ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142918 topics in this forum
-
வன்னிப் பிராந்தியத்தில் மோசமடைந்து செல்லும் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூன் சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் அவசரமாக தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். லிபியாவில் தற்போது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வரும் மகிந்த ராஜபக்சவுடன் நேற்று வியாழக்கிழமை இரவு தொடர்புகொண்ட பான் கி மூன், வன்னியில் மோசமடைந்து வரும் நிலைமைகள் தொடர்பாக முக்கிய பேச்சுக்களை நடத்தியதாக ஐ.நா. அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பொதுமக்களின் இழப்புக்கள் அதிகரித்து வருவதால் போர் நிறுத்தம் செய்யப்படுவது அவசியம் என ஐ.நா. செயலாளர் நாயகம் முதலில் வலியுறுத்தியிருக்கின்றார். இருந்த போதிலும் கடந்த வாரம் வெளியிட்டிருந்த மற்ற…
-
- 1 reply
- 582 views
-
-
-
பாதுகாப்பு வலயத்தின் மீதான எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா அரசாங்கம் நிறுத்த வேண்டும்; மனிதாபிமானத்தின் அடிப்படையில் இது முக்கியமானது என ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான், நோர்வே ஆகிய நாடுகளைக்கொண்ட இணைத் தலைமை நாடுகள் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 338 views
-
-
தமிழினப் படுகொலைகளை நிறுத்துமாறும் உடனடியாக போரை நிறுத்தமாறும் வலியுறுத்தி இன்று 5 ஆவது நாளாக நெதர்லாந்து நாடாளுமன்ற முன்றலில் தமிழர்கள் தொடர் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 447 views
-
-
http://www.tamilnaatham.com/advert/2009/ap...090409/PARA215/ *** http://www.tamilnaatham.com/advert/2009/apr/20090409/PJ129/
-
- 10 replies
- 4.9k views
-
-
வன்னியில் தீவிரமடைந்திருக்கும் போரையடுத்து உருவாகியுள்ள தற்போதைய நிலைமைகள் தொடர்பாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனனுடன் பேசுவதற்கு புதுடிலில்லி வருமாறு இந்திய அரசாங்கத்தின் சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு தீர்மானித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரான இரா.சம்பந்தன் இந்தியா சென்றிருப்பதால் கட்சியின் மூத்த தலைவ…
-
- 0 replies
- 833 views
-
-
இன்று 10.04.2009 காலை (வெள்ளிக்கிழமை) 10:00 மணியில் இருந்து ஒஸ்லோவில் அமைந்துள்ள நோர்வேஜிய பாராளுமன்றத்தின் முன்றலில் தமிழ்மக்களால் கவனயீர்ப்பப் போராட்டம் நடைபெறவுள்ளது. கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற போராட்டங்களின் போது நோர்வே அரசால் எந்த விதமான தீர்க்கமான பதிலும் அளிக்கப்படாததால் சொந்தங்களை இழந்து மனக்குமுறலில் இருக்கும் தமிழ்மக்கள் தமது போராட்டத்தைத் திரும்பவும் தொடங்கப்போவதாக அறிவித்தள்ளனர். இன்று தொடங்கும் போராட்டமானது நோர்வே அரசால் ஒரு தீர்க்கமான பதில் அளிக்கும் வரை தொரரும் என ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். அமைதிப் பேச்சுவார்த்தையின் போது முனைப்புடன் செயற்பட்ட நோர்வே அரசு ஏன் மௌனம் கொள்கின்றது என்ற புரியாத புதிருக்கு விடைகிடைக்கவேண்டும். ஈழத்தில் நடைபெறும்…
-
- 0 replies
- 722 views
-
-
Get Flash to see this player. நன்றி http://www.eelavetham.com/video/103/Intha-...u-Eriyum-France
-
- 1 reply
- 1.3k views
-
-
Get Flash to see this player. நன்றி http://www.eelavetham.com/video/105/Give-u...stice-for-Tears
-
- 1 reply
- 1k views
-
-
ஈழத்தமிழர் பிரச்சனைக்காக தேர்தலை புறக்கணிப்போம் என்று சொன்னேன். இப்போதும் கூட சொல்கிறேன். திமுக, அதிமுக ஒத்து வந்தால் நான் இப்போது கூட தேர்தலை புறக்கணிக்க தயாராக உள்ளேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். சிவகங்கை தொகுதி வேட்பாளர் ரெஜினா பாப்பாவை ஆதரித்து இளையான்குடி, மறவமங்கலம், திருப்பதூர், காளையார்கோவில், தேவகோட்டை, சிங்கம்புணரி ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்த விஜய்காந்த் பேசுகையில், இந்திய வரைபடத்தில் தமிழகத்தை பார்த்தால் குறுகியதாக இருக்கும். அதுபோலதான், நம்முடைய மாநிலத்தின் வளர்ச்சியும் உள்ளது. வழக்கம் போல் இந்த முறையும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நெல், கரும்புக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்து தருவோம் என்கிறார்கள். இதே வார்த்தையை அடுத்த ம…
-
- 2 replies
- 721 views
-
-
இலங்கையில் போரை நடத்தி ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அதிபர் ராஜபக்சவை கண்டித்தும், உடனே போரை நிறுத்த வலியுறுத்தியும் புது டில்லியில் நேற்று புதன்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது. தமிழீழ ஆதரவாளர்கள் ஜந்தர் மந்தர் அருகே இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு குறித்து அவர்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்தனர். இலங்கையில் ஊடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளிலும் நேற்று புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது. http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51
-
- 0 replies
- 759 views
-
-
இலங்கையில் நடைபெற்றுவரும் போரை இந்திய அரசு தலையிட்டு நிறுத்தாவிட்டால் தமிழகத்தில் இயங்கிவரும் அனைத்து அரச அலுவலகங்களையும் முடக்கும் வகையில் பெரிய அளவிலான போராட்டத்தை ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் முன்னெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழர்களை அழிவிலிருந்து காப்பாற்றக் கோரியும், இந்திய அரசின் துரோகத்தைக் கண்டித்தும் ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நேற்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. நிறுவுனர் இராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் …
-
- 0 replies
- 676 views
-
-
ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் உலகத்தமிழரின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் கலைஞர் கருணாநிதி மட்டும் எதுவுமே நடைபெறாததைப் போன்று மௌனம் சாதித்துக் கொண்டிருக்கின்றார். உடனடியாக இலங்கையில் போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்த வேண்டும் என அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "ஆட்சி அதிகாரம் தன் பக்கம் இருக்க வேண்டும், தன் குடும்பம் வளமாக வாழ வேண்டும் என்ற தன்னலத்தின் காரணமாக, இலங்கைக்கு இந்திய அரசாங்கம் ஆயுதங்கள் மற்றும் நவீன சாதனங்கள் அனுப்பியதையும், சிறீலங்கா இராணுவத்தினருக்கு பயிற்சிகள் அளித்ததையும் வேடிக்கை பார்த்தவர் முதல்வர் கருணாநிதி. ஈழத்தமிழர்களுக்கு எதிரான நடவடி…
-
- 0 replies
- 660 views
-
-
இலங்கை தமிழர்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து சென்னை உச்ச நீதிமன்றம் முன்பு சட்டத்தரணிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக சென்னை உச்ச நிதிமன்ற சட்டத்தரணிகளில் ஒருதரப்பினர் நேற்று உச்ச நிதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், சிங்கள ராணுவத்திற்கு எதிராகவும் அவர்கள் கோசமிட்டனர். பின்னர், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, வெளிவிவகாரத்துறை மந்திரி பிரணாப்முகர்ஜி, முதல்-அமைச்சர் கருணாநிதி, சிறீலங்கா அதிபர் ராஜபக்ச ஆகியோரது உருவப்படங்களை எரித்தனர். முன்னதாக உச்ச நீதிமன்ற வளாகத்திற்குள் சட்டத்தரணிகள் சிறிதுதூரம் ஊர்வலமாக சென்று கோசமிட்டனர். http://www.sankathi.com/index.php?mact=N…
-
- 0 replies
- 637 views
-
-
ஈழத்தமிழர்களை காக்க தேர்தலை இரண்டாம் பட்சமாக நினைத்து தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்'' என்று மருத்தவர்; ராமதாஸ் கூறினார். பேரழிவில் சிக்கி இருக்கும் ஈழத்தமிழர்களை பாதுகாக்க கோரியும் இந்திய அரசின் துரோகத்தை கண்டித்தும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியாளர்; அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்திற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, மாநில செயலாளர் தா.பாண்டியன், பா.ஜ.க. தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் எம்.பி உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்து கொ…
-
- 0 replies
- 471 views
-
-
கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் இடம்பெறும் எம்மவர் போராட்டம் பற்றி ஒரு கருத்துக்கணிப்பு: http://www.cfra.com/ இரண்டாவது தெரிவுக்கு வாக்களியுங்கள். தயவுசெய்து இதை புறக்கணிக்காதீர்கள். ஏனெனில் இந்த வானொலி தலைநகரில் நடைபெறும் இந்தப் போராட்டத்தை தடுப்பதற்கு பெரிதும் முயற்சிக்கிறது. மேலும் உங்களுக்கு தெரிந்த எல்லோருக்கும் இவ்விணைப்பை அனுப்புங்கள். பலமுறை கூட வாக்களிக்கலாம்.. நண்பர் கூறும் இவ்வழியை பின்பற்றி: http://www.yarl.com/forum3/index.php?showtopic=55659
-
- 2 replies
- 1.3k views
-
-
சோனியா குடும்பத்துக்கு மிரட்டல் விடுக்கவில்லை: விடுதலைப்புலிகள் விடுதலைப்புலிகளால் சோனியா உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று மத்திய உளவுத் துறை எச்சரித்தது. உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து சோனியா காந்திக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு விடுதலைப்புலிகள் மறுப்பு தெரிவித்து உள்ளனர். இது பற்றி விடுதலைப்புலிகளின் ஆதரவு இணையதளம் ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது, சோனியாகாந்திக்கோ, அல்லது அவருடைய குழந்தைகளுக்கோ எங்களால் எந்த ஆபத்தும் வராது. எங்களுக்கு கெட்டப்பெயரை உருவாக்க வேண்டும் என்று இப்படி செய்தியை பரப்பி வருகிறார்கள். இலங்கை தமிழர்களுக்கும், இந்தியாவுக்கும் இடையே பிளவை ஏற்படுத்துவதுடன் இலங்கை தமிழர் பிரச்சினையை திசை திருப்பும் வகையில் இவ்வாறு தகவல்கள் வெள…
-
- 1 reply
- 1.4k views
-
-
பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் போர் நிறுத்தத்திற்கான அழைப்பை விடுக்கும் என டெஸ் பிறவுண் தம்மிடம் கூறியுள்ளதாக பிரித்தானியத் தமிழ் மாணவர் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 587 views
-
-
இது தான் அந்த செய்தி. கடந்த மாதம் லிபியா,சீனா,ரஸ்யா, இந்த மாதம் மெக்சிக்கோ இவன் பாலித ஐ. நா வில் பழம் தின்று கொட்டை போட்ட தீவிரவாதி. Mexico assures support for Sri Lanka Mexico has reassured Sri Lanka of its firm support at international fora, including the UN Security Council. Mexico is holding the presidency of the Security Council in April. Mexico confirmed that they do not have any intention of permitting the Sri Lankan situation to be placed on the Security Council agenda, as it does not pose a threat to international peace and security. This is a sequel to talks in Mexcio City between Foreign Secretary, Dr. Palitha Kohona and senior Mexi…
-
- 0 replies
- 961 views
-
-
அனைத்துலக வலியுறுத்தல்கள் ‐ உடனடி யுத்த நிறுத்தமொன்றுக்குச் செல்வது கட்டாயமானதாகும் விக்கிரமபாகு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அனைத்துலகத்தின் வலியுறுத்தல்களுக்கமைய இலங்கை அரசாங்கம் உடனடியாக யுத்த நிறுத்தமொன்றுக்குச் செல்வது கட்டாயமானதாகும் எனவும், இதன் மூலமே இங்கு இடம்பெற்று வருகின்ற மனிதப் பேரவலங்களைத் தடுத்து நிறுத்த முடியும் எனவும் இடதுசாரி முன்னணி தெரிவிக்கின்றது. மனித அவலங்களை ஏற்படுத்தாமலும் மக்களைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் யுத்த நிறுத்தத்திற்குச் செல்வதே பொருத்தமானது என்ற சர்வதேச வற்புறுத்தல்கள் குறித்து கேட்டபோதே இடதுசாரி முன்னணியின் தலைவரும், மேல் மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன இவ்வாறு கூறினார். மேற்கத…
-
- 0 replies
- 527 views
-
-
இலங்கையில் மோதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்துவாழ் தமிழர்கள் போராட்டங்களை நடத்திவரும் நிலையில், அமெரிக்காவிலுள்ள புலம்பெயர்ந்துவாழ் தமிழர் பிரதிநிதிகளை அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் சந்தித்துள்ளனர். அமெரிக்காவிலுள்ள புலம்பெயர்ந்துவாழ் தமிழர் பிரதிநிதிகளைச் சந்தித்த தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சட் பௌச்சர் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட்.ஓ.பிளேக் ஆகியோர் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடியிருப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் வாழும் புலம்பெயர்ந்துவாழ் தமிழர் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் அறிந்துகொள்வதற்குக் கிடைத்த சந்த…
-
- 1 reply
- 677 views
-
-
-
- 1 reply
- 1.8k views
-
-
காங்கிரஸ் கட்சி - பிரிட்டிஷ்காரரால் தொடங்கி யது முதல் இது நாள் வரை அது தமிழினத்தின் பகை சக்தியாகவே இருந்திருக்கிறது. இடையில் இந்திய தேசியத்திலிருந்து மாறுபட்டு, தமிழின அடையாளத் தோடு செயல்பட்ட காமராசர் காலம் மட்டுமே மாறு பட்டிருந்தது. மீண்டும் இந்திய தேசிய காங்கிரஸ் - தமிழினப் படுகொலைக்கு கரம் நீட்டிக் கொண்டிருக் கிறது. இளம் தலைமுறையினரே; இதோ, அந்த வரலாற்றிலிருந்து சில துளிகள்... • 1885 இல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கியவர் ஆலன் ஆக்டேவியன் ஹுயூம் என்ற பிரிட்டிஷ் அய்.சி.எஸ். (அந்தக்கால அய்.ஏ.ஸ்.) அதிகாரி. அதற்கான ஆலோசனையை வழங்கியவர் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலாக இருந்த டஃப்ரின் பிரபு. • பம்பாய், கல்கத்தா, சென்னையில் காங்கிரஸ் மாநாடுகள் கூடியபோது மாநாட்டுப் பிரதி…
-
- 0 replies
- 795 views
-
-
ஈழ யுத்தத்தில் 50% இந்திய இராணுவம்! பிரான்ஸ் செய்தி-அதிர்ச்சி தகவல் on 08-04-2009 21:58 Published in : செய்திகள், இந்தியா 3-லட்சம் ஈழத்தமிழர்களை மிகச் சிறிய நிலப்பரப்பிற்குள் ஒடுக்கி முப்படைகள் மூலம் தாக்குதல் நடத்தும் இனஒழிப்பு போராட்டத்தின் உச்சக்கட்டமாக மனிதத்தின் பேரவல உரிமை மீறிலில் இந்திய, இலங்கை அரசுக்கள் ஒன்றிணைந்து முர்க்கத்துடன் ஈழத்தமிழர்கள் மீது கடுமையான ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட்டும், எறிகணை தாக்குதல்கள் நடத்தியும் ஆயிரக்கணக்கில் பொது மக்களை கொன்று குவித்துள்ளது. இரண்டாம் உலக யுத்தத்தில் இட்லர் உபயோகித்த எறிகணை தாக்குதல் போன்று ஆயுதப் பிரயோகத்தை இன்று தமிழர்கள் மீது வீசப்படுகிறது. சாலைகள் முழுவதும் ஆங்காங்கே பிணங்கள் புதைக்கக்கூட …
-
- 4 replies
- 1.6k views
-
-
-
- 0 replies
- 769 views
-