Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையின் சீர்திருத்தமுயற்சிகளிற்கு இந்தியாவின் முன்முயற்சி அவசியம்! adminJune 14, 2023 இலங்கையின் சீர்திருத்தமுயற்சிகளிற்கு இந்தியாவின் முன்முயற்சியான நடவடிக்கைகள் அவசியமானவை என அமெரி;க்காவின் திறைசேரி செயலாளர் ஜனெட் யெலென் தெரிவித்துள்ளார். இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்படும்போது முக்கியமான விடயங்களிற்கு குறிப்பிடத்தக்க உத்வேகத்தை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆறுமாதங்களில் தாங்கள் பல்வேறு விடயங்களில் முன்னேற்றத்தை கண்டுள்ளதாக தெரிவித்துள்ள திறைசேரி செயலாளர் மூன்றாம் உலக நாடுகள் எதிர்கொள்ளும் கடன் அச்சுறுத்தல் நுண் பொருளாதாரத்திற்கும் ஸ்திரதன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்திவருகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார். உரிய…

  2. யாழில். முச்சக்கர வண்டி விபத்து – 11 முன்பள்ளி மாணவர்கள் காயம் adminJune 14, 2023 அதிகளவிலான முன்பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற முச்சக்கர வண்டி கவிழ்ந்ததில் 11 மாணவர்கள் உள்ளிட்ட 12 பேர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம், கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முன்பள்ளி ஒன்றுக்கு 11 மாணவர்களை ஏற்றி சென்ற முச்சக்கர வண்டி வீதியோரமாக கவிழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. அதன் போது , முச்சக்கர வண்டிக்குள் இருந்த 11 மாணவர்களும் காயமடைந்துள்ளதுடன் , முச்சக்கர வண்டி சாரதியும் காயமடைந்துள்ளார். காயமடைந்த 12 பேரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பி…

  3. இலங்கையில் உணவுப் பற்றாக்குறையில் இருப்பதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லையாம் !! இலங்கையில் 7.5 மில்லியன் மக்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக வெளியான செய்திகள் பொய்யானவை என உலக உணவுத் திட்டத்திற்கான ஒத்துழைப்பு செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுலக்ஷனா ஜயவர்தன தெரிவித்துள்ளார். இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் உணவுப் பாதுகாப்பில் முன்னேற்றத்தைக் காட்டுவதாக குறிப்பிடும் பயிர் மற்றும் பாதுகாப்பு மதிப்பீட்டு செயற்பாட்டு கண்டுபிடிப்புகளுக்கு இது முரணாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1334654

    • 5 replies
    • 429 views
  4. Published By: DIGITAL DESK 3 13 JUN, 2023 | 09:45 PM ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எமது கோரிக்கைக்கு அமைவாக மாகாண சபைகளை மையப்படுத்திய இடைக்கால நிருவாக முறைமையையே செயற்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இதனடிப்படையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்திக்கச் செல்வதோடு தமிழரசுக்கட்சியும் எமது கோரிக்கையுடன் விரைவில் இணைந்து கொள்ளும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். ஜனாதிபதிக்குள்ள மாகாண சபைகளை மையப்படுத்திய இடைக்கால பொறிமுறை தொடர்பில் கருத்து வெள…

  5. Published By: DIGITAL DESK 3 13 JUN, 2023 | 11:49 AM ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நான் பாராட்டுகிறேன். முதன்முறையாக நாட்டின் தலைவர் இலங்கை தீவின்“தமிழ் பெளத்த வரலாற்றை” பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இலங்கையின் வரலாற்றில் தமிழ் பெளத்த வரலாற்றுக்கு உரிய இடத்தை ஏற்றால், அது இன்று நாம் எதிர்கொள்ளும் அநேக பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் சாவியாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியுள்ளதாவது, தமிழரசு கட்சியினருடனான கலந்துரையாடலின் போது தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சில பணிப்புரைகளை விடுத்துள்ளார்…

  6. பிரான்ஸிடமிருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்ட, ஸ்ரீலங்கன் விமான சேவையின் முதலாவது A 330-200 ரக எயார்பஸ் விமானத்தின் குத்தகைக் காலம் முடிவடையவுள்ளது. அதன்பின்னர் குறித்த விமானம் அதன் சொந்த நிறுவனத்திடம் மீள ஒப்படைக்கப்படவுள்ளது. விமானங்களை உற்பத்தி செய்யும் பிரான்ஸின் எயார்பஸ் நிறுவனத்திடம் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவை 23 வருடங்களுக்கு முன்னர் இந்த விமானத்தை குத்தகைக்கு எடுத்திருந்தது. ஹீத்ரோ, பிராங்போர்ட், மெல்பர்ன் மற்றும் மொஸ்கோ உள்ளிட்ட நீண்ட இடங்களுக்கு இந்த விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சுமார் 100,000 விமான மணிநேரத்தை நிறைவு செய்துள்ளதாக ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விமானத்தில் 18 வணிக வகுப்புப் பயணிகளும், 251 சிக…

  7. இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களால் 709 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஆகவே வீதியில் வாகனங்களை செலுத்தும் போது போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான நிலவரப்படி, மொத்தமாக 8,202 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக விபத்துக்களில் 667 பேர் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே உயிரிழந்தனர் அத்தோடு 2,160 பாரிய விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 3,201 சிறு விபத்துகள் இடம்பெற்றுள்ளதோடு விபத்துகளில் உயிரிழந்த 709 பேரில் 220 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் என்பதுடன், 102 பேர் மோட…

  8. சிறுபான்மைச் சமூகங்களின் சவால்களைத் தீர்ப்பதற்கு பொதுவான வரைபு அவசியம் : அமைச்சர் நஸீர் அஹமட்! முஸ்லிம் சமூகத்தின் சமகால சவால்களை தீர்த்துவைக்கும் பொதுவான வரைபைத் தயாரிக்கும் தருணம் வந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், இனியும் தனித்தனியாகச் செயற்பட்டு சமூக உரிமைகளை வெல்ல முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கு ஜனாதிபதி முனைப்புடன் செயற்படுவதை தாம் அறிவதாக நஸீர் அஹமட்டின் ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இழக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை மீளப்பெறவும் அதனுடன் தொடர்புடைய ஏனைய பிரச்சினைகள் குறித்தும் பொதுவ…

    • 3 replies
    • 291 views
  9. ஜனாதிபதி தலைமையிலான குழு விரைவில் இந்தியா பயணம்! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜூலை மாதம் 21ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளமை உறுதியாகியுள்ளது. ஜனாதிபதியுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானும் செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர், வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் ஜனாதிபதி தலைமையிலான இலங்கை குழுவினர் பேச்சு நடத்தவுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மற்றும் கலை, கலாசார உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது. இந்தியப் பிரதமருடனான சந்திப்பின்போது மலையக மக்களின் பிரச…

    • 4 replies
    • 291 views
  10. வெருகல் படுகொலையின் 37 ஆவது வருட நினைவேந்தல் 13 Jun, 2023 | 10:59 AM வெருகல் - ஈச்சிலம்பற்று பகுதி அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை சேருவில பகுதியில் இருந்து ஈச்சிலம்பற்று நோக்கி எடுத்து வரும்போது இடம்பெற்ற சேருவில படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 12 ஆம் திகதி ஈச்சிலம்பற்று பூநகர் பகுதியில் அமைக்கப்பட்ட நினைவேந்தல் மண்டபத்தில் மிகவும் உணவுபூர்வமான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை 1986.06.12 அன்று சேருவில பகுதியில் இருந்து ஈச்சிலம்பற்று நோக்கி …

    • 5 replies
    • 414 views
  11. இலங்கை அரசாங்கத்துள் குழப்பமா? ஜனாதிபதி VS SLPP! written by adminJune 13, 2023 ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நேற்று (12.06.23) அழைப்பு விடுத்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் மாவட்ட தலைவர்களுடனான சந்திப்பை மாவட்ட தலைவர்கள் புறக்கணித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன. ஜனாதிபதி இன்று ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் மாவட்ட தலைவர்களுடன் சந்திப்பொன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆறுமணிக்கு இந்த சந்திப்பு ஆரம்பமானதாகவும் எனினும் ஒருமணிநேரத்தின் பின்னர் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கிருந்து வெளியேறினர் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பில் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கலந்துகொள்ளவேண்டியதில்லை…

  12. யாழில் இருந்து நிலையான சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான பாத யாத்திரை முன்னெடுப்பு! நிலையான சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்க்கான தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காமம் வரையான பாதயாத்திரை இன்று ஆரம்பமாகியது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ் மாவட்ட பணிப்பாளர் தலைமையில் இடம்பெறும் இந்த யாத்திரை சந்நிதியான் ஆலயத்தின் பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிர்வாக பணிப்பாளர் மனுர சமன் பெரேரா, வடமாகாண பணிப்பாளர் காமினி, யாழ் மாவட்ட பணிப்பாளர் வினோதினி சிறிமேனன், வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் ஆழ்வாப்பிள்ளை சிறி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு சம்பிர்தாய பூர்வம…

  13. எனக்கு வரலாறு படிப்பிக்கிறீரா அல்லது உமக்கு நான் வரலாறு படிப்பிக்கவா? ரணில் கடுப்பில் கொடுத்த டோசில் விலகினார் மானஸ்தன். 270 ஏக்கர் நிலத்தை தமிழர் பகுதியில் சுவீகரிப்பதற்கான நியாயத்தை சொலல முயன்ற போதே, அது குறித்த ரணலின் கேள்விகளுக்கு மேம்போக்கான பதில் கொடுக்கப் போயே, ரணில் கடுப்பானார். எவ்வாறாயினும் தொல்லியல் திணைக்கள அண்மைய செயல்பாடுகள் இனவாதம் கொண்டவை என்பது ரகசியமல்ல.

  14. தொல்பொருள் இடமொன்றுக்கு காணி ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை கடுமையாக சாடியுள்ளார். ஜனாதிபதி தொல்பொருள் திணைக்கள அதிகாரியிடம் “நீங்கள் எனக்கு வரலாற்றை கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? அல்லது நான் உங்களுக்கு கற்பிக்க விரும்புகிறீர்களா?” ஜனாதிபதி மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது. குறித்த தொல்பொருள் இடத்திற்காக சுமார் 270 ஏக்கர் காணியை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்கள அதிகாரி தெரிவித்த போது, அது மகா விகாரையை விட பெரியதா என ஜனாதிபதி அவரிடம் கேட்டுள்ளார். “உங்களுக்கு ஏன் 275 ஏக்கர் தேவை? இது மகாவிகாரையை விடப் பெரிய…

  15. நீளம் பாய்தலில் தேசிய சாம்பியனும், முப்பாய்ச்சல் போட்டிகளில் தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ள கிரேசன் தனஞ்சயவே சுவிட்சர்லாந்தில் காணாமல்போயுள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டியொன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்த வேளையில் இவ்வாறு காணாமல்போயுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த போட்டித் தொடர் தனிப்பட்ட ரீதியான அழைப்பிதழின் அடிப்படையில் நடைபெற்றுள்ளதாகவும் இதற்கும் தேசிய மெய்வல்லுனர் அமைப்பிற்கும் தொடர்பு கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் சில விளையாட்டு வீரர்கள் வெளிநாடுகளில் போட்டிகளுக்காக செல்லும் போது, தப்பிச்சென்று ஏதிலி அந்தஸ்து பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்…

  16. Published By: RAJEEBAN 12 JUN, 2023 | 10:18 AM இராஜாங்க அமைச்சராக லொகான் ரத்வத்தை பதவி வகித்தவேளை வெலிக்கடை அனுராதபுரம் சிறைச்சாலைகளிற்குள் அத்துமீறிநுழைந்து சிறைக்கைதிகளை அச்சுறுத்தியமை தொடர்பில் அவருக்கு எதிராக கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் உட்பட குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டும் என இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட தனிநபர் குழு பரிந்துரை செய்துள்ளமை தெரியவந்துள்ளது. குற்றவியல் சட்டம் உட்பட பல சட்டவிதிகளிற்கு ஏற்ப கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் உட்பட குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டும் என தனிநபர் குழு பரிந்துரை செய்துள்ளது. ஆயுதம் ஏந்திய நிலையில் இரு சிறைச்சாலைகளிற்குள் அமைச்சர் நுழைவதற்கு அனுமதித்த சிறைக…

  17. கடன் மறுசீரமைப்பு பேச்சு : ஐரோப்பா செல்கின்றார் ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வார இறுதியில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு செல்லவுள்ளார். அதன்படி கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்த ஐரோப்பா விஜயம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1334339

    • 1 reply
    • 222 views
  18. சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தங்கள் அடுத்த மூன்று மாதங்களில் நிறைவேற்றப்படும் ! சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளை அடுத்த மூன்று மாதங்களுக்குள் பூர்த்தி செய்ய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட 62 ஒப்பந்தங்களில் 25 மட்டுமே தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார். அதன் முன்னேற்றம் குறித்து ஆராய, இது தொடர்பாக, மத்திய வங்கியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார். வரையறுக்கப்பட்ட காலக்கெடுவுடன் செயல்திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளத…

  19. வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கான பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க தீர்மானம் !! உள்ளூராட்சித் தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் விரிவாக ஆராயப்பட்டது. தற்போது உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறியே இல்லாததால், வேட்புமனுக்களை இரத்து செய்துவிட்டு, வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் மீண்டும் தேர்தலை நடத்துவது நல்லது என இதன்போது ஆலோசனை விடுக்…

  20. பொரளையில் விசேட நடவடிக்கை : 35 பேர் கைது பொரளை பொலிஸ் பிரிவிற்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட கூட்டு நடவடிக்கையின் மூலம் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவர் உட்பட மொத்தம் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் இலங்கை இராணுவத்தினர் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். https://athavannews.com/2023/1334331

  21. Published By: RAJEEBAN 11 JUN, 2023 | 04:44 PM டியாகோகார்சீயா தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகளில் 12 பேர் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது. டியாகோ கார்சியாவில் கடந்த 20 மாதங்களாக சிக்குண்டுள்ள இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகளி;ல் 12 தற்கொலை செய்ய முயன்றுள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது. இந்துசமுத்திரத்தில் உள்ள பிரிட்டனிற்கு சொந்தமான சிறிய தீவில் இலங்கையை சேர்ந்த 89 குடியேற்றவாசிகள் சிக்குண்டுள்ளனர் என தெரிவித்துள்ள பிபிசி சட்டவிரோத பயணங்களின் போது படகுகள் ஆபத்தில் சிக்கியவேளை காப்பாற்றப்பட்டவர்களே இவர்கள் எனவும் தெரிவித்துள்ளது. இராணுவத்தினருக்கா…

  22. 11 JUN, 2023 | 08:04 PM நுவரெலியா, கிரேட்வெஸ்டன் பகுதியில் புகையிரத்தில் மோதுண்டு ரதல்ல தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் உயிரிழந்துள்ளார். நாளைய தினம் பாடசாலை ஆரம்பிக்க இருப்பதால் இன்று பாடசாலையில் சுத்திகரிப்பு வேலைக்காக சென்றிருந்த அதிபர் சுப்பிரமணியம் மீண்டும் வீடு திரும்பும் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. குறித்த அதிபர் தலவாக்கலை கல்கந்த வத்த பிரதேசத்தில் வசிப்பவர் என்பதுடன் 2 பிள்ளைகளின் தந்தை ஆவார். இறந்த அதிபர் ஒரு சமூக சேவையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/157488

  23. இலங்கை செல்வதற்கு அனுமதி தாருங்கள் – மோடிக்கு சாந்தன் கடிதம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட சாந்தன், தமக்கு இலங்கைக்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். சிறையில் இருந்து விடுதலையாகி தற்போது ஒரு அறையில் கைதி போல அடைக்கப்பட்டிருப்பதாகவும், தன்னுடைய சொந்த நாடான இலங்கைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் கோரி சாந்தன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த முகாமில் ரத்த உறவுகளை மட்டுமே சந்திக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் தம்மை போன்ற வெளிநாட்டு பிரஜைகளுக்கு இந்தியாவில் எவ்வாறு ரத்த உறவுகள் …

  24. பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் 11 பேரை இடைநிறுத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. “புதிய மாணவர் குழுவிற்கு அழுகிய உணவளித்து மனிதாபிமானமற்ற சித்திரவதை” சம்பவம் காரணமாக இவ்வாறு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முகாமைத்துவ பீடத்திற்குள் நுழைந்த புதிய மாணவர்கள் குழுவினை இடைநிறுத்தப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் அக்பர் விடுதிக்கு அழைத்துச் சென்று, கெட்டுப்போன மற்றும் அழுகிய உணவினை சாப்பிட கொடுத்து, கடுமையாக திட்டி, தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வகுப்புத் தடை தற்காலிகமானது என்றும், முறையான விசாரணை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேராதனைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரிய…

  25. ஜனாதிபதி மாளிகை, செயலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகையை கொழும்பு நகருக்கு வெளியே மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே சுற்றுலா தலமாக மட்டுமே திறந்து வைக்கப்படும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஸ்ரீ ஜயவர்தனபுர – கோட்டே பிரதேசத்தில் ஒரே இடத்தில் நிர்வாக வளாகத்தை அமைப்பதற்கு மாற்று காணியை தேடி வருவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் (UDA) பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவித்த்துள்ளார். உத்தேச ‘புதிய கொழும்பு பாரம்பரிய நகரத் திட்டத்தின்’ கீழ், ஜனாதிபதி மாளிகை, செயலகம் மற்றும் அலரிமாளிகை கட்டிடம் மற்றும் பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகம் ஆகியவை சுற்றுலா தலங்களாக பாதுகாக்கப்படும். இத்திட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.