ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143429 topics in this forum
-
யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் உள்ள படைச் சோதனைச் சாவடியில் ஆண் படையினருடன் இணைந்து பணியில் ஈடுபட்ட பெண்படைச் சிப்பாய் ஒருவரை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி விட்டு நஞ்சூட்டிக் கொலை செய்துள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற ஊர்காவற்துறை நீதவான், பிரோத பிரிசோதனைக்காக கொழும்பிற்கு உடலை அனுப்புமாறு பணித்ததுடன், சந்தேகத்திற்குரிய படையினர் மூவரையும் கைது செய்யுமாறும் பொலிசார் உத்தரவிட்டுள்ளார் http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/
-
- 9 replies
- 3.2k views
-
-
படையினர் புலிகள் கடும் மோதல் சின்னப்பரந்தன் இராணுவத்தினர் வசம் - இராணுவ பேச்சாளர் [ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2008, 06:35.49 PM GMT +05:30 ] கிளிநொச்சி பரந்தன் மேற்குப் பகுதியில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இம்மோதல்களில் 12 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார். மோதல்களை அடுத்து பரந்தன் பிரதேசத்திலிருந்து 6 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள சின்னப்பரந்தன் பகுதி முழுவதும் படையினரின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது இன்…
-
- 6 replies
- 2.1k views
-
-
கிளிநொச்சியில் சிறிலங்கா இராணுவம் பெரும் மரணப்பொறி ஒன்றுக்குள் அகப்பட்டுக்கொண்டுள்ளது. அங்கு முன்னேறிவருகின்ற இராணுவத்திற்கு என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத்தெரியும். இவ்வாறு வருகின்ற படைகள் முற்றாக அழிக்கப்படும்பொழுதான் முழுத்தேசமும் விடுவிக்கப்படும். இவ்வாறு நேற்றுக் காலை தருமபுரத்தில் முன்னாள் மாணவர் அமைப்புப் பொறுப்பாளர் மேஜர் முரளி அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் தெரிவித்துள்ளார். அவர்மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய விடுதலைப்போராட்ட வரலாற்றில் மேஜர் முரளி ஆற்றிய பங்கு என்ன என்பது எல்லோரும் அறிந்தவிடயமாகும். அவர் லண்டனுக்குச் சென்று பின்பு அங்கிருந்து எமது இயக்கத்திற்கு வந்த…
-
- 1 reply
- 1.9k views
-
-
உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைய பெற்றோல் விலையை 100 ரூபாவாகக் குறைப்பதற்கு அரசாங்கத்துக்கு இரண்டு நாட்கள் கால அவகாசம் வழங்குவதாக ஜே.வி.பி. அறிவித்துள்ளது. எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் பெற்றோல் விலையை அரசாங்கம் குறைக்கவில்லையாயின் கொழும்பை மையமாகக் கொண்டு மக்களை இணைத்து பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க கூறினார். “உயர்நீதிமன்றம் தன்னிச்சையாக பெற்றோல் விலையைக் குறைக்குமாறு தீர்ப்பு வழங்கவில்லை. நீதியமைச்சின் செயலாளர் நீதிமன்றத்திடம் சமர்ப்பித்த விலை சூத்திரத்துக்கமையவே நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியது. நீதியமைச்சர் என்ற வகையில் பெற்றோலின் உண்ம…
-
- 4 replies
- 3k views
-
-
வெட்டுக்காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மன்னாரில் மீட்பு வீரகேசரி இணையம் 12/24/2008 11:36:23 AM - மன்னார் தாழ்வுப்பாடு பிரதான வீதியின் கீரிப் பகுதியில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். பொலிஸாரினால் மன்னார் வைத்திய சாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து அடையாளம் காணப்பட்டது. வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட இச்சடலம் இராமசாமி (வயது 52) எனும் குடும்பஸ்தருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலத்தை பார்வையிட்ட மன்னார் மாவட்ட நீதவான் எ.யூட்சன் பிரேத பரிசோதனையின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.இதனையடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
- 1 reply
- 746 views
-
-
போர் முகம் திகதி: 24.12.2008 // தமிழீழம் // [] அ.லோகீசன் "இரவு 2.30 மணிக்கு தொடங்கின சண்டையில ஆமிக்காறங்கள் எங்களின்ர பொசிசனுகள் கொஞ்சத்தைப் பிடிச்சிட்டாங்கள். ஆமிக்காறங்களிட்ட பிடிபட்ட பொசிசனுகளையும் பண்டையும் பிடிக்கிறதுக்காக நாங்கள் சண்டைக்கு வந்திட்டம். விடிய 5.00 மணிக்கு தம்பியவ நீங்கள் உடனையும் இறங்குங்கோ' எண்டுற கட்டளை வந்திட்டுது. சண்டை துவங்கினதில இருந்து எப்பதான் எங்களுக்குச் சந்தர்ப்பம் வரப்போகுதோ தெரியேல்ல எண்டு ஏங்கிக்கொண்டிருந்த எங்களுக்கு இந்தக் கட்டளை வந்தது தான் உடனையுமே நாங்கள் எல்லோரும் குறிப்பிட்ட இடத்துக்குப் போய்ச் சேந்திட்டம்" என்ற முறியடிப்பு அணிப் போராளி கீரன் புன்சிரிப்புடன் சிங்களப் படைகளைக் கொன்று குவித்த தங்களது சண்டைப் பதிவுகளை வரி…
-
- 2 replies
- 1.6k views
-
-
படைத்தரப்பைச் சேர்ந்தவரை மீட்க புலிகளிடம் பேச்சுவார்த்தை: சிறிலங்கா இராணுவப் பேச்சாளளர் கிளாலி பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (16.12.08) இடம்பெற்ற மோதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகளால் பிடிக்கப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்தவர் தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையினை அரசாங்கம் மேற்கொள்ளும் என சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் புலிகள் வசம் உள்ளவர் படைத்தரப்பைச் சேர்ந்தவர். அவரை விடுவிப்பது தொடர்பான முயற்சிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். விடுதலைப் புலிகள் வசம் படைத்தரப்பைச் சேர்ந்தவர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் நாம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங…
-
- 3 replies
- 1.9k views
-
-
கிளிநொச்சி பிரதேசத்தில் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுக்கெதிராக தமிழீழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் முறியடிப்பு தாக்குதலின்போது தமிழீழ விடுதலைப்புலிகளினால் பெருமளவிலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் மோதல் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஏ.கே.எல்.எம்.ஜி-01,ஆர்.பி.ஜி-04,தாங்கி எதிர்ப்பு துப்பாக்கி-01,ரி-56ரக துப்பாக்கி-05,7.62மில்லிமீற்றர் தோட்டாக்கள்-29,300,லிங்கட் தோட்டாக்கள்-2175,ஆர்.பி.ஜி செல்கள்-27,கிரணைட்செலுத்திகள் -22மற்றும் கிரணைட்-36உட்பட பெருமளவு ஆயுதங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேநேரம் புளிக்குளம் மற்றும் குஞ்சுப்பரந்தன் பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமான மோதல்கள் இன்று செவ்வ…
-
- 17 replies
- 5.8k views
- 1 follower
-
-
படைப் பற்றாக்குறையால் பெண் படைச் சிப்பாய்கள் வன்னிக் களமுனைக்கு திகதி: 24.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] களமுனைகளில் படையினர் பெரும் இழப்புக்களை தொடர்ந்து சந்தித்து வரும் நிலையில், பிடித்த நிலங்களையும் தக்க வைப்பதற்கு சிறிலங்கா இராணுவம் திண்டாடுகின்றது. தற்போது சிறுவர்களையும் களமுனைக்கு போரிட அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில் யாழ் குடாநாட்டில் உள்ள சோதனைச் சாவடிகளில் பெண்களை சோதனைக்குட்படுத்தி வந்த பெண் படைச் சிப்பாய்களில் 75 பேரை சிறிலங்காப் படைத்துறையினர் வலுக்கட்டாயமாக வன்னிக் களமுனைகளுக்கு அனுப்பியுள்ளனர். படையினருக்கு ஏற்பட்டுவரும் ஆளணி இழப்பை ஈடுசெய்யும் முகமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகின்றது. இதேவேளை, யாழ்ப்பாணம் வன்னிக் களமுனை…
-
- 1 reply
- 2.9k views
-
-
புத்தாண்டு தினத்தன்று கொழும்பில் பாரிய அழிவுகளை ஏற்படுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருப்பதாகப் வெளிநாட்டுப் புலனாய்வுத் துறையொன்று இலங்கை அரசுக்கு அறிவித்திருப்பதாகத் தெரிய வருகிறது. கொழும்பின் முக்கிய பகுதிகளில் அம்பியுலன்ஸ் வண்டிகளைக் கடத்தி அதன் மூலம் பாதுகாப்புப் பிரதேசங்களுக்குள் நுழைந்து பாரிய தாக்குதல்களை நடத்தவும் தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டம் வகுத்துள்ளமை குறித்தும் பாதுகாப்பு அமைச்சுக்கு இந்த வெளிநாட்டுப் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகின்றது. http://www.tamilseythi.com/srilanka/colomb...2008-12-24.html -வாணான்
-
- 2 replies
- 2.3k views
-
-
சிறிலங்கா அரசுக்கு பெருமளவில் இராணுவ ஆதரவு தருவது இந்தியாவே என்று பெருமளவிலான யாழ்கள உறவுகள் நம்புகிறார்கள். http://www.yarl.com/forum3/index.php?showtopic=48599 இந்த நிலையில் இந்திய ஆதரவு தமிழீழ விடுதலைக்கு கிடைப்பது பெருமளவு பயனுள்ளதாக இருக்கும்.
-
- 16 replies
- 2.8k views
-
-
"எப்போதெல்லாம் நாங்கள் அரசியலில் இறங்கும் நோக்குடன் வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு அடி வைக்கிறோமோ, அப்போதெல்லாம் பாரதிய ஜனதா கட்சி போபர்ஸ் பீரங்கி பேர வழக்கைப் பற்றிப் பேசுவது வாடிக்கையாகிவிட்டது" என்று ராகுல் காந்தி ஒருமுறையல்ல பலமுறை கூறியுள்ளார். அப்படி பாரதிய ஜனதா கட்சி போபர்ஸ் ஆயதத்தை எடுத்தபோதெல்லாம் அவர்களும் பின்வாங்கிக் கொண்டு, தீவிர அரசியலில் ஈடுபடும் திட்டத்தை பலமுறை தள்ளிப்போட்டார்கள் என்பதும், ஒரு வழியாக போபர்ஸ் ஒழிந்த பின்னரே அவர்கள் தீவிர அரசியலில் இறங்கினார்கள் என்பதும் இந்திய அரசியலை கூர்ந்து கவனித்து வரும் அனைவருக்கும் தெரியும். இதேபோன்று, எப்போதெல்லாம் ஈழத் தமிழ் மக்களுக்காக தமிழ்நாட்டில் ஆதரவுக் குரல் எழுகிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டுக் காங…
-
- 5 replies
- 2k views
-
-
தமிழீழ அங்கீகார மாநாட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி திகதி: 24.12.2008 // தமிழீழம் // [சோழன்] விடுதலைச் சிறுத்தைகளின் தமிழீழ அங்கீகார மாநாட்டுக்கு அனுமதி மறுக்கும் உதவி காவல்துறை ஆணையாளரின் உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளதுடன் மாநாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. சென்னை அமைந்தகரையில் உள்ள புல்லா அவனியூவில் நாளை மறுதினம் (டிசம்பர் 26ம் திகதி) விடுதலைச் சிறுத்தைகள் மாநாடு நடத்தப்பட இருந்தது. ஆனால் இந்தக் கூட்டத்துக்கு அனுமதி மறுத்து அண்ணாநகர் உதவி காவல்துறை ஆணையாளர் டிசம்பர் 20ம் திகதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் இரா. செல்வம் மனுத் தாக்கல் செய்தார். …
-
- 2 replies
- 993 views
-
-
சிறிலங்கா சிறைச்சாலை தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரையிலான உண்ணாநிலை போராட்டம் [புதன்கிழமை, 24 டிசெம்பர் 2008, 09:33 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரையிலான உண்ணாநிலை போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளனர். களுத்துறை, வெலிக்கடை, பூசா, மகசீன் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 1,200-க்கும் அதிகமான கைதிகளே சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். அரசியல்வாதிகளின் உறுதிமொழியினால் உண்ணாநிலை இருக்கும் முடிவை தாங்கள் மாற்றிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ள கைதிகள், இம்முறை உறுதிமொழிகள் எதனையும் கேட்கப்போவதில்லை எனவும் கூறியுள்ளனர். தடுத்து வைக்கப்பட்…
-
- 0 replies
- 552 views
-
-
முத்து ஐயன் கட்டுப் பகுதி மக்கள் இடம்பெயர்வு திகதி: 24.12.2008 // தமிழீழம் // [வன்னியன்] சிறிலங்காப்படை அச்சுறுத்தல் காரணமாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களான முத்து ஐயன்கட்டு மற்றும் மன்னாகண்டல் பகுதிமக்களும் இடம்பெயர்ந்துவருகின்றனர். பல்லாயிரக்கணக்கான குடும்பங்களைக் கொண்ட பெரியப்பரப்பில் அமைந்துள்ள மேற்படி பகுதிகளின் மக்கள் தமது உடமைகளுடன் இடம்பெயர்ந்து செல்வதால் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதி பெரும் நெருக்கடி நிறைந்ததாகக் காணப்படுகிறது. மேற்படி பகுதிகளில் நிரந்தர குடியிருப்பாளர்கள் தவிரபெருமளவான இடம்பெயர்ந்த மக்களும் தங்கியிருந்த நிலையில் அவர்களும் இடம்பெயர்ந்து செல்லும் அவலத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். பெருமளவான வயல்நிலங்கள் …
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு நிகழ்வு இன்று விசுவமடு பிரதேசத்தில் பொதுஅமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.விச
-
- 0 replies
- 1.2k views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பு எங்கும் சிறிலங்கா படையினர் பரவலாக "பரசூட்" குண்டுத் தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 361 views
-
-
வன்னியில் பொதுமக்களை இலக்கு வைத்து "பரசூட்" கொத்து குண்டுத் தாக்குதல் [புதன்கிழமை, 24 டிசெம்பர் 2008, 08:58 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னிப்பெரு நிலப்பரப்பு எங்கும் சிறிலங்கா படையினர் பரவலாக "பரசூட்" கொத்து குண்டுத் தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளனர். சிறிலங்கா வான்படையினர் நடத்தும் இந்த புதிய வகை "பரசூட்" கொத்து குண்டுகள் நிலத்திலிருந்து 50 மீற்றர் உயரத்தில் வெடித்துச் சிதறி பொதுமக்களுக்கு பாரிய சேதங்களை உண்டாக்குகின்றன. நேற்று செவ்வாய்க்கிழமையும் இன்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இரண்டு தடவைகள் "பரசூட்" கொத்து குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன. நேற்றிரவு 10:15 …
-
- 0 replies
- 361 views
-
-
வவுனியாவிலும் மன்னாரிலும் அப்பாவி பொதுமக்கள் இருவரினது உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 382 views
-
-
வவுனியா மாவட்டத்தில் சிறிலங்கா படையினரின் டறக் வாகனம் மீது இன்று நடத்தப்பட்ட கிளைமோ தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 317 views
-
-
109 அமைச்சர்களும் என்னைப் போல அதிகாரமில்லாதவர்கள் - விஜேதாச ராஜபக்ச: நான் எனது அதிகாரங்களைப் பாவிக்க அனுமதிக்கப்படாததால் நான் எனது அமைச்சர் பதவியைத் தூக்கியெறிந்தேன். செயலாளர் இல்லாத ஒரேயொரு அமைச்சராக நான் இருந்தேன். அவ்வாறானால் எவ்வாறு நான் எனது வேலைகளைச் செய்திருக்க முடியும் என்று கேள்வியெழுப்பியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரான விஜேதாச ராஜபக்ச. அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் நான் மட்டுமல்ல அங்கிருக்கின்ற 109 அமைச்சர்களும் என்னைப் போல அதிகாரமில்லாதவர்களாகத் தான் இருக்கிறார்கள். ஜனாதிபதியிடம் மட்டும் தான் அதிகாரம் இருக்கிறது. எந்தவொரு அமைச்சருக்கும் நிறுவனத் தலைவரை பணிப்பாளர்களை நியமிப்பது தொடர்பாக அபிப்பிராயம் சொல்வதற்குக் கூட உரிமையில்லை. இந்த நிலைமை தான் 99…
-
- 2 replies
- 1.1k views
-
-
சிறீலங்காவின் புலனாய்வுத்துறை அதிகாரிகள் 43 பேர் ஒன்றிணைந்து அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளனர். பதவியுயர்வு வழங்கப்பட்டபோது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாமல், மூப்பு மற்றும் சேவைத்திறமை என்பனவற்றினைக் கருத்தில் கொள்ளாமல் எழுந்தமானமாகவும், பாகுபாடாகவும் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இந்த மனுவில் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இவர்கள் தமது வழக்கில் சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவை பிரதான எதிரியாகவும், அவருடன் படைத்தளபதிகள், காவல்துறைமா அதிபர் ஆகியோரையும் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டுள்ளனர். சிறீலங்காவின் இரண்டாம் நிலைத் தரைப்படைத் தளபதியும் கிழக்கினை ஆக்கிரமிப்பதில் முன்னின்றவருமான பராக்கிரம பன்னிப்பட்டியவும் பதிவிப்…
-
- 1 reply
- 1.1k views
-
-
32 பில்லியன் டொலர் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதே எமது இலக்கு: வலிந்த தாக்குதலைத் தொடங்க உரிய நேரத்துக்காகக் காத்திருக்கிறோம் பா. நடேசன் ஒரு தேசத்தின் விடுதலைப் போராட்டம் என்பது ஒரு நகரத்தை மட்டும் மையமாகக் கொண்டது அல்ல என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார். ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: நிலப்பகுதிகளை இழப்பதும், மீளக் கைப்பற்றுவதும் பொதுவானது தான். எமது விடுதலைப் போராட்ட இலட்சியத்தை வென்றெடுக்கும் வரையில் தொடர்ந்து போர் நகரங்கள் உருவாக்கப்படும். அமைதிப் பேச்சுக்களுக்கு முன்னர் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்ற ஜனாதிப…
-
- 0 replies
- 885 views
-
-
பாதுகாப்புச் செயலாளர் மனித உரிமைகள் ஆணையகத்தில் ஆஜராகவுள்ளார் – ஜயலத் ஜயவர்தன: பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ எதிர்வரும் 26ம் திகதி மனித உரிமைகள் ஆணையகத்தில் ஆஜராகவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார். மருத மடு தேவாலயத்தில் தமக்கு தங்க அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவித்து ஜயலத் ஜயவர்தன மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். மருத மடு தேவாலயத்தில் தங்குவதற்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டதென்பது குறித்து பாதுகாப்புச் செயலாளர் மனித உரிமைகள் ஆணையகத்தில் விளக்க மளிக்க உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 14 முதல் 16ம் திகதி வரையில் தேவாலயத்தில் தங்கியிருந்…
-
- 0 replies
- 777 views
-
-
நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் புதிய பாட விதானத்தின் கீழான கணித பாடத்தின் இரண்டாம் பகுதிக்கான பரீட்சையை மீண்டும் நடத்துவதற்குக் கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவிக்கையில், அண்மையில் நடைபெற்ற கவ்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் புதிய பாடத் திட்டத்துக்கமைவாக கணித பாடத்தின் இரண்டாம் பகுதிக்கு விடையளிப்பதில்; மாணவர்களுக்கு ஏற்பட்ட பல்வேறு அசௌகரியங்கள் தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ஆகவே, கணித பாடத்தின் இரண்டாம் பகுதியை மட்டும் மீண்டும் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்து மூன்று வாரங்களுக்குள் கணித பாடத்தின் இரண்டாம் பிரிவு…
-
- 0 replies
- 455 views
-