Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு 17 SEP, 2023 | 02:01 PM (எம்.வை.எம்.சியாம்) இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தரப்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகளுக்கும் அந்நாட்டு தூதுவர் ஜூலி சங்கிற்குமிடையில் சிநேகபூர்வ சந்திப்பொன்று ஜம்இய்யாவின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொள்கைகள், குறிக்கோள்கள், சமூகம் தொடர்பிலான பணிகள், தேசியம் மற்றும் சர்வதேசம் சார்ந்த முன்னெடுப்புக்கள் நல்லுறவுகள் பற்றிய அறிமுகங்கள் இந்த சந்திப்பின்போது அமெரிக்க தூதுவருக…

    • 0 replies
    • 279 views
  2. Published By: VISHNU 17 SEP, 2023 | 01:19 PM குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி - இக்பால் நகர் தொடக்கம் தென்னமரவடி வரை கடற்கரை ஓரமாக மணல் அகழும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மணல் அகழ்வினால் பாதிக்கப்படும் கிராமங்களில் வசிக்கும் மூவின மக்களும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (17) குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ள குறித்த மணல் அகழ்வு அனுமதியை உடனடியாக இரத்துச் செய்யுமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குறித்த மணல் அகழ்வின் மூலம் இயற்கை வளம் பாதிப்பதோடு மட்டுமல்லாமல்…

  3. Published By: DIGITAL DESK 3 20 JUN, 2023 | 10:34 AM (எம்.நியூட்டன்) இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒன்பது இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நெடுந்தீவு அருகே திங்கட்கிழமை இரவு இந்திய மீனவர்களின் படகு இருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த ஒன்பது மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. http…

  4. வடக்கு, கிழக்கில் படைக் குறைப்பு இல்லை: சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் திட்டவட்டம் வடக்கு, கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்குத் தீர்மானிக்கவில்லை என இலங்கை இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்குமான கட்டளைத் தளபதிகளின் எண்ணிகை இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது என வெளியான தகவல் தொடர்பில் கருத்து வெளியிட்ட இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் இராணுவ ஆட்குறைப்பு செய்யப்படவில்லை எனவும், கட்டளைத் தளபதிகளின் எணிக்கை குறைக்கப்படவில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு யுத்தம் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடி…

  5. 17 SEP, 2023 | 10:23 AM முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் நேற்று (16) மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் நபரொருவர் கடந்த புதன்கிழமை (13)காணாமல் போயிருந்த நிலையில், இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் தென்னம் காணியொன்றில் இருந்து துர்நாற்றம் வீசியமையால் அங்கிருந்த கிராமவாசி ஒருவர் சென்று பார்த்தவேளை அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் காணப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட குறித்த நபர் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியைச் சேர்ந்த இராசலிங்கம் சுதர்சன் என …

  6. 16 SEP, 2023 | 08:51 PM ஆர்.ராம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்த் தலைவர்கள் ஒன்றிணைந்த சந்திப்பொன்றை நேரடியாக மேற்கொள்வது தொடர்பில் இதுவரையில் அத்தலைவர்களுள் இணக்கப்பாடில்லாத நிலைமைகள் தொடர்கின்றன. தமிழர்களின் இனப் பிரச்சினை உட்பட ஏனைய விடயங்கள் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திப்பதற்கு தமிழ்த் தலைவர்கள் ஒருங்கிணைத்து பயணமொன்றை மேற்கொள்வதற்கும் ஒன்றிணைந்து சந்திப்பொன்றை நடத்துவதற்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் கடந்த வாரம் எழுத்துமூலமான கடிதத்தினை ஏனைய கட்சிகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைத்திருந்தார். குறித்த கடிதத்தின…

  7. Published By: VISHNU 14 SEP, 2023 | 09:04 PM (இராஜதுரை ஹஷான்) புகையிரத பாதையை புனரமைக்கும் இந்திய நிறுவனத்திடமிருந்து நான் 5 கோடி ரூபா இலஞ்சம் பெற்றதாக புகையிரத சேவை சங்கத்தின் தலைவர் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் இந்திக தொடங்கொட என்பவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பொய்களின் திணிப்பு. இவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பேன். குற்றச்சாட்டை நிரூபித்தால் முழு அரசியலிலும் இருந்து விலகுவேன் என போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பி…

  8. 16 SEP, 2023 | 08:54 PM ஆர்.ராம் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி போன்று வடக்கு, கிழக்கில் மேலும் பல மனிதப் புதைகுழிகள் காணப்படலாம் என்று இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை. சோ.சேனாதிராஜா அச்சம் வெளியிட்டுள்ளார். அத்துடன், ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச தரப்பினர் தலையீடுகளைச் செய்து, துறை சார்ந்த நிபுணர்களின் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் எனவும், அதன் மூலம் தமிழின அழிப்பு நடைபெற்றது என்பது உறுதியாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் சம்பந்தமாக அவர் மேலும் தெரிவிக்கையில், கொக்குத்தொடுவாயில் மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டு அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் 17 எல…

  9. மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு இந்தியா வலியுறுத்தல் தமிழர்கள் உட்பட குடிமக்களின் அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதை விரைவில் உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்தியுள்ளது.2009ஆம் ஆண்டு முதல் இலங்கையின் நிவாரணம், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்புச் செயன்முறைகளுக்கான இலங்கையின் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது என ஜெனிவாவில் உள்ள ஐ. நா சபை மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே தெரிவித்துள்ளார். அத்துடன், சமத்துவம், நீதி, கண்ணியம் மற்றும் தமிழர்களின் அபிலாஷைகளை ஆதரிக்கும் அடிப்படைக் கொள்கைகளை இந்தியா ஆதரித்து வருவத…

  10. Published By: DIGITAL DESK 3 15 SEP, 2023 | 05:19 PM (நா.தனுஜா) தமிழ்மக்கள் செறிந்துவாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் இடம்பெற்றுவரும் தீவிர பௌத்தமயமாக்கலை ஆவணப்படுத்துவதற்கு ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தவறியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள், அரச கட்டமைப்புக்களின் ஆதரவுடன் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டுவரும் இத்தகைய நடவடிக்கைகள் இனங்களுக்கு இடையிலான வன்முறையாக நிலைமாற்றமடையக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளன. ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை தொடர்பான தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், பிரித்தானிய தமிழர் பேரவை,…

  11. 16 SEP, 2023 | 08:42 PM தியாகி திலீபன் சாகவில்லை, அவர் கொலை செய்யப்பட்டார். இந்தியாவின் அகிம்சையும் இலங்கை தேசத்தின் சிங்கள பௌத்தமும் அவரை கொலை செய்துள்ளது. எனவே குற்றவாளிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கூண்டின் முன் நிறுத்தி தண்டிக்கப்படும் வரையும் இந்த தேச இலச்சிய அரசியல் வெல்லும் வரையும் சாட்சியாக நாங்கள் போராடுவோம். எமது போராட்டம் தொடரும் என மனித உரிமை செயற்பாட்டாளரான வணபிதா மா. சக்திவேல் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணி தியாகதீபம் திலீபனின் 36 ஆண்டு நினைவேந்தலையிட்டு பொத்துவில் இருந்து யாழ் நோக்கிய தீலிபனின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தி நேற்று வெள்ளிக்கிழமை (15) மாலை பொத்துவில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது வண…

  12. திலீபனின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தியை அக்கரைப்பற்றில் மறித்து எதிர்ப்பு ஆர்பாட்டம்! kugenSeptember 16, 2023 தமிழ் தேசிய மக்கள் முன்னணி தியாகதீபம் திலீபனின் 36 ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஆரம்பிக்கப்பட்ட தீலிபனின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தியை அக்கரைப்பற்றுப் பகுதியில் வைத்து மறித்த சிலர் எதிர்ப்பு ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை (15) மாலை குறித்த வாகன ஊர்தி இடம்பெற்றபோதே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தியாகதீபம் திலீபனின் 36 ஆண்டு நினைவேந்தல் தினத்தையிட்டு 15ம் திகதி தொடக்கம் 27 ம் திகதிவரையில் திலீபன் வாரத்தையிட்டு தமிழ் தேசிய மக்கள…

    • 3 replies
    • 548 views
  13. Published By: VISHNU 15 SEP, 2023 | 04:24 PM வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தமிழ் கிராமமான கருப்பனிச்சாங்குளம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தை அருகில் உள்ள கொக்குவெளி பகுதி சிங்கள மக்களுக்கு மயானம் அமைக்க வழங்குவதற்கு, அளவீடு செய்ய வந்த நில அளவைத் திணைக்களத்தினர் மக்களது எதிர்ப்பையடுத்து அங்கிருந்து வெளியேறிச் சென்றிருந்தனர். வெள்ளிக்கிழமை (15) காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட கருப்பனிச்சான்குளம் கிராமம் தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் கிராமம் ஆகும். குறித்த கிராமத்தில் வசித்து வந்த தமிழ் மக்கள் யுத்தம் காரணமாக இடப்பெயர்ந்த…

  14. யாழ்.போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியை பாவிக்க போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தடை விதித்துள்ளார். கடமை நேரத்தில் தாதியர்கள், சுகாதார உதவியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் நோயாளர் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆகியோர் ஸ்மார்ட் தொலைபேசியை பாவிக்க யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தடை விதித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமிக்கு தவறான முறையில் "கானுலா" பொறுத்தப்பட்டமையால், சிறுமியின் இடது கை மாணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளது. அது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தாதியர்கள் கவன குறைவினாலையே சிறுமியின் கை அகற்றப்பட்டது என பல தரப்பினராலும், குற்றம் சா…

  15. 16 SEP, 2023 | 04:15 PM அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள், பல்வேறு அரசாங்க நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட 2 ஆயிரம் உத்தியோகபூர்வ வாகனங்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களது தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெருமளவில் பணம் வீண் விரயமாகின்றமையும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை சிலர் தங்களது தனியார் வாகனங்களை தாம் பணிபுரியும் நிறுவனத்துக்கு வாடகைக்கு வழங்கி அவற்றையும் தங்களது உத்தியோகபூர்வ வாகனங்களாக பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாகனங்களை தங்களது மனைவிகள்…

  16. 16 SEP, 2023 | 01:38 PM நல்லூரில் யாசகம் பெற வந்த பெற்றோர்களுடன் வந்த பெண் குழந்தையை காணவில்லை என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இருந்து, நல்லூர் ஆலய தேர் திருவிழாவிற்கு யாசகத்திற்காக இரண்டு பிள்ளைகளுடன் பெற்றோர் வந்துள்ளனர். அவர்கள் தேர் மற்றும் தீர்த்த திருவிழாவின் போது நல்லூரில் யாசகம் பெற்றுள்ளனர். அதன் போது , அவர்களின் இரண்டரை வயது பெண் பிள்ளை நல்லூர் வளாகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற தீர்த்த திருவிழாவின் போது காணாமல் போயுள்ளது. தமது குழந்தை காணாமல் போனது குறித்து , பெற்றோரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இன்றைய தினம் வெள்ள…

  17. 16 SEP, 2023 | 04:38 PM போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபடுவதற்கு தாமாக முன்வந்த யாழ். இளைஞர்கள் 10 பேர் மறுவாழ்வுக்காக தேசிய அபாயகர ஔடதங்கள் அதிகார சபையின் நிட்டம்புவ சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (14) இடம்பெற்ற விசேட கூட்டத்தில் இந்த விடயம் வெளிப்பட்டது. இதன்போது 21 முதல் 32 வயதுக்குட்பட்ட இளைஞர்களே மறுவாழ்வு சிகிச்சைக்காக தாமாக முன்வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/164720

  18. 15 SEP, 2023 | 05:23 PM (எம்.வை.எம்.சியாம்) 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறே தமிழ் தலைவர்கள் கோருகிறார்கள். தற்போது 13 ஐ நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி கூறுகிறார். அது மிகப்பெரிய விடயமல்லவா? எனது நிலைப்பாட்டை கடுகளவேனும் மாற்றவில்லை. அவர் மாறியுள்ளார். 13 ஐ நடைமுறைப்படுத்த வேண்டிய உண்மையான தேவை ரணில் விக்கிரமசிங்கவுக்கு உள்ளது. இது தொடர்பில் சிறந்த புரிந்துணர்வும் அவருக்கு உள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இந்த பிரச்சினை தொடர்பில் நான் பேச வேண்டும். எனது வாழ்வில் இந்த பிரச்சினைக்காக பாரியளவில் அர்பணித்த…

  19. 16 SEP, 2023 | 10:27 AM கொர்டேலியா குரூஸ் கப்பல் சேவையை ஆரம்பித்து 3 மாத காலப்பகுதிக்குள் காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக இந்தியாவில் இருந்து 6000க்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் யாழ்ப்பாணம் வந்துள்ளதாக இந்திய துணைத் தூதரகம் அறிவித்துள்ளது. இது குறித்து துணைத் தூதரகம் விடுத்துள்ள ஊடக அறிவிப்பில், கடந்த ஜூன் 16ஆம் திகதி அதன் ஆரம்ப வருகையிலிருந்து 9 தடவையாக மேற்கொள்ளப்பட்ட அடுத்தடுத்த பயணங்களின் போது, சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாண நகரத்தில் ஒரு மறக்க முடியாத விடுமுறை அனுபவத்தைத் தொடங்கினர். அதன் வளமான வரலாற்றுடன், யாழ்ப்பாணம் தென்னிந்தியாவுடன் பகிர்ந்துகொள்ளும் கலாசார பிணைப்புகளையும் அனுபவித்தனர். யாழ…

  20. 15 SEP, 2023 | 03:59 PM யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் மணல் கடத்தல், கால்நடைகள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச் செயல்களை 10 நாட்களுக்குள் கட்டுப்படுத்துமாறு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், இன்றையதினம் (15) வெள்ளிக்கிழமை, யாழ்குடா நாட்டில் அண்மைய நாட்களில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் கடத்தல், கால்நடைகள் கடத்தல் உள்ளிட்ட ஏனைய சட்டவிரோத சம்பவங்கள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் கடற்தொழில் அமைச்சர் தலைமையில் இடம்பெற்றிருந்த நிலையில் குறித்த கூட்டத்தில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ் …

  21. Published By: DIGITAL DESK 3 14 SEP, 2023 | 11:08 AM (நா.தனுஜா) இலங்கை தற்போது சிக்குண்டு இருப்பது கடன்பொறிக்குள் அல்ல. மாறாக அபிவிருத்தியின்மை என்ற பொறிக்குள்ளேயே அது சிக்கியிருக்கின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங், இலங்கைக்கு கடன்மறுசீரமைப்பு மாத்திரமன்றி பொருளாதார மறுசீரமைப்பும் இன்றியமையாததாகும் என்று வலியுறுத்தியுள்ளார். 'அண்மையகால உயர்மட்ட விஜயங்களும், அவர்களின் இந்து சமுத்திரப்பிராந்தியம் சார்ந்த கோணங்களும்' என்ற தலைப்பில் பூகோள அரசியல் வழிகாட்டி (புநழிழடவைiஉயட ஊயசவழபசயிhநச) என்ற அமைப்பினால் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலின்போதே சீனத…

  22. Published By: VISHNU 15 SEP, 2023 | 04:08 PM பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் தமக்கு குறிப்பிட்ட அளவு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதும் குறித்த காணிகளில் மக்கள் குடியேறும் வகையில் வீடுகளை அமைக்க அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை என யாழ் வலிகாமம் வடக்கு பலாலி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வலி வடக்கு பலாலி கிராம மக்கள் தமது சொந்த நிலங்களில் இருந்து 1990 ஆம் ஆண்டு பாதுகாப்புக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்து பல்வேறு இடைத்தங்கல் முகாம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் வாழ்ந்து வந்தனர். குறிப்பாக சின்னவளை,பொலிகண்டி, நிலவன்,கே.கே.எஸ்.மற்ற…

  23. Published By: DIGITAL DESK 3 13 SEP, 2023 | 04:28 PM (எம்.வை.எம்.சியாம்) வரி செலுத்தப்படாமல் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 8 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான அதிநவீன சொகுசு ஜீப் வண்டியொன்று வலான ஊழல் ஒழிப்பு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்வதற்காக குருநாகல் பகுதியிலுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதிசொகுசு ஜீப் வண்டியொன்று குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக வலான ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கு…

  24. 15 SEP, 2023 | 04:04 PM யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை சேர்ச் வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இரண்டு லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றையதினம் வெள்ளிக்கிழமை (15) மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த சந்தேகநபர் இதற்கு முன்னரும் கசிப்புடன் கைதானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/164648

  25. 15 SEP, 2023 | 12:03 PM இந்திய கடற்படைக்கு சொந்தமான “ஐ. என். எஸ். நிரீக் ஷக்” போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று வியாழக்கிழமை (14) காலை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வருகை தந்த இந்திய கடற்படைக் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைய இலங்கை கடற்படையினர் வரவேற்றனர். “ஐ.என்.எஸ். நிரீக் ஷக்” கடற்படைக் கப்பல் 137 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது. கப்பலின் கப்டனாக ஜீது சிங் சௌஹான் செயற்படுகின்றார். இதேவேளை, கப்பலின் கப்டன் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவை கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (15)காலை சந்தித்தார். இரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.