Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விஞ்ஞான பாடம் மாத்திரமன்றி அனைத்து பாடங்களையும் கற்ற மாணவர்களுக்கும் தாதியர் பணியில் நுழைவதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கு தயாராக உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அத்துடன் நியாயமான மற்றும் திறந்த சந்தைக்கு இடமளிக்கும் வகையில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டம் நீக்கப்படும் எனவும் இலங்கை மருத்துவ சபை சட்டமும் முற்றாக இல்லாதொழிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை, போதைப்பொருள் பரிசோதனைக்கான அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தை அமைப்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆதரவையும் வழிகாட்டலையும் எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சர் டுவிட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/26…

  2. Published By: DIGITAL DESK 3 02 AUG, 2023 | 04:00 PM (எம்.வை.எம்.சியாம்) சுதந்திரத்துக்கு பின்னர் ஆட்சியிலிருந்த அனைத்து தரப்பினருமே இந்த நிலைக்கு நாட்டை கொண்டு வந்துள்ளனர். இன்று தலைதூக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டுக்கு யார் பொறுப்பு கூறுவது? ஆட்சியாளர்களை நாம் நிராகரிக்கின்றோம். தேர்தல் ஒன்றை நடத்தி திறமையானவர்களை கொண்டு வந்து வயோதிபர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியுமான தரப்பினரிடம் பொறுப்புகளை வழங்க வேண்டுமென மிஹிந்தலை மகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குனுவெவே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அநுராதப…

  3. (இராஜதுரை ஹஷான்) தேசிய கீதத்தை திரிபுபடுத்தி பாடுவது தண்டனைக்குரிய தவறாகும். தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைப்பதும் தவறு. புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் 13 ஆவது அரசியலமைப்பு தேவையற்றதாகும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தும் அதிகாரம் தனக்கு இல்லை பாராளுமன்றமே அதை தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வக்கட்சி மாநாட்டில் தெளிவாக குறிப்பிட்டார். நாட்டில் தமிழர…

  4. (நமது நிருபர்) உள்நாட்டு கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுக்காக இலங்கையில் சட்டபூர்வமான நாணயமாக இலங்கை ரூபா தொடர்ந்து அமுலில் இருக்கும். இந்திய ரூபா குறித்து வெளியாகும் பொய்யான கருத்துக்கள் குறித்து மக்கள் அவதானம் செலுத்த கூடாது என இலங்கை மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது. இந்திய ரூபா தொடர்பில் மக்கள் மத்தியில் பரப்பப்படும் தவறான கருத்துக்களை தெளிவுப்படுத்தும் வகையில் மத்திய வங்கி விசேட அறிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பன்னாட்டு வர்த்தகம் மற்றும் எல்லை கடந்த வங்கித்தொழில் கொடுக்கல் வாங்கல்கள் ஆகியவற்றை வசதிப்படுத்தும் வகையில் இலங்கை மத்திய வங்கி காலத்துக்கு காலம் பெயர் குறிப்பிடப்பட்ட வெளிநாட்டு நாணயங்களாக தெரிவு செய்ய…

  5. Published By: VISHNU 02 AUG, 2023 | 04:12 PM யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், செவ்வாய்க்கிழமை (01) போயா தினத்தை முன்னிட்டு பௌத்த கொடிகள் கட்டி, புத்தர் சிலை வைத்து வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. பௌத்த கொடிகள் பல்கலையினுள் கட்டிக்கொண்டிருந்தபோது அதனை தடுப்பதற்கு கலைப்பீட 3ஆம் ஆண்டு தமிழ் மாணவர்கள் அங்கு சென்றவேளை, அங்கு வந்த ஒழுக்காற்று விசாரணை அதிகாரி மாணவர்களை அங்கு செல்ல வேண்டாம் என தடுத்துள்ளார். அதனையும் மீறிச் சென்ற மாணவர்கள் கொடிகள் கட்டுவதை தடுத்தனர். அதனைத் தொடர்ந்து விஞ்ஞான பீடத்தின் பின்புறத்தினூடாக புத்தர் சிலை எடுத்து வரப்பட்டது. இதன்போது ஒரு கறுப்பு நிற மர்ம வாகனமும் பல்கலையினுள் நுழைந்தது. …

  6. Published By: VISHNU 02 AUG, 2023 | 02:34 PM யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவை மையமாக கொண்டு வட மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோண வலயத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் 2 ஆம் திகதி புதன்கிழடை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். செப்டம்பர் 02 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக தென்னை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவை மையமாக கொண்டு வட மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோணத்தை ஆரம்பிக்க இருப்…

  7. Published By: VISHNU 02 AUG, 2023 | 03:59 PM தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளையும் அவர்களது அரசியல் அபிலாசைகளையும் உண்மைகளையும் வெளியுலகிற்குக் கொண்டு சென்றதன் காரணமாகவே தமிழ் ஊடகவியலாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலைகளுக்கு அரசு முழுப்பொறுப்புடையது. அதனால் எந்தப் படுகொலைகளுக்கும் நீதி வழங்கப்படவில்லை என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்ததார். சாளரம் பத்திரிகையின் ஆசிரியரும் முன்னாள் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் தலைவருமான சகாதேவன் நிலக்சனின் 16 ஆவது நினைவேந்தல் யாழ்ப்பாண ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (01) சிரேஷ்ட ஊடகவியலாளர் இ.தயாபரன் தலைமையில் இடம்பெற்றது. …

  8. விரைவில் மீண்டும் நாடு முழுவதும் மின்வெட்டை அறிவிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையின் கடுமையான தாக்கம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொறியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். நீர்மின் உற்பத்தி நாளுக்கு நாள் குறைந்து வருவதால் விவசாயத் தேவைகளுக்காக சமனல நீர்த்தேக்கத்திலிருந்து நீர் விடுத்தால் தென் மாகாணத்திற்கு 4 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மின் உற்பத்தி நிலையங்கள் தனியார் டீசல் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் ஏனைய அனைத்து மின் உற்பத்தி…

  9. 02 AUG, 2023 | 01:09 PM போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலிக்குச் செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த இளம் தம்பதியினர் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (01) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், சங்கானைப் பிரதேசத்தில் வசிக்கும் இளம் தம்பதியினரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இவர்களின் பயணப்பொதிகளை சோதனையிட்டபோது, பொய்யான தகவல்களுடன் தயாரிக்கப்பட்ட இரண்டு கடவுச்சீட்டுகளும் போலி வீசாவும் இந்த இளைஞனிடம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, குறித்த யுவதியை சோதனைக்கு உட்படுத்தியபோது அவரது உள்ளாடைக்குள் மறை…

  10. ந்திய வர்த்தக குழுவொன்று வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் மாகாண அரசாங்க அதிகாரிகளை திங்கட்கிழமை (31) சந்தித்து மாகாணத்தில் பல்வேறு துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையதாக தெரிவிக்கப்படுகின்றது . யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தினால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சந்திப்பின் போது கைத்தொழில், நகர அபிவிருத்தி அதிகார சபை, முதலீட்டு சபை, கூட்டுறவு, பால் பண்ணை மற்றும் கால்நடை பராமரிப்பு ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தைத் தொடர்ந்து, மேம்படுத்தப்பட்ட புவியியல் மற்றும் வர்த்தக இணைப்புகள் கலந்துரையாடப்பட்ட விடயங்களில், இந்திய தொழில்கள் கூட்டமைப்பு மற…

    • 2 replies
    • 336 views
  11. Published By: VISHNU 01 AUG, 2023 | 04:13 PM இறுதிப் போரில் படைத்தளபதியாக இருந்து போருக்குப் பின் நாட்டை விட்டு அமெரிக்கா சென்ற சரத் பொன்சேகா, தற்போது இலங்கை சிங்கள புத்த நாடு என்கிறார் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தம் தெரிவித்தார். அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது, நல்லாட்சி அரசில் சஜித் பிரேமதாசா அமைச்சராக இருந்தார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆயிரம் புத்தர் சிலைகளை அமைப்போம் எனக் கொக்கரித்தார். கடந்த சில வாரங்களாகவே மேனாள் படைத்தளபதி சரத் வீரசேகரா கொக்கரித்து வருகிறார். இலங்கை சிங்கள புத்த நாடு. தீவு எங்கும் புத்தர் சிலைகளை வைப்ப…

  12. மட்டக்களப்பில் 29 மாணவிகளை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் - நீதிமன்ற எடுத்துள்ள அதிரடி முடிவு! Vhg ஆகஸ்ட் 01, 2023 மட்டக்களப்பு – ஏறாவூர்ப் பிரதேசத்திலுள்ள பெண்கள் உயர்தர பாடசாலையொன்றில் ஆங்கிலபாட ஆசிரியர் ஒருவர் 29 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டுப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணை நேற்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆரம்பமானது. மட்டக்களப்பு மேலதிக நீதிபதியும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியுமான எஸ்.அன்வர் சாதாத் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகவில்லை. சந்தேகநபர் தானே வழக்கைப்பேச அனுமதிக்குமாறு நீதிபதியைக்கோரிய போது சட்டத்தரணியை நியமிப்பதற்க…

  13. சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்கிறது யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமையும் (01) இடம்பெறுகின்றது. தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வேண்டுமென வலியுறுத்தியும் தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தியும் கடந்த மே 03 ஆம் திகதி தொடக்கம் எதிர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக திங்கட்கிழமை (31) பி.ப 4.00 மணிக்கு ஆரம்பித்த ச கவனயீர்ப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை (01) பி.ப 4.00 மணிவரை இடம்பெறவுள்ளத…

  14. Published By: VISHNU 31 JUL, 2023 | 09:26 PM முல்லைத்தீவு – அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் ஒன்று கூடிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இடம்பெற்றது. இதன்போது மகாவலி அபிவிருத்தித் அதிகார சபையே நிலங்களை அபகரிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும் என பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. https://www.virake…

  15. சிறுநீரக சிகிச்சையின் பின் உயிரிழந்த சிறுவன் : இலங்கையில் மீண்டும் ஒரு மருத்துவ தவறு! லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் மரணம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது. ‘பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் ஆகிய இரு தரப்பினரும் விரிவான பகுப்பாய்வு இல்லாமல் சம்பவம் குறித்து முன்கூட்டியே முடிவுகளை எடுப்பது நியாயமற்றது.’ என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சாமில் விஜேசிங்க தெரிவித்தார். ‘எனவே, மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிவதற்காக, சம்பவம…

  16. மீண்டும் ரணிலை ஜனாதிபதியாக்கப் போவதில்லை : பொதுஜன பெரமுன உறுதி! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் மட்டுமே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் மட்டுமே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென நாம் அவருக்கு அழைப்பு விடுக்கிறோம். நீங்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவானவர்கள் ஆயின், இப்போதே தயாராகுங்கள். 2024 ஆம் ஆண்டில் நாம் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டுவருவோம். நாங…

  17. இலங்கையின் அரசியல் அமைப்பையே தீயிட்டு எரிக்கும் நிலை ஏற்படும்! இலங்கை அரசியல் அமைப்பையே தீயிட்டு எரிக்கும் நிலை ஏற்படலாம்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது தொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”தமிழ் மக்கள் விரும்பும் தீர்வினை நாங்கள் வழங்க முடியாது” என்று அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இலங்கை அரசியல் அமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தத்தை வழங்குவதற்கு நாடாளுமன்றத்தில் உள்ள எவரது அங்கீகாரமும் தேவையில்லை. ஆனால் எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 13 ஆவது …

  18. தேசிய மக்கள் சக்திக்கு தடை உத்தரவு கொழும்பில் பல முக்கிய இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தடை விதித்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. கோட்டை பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட விளக்கமளிப்பிற்கு அமைய கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி இன்று நண்பகல் 12.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை பின்வரும் இடங்களில் போராட்டங்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாத…

    • 0 replies
    • 235 views
  19. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் வொசிங்டனுக்கு மீள அழைக்கப்படவில்லை என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங், ட்விட்டரில் செயலூக்கமுள்ளவராக இருப்பதுடன், இலங்கை தொடர்பான முக்கியமான சமூக மற்றும் அரசியல் விவகாரங்களில் அமெரிக்க அரசாங்கத்தின் கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். ஜூலி சாங் மீண்டும் அமெரிக்காவிற்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளதாகவும், டிசம்பரில் இலங்கையை விட்டு வெளியேறுவதாகவும், அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் ஜூலி சாங்கை திரும்ப அழைக்க அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும், அந்த தகவல் முற்றிலும் போலியானது எனவும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகமும், உறு…

  20. கிளிநொச்சியில் சமஸ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி போராட்டம் Published By: VISHNU 31 JUL, 2023 | 01:23 PM கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் சமஸ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத அதிகாரப்பகிர்வை உறுதி செய்யக்கோரி முன்னெடுக்கப்பட்ட 100 நாள் செயல் திட்டத்தின் ஓராண்டை முன்னிட்டு குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை (31) வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்கள…

  21. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய அனுபவமிக்க விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் வெளியேறியதன் காரணமாக அந்தப் பல்கலைக்கழகத்தின் பல பீடங்களில் அன்றாடக் கற்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2022 ஜனவரி முதல் இந்த ஆண்டு மே வரை 70க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தரும் ஊடகப் பேச்சாளருமான பேராசிரியர் டபிள்யூ.எம். டெரன்ஸ் மதுஜித் இது குறித்து தெரிவிக்கையில் : “பல ஆசிரியர்கள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறி வெளிநாடு சென்றுள்ளனர். இந்நிலை மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம் மற்றும் பல் மருத்துவ பீடங்களையே பிரதானமாக…

  22. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் யாழில் போராட்டம் written by adminJuly 31, 2023 வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில், தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வு பயண செயற்பாட்டின் 100 நாள் செயற்பாட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டும் தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வினை நோக்கிய பயணத்திற்கு வலுச் சேர்க்கும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. யாழ்ப்பாணம் பழைய பூங்கா முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பொதுமக்களுக்கு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவால் தயாரிக்கப்பட்ட மக்கள் பிரகடனம் விநியோகிக்கப்பட்டது https://globaltamilnews.net/2023/193522/

  23. இந்த வருடம் நேற்றுமுன்தினம் (28) வரை 57 நாடுகளைச் சேர்ந்த 1767 பேருக்கு பார்வை வழங்குவதற்கு இலங்கையர்கள் பங்களித்துள்ளதாக இலங்கை கண் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. ஜப்பான், எகிப்து, பாகிஸ்தான், தாய்லாந்து, மலேசியா, சிரியா உள்ளிட்ட 57 நாடுகளின் 117 நகரங்களில் பார்வையற்றோருக்கான கண்களை இலங்கையர்கள் தானம் செய்துள்ளதாக இலங்கை கண் மருத்துவ சங்கத்தின் சிரேஷ்ட முகாமையாளர் ஜகத் சமன் மாதராராச்சி தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள கண் வைத்தியர்களின் பரிந்துரைகளின்படி, 541 இலங்கையர்கள் தங்கள் கண்களை தானம் செய்துள்ளனர். மேலும், இலங்கையர்கள் கண் தானம் செய்வதற்கு அதிகூடிய விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், 22 இலட்சம் இலங்கையர்கள் கண் தானம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்து…

  24. ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளை மறுதினம் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 80 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 55 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 45 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. https://thinakkural.lk/article/266053

  25. வவுனியாவைச் சேர்ந்த நால்வர் தமிழகத்தில் தஞ்சம் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக புகலிடம் தேடி இலங்கை வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை இன்று திங்கட்கிழமை (31) காலை சென்றடைந்துள்ளனர். தகவல் அறிந்த தமிழக கடற்படையினர் அவர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இவ்வாறு தஞ்சமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்,மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என தெரிய வந்துள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https:…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.