ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143693 topics in this forum
-
இலங்கை போர் நிறுத்தத்துக்கு இணங்காவிடில் பொதுநலவாய அமைப்பில் இருந்து இடைநிறுத்த வேண்டும்: பிரிட்டன் எம்பி் யோவான் விடுதலைப் புலிகள் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள போர் நிறுத்தக் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாவிடில், அந்த நாட்டை பொதுநலவாய அமைப்பில் இருந்து இடைநிறுத்தி வைக்க வேண்டும் என்று தொழிற்கட்சி எம்.பி யான யோவான் றியான், பிரதமர் கோர்டன் பிறவுனிடம் கேட்டுள்ளார். லண்டனிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தாம் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறியுள்ளார். அவர்களின் (புலிகளின்) கோரிக்கையை ஏற்று 24 மணி நேரத்துக்குள் போர் நிறுத்தம் குற…
-
- 4 replies
- 956 views
-
-
இந்திய றோவின் மாறுவேடம் . மேலதிக விவரங்களுக்கு http://www.athirvu.com/target_news.php?sub...amp;ucat=3& நன்றி அதிர்வு
-
- 8 replies
- 2.6k views
-
-
யாழ் ரயில் சேவை பூர்வாங்கப் பணிகள் இன்று ் ஆரம்பம் யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான பூர்வாங்கப் பணிகள் சிங்கள பயங்கரவாதியான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்படுகின்றன. இதன் போது வடக்கிற்கான ரயில் சேவையை திரும்பவும் ஆரம்பிப்பதற்கென தேசிய செயலகமொன்றும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சு கூறியதாம். கொழும்பு- யாழ்ப்பாணத்துக்கிடையிலான யாழ் தேவி ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கென தேசிய மட்டத்தில் சகல மக்களினதும் பங்களிப்பு பெறப்படவுள்ளது. பொதுமக்களின்(தமிழ் மக்களை கொத்தடிமையாக பாவித்து) உதவியுடன் 34 ரயில் நிலையங்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ளதோடு யாழ். ரயில் நிலையத்தை புனரமைக்கும் பணிகளை அம்பாந்தோட…
-
- 2 replies
- 2.1k views
-
-
அடங்காமண் நோக்கிப் பயணிக்கும் வணங்காமண் சொல்லும் செய்தி என்ன? - சி.இதயச்சந்திரன் இருளை விலக்கும் ஒளித்துளியைச் சுமந்து "வணங்கா மண்' என்கிற நிவாரணப் பொருட்களைத் தாங்கிய கப்பல் லண்டனிலிருந்து புறப்படப் போகிறது.ஐரோப்பாவிலிருந்து பாலஸ்தீனம் நோக்கிப் புறப்பட்ட "இடப்பெயர்வு "1947' (Exodos 1947) என்று பெயரிடப்பட்ட கப்பலே, "வணங்காமண்' நினைவூட்டுகிறது. வன்னி நோக்கிப் பயணிக்கும் இந்த "வணங்கா மண்' கப்பலின் நோக்கம், அவசர மனிதாபிமானத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டது. "இடப்பெயர்வு 1947' கப்பல் பயணம், இஸ்ரேல் என்ற யூத தேசத்தை நோக்கிய நகர்வினைக் கொண்டிருந்தாலும் வணங்காமண்ணின் தாயகப் பயணம், பல நாடுகளின் கரைகளை தொட்டுச் செல்லும் நிகழ்ச்சி நிரலை உள்ளடக்கி இருப்பதாக கூ…
-
- 9 replies
- 1.7k views
-
-
வன்னி நிலப்பரப்பில் 13 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் 150,000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர்; வாராந்தம் 300 பேர் படுகொலை செய்யப்படுகின்றனர்; மருந்து, உணவு, குடிநீர் இல்லாமல் மக்கள் உயிரிழக்கின்றனர் என்று லண்டனில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்' நாளிதழ் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்' இதழுக்காக எழுதிய கட்டுரையில் ஊடகவியலாளர் மாரீ கொல்வின் மேலும் தெரிவித்துள்ளதாவது: அவையவங்களை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்த மக்களுடன் இலங்கையின் வடக்கு - கிழக்கு கடற்கரையில் காத்திருக்கின்றனர் என தொண்டர் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. புதுமாத்தளன் கடற்கரைப் பகுதியில் காத்திருக்கும் மக்கள் எறிகணைத் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றனர். அவர்கள் பதுங்கு…
-
- 3 replies
- 786 views
-
-
அரசாங்கத்துடன் நிபந்தனைகள் எதுவுமின்றி பேச்சுவார்த்தை நடத்த தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராக உள்ளதாக புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இங்கிலாந்திலிருந்து வெளியாகும் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த செவ்வியின் போது தெரிவித்துள்ளார். உடனடியாக யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்த அவர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதன் காரணமாகவே தம்மை ஒர் தடை செய்யப்பட்ட இயக்கமாக பிரித்தானியா அறிவித்துள்ளதென குறிப்பிட்டார். நாள்தோறும் மேற்கொள்ளப்படும் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களினாலும், மனிதாபிமான உதவிகளை வழங்க அனுமதியளிக்கப்படாமை சிவிலியன்கள் பேரவலங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இதனால் சிவிலியன் பாதுகாப்பை கருத்திற் கொண்டு …
-
- 6 replies
- 1.3k views
-
-
இலங்கைத் தமிழர் அவலம் நீக்க ஐ.நா.உடன் தலையிட வேண்டும்: இந்திய மனித உரிமை அமைப்புகள் நவநீதம்பிள்ளையிடம் வலியுறுத்து இலங்கையின் வட பகுதியில் போரை நிறுத்தி மக்களின் அவல நிலையை நீக்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை உடனடியாகத் தலையிடவேண்டும் என்று இந்திய மனித உரிமை அமைப்புகள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் வலியுறுத்தியுள்ளன. மோதல் பகுதிகளிலுள்ள மக்களின் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்த தமது கவலையை அந்த அமைப்புகள் ஆணையாளரிடம் தெரிவித்திருக்கின்றன. தென்னாசியாவிற்கான தனது விஜயத்தின் ஒரு பகுதியாக இந்தியாவிற்குச் சென்றுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இந்தியா வின்சிவில் உரிமைகளுக்கான மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்தார்.இந்தச…
-
- 0 replies
- 888 views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினர் இன்று அதிகாலை தொடக்கம் நடத்திய அகோர எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 25 சிறுவர்கள் உட்பட 102 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 140 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 374 views
-
-
தற்போதைய நிலைமைகள் குறித்து பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். எந்த விதவிதமான முன் அறிவிப்பு எதுவும் இன்றி கூட்டமைப்பின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்புக் கடிதங்கள் நேரடியாக வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 392 views
-
-
சிறிலங்காவில் இருந்து இறக்குமதியாகும் உற்பத்திப் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம் கனடாவின் ரொறன்ரோ வாழ் தமிழ் இளையோர்களால் நேற்று முன்நாள் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 404 views
-
-
-
- 0 replies
- 911 views
-
-
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைச் சம்பவம் குறித்து அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென லசந்தவின் மனைவி காவற்துறை மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். லசந்த விக்ரமதுங்கவை படுகொலைச் செய்த நபர்கள் தொடர்பில் கெஹலிய பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டிருந்ததாக திருமதி சொனாலி விக்ரமதுங்க தெரிவித்துள்ளார். வடமத்திய மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களின் போது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பெப்ரவரி 15ம் திகதி லசந்தவின் படுகொலையைச் சூத்திரதாரிகளை நாட்டிற்கு அம்பலப்படுத்துவதாக பகிரங்க அறிக்கை விடுத்திருந்தார். அரசாங்கத்தின் மிக முக்கியமான அமைச்சர்களில் ஒருவரான கெஹலிய ரம்புக்வெல்ல…
-
- 1 reply
- 667 views
-
-
The Tamils entrapped in Vanni have undergone many displacements, now they are herded into a 14 sq miles barren land with extreme difficult living conditions. Amidst all the troubles they want to live where they belong to rather than living in detention camps. Especially the elderly prefer freedom than facility, they say they want to live on their native place and earn for their living until death When speaking to the reporter, an elderly man said whatever food India said they have sent did not reach them. It is better for those sending food and medicine to arrange to send it direct to reach people.
-
- 0 replies
- 672 views
-
-
ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து பட்டம் வாங்க மறுத்த மாணவி அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்குவதற்காக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னவைக்கோ சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். கல்லூரி முதல்வர் பன்னீர்செல்வம் உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்களும் மேடையில் அமர்ந்து இருந்தனர். ஒவ்வொரு மாணவராக பெயர் சொல்லி அழைக்கப்பட அவர்கள் மேடைக்கு சென்று பட்டம் பெற்றனர். இந்த கல்லூரியில் எம்எஸ்சி சுற்றுசூழல் படிப்பு முடித்த அரியலூர் ஓட்டகோவிலை சேர்ந்த மாணவி சுமதியை பெயர் சொல்லி அழைத்தனர். அவர் பட்டமளிப்பு விழா அரங்கத்தில் அமர்ந்து இருந்தும் பட்டம் வாங்க மேடைக்கு செல்லவில்லை. மீண்டும் அவரை அழைத்த…
-
- 0 replies
- 981 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள செங்கலடி - பதுளை வீதியில் அமைந்திருந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் மினி முகாம் மீது நேற்று தமிழீழ விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 608 views
-
-
புதுக்கோட்டை மாவட்டம் கொத்த மங்களம் பகவான் தெருவைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். தேமுதிகவின் கிளைச் செயலாளராக உள்ள 35 வயதான இவர் இன்று மதியம் 12 மணியளவில், தனது வீட்டிற்கு வெளியே ஓடிவந்து மண்ணெண்ணெய்யை தனது மேல் ஊற்றி தீயிட்டுக்கொண்டார். சமையல் தொழிலாளியான இவர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்று எந்தக் கட்சி சார்பில் நடந்தாலும், கட்சி பாகுபாடின்றி கலந்து கொள்வார். கீரமங்கலம், கொத்தமங்களம், வடகாடு ஆகிய ஊர்களில் ஈழத்தமிழர்ளின் அவல நிலையை விளக்கும் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்த இந்த தட்டிகளை காவல்துறையினர் அகற்றினர். இதை தாக்க முடியாத பால சுந்தரம், தனது கட்சிகாரர்களிடம் சொல்லி வரு…
-
- 1 reply
- 652 views
-
-
ஐ.நா. பாதுகாப்புப் பேரவை உறுப்பு நாடுகளுக்கு இடையில் இலங்கை நிலவரம் குறித்து மாறுபட்ட நிலைபாடுகள் : ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளுக்கு இடையில் இலங்கையின் நிலவரம் குறித்து மாறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. பலம் பொருந்திய அமெரிக்கா மற்றும் ஒஸ்ட்ரியா, மெக்ஸிக்கோ கொஸ்டரிக்கா ஆகிய நாடுகள் பாதுகாப்பு பேரவையில் இலங்கை விவகாரம் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டுமென தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றன. மறுபுறத்தில் இலங்கை விவகாரத்தை பாதுகாப்பு பேரவை நிகழ்ச்சி நிரலில் இணைத்துக்கொள்ளக் கூடாதெனவும், அது ஓர் உள்நாட்டு பிரச்சினை எனவும் ரஸ்யாவும், சீனாவும் வலியுறுத்தி வருகின்றன. 15 நாடுகளைக் கொண்ட ஐக்கிய ந…
-
- 0 replies
- 786 views
-
-
இந்தியாவின் நலன்களுக்கு எதிராக நாம் ஒருபோதும் செயற்பட்டதில்லை; அவ்வாறு செயற்படும் நோக்கமும் எமக்கு கிடையாது; இந்தியா எமக்கு அருகில் இருந்து தமிழர் பிரச்சினையில் தலையிட வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்தியாவில் இருந்து ஒளிபரப்பாகும் சி.என்.என் ஐ.பி.என் தொலைக்காட்சிக்கு பா.நடேசன் வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிக்கியுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு விடுதலைப் புலிகள் தடையாக இருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவிப்பது தொடர்பாக உங்களின் கருத்து என்ன? முதலில், 'சிக்கியுள்ள மக்கள்' என்ற சொல் பயன்படுத்தப்படுவது முறையானது அல…
-
- 2 replies
- 928 views
-
-
திருமலைச் சிறுமி வர்ஷாவின் கொலை - ஒன்றையொன்று குற்றஞ்சாட்டும் கிழக்கின் ஒட்டுக்குழுக்கள் Trinco Varsha killing; Tamil paramilitary groups blame each other [TamilNet, Saturday, 21 March 2009, 17:08 GMT] Two paramilitary groups, Tamil Makal Viduthalai Pulikal (TMVP) led by Chief Minister Sivanesathurai Chandrakanthan alias Pillaiyan and other by Karuna Amman alias Vinayagamoorthy Muralitharan, who resigned from the TMVP and joined the ruling Sri Lanka Freedom Party (SLFP), are blaming each other for the abduction and killing of six-year-old girl student, Varsha Jude Reggie, according to Colombo media reports. 6-year-old student Miss Varsha Jude ReggieShe w…
-
- 0 replies
- 988 views
-
-
ஈழம் சகோதர யுத்தம் இறுதிப்பாகம் 12:16 AM, Posted by சாத்திரி, 5 Comments இனி இறுதியாக சகோதர யுத்தம் பற்றி கருணாநிதி அவர்கள் அடிக்கடி அறிக்கையாக புலம்புவதன் நோக்கம் என்னவென்று பார்த்தால். அவரிற்கு உண்மையாகவே ஈழத்தமிழர் போராட்டத்தில் உண்மையான உணர்வுள்ள பற்று என்றுமே இருந்ததில்லை.உதாரணமாக ஈழ விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பகாலப் போராளிகளில் ஒருவரான குட்டிமணி என்பவர் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் பகுதியில் தலைமறைவாக இருந்த 1973 ம் ஆண்டு காலத்தில் இலங்கையரசின் வேண்டுகேளிற்கிணங்க குட்டிமணியை கைதுசெய்து இலங்கைக்கு நாடு கடத்த உத்தரவிட்டிருந்தார்.அதேபோல அவரும் நாடு கடத்தப்பட்டு சிறீலங்கா காவல்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் சிறையிலிருந்து வெளிவந்து மீண்டும் இலங்கைய…
-
- 1 reply
- 1.8k views
-
-
1947 இடப்பெயர்வும் வணங்கா மண்ணும் 21/03/2009 -------------------------------------------------------------------------------- பழைய வரலாறுகளை நினைவூட்டிப் பார்க்கிறது. "வணங்கா மண்' இக் கப்பல் பயணத்தின் முக்கியத்துவம் என்ன? சிங்கள இராணுவ முற்றுகைக்கு உள்ளான வன்னி மக்களுக்கு அவசர உதவிகளை வழங்க சர்வதேசம் பின்னடிக்கும் இவ்வேளையில், "வணங்கா மண்' எனப் பெயரிடப்பட்ட நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் இக்கப்பல், உருவாக்கப் போகும் தாக்கங்கள் எத்தகையது என விரிவாகப் பார்ப்போம். பிரான்சில் வசித்த, யூதக் குடியேற்றக்காரர்களை ஏற்றிக்கொண்டு "இடப்பெயர்வு 1947' (Exodus 1947) என்கிற கப்பல், 1947 ஆம் ஆண்டு யூலை 11ம் திகதி செற்றி (Sete) துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. "எஸ் எ…
-
- 3 replies
- 986 views
-
-
ஏப்றல் 14 ற்கு முதல் புலிகள் அழிக்கப்படுவார்களா?? 3:25 PM, Posted by சாத்திரி, 5 Comments புலிகளை எப்படியும் ஏப்றல் 14 ற்கு முதல் அழிந்துவிடுமாறு இலங்கையரசிற்கு இந்தியா உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன... "http://img301.imageshack.us/img301/5710/mahindasonia1g.jpg" மிஸ்ரர் பக்சே எப்பிடியாவது எல்.டி.டி.யை நிம்மள் ஒழிச்சாத்தான் நாமள் வெற்றி பெறும் "http://img301.imageshack.us/img301/9995/soniakarunanidi1.jpg" கவலை... படாதிங்கோ... கருவாய் நிதி.... எல்.டி.டி.யை ஒளிச்சிடலாம்... அதுக்கப்புறம் நானும் நீங்களும்தான்......அது வரைக்கும் உடன் பறப்பிற்கு ...கடிதம் எலுதுங்கொ.. "http://img301.imageshack.us/img301/4944/indiasrilankaarmy1.jpg" இ…
-
- 1 reply
- 2.7k views
-
-
நான் நேற்று வணங்கா மண் மக்களை தொடர்பு கொண்டு இலங்கை கடற்படையின் எச்சரிக்கை பற்றி சொல்லி அவர்களை எதிர்கொள்ள கப்பல் புறப்படும் நேரத்தில் அணைத்து சர்வதேச ஊடகங்களிலும் இந்த வெளியாகும் விதமாக 'George Clooney' போன்ற பிரபல அங்கில நடிகரையும் அழைத்து செல்லும்படி ஆலோசனை சொல்லி இருந்தேன். அவர்களும் இது போன்று பிரபலங்களை அழைக்க முயற்சி செய்து வருகின்றனர். உங்களில் எவருக்கேனும் இத்தகைய பிரபலங்களின் (நடிகர்கள், பாடகர்கள், பிற மொழி மருத்துவர்கள், மனித உரிமைகள் ஆர்வலர்கள் போன்று ) தொடர்புகள் இருந்தால் தெரியப்படுத்துங்கள். இது சர்வதேச செய்திகளில் இடம்பெற ஏதுவாக இருக்கும். அணைத்து ஊடகங்களும் நம் மக்களுக்கு இன்னல் என்றல் ஏதும் சொல்லமாட்டர்கள் அனால் ஒரு முக்கியஸ்தர் என்றால் ஒளிபரப்புவார…
-
- 4 replies
- 1.4k views
-
-
-
- 4 replies
- 831 views
-
-
Sri Lanka's death zone Email story Print Choose text size Report typo or correction License this article Mar 21, 2009 04:30 AM Comments on this story (51) Sri Lankan President Mahinda Rajapaksa may win his war against the Tamil Tigers, but at what cost? By resorting to war crimes that would stain his nation's image, and make postwar reconciliation between the Sinhalese majority and Tamil minority even harder to achieve? That's what United Nations High Commissioner for Human Rights Navi Pillay fears. She recently warned that tactics by both the Sri Lankan military and the Tigers "could amount to war crimes and crimes against humanity…
-
- 2 replies
- 1.1k views
-