ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி சார்பில் ஜனாதிபதிக்கு முன்மொழிவு 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி சார்பில், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் ஜனாதிபதிக்கு தமது முன்மொழிவினை அனுப்பியுள்ளனர். 1988 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் 5/6 பெரும்பான்மையுடன் 13 ஆவது அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர். 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஏற்கனவே அரசியலமைப்பின் ஒரு பகுதிய…
-
- 0 replies
- 418 views
-
-
யாழ். ஆலயங்களில் குழந்தைகளுடன் யாசகம் பெற தடை! adminAugust 9, 2023 யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற ஆலய மஹோற்சவ திருவிழாக்களில், குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயப்பட்ட போது, திருவிழா நேரங்களில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தருவோர், ஆலய வீதிகளில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபடுபடுவதுடன் , ஆலயங்களுக்கு வருவோருக்கு இடையூறு ஏற்படுத்தும் ம…
-
- 1 reply
- 372 views
-
-
வடக்கு- கிழக்கிலுள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை : விமல் வீரவன்ஸ! வடக்கு- கிழக்கிலுள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு- கிழக்கு மாகாணங்களின் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடன் பேசுவதாக ஜனாதிபதி கூறினார். முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பேசுவதாகக் கூறினார். ஆனால், அந்த மாகாணங்களில் வாழும் சிங்கள மக்களின் பிரச்சினைகள் க…
-
- 0 replies
- 547 views
-
-
நாட்டில் இதயநோயாளிகளுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட ஸ்டென்ட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதால், காலாவதியான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஒரு தொகுதி ஸ்டென்ட்களை பயன்பாட்டிலிருந்து நீக்க வேண்டியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் போது, பழைய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் நோயாளிகளின் பயன்பாட்டிலிருந்து நீக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அதன்படி, அரச மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைக்கு, காலாவதியான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஸ்டென்ட்கள் இதய நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படாது என்றும் அமைச்சர் …
-
- 0 replies
- 192 views
- 1 follower
-
-
எரிகின்ற நெருப்புக்கு எண்ணெய் ஊற்றும் தொல்லியல் திணைக்களம் ”தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வுகளும் அடையாளப்படுதல்களும் இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களினதும் கலாசார தொன்மைகளையும் வரலாறுகளையும் பேணிப் பாதுகாப்பதாக அமைய வேண்டுமே தவிர, எரிகின்ற நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றுவதாக அமையக் கூடாது” என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (07) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே கடற்றொழில் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ”சுழிபுரம், பறாளை முருகன் ஆலயம் உட்பட யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் 3 தொல்லியல் திணைக்களத்திற்கு உரிய பகுதியாக அண்மையில் வர…
-
- 33 replies
- 2.4k views
- 1 follower
-
-
சிவாஜிலிங்கம் பதவி நீக்கம்: மனம் திறந்தார் சு.நிசாந்தன் தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம். கே சிவாஜிலிங்கம் பதவியில் இருந்து நீக்கப்பட்டது உண்மை எனவும், இதனை கட்சியின் தலைவர் சிறிகாந்தாவும் சிவாஜிலிங்கமும் வெளிப்படையாக உளச்சான்றுடன் தெரிவிக்க வேண்டும் எனவும் அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சு.நிசாந்தன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து நிசாந்தன் மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதி ரணில் இந்தியா பயணிப்பதற்கு முன்னதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த கோரி, இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். …
-
- 7 replies
- 1.1k views
- 1 follower
-
-
09 AUG, 2023 | 10:58 AM நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையில் வலியுறுத்தினார். இதனை அடைவதற்கு திறந்த மனதுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தி, பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். 13 வதுதிருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த எனது யோசனையை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்து நாடாளுமன்றமே தீர்மானிக்கவேண்டும். நாடாளுமன்றத்தில் எனது கட்சிக்கு மூன்று உறுப்பினர்களே உள்ளனர். ஆகவே 13 ஆவது திருத்த்தை ம…
-
- 8 replies
- 368 views
- 1 follower
-
-
09 AUG, 2023 | 06:08 AM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) கடன் பெறும் எல்லையை 4,979 பில்லியன் ரூபாவிலிருந்து 13,979 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கும் நோக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் இன்று புதன்கிழமை (9) இடம்பெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் செவ்வாய்க்கிழமை (8) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டத்தின் போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. அத்துடன் கடந்த மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இன்றைய தினம் பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) …
-
- 0 replies
- 83 views
- 1 follower
-
-
08 AUG, 2023 | 04:13 PM (இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் முக்கிய திருத்தமாக உள்ள 13 ஆவது திருத்த அமுலாக்கம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு கிடையாது. பொலிஸ் அதிகாரத்தை தவிர்த்து ஏனைய அம்சங்களை அமுல்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி முன்னெடுக்கும் நடவடிக்கைகள் முரண்பட்டதாக உள்ளன என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஜனாதிபத…
-
- 2 replies
- 499 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 08 AUG, 2023 | 10:17 PM (எம்.மனோசித்ரா) நாட்டின் 2006 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல் வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய தாபிக்கப்பட்டுள்ள, இலங்கை மத்திய வங்கியின் திணைக்களமாக இயங்குகின்ற நிதிசார் உளவறிதல் பிரிவால் பணம் தூய்தாக்கல், பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல் மற்றும் சட்டத்தில் பொருள்கோடல் செய்யப்பட்டுள்ள ஏனைய சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும். பணம் தூய்தாக்கல் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளிப்புக்களை தடுப்பதற்காக சர்வதேச தரக்கட்டளைகளை தயாரிக்கின்ற சர்வதேச அரசாங்கங்களுக்கிடையிலான நிதிச்செயலாற்றுகை செயலணி, …
-
- 0 replies
- 196 views
- 1 follower
-
-
Published By: PRIYATHARSHAN 08 AUG, 2023 | 03:47 PM வீ.பிரியதர்சன் பிள்ளைகளுடன் நேரத்தை பெறுமதியாக செலவிடுவதுடன் கல்வி மற்றும் ஊட்டச்சத்தில் பிள்ளைகளுக்கு முதலீடு செய்வதன் மூலம் அவர்களின் எதிர்காலத்தில் மட்டுமல்லாது ஒவ்வொரு நாட்டினது எதிர்காலத்திலும் நாம் முதலீடு செய்கின்றோம் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும் யுனிசெப்பின் தெற்காசியப் பிரதந்தியத்திற்கான நல்லெண்ணத் தூதுவருமான சச்சின் டென்டுல்கர் தெரிவித்தார். அத்துடன் பாடசாலை மாணவர்கள் மிகுந்த மன உறுதியுடன் இருப்பதுடன் சிறந்த எதிர்காலத்திற்கான அவர்களின் நம்பிக்கையும் வலுவாகக் காணப்படுகின்றது. அவர்கள் தங்களது இலக்குகளை அடைவதற்கு தொடர்ந்தும் நாம் உதவ வேண்டுமெனவும் …
-
- 2 replies
- 257 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 08 AUG, 2023 | 10:36 AM முல்லைத்தீவு நாயற்று பகுதிக்கு தெற்கே உள்ள புலிபாய்ந்தகல் என்ற இடத்தில் சிங்கள மக்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்விடயம் தொடர்பில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவிக்கையில், நாயாற்றுக்கு தெற்கே புலிபாய்ந்த கல் என்ற இடத்தில் குடியேறி இருக்கும் சிங்கள மீனவர்களுக்கு கடல் தொழிலுக்கான அனுமதி கடல் தொழில் திணைக்களத்தால் வழங்கப்பட போவதாகவும் சிங்கள மீனவர்கள் தொழில் செய்வதற்கான வாடிகள் அமைக்கும் பொருட்கள் குறித்த கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்துள்ளதாகவும் அப்பகுதியில் இருக்கும் தமிழ் மீனவர்களால் முறைப்பாடு கிடைக்கப்பெற்று…
-
- 3 replies
- 686 views
- 1 follower
-
-
08 AUG, 2023 | 10:07 AM இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்ட காலப்பகுதியில் எதிர்கொண்ட பாரிய நஷ்டத்திற்கு காரணமானவர் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்த அதிகாரியொருவர் தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு வெளிநாட்டிற்கு சென்றுள்ளமை பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. வர்த்தகம் மற்றும் விநியோகத்திற்கான முன்னாள் பிரதிபொது முகாமையாளரே விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றுள்ளார். சிரேஸ்ட அதிகாரியொருவர் விசாரணைகள் இடம்பெறும்வேளை எவ்வாறு நாட்டிலிருந்து செல்வதற்கான அனுமதியை பெற்றார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அவ்வாறான முக்கியமான பதவியில் உள்ள நபர்…
-
- 2 replies
- 513 views
- 1 follower
-
-
குருந்தூர் மலையினை தமது புராதன மதஸ்த்தலம் என்று நிறுவும் பல்கலைக்கழகங்கள் இலங்கையின் ஐந்து பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் இணைந்து குருந்தூர் மலை தொடர்பான பெளத்த சிங்கள வராலாற்று ஆராய்ச்சிகள் என்கிற பெயரில் உத்தியோகபூர்வ ஆவணம் ஒன்றை வெளியிட்டிருக்கின்றன. கொழும்பில் இடம்பெற்ற இந்த ஆவண வெளியீட்டு நிகழ்வில் அதி தீவிர சிங்கள பெளத்த இனவாதிகளும், முன்னணி இனவாதப் பிக்குவான எல்லே குணவன்ச போன்றோருடன் குருந்தூரை ஆக்கிரமித்து நிற்கும் பிக்குகள் குழுவும் முன்னாள் நல்லிணக்க அரசின் ஜனாதிபதி மைத்திரியும் கலந்துகொண்டிருந்தனர்.
-
- 3 replies
- 395 views
-
-
மண் துறந்த புத்தனுக்கு எம் மண் மீது ஆசையா?
-
- 3 replies
- 601 views
-
-
உள்ளூராட்சி, மாகாண மற்றும் பாராளுமன்ற மட்டத்திலான தொகுதிகளை மீள் நிர்ணயம் செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ஒத்திவைக்கப்பட்ட தேர்தல்களில் ஒன்று செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். உலக ஜனநாயக தினம் செப்டெம்பர் 15ஆம் திகதி அனுசரிக்கப்படுகிறது. “உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவது நாட்டின் ஜனநாயகம் தொடர்பான பிரச்சினையாகும்” என தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபை அல்லது உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு அதிகாரிகள் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், மாகாண சபைகளை ஆளுநர்களின் கீழ் நிர்வகிப்பதும், உள்ளூராட்சி சபைகளை ஆணையா…
-
- 0 replies
- 127 views
- 1 follower
-
-
07 AUG, 2023 | 03:25 PM (எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் அதிக வறட்சியான காலநிலை காரணமாக நான்கு மாகாணங்களை சேர்ந்த சுமார் 90ஆயிரம் பேர் வரை பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் சப்பரகமுவ, கிழக்கு, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களுக்குரிய 18 பிரதேச செயலக தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 27ஆயிரத்து 885 குடும்பங்களைச் சேர்ந்த 89ஆயிரத்து 485 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதிக பாதிப்புக்குள்ளாகி இருப்பது யாழ்ப்பாணம் மாவட்டமாகும் என மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. யாழ். மாவட்டத்தில் 5பிரதேச செயல…
-
- 0 replies
- 246 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 07 AUG, 2023 | 03:00 PM குச்சவெளி பகுதியில் உள்ள கல்மலையை உடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை (07) காலை குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, மலையை உடைப்பதற்கு எதிரான வாசகங்களை ஏந்தியவாறு மக்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநருக்கும் மகஜர் ஒன்றும் வழங்கபட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். https://www.virakesari.lk/article/161799
-
- 0 replies
- 277 views
- 1 follower
-
-
07 AUG, 2023 | 02:46 PM யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படையின் சோதனை நடவடிக்கையின் போது, 54 கிலோ 300 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இருவர் தப்பியோடியுள்ளனர். கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, கஞ்சாவை மீட்டுள்ளதுடன், கிளிநொச்சி தர்மபுரம் பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட இளைஞனையும், மீட்கப்பட்ட கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை பொலிசாரிடம் கடற்படையினர் கையளித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளத்துடன், தப்பிச…
-
- 0 replies
- 279 views
- 1 follower
-
-
07 AUG, 2023 | 12:36 PM (துரைநாயகம் சஞ்சீவன்) அரச காணியை பெறுவோர் நடைமுறையில் உள்ள அரச காணிச் சட்டங்களை பின்பற்றுவதன் மூலமும் அதற்குரிய அதிகாரமளிக்கப்பட்ட ஆவணங்களை பெற்றுக் கொள்வதன் மூலமும் காணிப்பிணக்குகளை தவிர்த்துக் கொள்ளலாம் என ஓய்வுபெற்ற கிழக்கு மாகாண உதவி காணி ஆணையாளர் கணேசலிங்கம் ரவிராஜன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரச காணிகளை பெறுகின்ற பயனாளிகள் அரச நடைமுறைகளை பின்பற்றி அதிகாரமளிக்கப்பட்ட அரச ஆவணங்களை பெற்றுக் கொள்ளாததன் காரணமாகவே அதிகமான காணிப் பிணக்குகள் உருவாகின்றன. பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் அவ்வாறான பிணக்கு ஒன்று உருவாகாமல் இருக்க அரச காணிச் சட்டத்தில் பல்வேறு ஏற்பா…
-
- 0 replies
- 498 views
- 1 follower
-
-
07 AUG, 2023 | 09:53 AM கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் அதிகளவான கடற் தொழிலாளர்களைக் கொண்ட பள்ளிக்குடா பகுதியில் உரிய இறங்குதுறை வசதிகளின்மையால் சுமார் 460க்கும் மேற்பட்ட கடற் தொழிலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் அதிகளமான கடற் தொழிலாளர்களைக் கொண்ட பகுதியாக பூநகரி பள்ளிக்குடா பிரதேசம் காணப்படுகிறது. குறித்த பகுதியில் சுமார் 460 வரையான தொழிலாளர்கள் 300-க்கும் மேற்பட்ட படகுகளை பயன் படுத்தி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் உரிய இறங்கு துறை வசதிகள் இன்மையால் மேற்படி தொழிலாளர்கள் தமது படகுகள் மற்றும் இயந்திரங்களை தொழில்களுக்கு கொண்டு செல்வத…
-
- 0 replies
- 165 views
- 1 follower
-
-
மன்னாாில் காற்று மின் சக்தி நிலையம் திறந்து வைப்பு – மக்கள் எதிர்ப்பு போராட்டம். adminAugust 6, 2023 இயற்கையோடு இணைந்த நிலையான வளர்ச்சி திட்டத்தின் கீழ்’ மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராம பகுதியில் ‘ஹிருரஸ் பவர்’ நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட 15 மெகா வாட் காற்று மின் சக்தி நிலையம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(6) காலை 11 மணியளவில் மின்சக்தி, மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. எனினும் குறித்த காற்றாலை மின்சக்தி நிலைய திறப்பை கண்டித்து நறுவிலிக்குளம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். சுமார் 06 மின் காற்றாலை கோபுரங்களை கொண்ட குறித்த காற்றாலை மின்சக்தி …
-
- 3 replies
- 682 views
-
-
06 AUG, 2023 | 04:39 PM பாலநாதன் சதீஸ் தண்ணிமுறிப்பு குளத்தில் அத்துமீறி மீன்பிடித்த 38 சிங்கள மொழி பேசும் மீனவர்களையும், அவர்கள் மீன்பிடிப்பதற்கு பயன்படுத்திய உபகரணங்களையும் அப்பகுதி மக்கள் ஒட்டுசுட்டான் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அதனை தொடர்ந்து, 38 பேரில் நால்வர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதோடு, மேலும் இருவர் கைதாகியுள்ளதாக கூறப்படுகிறது. தண்ணிமுறிப்பு குளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட பெரும்பான்மையினருக்கும் குறித்த பகுதி மக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை (05) பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் சார்ந்து தெரியவருவதாவது, தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் …
-
- 4 replies
- 311 views
- 1 follower
-
-
இந்த வருட இறுதிக்குள் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இணையத்தளமூடாக பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டம் ஏற்கனவே 69 உள்ளூராட்சி நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அந்த உள்ளுராட்சி நிறுவனங்களில் தற்போது ஒன்லைன் முறையின் ஊடாக வரிகளை செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நிர்மாணத்துறைக்கு தேவையான அனுமதிகளை ஒன்லைன் முறையின் கீழ் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. மக்கள் எவ்வித அசௌகரியமும் இன்றி தமது கடமைகளை மேற்கொள்ளும் நோக்கில் இந…
-
- 1 reply
- 251 views
- 1 follower
-
-
2017 முதல் 2022 வரையிலான 5 ஆண்டுகளில் மத்தள சர்வதேச விமான நிலையம் 4 ஆயிரத்து 281 கோடி ரூபாய் நட்டமடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தள ராஜபக்ச விமான நிலையத்திற்கு கடந்த வருடம் மாத்திரம் 2 ஆயிரத்து 221 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனத்தின் கணக்காய்வுகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் விமான நிலையத்தின் செயல்பாட்டுச் செலவு 203 கோடி ரூபா என்றும், இது அதன் இயக்க வருமானத்தை விட 26 மடங்கு அதிகம் என்றும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்தள விமான நிலையத்தின் 2022ஆம் ஆண்டுக்கான வரிக்குப் பிந்தி…
-
- 0 replies
- 661 views
- 1 follower
-