ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142838 topics in this forum
-
13 ஆம் திருத்தத்தினை தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது Posted on July 12, 2023 by தென்னவள் 2 0 13 ஆம் திருத்தத்தினை தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது என அரசியல் ஆய்வாளரும் சட்டத் தரணியுமான ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார். “13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பேச்சுக்கள் தற்போது இடம் பெற்று வருகிறது . 13 ஆம் திருத்தச் சட்டம் என்பது ஓர் அரசியல் தீர்வு அல்ல. தற்போதுள்ள அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோர் தம்மால் இயலாத நிலையிலேயே 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற நிலைக்கு வந்துள்ளார்கள். ஆனால் 13 ஆம் திருத்தச் சட்டம் என்பது இந்தியாவும் இலங்கையும் எடுத்துக்கொண்ட தீர்வே தவிர அது தமிழ் மக்களுக்கான…
-
- 11 replies
- 900 views
-
-
நட்டஈட்டை வழங்கினார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் நிலையில் அவர் 15 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை 10 தவணைகளில் வழங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்ற அனுமதியை கோரியுள்ளார். நீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த 28 ஆம் திகதி 15 மில்லியனை இழப்பீடாக செலுத்திய அவர், மீதமுள்ள தொகையை 2024 ஜூன் 30 முதல் 2033 ஜூன் 20 வரை கட்டம்கட்டமாக 8.5 மில்லியனை செலுத்துவதாக கூறியுள்ளார். தாக்குதல் சம்பவத…
-
- 4 replies
- 329 views
- 1 follower
-
-
சிறுமியை அடித்து துன்புறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு செட்டிகுளம் மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் வைத்தும் அதன் பின்னரும் பதின்நான்கு வயதுடைய சிறுமி ஒருவரை துன்பறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச் சாட்டில் குற்றவாளியாக இனம் காணப்பட்ட குற்றவாளிக்கு நேற்று புதன்கிழமை (12) கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கானது நேற்றைய தினம் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.ஏ சகாப்தீன் முன்னிலையில் தீர்ப்புகாக எடுத்துக் கொள்ளப்பட்டது. கடந்த 2009ம் ஆம் ஆண்டு 14 வயதுச் சிறுமி ஒருவரை அடித்து துன்புறுத்தியும் பாலியல் வல…
-
- 3 replies
- 242 views
-
-
ஆனைக்கோட்டை - கல்லுண்டாய் இந்து மயானத்தில் சடலங்களை எரிப்பதால் வெளியாகும் புகை வீடுகளுக்குள் வருகிறது. அந்த புகையை நாங்கள் சுவாசிப்பதால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கிறோம் என கல்லூண்டாய் குடியேற்றத்திட்டத்தில் வசிக்கும் மக்கள் கவலையோடு தெரிவிக்கின்றனர். அவர்கள் மேலும் கூறுகையில், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் எங்களுக்கு இந்த கல்லூண்டாய் பகுதியில் குடியேற்றத்திட்டத்தை அமைத்துக் கொடுத்து, எங்களை இங்கே குடியமர்த்தினார்கள். ஆனால், எங்களுக்கான அடிப்படை வசதிகள் எவையும் பூர்த்தி செய்யப்படவில்லை. எங்களது குடியேற்றத்திட்டத்தில் இருந்து சுமார் 30 மீற்றர் தொலைவில் ஆனைக்கோட்டை - கல்லுண்டாய் மயானம் அமைந்துள்ளது…
-
- 1 reply
- 251 views
-
-
ரோயல்பார்க் கொலையாளி ஜூட் ஜயமஹவிற்கு பொதுமன்னிப்பை வழங்கியதன் மூலம் அரசியல் அமைப்பை மீறி தான் செயற்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். ஜூட்ஜெயமகவிற்கான பொதுமன்னிப்பு அரசியல் அமைப்பிற்கு உட்பட்ட விடயம் என அவர் தெரிவித்துள்ளார். 2005 இல் அத்துருகிரியவில் உள்ள ரோயல்பார்க் தொடர்மாடியில் பெண்ணொருவரை கொலை செய்தமைக்காக கொழும்பை சேர்ந்த செல்வந்தரின் மகனிற்கு நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது. 2019 நவம்பர் 9 ம் திகதி ஜூட்ஜெயமகவிற்கு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன பொதுமன்னிப்பை வழங்கினார்.தனது பதவிக்காலத்தின் இறுதியில் சிறிசேன பொதுமன்னிப்பை வழங்கியிருந்தார். அதன் பின்னர்ஜெயமஹ நாட்டிலிரு…
-
- 1 reply
- 221 views
-
-
Published By: DIGITAL DESK 3 11 JUL, 2023 | 10:47 AM (எம்.மனோசித்ரா) சனத்தொகை கணக்கெடுப்பை நடத்துமாறு உத்தரவிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சனத்தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய 2023/2024ஆம் ஆண்டுகளில் சனத்தொகை மற்றும் வீட்டுக்கணக்கெடுப்பை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/159716
-
- 3 replies
- 368 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 24 JUN, 2023 | 08:51 AM அரசாங்கம் 30 ம் திகதி விசேட வங்கி விடுமுறையை அறிவித்துள்ளதை தொடர்ந்து 28 ம் திகதி உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைள் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை அரசாங்கம் வெளியிடவுள்ளதா என்ற சந்தேகம் வர்த்தக சமூகத்தினரிடையே எழுந்துள்ளது. விசேட வங்கி விடுமுறை காரணமாக நாட்டின் நிதிசந்தைகள் ஐந்து நாட்களிற்கு தொடர்ச்சியாக மூடப்படும் . ஜூன் 29 ம் திகதி மூன்றாம் திகதி முதல் வங்கிகள் மூடப்படவுள்ளதால் அரசாங்கம் உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு குறித்த நடவடிக்கைகளை அறிவிக்கவுள்ளது என்ற ஊகங்கள் வெளியாகியுள்ளன. உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு என்பது எதிர்மறையான விடயமாக கருதப்படுகின்றது…
-
- 29 replies
- 904 views
- 1 follower
-
-
கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஆனந்தசங்கரி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான விசாவை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. ஹரிஆனந்தசங்கரி தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு ஏற்றதாக காணப்படும்போதே கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடுவதற்கான அனுமதி வழங்கப்படுகின்றது. கொடும்பாவிகளை எரிப்பது இலங்கையின் அரசாங்கங்களின் தவறுகளை சரிசெய்யாது. கவலையளிக்கும் விதத்தில் இலங்கை எனக்கு விசா வழங்க மறுத்துவிட்டது.நாங்கள் முன்னெடுத்துள்ள வேலைதிட்டத்திற்காக பழிவாங்கும் நடவடிக்கை இது எங்களை மௌனமாக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். சிலவாரங்களிற்கு முன்னர் சிங்கள ஆர்ப்பாட்டக்காரர்கள் வவுனியாவில் கனடா பிரதமர் மற்றும் ஹரி ஆனந்தசங்கரிய…
-
- 0 replies
- 256 views
-
-
இலவச வகுப்புக்களை நடாத்தி வந்த நபர் ஒருவர் தம்மை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக மாணவிகள் இருவர் தெரிவித்ததை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், நேற்று புதன்கிழமை (12) தேசிய சிறுவர் பாதுகாப்பு பிரிவினர் மாணவர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றினை நடாத்தி இருந்தனர். கருத்தரங்கின் போது , 13 வயதான மாணவிகள் இருவர், தமக்கு இலவசமாக கல்வி கற்பிக்கும் ஒருவர் தம்மை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கினார் என தெரிவித்துள்ளனர். அது தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் குறித்த நபரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்…
-
- 0 replies
- 288 views
-
-
கலாநிதி மறவன் புலவு சச்சிதானந்தனுக்கு ‘தமிழினக் காவலன்’ விருது சிவசேனை அமைப்பின் தலைவர் கலாநிதி மறவன் புலவு சச்சிதானந்தன், தமிழுக்கும் சைவத்திற்கு ஆற்றி வரும் பணியைக் கெளரவிக்கும் விதமாக மன்னார் இந்து மக்களால் நேற்றைய தினம் ‘தமிழினக் காவலன்’ விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மன்னார் எழுத்தூர் செல்வநகர் அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற இவ்விழாவில் அவருக்கு செங்கோலொன்றும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிவசேனை அமைப்பினர், உலக சைவ மகா சபையினர் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர் https://athavannews.com/2023/1338200
-
- 7 replies
- 634 views
-
-
சுவீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் கண்டனம்! சுவீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மத சுதந்திரத்தை மீறும் செயல் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தெற்கின் பூகோள விழுமியங்களை மதிக்குமாறும், கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அமைதியின்மைக்கு இடமளிக்க வேண்டாம் என்றும் மேற்கத்திய நாடுகளிடம் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை சுவீடனின் தலைநகர் ளுவழஉமாழடஅ யில் துருக்கி தூதரகத்துக்கு முன்னால் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது சு…
-
- 3 replies
- 338 views
- 1 follower
-
-
12 JUL, 2023 | 10:14 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட கைவேலி பகுதியில் வனவள திணைக்கள அதிகாரிகள் முன்னாள் போராளி உள்ளிட்டவர்களின் வீடுகளை உடைத்தெறிந்து பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட கைவேலி பகுதியில் 2000 ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் 45 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு குறித்த பகுதியில் 45 குடும்பங்கள் குடியேறி இருந்தனர். இந்நிலையில் 2009 ம்…
-
- 1 reply
- 694 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 08 JUL, 2023 | 12:56 PM பாலியல் சம்பவங்களில் ஜப்பானில் அகப்பட்ட மாகல் கந்தே சுதந்த தேரர் மற்றும் இலங்கையில் அகப்பட்ட பல்லேகம சுமன தேரர், மட்டக்களப்பில் பொலிஸாரை தாக்கிய அம்பிடிய சுமனரத்ன தேரர் ஆகிய மூவரும் அரசியல் தேரர்கள். இந்த சம்பவங்களை செய்த சமீபகால தேரர்களின் நடத்தை, இந்நாடு மதசார்பற்ற நாடாக வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்துகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த அரசியல் தேரர்கள், சமகாலத்தில் இந்நாட்டில் அரசியல் சீர்திருத்தம் நடைபெறுவதை, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படுவதை, எப்போதும் எதிர்க்க…
-
- 40 replies
- 2.6k views
- 2 followers
-
-
எதிர்வரும் செப்டம்பர் மாதம் கட்டாயம் நாட்டில் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி உருவாகும் என ஐக்கிய குடியரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமன பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்படுவதன் ஊடாக இந்த பொருளாதார நெருக்கடி உருவாகும். வெளிநாட்டு கடனை திரும்ப செலுத்துவது ஆரம்பிக்கப்படும். வெளிநாட்டு கடன் திரும்ப செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக மீதமாகியுள்ள அந்நிய செலாவணியை பயன்படுத்தியே அரசாங்கம் அத்தியவசிய உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்து வருகிறது. நாட்டில் காணப்படும் தற்போதை…
-
- 8 replies
- 873 views
- 1 follower
-
-
இலங்கையின் செயற்பாடுகளுக்கு பிரித்தானியா வரவேற்பு! மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய காலமுறை மீளாய்வு செயல்முறையுடன் இலங்கையின் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை பிரித்தானியா வரவேற்றுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வில் இலங்கைக்கான உலகளாவிய காலமுறை மீளாய்வுக்கான அறிக்கையை வெளியிட்டு பிரித்தானியா இதனை தெரிவித்துள்ளது. வடக்கு கிழக்கில் அரசாங்கத் திணைக்களங்களால் நில அபகரிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பான கவலைகள் தொடர்பான தனது பரிந்துரைக்கு இலங்கையின் ஆதரவையும் பிரித்தானியா வரவேற்றுள்ளது. அண்மைய ஆண்டுகளில் இலங்கை எதிர்கொண்டுள்ள குறிப்பிடத்தக்க அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை பிரித்தானியா ஏற்றுகொண்டது. அனைத்து சமூகங்களுக்கு…
-
- 1 reply
- 223 views
-
-
நந்திக்கடல் கடற்கரையும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அடையாளம் ! நந்திக்கடல் கடற்கரையும் இந்த நாட்டின் கரையோரத்தில் அடையாளம் காணப்பட்ட புதிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போரின் இறுதி யுத்தம் நந்திக்கடல் பகுதியில் இடம்பெற்றிருந்தது. இதில் பல இலட்சம் மக்கள் கொத்தணி குண்டுகளுக்கு தோட்டாக்களுக்கும் பலியாகியிருந்தனர். இந்நிலையில் நந்திக்கடல் கடற்கரையும் புதிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களம் இதுவரை இதுபோன்ற 24 இடங்களை அடையாளம் கண்டுள்ளது. இதற்கிடையில், கடந்த மே மாதத்தை விட சுற்றுலா பயணிகளின் வருகை அதிக…
-
- 13 replies
- 1.2k views
- 1 follower
-
-
Published By: NANTHINI 19 JUN, 2023 | 08:52 AM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (19) ஜெனிவாவில் ஆரம்பமாவதுடன், இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வாய்மொழிமூல அறிக்கை புதன்கிழமை (21) வாசிக்கப்படும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமானதுடன், அன்றைய தினமே ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான எழுத்துமூல அறிக்கை வாசிக்கப்பட்டது. அதுமாத்திரமன்றி அக்கூட்டத்தொடரில் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மன…
-
- 21 replies
- 2.2k views
- 1 follower
-
-
Published By: VISHNU 12 JUL, 2023 | 03:28 PM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த நான்கு பேரில், திறமைப் புள்ளி அடிப்படையில் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, சிரேஷ்ட பேராசிரியர் ரி. வேல்நம்பி, பேராசிரியர் செ. கண்ணதாசன் ஆகியோர் பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக் கழகங்களில் துணைவேந்தரை நியமிப்பதற்கான சுற்றுநிருபத்துக்கு அமைவாகத் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்தவர்களின் தகுதி, தராதரங்களின் அடிப்படையில் திறமைப் புள்ளியிடலுக்காகப் பல்கலைக்கழகப் பேரவை இன்று புதன்கிழமை காலை கூடியது. இதன்போது, துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த தற்போதைய துணைவேந்தர் பேராச…
-
- 0 replies
- 307 views
- 1 follower
-
-
சாந்தனை நாட்டுக்கு அழைக்க போராட்டத்தில் குதித்த தாய்! (படங்கள்) 75 வயதைக் கடந்த சாந்தனின் அம்மா தனது மகனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான போராட்டத்தில் இறங்கினார். ஆளுநர் ஊடாக அதிபருக்கான கடிதத்தையும், வெளிவிவகார அமைச்சகத்துக்கான கடிதத்தை கச்சேரியிலும் அளித்திருக்கிறார். அதேவேளை, சாந்தன், சில நாட்களுக்கு முன்னர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தக் கடிதத்தில், இலங்கைக் குடிமகனான தான், முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாக சாந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போதிலும் தற்போது…
-
- 0 replies
- 345 views
-
-
தேங்காய் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை! உள்நாட்டில் தேங்காய் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என கோப் குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 2020 முதல் 2022 ஆம் ஆண்டுவரை, இலங்கையில் நுகர்வுக்காக ஒரு இலட்சத்து 87 ஆயிரத்து 623 மெற்றிக் தொன் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் தேங்காய் எண்ணெய் பாவனையில், 22 சதவீதம் உள்ளூர் உற்பத்தியிலும், 78 சதவீதம் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்யிலும் ஈடுபடுத்தப்படுவது பெரும் பிரச்சினையாக உள்ளது எனக் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1338752
-
- 0 replies
- 204 views
-
-
காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு : குளிர்பானங்களை வழங்கிய கடற்படையினர்! யாழ்ப்பாணம் – மண்டைதீவில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை அப்பகுதி மக்களால் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. குறித்த எதிர்ப்புப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் அப்பிரதேச மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகள் உள்ளன. இவற்றினை வெலிசுமன கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நோக்கில், இன்று அளவீட்டுப் பணிகளை ஆரம்…
-
- 0 replies
- 198 views
-
-
Published By: VISHNU 11 JUL, 2023 | 06:15 PM (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை (2023 கல்வியாண்டுக்கான) எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 21ஆம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். கொவிட் தொற்று அதன் பின்னர் இலங்கையில் நிலவிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளால் உயர்தர பரீட்சைகள் குறிப்பிட்ட காலத்தில் நடத்தப்படாமல் தொடர்ந்தும் தாமதமாகி வருகின்றது. இந்நிலையில் அடுத்த மாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டிய உயர்தர பரீட்சைகள் நவம்பரில் இடம்பெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை டிசம்பரில் நடைபெற வேண்டிய இவ்வாண்டுக்கான சாதாரண தர பரீட்ச…
-
- 2 replies
- 296 views
- 1 follower
-
-
கல்முனை நோக்கி பயணித்த பேருந்து மன்னம்பிட்டி பாலத்தில் கவிழ்ந்து விபத்து - 9 பேர் பலி Published By: RAJEEBAN 09 JUL, 2023 | 09:40 PM கதுருவலையிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த பஸ் மன்னப்பிட்டி பாலத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 20க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் பொலன்னறுவை மற்றும் கதுருவெல வைத்தியசாலைகளுக்கு எடுத்து செல்லப்படுகின்றனர். மீட்பு பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன https://www.virakesari.lk/article/159613
-
- 11 replies
- 1.4k views
- 1 follower
-
-
மகாசங்கத்தினரை பாராட்டும் நிகழ்வுகள் பிரதமர் தலைமையில் முன்னெடுப்பு! சாசனப் பணிக்காக நீண்டகாலமாக உழைத்து வரும், புதிதாக நியமிக்கப்பட்ட மகாசங்கத்தினரை பாராட்டும் நோக்கில் அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தினால் விசேட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. கொழும்பில் உள்ள அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றன. இலங்கை ராமன்ய மகா நிகாயவின் அனுநாயக்க தேரர் கலாநிதி சங்கைக்குரிய வலேபொட குணசிறி தேரர், மேல்மாகாண பிரதம சங்கநாயக தேரர் கலாநிதி சங்கைக்குரிய அக்குரட்டியே நந்த தேரர் உள்ளிட்ட 18 தேரர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர். கிஹான் பில…
-
- 2 replies
- 250 views
-
-
Published By: VISHNU 11 JUL, 2023 | 08:21 PM தங்க ஜெல் மற்றும் பவுடரை இந்தியாவின் சென்னைக்கு எடுத்துச் செல்ல தயாரான ஐந்து வர்த்தகர்களை விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (11) பிற்பகல் கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்க ஜெல் மற்றும் பவுடரின் பெறுமதி சுமார் 16 கோடியே 40 இலட்சம் ரூபாவென அதிகாரிகள் தெரிவித்தனர். நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய வர்த்தகர்கள் நால்வரும் 55 வயதுடைய வர்த்தகருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த 5 வர்த்தகர்களும் இன்று பிற்பகல் 1.55 மணிக்கு கட்டுநாயக்கவில் இருந்து இந்தியாவ…
-
- 0 replies
- 525 views
- 1 follower
-