Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. PreviousNext யாழ். மக்களுக்கான அரிய வாய்ப்பு! தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான குளோபல் பெயார்-2023 நேற்று (15) யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் ஆரம்பமானது. குளோபல் பெயார் இன்றும் (16) இரண்டாவது நாளாக நடைபெறவுள்ளது. ஆரம்ப நிகழ்வில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் உள்ள…

    • 0 replies
    • 350 views
  2. சாரதியின் கவனக்குறைவால் விபத்து : 21 பேர் வைத்தியசாலையில் அனுமதி தெமோதர பிரதேசத்தில் பேருந்து விபத்துக்குள்ளானமைக்கு சாரதியின் கவனக்குறைவே காரணம் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். விபத்தில் 21 பேர் காயமடைந்து 11 ஆண்களும், 9 பெண்களும் என பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் ஏறக்குறைய 30 பேர் பயணித்துள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் எவரும் ஆபத்தான நிலையில் இல்லை என பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி கூறியுள்ளார். ht…

  3. இந்திய அரசாங்கம் 13 ஆவது திருத்தத்தை பரிந்துரைக்கவோ அல்லது அதனை திணிக்கவோ கூடாது – சிவாஜிலிங்கம் இந்திய அரசாங்கம் இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாக 13 ஆவது திருத்தத்தை பரிந்துரைக்கவோ அல்லது அதனை திணிக்கவோ கூடாது என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தை முன்னிட்டு, இந்திய பிரதமர் அவரிடம் வலியுறுத்த வேண்டிய விடயங்களை சுட்டிக்காட்டி அவர் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களின் சுயநிர்ணயத்தை இந்தியா அங்கீகரித்துள்ள நிலையில் நிரந்தர அரசியல் தீர்வை காண ஐ.நா.வின் கண்காணிப்புடன் பொது வாக்கெடுப்பு அவசியம் என்றும் கூறியுள்ளார். மேலும் அமெரிக்க, அவுஸ்ரேலியா, இந்…

  4. 16 JUL, 2023 | 11:07 AM யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒருவர் 'மொபைல் வீடியோ கேம்'க்கு அடிமையாகி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணையை சேர்ந்த 22 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவரே மொபைல் வீடியோ கேம் விளையாட்டில் ஆர்வமாக இருந்துவந்த நிலையில், நேற்று சனிக்கிழமை (15) தனது வீட்டில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புஷ்பராஜா எழில்நாத் (22) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பெற்றோருக்கு ஒரே மகனான இவர், வீட்டில் யாரும் இல்லாது தனிமையில் இருந்தபோது இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை தெரிய வருகிறது. இந்த மாணவர் மொபைல் வீடியோ கேம் விளையாட்டுக்கு அடிமையான நிலையில…

  5. நல்லூர் உற்சவத்தை முன்னிட்டு கல்கிசையிலிருந்து கே.கே.எஸ் வரை சிறப்பு ரயில் சேவை ! யாழ்ப்பாணம், நல்லூர் திருவிழாவை முன்னிட்டு கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கு (KKS) விசேட புகையிரத சேவை ஆகஸ்ட் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு ரயில் சுமார் மூன்று வாரங்களுக்கு இயக்கப்படும் என்றும், பொதுமக்களின் தேவையைப் பொறுத்து தொடரலாம் என்றும் ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்த்துள்ளார் . வடக்கு நோக்கிச் செல்லும் ரயிலில் 10 குளிரூட்டப்பட்ட பெட்டிகள் டிவி வசதிகளுடன் இருக்கும். டிக்கெட் விலை ரூ. 4000 இலங்கை ரயில்வே இணையத்தளத்தின் ஊடாக முன்பதிவு செய்யலாம். பயணிகளுக்கு உணவும் வழங்கப்படும் என ரயில்வே வட்டாரம் தெரிவித்துள்ளது. இதேவேளை ஆறு மாத புனரமைப்பு கா…

  6. ஜனாதிபதியின் இந்திய விஜயம் : பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என தகவல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அடுத்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையில் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான துறைமுக அபிவிருத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள், பெரும்பாலும் வடக்கு பகுதியில், திருகோணமலை எரிசக்தி மைய அபிவிருத்தி, மருந்துகள் கொள்வினவு மற்றும் பால் கைத்தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20 ஆம் திகதி அல்லது 21 ஆம் திகதி இந்தியா செல்வார் என எதிர்பார…

  7. குருந்தூர் மலையில் பௌத்தபிக்குகள் சிங்களவர்கள் அராஜகம் - இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை பாதுகாக்க தயாரில்லை என்பதற்கான எடுத்துக்காட்டு - சர்வதேச அமைப்பு 16 Jul, 2023 | 10:57 AM குருந்தூர் மலை பொங்கலை குழப்ப முயன்றவர்களை பொலிஸார் தடுத்துநிறுத்த தவறியுள்ளமை அரசிற்குள் சிங்களபௌத்ததேசியவாதம் ஆழமாக வேரூன்றியுள்ளதை புலப்படுத்துகின்றது என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான அமைப்பு பேர்ள் தெரிவித்துள்ளது. குருந்தூர் மலை ஆலயத்தில் பொங்கல் பொங்குவமை பௌத்தமதகுருமார் தலைமையில் சிங்கள கும்பலொன்று தடுக்க முயன்றமை அச்சுறுத்தியமை இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை பாதுகாக்க தயாரில்லை…

  8. பட மூலாதாரம்,MOHAMED SHAFI கட்டுரை தகவல் எழுதியவர், சுனெத் பெரேரா பதவி, பிபிசி உலக சேவை 14 ஜூலை 2023 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் மக்களுக்கு மலட்டுத்தன்மையை உருவாக்கும் மாத்திரை உள்ளதா? பெண்களின் உள்ளாடைகளில் ஒரு ஜெல் பயன்படுத்தி மலட்டுத்தன்மையை உருவாக்க முடியுமா? சிசேரியன் பிரசவத்தின் போது ஒரு மருத்துவர் பெண்களுக்கு ரகசியமாக கருத்தடை செய்வதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இவை அனைத்தும் இலங்கையில், இஸ்லாமியர்களை வெறுக்கும் பெளத்த மதத்தினரிடையே திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய்கள். பெரும்பான்மையாக உள்ள பெளத்த சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு கருத்தடை செய்வதன…

  9. “பிரிப்பதற்கு இடங்கொடோம் ஒன்றாய் நாம் பறந்திடுவோம்" எனும் தொனிப்பொருளில் யாழில் கவனயீர்ப்பு போராட்டம் Published By: DIGITAL DESK 3 15 JUL, 2023 | 02:15 PM "பிரிப்பதற்கு இடங்கொடோம் ஒன்றாய் நாம் பறந்திடுவோம்" எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டமொன்று யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக இன்று சனிக்கிழமை (15) முன்னெடுக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் துண்டுப் பிரசுர விநியோகமும் கவனயீர்ப்பு போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது, சிங்கள தமிழ் முஸ்லீம் நல்லிணக்கம் நீடுழி வாழ்க, இனவாத அரசியலுக்கு…

    • 2 replies
    • 353 views
  10. 14 JUL, 2023 | 03:35 PM இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி தொடர்பில் உதவி செய்ய இந்திய மத்திய அரசு உத்தரவாதம் தர வேண்டும். அடுத்த வாரம் இந்தியா செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், இவை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நல்லெண்ண உத்தரவாதங்கள் அளிப்பார் என நாம் நம்புகிறோம். ஜனாதிபதி ரணில் எமக்களித்த உறுதிமொழியை அவர் நிறைவேற்றுவாரென நம்புகிறோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக தமிழரின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி தொடர்பில் உதவி செய்ய இந்திய மத்திய …

  11. பாரிய கடன் சுமையை எதிர்நோக்கும் ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை எந்தவொரு முதலீட்டாளரும் முன்வரவில்லை என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை தனியார் மயமாக்கும் வகையில் உலக வங்கியின் ஆதரவுடன் புதிய திட்டத்தை நிதியமைச்சு தயாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அரச வங்கிகள், பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு நூறு கோடி அமெரிக்க டொலர்கள் கடன்களை வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. கடன் தொகை இதன்படி, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய கடன் தொகை சுமார் முப்பது பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் அறியப்படுகின…

  12. ''ஊடக அறிக்கைகளில் தமிழ் அரசியல்வாதிகள் சர்வதேச விசாரணை வேண்டும் என கேட்கிறார்கள்'' என்று தற்போதைய பாதுகாப்பு செயலரும் ஓய்வு பெற்ற இராணுவத் தளபதியுமான கமால் குணரட்ன கூறி வருவதாக வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இன்று (14.07.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில் கூறிள்ளதாவது, கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு சர்வதேச நிபுணர்கள் முன்னிலையில் நடந்தால் இறுதிப் போரில் முக்கிய தளபதியாக வன்னிப் போர்க்களத்தில் நின்ற கமால் குணரட்ன மாட்டிக் கொள்ள வேண்டி வரும் என்ற பயத்தினால் உளற ஆரம்பித்துள்ளார். நம்பத் தயார் இல்லை தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக அரச படைகளினாலும் ஆ…

    • 6 replies
    • 502 views
  13. 2030ஆம் ஆண்டில் சர்வதேச தரத்திலான மாணவர்களை உருவாக்கும் வகையிலும், புத்தாக்க அடிப்படையிலும், எதிர்காலப் பிரச்சினைகளை அடையாளம் கண்டு தூரநோக்குடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் மாணவர்களை உருவாக்கும் வகையிலும் இலங்கையின் பல்கலைக்கழக கல்விமுறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். சர்வதேச தரத்திற்கு உள்ளூர் பல்கலைக்கழகங்களை தர முயர்த்த வேண்டும் என்பதுடன், 2030ஆம் ஆண்டளவில் பிராந்தியத்தில் சிறந்த பல்கலைக்கழகங்களாக இலங்கைப் பல்கலைக்கழகங்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கான கல்வி மறுசீரமைப்பு, கொள்கை உருவாக்கம் குறித்து பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்…

  14. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி, எதிர்வரும் 19 ஆம் 20 ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பு ஒன்று நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.ஸ்ரீசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் பட்டமளிப்பு விழாக் குழுவின் தலைவரும், கலைப் பீடாதிபதியுமான பேராசிரியர் சி.ரகுராம், பல்கலைக் கழகப் பதிவாளர் வி.காண்டீபன், கல்வி விவகாரங்கள் மற்றும் வெளியீட்டுக் கிளையின் உதவிப் பதிவாளர் எஸ்.கே. பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பட்டமளிப்பு விழாக் குழுத் தலைவர் பேராசிரியர் சி.ரகுராம் பட்டமளிப்பு விழா தொடர்பில் விளக்கமளித்தார். பல்கலைக்கழக…

  15. கறுப்பு ஜூலை கலவரத்தை நினைவுகூர்ந்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் Published By: NANTHINI 15 JUL, 2023 | 10:22 AM கறுப்பு ஜூலை கலவரத்தை நினைவுகூர்ந்தும் ஒற்றுமையை வலியுறுத்தியும் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை (14) மாலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சோசலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் மூவின மக்களின் பங்குபற்றுதலுடன் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் ஈடுபட்டவர்கள் 'இனியும் கலவரம் வேண்டாம்', 'பிரிவினைகள் வேண்டாம்', 'சமூக ஒற்றுமையை குலைக்காதே', 'ஆட்சியாளர்களே இனவாதத்தினை தூண்டாதே', 'யாழ் நூலகத்தை எரித்தது இனவாதமே', 'நாடு பூராகவும் ஜூலை கலவரத்தை திட்டமிட்டு நடத்திய…

    • 0 replies
    • 214 views
  16. கொழும்பு – காங்கேசன்துறை நேரடி ரயில் சேவை 2024 இல் !! கொழும்பு கோட்டையில் இருந்து யாழ். காங்கேசன்துறைக்கான நேரடி ரயில் சேவையை, 2024 ஆண்டு ஜனவரி மாதத்திலேயே மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சீரமைப்புப் பணிகளால் இச்சேவை இரத்து செய்யப்பட்டது. இதனால் கடந்த ஜனவரி 5ம் திகதி முதல் கொழும்பு கோட்டைக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான நேரடி ரயில் சேவை அநுராதபுரம் தொடரூந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, மஹவ – ஓமந்தை வரையிலான ரயில் மார்க்கத்தின் சீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதனை, எதிர்வரும் ஜுன் …

  17. இலங்கையைச் சேர்ந்த மேலும் 8 பேர் தமிழகத்தில் தஞ்சம் Published By: DIGITAL DESK 3 15 JUL, 2023 | 01:15 PM இலங்கையைச் சேர்ந்த மேலும் 8 பேர் இன்று சனிக்கிழமை (15) தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு ஆண், இரண்டு பெண்கள், குழந்தைகள் என இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் யாழ்ப்பாணம் கடற்கரையில் இருந்து புகலிடம் தேடி அகதிகளாக நேற்றிரவு சுமார் 8 மணியளவில் பைபர் படகில் புறப்பட்டு இன்றைய தினம் அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல்முனையை சென்றடைந்தனர். தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இலங்கை தமிழர்களை மீட்டு ராமேஸ்வரம் மரைன் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகி…

    • 0 replies
    • 235 views
  18. 35 இலட்சம் ரூபாய் செலவில் வீதியைப் புனரமைத்துக் கொடுத்த நபர் பெயர் குறிப்பிட விரும்பாத நபரொருவர் யாழில் சுமார் 35 இலட்சம் ரூபாய் செலவில் 2 கிலோமீற்றர் வரையிலான வீதியைப் புனரமைத்துக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கிலிருந்து கடற்கரையில் உள்ள நாலாம் பனை பிள்ளையார் ஆலயத்திற்க்கு செல்கின்ற வீதியும், அங்கிருந்து கடற்கரைக்கு செல்கின்ற வீதியுமே இவ்வாறு புனரமைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் முந்நூறு மீற்றர் வரை, 5 அடி வரை உயரமாக மண் அரண் அமைக்கப்பட்டு அதற்கு மேலாகக் கிரவல் இடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது குறித்த நபர் அக் கடற்கரை வீதியில் 100 க்கு…

  19. பேருந்தில் செல்லும் போது பாலியல் துன்புறுத்தல் : இராணுவ கோப்ரல் அதிரடியாக கைது துருக்கியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை, பேருந்தில் செல்லும் போது பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் இராணுவ கோப்ரல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தளை மெல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இடமபெற்றபோது பாகிஸ்தான் இளைஞர் ஒருவரும் நடத்துனரும் அவரை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சந்தேகநபர் இன்று தம்புள்ளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். https://athavannews.com/2023/1338918 @குமாரசாமி, @Kandiah57, @noc…

  20. யாழில் தொழில் பயிற்சி நிலையம் வட மாகாணத்திற்கான வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்பினைத் தேடிச் செல்வோருக்கான தொழிற்பயிற்சி நிலையம், யாழ் மாவட்டத்தில் நிறுவப்படவுள்ளதாகத் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” யாழ்மாவட்டத்தில் நிறுவப்படவுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோருக்கான தொழிற்பயிற்சி நிலையம் அமைப்பதற்கான காணியைப் பெற்றுத்தருமாறு, நான் யாழ் மாவட்ட செயலாளரைச் சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் அவர் …

  21. Published By: DIGITAL DESK 3 15 JUL, 2023 | 09:02 AM யாழ். நெடுந்தீவைச் சூழ பத்து கடற்படை முகாம்கள் உள்ளது. அதைவிட இலங்கையின் மீன்பிடி அமைச்சரும் இருக்கின்றார், ஆனால் உள்ளூர் இழுவைப்படகுகளை கூட கட்டுப்படுத்த முடியவில்லை. இந்திய இழுவைப்படகளை கட்டுப்படுத்த நாங்கள் கூட்டாக இந்தியாவில் போய் பேசுவோம் என்று மக்களிடம் தவறான கருத்துக்களை கூறி மக்களை பிழையாக வழிநடத்த வேண்டாம், என அமைச்சர் டக்ளஸ் தேவானாந்திற்கு பாராளமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பதிலளித்துள்ளார். நெடுந்தீவு பிரதேசத்துக்கான பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (14) பகல் 9.30 மணிக்கு நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்றுள்ளது. இக…

  22. இலங்கையில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! இலங்கையில் ஒவ்வொரு மூன்று மணித்தியாலத்திற்கும் ஒருமுறை, விபத்துகள் காரணமாக, நான்கு பேர் வரையில் மரணிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ வேலைத்திட்டத்தின் முகாமையாளர், விசேட வைத்தியர் சமித சிறிதுங்க இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது நாளொன்றுக்கு, 32 முதல் 35 பேர்வரையில், விபத்துகளால் மரணிக்கின்றன நிலையில் வாகன விபத்துகள், தற்கொலைகள், நீரில் மூழ்குதல், வீழ்தல் மற்றும் மின்சாரத் தாக்கத்திற்கு இலக்காகுதல் உள்ளிட்ட காரணிகளால் குறித்த மரணங்கள் சம்பவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது, மேலும் இது மிகவும் மோசமான நிலைமையாகும் எனவே, இதனைத் தடுப்பத…

  23. வைத்தியசாலைக் கட்டமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்திற்கொண்டு அமைச்சரவையைக் கூட்டி உடனடியாக அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் ஒன்றியம் அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்துள்ளது. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அந்த ஒன்றியத்தின் தலைவரான வைத்தியர் ருக்ஷான் பெல்லன இந்த யோசனையை முன்வைத்துள்ளார். கெனியுலா(Cannula) எனப்படும் ஊசி மருந்துகளை ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணம் ஒன்றின் பாகம் விஷமானதால் ஏற்பட்ட தாக்கநிலையால் பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்ற மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் முகாமைத்துவ உதவியாளர் (வயது 31) ஒருவர் மரணித்த சம்பவம் பதிவாகியுள்ளது. கடந்த சில தினங்களாக மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங…

  24. இந்தியாவில் இருந்து எண்ணெய்க்குழாய் அமைப்பது குறித்து விவாதம்! இந்தியாவில் இருந்து இலங்கைக்கு எண்ணெய்க்குழாய் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடல் நேற்று (புதன்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதுடன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார். குறித்த விவாதமானது நாட்டில் பெட்ரோலியப் பொருட்களின் விநியோகத்தை விரைவுபடுத்துவதும், மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பதும் இதன் முதன்மை நோக்கமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1339088

  25. பேதங்களை மறந்து ஒன்றிணைந்தால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் : அமைச்சர் மனுஷ! இன மத கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மாத்திரமே நாம் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் முத்தவெளிப் பகுதியில் நாளை ஆரம்பிக்கப்பட உள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பில் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “க்லோகல் பெயார் 2023′ கண்காட்சியின் முதலாவது வேலைத்திட்டத்தை நாங்கள் யாழில் ஆரம்பிக்கி…

    • 6 replies
    • 270 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.