ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
The man of the moment General Sarath Fonseka clad in the national constume giving what appears to be his own version of a victory symbol outside his residence yesterday. AFP படம், செய்திமூலம்: தினக்கண்ணாடி http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=69135
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழ் மக்களைக் கொல்லும்படி பணித்தது கோத்தபாயதான் - சரத் பொன்சேகா ஞாயிறு, 29 நவம்பர் 2009( 16:08 IST ) இறுதிக் கட்ட போரின்போது வன்னியிலுள்ள தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும்படி பாதுகாப்புச் செயலர் கோத்தபாயதான் தம்மைப் பணித்ததாகக் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். இலங்கையில் அதிபர் தேர்தல் ஜனவரி 26 ஆம் தேதி என அறிவிப்பு வெளிவிடப்பட்டுள்ள நிலையில், சரத் பொன்சேகா தனது அரசியல் முடிவு குறித்து இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆனால் அவர் இராணுவ தளபதியாக இருந்தபோது அணுகிய விதத்துக்கும் இப்போதைய அணுகுமுறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளதாக இலங்கை வாராந்த ஆங்கில இதழின் செய்தியாளர் கூறியுள்ளார். இச்செய்தியாளரை தமது அல…
-
- 4 replies
- 1.4k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே நேற்று காலை அநுராதபுரம் ஸ்ரீ மகா போதிக்கும் ஏனைய விகாரைகளுக்கும் விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்டு, தேர்தல் நடவடிக்கைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளார். அட்டமஸ்தானாதிபதி வணக்கத்துக்குரிய பல்லேகம ஸ்ரீநிவாச தேரரின் தலைமையில் இடம்பெற்ற வணக்க வழிபாடுகள் பலவற்றிலும் ஈடுபட்ட ஜனாதிபதி, ருவன்வெலி சாய விகாராதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் மற்றும் புத்த ஜயந்தி விகாராதிபதி நுக தன்னே பஞ்ஞானந்த தேரர் ஆகியோரின் ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொண்டார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே அநுராதபுரம் விகாரைகளுக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேக்கா கண்டி தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். …
-
- 0 replies
- 548 views
-
-
எய்தவனின் தலை கொய்ய தமிழனுக்கு கிடைத்த இச் சந்தர்ப்பத்தை தமிழினம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எதிரி மகிந்த கொம்பனியை வீட்டுக்கு அனுப்பும் செயற்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் அதன் தலைவர்களுக்கும் இதுவே சனீஸ்வரனின் வேண்டுகோளாகும். இது தொடர்பாக சனீஸ்வரன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிட்ட அறிக்கை:- தமிழர்தம் போராட்டத்தை நசுக்கி, சின்னாபின்னமாக்கி வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கியெறிந்து விட்ட பூரிப்பில் சிங்களம் இன்று சொல்லொணா மகிழ்வில் திணறிக் கொண்டிருக்கின்றது. தமிழன் போராட்ட சக்தியை அழித்துவிட்டோம் என்ற மமதையில் தேர்தல் மேல் தேர்தலாக வைத்து சிங்களம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது. தமிழரின் உண…
-
- 5 replies
- 1.3k views
-
-
இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னதாகவே இரகசியமான முறையில் அரசியலில் ஈடுபட்டதன் மூலமாக அரசுக்கு எதிரான சதித் திட்டங்களில் நீண்ட காலமாக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஈடுபட்டுள்ளமை இப்போது தெளிவாகியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியிருக்கின்றார். கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள வார இதழான லங்காதீபவுக்கு வழங்கியிருக்கும் பேட்டி ஒன்றில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கும் கோதாபாய, கடந்த சில மாத காலமாகவே எதிர்க்கட்சிகளுடன் அவர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார் என்பதும் இப்போது வெளிப்படையாகியிருக்கின்றது எனத் தெரிவித்திருக்கின்றார். பதவியிலிருந்த காலத்தில் பல்வேறு பாதுகாப்புக் காரணங்களைக் கூறி மீள்குடியே…
-
- 0 replies
- 771 views
-
-
தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். கல்வி மற்றும் அபிவிருத்திப் பணிகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இடம்பெயர் முகாம்களில் தங்கயுள்ள மக்களை விரைவில் மீள் குடியேற்ற நடநவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். புளொட் கட்சி தற்போது, எந்தவொரு பாராளுமன்ற அங்கத்துவத்தையும் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, 13 ஆவது த…
-
- 5 replies
- 777 views
-
-
நோர்வே நாட்டில் தங்கியிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன் நேற்று சனிக்கிழமை நாடு திரும்பியுள்ளார். யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இவர் கடந்த மூன்று வருடங்களாக ஐரோப்பிய நாடுகளில் தங்கியிருந்தார். இறுதியாக நோர்வே நாட்டில் தங்கியிருந்து அங்கிருந்து நேரடியாக நேற்றைய தினம் நாடு திரும்பியுள்ளார்.ஏற்கனவே வெளிநாடுகளில் தங்கியிருந்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பத்மினி சிதம்பரநாதன் , செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் சில வாரங்களுக்கு முன்பு நாடு திரும்பியிருந்தமை தெரிந்ததே. தற்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.ஜெயானந்தமூர்த்தி மட்டுமே தொடர்ந்தும் லண்டனில் தங்கியிருக்கின்றார்.
-
- 26 replies
- 2.4k views
-
-
மாகாணசபைகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென ஈ.பி.டி.பி. கட்சி, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் கிடைக்கப் பெறும் அதிகாரங்களைவிடவும் அதிகளவு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் போதியளவு அதிகாரங்கள் கிடைக்கப் பெறவில்லை என ஈ.பி.டி.பி. கட்சியின் பேச்சாளர் நெல்சன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார். போதிய அதிகாரங்கள் இன்றி தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றப்பட்ட உடன் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துமாறு ஈ.பி.டி.பி கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. …
-
- 0 replies
- 429 views
-
-
தமிழீழ தாயக விடுதலைக்காக களமாடி உயிர்நீத்த போராளிகளின் நினைவுகளை போற்றும் விதமாக ஒவ்வொரு வருஷமும் நவம்பர்- 27-ல் “மாவீரர் நாள்’ நிகழ்வுகள் ஈழத்தில் பிரமாண்டமாக கொண்டாடப்படும். மாவீரர் நாளில் பிரபாகரன் நிகழ்த்தும் உரையை உலக நாடுகளே உற்று கவனிக்கும். தமிழீழ தேசியத் தலைவருடன் சீமான் போரினால் ஈழத்தில் ஏற்பட்ட விளைவுகளுக்குப் பின்னால்… வருகிற இந்த வருட மாவீரர் நாள் நிகழ்வுகள் புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் வசிக்கும் நாடுகளிலிருந்து துவங்கியது. உலக முழுவதும் உள்ள ஈழத் தமிழர்கள், தமிழர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள் அனைத்தும், ஒவ்வொரு நாட்டிலும் பிரபாகரன் பிறந்த நாளையும் மாவீரர் நாளையும் பிரமாண்டப்படுத்தினர். கனடா தமிழர் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த “மாவீரர் நா…
-
- 10 replies
- 2.2k views
-
-
1992 ஆண்டு டிசம்பர் மாத விடுதலைப்புலிகள் ஏட்டினை தழுவி எழுதப்பட்டது நவம்பர் மாதம் 23 மதியத்தில் இருந்து 24 காலைவரை யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ள போராளிகள் மருத்துவ விடுதி நிரம்பி வழிந்தது. யாழ் போதனா வைத்திய சாலையும் வைத்தியர்கள், தாதிகள் உட்பட தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவ துறை வைத்தியர்கள் மற்றும் மருத்துவ போராளிகளும் கடமையில் இரவு பகலாக ஈடுபட்டு கொண்டிருந்தனர். வைத்திய சாலைக்கு முன்பாக இருந்த பாலம் பணிமனையில் குருதிகொடை செய்வதற்காக மாணவர்கள் சிலரும் வந்து காத்திருந்தனர். அந்தளவு போராளிகள் காயப்பட்டு வந்து கொண்டிருந்தனர். ஆம் மாவீரர் வாரத்தின் மூன்றாம் நாளான நேற்று தமிழீழ விடுதலைப்புலிகளின் 1992 வரையான வரலாற்றில் மிக முக குறுகிய நேரத்தில் நீண்ட காவலரண்…
-
- 1 reply
- 883 views
-
-
இலங்கையில் ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்காக எனக்கு ஆதரவாக விடுதலைப் புலிகளும் பிரசாரத்தில் ஈடுபடலாம். பிரபாகரனின் பெற்றோரை ஏற்கவும் நான் தயாராகவே இருக்கிறேன் என்று கூறியுள்ளார் சரத் பொன்சேகா. இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் பொன்சேகா. அரசியல்வாதியாகி விட்டதால் அதிரடியாகவும் பேசப் பழகி விட்டார். கிட்டத்தட்ட நம்ம ஊர் அரசியல்வாதிகளைப் போல அள்ளி விட்டு பேச ஆரம்பித்துள்ளார். கொழும்பில் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எந்த ஒரு நபரும் எனக்கு ஆதரவளிப்பாராயின் அவர்கள் எனது கொள்கைக்காக செயற்படுகின்றனர் என்பதாகும். எனது கொள்கை முன் வைக்கப்பட்டுள்ளது. புலிகளுடன் இருந்தவர்களாக இருந்தால…
-
- 5 replies
- 1.6k views
-
-
கோகுலவதனன், வவுனியா 01/12/2009, 03:33 இரவு நேரங்களில் வீடுகளில் உணவு இருக்கக்கூடாது! படையினர் எச்சரிக்கை! உணவுகளை அளவோடு சமைக்குமாறும், இரவு நேரங்களில் வீடுகளில் உணவு மிச்சமாகக் இருக்கக்கூடாது எனவும் சிறீலங்காப் படையினர் எச்சரித்து வருகின்றனர். அண்மையில் மீள்குடியமர்த்தல் என்ற பெயரில் முழங்காவில் மற்றும் துணுக்காய்ப் பகுதிகளில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களிடமே படையினர் இந்த எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர். அடிக்கடி மக்களில் வீடுகளுக்குச் சென்று படையினர் இக்கருத்தினைத் தெரிவித்து வருவதுடன், புதிதாக யாராவது நடமாடுகிறார்களா என விசாரணைகளையும் நடத்தி வருகின்றனர். pathivu
-
- 2 replies
- 1.4k views
-
-
1982 ம் ஆண்டு நவம்பர் 27 தாயகத்தின் முதல் வித்து 2ம் லெப்ரினன்ட் சங்கர் சத்திய நாதன் இந்தியாவில் தலைவர் மடியில் சாய்ந்தான் அந்த நாளே மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழுச்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மாவீரர் வாரத்தின் தொடக்க நாளான இன்று 1989 ம் ஆண்டு இந்த காலப்பகுதியில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று இங்கு பதியப்படுகின்றது. 1989 ம் ஆண்டு ஐப்பசி மாதம் முதல்வாரம் அளவில் இரண்டு போராளிகள் அந்த குளிர்கால கும் என்ற இருட்டிலும் கூட வீட்டை ஒரு…
-
- 23 replies
- 3.4k views
-
-
எமது விடுதலைக்கு தன் உயிரை அர்ப்பணித்த மாவீரர் செல்வங்களுக்கும் இன்றுவரை உயிர்நீத்த எம்உறவுகளுக்கும் வீரவணக்கம். எமது போராட்டம் முடியாது தொடரும் என்று உறுதி செய்வோம். http://tamilcrisisweeklyupdate.blogspot.com/2009/11/weekending-28-nov-2009.html
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்திற்கு அரசாங்கம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்தவர்களும் தமக்கு வாக்களிக்க முடியும் என ஜெனரல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார் எனவும், இது ஓர் பாரதூரமான கூற்று எனவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. தேர்தலில் யார் ஆதரவு வழங்கினாலும் அதனை ஏற்றுக்கொள்ளப் போவதாகவும், விடுதலைப் புலி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பிரபாகரனின் பெற்றோர் ஆதரவு வழங்கினாலும் ஏற்றுக்கொள்ளப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டை விடுதலைப் புலிகளிடமிருந்து பாதுகாத்ததாகத் தெரிவித்துக் கொள்ளும் ஓர் இராணுவ ஜெனரலிடமிருந்து இவ்வாறான ஓர் கூற்றை எதிர்பார்க்கவில்லை எனவும், ஜனாதிபதியோ அ…
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழ் நாடு இராசபாளயத்தில் தமிழ் தமிழர் இயக்கத்தினர் மாவீரர்நாளை உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்தனர். இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர். தமிழீழத்தில் இம்முறை மாவீரர் நாளை நினைவுகூர முடியாவிட்டாலும், அதற்கீடாக தமிழர் வாழுமிடமெங்கும் நிகழ்த்தப்பெற்று, ஆக்கிரமிப்பாளர்களுக்கு புலம்பெயர் வாழ் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும், உலகின் பல மூலைகளிலும் பரந்து வாழும் தமிழர்களும் தக்க பதிலை தெரிவித்திருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாவீரர்நாள் இனிவரும் காலங்களில் தமிழர்களின் வாழ்வில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்பதுடன், தமிழர்களுக்கு போராடும் ஆத்மபலத்தையும் இம்முறை மாவீரர் நாள் கொடுத்துள்ளது என தமிழகத்தின் ப…
-
- 4 replies
- 775 views
-
-
மணிவண்ணன், கொழும்பு 30/11/2009, 14:46 பொன்சேகவிற்கும் ராஜபக்ச சகோதரர்களுக்கும் இடையில் பிளவுக்கு யுத்த தளபாடக் கொள்வனவே காரணம்!! யுத்த தளபாட கொள்ளவனில் ஏற்பட்ட முறுகல் நிலையே சரத் பொன்சோகவிற்கும் ராஜபக்ச சகோதரர்களுக்கும் இடையில் பிளவினை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொட்பாய ராஜபக்ச தலைமையிலான லங்கா லொஜிஸ்ரிக் நிறுவனமும் சரத் பொன்சேகாவின் மகளின் கணவரான தனுன திலகரட்ன என்பவரின் நிறுவனம் ஒன்றும் ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு வெளிநாடுகளில் இருந்த ஆயுத தளபாடங்களை பெற்று கொடுத்துள்ளன. இந்த நிறுவனங்களிடையிலான வர்த்தக போட்டி காரணமாகவே சரத் பொன்சேகாவிற்கும் கோட்டபாயவிற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இதேவேளை வன்னியில் மீட்கப்பட்ட ஆயுதங்களுடன…
-
- 2 replies
- 1.1k views
-
-
மணிவண்ணன், கொழும்பு 30/11/2009, 13:37 13-வது திருத்தத்துக்கு அப்பால் செல்லவும் பொன்சேகா தயார்! சூடுபிடிக்கும் தேர்தல் களம்! சிறீலங்காவின் முன்னாள் ஓய்வு பெற்ற இராணுவத் தளபதி சரத்பொன்சேகா அவர்கள் நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்த விபரம் : இந்தியாவே எமது நெருங்கிய அயல்நாடு, பிராந்தியத்தில் வலுவான அயல்நாடு. இதன் காரணமாக இந்தியாவுடன் சிறப்பான உறவைப் பேணுவது அவசியம். சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் இணைந்து நான் செயற்பட்டேன் என எவராவது கூறுவார்கள் என்றால் அது இராணுவத் தளபாடங்களுக்காகத்தான். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு அவை தேவைப்பட்டன. இந்த இராணுவத் தளபாட ரீதியான உதவிகள…
-
- 0 replies
- 803 views
-
-
இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்திருக்கும் தமிழ் அகதிகளின் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து நடக்கவேண்டும் என்று வலியுறுத்தி உலகப் பிரசித்தி வாய்ந்த பிரமுகர்கள் 12 பேர் கூட்டாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேரடிக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்கள். தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் ஆசீர்வாதத்துடன் இயங்கும் "த எல்டேர்ஸ்" உலகப் பிரசித்தி பெற்ற பிரமுகர்கள் அமைப் பைச் சேர்ந்தவர்களான பேராயர் டெஸ் மண்ட் டுட்டு, மார்ட்டி ஹ்டிஸாரி, கொபி அனான், எலாபட், ஹெடார் பிராஹிமி, குரோ புரூண்ட் லேண்ட், பெர்னாண்டோ ஹென்றிக்கியூ கார்டோஸோ, ஜிம்மி கார்ட்டர், கிரேகா மெக்செல், மேரி ரொபின்சன் ஆகியோரே இவ்வாறு அவசரமாக ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்கள். இலங்…
-
- 0 replies
- 659 views
-
-
கார்த்திகை இருள் அகல, தமிழர்கள் விளக்கேற்றும் மாதம். நவீன வரலாற்றில் புதிய பரிமாணத்தைப் புகுத்திய மனிதர்களை நினைவு கூர்ந்து, வீடு தோறும் ஒளி படரும் மாதம். தென்னிலங்கை அரசியலில், பல அதிர்வுகளை உருவாக்கும் மாதமும் இதுதான். யாரைத் தெரிவு செய்ய வேண்டுமென்பதை விட, யாரைத் தெரிவு செய்யக் கூடாதென்பதில், தெளிவான பார்வை தமிழ் மக்களுக்கு உண்டு. இதுவரை கிடைத்த செய்திகளின்படி, தமிழ் பேசும் மக்களின் பூரண சுயநிர்ணய உரிமையை ஏற்று, தொடர்ச்சியாகவே அம்மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்து, போராட்டங்களை நிகழ்த்தி வரும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்னவும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார். போரை நடத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், முன்னாள் படை …
-
- 6 replies
- 926 views
-
-
ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடவுள்ள மகிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதில் இந்தியாவும், ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரிப்பதில் அமெரிக்காவும் மறைமுகமாக ஈடுபட்டுள்ளதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இவ்வாறு யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் வலம்புரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு தமது பொதுவேட்பாளராக முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவை நிறுத்தியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகவலை வெளியிடாமல் அமைதிகாத்த ஜெனரல் சரத்பொன்சேகா தற்போது தேர்தலில் தான் ப…
-
- 17 replies
- 1.7k views
-
-
தமிழீழத்துக்கான ஆயுதப் போராட்டம் முடிந்து, அரசியல்ரீதியான போராட்டங்களின் மூலமாக நாடு கடந்த தமிழீழத்தை அமைக்கிற முயற்சிகள் தீவிரமாகியிருக்கிறது! பன்னாட்டுத் ஈழத் தமிழர்கள் தங்களுக்குள் தேர்தல் நடத்தி, நாடு கடந்த தமிழீழ பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும் தொடங்கி விட்டார்கள். flaghoistகடந்த 18-ம் தேதி நார்வே நாட்டில் ஈழத் தமிழர் அவைக்கான தேர்தல் நடந்தது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜய் அசோகன் என்ற மாணவர் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால், ”ஈழத் தமிழர் அவைக்கு தமிழ்நாட்டுத் தமிழன் பிரதிநிதியாக இருப்பதா? ஈழத்தில் பிறந்தவர்களுக்கு பிரதிநிதியாகும் சக்தி இல்லையா?” என சிங்கள மீடியாக்கள் இதை வைத்து உசுப்பல் வேலை தொடங்கிவிட்டன! டெல்லியில் இலங்கையின் தூதராக இருந்த சுதிஷ்வர சேனபிரான் ஒர…
-
- 4 replies
- 1.2k views
-
-
வவுனியா தடுப்பு முகாம்களில் இருந்து அரச புல்னாய்வுத்துறையால் இப்போதும் கடத்தப்படும் சிறுவர் சிறுமியர். வன்னித் தடுப்பு முகாம்களிலிருந்து இரு பாலையும் சேன்ர்த இளவயதினர் அரச புல்னாய்வுத்துறையால் முகாமினுள் இயங்கும் ஒலிபெருக்கியில் பெயர் சொல்லி அழைக்கப்பட்டு கொண்டு செல்லப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த நவம்பர் 21 மற்றும் 27 ஆம் திகதிகளில் மட்டும் குறைந்தது 40 இற்கும் மேற்பட்ட இவ்வாறான கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக தமிழ்நெட் செய்தி வெளியிட்டிருக்கிறது. இனித் தமிழ்நெட் செய்தியைப் படியுங்கள்......... SLA abductions of Tamil youth continue unabated in camps [TamilNet, Monday, 30 November 2009, 02:19 GMT] Several Tamil b…
-
- 0 replies
- 823 views
-
-
இளங்கோவன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சென்னை, நவ.27: முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வீட்டின் மீது வெள்ளிக்கிழமை நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இளங்கோவனுக்கு சென்னை, இந்திராநகர், 10-வது குறுக்குத் தெருவில் வீடு உள்ளது. இந்த வீட்டின் மீது வெள்ளிக்கிழமை இரவு 12 மணி அளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது குறித்து இளங்கோவனின் உதவியாளர் மோசஸ் கூறியது: வீட்டு வாசலில் ஆள் உயரத்திற்கு நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. வெளியே வந்து பார்த்தபோது, இளங்கோவன் உட்காரும் இருக்கை எரிந்து கொண்டிருந்தது என்றார். இது குறித்து இளங்கோவன் கூறுகையில், "சென்னையில் உள்ள வீட்டின் மீது யாரோ சிலர் பெட்ரோல் குண்டு வீசியதாக தகவல் …
-
- 12 replies
- 1.7k views
-
-
தளபதி பொன்னம்மான் நினைவிடத்தில் நடைபெற்ற மாவீரர் வீரவணக்க நிகழ்வு [காணொளி - படம்] தமிழீழத்தில் ஆயுதப்போராட்டம் எழுச்சி பெற தொடங்கிய காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் அடைக்கலம் தந்த கொளத்தூரில் பெரியார் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில் மாவீரர் வீரவணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. தமிழீழத்தில் சிங்கள பேரினவாதிகளின் கொடூரங்கள் அதிகரிக்க தொடங்கிய காலமான 1983 இல் தமிழீழ விடுதலைப்போராளிகளுக்கு அடைக்கலம் தந்து அனைத்து உதவிகளை புரிந்த சேலம் மாவட்ட கொளத்தூர் மக்கள் மாவீரர் நாளான 2009 நவம்பர் 27 அன்று தமிழீழ விடுதலைபோராட்டத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களுகு பெரியார் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில் வீரவணக்கம் செலுத்தினர். நேற்று மாலை சரியாக 6.05 மணியளவில் கொளத்…
-
- 2 replies
- 1.3k views
-