ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
தமிழ்நாட்டு மக்கள் எதிர்வரும் புதன்கிழமை (13.05.09) நடைபெறவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தெளிவான செய்தியை தெரிவிப்பார்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வலுவான நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 365 views
-
-
இலங்கைக்கு சீனா 1 மில்லியன் டாலர் நிதியுதவி செவ்வாய்க்கிழமை, மே 5, 2009, 18:08 [iST] பெய்ஜிங்: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பெருமளவில் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கி வரும் சீனா, தற்போது 1 மில்லியன் டாலர் நிதியுதவியயை அளிக்கிறது. மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக இந்த நிதியுதவியை அளிக்கிறதாம் சீனா. இடம் பெயர்ந்து வந்த தமிழர்களுக்கு உதவ இந்த நிதியை இலங்கை பயன்படுத்திக் கொள்ளுமாம். இதுகுறித்து சீன உள்நாட்டுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஷாஸூ செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் நாங்கள் மிகுந்த அக்கறை செலுத்துகிறோம். இலங்கையில் சமூக ஸ்திரத்தன்மை, தேசிய மறு சீரமைப்பு ஆகியவற்றை பராமரிக்க இலங்கை மக்களுக்கு அடிப்படை …
-
- 4 replies
- 823 views
-
-
வணக்கம், பலருக்கும் தெரிந்திராத இந்த புதிருக்கான விடை எமது ஊடகங்களில் இருந்து இதுவரை கிடைக்கவில்லை. கூகிழில் சிறிய ஓர் ஆராய்ச்சி செய்தபோது cp24 கனேடிய ஆங்கில ஊடகத்தில் கீழ்வரும் செய்தியை காண முடிந்தது. நன்றி! Tuesday's downtown Tamil protest postponed: organizer Tuesday's Tamil protest where "tens of thousands" of supporters were going to form a human chain throughout the downtown core has been postponed, organizers say. The protest spokesperson Siva Vimal told CP24 that the protest has been postponed due to International Cooperation Minister Bev Oda's presence in Sri Lanka. "I think the community is waiting to evaluate our government's action wi…
-
- 1 reply
- 1.3k views
-
-
மட்டுவில் படையினரால் பாடசாலை ஆசிரியர் கொலை மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பகுதியில் இன்று(06-05-2009) காலை 07.45 மணியளவில் சிறிலங்கா புலனாய்வுத் துறையினரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஈச்சந்தீவை சொந்த இடமாகக்கொண்ட 35 அகவையான பாலசிங்கம் ரவீந்திரன் என்ற ஆசிரியரே உயிரிழந்தவராவார். பாவற்கொடிசேனை பாடசாலையில் கல்வி கற்பிக்கும் இவர் தமிழ் மற்றும் சமய பாட ஆசிரியராவார். மூலம்: மீனகம்.கொம்
-
- 0 replies
- 885 views
-
-
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்தவர்களுக்காக என யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களுக்குள் பிரவேசிக்கும் சிறிலங்கா இராணுவத்தினர், அங்குள்ள இளைஞர்கள், யுவதிகளைப் பலவந்தமாகக் கொண்டு செல்லும் சம்பவங்கள் பெருமளவுக்கு அதிகரித்திருப்பதால் தடுப்பு முகாம்களில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் அச்சநிலை உருவாகியிருக்கின்றது. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்காக என தென்மராட்சி மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் பெருமளவு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர் இந்த முகாம்களைச் சுற்றி பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கும் அதேவேளையில் முகாம்களில் உள்ளவர்களை வெளியே சென்று வருவதற்கும் படையினர் அனுமதிப்பதில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான நிலையில் இரவு வேளை…
-
- 0 replies
- 1k views
-
-
"வாக்குறுதிகளைக் காப்பாற்றாமல், தமிழ்க் கட்சிகளை அழைத்துப் பேசி அவர்களுடன் இணைந்து செயற்படுவது போல உலகத்துக்குக் காட்டிக்கொள்ள அரச தலைவர் முற்படுகின்றார்" எனக் குற்றம் சாட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், "அவ்வாறான ஒரு முயற்சிக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டிய ஒரு தேவை எமக்கு இல்லை என்பதால்தான் இன்றைய (நேற்று) சந்திப்பைப் புறக்கணித்தோம்" என மேலும் தெரிவித்தார். வன்னியில் இடம்பெறும் போரின் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியாவில் உள்ள முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலை தொடர்பாக ஆராய்வதற்காக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் நேற்று செவ்வாய்க்கிழமை அழைக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்ட…
-
- 0 replies
- 757 views
-
-
ஈழத் தமிழினத்தின் இழவு நிலை கண்டு உலகத் தமிழினம் கையறு நிலையில் பரிதவித்தவேளை இருளினைத் துடைத்தெழுந்த உதயதாரகை போல உங்களின் தனித்தமிழீழ அறிவிப்பு வெளிவந்தது எம்மையெல்லாம் மெய்சிலிர்க்க வைத்தது என்று ஜெலலிதாவுக்கு அமெரிக்காவில் இருந்து வடகரலைனா மக்களின் அமைதிகாண் அமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 330 views
-
-
"இடம்பெயர்ந்தவர்களுடைய முகாம்களுக்கு மட்டுமன்றி, போர்ப் பகுதிகளுக்கும் கூட ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானப் பணியாளர்களின் குழு சென்று வருவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்" என சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கின்றார். சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன், நேற்று செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடிய ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூன், நெருக்கடிக்குப் பின்னரான அனுசரணையை வழங்குவதற்கும் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்திருக்கின்றார். ஐ.நா.வில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய பான் கீ மூன், "மனிதாபிமான அடிப்படையிலான போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளுமா…
-
- 0 replies
- 317 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவுப் பகுதியில் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் இன்று வீதியில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதைய
-
- 0 replies
- 388 views
-
-
எம்.ஜி.ஆரின் தாய்மை உணர்வையும், தன்னலமற்ற சேவையையும், கொள்கை உறுதிப்பாட்டையும் தங்களிலும் காண்கின்றோம். அதனால் தான் இத்தனை இடர்களைக் கடந்தும் தமிழர் மனங்களை வென்றுள்ளீர்கள் என்று ஜெயலலிதாவுக்கு நோர்வே அன்னை பூபதி கலைக்கூடம் பாராட்டு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 367 views
-
-
தமிழர்களின் போராட்ட உணர்வினால் இந்திரா காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் தமிழ்நாட்டு வருகை இரத்தாகியுள்ளதாக இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 293 views
-
-
சிறீலங்காவுக்கு உதவும் திட்ட வரைபை கோருகின்றார் மன்மோகன் 05/05/2009, 20:13 [தமிழ்நாடு செய்தியாளர் அகரவேல்] சிறீலங்காவின் பூர்விக தமிழ் மக்கள் மீது சிறீலங்கா இந்தியப்படைகள் மேற்கொண்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தடுப்பு முகாமக்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ 100 கோடிக்கான திட்ட வரைபு ஒன்றை இந்திய பிரதமர் மனிமோகன் சிங் அதிகாரிகளிடம் கோரியுள்ளார். இது பற்றி தெரிவித்துள்ள அவர் தாம் வெளிவிவகார அமைச்சிடம் இது பற்றி வினாவியுள்ளதாகவும் இந்திய மத்திய அரசின் 100 கோடி உதவியுடன் தமிழ்நாட்டு அரசின் 25 கோடியும் இதில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து சிறீலங்காவிற்குக் கொண்டு செல்லப்பட இருந்த…
-
- 1 reply
- 1.4k views
-
-
செவ்வாய்க்கிழமை, 5, மே 2009 (22:14 IST) இலங்கையில் தொடரும் ராணுவத் தாக்குதல்: ஐ.நா. கவலை இலங்கை ராணுவம் பீரங்கி உள்பட பல நவீன ஆயுதங்களைக் கொண்டு கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் உயிரிழப்பது அதிகரிக்கும் என்றும் ஐ.நா. செய்தித் தொடர்பாளர் மேரி ஒகாபே நியூயார்க்கில் தெரிவித்துள்ளார். இதுவரை சுமார் 1 லட்சத்து 88 ஆயிரம் தமிழர்கள் இதுவரை போர் பகுதியில் இருந்து வெளியேறியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வவுனியாவில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்துள்ள சுமார் 1,700 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான சேர்க்கப்பட்டுள்ளனர். இத்தகவல்களை இலங்கையில் பணியாற்றி வரும் ஐ.நா. ஊழியர்கள் தலைமையகத்துக்குத் தெரிவித்துள்…
-
- 3 replies
- 850 views
-
-
பிரபாகரன் ஒரு சுதந்திர போராட்ட வீரர், நாங்கள் அவரை மதிக்கிறோம்; அவர் எம்மினத்திற்காகவே போராடுகிறார்: வன்னியிலிருந்து தப்பி இந்தியா வந்த இளம் தமிழ் பெண் பேட்டி பிரபாகரன் எங்கள் தலைவர்; நாங்கள் அவரை மதிக்கிறோம்; அவர் எங்களுக்காகவே போராடுகிறார். அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர். அவர் நீர்மூழ்கி கப்பல் மூலம் தப்பியிருந்தால் நிச்சயமாக நாங்கள் மகிழ்ச்சி அடைவோம் என வன்னியிலிருந்து தப்பி வந்த இளம் தமிழ் பெண் இந்திய தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். பேட்டியின்போது அவர் மேலும் கூறியதாவது: இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது பொய். இப்போதும் குண்டுவீச்சு தாக்குதல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. எங்…
-
- 1 reply
- 958 views
-
-
புதுவகையான எறிகணைத் தாக்குதல்,வீழ்ந்த இடமெங்கும் வெள்ளை நிறத்தில் நெருப்பு Posted by Renu on Tuesday, May 5, 2009, 17:36 | 129 Views | . இன்று (05.05.2009) அதிகாலையில் நாசகார பல்குழல் எறிகணைகளை இலங்கை இராணுவம் பயன்படுத்தியுள்ளது. இந்த எறிகணைகள் வீழ்ந்த இடமெங்கும் வெள்ளை நிறத்தில் நெருப்பு எரிந்ததாகவும், முள்ளிவாய்கால் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்பு மீது இந்த எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததால் பல பொதுமக்கள் அந்த இடத்திலேயே உடல் கருகி இறந்ததாகவும் அறியப்படுகிறது. இத் தாக்குதல் நள்ளிரவில் இருந்து ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகிறது. பலரது உடல்கள் கருகிய நிலையில் காணப்படுவதாகவும், மேலும் பலர் எரிகாயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த எறிகணைகள் வீழ்ந்…
-
- 2 replies
- 1.4k views
-
-
-
இந்தியா சிறிலங்காவிற்கு அளித்த இராணுவ உதவிகளைப் பாரீர்! நம் இனத்தை இப்படிக் கொன்றதும் அழித்ததும் யார்? கொத்துக் கொத்தாக நம் குழந்தைகள் ஈழத்தில் செத்து விழுகின்றன! உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகளையும் நச்சு வாயுக் குண்டுகளையும் தமிழர் வாழும் இடங்கள் மீது வீசுகிறார்கள். குண்டு விழுந்த இடங்கள், ஆட்கள், விலங்குகள், காடுகள் என்று அனைத்துமே எரிந்து கரிக்கட்டைகளாகின்றன! மருத்துவமனைக்கு வரும் தமிழ்ப் பெண்களிடம் கட்டாயக் கருக்கலைப்பு செய்கிறார்கள்! வயிற்றிலிருக்கும் சிசுக்களையும் வெட்டிக் கொல்கிறார்கள்! அண்மையில் உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட நச்சு வளி (விஷ வாயு)க் குண்டுகளை வீசிக் கொன்றிருக்கிறார்கள்! இதுவரை ஒன்றல்ல இரண்டல்ல! இரண்டரை ல…
-
- 2 replies
- 2.2k views
-
-
அரசியல் துறை: மனிதபிமான உதவி உடனடியாக தேவை;உலக நாடுகள் புலம்பெயர் தமிழர்களின் மனிதபிமான உதவிகளை வன்னி மக்களுக்கு அடைய உதவவேண்டும் இன்றைய நிலவரம் - தமிழர் புனர் வாழ்வு கழக அறிக்கை
-
- 0 replies
- 1k views
-
-
ஜேர்மனியில் இரண்டாவது நாளாகத் தொடரும் பட்டினி போராட்டம். [ செவ்வாய்க்கிழமை, 05 மே 2009, 08:28.14 AM GMT +05:30 ] ஜேர்மனி டுசில்டோவ் பாராளுமன்றம் முன்பாக இடம்பெற்று வரும் பட்டினிப் போராட்டம் நேற்று திங்கட்கிழமை இரண்டு நாளாகவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. உடனடிப் போர் நிறுத்தம், வன்னி மக்களுக்கான உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை முன்வைத்தே இவர்கள் பட்டினிப் போரை முன்னெடுத்து வருகின்றனர். இவ் இளைஞர்களுக்கு ஆதரவாக பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் என பட்டினிப் போராட்டம் நடைபெறும் திடலில் ஒன்று கூடித் தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். நன்றி - தமிழ்வின்
-
- 1 reply
- 655 views
-
-
இன்று (05.05.2009) அதிகாலையில் நாசகார பல்குழல் எறிகணைகளை இலங்கை இராணுவம் பயன்படுத்தியுள்ளது. இந்த எறிகணைகள் வீழ்ந்த இடமெங்கும் வெள்ளை நிறத்தில் நெருப்பு எரிந்ததாகவும், முள்ளிவாய்கால் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்பு மீது இந்த எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததால் பல பொதுமக்கள் அந்த இடத்திலேயே உடல் கருகி இறந்ததாகவும் அறியப்படுகிறது. இத் தாக்குதல் நள்ளிரவில் இருந்து ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகிறது. பலரது உடல்கள் கருகிய நிலையில் காணப்படுவதாகவும், மேலும் பலர் எரிகாயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த எறிகணைகள் வீழ்ந்து வெடித்த போது மிகப்பிரகாசமான வெள்ளை நிற தீப்பிழம்பு தோன்றியதாக மக்கள் தெரிவித்துள்ளனர். முன்னர் எப்போதும் பாவிக்காத புதுவகையான நாசகார எறிகணைகளை …
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்தியாவில் பிறந்து, அதன் உயர் பாதுகாப்பு அமைப்பில் அங்கம் வகித்து, சீன தேசத்தில் இராஜரீக கடமை புரிந்த நம்பியார், இன்று ஐ.நா சபைப்பொதுச் செயலாளரின் உதவியாளராகப் பணிபுரிகிறார். இதுகாலவரை, போரை நிறுத்தும்படி வலியுறுத்தாத பான் கீ மூனின் நிலைப்பாட்டிற்கு உறுதுணையாகவும், அறிவுரையாளராகவும் நம்பியாரே இருந்துள்ளார் என்பதை எம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது. உச்சமடையும், மேற்குலகில் வாழும் புலம்பெயர்ந்த மக்களின் எழுச்சிக்கு வடிகால் அமைக்க, பான் கீ மூனால் சிறீலங்காவிற்கு அனுப்பப்பட்டவரே இந்த நம்பியார்.அங்கு சென்றவர், மகிந்த சகோதரர்களுடன் கலந்துரையாடியபின்னர், தனது தாய்நாட்டில் மூன்று நாட்கள் தங்கியிருந்து, ஐ.நா சபைக்குத் திரும்பியுள்ளார். எரிக்சொல்ஹெய்ம் அனுசரணைப் பாத்தி…
-
- 0 replies
- 808 views
-
-
கிளிநொச்சியில் சிங்களவனால் இறக்கப்பட்ட புலிக்கொடி இன்று உலகெங்கும் பட்டொளி வீசிப் பறக்கிறது; நான் புலிதான்: இயக்குனர் சீமான் ஆவேசப்பேச்சு கிளிநொச்சியிலே பறந்த புலிக்கொடியை இறக்கினான் சிங்களவன். இன்றோ, கிளிநொச்சியில் பறந்த புலிக்கொடி உலகெங்கும் பட்டொளி வீசிப் பறக்கிறது. இவ்வாறு சென்னையில் நடைபெற்ற கவியரசு எழுதிய 'மேலைக் கடலில் ஈழக்காற்று' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சீமான் ஆவேசமாகப் பேசினார். இவ்விழாவில் கலந்து சிறப்பித்த இயக்குனர் சீமான், ஒரு மணிநேரம் உணர்ச்சிமயமான உரை நிகழ்த்தினார். இதன்போது அவரது உரையில், இங்கே நான் பேசுவதால் எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் உங்களுக்கு ஏதும் பிரச்சினை வந்துவிடப் போகிறது. காரணம் என…
-
- 3 replies
- 1k views
-
-
இன்று: செவ்வாய்க் கிழமை, மே 5, 2009 வன்னியைச் சேர்ந்தவர்களை சரணடையுமாறு ஒலிபெருக்கி மூலம் படைத்தரப்பு அறிவிப்பு. பிரசுரித்த திகதி : 05 May 2009 யாழ்ப்பாணத்தில் முகாம்களுக்கு வெளியேயுள்ள வன்னியைச் சேர்ந்தவர்களை சரணடையுமாறு தொடர்ச்சியாக ஒளிபெருக்கி மூலம் வடமராட்சி மற்றும் தென்மராட்சிப் பகுதிகளில் படையினர் அறிவிப்புக்களை விடுத்து வருகின்றனர். படையினரூடாக சரணைடைந்து தற்போது இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மேலதிகமாக பலர் முகாம்களுக்கு வெளியே மறைந்து வாழ்வதாகவும் அவர்களை படையினர் தம்மிடையே சரணடையுமாறு ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாகனம் மூலம் இந்த அறிவிப்பினை வடமராட்சி தென்மராட்சியின் குறிப்பிட்ட சில பகுதிகளை இலக்காக வைத்து தொடர்ச்சிய…
-
- 3 replies
- 1.4k views
-
-
-
இலங்கையில் வன்செயல்களில் ஈடுபட்டு வரும் வரும் அராஜக கும்பல்களையும் ஒட்டுக்குழுக்களையும் அடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆசிய மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.'அண்மையில் மட்டக்களப்பில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சதீஷ்குமார் தினுஷ்காவின் கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய கும்பல், அவருடைய குடும்பத்தாரிடம் 3 மில்லியன் ரூபாய்க்கு பேரம் பேசியுள்ளனர். கடத்தப்பட்டதாக தகவல் அறிந்தும், தொடர்புடைய குழுவினர் உடனடியாக செய்யப்படவில்லை,இக்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் சிறிலங்காவின் கிழக்கு மாகாணத்தில் பல குற்றங்களை புரிந்து வருபவர்கள்,' என முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. திருமலையில் இவ்வாறான ஒரு சிறுமியின் கொலை சம்பவம், அம்பலாங்கொடயில் 10 வயதுடைய சிற…
-
- 0 replies
- 828 views
-