ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142934 topics in this forum
-
பலாலி உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் பாரிய குண்டுவெடிப்புச் சத்தங்களால் குடாநாடு அதிர்வு: பலாலி உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் இன்று காலை சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகக் கேட்ட பாரிய குண்டுவெடிப்புச் சத்தங்களால் குடாநாடு அதிர்ந்தது. இதனால் குடாநாட்டு மக்களிடையே பெரும் அச்சமான சூழலும் காணப்பட்டிருந்தது. சுமார் அரை மணித்தியாலத்திற்கும் மேலாக இந்த பாரிய குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்ட வண்ணமே இருந்தன. இதன் விளைவுகள் உயர் பாதுகாப்பு வலயத்தை அண்டிய வடமராட்சி தொண்டமனாறு, வல்வெட்டித்துறை உடுப்பிட்டி மற்றும் இடைக்காடு அச்சுவேலி புன்னாலைக்கட்டுவன் போன்ற உயர் பாதுகாப்பு வலயத்தின் எல்லைப்புறக் கிராமங்கள் அதிந்த வண்ணமே இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றஙது. நீண்…
-
- 1 reply
- 3.4k views
-
-
தமிழர்களுக்கு உரிமைகள் வழங்கப்படாவிட்டால் மீண்டுமொரு ஆயுத போராட்டத்தை சந்திக்க நேரிடலாம் : ஓய்வு பெறும் பிரதம நீதியரசர் திகதி: 06.06.2009 // தமிழீழம் நீதியில் சிங்கள பௌத்தம் என ஒன்று இல்லை. எல்லா இனமும் சமயமும் ஒன்று தான். நான் இனவாதியாக இருக்கவில்லை. " இளைப்பாறிச் செல்லும் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். "தமிழ் மக்களுக்கு, உகந்த நீதி மற்றும் சமூக கட்டமைப்புகள் மூலம், சட்டத்தின் கீழ் உரிய பாதுகாப்பு அளிக்காவிட்டால் தமிழ் மக்களிடையே ஆயுத மோதலுக்குப் பதிலாக மற்றொரு கிளர்ச்சி வெடிக்கும் சாத்தியம் உள்ளது. சரியான முறையில் தமிழர் உரிமைகள் வழங்கப்படாத பட்சத்தில் மீண்டுமொரு ஆயுத போராட்டத்தை சந்திக்க நேரிடலாம்" எனவும் அவர் சுட்டிக்காட்ட…
-
- 2 replies
- 651 views
-
-
இலங்கை அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள 40 அகதி முகாம்களில் உள்ள சிறுவர்களில் கிட்டத்தட்ட 13 %வீதமானவர்கள் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், இவர்களில் 4 பேரில் ஒருவருக்கு என்ற விகிதத்தில் அதாவது கிட்டத்தட்ட 10,000 சிறுவர்கள் கடுமையான போசாக்கின்மையால் அவதிப்படுவதாக மனிதாபிமான அமைப்புகள் ஐரின் செய்திச்சேவைக்குத் தெரிவித்துள்ளன. கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, 25.5 வீத சிறுவர்கள் கடுமையான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டதாகவும் அதில் 5.2 வீதமானோருக்கு உடனடி மருத்துவம் தேவைப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால் தற்போது இடம்பெயர்ந்த மக்களின் தொகை பலமடங்கு அதிகமாகிவிட்டதால் இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தொண்டு நிறுவனங்கள் முகாம்களுக…
-
- 0 replies
- 507 views
-
-
06/06/2009, 12:07 [செய்தியாளர் தாயகன்] வவுனியா முகாமிலுள்ள அவுஸ்திரேலியப் பிரசைகள் ஒரு வருடம் தடுத்து வைக்கப்படலாம் வவுனியா முகாமிலுள்ள அவுஸ்திரேலியப் பிரசைகள் ஒரு வருடம் தடுத்து வைக்கப்படலாம் என அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மூன்று இலட்சம் வரையிலான மக்களுடன் தமிழீழத்தைப் பூர்வவீகமாகக் கொண்ட வெளிநாட்டுப் பிரசைகள் 6 பேர் உள்ளனர். அவுஸ்திரேலியாவில் வாழும் மூவருடன், பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ்வாணி, மற்றும் நோர்வே, நெதர்லாந்துப் பிரசைகளும் வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை உடனடியாக விடுதலை செய்ய முடியாது எனவும், ஒரு வருடம் வரை விசாரணை நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அரசு கூறியதையும…
-
- 0 replies
- 720 views
-
-
மன்னாரில் சுழற்காற்று : மக்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிப்பு வீரகேசரி இணையம் 6/6/2009 10:45:18 AM - மன்னாரில் கடந்த சில தினங்களாக சுழற்காற்று வீசி வருகிறது.இதனால் மக்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிப்படைந்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென கடும் காற்று வீசியது.இதனால் மன்னாரில் பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது.தொடர்ச்சியாக சுழற்காற்று வீசி வருகின்றமையினால் மக்களின் போக்குவரத்துகளும் பாதிப்படைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-
- 2 replies
- 570 views
-
-
நடேசன், புலித்தேவன் சரணடைதல் நிகழ்வுகளில் விஜய் நம்பியாருக்குத் தொடர்பு திகதி: 06.06.2009 // தமிழீழம் விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன், சமாதான செயலக தலைவர் புலித்தேவன் ஆகியோர் சரண் அடைவது தொடர்பாக சிறீலங்கா அரசுடன் விஜய் நம்பியார் ஆலோசனை நடத்தினார் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் செய்தித் தொடர்பாளர் மிசேல் மொன்டாஸ் கூறியுள்ளார். பா.நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் வெள்ளைக் கொடியுடன் சரணடைய சென்றபோது இராணுவத்தால் வெறித்தனமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தட்டிக் கேட்ட நடேசனின் சிங்கள மனைவியையும் இராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக் கொன்று விட்டனர். நடேசனையும், புலித்தேவனையும் சரணடைய வைக்க அனுப்பி அவர்களை சிலர் சதி …
-
- 0 replies
- 891 views
-
-
தமிழ் இளையோர்கள் அநுராதபுரத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்கள் வவுனியா முகாம்களில் இருந்து அநுராதபுரத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். சிங்கள கிராமங்களுக்கு நடுவில் திறந்த வெளிச் சிறைச்சாலைகள் அமைத்து, அங்கு சிறீலங்கா படையினரின் பாதுகாப்புக்கு மத்தியில் இவர்களை அடைத்து வைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் வாழ்நாள் முழுவதும் சிறைவாசம் அனுபவிக்கும் நிலைக்கு தமிழ் இளையோர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கான இடத்தை தெரிவு செய்யும் செயற்பாட்டிலும், சிறிய குடிசைகள் அமைப்பதற்கும், தொண்டு நிறுவனங்களின் உதவியை சிறீலங்கா அரசு நாடியுள்ளது. அநுராதபுரம் கெப்பற்றிக்கொலாவ பகுதியில், முகாம் ஒன்றில் வன்னியி…
-
- 2 replies
- 769 views
-
-
சிறுபான்மை மக்களது உரிமைகள் சரியான முறையில் பாதுகாக்கப் படாத சந்தர்ப்பத்தில் மீண்டும் ஆயுத போராட்டம் வெடிக்கக் கூடும் என பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். தமிழ் மக்களது உரிமைகளை பாதுகாக்கக் கூடிய சட்ட மற்றும் சமூக கட்டமைப்பை உருவாக்க வேண்டியது மிகவும் இன்றியமையாததென அவர் குறிப்பிட்டுள்ளார். சரியான முறையில் தமிழர் உரிமைகள் வழங்கப்படாத பட்சத்தில் மீண்டுமொரு ஆயுத போராட்டத்தை சந்திக்க நேரிடலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் 7ம் திகதியுடன் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறும் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா இறுதித் தடவையாக நீதிமன்ற வளாகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் க…
-
- 1 reply
- 1.6k views
-
-
யாழ்பாணம் மயிலிட்டி பகுதியில் உள்ள இராணுவ ஆயுத கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ கட்டுப்பாடுக்குள் கொண்டுவரப்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். வீரகேசரி
-
- 0 replies
- 1.5k views
-
-
மரணத்தை வென்ற மாவீரன் தமிழீழ விடுதலைப் போராட் டத்தின் அச்சாணியாக திகழ்பவர் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் என்பது உலகறிந்த உண்மை. தமிழீழ மக்களுக்கு விடுதலை உணர் வூட்டி தியாக வேள்வியில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் துணிவினை யும் தீரத்தையும் அவர்கள் பெற வழிகாட்டியவர் பிரபாகரன். சிங்கள அரசின் ஆசை வார்த்தை களுக்கோ அல்லது பதவி சபலங் களுக்கோ ஒரு சிறிதும் இரையாகாமல் இலட்சிய உறுதியோடு களத்தில் நிற்பவர் பிரபாகரன் மட்டுமே. எத்தனையோ போராளிக்குழுக்களின் தலைவர்கள் எல்லாம் விலைபோய்விட்ட பிறகுகூட தனது மக்களையும் மண்ணையும் காட்டிக்கொடுக்க அவர் ஒருபோதும் முன்வந்தது இல்லை. எனவேதான் அவரைத் தீர்த்துக்கட்டினால் விடுதலைப் போரையே முடிவுக்குக் கொண்டுவந்து விடலா…
-
- 2 replies
- 1.7k views
-
-
பொத்துவில், அறுகம்பை ‐ உடும்பிகுளம் காட்டுப் பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும், அதிரடிப்படையினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி மோதல்கள் இடம்பெற்றதாக காவற்துறைப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். இந்த மோதல்களை அடுத்து, குறித்த பிரதேசத்தில் இருந்து புலிகளின் இரண்டு சடலங்களை அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் பிரதேசத்தில் இருந்து ஆயுதங்களை அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர் எனவும் குணசேகர தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/tamil_news....10364&cat=1
-
- 0 replies
- 1.3k views
-
-
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப்படும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை வெளியிட்டுள்ள கருத்துக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் நடத்தப்பட்ட அமர்வுகளின் போது உறுப்பு நாடுகளினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அதன் ஆணாயளர் நவனீதம்பிள்ளை உதாசீனம் செய்துள்ளதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை விவகாரம் தொடர்பில் உறுப்பு நாடுகளுக்கு இடையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து அதன் தலைவரே விமர்சனம் செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகத்தின் சுயாதீன…
-
- 0 replies
- 528 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அடையப் பெற்ற வெற்றியை கொண்டாடும் நீண்ட களியாட்ட நிகழ்வுகள் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் எச்சரிக்கை விடுத்துள்ளார். யுத்தத்தினால் பாரிய இழப்புக்களை எதிர்நோக்கிய மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதில் அரசாங்கம் அதிக முனைப்பு காட்ட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். அதிகபட்சமான யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் எதிர்மறையான விளைவுகளை உண்டு பண்ணக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையின் 15 உறுப்பு நாடுகளுடனான சந்திப்பின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வெற்றிக் களிப்பில் திளைப்பதனைவிட…
-
- 0 replies
- 416 views
-
-
தமிழர்களுக்கான தீர்வுக்கு இந்தியா வலியுறுத்த வேண்டும் - இல.கணேசன் சிறீலங்கா அரசு தமிழர்களுக்கு வழங்கவுள்ள உரிமைகளை தாமதமின்றி அறிவிப்பதற்கு இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என, பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழ்நாடு தலைவர் இல.கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். தனது சொந்த நாட்டு மக்களை அழித்து வெற்றி விழாக் கொண்டாடும் ஒரே அரசு சிறீலங்காதான் எனவும், அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒடுக்கி விட்டதாக வெற்றி விழா கொண்டாடிவரும் சிறீலங்கா அரசு, இறுதிக்கட்ட போரில் சுமார் 20 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதை மறைத்து விட்டதாகவும் அவர் கண்டனம் தெரிவித்தார். அத்துடன், வெள்ளைக்கொடி ஏந்திச் சென்ற தளபதிகளையும் உலக போர் நியதிக்கு மாறாக சிறீல…
-
- 0 replies
- 438 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுவிட்ட மகிழ்ச்சியில் மேலும் குற்றங்களைச் செய்யாமல் போரினால் ஏற்பட்ட காயத்தை போக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தியிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 311 views
-
-
உலகில் ஏதேனும் ஒரு பகுதியில் இனப்படுகொலை நடைபெறும்போது அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் உலக நாடுகளுக்கு உள்ளது என்று அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா கூறியிருக்கிறார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 314 views
-
-
UN chief warns Sri Lanka against 'triumphalism' By Gerard Aziakou UNITED NATIONS (AFP) - UN chief Ban Ki-moon on Friday warned the Sri Lankan government against "triumphalism" after its recent defeat of the Tamil separatist insurgency and urged it to "heal the wounds" of the bitter conflict. "I would like to take this opportunity to warn against the risk of triumphalism in the wake of victory," Ban told reporters after he briefed the 15-member Security Council on his visit to ethnically divided Sri Lanka last month. "It is very important at this time to unite and heal the wounds, rather than enjoy all this triumphalism," he added, after the Sri Lankan ar…
-
- 4 replies
- 1.7k views
-
-
லண்டனில் நடைபெற்று வரும் 20 ஓவர் கொண்ட உலகக் கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டியில் கலந்துகொள்வதற்காக சென்றிருக்கும் சிறிலங்கா அணியை புறக்கணிக்குமாறு கோரி அங்கு வாழும் தமிழ் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 493 views
-
-
-
- 0 replies
- 709 views
-
-
விதைக்க வந்திருக்கிறீர்களா இல்லை புதைக்க வந்திருக்கிறீர்களா ? புலம் பெயர் மக்கள் நல்வாழ்விற்காக அலைகள் வழங்கும் வாராந்த சிந்தனைத் தொடர் 30.05.09. தலைவர் வருவார் போராட்டத்தை முன்னெடுத்து செல்வார் என்று பழ. நெடுமாறன், வை.கோ போன்றோர் கூறுகிறார்கள். இனி ஆயுதப்போராட்டம் இல்லை அரசியல் நீரோட்டத்தில் கலந்து பேச்சுக்களில் ஈடுபடுவதே ஒரே வழி என்று செல்வராசா பத்மநாதன் தரப்பினர் கூறுகிறார்கள்….. புவனசுந்தரம் மாஸ்டர் சொன்ன கதை. புவனசுந்தரம் மாஸ்டர் இளவாலையைச் சேர்ந்தவர். வல்வை சிதம்பராக்கல்லூரியில் வரலாற்று ஆசிரியராக நீண்டகாலமாக பணியாற்றியவர். வரலாற்றை வெறும் பாடமாகக் கற்காமல் அதை வாழ்வில் எப்படிப் பயன்படுத்துவது என்ற கலையை எமக்கெல்லாம் சொல்லிக் கொடுத்தவர் அவர்…
-
- 0 replies
- 1.9k views
-
-
பல தசாப்பதங்களாக தொடரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு அரசியல் தீர்வை முன்வைப்பதில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உண்மையான பங்களிப்பை வழங்க வேண்டும் என அமெரிக்கா செனட்டர் றஸ் பெய்ன்கோல்ட் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: பல தசாப்பதங்களாக தொடரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு அரசியல் தீர்வை முன்வைப்பதில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபச்ச உண்மையான பங்களிப்பை வழங்கவேண்டும். அவர் தமிழ் மக்களின் அவாக்களை நேர்மையான வழிகளில் நிறைவேற்ற வேண்டும். உலகின் இராஜதந்திரிகள் அமைதி வழியிலான தீர்வு தொடர்பான அழுத்தங்களை மேற்கொள்ள வேண்டும். மோதல்களில் பொதுமக்கள் கௌரவமாக நடத்தப்பட வேண்டும். இணைத்தலைமை நாடுகள் சிறிலங்காவின் பி…
-
- 0 replies
- 412 views
-
-
சிறிலங்கா மீதான போர்க் குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்துலக மன்னிப்புச் சபையானது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கு கோரிக்கை விடுத்திருக்கின்றது. இலங்கையில் நடைபெற்ற போர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூன், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் கருத்து வெளியிடவுள்ள நிலையில் அனைத்துலக மன்னிப்புச் சபை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. இது தொடர்பாக மன்னிப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா அரசாங்கத்தினால் நடத்தப்படும் முகாம்களுக்கு மனிதாபிமான அமைப்புக்கள் முழு அளவில் செல்வதற்கான அனுமதியைப் பெறுவது தொடர்பாக பாதுகாப்புச் சபை அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும். அங்கு மூன…
-
- 0 replies
- 415 views
-
-
இனியும் நம்பதான் வேண்டுமா சர்வதேசம் மற்றும் ஐ.நா வை? ரோம் நகரம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தபோது அந்நாட்டு மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று சொல்லக்கேள்விபட்டிருக்கிறோ
-
- 0 replies
- 1k views
-
-
தமிழீழ உறவுகளே ஒரு நிமிடம். இந்த 2009ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே எம்மினத்தின் அழிவு அதிகரிக்கத் தொடங்கி, இருபதாயிரத்திற்கும் அதிகமான உயிரிழப்புகளுடனும், கணக்கிடமுடியா சொத்திழப்புகளுடனும் போர் முடிவுக்குவந்ததாக சிறிலங்கா பேரினவாத அரசு அறிவித்தது. அத்தோடு முப்பதாயிரம் வரையானவர்கள் உடலுறுப்புக்களை இழந்திருக்கிறார்கள். ஆனால் எத்தனை பேர் இது வரை காணாமல் போனார்கள், எத்தனைபேர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் திருப்புமுனைக்கு காரணகர்த்தாவாகிய தியாகி பொன்.சிவகுமாரனின் 35 ஆம் ஆண்டு நினைவு நாளினை ஈழத் தமிழர்கள் இன்று வெள்ளிக்கிழமை நினைவுகூருகின்றனர். 1974 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் நாள் தனது 24 ஆவது வயதில் சயனைட் அருந்தி களப்பலியான பொன்.சிவகுமாரன் ஈழப்போராட்டதின் புதிய வரலாற்றை தொடக்கி வைத்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உரும்பிராய் கிராமத்தில் 26.08.50 ஆண்டில் பொன்னுத்துரை - அன்னலட்சுமி தம்பதியினரின் மூன்றாவது மகனாக பிறந்த சிவகுமாரன் இளவயதிலேயே பொதுவுடமைக் கருத்துக்கொண்ட சமூகச் செயற்பாட்டாளனாக விளங்கினார். 1970 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான கல்வித் தரப்படுத்தல் திட்டத்திற்கு எதிரான ப…
-
- 1 reply
- 493 views
-