Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியத்திடம் இருந்து கிடைக்கப்பெற்ற கடனையிட்டு அரசாங்கத்தரப்பினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் எமது எதிர்கால சந்ததியினர் அனைவரும் கடனாளிகளாக்கப்பட்டுள்ளனரென ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இந்தக் கருத்தினைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் வரலாற்றில் தாம் கேட்டதனைவிட அதிகளவு பணத்தை நாணயநிதியம் கொடுத்;ததை அரசாங்கம் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறது. ஒரு நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கும் போது அதிலிருந்து மீள்வதற்காகவே கடன் பெறப்படுகிறது. இன்று இலங்கையிலும் இதே நிலைமையிலேயே கடன் பெறப்பட்டுள்ளது. எனவே இது மகிழ்ச்சியடைய வேண்டிய வ…

    • 0 replies
    • 732 views
  2. தமிழ் மக்களிற்கு அழிவை கொடுத்ததில் சிறிலங்காவின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளுக்கும் பங்கு உண்டு.ஒருவர் மற்றவருக்கு சலைத்தவர் அல்ல என்ற ரீதியில் தமிழர்களிற்கு தீங்கை விளைவித்துள்ளனர்.அகிம்சை போராட்டத்தை அடக்குவதில் சிறிலங்கா சுகந்திரகட்சி முக்கிய பங்கு வகித்துள்ளது.ஆரம்பகாலங்களிள

    • 0 replies
    • 1.3k views
  3. சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி சரத் பொன்சேகாவின் பாதுகாப்பைக் குறைப்பதற்கு அரசு எடுத்துள்ள நிலைப்பாட்டுக்கு எதிராக மக்கள் ஆதரவைத் திரட்டும் வகையில் அரச தலைவர் தேர்தலுக்கான தமது பிரச்சார நடவடிக்கைகளை ஜே.வி.பி. எதிர்வரும் 10 ஆம் நாள் தொடங்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 398 views
  4. வன்னியில் இடம்பெற்ற மோதல்களின் போது இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள தமிழ் மக்களின் நிலை தொடர்பாக சர்வதேசத் தலைவர்கள் சிலருடன் தான் ஆலோசனை நடத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் பற்றி வாஷிங்டனில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் சமீபத்தில் இலங்கைக்குத் தான் மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை மிக விரைவில் அவர் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். முதலில் முகாமில் உள்ள மக்களின் நிலைமைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி அவர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களுடைய வாழ் நிலையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். சமீபத்தில் இடம்பெற்ற அ…

    • 0 replies
    • 539 views
  5. வன்னியில் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை மீளக்குடியமர்த்துவதுதான் இந்தியாவைப் பொறுத்தவரையில் முக்கியமானதும் அவசரமானதும் பணியாகும் என்று இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 331 views
  6. குடாநாட்டில் காவலரண்கள் மற்றும் வீதித்தடைகளின் எண்ணிக்கை படிப்படி யாகக் குறைக்கப்படும். பாதுகாப்புக்கு அதி முக்கியத்துவம் இல்லாத பகுதிகளில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும். யாழ்.படைகளின் புதிய தளபதி மேஜர் ஜெனரல் ஜி.பி.ஆர்.டி.சில்வா மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளார். சமூக சேவைகள் மற்றும் சமூக நலத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவு டன் நேற்று இடம்பெற்ற பேச்சுக்களின் போது அவர் இதனை எடுத்துரைத்தார். அமைச்சின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற இச்சந்திப்பில் பொதுமக்க ளின் கஷ்டங்களைத் தீர்க்க வசதியாக 19 விடயங்களை தளபதியிடம் அமைச்சர் எடுத்துக் கூறினார். அவை தொடர்பாக இருவரும் விரிவாக ஆராய்ந்தனர். தொன்மராட்சிக்கு செல்பவர்கள் மூன்ற இடங்களில் பஸ்களில் இருந்து இறக்கப் பட்டு சோ…

    • 1 reply
    • 549 views
  7. தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு திட்டங்கள் எதனையும் இப்போதைக்குச் செயற்படுத்தப் போவதில்லை என்பதை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெளிவுபடுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 373 views
  8. சுவிற்சர்லாந்தின் தேசிய நாளுக்கு சுவிஸ் தமிழர் பேரவை வாழ்த்து தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 332 views
  9. சிறிலங்காவில் போர் முடிவடைந்து விட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்து இரண்டு மாதங்களாகி விட்டபோதும், தமிழ்நாட்டுக்கு அகதிகள் வருவது நின்றுவிடவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 342 views
  10. யாழ்ப்பாணம், வவுனியா உள்ளுராட்சி சபை தேர்தல்களில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு அடையாளம் தெரியாத நபர்களினால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவர் இரா.சம்பந்தன் பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்க, காவல்துறை மா அதிபர் ஆகியோரிடம் முறையிட்டுள்ளனர். அரச தரப்பு வேட்பாளர்களை வெற்றிபெற வைப்பதற்காக குறிப்பிட்ட சில குழுக்களினால் திட்டமிடப்பட்ட முறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்படுகின்றது எனவும் தமது முறைப்பாட்டில் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில் அரச தரப்பு வேட்பாளர்களின் செயற்பாடுகள் தொடர்பாக கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப…

    • 0 replies
    • 551 views
  11. யாழ்ப்பாணத்தில் போக்குவரத்துச் சேவையை மேம்படுத்துவதற்காக புனரமைப்புச் செய்யப்பட்ட 54 பேருந்துகளை வட பிராந்திய போக்குவரத்துச் சபையிடம் சிறிலங்கா அரசு வழங்கியுள்ளது. இது தொடர்பான நிகழ்வு கடந்த வியாழக்கிழமை (23.07.09) யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் ஈ.பி.டி.பி. துணைப்படைக் குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசகரும் சகோதரருமான பசில் ராஜபக்ச கலந்துகொண்டார். மேலதிக பேருந்துகள் கிடைக்கப்பெற்றதை அடுத்து யாழ். மாவட்டத்தின் போக்குவரத்து ஓரளவு சீராகும் என்று எதிர்பார்கப்படுவதாக அமைச்சர் கூறினார். இதற்காக அரசுக்கு அவர் நன்றியும் கூறின…

    • 0 replies
    • 517 views
  12. வன்னி தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களில் 20 ஆயிரம் பேர் வரையிலானோர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் என்று சிறிலங்காப் படையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 332 views
  13. நாட்டில் உள்ள சகல திரையரங்குகளிலும் "வயது வந்தவர்களுக்கு மட்டும்' என்ற சான்றிதழ் அனுமதி பெற்றுள்ள திரைப்படங்கள் தற்போது காண்பிக்கப்படுகிறது. இவற்றை உடன் அமுலுக்கு வரும் வகையில் முற்றாகத் தடை செய்ய வேண்டுமென கலாசார மரபுரிமைகள் விவகார அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். கடந்த திங்கட்கிழமை சிகிரியா உல்லாசப் பயணிகளுக்கான ஹோட்டலொன்றில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் தெரிவித்ததாவது; நம் முன்னோரது கலைப் பொக்கிஷங்களைப் பேணிக்காத்து சமூக, சமயப் பற்றுள்ள ஓர் சமுதாயத்தை உருவாக்க வேண்டிய பாரிய பொறுப்பு நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறுவர்களிடையே கலை கலாசார விழுமியங்களைக் கட்டி வளர்க்க வேண்டும். சமூக…

  14. தமிழ்த்தேசிய இனப்பிரச்சினைக்கு காலா காலத்தில் ஒரு நியாயமானதும் நிரந்தரமானதுமான அரசியல் காணப்பட்டிருந்தால் தமிழர் தரப்பிலான ஆயுதப் போராட்டமோ தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரசவமோ 25 வருடகால யுத்தமோ இடம்பெற்றிருக்க முடியாது. தமிழ், முஸ்லிம் மக்கள் இடம்பெயர்ந்து அவல வாழ்க்கை நடத்துவதற்கோ பல இலட்சக்கணக்கான தமிழர் இந்தியாவிலும் இதர நாடுகளிலும் தஞ்சம் புகுந்து வாழவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது. ஆளும் வர்க்கத்தினர் இவற்றையெல்லாம் அறிவுபூர்வமா,அரசியல் முதிர்ச்சி கொண்டு அலசுவதை விடுத்துத் தாமே உருவாக்கிவிட்டதாகிய விடுதலைப்புலிகள் மீது பழிபோடுவது ஒன்றும் புதிய விடயமல்ல. உலகத்திலேயே மிகக் கொடூரமான அந்த இயக்கம் தான் நாடு எதிர்நோக்கிவந்த பாரிய பிரச்சினை என்பதால் அது 25 வருடங்கள…

  15. அகதி முகாம்களில் சுமார் 20000 தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இருப்பதாக இராணுவத் தரப்பு வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தினால் வடக்கில் பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு அகதி முகாம்களில் இடம்பெயர் மக்களுடன் இந்த விடுதலைப் புலி ஆதரவாளர்களும் தங்கியிருப்பதாக மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவர்களுக்கு ஆதரவு வழங்கியவர்கள் தற்போது அகதி முகாம்களில் தங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 10,000 விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு ஏற்கனவே புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய நபர்களுக்கு விசேட தொழிற்பயிற்சி…

  16. இலங்கையில் புலிகளுக்கு பின்னரான அரசியல் சூடுபிடிக்க தொடங்கியிருக்கின்றது. இந்த வெப்பத்தில் வவுனியாவில் திறந்த வெளி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு இலட்சத்து எண்பதாயிரம் மக்கள் பற்றிய கவனங்கள் கருகிப்போய்விட்டன. அது மட்டுமின்றி கடந்த 30 வருடகால தமிழர்களின் போராட்டமும் மறக்கடிக்கப்பட்டு வருகின்றது. புலிகளுக்கு பின்னரான அரசியல் என்பது சிங்கள ஏகாதிபத்தியத்தின் கீழ் தமிழர்களை அடகுவைப்பதாகவே இப்போது பார்க்கப்படுகின்றது. மாற்று கருத்தாளர்கள் அல்லது ஜனநாயகவாதிகளாக தங்களை முன்னிறுத்த துடிப்பவர்கள் பன்மைத்துவம் குறித்தும் ஜனநாயக மறுப்புகள் குறித்தும் புலம் பெயர் நாடுகளில் கத்தி களைத்தவர்கள் இப்போது மகிந்தவின் கால்களில் விழுந்து கிடப்பது அப்பட்டமான சு…

    • 0 replies
    • 1.1k views
  17. தேர்தலுக்கு இது உகந்த தருணமல்ல. வீரகேசரி வாரவெளியீடு 7/27/2009 2:29:47 PM - யாழ். மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்கும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் நாள் வாக்களிப்பு நடைபெறவுள்ளது.11 ஆண்டுகளுக்கு முன்பாக 1998 இல் யாழ்ப்பாணத்தில் கடைசியாகத் தேர்தல் நடைபெற்றது. வவுனியாவில் இடம்பெற்ற இறுதித் தேர்தல் 1994 ஆம் ஆண்டிலாகும். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, இலங்கை தமிழரசுக் கட்சி என்பன போட்டியிடுகின்ற எதிர்க்கட்சிகளில் சிலவாகும். வடக்கில் நிலைமை இன்னமும் வழமைக்குத் திரும்பாத சூழ்நிலையில் அங்கு உள்ளூராட்சித் தேர்தலை நடத்த அரசாங்கம் காட்டுகின்ற அவசரத்துக்கு இந்தக் கட்சிகள் தமது ஆட்சேபனையைத் தெரிவித்திருக்கின்றன. யுத…

    • 0 replies
    • 527 views
  18. வீரகேசரி இணையம் - வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்த திருவிழா உற்சவம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகவுள்ளது. ஆலய சுற்றாடலில் பொது மக்களின் நன்மை கருதி நான்கு வீதிகளிலும் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சுகாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆலய சுற்றாடலில் பொது மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸாருடன் சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஊள்ளூர் தொண்டர் அமைப்புகளும் கடமையில் ஈடுபடவுள்ளன.

    • 22 replies
    • 2k views
  19. ”பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, ஈழத் தமிழர் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் பழ.நெடுமாறன் ஆகியோர் தயாராகவில்லை” என இந்தியாவில் இருந்து வெளிவரும் ‘டெக்கான் குரோனிக்கல்’ நாளேட்டுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில், செல்வராஜா பத்மநாதன் தெரிவித்தார். பிரபாகரன் தொடர்ந்தும் உயிருடன் இருப்பதாக வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர் தொடர்ந்தும் தெரிவித்துவருவது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, “அவர்கள் உண்மையை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இறுதிக்கட்டச் சமரின் போது எமது தலைவரும் மற்றும் போராளிகளும் வீரச்சாவு அடைந்தார்கள்” எனவும் செல்வராஜா பத்மநாதன் குறிப்பிட்டார…

    • 5 replies
    • 2.3k views
  20. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி தமிழ்நாட்டு கட்சிகளில் ஒன்றான விடுதலைச் சிறுத்தைகள் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  21. பிரித்தானியச் செய்தியாளர் 29/07/2009, 12:33 பிர்த்தானியாவில் வன்னி ஏதிலிகளைக்காட்டி பணப்பறிப்பில் ஈடுபடும் சிங்களவர்கள் வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களிற்கான உதவிகளை சிறீலங்கா அரசு பூர்த்தி செய்யாத நிலையில், இந்த மக்களைக் காரணம்காட்டி புலம்பெயர் நாடுகளில் உள்ள சிங்களவர்கள் நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பிரித்தானியாவில் உருவாக்கப்பட்டுள்ள 'புதிய பிரித்தானியாவுக்கான சிறீலங்காவின் சங்கம்' என்ற அமைப்பு அண்மையில் லோவல் போல்க் களியாட்ட நிகழ்வில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தது. வன்னியில் இடம்பெயர்ந்த மக்களிற்கு எனத் தெரிவிக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட இந்த நிதி எந்த வகையில் அந்த மக்களைச் சென்று சேருகின்றது என்பது பற்றி இந்த சங்கத்தின் தல…

    • 4 replies
    • 1.3k views
  22. தனிமடலில் வந்த விடயத்தை யாழ்க்கள உறவுகளோடு பகிர்ந்து கொள்ளவதற்காக இணைத்துள்ளேன். Hi all, Please Find time to watch this 6min video and then, if you like to help the Tamils please circulate this with many as you possibly can. Where ever you are in the world, few minutes of your time can make a big change! Thank you Cricket, Don't Let Them Trick It! http://www.youtube.com/watch?v=Hb4F-UBAGis

    • 0 replies
    • 1.6k views
  23. சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு இந்திய அதிகாரிகள் பின்னடித்து வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 754 views
  24. புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் தயா ரட்நாயக்க சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 343 views
  25. யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தேர்தல் நிதி தந்துதவுமாறு கனடாவில் இருந்து தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 483 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.