ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143643 topics in this forum
-
எந்த நாடும் கட்டளையிட முடியாது - அமைச்சர் மஹிந்த சமரசிங்க: http://www.globaltamilnews.net/tamil_news....=2864&cat=1 வன்னியில் வாழ்கின்ற மக்களும் இலங்கை மக்களே. அவர்களுக்குத் தேவையானதை மேற்கொளவதோடு பொருட்களும் அனுப்பி வைக்கப்படுகிறது. எந்த நாடும் தமக்கு கட்டளையிட முடியாது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற மனித உரிமைகள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் பதிலளித்து உரையாற்றிய அவர் 'எந்த நாடும் எமக்கு கட்டளையிட முடியாது. எமது மக்களுக்கு நாமே பொருட்களை அனுப்பி வைப்போம் 700 மெற்றிக் தொன் உணவுப் பொருட்களை அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது. நாளாந்தம் அனுப்பி வைக்கப்படுகின்ற பொருட்கள் தொடர்பில் எதனையும் ந…
-
- 0 replies
- 1.2k views
-
-
பயங்கரவாதம் ஒழிக்கப்படும் என்னும் போர்வையில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை அனுமதிக்க முடியாது – துரைரட்ணம்: http://www.globaltamilnews.net/tamil_news....=2865&cat=1 கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக தொடர்ந்து வரும் படுகொலைகளை நிறுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண பிரதி காவற்துறை மா அதிபர் ஆகியோரிடம் மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் முதல்வருக்கும் பிரதி காவற்துறைமா அதிபருக்கும் அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கிழக்கு மாகாண சபை முதலமைச்சரின் கீழ் செயற்படும் வகையில் ஜனாதிபதியினால் பிரதி காவற்துறைமா அதிபரொருவர் நியமிக்கப்பட்ட…
-
- 0 replies
- 607 views
-
-
தமிழர்கள் தமது பூர்வீக மண்ணில் வாழ்வதற்கு உரிமை உண்டு அவர்கள் நாட்டில் சமமாக வாழ்வார்கள் அல்லது தனித்து வாழவார்கள் - இரா சம்பந்தன்: http://www.globaltamilnews.net/tamil_news....=2862&cat=1 கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவிக்கும் நிலையில் அங்கு நாள்தோறும் படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழர்களின் பூர்வீக மண்ணில் வாழும் உரிமை தமிழருக்கு உண்டு. அந்த வகையில் தமிழர்கள் நாட்டில் சமமாக வாழ்வார்கள் அல்லது தனித்து வாழவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். நாட்டில் மனித உரிமைகள் மிக மோசமாக மீறப்படுகின்றன. மனித உரிமைகள் தொடர்பிலான சர்வதேச நியமங்களை ஏற…
-
- 0 replies
- 573 views
-
-
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் கடந்த இரு நாட்களாக இடம்பெற்ற சுற்றிவளைப்புத் தேடுதலின்போது 12 தமிழ் இளைஞர்கள் கைதானதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 495 views
-
-
கிளிநொச்சியில் உள்ள கொக்காவில் பகுதியை நேற்று திங்கட்கிழமை கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 12 replies
- 2.2k views
-
-
கிளஸ்டர் (Cluster) குண்டு பாவனைக்கு எதிரான உடன்படிக்கையில் 100-க்கும் அதிகமான உலக நாடுகள் சைச்சாத்திடவுள்ள மாநாடு நாளை நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் நடைபெறவுள்ளது. தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு வன்போரில் சிறிலங்கா அரசாங்கம் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்துவது அம்பலமாகியுள்ளது. வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த குடியிருப்பு மீது கடந்த சனிக்கிழமை இந்த வகை குண்டுகள் வீசப்பட்டு ஐந்து வயது குழந்தை உட்பட்ட இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஏழு சிறுவா்கள் உள்ளிட்ட 21 பேர் படுகாயமடைந்துள்ளனர். அணுகுண்டுக்கு அடுத்தபடியாக பேரழிவு ஆயுதமாக கிளஸ்டர் குண்டு உள்ளது எனும் பின்னணியிலேயே 100-க்கும் அதிகமான உலக நாடுகள் இதன் பாவனைக்கு எதிரான உடன்படிக்கைக்கு இணங்கியுள்ளன. …
-
- 6 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் மூத்த ஆலோசகரான பசில் ராஜபக்ச இந்தியா சென்று திரும்பியதிலிருந்து வன்னியில் உள்ள அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இரா.சம்பந்தன் ஆற்றிய உரையின் போது மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழ் மக்களின் சுயாட்டி உரிமையானது நீண்டகாலமாக மறுக்கப்பட்டு வந்திருக்கின்றது. அதுதான் இன்றைய பிரச்சினைகளுக்கான முக்கிய காரணமாகும். இலங்கையில் மனித உரிமைகள் நிலவரங்களானது மிகவும் மோசமாக இருக்கின்றன. ஆட்கடத்தில்கள், சட்டவிரோத கொலைகள் என நாளாந்தம் இட…
-
- 0 replies
- 507 views
-
-
4.12.2008 குமுதம் ரிப்போட்டர் பகுதியில் சுவாமி வம்பானந்தா பகுதியில் வந்த சில ஈழம் சம்பந்தமான செய்திகள் காந்தி தேசம் கொடுக்குது புத்தர் தேசம் கொல்லுது தூத்துக்குடியில் ஒரு போர்டு என்றால் நெல்லையில் இன்னொரு பேனர். நெல்லை நீதிமன்ற வாசலில் 26_ம் தேதி காலை, `தமிழர்கள் உரிமை பாதுகாப்பு வழக்கறிஞர்கள் பேரவை' என்ற பெயரில் திடீரென வைக்கப்பட்ட இந்த டிஜிட்டல் பேனரில், முழு ராணுவ உடையில் இருக்கும் பிரபாகரன் படத்துடன், `காந்தி தேசம் ஆயுதம் கொடுக்குது, புத்தர் தேசம் தமிழனைக் கொல்லுது. பிறந்த நாள் காணும் குணாளா, குலக்கொழுந்தே, தம்பி பிரபாகரன் பல்லாண்டு வாழ்க' என்று எழுதப்பட்டிருக்கிறது. தகவல் கிடைத்ததும் சில மணி நேரங்களில் இந்த பேனரை காவல்துறை அகற்றிவிட்டது. ம.தி.மு.க.வைச் சேர்…
-
- 0 replies
- 1.5k views
-
-
1918ம் ஆண்டுக்குப் பின்னர் நிசா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பலமாக பாதிப்பை வட தமிழீழம் கண்டுள்ள நிலையில் குறிப்பாக வன்னி மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளைக் கூட அனுப்ப விடாது சிறீலங்கா அரசு தடுத்து வருவதை சர்வதே மனித உரிமைகள் கண்காணிப்பகம் வன்மையாக கண்டித்துச் சாடியுள்ளது. Flood-hit Sri Lankans 'need help' Tens of thousands of people in flooded areas of northern Sri Lanka are without adequate shelter and need help now, the Human Rights Watch campaign group says. It has called on the government to immediately lift a ban imposed in September which stops humanitarian agencies from going to conflict areas. But the authorities say that flood …
-
- 5 replies
- 1.9k views
-
-
இந்திய படைத்துறை உயரதிகாரிகள் குழுவொன்று எந்தவித முன்னறிவித்தலும் இன்றி தீடீரென கொழும்பிற்குச் சென்றுள்ளமை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சவைச் சந்தித்துள்ள இந்தக் குழுவினர், பல்வேறு படைத்துறை விடயங்கள் பற்றிப் பேசியுள்ள போதிலும், அவை தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. http://www.eurotvlive.com/script/viewNews....428705750425141
-
- 19 replies
- 4.1k views
-
-
யாழில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா படையினரின் அடாவடித்தனங்கள் திகதி: 01.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] - யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கென அவுஸ்திரேலிய அமைப்பு ஒன்றினால் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்ட உணவுப் பொருட்கள் சத்துணவுகள் என்பவற்றை சிறிலங்காப் படையினர் தம்வசப்படுத்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறிலங்காப் படையினருக்கு இவற்றை வழங்கி வருகின்றனர். - யாழில் உள்ள முக்கிய சிறிலங்காப் படைமுகாம்கள் ஊடாகப் பயணிப்போர் கைத்தொலைபோசிகளை எடுத்துச் செல்வதில் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளது. பிரதான படைமுகாம்கள் ஊடாக பயணிக்கும் போது கைத்தொலைபேசியை இயங்கு நிலையில் வைத்திருக்கக் கூடாது எனவும் இவ்வாறு பிரதான சிறிலங்காப் படைமுகாம்க…
-
- 1 reply
- 1.6k views
-
-
மஸ்கெலியாவில் வர்த்தக நிலையம் தீக்கிரை வீரகேசரி நாளேடு 12/1/2008 8:32:41 PM - மஸ்கெலியா தபாற்கந்தோர் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்று இன்று திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் முற்றாக எரிந்து பெரும் சேதமேற்பட்டுள்ளது. இன்று அதிகாலை சுமார் 1 1/2 மணியளவில் ஏற்பட்ட இத்தீ விபத்தில் பலசரக்கு பொருட்கள் விற்பனை செய்யும் மேற்படி வர்த்தக நிலையத்தில் இருந்த பலசரக்குப் பொருட்கள் பால்மா பக்கெட்டுகள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சாம்பலாகியுள்ளன. அத்துடன் அக்கட்டிடத்துக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டவுடன் அக்கம்பக்கத்திலிருந்தவர்கள
-
- 0 replies
- 714 views
-
-
இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள் திறக்கத் திட்டம் - ஜே.வி.பி எதிர்ப்பு : www.globaltamilnews.com இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர்கல்வி அமைச்சின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இந்த பல்கலைக்கழகங்கள் இயங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வருடாந்தம் சுமார் 10,000த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் உயர்கல்வியைத் தொடர வெளிநாடு செல்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இதன் மூலம் பாரியளவு நிதி வெளிச் செல்வதாகவும், வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்க்கக் கூடிய வகையிலான திட்டமொன்று அமுல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. எனினும், தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கு ஜே.வி.பி கடும் எ…
-
- 3 replies
- 1.5k views
-
-
விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறிக்கொண்டு அப்பாவித் தமிழ் மக்கள் மீது அரசாங்கப் படைகள் தாக்குதல்களைத் தொடர்ந்து வருவதாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புஇ தமிழர்களின் தலையெழுத்து விரைவில் மாறும் எனத் தெரிவித்துள்ளது. “வன்னியில் அப்பாவித் தமிழர்கள் அரசாங்கப் படைகளின் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றனர். இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் விமானக் குண்டுத் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். நேற்றுமுன்தினம் கூட அகதிமுகாம் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட பலர் காயமடைந்திருந்தனர்” எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமுன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இன்று திங்கட்கிழமை பாராளுமன்…
-
- 0 replies
- 1.8k views
-
-
-
இலங்கைக்கு வெள்ளைச் சிற்றூந்து நோய் பிடித்திருப்பதாக, BBC யின் கொழும்புச் செய்தியாளர் றோலன்ட் பேர்க் (Roland Buerk) BBC Radio 4 இற்கு வழங்கிய செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை இரவு 8:30இற்கு ஒலிபரப்பாகவுள்ள இந்தச் செய்தி ஆய்வில் கிழக்கில் துணைப்படைக் கருணா குழுவினர் மேற்கொண்டுவரும் படுகொலைகள், கடத்தல்கள் போன்ற மனித உரிமை மீறல்கள் விரிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=111
-
- 0 replies
- 2.6k views
-
-
நவ. 30: இலங்கை குறித்த வெளியுறவுக் கொள்கையை இந்தியா வகுக்க வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலர் சி. மகேந்திரன். திருச்சியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "இலங்கைப் பிரச்னை- சிக்கலும் தீர்வும்' என்ற சிறப்புக் கருத்தரங்கில் அவர் மேலும் பேசியது: ""இலங்கையில் சிங்களர்கள் தோன்றுவதற்கு முன்பாகவே அங்கு தமிழர்கள் இருந்திருக்கிறார்கள் என்ற உண்மையை, சிங்கள ஆய்வாளர்களே தெரிவித்துள்ளனர். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வசித்துவரும் தமிழர்களை, அங்கே இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதுகிறார்களே? என்பதுதான் கேள்வி. ஆயுதம் தாங்கியப் போராட்டம் ஏதோ உடனே வந்ததல்ல. தமிழ் மக்களின் 60 ஆண்டு காலப் ப…
-
- 1 reply
- 1.6k views
-
-
மும்பையில் தீவிரவாதிகள் மூன்று நாட்களாக நடத்திய தாக்குதலில் நிலைகுலைந்து கிடக்கிறது, மத்திய அரசு! பாகிஸ்தானில் இருந்து கப்பலில் வர்த்தக நகரமான மும்பையில் வந்திறங்கி இந்தியா மீது கிட்டத்தட்ட போர்த் தொடுத்திருக்கிறார்கள். பாகிஸ்தானின் பயிற்சிப் பெற்ற தீவிரவாதிகள் இவர்கள் என்று வழக்கம்போல் மத்திய அரசு சொல்லிவிட்டது. அமெரிக்காவில் செப்டம்பர் 11 நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின் அதற்குக் காரணமாகச் சொல்லப்பட்ட ஒசாமாபின் லேடனைக் கொல்வதற்காக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய உக்கிரத் தாக்குதலை யாரும் மறந்திருக்க முடியாது. அதற்கு உலக நாடுகள் மத்தியில் பல எதிர்ப்புகள் கிளம்பிய போதும் தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்று கிளம்பியது, அமெரிக்கா. இந்தியாவும் வல்லரசு ஆகும் …
-
- 6 replies
- 3.8k views
-
-
ஐக்கிய தேசியக் கடசியின் தலைமைப் பொறுப்பில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலகுவதையும், S.B. திசாநாயக்க போன்றவர்கள் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பதையும் இந்தியா விரும்புவதாக, இன்றைய ஞாயிறு சிங்கள இதழான சிலுமின தெரிவித்துள்ளது. அண்மையில் ரணில் விக்கிரமசிங்க இந்தியா சென்றபோது, அவரைப் பதவியில் இருந்து விலகுமாறு இந்தியா வலியுறுத்தியிருப்பதாகவும் இந்தப் பத்திரிகை தெரிவிக்கின்றது. சர்ச்சைக்குரியவரான திசாநாயக்கவின் குடியிரிமை பறிக்கப்பட்டிருந்ததுடன், சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பர் இவர் எனவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது. http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://…
-
- 0 replies
- 1.6k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சியில் பாடசாலைக்கு சென்றுவிட்டு திரும்பிய சிறுமியொருவர் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 779 views
-
-
புலிகள் சரண் அடைந்தால் மட்டுமே அவர்களுடன் அரசு பேச்சு நடத்தும் - இந்தியாவிடம் இலங்கை எடுத்துரைப்பு uthayan.com விடுதலைப்புலிகள் தம்மிடம் உள்ள ஆயுதங்களைக் களைந்து, சரண் அடைந்தால் மட்டுமே அரசாங்கம் அவர்களுடன் பேச்சு நடத்தும். இந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை . இவ்வாறு இலங்கை அரசின் சார்பில், மூத்த அமைச்சர்களில் ஒருவரான டி.எம்.ஜயரத்தின நேற்று கொழும்பிலுள்ள இந்திய பிரதித் தூதுவரைச் சந்தித்து எடுத்துரைத்துள்ளார். அமைச்சர் ஜயரத்னாவின் அலுவல கத்தினால் உத்தியோக பூர்வமாக நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் சந்திப்பு பற்றிய விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 1.2k views
-
-
‘நிஷா’ சூறாவளி வெள்ளத்தால் வன்னியில் பேரவலம் ஆனால் தொண்டுப்பணிக்குத் தொடர்ந்தும் தடை uthayan.com ‘நிஷா’ சூறாவளி வன்னியில் ஏற்படுத்திய பெரு வெள்ளத்தால் அங்கு பல நூறாயிரக் கணக்கில் மக்கள் இடம்பெயர்ந்து அவலப்படுகின்றனர் என்ற தகவல் நெஞ்சை நெருடுகின்றது. ‘பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த’ மாதிரி, யுத்த அனர்த்தங்களால் அல்லற்பட்ட வன்னி மக்களை இயற்கையும் சேர்ந்து வஞ்சித்து பேரவ லப்பட வைத்திருக்கின்றது என்ற செய்தி மனதை உலுப்புகின்றது. வன்னிப் பெரு நிலப்பரப்பு மீது கொழும்பு அரசு பெரும் எடுப்பில் தொடுத்துள்ள கொடூர யுத்தம் காரணமாகத் தமது வீடு, வாசல்கள், நிலபுலங்களை எல்லாம் விட்டு வெளியேறி, உடுத்த உடையோடு இடம்பெயர்ந்த பல நூறாயிரம் மக்கள், காடுகளில் மரங்களின் கீழும் புதர…
-
- 0 replies
- 646 views
-
-
சரத் பொன்சேகாவின் பதவிக்காலமும் யுத்தமும் சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா அதிகம் பெருமைப்பட்டுக் கொள்வதாகவே தெரிகின்றது. கஜபாகு ரெஜிமண்டின் 25ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர், இதில் தன்னைப் பெருமைப்படுத்திக்கொள்ளும் வகையில் இரு விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். 01. விடுதலைப் புலிகள் 80 வீதம் தோற்கடிக்கப்பட்டுவிட்டனர். 02. எனது பதவிக்காலத்திற்குள் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்துவிடுவேன். இவற்றைத் தவிர வேறுசில விடயங்களையும் பேசியுள்ள அவர், விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க- அதாவது போரில் வெற்றிபெற நான் அவசியம், என்னைவிட்டால் வேறு யாராலும் முடியாது என்ற தொனியிலும் பேசியுள்ளார். முதலில், விடுதலைப் புலிகளை 80 வீதம் தோற்கடி…
-
- 1 reply
- 1.5k views
-
-
இராணுவ சீருடைய அணிந்து கொழும்பு நகரின் சில இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்த புலிகள் திட்டம்: காவற்துறை: http://www.globaltamilnews.net/tamil_news....d=2835&cat= இராணுவ சீருடைய அணிந்து கொழும்பு நகரின் சில இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தும் புலிகளின் திட்டம் குறித்து தெரியவந்ததை தொடர்ந்து, இந்த தாக்குதலுக்கு செல்லும் விடுதலைப்புலிகளுக்கு வழங்கவென வைக்கப்பட்டிருந்த 20 இராணுவ சீருடைகளை மாளிகாவத்தை ஜூம்மா மஜீட் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். காவற்துறையினரும் அரச புலனாய்வுத் துறையினரும் இணைந்து இதனை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சீருடைகளுடன் அந்த வீட்டில் இருந்த சிங்…
-
- 1 reply
- 3.1k views
-
-
வடபகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை - களமுனைகளிலுள்ள படையினரின் இராணுவ முன்னெடுப்புக்கள் பாதிப்பு: http://www.globaltamilnews.net/tamil_news....=2832&cat=1 வடபகுதியில் நிலவும் சீரற்ற காலநிலையால் போர்க் களமுனைகளிலுள்ள படையினரின் இராணுவ முன்னெடுப்புக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் படையினருக்கான ஆயுதங்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகங்கள் தடைப்பட்டுள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு களமுனைகளிலும் இராணுவ முகாம்கள் மற்றும் பதுங்குகுழிகளிலும் தங்கியுள்ள இராணுவத்தினரை மாற்று இடங்களுக்கு அழைத்துச் செல்ல படைத்தரப்பினர் கடந்த சில நாட்களாகவே பல்வேறு நடைமுறைகளைக் கையாண்டு வருவதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. ஆயினும் வடக்கில…
-
- 0 replies
- 864 views
-