Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்கா மற்றும் இந்திய கடற்படையினர் இணைந்து கடல் போர்ப் பயிற்சிகளை திருகோணமலை கடற்பரப்பில் தொடங்கியுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த கூட்டுப் போர்ப் பயிற்சிகள் சில நாட்களுக்கு தொடரும் எனத் தெரிகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை படைத்துறை ரீதியாகத் தோற்கடித்த பின்னர் இந்திய மற்றும் சிறிலங்கா கடற்படையினர் இணைந்து மேற்கொள்ளும் முதலாவது கடல் போர்ப் பயிற்சி இதுவாகும். இரு நாடுகளினதும் போர்க் கப்பல்கள் இதில் பங்கேற்கின்றன. நட்புறவுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு நேற்று முன்நாள் சிறிலங்கா சென்ற இந்திய கடற்படையின் 'ஐ.என். எஸ். ஷால்' மற்றும் சிறிலங்கா கடற்படையின் 'வருண' ஆகிய போர் கப்பல்கள் இந்தப் பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இது தவிர அத…

    • 0 replies
    • 569 views
  2. சிறிலங்கா அரசு அடுத்த வருடத்துக்கான வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்காமல் அதற்குப் பதிலாக கணக்கு வாக்கெடுப்பு ஒன்றைச் சமர்ப்பிப்பதற்குத் தீர்மானித்திருக்கின்றது. அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையில் எம்பிலிப்பிட்டியவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது. தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவுக்கு வருவதால் அடுத்ததாகப் பதவிக்கு வரும் அரசினால் புதிய வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அதற்காகவே தற்போது வரவு - செலவுத் திட்டத்துக்குப் பதிலாக கணக்கு வாக்கெடுப்பு ஒன்றைச் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக

    • 0 replies
    • 854 views
  3. இந்தியா நம்ப முடியாத சக்தி என்பதை நிரூபிக்கும் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 வேங்கைகளின் வீரச் சாவுகள் ஈழவிடுதலை வரலாற்றில் திலீபன் ஒரு திருப்பு முனை. 1983 இல் கூர்மையடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டமும் இந்தியாவில் தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கு வழங்கப்பட்ட ஆயதப் பயிற்சியும் புதிய பரிமாணத்துக்கு விடுதலைப் போரை எடுத்துச் சென்றன. இந்தியாவின் வங்கதேச விடுதலையும் இந்திராவின் துணிச்சலும் தமிழீழம் விடுதலை காணும் என்ற கனவில் தமிழினம் மிதந்திருந்தது. ஆனால் இந்திராவின் மனதில் வேறு சிந்தனைகள் இருந்ததைச் சில பதிவுகள் கூறுகின்றன. அவற்றை இந்தியப் பிராந்திய அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது உண்மை என்றே கருத வேண்டியுள்ளது. அக்காலத்தில் அங்கு பயிற்சி பெற்ற…

    • 1 reply
    • 1.1k views
  4. இலங்கை முகாம்களுக்கான உதவி நிறுத்தப்படும் - பிரிட்டன் அறிவிப்பு இலங்கையின் வடபகுதியில், சுமார் இரண்டரை லட்சம் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு அவசர உதவிகளை தவிர ஏனைய அனைத்து உதவிகளையும் நிறுத்தப் போவதாக பிரிட்டிஷ் அரசாங்கம் கூறியுள்ளது. அங்கிருக்கின்ற மிகப்பெரிய முகாமுக்கு பிரிட்டிஷ் அமைச்சர் மைக் ஃபொஸ்டர் அவர்கள் விஜயம் செய்து திரும்பியதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. அதே நேரம் பருவ மழைக்காலத்தில் அங்கு ஏற்படக் கூடிய எந்தவிதமான வெள்ளமும் வடிந்தோடும் வகையில் தேவையான வடிகால் வசதிகளை தாம் முகாம்களில் அமைப்பதாக இலங்கை அரசாங்கம் கூறுகின்றது. ஆனால், அதனுடன் பிரிட்டனும், ஐநாவும் உடன்படவில்லை. மனிக்ஃபார்ம் முகாமுக…

  5. அவுஸ்திரேலியாவில் அரசியல் அடைக்கலம் கோரி வந்து கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்தவர்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இருக்கக்கூடும் என சிறிலங்கா தெரிவித்த கருத்தை அவுஸ்திரேலியா மறுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  6. [காணொளி] பாலஸ்தீன விடுதலையை ஆதரிக்கும் இந்தியா தமிழீழ விடுதலையை எதிர்ப்பது ஏன்…? – குவைத்தில் இயக்குநர் சீமான் [காணொளி] குவைத்தில் சனிக்கிழமை(03.10.2009) அன்று வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற வண்ணத்தமிழ் திருவிழா நிகழ்வில் பங்கேற்ற நாம் தமிழர் இயக்க தலைவர் இயக்குநர் சீமான் அவர்கள் ஆற்றிய எழுச்சியுரை. வீடியோ காண : http://www.meenagam.org/?p=12725

    • 1 reply
    • 1.9k views
  7. அவுஸ்திரெலியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டவர்கள் கொழும்பில் கைது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் எல்லோரும் சிங்களவர்கள் என நினைக்கிறேன். சிங்களவர்களையே கைது செய்யும் அரசு தமிழர்களை? Deported asylum seeker arrested in Colombo- Australia A Sri Lankan asylum seeker deported at the weekend has been arrested and charged with people smuggling in Colombo, the Age newspaper reported. Indika Mendis was among nine men flagged for forced deportation last week as the Government began returning people from Christmas Island to countries of origin against their will. He failed to meet criteria for protection in Australia. According to the Age newspaper in Au…

  8. இலங்கைக்கு இந்திய அமைதிப்படை சென்றிருக்காவிட்டால் தனி ஈழம் கிடைத்து 20 ஆண்டுகள் ஆகி இருக்கும் என்று இயக்குனர் சீமான் கூறியுள்ளார். பட்டுக்கோட்டையில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் தியாகி திலீபனின் 22 வது ஆண்டு நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இயக்குனரும் நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளருமான இயக்குனர் சீமான் பேசுகையில், ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தால் இலங்கைக்கு அமைதிப்படை எதற்காக சென்றதோ அதை செய்யவில்லை. மாறாக ஏராளமான ஈழத்தமிழர்களை கொன்று குவித்தனர். ஆனால் இந்திய இராணுவத்தால் தமிழக பகுதியில் சிங்களர்கள் குடியேறுவதை தடுக்க முடிந்ததா? இதைக்கண்டித்து திலீபன் உண்ணாவிரதம் இருந்து வீரமரணம் அடைந்தார். திலீபன் விட்டுச்சென்ற இலட்சிய கனவு இன்றும் …

  9. வீரகேசரி நாளேடு 10/6/2009 3:39:19 PM - தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவதால் என்ன பயன் ஏற்படப் போகிறது என்று அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தி.மு.க. சார்பில் அண்மையில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு விழாவில், 1984 முதல் தமிழகத்துக்கு வந்துள்ள ஒரு லட்சத்துக்கும் மேலான இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் நிரந்தர குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவதாக…

    • 0 replies
    • 795 views
  10. திருச்சி, கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் தங்கியிருந்த சத்யசீலன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்துத் தெரிய வருவதாவது : நேற்று மாலை (05) நடந்த இந்தக் கொலை தொடர்பாக நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொட்டப்பட்டு முகாமில் தங்கியிருந்த அய்யன் என்பவர் மரணமடைந்தார். இவரது மரண செய்தியைக் கேள்விப்பட்டு, வாழவந்தான்கோட்டை முகாமில் தங்கியிருந்த சத்யசீலன் (35) என்பவர் அங்கு வந்திருந்தார். அப்போது, ராஜகோபால், அவரது மகன்கள் ரபிநேசன், சசிதரன் மற்றும் சாந்தன் ஆகியோருக்கும், சத்யசீலனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அய்யனின் இறுதிச் சடங்குகள் முடிந்த பின்னர் சத்யசீலனுக்கும், மேற்சொன்ன நான்கு பேருக்கும் இட…

  11. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சிறிலங்கா தோற்கடித்ததால் முழு உலகமுமே பெருமளவில் பயனடைந்துள்ளது என சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். "தனியாளாக நின்று எமது படையினர் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததன் மூலம் உலக சமூகம் பெருமளவில் பயனடைந்துள்ளது. சிறிலங்காப் படையினர் ஆற்றிய இந்தச் செயலுக்காக அவர்கள் பாராட்டப்பட வேண்டும். அவர்கள் திட்டப்படக்கூடாது. தோற்கடிக்கப்படவே முடியாத இயக்கம் என எல்லோரும் நினைத்திருந்த ஒரு அமைப்பை அவர்கள் வெற்றி கொண்டுள்ளார்கள்" என்றார் மகிந்த. தென் மாகாண சபைத் தேர்தலுக்கான பரப்புரை நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. மாத்தறையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு மகி…

  12. கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை! கற்பழிப்பில் கைதேர்ந்த சிங்கள இராணுவம்: செய்தி விமர்சனம் கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை! கற்பழிப்பில் கைதேர்ந்த ஸ்ரீலங்கா இராணுவத்தை கட்டியம் கூறி நிரூபிக்கத் தேவையில்லை! - ஹைத்தி நாட்டில் அந்நாட்டுப் பெண்களை தான்தோன்றித்தனமான பாலியல் வல்லுறவு! - கிரிசாந்தி பாலியல் வல்லுறவு – கொலை – கீழதரமான செயலுக்கு எடுத்துக்காட்டு - சாரதாம்பள் பாலியல் வல்லுறவு – கொலை – சரித்திரம் அழிந்துபோகாத பதிவு - கோணேஸ்வரி கற்பளிப்பு – கொடூரத்தின் ஒரு எடுத்துக்காட்டு - தர்சினி பாலியல் வல்லுறவு – கொலை தரங்கெட்ட ஸ்ரீலங்கா இராணுவத்தின் பதிவு! - 13 வயதான மனோதுஸ்காவை கற்பளிப்பு மனித குலத்திற்கே கேவலமான பதிவு! - தென்னிலங்கையில் ம…

  13. மெனிக்பாம் இடைத்தங்கல் முகாமின் ஸோன் 3 முகாமில் மாத்திரம் 2000 பேர் விசேட தேவைக்குட்பட்டோராக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. முகாம்களில் உள்ளவர்களின் விபரங்கள் அடங்கிய கணக்கெடுப்பு ஒன்றின் மூலம் இது அறிய வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தச் சூழ்நிலையில் காயமடைந்து அங்கங்களை இழந்தவர்கள், கண்பார்வை இழந்தவர்கள், வாய்பேச முடியாமலும், காது கேளாத நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் மற்றும் இயற்கையிலேயே வலது குறைந்தவர்கள் போன்றோர் இந்த எண்ணிக்கையில் அடங்குவதாகத் தெரிகின்றது. யுத்தத்தினால் இடம்பெயர்ந்தது மட்டுமன்றி, நேரடி தாக்கங்களுக்கு உள்ளாகி உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வுக்கான நடவடிக்கைகளுக்காகவே இந்தத் தகவல்கள் சேகரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது…

    • 0 replies
    • 638 views
  14. பருவப் பெயர்ச்சி மழை இந்த மாதம் தொடங்க உள்ள நிலையில் வன்னி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் நிலை குறித்து ஐக்கிய நாடுகள் சபை நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 477 views
  15. தமிழ் - முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து சிறுபான்மையினக் கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தாம் சேர்ந்து கொள்ளப் போவதில்லை என துணைப் படைக் குழுவின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். தமிழ் - முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து சிறுபான்மையினக் கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தாம் சேர்ந்து கொள்ளப் போவதில்லை என சிறிலங்கா துணைப் படைக் குழுவின் தலைவர்களில் ஒருவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். இனி நடக்க இருக்கும் தேர்தல்களை எதிர்கொள்வதற்கு ஏற்ற வகையில் தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கு முயற்சிக்கப்படுகிறது. இது க…

  16. தடுப்பு முகாமில் கடந்த இரு வாரத்திற்கு முன்பு இடம்பெற்ற தமிழ் மக்களுக்கு எதிரான சிங்கள இராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் சம்பந்தப்பட்ட இரண்டு சிங்கள இராணுவத்தினரை சிங்கள அரசின் இராணுவ பொலிசார் விசாரணை செய்யவுள்ளதாக அமைச்சர் ராஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார். இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார். தமது அரசாங்கம் நேர்மையானது எனவும் சட்ட வரயரைக்குள் செயற்படுவது எனவும் காட்டுவதற்காகவே இந்த நாடகம் என மக்கள் கூறுகின்றனர். ஏனெனில் மக்கள் மீது சுட்டது இராணுவம் என்றாலும் இந்த சம்பவம் திட்டமிட்டு உயர் அதிகாரிகளின் சம்மதத்துடனேயே செய்யப்பட்டது. முட்கம்பிவேலிக்கு வெளியே சென்ரால் சுடப்படுவீர்கள் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது மட்டுமன்றி இது முதலாவது சம்பவம் அல்ல இ…

    • 0 replies
    • 739 views
  17. அமெரிக்க அரசு தி|ணைக்களம் அண்மையில் பாலியல் குற்றம் தொடர்பாக சிறிலங்கா பற்றி இரண்டு அறிக்கைகளுக் மூன்று வியாக்கியானங்களும் விட்டுள்ளன இவை ஒன்றுடன் ஒன்று முரண்படு காணப்படுகின்றன. இந்த அறிக்கைகள் ஹிலாரி கிளிங்ரன் மற்றும் மெலானி வெரேர் ஆகியோரினால் விடப்பட்டுள்ளது. ஒருவர் அமெரிக்காவின் அரசு துறை செயலர், இன்னொருவர் பெண்கள் விவகாரங்களுக்கான பொறுப்பானவர். ஆகவே அரசு துறை செயலகத்திற்கு உரை எழுதுவதற்கு நல்ல ஆட்கள் இல்லை என சிங்கள நாளிதள் கிண்டலடித்துள்ளது. அதாவது ஹிலாரி கிளிங்ரன் அவர்கள் பாலியல் துன்புறுத்தல் இலங்கையிலும் ஓர் போர் ஆயுதமாக பாவிக்கப்பட்டது என குறிப்பிட்டார். பின்னர் அப்படி கருத்துப்பட அம்மா சொல்லவில்லை என சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்தார். அதன் பி…

    • 0 replies
    • 928 views
  18. தற்போது அவுஸ்ரேலியா செல்லும் அகதி படகுகளுக்குள் விடுதலைப்புலிகள் இருக்கலாம் என அவுஸ்ரேலியாவிற்கான இலங்கைதூதர் சேனக வலகம்பாய அவுஸ்ரேலிய அரசை எச்சரித்து இருந்தார். அதாவது போரில் காயமடைந்த புலிகள் தப்பி படகுகளில் அகதிகள் போல் அவுஸ்ரேலியாவுக்கு நுழைவதாக எச்சரித்து இருந்தார். இதற்கு பதிலளித்த அவுஸ்ரேலிய உள்னாட்டு அமைச்சர் திரு பிரெண்டன் ஓ கோனர் அவர்கள் விடுதலைப்புலிகள் யாரும் அகதி படகுகளில் வந்ததாக இதுவரை தகவல்கள் இல்லை என்றும் தாம் மிக இறுக்கமான பரிசீலனைகளை கைக்கொள்வதாகவும் கூறினார். விடுதலைப்புலிகளில் இருந்ததாகவோ அன்றி காயப்பட்ட அல்லது அதற்குரிய ஆதாரங்கள் எவையும் விடுதலைப்புலிகள் என அடையாளப்படுத்தவில்லை எனவும் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு அவுஸ்ரேலியாவில் இருந்த…

  19. தி கிரேட் டிக்டேட்டர் படத்தில் உலக வரைபடத்தை தன் கையில் வைத்துக் கொண்டு குரங்காட்டம் ஆடிக் கொண்டிப்பார் ஹிட்லர். மேதை சாப்ளினின் நடிப்பில் அது அவளவு நகைச்சுவாய இருக்கும். தமிழக முதல்வர் கருணாநிதியின் தற்கால செயல்பாடுகளை வைத்துப் பார்க்கும் போது அவரும் தமிழக வரைபடத்தை கையில் வைத்துக் கொண்டு குரங்காட்ட குத்துக்குரணம் ஒன்றை நடத்திக் கொண்டிருப்பது நமக்குப் புரிகிறது. பலர் கருணாநிதியை மூத்த திராவிட இயக்கத்தலைவர் என்பதால் விமர்சிக்கக் கூடாது என்கிறார்கள். பலர் மௌனமாக கருணாநிதியின் அல்லக்கையாக மாறுவதற்கான தருணத்தைக் எதிர்பாத்துக் காத்திருக்கிறார்கள். கவிஞர்கள், திரைத்துறையினர், தமிழறிஞர்கள், இலக்கியவாதிகள் என்று பலரும் கருணாநிதியை சகித்துக் கொண்டிருப்பதற்கு இதுவே காரணம். …

  20. வன்னியில் தடுப்பு முகாம்களுக்குள் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் அடைத்து வைப்பதற்காக அனைத்துலக நிதி வழங்குநர்களிடம் இருந்து மேலும் நிதி உதவிகளைக் கோரி உள்ளது சிறிலங்கா அரசு. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 452 views
  21. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது உட்பட மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அரசுக்கு எதிரான கட்சிகளை உள்ளடக்கியதாக ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் எதிர்க்கட்சிகளின் முன்னணியை அமைப்பதற்கு சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தக் கூட்டமைப்பில் மூன்று கட்சிகள் தற்போது இணைந்திருக்கும் நிலையில் பதினைந்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களை உள்ளடக்கியதாக ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்படும் என ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் திச அத்தநாயக்க தெரிவித்திருக்கின்றார். நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இவ்வாறான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கிக்கொள்வதற்கான அங்கீகாரம் வழங…

    • 0 replies
    • 681 views
  22. ஆடை ஏற்றுமதிக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனேயே அரசு இருப்பதாக தெரிவித்திருக்கும் வெளிநாட்டு விவகார அமைச்சர் ரோகித போகல்லாகம, எதிர்க்கட்சிகளே இந்த விடயத்தில் எதிர்மறையான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார். வெளிவிவகார அமைச்சில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அமைச்சர் போகல்லாகம மேலும் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது: "ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை தொடர்பாக நாம் கடந்த இரண்டு வருடங்களாகச் செயற்பட்டு வருகின்றோம். இந்தச் சலுகையை வழங்கும் 27 நாடுகளில் 20 நாடுகளுடன் இதுவரையில் பேசிவிட்டோம். அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரக் கொள்கைகளுக்கான பிர…

    • 0 replies
    • 766 views
  23. மொனராகலையில் போதி மரம் முறிந்து விழுந்ததில் 27 பேர் வைத்தியசாலையில் அனுமதி வீரகேசரி இணையம் 10-4-2009 11:07:46 AM மொனராகலை ஒபேகொடவில் போதி மரம் முறிந்து விழுந்ததில் மத வழிபாட்டில் ஈடுபட்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 27 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். நேற்று பெளர்ணமி தினமாகும் இது தொடர்பான மத வழிபாடு அப் பகுதியிலுள்ள பெளத்த விகாரையொன்றல் நடை பெற்றுக் கொண்டிருந்த வேளை போதி மரம் (அரச மரம்) சீரற்ற கால நிலை காரஷமாக முறிந்து விழுந்ததாக சம்பவம் தொடர்பாகக் கூறப்படுகின்றது. வீரகேசரி

    • 5 replies
    • 2.4k views
  24. வன்னிப் பகுதியில் 30 வீதம் சிங்களவர்களை குடியேற்றுவதற்கு அரசு திட்டமிட்டுச் செயற்படுவதாகக் குற்றம்சாட்டியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், அதனால்தான் கண்ணிவெடிகளை அகற்ற வேண்டும் எனக் கூறி மீள்குடியேற்றத்தை அரசு காலம் கடத்திவருவதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 532 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.