Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்திய பிரதமருக்கு விடுக்கும் கோரிக்கை! தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் இலங்கை இந்தியாவிற்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்துமாறு பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் மக்கள் சார்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எழுதிய கடிதம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடம் நேற்று (17) கையளிக்கப்பட்டது. அதிகாரப் பகிர்வு , வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் நிர்வாகம் தொடர்பில் இந்தியாவிற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்று…

  2. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தேர்தல் திணைக்களத்தில் புகார் கொடுத்ததாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். லங்காசிறி ஊடகத்தின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட கட்சி என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கும் போது நான்கு காட்சிகள் அதில் அங்கம் வகித்தன. அன்று முதல் உள்ளூராட்சி மன்ற தேர்தல் வரையில் சில கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வந்து இணைந்தன.சில க…

  3. யாழ்.பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல் : 07 மாணவர்கள் காயம் யாழ்ப்பாண பல்கலைக்காக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 07 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் குருநகர், சிறுத்தீவு பகுதிக்கு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று நேற்றைய தினம் திங்கட்கிழமை சென்ற , சந்தோஷமாக பொழுதை கழித்துள்ளனர். ஒரு கட்டத்தில் கடலில் இறங்கி நீராடும் போது, அருகில் இருந்த கடலட்டை பண்ணைக்குள்ளும் நுழைந்துள்ளனர். அதனால் , கடலட்டை பண்ணையில் காவலில் இருந்தவர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. வாய்த்தர்க்கம் முற்றி இரு தரப்பினரும் கைக்கலப்பில் ஈடுபட்டதில் , 07 மாணவர்களும் , கடலட்டை பண்ணை உரிமையாளர் …

    • 12 replies
    • 1.1k views
  4. Published By: VISHNU 18 JUL, 2023 | 09:27 PM வாழைச்சேனை கறுவாக்கேணி வீதியில் அமைந்துள்ள தனியார் வாகனத் தரிப்பிடமொன்றில் ஏற்பட்ட தீ பரவல் சம்பவமொன்றின் போது மோட்டர் சைக்கிள், துவிச்சக்கர வண்டிகள் மற்றும் முச்சக்கர வண்டி உட்பட 40 ற்கு மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இதன்போது முச்சக்கரவண்டி-1, மோட்டார் சைக்கிள்கள் -34, துவிச்சக்கரவண்டி- 8, என 40 வரையிலான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாகனங்களில் தீ பரவியதால் வெடிச்சத்தம் கேட்டதுடன் புகையுடன் கூடிய இருள் சூழ்ந்த நிலையில் தீ பரவல் பிரதேசத்தில் காணப்பட்டுள்ளது. பொதும…

  5. Published By: DIGITAL DESK 3 18 JUL, 2023 | 03:53 PM கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவ அறைக்கான (A/C) குளிரூட்டி பழுதடைந்துள்ளதால் பிரசவத்திற்காக செல்லும் கர்ப்பிணித் தாய்மார்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையின் பிரசவ அறைக்கான குளிரூட்டி கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது. இதனால் மகப்பேற்றுக்காக சென்று பிரசவத்திற்காக தங்கியிருங்கும் தாய்மார் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர். முல்லைத்தீவு, மல்லாவி, மாங்குளம், நட்டாங்கண்டல் ஆகிய வைத்தியசாலைகளிலிருந்தும் விசுவமடு, உடையார்கட்டு, தருமபுரம் ஆகிய பகுதிகளிலும் உள்ள கர்…

  6. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி கூறியது என்ன ?? – விபரம் இதோ பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய முன்மொழிவுகளை, இன்று வரைபுக் குழு ஆராய உள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுத்த பின்னர் சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார். வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களையும் பரிசீலித்து ஊழல் ஒழிப்புச் சட்டமூலத்தை நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு திருத்தங்கள் மேற்க…

  7. கெஹலியவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – சஜித் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றும் போதே எதிர்கட்சித் தலைவர் இதனை தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1340154

  8. இரணைமடு குடிநீர்திட்டத்தை தொடர்வதில் அரசியல் பிரச்சினை – ஜீவன் தொண்டமான் இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் கொண்டு செல்வதற்கான திட்டத்தை தொடர்ந்தும் செயற்படுத்துவதில் பாரிய அரசியல் பிரச்சினை இருப்பதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இரணைமடு குளத்தைப் புனரமைத்து யாழ்ப்பாணம் உட்பட ஏனைய மாவட்டங்களுக்கு நீரை வழங்க நடவடிக்கை எடுத்தால் பலப்பிரச்சினைகள் வரும் என கூறி பலதரப்பினரும் அதற்கு எதிர்ப்பினை வெளியிடுவதாக தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் இவ்வாறு தெரிவ…

    • 1 reply
    • 600 views
  9. 28 கோடி ரூபாய் பெறுமதியான ஆணிகள் திருடப்பட்ட விவகாரம் : விசாரணைகள் ஆரம்பம்- அமைச்சர் பந்துல புதிய களனி பாலத்தில், பொருத்தப்பட்டிருந்த 28 கோடி ரூபாய் பெறுமதியான ஆணிகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ச்சியாக கருத்து வெளியிட்ட அவர், தெமட்டகொட மற்றும் ரத்மலானை புகையிரத நிலையங்கள், ரயில் பாலங்கள் உள்ளிட்ட பல இடங்களில் திருட்டுச் சம்பங்கள் தொடர்ச்சியாக அறங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. இவற்றை கட்டுப்படுத்த ம…

  10. பாகிஸ்தானின் உண்மையான நண்பனாக இலங்கை உள்ளது – பாகிஸ்தான் பிரதமர்! சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட ஆதரவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் பாராட்டு தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) பாகிஸ்தான் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இலங்கை மற்றும் பாகிஸ்தானின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர். மேலும் “நீங்கள் பாகிஸ்தானின் உண்மையான நண்பராகவும் நலம் விரும்புபவராகவும் இருந்துள்ளிர்கள், எனது நாட்டு மக்கள் சார்பாக நான் உங்களுக்கு நன்…

  11. இலங்கையின் அடுத்த ஜனாதிபதி இவரா? எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திர மக்கள் பேரவையின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை முன்னிறுத்த பேரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, சுதந்திர ஜனதா சபை தனக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளவர்களுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்கு தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஊழலற்றவர், அவர் நாட்டின் ஜனாதிபதி அல்லது பிரதமர் பதவியை வகிக்க மிகவும் பொருத்தமானவர் எனவும், எனவே அவரை நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்க எதிர்க்கட்சி…

  12. வடக்கு இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு! வட மாகாணத்திலுள்ள அனைத்து இளைஞர் யுவதிகளுக்குமான பொன்னான வாய்ப்பு ஒன்றை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஏற்படுத்தியுள்ளார் என கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான க்லோகல் பெயார் (Glocal Fair) நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த காலங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் குறைவாக இருந்ததுடன் அவற்றுக்காக பண விரைவு மற்றும் ஏமாற்றம் போன்றவற்றையும் மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தற்போது ஆரம்பித்துள்ள வேலைவாய்ப்புக்களில…

  13. Published By: DIGITAL DESK 3 18 JUL, 2023 | 08:55 AM (நா.தனுஜா) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ்த்தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று செவ்வாய்க்கிழமை (18) நடைபெறவுள்ள நிலையில், இதன்போது விசேடமாக குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகத் தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 20 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 21 ஆம் திகதி இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார். இவ்வாறானதொரு…

  14. Published By: DIGITAL DESK 3 18 JUL, 2023 | 09:41 AM (நா.தனுஜா) தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வழங்கும் விவகாரத்தில் அமெரிக்கா அவதானம் செலுத்த வேண்டும் என்றும், தமிழ் மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வலுவான நிலைப்பாட்டை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லவேண்டும் என்றும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங்கிடம் வலியுறுத்தியுள்ளனர். அது மாத்திரமன்றி தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஓரளவுக்கு மிதவாதத் தலைவராக இருந்தாலும், அவரால் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணமுடியாது என்றும்,…

  15. யாழ். நாவாந்துறையில் பதற்றம் : பொலிஸ் விசேட அதிரடிப் படை குவிப்பு 17 Jul, 2023 | 10:02 PM யாழ். பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் மோதலுக்கான காரணம் என்ன என தெரியவரவில்லை. எனினும் குறித்த பகுதியில் பொதுப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதோடு போத்தல்கள் உடைக்கப்பட்டு பொதுமக்கள் வீதியில் பயணிக்க முடியாதவாறு பதற்ற நிலை நிலவுகின்றது. https://www.virakesari…

  16. 2027ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு தேவையில்லை 2027ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற உள்ளூர் கடன்களை மேம்படுத்துவது தொடர்பில் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கும் நிகழ்விலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுள்ள நாடாக இலங்கை சர்வதேச சமூகத்திற்கு முன்னுதாரணமாக மாறியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு தற்போது 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக…

  17. ஜூன் இறுதிக்குள் 33 நிபந்தனைகளை நிறைவேற்றிய அரசாங்கம் 8 இல் தோல்வி ! சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த 33 நிபந்தனைகளை ஜூன் இறுதிக்குள் நிறைவேற்றியுள்ள இலங்கை அரசாங்கம் மேலும் எட்டு வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. ‘IMF Tracker’ எனும் இணையக் கருவி மூலம் இலங்கையின் செயல்திறனைக் கண்காணித்து வரும் வெரிடே ரிசர்ச் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. மே மாதத்தில் நான்காக இருந்த நிறைவேற்றப்படாத நிபந்தனைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி, ஜூன் எட்டாக அதிகரித்துள்ளது. அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறுதல், புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை இயற்றுதல் என்பனவும் இதில் அடங்கும். மேலும் …

  18. காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் குறித்து அமெரிக்க தூதுவருடன் கலந்துரையாடல் Share on FacebookShare on Twitter தழிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் julie chung கியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் julie chung தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்க பதிவொன்றில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். உண்மை, நல்லிணக்கம் மற்றும் வடக்கு கிழக்கு பகுதிகளின் அமைதி நிலைமை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன் அதிகாரப்பகிர்வு, காணி விவகாரம் , வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட…

  19. கனேடிய உயர்ஸ்தானிகருடன் சிறீதரன் விசேட சந்திப்பு! இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸூக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று யாழில் இடம்பெற்றது. இதன்போது, தமிழர்கள் நலன்சார் செயற்பாடுகளிலும், இன அழிப்புக்கான நீதிகோரல் செயன்முறையிலும் கனடா அரசாங்கம் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வருவதற்கு தனது நன்றியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வெளியிட்டார். இலங்கையில் நடைபெற்றது இன அழிப்புத்தான் என்பதையும் அதற்குரிய நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி கனேடிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக, அப்பிரேரணைக்கு வலுச்சேர்க்கும்…

  20. டீக்கடை கூட நடத்தாத ஜே.வி.பிக்கு. எப்படி நாட்டை ஆள முடியும் ? – மஹிந்தானந்த கேள்வி மக்கள் விடுதலை முன்னணி நாட்டிற்குத் தேவையான மாற்று அணி அல்ல என்பதை மக்கள் தற்போது உணர்ந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். மினுவாங்கொடையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை சர்வதேச சமூகத்தை கையாளும் அறிவும் திறமையும் மக்கள் விடுதலை முன்னணிக்கு இல்லை எனவும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். சந்திரிகாவின் அரசாங்கத்தில் அனுரகுமாரவிற்கு ஐந்தாண்டுகளுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்றும் ஆனால், அவர்கள் அதனை பாதியிலேயே கைவிட்டனர் என்றும் …

    • 1 reply
    • 544 views
  21. நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி! நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரையம்பதி வட்டார தலைவர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களை தாக்குவதற்கு முற்பட்டுள்ளார். அண்மையில் மன்னம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவும் மட்டக்களப்பில் இயங்கி வரும் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகளின் பிரச்சனை தொடர்பாகவும் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது சட்ட வ…

  22. 16 JUL, 2023 | 07:05 PM (எம்.நியூட்டன்) இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு இலங்கையை சேர்ந்த புலம்பெயர் தமிழர்கள், உள்நாட்டு தமிழர்கள் உதவிகள் செய்ய வேண்டும் என கலாநிதி ஆறு திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கீரிமலை சிவபூமி முதியோர் ஆச்சிரமத்தில் சுந்தரகைலாச கட்டட திறப்புவிழா சனிக்கிழமை (15) நடைபெற்றது. இந்த நிகழ்வை தலைமையேற்று உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியா எமக்கு இந்த உதவியை செய்யவேண்டும்; இதனை செய்யவேண்டும்; அதனை செய்ய வேண்டும் என ஏன நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். எமக்கும் உதவிகள் தேவை தான். ஆனால், இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் …

  23. இன்றுள்ள சூழலில் வரலாற்று சின்னங்களுக்கு உருவங்கள் மாற்றப்படுவதாக யாழ். மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். நேற்று (16.07.2023) நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் திறப்பு விழாவில் உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மரபுரிமைகளைப் பாதுகாப்பது என்பது முக்கியமான அவசியமான பணியாகவுள்ளது. சமகால வரலாற்று நிகழ்வுகளை அது நிகழ்ந்த நாட்டிலே பேணிக்கொள்ள முடியாத நிலையில் அயல் நாட்டிலும் வெளிநாட்டிலும் நினைவகங்களை அமைத்துக்கொண்டிருக்கின்றாம். பாதுகாக்க தவறி விட்டோம் இன்றுள்ள சூழலில் வரலாற்று சின்னங்களுக்கு உருவங்கள் மாற்றப்படுகின்றன. அவற்றை பாதுகாக்க பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்ளப்படுகிறது. எ…

  24. மாதத்தின் முதலாவது அமாவாசை ஆடி அமாவாசை இல்லை : சர்வதேச இந்துமத பீடம் ! kugenJuly 17, 2023 இன்று பிறந்துள்ள ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை தினங்கள் வரும் நிலையில், மாதத்தின் முதலாவது அமாவாசை ஆடி அமாவாசை விரதமாக கருதப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரிதாக வரும் நிலையில், இன்றைய தினம் வரும் முதல் அமாவாசை தினம் ஆடி அமாவாசை தினம் அல்லவென சர்வதேச இந்துமத பீடத்தின் செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபுசர்மா தெரிவித்தார். இதற்கமைய, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 15ம் திகதியே ஆடி அமாவாசை விரதமாகும் கருதப்படும் என்பதுடன், அன்றைய தினம் பிதிர் கடன்களை நிறைவேற்ற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். http://www.battinews.com/2023…

    • 6 replies
    • 928 views
  25. மக்களை பொருளாதார நெருக்கடியில் தள்ளுகின்றனர் : இரா. சாணக்கியன்! kugenJuly 17, 2023 பொருளாதார நெருக்கடி காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கடுமையான கஷ்டங்களை எதிர் நோக்கி வரும் சூழ்நிலையில் சுற்றுலாத் துறையினை காரணம் காட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானசாலைகளை இங்குள்ள அரசியல் வாதிகள் முன்னெடுத்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். வவுணதீவு பிரதேசத்தில் மதுபானசாலைகளை திறப்பதற்கான நடவடிக்கைகளுக்கு எதிராக பொது மக்களினால் இன்று (17) முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அனைவரையும் ஆதரவு வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார். நேற்று (16) மாலை மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.