதிகாரிக்கும் 5,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு தீர்மானித்துள்ளது. இந்த திட்டம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், குடிபோதையில் வாகனம் ஓட்டும் ஒருவரை கைது செய்யும் பொலிஸ் அதிகாரிக்கு அவரது சம்பளத்தில் ரூ. 5000 கூடுதல் கொடுப்பனவாகவும் மேலும் கைது செய்பவர்களுக்கு அதிகபட்சமாக ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என போக்குவரத்து கட்டுப்பாட…

  6. 22 OCT, 2023 | 08:56 PM எமது உரிமைப் போராட்ட அனுபவங்களும் அழிவு யுத்த முடிவுகளும் சகல மக்களுக்கும் பாடமாக அமைந்து விட்டது. சமாதான பேச்சுக்கான கதவுகளை இறுக மூடிவிட்டு ஆயுதங்களினால் எதையும் அடைந்துவிட முடியும் என்ற அதீத நம்பிக்கையின் விளைவுகளே அந்தப் படிப்பினைகள் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பாலஸ்தீன - இஸ்ரேல் விவகாரம் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை (20) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எமது முன்னோர்கள் காத்துவந்த மரத்தின் விதைகளை நான் மறவாது க…

  7. 23 OCT, 2023 | 04:08 PM (எம்.நியூட்டன்) சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடமே உள்ளது. இதனை உணர்ந்து செயற்பட்டால் சிறந்த வளமான சமுதாயத்தை உருவாக்க முடியும் என யாழ். போதனா வைத்தியசாலை நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணரும் மருத்துவருமான பொன்னம்பலம் ஆதித்தன் தெரிவித்தார். வடமராட்சி 91 க.பொ.த. உயர்தர மாணவர்களினால் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரிக்கு சொலிடர் இயந்திரம் (கழிவுகளை தூண்டாக்கும் இயந்திரம்) வழங்கிவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், நாங்கள் அனைவரும் சுகாதார முறைகளையும் சட்டங்களையும் பின்பற்றி நடப்போமானால் வருகின்…

  8. அமைச்சரவையில் அதிரடி மாற்றம். சுகாதார அமைச்சு மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுகளில் இன்று காலை அவசர மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று முற்பகல் இந்த அமைச்சுக்களை புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மஹிந்த அமரவீரவும், சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரமேஷ் பத்திரனவிற்கு, அவர் வகித்திருந்த கைத்தொழில் அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக சுகாதார அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கு அவர் வகித்திருந்த நிதி இராஜாங்க அமைச்சுக்கு மேலதிகமாக தோட்டத் தொழ…

  9. தூத்துக்குடி – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை! தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மும்பையில் இடம்பெற்ற சர்வதேச கடல்சார் மாநாட்டின் போது, துபாய் நிறுவனமொன்றுடன் தூத்துக்குடி வ. உ. சி துறைமுக ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நிறுவனம் கப்பல் போக்குவரத்திற்காக இலங்கையில் அனுமதி பெறும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக துறைமுக அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தை மையமாகக் கொண்டு பல்வேறு இடங்…

  10. சிறுவர் கதைப் புத்தகங்களின் அட்டையில் மறைத்து கடத்தப்பட்ட 23 கோடி ரூபா பெறுமதியான கொக்கேயின் : இந்தோனேஷிய பெண் கட்டுநாயக்கவில் கைது! 23 OCT, 2023 | 11:41 AM பெரிய ஆங்கில எழுத்துக்கள் கொண்ட 8 சிறுவர் கதைப் புத்தகங்களின் அட்டையில் இருபத்து மூன்று கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேயின் போதைப்பொருள் மறைத்து வைத்து வெளிநாட்டு பெண் ஒருவரால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், குறித்த பெண் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் முதன்முறையாக இலங்கைக்கு வந்த 42 வயதான இந்தோனேஷிய பெண் எனவும், அவர் அந்நாட்டில் ஜவுளி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் ஆரம்பகட்ட சுங்க விசாரணைகளில் தெரியவந்துள்ளது. …

  11. 23 OCT, 2023 | 09:52 AM (எம்.மனோசித்ரா) நாட்டில் கடந்த ஒரு வருட காலத்துக்குள் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் காரணமாக, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மாத்திரமின்றி உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றிடமிருந்தும் 1550 மில்லியன் டொலர் கிடைக்கவுள்ளதாக ஜக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும், ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். தேசிய கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்துள்ளதைப் போன்று வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பையும் விரைவில் நிறைவு செய்ய முடியும் எனத் தெரிவித்துள்ள சாகல ரத்நாயக்க, அதன் பின்னர் இலங்கை வங்குரோத்து நிலைமையிலிருந்து முற்றாக மீளும் என்றும் குறிப்பிட்…

  12. Published By: RAJEEBAN 23 OCT, 2023 | 12:20 PM நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் ஆராயப்பட்டவேளை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஊடக நிறுவனங்கள் மற்றும் பரப்புரை நிறுவனங்களை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மனுதாரர்கள் நிகழ்நிலை சட்ட மூலத்தை சவாலிற்குட்படுத்தியுள்ளனர். நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் சிறிதளவு கூட நிகழ்நிலை பாதுகாப்பினை உறுதி செய்யவில்லை மாறாக மக்கள் தங்கள் கருத்துக்களை எண்ணங்ளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதை தடுப்பதற்காகவே இந்த சட்ட மூலம் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள மனுதாரர்கள் குறிப்பிட்ட சட்ட மூலத்தின் மூலம் உருவாக்கப்படக்கூடிய ஐந்து பேர் கொண்ட ஆணைக்குழு எவ்வாறு…

  13. 22 OCT, 2023 | 11:03 AM (இராஜதுரை ஹஷான்) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விவகாரத்தில் ஜனாதிபதி ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறார். சிங்களவர்களுக்கு ஒரு சட்டம், தமிழர்களுக்கு ஒரு சட்டம் அமுல்படுத்தப்படுகிறது. திம்புலாகல பகுதியில் உள்ள சிங்களவர்களை வெளியேற்ற ஒருபோதும் இடமளிக்க முடியாது என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார். கொழும்பில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரத்தை முன்னிலைப்படுத்தி மட்டக்களப்பு, திம்புலாகல…

  14. Published By: VISHNU 22 OCT, 2023 | 12:45 PM யாழ்ப்பாணம், முற்றவெளி மைதானத்தில் ‍நேற்று சனிக்கிழமை (21) நடைபெற்ற தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் 'யாழ் கானம்' இசை நிகழ்ச்சியின் முதல் அம்சமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் நடத்தப்பட்ட படுகொலையை மறைக்கவே அதே நாளில் இசை நிகழ்ச்சி நடாத்தப்படுவதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், இசை நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வின்போது குறிப்…

  15. Published By: VISHNU 20 OCT, 2023 | 01:34 PM மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு சனிக்கிழமை (21) பயணம் செய்யவுள்ளனர். ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோ அவரின் தலைமையிலான 60 ஆதிவாசிகள் குழுவினரே முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு 21,22 ஆகிய இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு தாம் செல்லும் முதல் பயணமாக இது அமைவதாகவும், இரண்டு நாட்களும் யாழ்ப்பாணத்திலுள்ள பிரசித்தி பெற்ற இடங்களை சுற்றி பார்வையிட்டு மீண்டும் தமது இருப்பிடமான மஹியங்கனைக்கு செல்லவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/arti…

  16. 22 OCT, 2023 | 01:24 PM விளையாட்டு செயலிகள் (apps) ஊடாக பண மோசடிகள் நடக்கின்றன என்றும் இது தொடர்பில் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் விஷாந்த தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், வடக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாண மாவட்டத்திலும் இவ்வாறான பண மோசடிகளில் சிக்கிக்கொண்ட பலர் உள்ளனர். குறிப்பிட்ட விளையாட்டுச் செயலிகளில் இணைந்துகொள்வோர் அங்கு ஒரு சிலரைக் கொண்ட குழுவாக்கப்படுகின்றனர். அதில் இணையும்போது ஒரு சிறு தொகைப் பணம் அவர்களின் கணக்குக்கு வழங்கப்பட்டு சேர்க்கப்படுகிறது. அந்த குழுவில் அதிகளவானோர் இருப்பதாகவும் காட்டும். அதன் பின்னர் விளையாட்டின் ஒவ்வ…

  17. சிங்கள மக்கள் மத்தியில் தவறான கருத்துகள் கொண்டு செல்லப்படுகின்றது: ஆளுநர் செந்தில் தொண்டமான் சிங்களவர்களை தமது பகுதிகளிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக தவறான கருத்துகள் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (21.10.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், கடந்த இரண்டு மூன்று நாட்களாக சில பிக்குமார் இந்த நாட்டின் ஜனாதிபதியையும், என்னையும் குறைகூறி ஊடக அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர். சட்டவிரோதமாக பிடிக்க முயற்சி அது தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டிய கடமை எனக்கு உள்ளது. இந்த நாட்…

  18. அடுத்த ஆண்டு (2024) ஜனாதிபதித் தேர்தலையும், அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தலையும், 2025ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலையும் நடத்துவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று அறிவித்துள்ளார் . “அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலும், அதனைத் தொடர்ந்து 2025ஆம் ஆண்டின் முற்பகுதியில் பாராளுமன்றத் தேர்தலும் மாகாணசபைத் தேர்தலும் நடத்தப்படும்” என சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற வகையில் அமர்வில் உரையாற்றிய அவர், இந்தத் தேர்தலுக்குத் தயாராகுமாறு தனது கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தார். கட்சியின் அரசியலமைப்பிலும் கட…

  19. ஜனாதிபதி தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வைப்பு பணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம் ஜனாதிபதி தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வைப்பு பணத்தொகையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றில் இருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் என்ற வைப்புத் தொகையை 26 இலட்சம் ரூபாயாக அதிகரிப்பதற்கான யோசனையொன்று முன்மொழியப்பட்டுள்ளது. அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளருக்கான வைப்புத் தொகையை 75 ஆயிரம் ரூபாயிலிருந்து 31 லட்சம் ரூபாயாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி…

  20. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் மூடி மறைக்கப்படுமா? கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் மூடி மறைக்கப்படுமா என்ற சந்தேகம் தற்போது எழுகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியினை நேற்று நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இதனைத் தெரிவித்துள்ளார். கொக்குதொடுவாய் புதைகுழி தொடர்பான விடயத்தை பார்க்கும் போது ஏற்கனவே இறுதி நாளன்று 17 உடலங்கள் புதைகுழியின் ஊடாக கண்டுபிடிக்கப்பட்டதாகவும், நிறுத்தப்பட்ட தினத்தின் போது ஒக்டோபர் மாதம் நடுப்பகுதி அல்லது பிற்பகுதி அடுத்த அகழ்வு ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அண்மையில் நிதி போதாத…

  21. பிரசன்ன ரணதுங்க மற்றும் சரத் வீரசேகரவிற்கு விசா வழங்க மறுத்தது அமெரிக்கா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஆகியோருக்கு அமெரிக்க விசா வழங்குவது கடினம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தால் அமெரிக்காவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் துறை மேற்பார்வைக் குழுத் தலைவர்களின் பட்டறையில் பங்கேற்க இவர்கள் இருவரது பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டது. எனினும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஆகியோருக்கு அமெரிக்க விசா வழங்குவது கடினம் என இராஜதந்திர ரீதியில் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது, அதனால் அவர்கள் இந்த அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்து விலகிக் கொண்டதாக தெரிவிக்கப்ப…

  22. 16 OCT, 2023 | 09:23 PM “ எங்களது சாவுக்கு யாரும் காரணமல்ல, இது நாங்கள் எடுத்த முடிவு எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை என கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இரண்டு மாணவிகள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளனர். இன்று திங்கட்கிழமை (16) பிற்பகல் இரண்டு மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுரேஸ்குமார் தனிகை வயது 17, லோகேஸ்வரன் தமிழினி வயது 17 ஆகிய இரு மாணவிகளுமே லோகேஸ்வரன் தமிழினியின் வீட்டுச் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இவர்கள் இருவரும் இறுதியாக நடைப்பெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக காத்திருக்கும் மாணவிகள் ஆவா். சம்பவ இடத்திற்கு விரைந்த கிளி…

  23. உலகின் சிறந்த முதல் 2 வீத விஞ்ஞானிகளின் தரவரிசையில் இலங்கையர்களும் உள்ளடக்கம். அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும் (Elsevier) நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள உலகின் சிறந்த முதல் 2 வீத விஞ்ஞானிகளின் தரவரிசையில் முப்பத்தெட்டு இலங்கை விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் இலங்கையிலிருந்து உள்ளடக்கப்பட்டோரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களான பேராசிரியர் நவரட்ணராஜா சதிபரன், கலாநிதி ரி.மதனரஞ்சன் ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளனர். பணிநாள் மற்றும் வருடாந்த அடிப்படையில் விஞ்ஞானிகளைப் பல்வேறு காரணிகளைக் கொண்டு தர வரிசைப்படுத்தி இந்தப் பட்டியல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. 22 அறிவியல் துறைகள…

  24. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மூடி மறைக்கப்படுமா என்ற சந்தேகம் எழுகின்றது - துரைராசா ரவிகரன் 21 OCT, 2023 | 05:35 PM கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மூடி மறைக்கப்படுமா என்ற சந்தேகம் தற்போது எழுகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி இடத்தினை இன்று சனிக்கிழமை (21) பிற்பகல் நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். கொக்குதொடுவாய் புதைகுழி தொடர்பான விடயத்தை பார்க்கும் போது ஏற்கனவே இறுதி நாளன்று 17 உடலங்கள் புதைகுழியின் ஊடாக கண்டுபிடிக்கப்பட்டதாகவும், நிறுத்தப்பட்ட தினத்தின் போது ஒக்டோபர் மாதம் நடுப்ப…

  25. 20 OCT, 2023 | 08:40 PM (எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பலஸ்தீனத்திற்கு அனுதாபம் தெரிவித்து எப்படி அந்த நாட்டை இஸ்ரேல் அங்கீகரிக்க வேண்டும் என்று நினைக்கின்றோமோ அதேபோன்று இலங்கையிலும் தமிழர்களுக்கு நியாயமான சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற இஸ்ரேல் - பலஸ்தீன மோதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், காஸாவில் நடக்கும் மோதல் நிலைமையால் துன்பப்படும் மக்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன், பாதி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.