ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
செவ்வாய்க்கிழமை, 29, செப்டம்பர் 2009 (11:48 IST) நவீன கால ராவணனாக ராஜபக்சே இருக்கிறார்: விஜயகாந்த் இலங்கைக் கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து, தே.மு.தி.க., தலைவர் விஜய்காந்த், டில்லியில் இன்று உண்ணாவிரதம் இருந்து வருகிறார். காலை 9மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதம் மாலை முடிவடைகிறது. விஜயகாந்த் உண்ணாவிரதத்தின் போது செய்தியாளர்க்ளுக்கு பேட்டி அளுத்தார். ‘’நாடு முழுவதும் தீமையை அளிக்கும் தசரா கொண்டாடப்படுகிறது. நேற்று பிரதமரும் , காங்., தலைவர் சோனியாவும் தசராவில் கலந்து கொண்டனர். ராவணன் வதத்தை பார்த்தனர். நவீன கால ராவணனாக ராஜபக்ஷே இருக்கிறார். இலங்கை கடற்படையினர் மீது எப்போது இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழக மீனவர்கள் தெ…
-
- 8 replies
- 954 views
-
-
வருகிற ஜனவரி மாதம் கோவையில் ஒன்பதாவது உலகத் தமிழ்மாநாட்டை நடத்தப்போவதாகவும் இப்போதிருந்தே மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அதற்காக உழைக்க வேண்டும் என்றும் அறிவித்தார் தமிழக முதல்வர் கருணாநிதி. ஆனால் மாநாடு அறிக்கப்பட்ட நிலையில் உலகெங்கிலும் அதற்கு கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. ஈழத் தமிழ் மக்களின் படுகொலை உலகெங்கிலும் உள்ள தமிழர்களிடம் வேதனை அலைகளை எழுப்பியிருக்கும் நிலையில் இப்படியான மாநாடு தேவையா? என்றெல்லாம் கேள்விகள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு மட்டத்தில் இம்மாநாட்டிற்காக எடுத்த முயர்சிகளுக்கு போதிய வரவேற்பும் கிடைக்கவில்லையாம். இந்நிலையில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மையத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் மாநாட்டுத் தேதியில் மாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. அ…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கையின் புதிய தலைநகரமாக ஹம்பாந்தோட்டை நகரத்தை மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். 200 வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் தலைநகராக பிரகடனப்படுத்தப்பட்ட கொழும்பு தற்போதைய தேவைகளுக்கு ஒவ்வாத வகையில் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் தேவைகளை சரியான வகையில் பூர்த்தி செய்யும் நகரமாக ஹம்பாந்தோட்டை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். மாத்தறையில் அமைக்கப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப மைய திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பயனடையக் கூடிய வக…
-
- 0 replies
- 1.3k views
-
-
வவுனியா மெனிக்பார்ம் முகாமில் கடந்த 26 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தை பயன்படுத்தி அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சேறுபூசும் நடவடிக்கை ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பகிரங்க வாக்குமூலம் ஒன்றின் மூலம் இந்த சேறுபூசும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள உள்ளது. மெனிக்பார்ம் முகாமில் உள்ளவர்கள் ஊடாக இந்த சேறு பூசும் வாக்குமூலத்தை பெற்றுக் கொள்ளுமாறு அரசாங்கம் பாதுகாப்பு தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. இதன் மூலம் முகாம்களில் உள்ள மக்களின் மனநிலையில் வீழ்ச்சியை ஏற்படுத்தலாம் என புலனாய்வுத்துறையினர் வழங்கியுள்ள ஆலோசனைகளின்படி இந்த நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. மெனிக்பார்ம் முகாமில் நடைபெற்ற இந்த சம்பவத்தை அடுத்து …
-
- 0 replies
- 1.1k views
-
-
நன்றி: நக்கீரன் - புரட்டாதி 24, 2009 முல்லைத்தீவு கடற்புறத்தே நின்றுகொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பாரிய பின்னடைவுக்கு முதற்காரணமாய் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறிப்பிட்டது. "2001-ம் ஆண்டு தன்னிச்சையான சண்டை நிறுத்தம் அறிவித்து அனைத்துலக வழிநடத்துதலில் 2002-ம் ஆண்டு சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு ஒத்துக் கொண்டமை யினைத்தான். சமாதானப் பேச்சுவார்த்தைகள் துரோகத் தனம் போர்த்த அரசியல்-ராணுவப்பொறி என்பதை கணித்தறிய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தவறியதெப்படி என்ற கேள்வி இன்றும் புரியாத புதிராகவே இருக்கிறது. நான் மிகவும் மதிக்கும் உலகத் தமிழர்களில் ஒருவர் தங்கவேலு. அப்பழுக்கில்லா தமிழ் ஈழ ஆர்வலர். கனடா நாட்டு டொராண்டோ நகரில் இப்போது வாழ்ந்து வரும் இவர் கூர்த்த …
-
- 35 replies
- 6.2k views
-
-
இந்தியக் கடற்பரப்புக்குள் அத்துமீறிப் நுழைந்து மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டப்படும் சிறிலங்காவைச் சேர்ந்த 46 கடற்றொழிலாளளர்களை கைது செய்துள்ள இந்திய கரையோரக் காவல் படையினர், அவர்களின் ஆறு படகுகளையும் கைப்பற்றியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை அதிகாலையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அந்தவேளையில் இவர்கள் அனைத்துலக கடல் எல்லையைத் தாண்டிச் சென்றிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்றொழிலாளர்கள் அனைவரும் நேற்றைய நாளே சென்னை, காசிமேடு காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டனர். இதேவேளையில் நாகபட்டினம் கடற்பகுதியில் சிறிலங்கா கடற்படையினர் நேற்று நடத்திய தாக்குதல் ஒன்றில் இந்தியக் கடற்றொழிலாளர்கள் மூவர் காயமட…
-
- 1 reply
- 522 views
-
-
இலங்கை போர் பற்றிய அறிக்கை சமர்ப்பிப்பு ஒத்திவைப்பு பற்றியமை தொடர்பாது ( ஈழநாதம் ஆசிரியர் பத்தி) கடந்த 21 ஆம் திகதி அமெரிக்க வெளிவிவகார அமைச்சிடம் அமெரிக்க அரச தலைவர் அலுவலகத்தினால் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட அறிக்கை, திட்டமிடப்பட்ட அத்திகதியில் சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தற்போது தெரியவந்திருக்கிறது.சம்பந்த
-
- 0 replies
- 695 views
-
-
குச்சவெளிக்கும் நிலாவெளிக்கும் இடையே உள்ள கரையோர பிரதேசங்களில் உள்ள தமிழர் பொதுக்காணிகளில் 500 ஏக்கர் நிலத்தினை சிங்கள அரசு சுற்றுலாத்துறை என்ற பெயரில் அபகரித்துள்ளது.இந்த காணிகளை பிரபல சிங்கள, இந்திய கம்பனிகளே வாங்கி முதலீடு செய்யவுள்ளன. இந்த காணிகள் தமிழர்களின் பொது பயன்பாட்டிற்கென தமிழ் சான்றோர்களால் சுத்திகரிக்கப்பட்டு அவை பொதுப்பயன் பாட்டிற்கு என 40 வருடங்களுக்கு முன்பு ஒதுக்கப்பட்டது. இதில் தமிழ் பல்கலைக்கழகம் அமைக்கவெனவும் 100 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டு அதில் 45 வருடங்களுக்கு முன்பு அத்திரவாரமும் போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த முயற்சியில் ஈடுபட்டவர்கள் ஒருவர் கொழும்பிலும் இன்னொருவர் அமெரிக்காவிலும் தற்போதும் இருக்கின்றனர். இவர்கள் யாரவது இந்த முயற்சியினை மீ|…
-
- 0 replies
- 670 views
-
-
அமைச்சுப்பதவி வகிக்க கூடாது என சத்தியக்கடிதமும், மீண்டும் அமைச்சுப்பொறுப்பும்! அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது நிதியமைச்சின் செயலாளர் சுமித் அபேசிங்கவின் பதவிக்காலத்தை 2010ம் ஆண்டு செப்டம்பர் வரையில் நீடித்துள்ள நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று பிற்பகல் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் கலாநிதி பி.பீ. ஜயசுந்தரவை நிதியமைச்சின் செயலாளராக நியமித்துள்ளார். அரச நிறுவனம் ஒன்றை தனியார் மயப்படுத்தியதில் அரசாங்கத்திற்கு சார்பற்ற முறையில் நடந்து கொண்டதாக உயர்நீதிமன்றத்தினால் குற்றம் சுமத்தப்பட்ட ஜயசுந்திரவை, 5 லட்சம் இழப்பீடு செலுத்துமாறு உத்தரவிட்ட முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா தலைமையிலான நீதியரசர்கள், தொடர்ந்து அரச பதவிகள் எதனையும் வகிக்க …
-
- 0 replies
- 636 views
-
-
இலங்கை மீது தெரிவிக்கப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் என்பன குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை விவாதிக்க வேண்டும் என்று ஐ.நா. அரசியல் பொதுச் செயலாளர் லைன் பாஸ்கோவே தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 296 views
-
-
புகழ்பெற்ற கதிர்காமம் முருகன் கோவில் புத்த பிக்குகளின் கட்டுப்பாட்டில் திகதி: 29.09.2009 // தமிழீழம் இலங்கையில் உள்ள புகழ்பெற்ற கதிர்காமம் முருகன் கோவிலை புத்த பிக்குகள் தங்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இக்கோவிலின் அருகே சிறிய புத்தர் கோவிலையும் கட்டியுள்ளனர். இது இலங்கையில் வசிக்கும் தமிழர்களை மிகவும் வேதனை அடைய வைத்துள்ளது. இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ள கதிர்காமத்தில் உள்ள முருகன் கோவில் மிகவும் புகழ் பெற்றது. இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களும் இங்கு வந்து வழிபடுவது வழக்கம். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோவிலின் நிர்வாகப் பொறுப்பை பித்த பிக்குகள் கைகளுக்கு ச…
-
- 0 replies
- 860 views
-
-
சிறிலங்காப் படையினர் தெளிவான அனுமதி வழங்காதவரை இடம்பெயர்ந்த மக்களில் ஒருவரைக்கூட மீளக்குடியமர்த்தப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார் சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 300 views
-
-
சிறிலங்காவிற்கு வழங்கப்பட்டு வரும் ஏற்றுமதி வரிச் சலுகையைத் (ஜி.எஸ்.பி) தொடர்வதா இல்லையா என்பது குறித்து இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணைக்குழு அடுத்த மாத நடுப்பகுதியில் கூடி ஆராய இருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 307 views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தற்போது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பழிவாங்குவதற்கு 100 பிரபாகரன்கள் உருவாகி வருவார்கள் என்று தெரிவித்துள்ளார் சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர. பிரபாகரன்கள் மட்டுமல்லாது சிங்களச் சமூகத்தினர் அனைவருமே அவரைப் பழிவாங்குவார்கள் எனவும் அவர் கூறினார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 288 views
-
-
வன்னியில் தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களுக்கு கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் பயணம் மேற்கொண்டு நிலைமைகளை நேரில் பார்வையிட்டுள்ளார். இடம்பெயர்ந்த மக்களின் துன்பங்கள் தொடர்பாக இந்திய அரசு தொடர்ந்து கவலை தெரிவித்துவரும் நிலையில் தூதுவரின் இந்தப் பயணம் இடம்பெற்றுள்ளது. தூதரக அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றுடன் மெனிக் பாம் முகாமுக்குச் சென்ற தூதுவர் அலோக் பிரசாத், அங்கு நிலைமைகளை நேரில் மதிப்பிட்டார். இந்தப் பயணத்தின் போது முகாம் தேவைகளைக் கவனித்து வரும் வவுனியா மாவட்ட செயலர் பி.எஸ்.எம்.சார்ள்சை சந்தித்து இடம்பெயர்ந்த மக்களின் தேவைகள் தொடர்பாக இந்தியக் குழுவினர் கேட்டறிந்தனர். வடக்கில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் இணைப்பு அத…
-
- 1 reply
- 404 views
-
-
சிறிலங்கா மற்றும் இந்திய கடற்றொழிலாளர்கள் மற்றைய நாட்டின் கடல் எல்லைக்குள் பிரவேசிக்கும் போது கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்திருப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்ற நிலையை மேலும் அதிகரிப்பதாக அமையும் என சிறிலங்காவின் மீன்பிடித்துறை அமைச்சர் பிலிக்ஸ் பெரேரா தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 375 views
-
-
கொழும்பில் நடந்த அழகிப் போட்டியை அமைச்சர் கருணா, தனது பெண் செயலாளருடன்; அமர்ந்து ரசித்த காட்சிகள் படங்களாக வெளியாகியுள்ளன. அத்துடன் இந்தப் போட்டியில் கலந்து கொண்ட ஒரு அழகியுடன் இணைந்து கருணா எடுத்த படமும் வெளியாகி உள்ளது. இலங்கையில் போர் முடிந்து விட்டதாக இலங்கை அரசு கூறிவருகிறது. ஆனாலும், ஏறத்ததாள 3 லட்சம் தமிழர்களை முகாம்கள் என்ற பெயரில் அரசாங்கம் தடுத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அவர்களுக்கு உரிய அடிப்படை சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள், மருந்து என எந்த நிவாரணமும் முறையாக வழங்கப்படுவதில்லை. மிக மிக மோசமான அவல நிலையில் அவர்கள் தவித்து வருவதாக பல்வேறு மனிதாபிமான அமைப்புளும் குற்…
-
- 9 replies
- 4.1k views
-
-
வவுனியா முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மூன்று லட்சம் மக்களை துரிதமாக மீள்குடியேற்றுவதற்கு அரசு தவறும் அதேவேளையில் முகாம்களின் மோசமான நிலையினால் அவலங்கள் மேலும் அதிகரிப்பது கசப்புணர்வு மேலும் தீவிரமடைவதற்கே வழிவகுப்பதாக அமையும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் செயலாளர் நாயகம் பான் கி மூன் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்றுள்ள சிறிலங்காவின் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவுடன் நேற்று திங்கட்கிழமை நடத்திய பேச்சுக்களின் போதே பான் கி மூன் இந்த எச்சரிக்கையை விடுத்ததாக ஐ.நா. செய்திச் சேவை தெரிவித்திருக்கின்றது. நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுக…
-
- 0 replies
- 405 views
-
-
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 82 பேர் தம்மை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி நேற்று பிற்பகல் தொடக்கம் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் மீதான விசாரணைகளை உடனடியாக தொடங்க வேண்டும் அல்லது தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியே இந்த 82 கைதிகளும் உண்ணாநிலைப் போராட்டத்தை நேற்று திங்கட்கிழமை தொடங்கியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இரண்டு தொடக்கம் ஐந்து வருடங்கள் வரையில் எந்தவிதமான வழக்கு விசாரணைகளும் இன்றி இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதாக அரசு கூறுகின்ற இந்த வேள…
-
- 0 replies
- 380 views
-
-
வவுனியா தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களில் சிலர் யாழ். பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகளுக்கு செல்ல அனுமதிப்பதாக தெரிவித்த சிறிலங்காப் படையினர் அவர்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைத்த போதிலும், தொடர்ந்தும் அவர்கள் கைதடியில் உள்ள முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதா
-
- 0 replies
- 468 views
-
-
ஏதிலி முகாம் மக்கள் மத்தியில் நூறு பிரபாகரன்களை உருவாக்குகின்றார் மகிந்த: மங்கள சமரவீர வவுனியா இடம்பெயர் முகாம்களில் உள்ள மக்களை மிக மோசமாக நடத்தி, அவர்களுக்குள் நூற்றுக்கணக்கான பிரபாகரன்களை ஜனாதிபதி உருவாக்கிக் கொண்டிருக்கின்றார். இந்தப் பிரபாகரன்கள் மீண்டும் பிரிவினைவாதத்தை நாடிச் செல்வதோடு, சிங்களவர்கள் மீதும் பகைமை கொள்வர் என்று மங்கள சமரவீர எம்.பி. நேற்று முன்தினம் கூறினார். கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் “மக்கள் சக்தி” கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு: இந்த வருடம் மே மாதம் புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்ட போது நாம் அனைவரும் கட்சி பேதமின்றி சந்தோஷமடைந…
-
- 0 replies
- 616 views
-
-
முகாம் ஏதிலிகள் மீதான துப்பாக்கிச்சூடு அவர்களை விடுவிக்க சிறிலங்கா அரசு மீதான அழுத்தத்தைத் தீவிரமாக்கும் – த ரைம்ஸ் ஆன்லைன் இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம், அந்த மக்களை விடுதலை செய்யுமாறு சிறிலங்கா அரசின் மீது மேலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதற்கு வழி வகுக்கும் என பிரிட்டனின் “த ரைம்ஸ் ஒன் லைன்” தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மீது இராணுவம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமையை நிராகரிக்க முடியாத சான்று இது. முகாம்களில் காணப்படும் மோசமான நிலையையும் இது புலப்படுத்துகின்றது. எனக் குறிப்பிட்டுள்ள “த ரைம்ஸ் ஒன் லைன்” இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு: இலங்க…
-
- 0 replies
- 578 views
-
-
புலம்பெயர் தமிழர்களது பலம் யாராலும் சிதைக்க முடியாதது! : பாரிஸ் ஈழநாடு புலம்பெயர் தமிழர்களது பலம் யாராலும் சிதைக்க முடியாதது. எங்கள் மக்களுக்காகவும், எங்கள் மண்ணுக்காகவும் நாங்கள் கொண்ட போர்க்கோலம் தமிழீழம் மலரும்வரை தொடரும். இவ்வாறு பரிஸிலிருந்து வெளிவரும் இன்றய ஈழநாடு பத்திரிகையில் பிரசுரமாகியுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்படவேண்டும்! தமிழீழ விடுதலைப் போராட்டம் முற்றாகத் தோற்கடிக்கப்படவேண்டும்! என்ற சிங்கள தேசத்தின் ஆசையும், இந்திய தேசத்தின் இலட்சியமும் புலம்பெயர் தேசத்துத் தமிழர்களை நோக்கித் திசை திருப்பப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் பின்னர் இலங்கைத்…
-
- 3 replies
- 777 views
-
-
விடுதலைப்புலிகளை தோற்கடித்தமை எமக்கு அயல்னாட்டு பாதுகாப்பு மற்றும் சூழல்களில் நல்ல நிலையினை தோற்றியுள்ளது. சிறிலங்காவில் இப்போ புதிய அத்தியாயத்தின் ஆரம்பம் தொடங்கியுள்ளது. அங்கு சமாதானம் நிலவிவருகின்றது. இதனால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை. அதே நேரம் நேபாளத்திலும் அமைதி சூழல் உருவாகி இருகின்றது. ஆப்கானிஸ்தானில் பன்னாட்டு படைகள் நல்ல வேலைகளை செய்வதனால் எமக்கு அது பற்றி கவலை இல்லை. பாகிஸ்தானில் சமாதானத்திற்கான பேச்சுவார்த்தை சூழல் உருவாகியுள்ளது அதனால் அங்கிருந்தும் பிரச்சினை அச்சுறுத்தல் இல்லை. ஆகவே ஒட்டு மொத்தமாக பார்க்க போனால் இந்தியா அயல்னாட்டு சூழலில் சிக்கலற்ற பாதுகாப்பான ஸ்திர தன்மையுடனான சூழல் நிலவுகின்றது. என கிருஸ்ணா கூறியுள்ளார். ஐக்கிய நாடு…
-
- 3 replies
- 994 views
-
-
வவுனியா இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பெற்றோரையோ அல்லது புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களின் உறவினர்களோ மோசமான முறையில் நடத்தப்படவில்லை என சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார். "பிரபாகரனின் பெற்றோர், தமிழ்ச்செல்வனின் மனைவி மற்றும் புலிகள் அமைப்பின் உயர் தலைவர்களின் நெருங்கிய உறவினர்கள் இடம்பெயர்ந்த மக்களுடன் முகாம்களிலேயே உள்ளனர். எமது படையினர் அவர்களுக்கு உதவி வருகின்றார்கள்" எனவும் அரச தலைவர் மேலும் தெரிவித்தார். வவுனியா முகாமில் பிரபாகரனின் பெற்றோர் மோசமான முறையில் நடத்தப்படுவதாக முன்னர் வெளியான செய்திகளை மறுத்த அரச தலைவர், இடம்பெயர்ந்த மூன்று…
-
- 38 replies
- 2.8k views
- 1 follower
-