ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்கு சென்றுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும் நிவாரண ஒருங்கிணைப்பாளருமான ஜோன் ஹோல்ம்ஸ் சிறிலங்கா அரசாங்கத்தின் விருந்தாளி போன்று செயற்படுவதாகவும் அரசாங்கம் அவருக்கு கடிவாளம் இட்டிருக்கின்றது என்றும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 521 views
-
-
அமெரிக்க தலைநகர் வோசிங்டன் டி.சி.யில் - 'வெள்ளை மாளிகை' முன்பாகவும் வெளியுறவுத்துறை இராஜாங்க செயலகம் முன்பாகவும் நேற்று வெள்ளிக்கிழமை உறைய வைக்கும் பனியில் குவிந்த 10 ஆயிரம் வரையான தமிழர்கள் - 'பயங்கரவாத'த்தின் பேரால் சிறிலங்கா அரசு முன்னெடுக்கும் தமிழினப் படுகொலை போரை நிறுத்தி வன்னி மக்களை காப்பற்றுமாறு அமெரிக்க அரசாங்கத்திடம் கோரினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 617 views
-
-
தென்னாபிரிக்காவின் பீற்றமாரிற்ஸ்பேர்க்கில் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் அதன் படைகளுக்கும் எதிராக நேற்று வெள்ளிக்கிழமை கண்டனப் பேரணி நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 448 views
-
-
ஈழத் தமிழர் மீதான இனப்படுகொலையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவுக்கு எழுதப்பட்ட முறையீட்டு மனுவை சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதுவரிடம் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் அளித்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 537 views
-
-
சிறிலங்காவின் கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்தின் மீது வான்புலிகள் நேற்று நடத்திய கரும்புலி தாக்குதலையடுத்து வானூர்தி நிலையம் சில மணி நேரங்கள் மூடப்பட்டது. அத்துடன் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் தரையிறங்க வேண்டிய வானூர்திகள் அனைத்தும் இந்தியாவிற்கு திருப்பி விடப்பட்டன. வான் புலிகளின் கரும்புலித் தாக்குதலையடுத்து உடனடியாக வானூர்தி நிலைய பணிகள் அனைத்தையும் இடை நிறுத்துமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டது. இதனையடுத்து, கட்டுநாயக்காவில் தரையிறங்க வேண்டிய வானூர்திகள் இந்தியாவிற்கு திசை திருப்பி விடப்பட்டன. குறிப்பிட்ட சில வானூர்தி சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக, கரும்புலிகளின் தாக்குதலையடுத்து நேற்று வெள்…
-
- 0 replies
- 1.8k views
-
-
வணக்கம்! எமதான உறவுகளே உள்ளத்து உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது கையறு நிலை என்பது இதுதானோ?உலகம் பூராவும் எழுச்சி ஊர்வலங்கள்,உணர்ச்சி கொந்தளிப்பின் அதி உச்ச வெளிப்பாடாக உயிர்த்தியாகம் வார்த்தைக்களிற்கு அப்பாற்பட்ட தாயகத்தில் எம் இனம் படும் இனப்படுகொலையின் அதி உச்ச அவலம்,இவ்வளவையும் நிச்சயமாக எமதான உறவுகளால் சர்வதேசத்திற்கு முகத்தில் அறைந்தாற் போல் எடுத்துரைதுள்ளோம்,ஆயினும் சர்வதேசம் எந்த ஓரு ஆக்க பூர்வமான நடவடிக்கையையும் எடுக்க(முடிய)வில்லை. மேலும் ஸ்ரீலங்கா,அதாவது ஆக்கிரமிப்பு இராணுவம் எந்த சர்வதேசத்தின் அழுத்தத்தையும் லட்சியப்படுத்துவதாக இல்லை,எல்லாமே இந்தியா,இந்தியாவாகிவிட்ட தாற்பாரியமேதவிர வேறென்ன?இலண்டனில் இருந்தும்,ஐரோப்பிய நாடுகளில் இருந்து சென்ற இணையத்த…
-
- 3 replies
- 1.6k views
-
-
ஈழ சகோதிரிகளை பாருங்கள் நிர்வாணமாய், மாணாக் கெட்ட தமிழனுக்கு இது ஒன்று தான் மீதி இருந்தது... ஆங்கிலேயனிடம் நாட்டை அடகு வைத்து அவன் கால் பிடித்து வந்த தமிழினமே பார். அடிமையாய் வாழ, யாரையாவது தலைவனாக்க கால் தேடி கொண்டிருக்கும் அடிமை இனமே பாருங்கள். தயவு செய்து திவிரவாதம் என்று அரசியல் ஆக்க வேண்டாம். நான் சொல்வது எல்லாம் "பெண்ணை" பற்றி தான் ஆம் நம் ஈழ சகோதிரிகள் பற்றி தான். ஒரு பெண்ணுக்கு நிகழும் கொடுமையை பாருங்கள். //மாறாக சண்டை செய்யும் பெண்களின் உறுப்புகளைக் கூட கடித்துக் குதறுகின்றது// //யுத்த முனையில் எப்படிப்பட்ட வக்கிரங்கள் அரங்கேறுகின்றது என்பதை,// //மனிதம் எப்படி அவமானப்படுத்தப்படுகின்றது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது// //மகிந்த சிந்தனையிலான ச…
-
- 4 replies
- 3.3k views
-
-
ராஜீவ் கொல்லப்படுவதற்கு முன்பே ஈழத் தமிழர்கள் கொலை செய்யப்படுவதை இந்தியா தடுக்கவில்லை - திருமாவளவன் - ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டதால் இலங்கை தமிழர்கள் அழிவதை இந்தியா தடுக்கவில்லை என்கிறார்கள். உண்மை அதுவல்ல. ராஜீவ்காந்தி கொலை செய்யப்படுவதற்கு முன்பும் இந்தியாவின் நோக்கம் அதுவாகத்தான் இருந்தது என விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களுக்காக கடலூரில் தீக்குளித்து பலியான தமிழ்வேந்தனின் உடல் கடலூர் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில…
-
- 0 replies
- 700 views
-
-
இலங்கை அரசு மக்களை கொல்கிறது தொடர்பாக டைம்ஸ் ஒன்லைன் இல் வந்த கட்டுரைக்கு உங்கள் கருத்துக்கள் அவசியம் தேவை. இங்கு வந்து பார்த்துவிட்டு சிங்களவனும், எம் துரொகிகளும் கருத்துக்களை தம் சார்பாக திருப்பமுன் நாமும் பங்கெடுப்போம் http://www.timesonline.co.uk/tol/news/worl...amp;attr=797093 Jeremy Page, South Asia Correspondent Sri Lanka's Government is "slaughtering" civilians with indiscriminate shelling as it tries to finish off the last Tamil Tiger rebels hiding in a patch of northeastern jungle, Human Rights Watch said today. After a two-week covert fact-finding mission to the region, the New York-based group also said that civilians who escaped th…
-
- 1 reply
- 1.1k views
-
-
உணவு நெருக்கடியில் வாழும் வன்னி மக்களுக்கு இழு படகில் சென்ற சொற்ப பொருள் நிவாரணத்தினை பெறுவதற்காக மக்கள் முண்டியடித்த போது குழந்தை ஒன்று நெரிசலில் நசியுண்டு உயிரிழந்துள்ளது. உலகை ஏமாற்றவதற்காக மூன்று சுமையூர்தி உணவுப் பொருட்கள் நேற்று முன்நாள் புதன்கிழமை சிறிலங்கா அரசாங்கத்தால் அனுப்பப்பட்டன. இந்த உணவுப் பொருட்களை பெறுவதற்கு நேற்று பல்லாயிரக்கணக்கான மக்கள் முண்டியடித்த போது இவர்களுக்குள் சிக்கி ஒரு வயது குழந்தை உயிரிழந்துள்ளது. புதினம்
-
- 3 replies
- 663 views
-
-
நெல்லையில் இயக்குநர் சீமான் கைது திருநெல்வேலி நீதிமன்றத்தில் சரண் அடைய வந்த இயக்குநர் சீமானை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=3819
-
- 6 replies
- 1.9k views
-
-
சு.சுவாமி எனும் பார்ப்பன வெறியனுக்காக நீதிபதிகள், வழக்குரைஞர்கள் மண்டை உடைப்பு ! போலீஸ் வெறியாட்டம் !! சுப்பிரமணிய சுவாமி எனும் பார்ப்பன பாசிஸ்ட்டை பலரும் ஒரு ஜோக்கரான கோமாளி என்றே மதிப்பிடுகின்றனர். ஆனால் நேற்று உயர்நீதிமன்றத்தில் சுமார் 4 மணிநேரம் போலீஸ் நடத்திய வெறியாட்டத்தைப் பார்த்த பிறகாவது சு.சுவாமியின் பலமும் அவருக்காக இந்த அரசும், போலீசும், ஊடகங்களும் எந்த அளவுக்கு வெறி கொண்ட முறையில் சாமியாடும் என்ற உண்மையை நாம் அங்கீகரித்தாக வேண்டும். சிதம்பரம் கோவில் எனும் மக்கள் சொத்தை திமிருடன் சுரண்டியும் விற்றும் வாழும் தீட்சிதர்கள் எனும் பார்ப்பன கிரிமினல்களுக்காக வாதாட வந்த சு.சுவாமியின் மீது வீசப்பட்ட முட்டை என்பது வழக்கறிஞர்களின் தன்னிச்சையான திட்டமிடப்படாத எ…
-
- 3 replies
- 2k views
-
-
கடலூரில் ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்த தமிழ்வேந்தனின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 6.45க்கு தொடங்கியது. ஊர்வலத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ ரவிக்குமார், வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு, வியாபாரிகள் சங்க தலைவர் த.வெள்ளையன் உட்பட பொது மக்கள் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். மூன்றூ கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சுடுகாட்டுக்கு இந்த இறுதி ஊர்வலம் செல்கிறது. தமிழ்வேந்தனின் உடல் நான்குசக்கர வாகனத்தின் மேல் வைக்கப்பட்டுள்ளது. ஊர்வலப்பகுதி முழுவதும் கடைகள் அடைக…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஜெனீவாவிலிருந்து நேரடி ஒளிபரப்பு http://uurputhinam.tforums.org/viewtopic.php?f=25&t=16
-
- 0 replies
- 1.5k views
-
-
தாயகத்தில் நிலவும் அவலத்தை உலக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டு வரும் நோக்கோடு 12.02.2009 அன்று சுவிஸ் ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் தீக்குளித்து உயிர்த்தியாகம் புரிந்த முருகதாசனுக்கு உலகத் தமிழர் திரண்டு நின்று தமது வணக்கத்தைத் தெரிவித்தனர். ஐநா சபைக்கு அருகேயுள்ள 57 rue de montbrillant, 1202 Geneva எனும் முகவரியில் அமைந்துள்ள தேவாலயத்தில் முருகதாசனின் உடலம் வணக்க நிகழ்வுக்காக வைக்கப்பட்டது. இன்று காலை 10.30 க்கு ஆரம்பித்த இவ்வணக்க நிகழ்வில் ஐநா முன்றலில் நடைபெறவுள்ள ஒன்றுகூடலிற்கு அணிதிரண்ட உலகத்தமிழர் தங்களது மலர் வணக்கத்தை செலுத்துவதற்காய் தேவாலயம் நோக்கி நடந்தனர். ஈழத்தில் தமிழர்கள் மீது சிறீலங்கா அரசு திணித்துள்ள போரினால் மக்கள் படும் அவலத்தைக் கேட்டும்,…
-
- 0 replies
- 676 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பரப்புக்களை படையினர் முழுமையாக கைப்பற்றினாலும், யுத்தம் இன்னும் 18 மாதங்கள் வரையிலோனும் நீடிக்கும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கருணா தெரிவித்துள்ளார். இன்னும், விடுதலைப் புலிகளை முற்றாக இல்லாதொழிக்க இன்னமும் ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் தேவைப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஏ.எப்.பி. செய்தி சேவைக்கு அளித்த விசேட செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கப் படையினர் மீது வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடிய சிறந்த புலித் தலைவர்கள் தற்போது இல்லை என அவர் தெரிவித்துள்ளார். பெரும்பான்மை சிங்கள மக்களுடன் போராட்டங்களை நடத…
-
- 12 replies
- 2.5k views
-
-
ஈழத் தமிழர்களுக்காக கடலூரில் தீக்குளித்த 'வீரத் தமிழ்மகன்' தமிழ்வேந்தனின் இறுதி நிகழ்வில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 457 views
-
-
இலங்கை இராணுவத்தால் கொடூரமான இன அழிப்பு யுத்தம் ஒரு பக்கத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அதே வேளையில் இலங்கை அரசு அதிகாரிகளால் ஒரு பெரும் பொய் பரப்புரை யுத்தம் செய்யப்பட்டு வருகிறது. போதாத குறைக்கு இந்திய மத்திய, மாநில அரசியல்வாதிகள் தங்களது சுயலாபத்திற்காக மக்களை பல்வேறு வழிகளில் திசை திருப்பி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கின்றனர். ஆனால் மக்கள் கூடும் இடங்களிலெல்லாம் இலங்கை பிரச்சினையை பற்றித்தான் பேசி தர்க்கம் நடக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொல்கின்றனர்.களத்தில் நிகழும் போரை விட இந்தக் கருத்துப் போர் மிகவும் அபாயகரமானதாக உள்ளது. மக்களின் மனதில் எழுகின்ற சந்தேகங்களை தீர்ப்பது அல்லது விளக்கிச் சொல்வது இப்போது மிகவும் அவசியமாகிறது. புலிகள் ஏன் அப்பாவ…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்குள் பிரவேசித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் அதியுயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் இன்று இரவு கரும்புலித் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 365 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்குள் பிரவேசித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் அதியுயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் இன்று இரவு குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 511 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் இன்று வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 405 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 673 views
-
-
ஐக்கிய நாடுகள் சபை உட்பட எந்த ஒரு அனைத்துலக நாடுகளுக்கும் இனப் பிரச்சினை விவகாரத்தில் தலையிடுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்கா மக்களை அனைத்துலக நாடுகளின் கண்காட்சி பொருளாக்க ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் ஒருபோதும் இடமளியாது எனவும் சூளுரைத்துள்ளார். கொழும்பின் புறநகர்ப் பகுதியான ஹேமகமவில் ஆதார மருத்துவமனை கட்டட திறப்பு விழவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற இந்நிகழ்வில் மூத்த அமைச்சர்கள், அரச அதிகாரிகள் உட்பட பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டனர். மகிந்த ராஜபக்ச தனது உரையில் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் மக்களை எப்படி பா…
-
- 22 replies
- 1.7k views
- 1 follower
-
-
சுவிற்சா்லாந்து ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் இன்று நடைபெற்று கொண்டிருக்கும் ஒன்றுகூடலில் அணிதிரண்ட தமிழர்கள் தீக்குளித்து உயிர்த்தியாகம் புரிந்த 'வீரத் தமிழன்' முருகதாசனுக்கு மலர் வணக்கத்தை செலுத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 446 views
-
-
வன்னியில் உள்ள மக்களை இலக்கு வைத்து சிறீலங்கா அரசாங்கம் தொடர்ச்சியான தாக்குதல்களை மேற் கொண்டு வருகின்றது. வன்னியில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ள மக்களை தெரிவு செய்து இளம் பெண்கள் தனியாகவும் ஆண்கள் தனியாகவும் குழந்தைகள் பெண்கள் தனியாகவும் பிரிக்கப்படுகின்றனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்படுபவர்கள் பெருமளவானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், பெருமளவு பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ளவர்கள் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பெருமளவு ஆண்களும் இளம் பெண்களும் விசாரணைகளுக்காக என படையினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்கள…
-
- 12 replies
- 2.6k views
-