ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142943 topics in this forum
-
“தமிழீழ மக்களவை” குறித்து ஒரு பார்வை. சூ.யோ.பற்றிமாகரன் தமிழீழ மக்களவையின் இன்றைய முக்கியத்துவம் என்ன? உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் முதன்மைக் கவனத்திற்குரிய பிரச்சினையாகச் சிறிலங்காவின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகித் தவிக்கும் வன்னித் தமிழீழ மக்களின் பிரச்சினை விளங்குகிறது. அதீத மனிதாய தேவையில் அந்த மக்கள் உள்ள நிலை அனைவராலும் உணரப்படுகிறது. இந்நிலையில் அம்மக்களுக்கான சர்வதேச சட்டங்களுக்குரிய உதவிகளைப் பெற்றுக்கொடுக்க சர்வதேச அரசுக்களுடனும் சர்வதேச அமைப்புக்களுடனும் தாராண்மைவாத ஜனநாயகவழிகளில் போராடும் உரிமை புலத்து தமிழர்களுக்கு உண்டு இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க மக்கள் சக்தி ஒருங்கிணைவதற்குத் தமிழீழ மக்களவை காலத்தின் தேவையாகிறது. அடுத்து தமிழீழ மக்…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் செயற்திட்டம் சட்ட அறிஞர் விசுவநாதன் உருத்திரகுமார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று திங்கட்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கான விடுதலைப் போராட்டம் இன்று புதியதோர் கட்டத்தை எட்டியுள்ளது. தாயகத்தின் யதார்த்த நிலையினைப் புரிந்துகொண்டு, நமது விடுதலை இலட்சியத்தினை முன்னோக்கி நகர்த்துவதற்குத் தேவையான அரசியல் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய காலகட்டம் இது. இதற்காக பொதுக்கொள்கையின்…
-
- 74 replies
- 8k views
-
-
புலம்பெயர்ந்து வாழும் எம் தாயக தேசத்தின் உறவுகளுக்கு வணக்கம்!… ஒரு தாயானவளின் மடியில் படுத்துறங்கிய குழந்தை தன் தாயின் மடியை விட்டு எங்குதான் தவழ்ந்து சென்றாலும் அது தன் தாய் மடியின் வாசத்தையே சுவாசித்துக்கொண்டிருக்கும்
-
- 185 replies
- 13.2k views
-
-
வணக்கம், மிகப்பெரிய மனிதப்பேரவலம் சிறீ லங்கா பயங்கரவாத அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்த அகால நேரத்தில் தமிழ் ஜனநாயகம் பேசுகின்ற விளக்குமாறுகள் யாழ் குடாநாட்டில் தமது தேர்தல் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக தேவனந்தா அடிகளார் தமிழ் மக்கள்பால் தான் பேரன்பு கொண்டுள்ளதை நீரூபிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுவாமிகள் பொதுமக்களுடன் சாதாரண பேரூந்தில் ஒன்றாக பயணம் செய்ததாகவும் இதைக்கண்ணுற்ற பொதுமக்கள் (?) ஆனந்தக்கண்ணீர் வடித்ததாகவும் கூறப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பேரூந்தை ஓட்டிய சாரதி இரு கண்களிலும் கண்ணீர் ஆறாக ஓட தேவாந்தா சுவாமிகளை கட்டியணைத்து தனது அன்பை தெரிவித்ததாகவும் சொல்லப்படுகின்றது. வாழ்…
-
- 11 replies
- 2k views
-
-
இலங்கையின் போரினால் இடம்பெயர்ந்துள்ள சுமார் மூன்று லட்சம் பேரின் நிலைமை மிகவும் துயரமானதாக உள்ளது எனவும் அவர்கள் விரைவில் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் என யாழ் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கண்ணிவெடிகள் அகற்றப்படல், வீடுகள் மீண்டும் மீளமைக்கப்படுதல்,, சீர்குலைந்துள்ள உட்கட்டமைப்பைச் சீர்படுத்துதல் போன்ற பணிகள் செய்யப்பட வேண்டியிருந்தாலும் இடம்பெயர்ந்தோரை தங்கள் வீடுகளுக்குத் திருப்பி அனுப்பும் காலக்கெடுவை அரசு தள்ளிப்போடுவதற்குரிய காரணம் புரியவில்லை எனவும் ஆயர் கூறியுள்ளார். இந்த இடம்பெயர்ந்த மக்களில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் அரசு அமைத்துள்ள ஆறு முகாம்களில் வாழ்வதாகவும், இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள இவர்க…
-
- 14 replies
- 1.2k views
-
-
இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் சமஷ்டித் தீர்வை ஏற் றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. அதனாலேயே,வெற்றிபெறும் நிலையில் இருந்த சமாதான முயற்சிகள் இறுதிக்கட்டத்தில் முறிவடைந்தன"என்று தெரிவித்திருக்கிறார்நோர்வ
-
- 7 replies
- 1.3k views
-
-
17/06/2009, 12:38 மணி தமிழீழம் [செய்தியாளர் தாயகன்] தடுப்பு முகாமில் 25,000 தமிழர்கள் காணாமல் போயுள்ளனர் - அரசே உறுப்படுத்தியது வன்னியில் இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் தொடர்பான முழுமையான விபரங்களை சிறீலங்கா அரசாங்கம் நேற்று வெளியிட்டுள்ளது. 262,632 பேர் மட்டுமே தடுப்பு முகாம்களில் இருப்பதாகவும், இவர்களில் 134,464 பேர் பெண்கள் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. வவுனியா முகாம்களில் 282,000 இற்கும் மேற்பட்ட மக்கள், அல்லது மூன்று இலட்சம் வரையிலான மக்கள் இருப்பதாக, ஐக்கிய நாடுகள் சபை ஏற்கனவே அறிவித்திருந்தது. இது பற்றிக் கருத்து வெளியிட்ட சிறீலங்கா அரசாங்கம், கந்த மே மாதம் 11ஆம் நாள், 287,598 பேர் இந்த முகாம்களில் இருந்திருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளது. …
-
- 1 reply
- 736 views
-
-
புதிய இட்லர் இராசபக்சே அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஒபாமா போரை நிறுத்தும்படியும் அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றும்படியும் வேண்டுகோள் விடுத்தார். பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் மிலிபாண்ட், பிரான்சு வெளியுறவுத் துறை அமைச்சர் பெர்னார்டு கவுச்னர் ஆகிய இருவரும் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யுமாறு சிங்கள அரசை வற்புறுத்துவதற்காக நேரடியாக கொழும்பு சென்று பேசினர். ஆனால் இவர்கள் அனைவரின் வேண்டுகோளையும் ஏற்க சிங்கள அரசு மறுத்துவிட்டது. தனது பொருளாதார வளர்ச்சிக்காக மேற்கு நாடுகளை நம்பிக் கிடந்த சிங்கள அரசு அந்நாடுகளின் வேண்டுகோளை மறுக்கும் துணிவினைப் பெற்றது எப்படி? அது மட்டுமல்ல. ஆண்டுதோறும் கனடா நாட்டின் பொருளாதார உதவியை பெற்றுக் க…
-
- 1 reply
- 1.1k views
-
-
பிரபாகரன் தலைமையில் தமிழீழம் மலர்வது உறுதி களம் புகுவோம்! கடமையாற்றுவோம்! பழ.நெடுமாறன் 30 ஆண்டு காலம் அறவழியிலும் 30 ஆண்டு காலம் மறவழியிலும் ஈழத்தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பெற நடத்திய போராட்டத்தை முற்றிலுமாக முறியடித்து விட்டதாக சிங்களப் பேரினவாத அரசு வெற்றிமுரசு கொட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் எந்த தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டமும் ஒருபோதும் ஓய்ந்து விடுவதில்லை. விழவிழ எழுவோம் என்பதுதான் விடுதலைப் போராளிகளின் இலட்சிய முழக்கமாகும். இராசபக்சேயைவிட மிகக்கொடிய இனவெறியர்களான இட்லரும், முசோலினியும் அய்ரோப்பாவில் பல்வேறு தேசிய இனங்களை அடக்கி ஒடுக்கச் செய்த முயற்சிகள் இறுதியில் என்ன ஆயின என்பதை உலக வரலாறு நமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது.…
-
- 0 replies
- 3.8k views
-
-
சிங்கள இராணுவத்தின் சிறையில் அகப்பட்டுள்ள புலிகளின் தலைவர்கள், மதிப்பிற்குரிய பேபி, எழிலன், இளம்பருதி, யோகி, பாலகுமார், புதுவை இரத்தின துரை, திலகர் போன்றவர்களை விடுதலை செய்ய வேண்டி நாம் கோரவேண்டும், அதற்காக இயக்கம் நடத்த வேண்டும். துப்பாக்கிகள் மௌநிக்கப்பட்டதாக புலிகள் அறிவித்த பின்னும் அவர்களை சிறை படுத்துவது, கொடுமை படுத்துவது, அநாகரிகமாக நடத்துவது போன்றவை ஏற்றுக்கொள்ள முடியாதது. மூன்று லட்சம் அல்ல, ஆறு லட்சம் மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டு விட்டு அவர்களுக்கு சோறு போடு குழம்பு ஊற்று, பாய், தலையணை கொடு என்று சர்வதேசம் சிங்களவனிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறது. இதுதான் சர்வதேசத்தின் வேலையா? சர்வதேசம் புலிகளிடம் கேட்டது ஆயுதங்களை கீழே போடுங்கள் அமைதி வழிக்கு வாருங்கள் என்றுத…
-
- 2 replies
- 1.1k views
-
-
17/06/2009, 12:21 [கொழும்புச் செய்தியாளர் மயூரன்] வெள்ளவத்தை மருந்தக உரிமையாளர் கைதின் பின்னணி என்ன? தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாகக்கூறும் சிறீலங்கா அரசு, விடுதலைப் புலிகளுக்கு உதவ முனைபவர்கள் எனக்கூறி, தமிழ் மக்களைக் கைது செய்து வருகின்றது. கொழும்பு வெள்ளவத்தையில் கடந்த சில நாட்களுக்குள் இவ்வாறான பலர் சந்தேகத்தின் பெயரில் மட்டும் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளவத்தையில் மருந்தகம் ஒன்றை நடத்திவந்த அதன் உரிமையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டு, மருந்தகமும் சீல் வைக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளிடம் கையளிக்க வைத்திருந்த ஒரு தொகுதி மருந்துப் பொருள்கள் இவரிடம் இருந்த கைப்பற்றப்பட…
-
- 0 replies
- 1.1k views
-
-
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.5 பில்.அமெரிக்க டொலர் கடனுதவி : மத்திய வங்கி அதிகாரி வீரகேசரி இணையம் 6/17/2009 10:34:05 AM - சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.5 பில்லியன் அமெரிக்க டொலரைக் கடனாக வழங்கவுள்ளதாக மத்திய வங்கி உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் கோரிய 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையைவிடவும் மேலதிகமான தொகையை சர்வதேச நாணய நிதியம் வழங்கத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், இலங்கைக்குக் கடன் வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியம் இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை
-
- 2 replies
- 726 views
-
-
16/06/2009, 16:43 [செய்தியாளர் தாயகன்] இலங்கை மீதான ஆதிக்கப் போட்டியில் இந்தியாவும், சீனாவும் இலங்கை மீதான ஆதிக்கப் போட்டியில் இந்தியாவும், சீனாவும் பனிப்போரில் ஈடுபட்டுள்ளன. ஹம்பாந்தோட்டை துறைமுக சீர்திருத்தப் பணியை விரைவாக முடித்துக்கொண்டு, இலங்கையில் ஏனைய பல இடங்களில் அபிவிருத்திப் பணியில் ஈடுபட இருப்பதாக சீனா அறிவித்துள்ளது. கடந்த வாரம் சீனாவிற்குச் சென்றிருந்த சிறீலங்காவின் வர்த்தக ஊக்குவிப்பு அமைச்சர் ஜு.எல் பீரிஸ், சீனாவின் பணிகளை வெகுவாகப் பாராட்டியிருந்தார். இந்தத் துறைமுகத்தினை மீளமைப்பதற்கு முதலில் இந்தியாவை அணுகியதாகவும், இந்தியா மறுக்கவே, தாம் சீனாவை நாடியதாகவும், சிறீலங்காவின் அரச உயரதிகாரி ஒருவர் அண்மையில் தெரிவித்திருந்தார். …
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையிர் தொடர்ந்து தாக்குதல் மேற்கொள்வது குறித்தும், கச்சதீவில் இலங்கை இராணுவ மையம் அமைப்பது குறித்தும், கவனத்திற்கொள்ளுமாறு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தமிழக அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்விரு விடயங்கள் குறித்தும், பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதலமைச்சர் கருணாநிதி நேற்று எழுதியுள்ள கடிதத்தில்: இந்திய மத்திய அரசிடம் தமிழ்நாடு மாநில அரசு சமர்ப்பித் முறைப்பாடுகளினடிப்படையில், இந்திய அரசு தெரிவித்த முறைப்பாட்டிற்கு இலங்கை அரசு பலமுறை உறுதியளித்துப் பதிலளித்த நிலையிலும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது , தொடர்ந்து நடைபெ…
-
- 1 reply
- 626 views
-
-
விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பென கனடியப் பிரதமர் ஸ்ரீபன் ஹார்பர் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் நேசஅணியாக இருக்கும் இலங்கை மற்றவர்கள் மீது சந்தேகப்படும் தன்மையை கொண்டிருப்பதாகவும் இந்நிலையில், இராணுவ வெற்றியைத்தொடர்ந்து தமிழ் பொதுமக்களின் உரிமைகளுக்கு இலங்கை மதிப்பளிக்குமென எவ்வாறு நம்பிக்கை கொள்ளமுடியும் என்றும் கேள்வி எழுப்பியிருக்கும் "ரொரன்ரோ சன்' பத்திரிகை அதனாலேயே சர்வதேச அவதானிகள் தேவைப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது. "இலங்கை எதனை மறைக்கிறது' என்று மகுடமிட்டு "ரொரன்ரோ சன்' நேற்று திங்கட்கிழமை ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; இலங்கை இறைமையுள்ள தேசமாகும். லிபரல்கட்சி எம்.பி.ப…
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) போட்டியிடும் என அக்கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 480 views
-
-
பிரித்தானிய டைம்ஸ் ஒன்லைனில் இன்று பிரசுரமானவைகள்... தயவு செய்து உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்.... Tamil Tiger rebels' chance to keep the nationalist dream alive Sri Lanka Tamil Tigers say struggle for separate state will continue from exile
-
- 0 replies
- 1.5k views
-
-
http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=52045
-
- 0 replies
- 838 views
-
-
அன்பான புலம்பெயர் உறவுகளே! இன்று நாம் நின்றுகொண்டு இருப்பது 4ஆம் கட்ட ஈழப்போர். இன்னமும் சிங்களமும் சரி, தமிழ் மக்களில் சிலரும் சரி உண்மையான போரினை, போரின் தன்மையை உணரத் தவறிக்கொண்டு இருக்கின்றார்கள். இந்த நான்காம் கட்ட ஈழப்போர் எது? எதனைச் சார்ந்தது என்பதை நீங்கள் உற்று நோக்கினால் இப்போரின் தன்மை மிகத் தெளிவாக புரிந்து கொள்வீர்கள். இதுவரை நடந்த போர்கள் இராணுவச் சமநிலையை பேணுவதற்கும், இராணுவப் பலத்தினைக் காட்டுவதற்குமே நடாத்தப்பட்ட போர்களாகும், ஆனால் இம்முறை நடைபெறும் இந்தப் போரானது இராணுவ பலத்திலோ, இராணுவச் சமநிலையை நிலைநாட்டவோ அவசியமற்றது, அதனை விடுதலைப் புலிகள் ஏற்கனவே போர்களின் மூலம் நிரூபித்திருக்கின்றார்கள். அப்படியானால் இம்முறை போராட்டம் எதிலே தங்கியுள்ள…
-
- 7 replies
- 2.1k views
-
-
மானிடம் பேணும் சட்ட நெறிகளையும் மனித நாகரீகத்தின் அனைத்துப் பண்புகளையும் முற்றுமுழுதாக மீறி, கொடூரமிக்க, அதீத இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் சிங்கள அரசு, தமிழ் மக்களின் நியாய பூர்வமான தன்னாட்சித் தீர்மான முன்னெடுப்புக்களை நசுக்கிச் சிதைத்துள்ளது. வன்னிப் பிராந்தியத்தில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொலைக்களரியானது முழு உலகையுமே பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த வேதனையிலும் அமிழ்த்தியுள்ளது. குறிப்பாகப் பாவனைக்குத் தடைசெய்யப்பட்ட கனரகப் போராயுதங்களினாலும் அறாத்தொடர்ச்சியான எறிகணைகளாலும், பீரங்கிக்குண்டுகளினாலும் 30,000 க்கு மேற்பட்ட தமிழர்கள் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் கொன்று குவிக்கப்பட்டனர். Committee for the Formation of A Provisional Transnat…
-
- 3 replies
- 1.6k views
-
-
பிரித்தானியாவில் கடந்த 75 நாட்களாக தொடரும் கவனயீர்ப்பு போராட்டம் நாளை (17-06-09)நிறைவுக்கு வருகின்றது தமிழீழ தாயகத்தில் தமிழ் மக்களின் நிலை சாவா? வாழ்வா? என்ற பொழுது புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் தான் அவர்களுக்கு ஒரே ஒரு ஆறுதலாக இருந்த நேரத்தில் பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர்களால் 06.04.09 தொடக்கம் பல இடையூறுகளை கடந்து மேற்கொள்ளப்பட்ட அறவழிப் போராட்டம் நாளை மாலை 6 மணிக்கு உறுதி மொழியுடன் நிறைவுக்கு வருகின்றது. பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் பரமேஸ்வரன் தொடக்கம் ரிம் மாற்றின் வரை பலர் உன்னத பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்டு வந்துள்ளனர். அதனால் இந்த போராட்டத்தில் பல முன்னேற்றங்களும் நிகழ்ந்துள்ளது. இவ்வ…
-
- 0 replies
- 781 views
-
-
16/06/2009, 16:40 [கொழும்புச் செய்தியாளர் மயூரன்] தென் கொரிய போர்க்கப்பல்கள் கொழும்பில் - பல்வேறு சந்தேகங்கள் தென் கொரிய கடற் படையின் போர்க் கப்பல்கள் இரண்டு சிறீலங்காவின் கொழும்பு துறைமுகத்திற்குச் சென்று நங்கூரமிட்டுள்ளன. சொய் யங் மற்றும் றொக்ஸ் டயி சியோங் என்ற பெயர்களைக் கொண்ட பயிற்சி மற்றும் சுற்றுக்காவல் கப்பல்களே கொழும்பை சென்றடைந்துள்ளன. நல்லெண்ண நடவடிக்கையாகவே இவை சிறீலங்கா வந்தடைந்திருப்பதாகவும், இன்று முதல் 18ஆம் நாள்வரை தமது படைகளுடன் கூட்டு பயிற்சியில் ஈடுபட இருப்பதாகவும், சிறீலங்கா கடற் படையினர் அறிவித்துள்ளனர். ஆனால் இந்த இரண்டு கப்பல்களையும் சிறீலங்காவிற்கு தென் கொரியா அன்பளிப்பாக வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகின்றது. அண்மைய…
-
- 0 replies
- 2k views
-
-
மறுப்புத் தெரிவித்த மூதூர் குடும்பங்கள் வலுக்கட்டாயமாக கிளிவெட்டிக்கு அனுப்பி வைப்பு வீரகேசரி இணையம் 6/16/2009 3:06:35 PM - மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிரிமுட்டி அகதி முகாமில் தங்கியிருந்த மூதூர் கிழக்கைச் சேர்ந்த குடும்பங்கள் கிளிவெட்டி முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு செல்ல ஏற்கனவே மறுப்புத் தெரிவித்தவர்கள் உட்பட 58 குடும்பங்களைச் சேர்ந்த 224 பேரை, இன்று நண்பகல் 10 பஸ்களில், வெருகல் ஊடாக அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். மறுப்புத் தெரிவித்த குடும்பங்கள், பொலிசாரின் உதவி நாடப்பட்டு விருப்பத்திற்கு மாறாக, கிளிவெட்டி முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மூதூர் கிழக்கு உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக, தமது இருப்பிடங்களில் மீள் குடியேற முடிய…
-
- 0 replies
- 954 views
-
-
16/06/2009, 16:35 [யாழ் செய்தியாளர் சிறீதரன்] வன்னி வான் பரப்பில் இப்பொதும் பறப்பில் ஈடுபடும் வேவு வானூர்திகள் சிறீலங்கா படையினரின் வேவு வானூர்திகள் தொடர்ந்தும் வன்னி வான் பரப்பில் பறப்பில் ஈடுபடுவதை அவதானித்துள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் மக்களின் வாழ்வுரிமைப் போரை தாம் முற்றாக முடக்கிவிட்டோம் எனவும், போராளிகளை அழித்து விட்டோம் என்றும் கடந்த மாதம் 18ஆம் நாள் சிறீலங்கா அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு மாதம் ஆகவுள்ள நிலையிலும், வன்னியில் வேவு வானூர்திகள் பறப்பு நடவடிக்கை இதுவரை நிறுத்தப்படவில்லை. போர் காலத்தில் பறப்பில் ஈடுபடுவது போன்று காலை முதல் மாலைவரை இந்த வேவு வானூர்தி பறப்பில் ஈடுபடுவது தமக்கு ஆச்சர…
-
- 0 replies
- 1.3k views
-
-
16/06/2009, 16:25 [யாழ் செய்தியாளர் சிறீதரன்] கொழும்பு சென்ற பாரவூர்திகள் நாவற்குழியில் தடுத்து வைப்பு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு விவசாய பொருள்களை ஏற்றிச்சென்ற பாரவூர்திகள் நாவற்குழியில் சிறீலங்கா படையினரால் மறித்து வைக்கப்பட்டுள்ளன. சிறீலங்கா அதிகாரிகள் பணிப்புரைக்கு அமைய பொருள்கள் ஏற்றப்பட்டு கொழும்பு நோக்கி தொடரணியாக சென்றுகொண்டிருந்தபோது, நாவற்குழியில் வைத்து சிறீலங்கா படையினரால் இவை மறித்து வைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட பாரவூர்திகளின் செலுத்துனர்கள் திரும்பிச் செல்லவும் படையினர் அனுமதி வழங்கவில்லை என, எமது குடாநாட்டுச் செய்தியாளர் தெரிவிக்கின்றார். நாளை யாழ் கண்டி வீதியூடாகப் பெருள்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என சிறீலங்கா …
-
- 0 replies
- 614 views
-