Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: DIGITAL DESK 3 08 MAY, 2023 | 04:27 PM மட்டக்களப்பு கிரான் பிரதேசெயலாளர் பிரிவின் முறுத்தானையில் சனிக்கிழமை மாலை (6) வயோதிபர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சித்தாண்டியைச் சேர்ந்த க.கிருஷ்ணப்பிள்ளை வயது (74) என்ற முதியவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேளை நாற்பதாவது வில் முறுத்தானையில் உள்ள தமது வயலில் உள்ள வாடியில் அயலவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது கத்தியுடன் வந்த நபர் ஒருவர் முதியவரை தலையில் வெட்டி காயப்படுத்தி விட்டு, தப்பி ஓடியுள்ளதாக முதியவரின் மகன் தகவல் தெரிவித்தார். காயமடைந்தவரினை சிகிச்சைக்காக வைத்தியசால…

  2. Published By: DIGITAL DESK 3 08 MAY, 2023 | 09:43 AM (இராஜதுரை ஹஷான்) வடக்கு, கிழக்கு ஆகிய கடல் எல்லை பகுதிக்குள் காற்றின் வேகம் பலமாக காணப்படுவதால் மீனவர்கள் இன்று திங்கட்கிழமை மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளதுடன், இந்த கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும்,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். அத்துடன் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்,பொலன்னறுவை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளையில…

  3. Published By: VISHNU 08 MAY, 2023 | 02:34 PM மன்னார் ரோட்டரி கழகத்தின் அனுசரணையில் மன்னார் ஊடகவியலாளர் எஸ். ஜெகனின் இலக்கிய நூல்களின் ஆய்வில் தலை மன்னார் ராமேஸ்வரம் இடையில் கப்பல் போக்குவரத்தை விரைவுபடுத்த கோரியும் பண்டைய காலத்தில் மன்னார் மாவட்டம் எவ்வாறு சிறப்புடன் இருந்தது என்பதை இலக்கிய நூல்கள் மூலம் ஆய்வு செய்தும் உருவாக்கப்பட்ட காணொளி அடங்கிய இறுவெட்டு திங்கட்கிழமை (8) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெலிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ் இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஆகியோர…

  4. நாளை முதல் முள்ளிவாய்க்கால் கஞ்சி : யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் ஏற்பாடு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து நாளை முதல் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது. இனவழிப்புக்கு உள்ளான இனத்தின் வரலாற்றினையும் வலிகளையும் இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாடாக இதனை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர். 1948ம் ஆண்டு முதல் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக 1958, 1976, 1983 ஆண்டுகளில் இனப்படுகொலைக்கு உள்ளான தமிழினம், ஈழப்போர் ஆரம்பிக்…

  5. இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமி : 10 நோயாளர்கள் கண்பார்வை இழக்க காரணம் என்கின்றார் வைத்தியர் !! கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட 10 நோயாளர்களுக்கு பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் நுவரெலியாவில் பதிவாகியுள்ளது. இவர்கள், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை செய்துகொண்டவர்கள் என தெரியவருகின்றது. கண் சத்திரசிகிச்சை செய்துகொண்ட குறித்த 10 நோயாளர்கள் உரிய பார்வை கிடைக்காமல் தொடர்ந்து வைத்தியசாலையில் தாங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல் சத்திரசிகிச்சைக்குள்ளான 50 வயதுக்கும் மேற்பட்ட 10 நோயாளர்களே இவ்வாறு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ள…

  6. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் – அரசாங்கத்திற்கு நிபந்தனை விதித்தது மொட்டு கட்சி! பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் பயங்கரவாதத்தின் பரந்த வரையறையை சுருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது. மேலும் பொலிஸாருக்கு தடுப்பு காவல் உத்தரவுகளை வழங்குவதற்கான அதிகாரங்களை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதன் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்ள பயங்கரவாதத்தின் பரந்த வரையறை பாதகமான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும். அதன் மூலம் ஒரு சாதாரண எதிர்ப்புச் செயலைக் கூட பயங்கரவாதச் செயல் என வரையறுப்பது மக்களுக்கும் ஜனநாயகக் கட்டமைப…

  7. சிறுவர்களை தப்பிக்க வைக்கும் காவலாளி – நடவடிக்கை எடுக்காத பொலிஸார்? அச்சுவேலியிலுள்ள சிறுவர் நன்னடத்தை பாடசாலையிலுள்ள சிறுவர்களை பணத்தைப் பெற்று அங்குள்ள காவலாளி தப்பிக்க வைத்ததாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. வெளி மாகாணங்களைச் சேர்ந்த 13 மற்றும் 14 வயதுச் சிறுவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நன்னடத்தைப் பாடசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளமை தொடர்பில், அச்சுவேலி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்றைய தினமே வவுனியா பேருந்து நிலையத்தில் வைத்து வவுனியா பொலிஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் நீதிமன்ற விசாரணைக…

  8. Published By: VISHNU 08 MAY, 2023 | 11:53 AM வடக்கின் பல பகுதிகளில் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு புதிதாகக் கட்டப்படும் புத்த கோயில்கள் தமிழர்களை அவர்களது தாயகப் பிரதேசத்திலிருந்தும் விரட்டியடிப்பதற்கான முயற்சியா என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இலங்கை சுதந்திரம் அடைந்தபொழுது டொனமூர் அரசியல் சட்டம் அமுலில் இருந்தது. சிறுபான்மை இனத்திற்கு எதிராக எந்த சட்டமும் கொண்டுவரக்கூடாது என்று அந்த அரசியலமைப்பில் 29ஆம் சரத்தின்கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்த 29ஆவது சரத்து இருக…

  9. எஸ்.ஐ.எம்.நிப்ராஸ் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் கல்குடா தொகுதியின் கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இடையிலான சந்திப்பு கடந்த 05.05.2023 இடம்பெற்றது இதன் போது கருத்து தெரிவித்த இக்கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் M.ஜவாத் அவர்கள் அண்மையில் பொது உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்ட பிரதேச செயலாளர்களின் இடமாற்றம் தொடர்பான விபரங்களில் கல்குடா தொகுதி உள்ள முஸ்லிம்கள் செறிந்து வாழும் கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் புதிதாக வெளியிடப்பட்ட இடமாற்ற விபரத்தில் தமிழ் பிரதேச செயலாளர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது இங்கு வாழும் மக்களின் இருப்பிற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் செயற்பாடாகும். தகுதிவாய்ந்த எத்தனையோ மு…

    • 2 replies
    • 364 views
  10. Published By: VISHNU 07 MAY, 2023 | 07:05 PM சிறிதளவு பணம் அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக உங்கள் காணிகளை மாற்று சமூகத்தினருக்கு விற்க வேண்டாமென, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; சில காலத்தின் முன்னர் வரை இங்கு தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள். தமிழ் பௌத்த சின்னங்களை ஆக்கிரமிப்பதற்காகத்தான் பௌத்த விகாரைகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. பௌத்தர்களே இல்லாத இடங்களில் அவை கட்டப்படுகின்றன. விகாரைகளை கட்டி, அதை பராமரிக்க ம…

  11. Published By: NANTHINI 07 MAY, 2023 | 04:06 PM (எம்.நியூட்டன்) யாழ். வண்ணார்பண்ணை பகுதியில் மின்சாரம் தாக்கி க.பொ.த. உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (7) அதிகாலை 1.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் கண்ணதாசன் இராகுலன் (வயது 18) என்ற மாணவரே உயிரிழந்துள்ளார். வீட்டில் வளர்க்கப்படும் ஆடொன்று குட்டி ஈன்றதனால், குறித்த மாணவர் அதனை வேறோர் இடத்துக்கு மாற்ற முற்பட்டுள்ளார். அப்போது அருகில் இருந்த பலா மரத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்குமிழியில் ஏற்பட்ட மின் ஒழுக்கினால் மாணவர்…

  12. Published By: NANTHINI 07 MAY, 2023 | 04:57 PM (எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டில் இன்புலுவன்ஸா வைரஸ் பரவும் நிலை அதிகரித்துள்ளது. இதனால், குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருக்கமானவர்கள் யாருக்காவது காய்ச்சல் பரவிவருவதாக இருந்தால் அது தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டும். அவர்கள் வீட்டுக்குள்ளேயே முகக்கவசம் அணிந்திருப்பது பாதுகாப்பானதாகும் என கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார். நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையை தொடர்ந்து பரவிவரும் வைரஸ் காய்ச்சல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் …

  13. 2023 ஜனவரி முதல் மார்ச் வரை இலங்கையில் இருந்து சீனாவின் இறக்குமதிகள் 93.74 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளன, சீனா 93.74 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பொருட்களை இலங்கையிடமிருந்து இறக்குமதி செய்துள்ளதுடன் இது 3.9 சதவீத வீழ்ச்சியாகும். எனினும் சீனா 759.80 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஏற்றுமதிகளை குறித்த மூன்று மாதங்களில் இலங்கைக்கு மேற்கொண்டுள்ளது. இதில் மோட்டார் வாகன உதிரிபாகங்கள் மற்றும் மின்சாரப்பொருட்களும் அடங்குகின்றன. சீனாவுடனான இந்த ஏற்றத்தாழ்வு பல ஆண்டுகளாக நிலவுகின்றபோதும் இன்னும் அது நிவர்த்திக்கப்படவில்லை. அதேநேரம் சீனாவின் இந்த வர்த்தக உறவுடன் ஒப்பிடும் போது, அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு வர்த்தக…

  14. விமானத்தின் பாதுகாப்பு அதிகாரியால் தாமதமான விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் சென்னை நோக்கிப் புறப்படவிருந்த விமானத்தின் பாதுகாப்பு அதிகாரி, தோட்டாக்கள் நிரப்பப்பட்ட தமது துப்பாக்கியுடன் விமான நிலைய பயணிகள் போக்குவரத்து முனையத்துக்கு சென்ற போது தடுத்து நிறுத்தப்பட்டதால் விமான பயணம் சுமார் 4 மணித்தியாலங்கள் தாமதமடைந்தது. விமானம், பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு விமானத்திலும் இதுபோன்ற பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு அதிகாரி தமது துப்பாக்கியை விமானத்திலிருந்து வெளியே கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன்…

  15. ஈரானில் இருந்து இலங்கைக்கு 1.8 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் ! ஈரான் குடியரசு 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட புற்றுநோய் மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்துகளை இலங்கை அரசாங்கத்திற்கு சுகாதார அமைச்சின் ஊடாக நன்கொடையாக வழங்கியுள்ளது. ஈரானிய தூதுவர் ஹாசிம் அஷிட் இந்த மருந்துப் பொருட்களை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். இந்த நன்கொடையின் கீழ், நாட்டில் புற்றுநோய், இதய நோய், தோல் நோய், வைரஸ் தொற்று, உயர் இரத்த அழுத்தம், பார்கின்சன் போன்ற பல நோய்களுக்கான மருந்துகள் உட்பட பல அத்தியாவசிய மருந்து…

    • 0 replies
    • 364 views
  16. இலங்கைக்கு ஜப்பான் ஆதரவு! இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. இருதரப்பு கடன் வழங்குனர்களை ஒருங்கிணைத்து இந்தக் கடன் மறுசீரமைப்புச் செயல்முறையை மேற்கொள்ள எதிர் பார்ப்பதாக ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி சுஞ்சி சுட்டிக்காட்டுகிறார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் சபையின் 56 ஆவது வருடாந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்கால கடன் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு கடன் தரவுகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியத்தை மேம்படுத்துவது அவசியம் என்று ஜப்பானிய நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்த நாட்டில் மேற்கொள்ளப்படும் கடன்…

    • 0 replies
    • 254 views
  17. இலங்கையின் வறுமை வீதம் இரட்டிப்பாகியுள்ளது இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி, வறுமை வீதம் 13.1 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக இரட்டிப்பாக்கியுள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது. அத்துடன் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்படும் பல அபாயங்கள் காரணமாக அடுத்த சில வருடங்களில் அது 25 சதவீதத்திற்கு மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. பொருளதார நெருக்கடியானது வறுமைக் குறைப்பு மற்றும் மனித மூலதன மேம்பாடு ஆகியவற்றில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் நாட்டின் பொருளாதாரம் இந்த ஆண்டும் அதற்கு அப்பாலும் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ளும் என்றும் உலக வங்கி கணித்துள்ளது, இதன்படி நாட்டின் பொருளாதாரம் இந்த ஆண்டு 4.3 சதவீதம்…

  18. கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்காவிடின் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பை புறக்கணிப்போம் May 7, 2023 ஐனாதிபதியுடனான சந்திப்பினை கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்காவிட்டால், வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பை புறக்கணிப்பர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகள் கூட்டாக அறிவித்தன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் இதனை தெரிவித்தனர். …

  19. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் தனி பல்கலைக்கழகமாக மாற்றப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தை தனி பல்கலைக்கழகமாக மாற்றித் தரப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.குறித்த வளாகம் புலிகளின் பயன்பாட்டில் இருந்த நிலையில் இராணுவம் கிளிநொச்சியை விடுவித்த பின்னர் தமது முகாமாக மாற்றிக்கொண்டனர். அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் கதைத்து அதனை பல்கலைக்கழகத்திற்கு பெற்றுக்கொடுத்துள்ளோம்.அங்கு நான்கைந்து வளாகங்கள் வந்துள்ளது. கிளிநொச்சி வளாகத்தை கிளிநொச்சி பல்கலைக்கழகமாக மாற்றித் தருவோம் என கிளிநொச்சி பொன்னகர் கிராம…

  20. ஆதிவாசிகள் சமூகத்தின் பிரச்சினைகள் குறித்து சாணக்கியன் கலந்துரையாடல்! மதுரங்கேணிக்குளம் பிரதேசத்திற்கு விஜயம் செய்த தமிழ்த் தரிசியாக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அங்குள்ள ஆதிவாசிகள் சமூகத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். எல்லைக் கிராமங்களில் தமிழரசுக் கட்சியின் வட்டாரக் கிளைகளை அமைப்பது தொடர்பாக சாணக்கியன் உள்ளிட்ட குழுவினர், குடும்பிமலை, இரணைக்குளம், மருதங்கேணிக்குளம், பனிச்சங்குளம் ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்திருந்தனர். இதன்போது மருதங்கேணிக்குளம் பிரதேசத்திலுள்ள ஆதிவாசிகள் சமூகத்தினரின் தலைவரைச் சந்தித்துக் கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்ப…

    • 12 replies
    • 972 views
  21. பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விடுத்த கோரிக்கை! மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் பங்கேற்புடன் லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர். இதன் போது மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கு வாழ்த்துகளை கூறிய ஜனாதிபதி, அவருடன் சுமூகமாக கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு, இச் சந்திப்பில் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் கலந்துகொண்டார். இம்மாநாட்டில் இளையோரின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலான கல்வி மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு பொதுநலவாய அமைப்பு விரிவான திட்டங்களை முன்னெடுக்க வேண்…

  22. 07 MAY, 2023 | 08:02 AM முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான பசில் ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு ஞாயிற்றுக்கிழமை (07) காலை புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வெளிநாட்டு விஜயத்தில் பசில் ராஜபக்ஷவுடன் அவரது மனைவியும் பயணமாகியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (07) அதிகாலை 03.15 மணியளவில் எமிரேட்ஸுக்கு சொந்தமான EK-649 என்ற விமானத்தில் இருவரும் துபாய்க்கு புறப்பட்டனர். https://www.virakesari.lk/article/154676

  23. Published By: NANTHINI 07 MAY, 2023 | 11:39 AM கட்டுநாயக்கவிலிருந்து சென்னை நோக்கிப் புறப்படவிருந்த விமானம் ஒன்றின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் (ஸ்கை மார்ஷல்) துப்பாக்கியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தின் போக்குவரத்துப் பயணிகள் முனையத்துக்கு வந்தபோது, கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் அவரது துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. இதன் காரணமாக விமானம் சுமார் நான்கு மணி நேரம் தாமதமாக புறப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு விமானத்திலும் விமானம், பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்புக்காக ஒரு பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்டுள்ள துப்பாக்கியை பா…

  24. சமஷ்டி அடிப்படையில் பேச்சுக்கு தயார் என ஜனாதிபதி அறிவிக்க வேண்டும் – கஜேந்திரகுமார் நிபந்தனை அதிகாரப்பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை சமஷ்டி அடிப்படையில் முன்னெடுப்பதற்கு தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிக்க வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். குறித்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டால் அவருடன் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கு தயராக உள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார். வடக்கு தமிழ் எம்.பிக்களுடன் அதிகாரப்பகிர்வு, அபிவிருத்தி உள்ளிட்ட வடக்கு மக்கள் சார்ந்த பிரச்சினைகள் குறித்து எதிர்வரும் 11ஆம் திகதி முதல் பேச்சு நடத்த ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், அந்த அழைப்ப…

  25. வெடுக்குநாறி மலை ஆலயத்தில் சரத் வீரசேகர தலைமையிலான குழு …! முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தலைமையில் சிங்கள மக்கள் சிலர் தற்போது வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளனர். வவுனியா, ஒலுமடு வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் சிவலிங்கம் உள்ளிட்ட விக்கிரகங்கள் உடைத்து அழிக்கப்பட்டிருந்தன. இதனை அடுத்து கடந்த ஏப்ரல் 27ம் திகதி வவுனியா வெடுக்குநாறி மலையிலிருந்து அகற்றப்பட்ட சிலைகளை மீண்டும் அங்கு வைக்குமாறு வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது மேலும் பூஜை வழிபாடுகளுக்கு எவ்வித இடையூறுகளையும் விளைவிக்காதிருப்பதற்கும், அங்கு பாதுகாப்பு மேற்பார்வைகளை மாத்திரம் மேற்கொள்வதற்கும் பொலி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.