ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143313 topics in this forum
-
Published By: DIGITAL DESK 3 11 OCT, 2023 | 09:11 AM தென்னை மரத்திலிருந்து விழுந்து, நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் திங்கட்கிழமை (09) உயிரிழந்துள்ளார். புத்தூர் கிழக்கு, புத்தூர் பகுதியைச் சேர்ந்த பொன்னுத்துரை கணேசலிங்கம் (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த 6ஆம் திகதி, தென்னை மரத்தில் சீவல் தொழில் செய்வதற்காக ஏறிய நிலையில் வழுக்கி கீழே விழுந்ததுள்ளார். இந்நிலையில், அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான பிரேத…
-
- 0 replies
- 300 views
- 1 follower
-
-
11 OCT, 2023 | 09:14 AM 2023 (2024) ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 04 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை நடாத்தப்படவுள்ளது. பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவிருந்த 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை, எதிர்வரும் ஜனவரி மாதத்துக்கு பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை நேற்றைய தினம் பரீட்சைகள் திணைக…
-
- 0 replies
- 421 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 11 OCT, 2023 | 11:16 AM இலங்கைக்கு கடன்மன்னிப்பை வழங்குவது குறித்து சீனா ஆராயவேண்டும் என பிலிப்பைன்ஸ் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக விரக்தியடையாமல் சவால்களை எதிர்கொள்ளவேண்டும் என பிலிப்பைன்சின் நிதியமைச்சர் பெஞ்சமின் ஈ டியோகோனோ தெரிவித்துள்ளார். கொவிட் பெருந்தொற்றின் பின்னர் பிலிப்பைன்ஸ் எதிர்கொண்ட பொருளாதார சவால்களை நினைவுகூர்ந்துள்ள அந்த நாட்டின் நிதியமைச்சர் வலுவான கட்டமைப்பு சீர்திருத்தங்களே நாடு மீண்டும் வலுவான நிலைக்கு வருவதற்கு உதவியது எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு கடன்மன்னிப்பை வழங்குவது குறித்து சீனா ஆராயவேண்…
-
- 0 replies
- 307 views
- 1 follower
-
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை சம்பவம் மற்றும் கோட்டாபயவின் ஒட்டுக்குழுக்கள் தொடர்பான பல தகவல்களை நான் அறிவேன். விரைவில் நாடாளுமன்றத்தில் இவை அம்பலப்படுத்தப்படும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் என்று கூறப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் உதவியாளராக இருந்த அசாத் மௌலானா சனல் 4இற்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாகத்தான் அதிகமாக பேசப்படுகின்றது. அதற்கு முன்னர் 2005ஆம் ஆண்டிலிருந்தே கோட்டாபய ராஜபக்ச தரப்பி…
-
- 3 replies
- 582 views
- 1 follower
-
-
10 OCT, 2023 | 05:12 PM (எம்.வை.எம்.சியாம்) இலங்கை இராணுவத்தின் 74 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 314 அதிகாரிகள் மற்றும் 1565 இராணுவ சிப்பாய்கள் அவர்களின் அடுத்த தரத்துக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இராணுவத்தின் 74 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவுக்கு அமைய இலங்கை இராணுவத்தின் நிரந்தர மற்றும் தொண்டர் படையணிகளைச் சேர்ந்த 314 அதிகாரிகள் மற்றும் 1565 சிப்பாய்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதுடன் இந்த நிகழ்வு பனாகொடை இராணுவ முகாமில் இன்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்றது. பிரிகேடியர் நிலையிலிருந்த 07 அதிகாரிகள் மேஜர்…
-
- 0 replies
- 457 views
- 1 follower
-
-
அமைச்சர் நசீர் அஹமட்டிற்கு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டது சட்ட ரீதியானது என உயர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இதனை அடுத்து அமைச்சர் நசீர் அஹமட், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை இழக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தீர்மானத்தினை மீறி 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டார். இதற்கு எதிராக அமைச்சர் நசீர் அஹமட் உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்த நிலையில்…
-
- 4 replies
- 805 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு சங்கானை பொதுச் சந்தைக்குள் இரவு வேளை அத்துமீறி நுழைந்த குழு ஒன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தி மிரட்டிவிட்டுச் சென்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, திங்கட்கிழமை இரவு சங்கானை பொதுச்சந்தை பாதுகாப்பு நடவடிக்கையில் தனியார் நிறுவனம் ஒன்றின் பாதுகாப்புக் கடமையாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதன் போது, அங்கு வந்த போதையில் இருந்தவர்கள் என்று தெரிவிக்கப்படும் நபர்கள், யாரோ ஒருவருடைய பெயரைக் கூறி அவர் நிற்கிறாரா? என்று கேட்டிருக்கின்றனர். இரவு வேளை என்பதால் அவர் இல்லை என்று பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதனை அடுத்து வாய்த்தர்கத்தில் ஈடுபட்ட அவர்களில் ஒருவர் பூட்டப்பட்டிருந்த கதவின் …
-
- 0 replies
- 198 views
-
-
அதிபர் பற்றாக்குறையை நிவர்த்திக்க 4,718 அதிபர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நடைபெற்ற விவசாய கண்காட்சியில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த நியமனங்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஆசிரியர் சேவையில் 705 வெற்றிடங்களும், கல்வி நிர்வாக சேவையில் 405 வெற்றிடங்களும் கட்டம் கட்டமாக பூர்த்தி செய்யப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/276471
-
- 0 replies
- 255 views
- 1 follower
-
-
முதல் 1,000 சர்வதேச தரவரிசைக்குள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் மருத்துவ பட்டங்களை இலங்கையில் ஏற்றுக்கொள்ளும் வகையில் தேவையான சட்ட ஏற்பாடுகளை இயற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் இணைந்து இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்திருந்தனர். சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் மருத்துவப் பட்டப்படிப்புகளின் அங்கீகாரத்தின் அடிப்படையில் தரநிலைகள் மற்றும் அளவுகோல்களை உள்ளடக்கிய தேசிய கொள்கையை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்போதைய தேவைகளுக்கு ஏ…
-
- 0 replies
- 323 views
- 1 follower
-
-
Published By: VISHNU 08 OCT, 2023 | 01:46 PM (எம்.வை.எம்.சியாம்) இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பிற்குள் மீன் பிடிப்பதற்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் இந்த விடயம் தொடர்பில் இருதரப்பு மீனவர்களும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு சனிக்கிழமை (7) வழங்கிய பிரத்தியேக செவ்வி ஒன்றிலேயே இந்த விடயம் தொடர்பில் அவர் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது கேள்வி- எமது இரு நாட்டு கடற்பரப்பிலும் வாழக்கூடிய தமிழ் பேசும் மீனவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் மீனவ பிரச்சினைகளுக்க…
-
- 4 replies
- 603 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 10 OCT, 2023 | 10:01 AM (எம்.வை.எம்.சியாம்) பெரும்பான்மையான வாக்குகளை பெற முடியும் என அரசியல் கட்சிகளிடமிருந்து உத்தரவாதம் கிடைக்குமாயின் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் என பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். நியூஸ் பர்ஸ்ட் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த போது பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா இந்த விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளதாக நியூஸ் பர்ஸ்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்த ஊடகம் மேலும் தெரிவித்திருப்பதாவது, 'தம்மால் ஆரம்பிக்கப்பட்ட டி.பி கல்விச் செயற்திட்டத்தின் ஊடாக நாட்டிலுள்ள 55 இலட்சம் குடும்…
-
- 0 replies
- 504 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 07 OCT, 2023 | 07:41 PM ஆர்.ராம் சிறுபான்மை தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம்களுக்கு தொடர்ச்சியாக நீதி மறுக்கப்பட்டு வருகின்றமைக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாகவும், நீதிபதி ரி.சரவணராஜாவின் வெளியேற்றம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்துக்கு ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்களைக் கண்டித்தும் வடக்கு,கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தாலை அனுஷ்டிப்பதற்கு தமிழ் கட்சிகள் ஒன்று கூடி கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயக போராளிகள் ஆகிய ஏழு கட்சிகளே இந்தக் ஹர்த்தாலுக்கான பகிரங்கமான அழைப்பினை விடுத்து…
-
- 4 replies
- 450 views
- 1 follower
-
-
இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. அத்துடன், கேரளா மாநிலத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு கப்பல் ஒன்று நேற்று இரவு புறப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கப்பல் இன்று நாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கப்பல், நாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடைந்ததும் நாளை காங்கேசன்துறை துறைமுகத்துக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து, சோதனை முறையில் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து நிர்மாணப்பணிகளும் நிறைவுப்பெற்று ஜனவரி மாதம் முதல் இந்தியாவிற்கும் இலங்கைக்…
-
- 6 replies
- 444 views
- 1 follower
-
-
கிண்ணியா குரங்குபாஞ்சான் விவகாரம் : இன உறவை சீர்குலைக்க முயற்சிக்க வேண்டாம் - இம்ரான் எம்.பி.! kugenOctober 9, 2023 முழுமையாக முஸ்லிம்கள் வாழும் கிண்ணியா குரங்குபாஞ்சான் கிராமத்துக்கு பௌத்த பிக்குகள் விஜயம் செய்து, அங்குள்ள பழைய இராணுவ முகாம் காணியை பார்வையிட்டுச் சென்றுள்ளமை பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இன உறவை சீர்குலைக்க முயற்சிக்க வேண்டாம் என சம்பந்தப்பட்டோரை நான் கேட்டுக் கொள்கிறேன் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர், அதனூடாக மேலும் குறிப்பிட்டுள்ளதாவது : கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவின் மஜீத் நகர் கிராம உத்தியோகத்…
-
- 0 replies
- 458 views
-
-
டக்ளஸ் உள்ளடக்கிய ஐவர் கொண்ட குழு பு. கஜிந்தன் இலங்கையின் தேர்தல் முறை தொடர்பில் ஆராய்வதற்கும் கட்சிகளினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரை வழங்குவதற்காக ஐவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா,நிமல் சிறிபாலடி சில்வா, ஜீவன் தொண்டமான் மற்றும் பிரசன்ன ரணதுங்க குறித்த குழுவில் அங்கம் வகிக்கிறார்கள் குறித்த விடயம் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சமர்ப்பித்த பரிந்துரை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆக இருக்க வேண்டும், அவர்களில் 160 பேர் அந்தந்த தொகுதிகளில் இருந்து நேரடியாக வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டு…
-
- 0 replies
- 275 views
-
-
யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர் யாழ். பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து, நாளை மறுதினம் புதன்கிழமை காலை ஆரம்பமாகும் பேரணி யாழ் நகர வீதி வழியாக சென்று, இறுதியில் கடற்தொழில் அமைச்சரிடம் மகஜர் ஒன்றினை கையளிக்கவுள்ளதாக முச்சக்கர வண்டி சங்கத்தினர் தெரிவித்தனர். குறிப்பாக அண்மைய நாட்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதிய செயலி மூலம் முச்சக்கர வண்டி சேவையினை மக்கள் பயன்படுத்தி வருவதன் காரணமாக நீண்ட காலமாக முச்சக்கர வண்டியினை தமது வாழ்வாதாரமாக கொண்டு செயற்படுபவர்கள் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தே குறித…
-
- 0 replies
- 396 views
- 1 follower
-
-
09 OCT, 2023 | 09:15 PM இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் எனும் இரு நாட்டுக் கொள்கையை இலங்கை எப்போதும் ஆதரித்து வருகிறது. அதற்கு நாம் நிச்சயம் ஆதரவு வழங்குவோம். சில சமயங்களில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை நாம் கண்டித்திருக்கிறோம். இருப்பினும், இவை அனைத்தும் இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தாது. முன்னெப்போதும் இல்லாத இந்தத் தாக்குதலை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது’’. மோதல்கள் மற்றும் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இஸ்ரேலில் பல இலங்கையர்கள் பணிபுரிக…
-
- 0 replies
- 214 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 09 OCT, 2023 | 02:45 PM பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு, இன்று திங்கட்கிழமை (09) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், வடமராட்சி அல்வாய் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில், பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார். யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நீதவான் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்நிலையில் காங்கேசன்துறை பொலி…
-
- 0 replies
- 285 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 09 OCT, 2023 | 02:39 PM யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வீடு உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இருவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றின் உரிமையாளர் குடும்பத்துடன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்புக்கு சென்று இருந்தார். ஒரு சில நாட்கள் மட்டக்களப்பில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிய வேளை வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த மின் மோட்டார், தொலைக்காட்டி பெட்டி, மடிக்கணனி, கையடக்க தொலைபேசி உள்ளிட்…
-
- 0 replies
- 248 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 09 OCT, 2023 | 09:13 AM வவுனியா சிதம்பரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முருகனூர் கிராமத்தில் வசித்து வரும் அன்டன் ஜொன்சன் என்பவரை இம்மாதம் 4 ஆம் திகதியில் இருந்து தொடக்கம் காணவில்லை என தெரிவித்து அவரின் மனைவியினால் சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீட்டிலிருந்த குறித்த நபர் கடந்த 04.10.2023 அன்று காலை 9.30 மணியளவில் வெளியேறிய நிலையில் இன்று வரை வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, அவரின் மனைவியினால் கணவரை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. வீட்டிலிருந்து அவர் வெளியேறுகையில் நீல நிறம் சரம் மற்றும் ரோஸ் கலர் சட்டையும் அணிந்து சென…
-
- 0 replies
- 262 views
- 1 follower
-
-
08 OCT, 2023 | 07:09 PM (எம்.மனோசித்ரா) அரசாங்கத்துக்கு வரி வருமானம் என்பது அத்தியாவசியமானதாகும். எனவே வரி அறவிடப்படக் கூடாது என நாம் கூறவில்லை. அடிப்படை சம்பளம் 50,000 முதல் அடுத்தடுத்த கட்டங்களுக்கு 6 - 24 சதவீதம் வரை படிப்படியாக வருமான வரி அறவிடப்பட வேண்டும் என்ற மாற்று யோசனையை முன்வைப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , பணவீக்கம் வீழ்ச்சி என்பது பொருட்களின் விலை குறைவடைவதல்ல. பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் வேகம் குறைவடைவ…
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
யாழில். முகநூலில் வன்முறை கும்பல் தொடர்பில் பதிவிட்டவர் மீது வாள் வெட்டு! adminOctober 9, 2023 முகநூலில் தம்மை பற்றி பதிவிட்டவர் மீது வன்முறை கும்பல் ஒன்று நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (08.10.23) இரவு வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் மீதே அவரது வீட்டுக்கு அருகில் வைத்து வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. வெள்ளைநிற கார் ஒன்றில் சென்ற நான்கு பேர் கொண்ட வன்முறை கும்பலே தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலைய…
-
- 0 replies
- 694 views
-
-
வழக்கம் போன்று, காசி ஆனந்தனும் கூவுகின்றார் கொடுத்த கூலிக்கு? காசி கூவுவதன் மூலம், இந்த சதித்திட்டங்களின் பின்னால் இந்திய உளவு அமைப்புகள் உள்ளன என்பது தெளிவாகின்றது.
-
- 20 replies
- 2.2k views
-
-
அரச சேவையில் புதிய ஆட்சேர்ப்பு இடைநிறுத்தம்! எதிர்காலத்தில் அரச சேவையில் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இதன்படி அத்தியாவசியமான துறைகளைத் தவிர வேறு எந்தவொரு அரச துறையிலும் ஆட்சேர்ப்பு இடம்பெறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் மக்கள் தொகை 21 மில்லியன் ஆகும் என்றும் மக்கள் தொகையில் சுமார் 12 பேருக்கு ஒரு அரசு ஊழியர் உள்ளனர். இது உலகின் மிக உயர்ந்த அரசு ஊழியர்களின் விகிதங்களில் ஒன்றாகும்.ஆகவே இது பெரும் சுமையாக உள்ளதால் தொடர்ந்து அதனை மேற்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2023/1352882
-
- 0 replies
- 404 views
-
-
“இன, மதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் நாடு முன்னோக்கிச் செல்ல முடியாது” இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதால், விரைவில் அதற்குரிய தீர்வுகளை காண்பதற்காக அனைத்து தலைவர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தவிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். வேறுபாடுகளை முன் நிறுத்தி மோதல்களை ஏற்படுத்திக் கொண்டதால் நாடு என்ற வகையில் இலங்கை சரிவை சந்திக்க நேரிட்டதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியல் ரீதியான வேறுபாடுகளும் இலங்கையை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதென சுட்டிக்காட்டினார். மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூ…
-
- 3 replies
- 373 views
-