ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
இலங்கையின் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் காரணமாக அதற்கு ஜீ.ஸ்.பீ பிளஸ் சலுகை அளிக்கப்படக்கூடாதென ஒரு மனு கீழேயுள்ள இணையத்தளத்தில் உள்ளது. அதிலே உங்கள் பெயர், விலாசம், மின்னஞ்சல் முகவரிகளை இட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் Commissioner Catherine Ashto வுக்கு உங்கள் சார்பாக அனுப்பிவிடுங்கள். http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=26
-
- 3 replies
- 917 views
-
-
பூநகரிப் பாதை செவ்வாயன்று திறக்கப்படும்? [ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2008, 01:47.24 AM GMT +05:30 ] ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்று மூன்றாம் ஆண்டு நிறைவு தினமான நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை பூநகரிப் பாதை அனேகமாக போக்குவரத்துக்குத் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. யாழ். நகரப் படைத்தரப்பு அதிகாரி ஒருவர் இந்த எதிர்பார்ப்பை நேற்று மாலை ‘உதயன் பத்திரிகைக்குத் தெரிவித்தார். பூநகரிப் பிரதேசம் நேற்று முற்பகல் படையினரின் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து பூநகரிப் பாதையை (கேரதீவு - சங்குப்பிட்டி) நாளை மறுதினம் போக்குவரத்துக்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் சாத்தியம் உள்ளது என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். …
-
- 1 reply
- 1.6k views
-
-
கிளிநொச்சி மக்கள் குடியிருப்புகள் மீது படையினர் அகோர எறிகணைத் தாக்குதல் [ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2008, 01:33.12 AM GMT +05:30 ] இலங்கைப் படையினர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை முதல் நேற்று சனிக்கிழமை காலை வரை கிளிநொச்சியின் பொதுமக்கள் குடியிருப்புகள் மீது அகோர எறிகணை தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதன் காரணமாக பொதுமக்கள் பல குடியிருப்புகள் சேதமடைந்தன. ஏற்கனவே இந்த எறிகணை தாக்குதல்களுக்கு அஞ்சி பொதுமக்கள் பிரதேசத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். பலர் இன்னும் வெளியேறிக்கொண்டிருக்கின்றன
-
- 0 replies
- 561 views
-
-
போராளிக் குழுக்களின் மோதலுக்கு இந்திய அரசே காரணம் உண்மைகளை மறைக்க முயல வேண்டாம் முதல்வருக்கு வேண்டுகோள் (கடந்த 14-10-08 அன்று நடை பெற்ற அனைத்துக் கட்சிகள் கூட்டத் தில் பேசிய முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் கொஞ்சமும் தொடர்பு இல்லாத வகையில் திடீரென ஈழத்தமிழ் போராளிகளின் சகோதரச் சண்டை குறித்துப் பேசினார். அந்தக் கூட்டத் தில் இந்த விவரங்களைப் பேசுவதற்கு எத்தகைய நியாயமும் இல்லை. அவர் சொன்ன பல செய்திகள் உண்மையும் இல்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத் தில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என்ற தீர்மானத்தை நிறை வேற்றுவதில் அவருக்குப் பெரும் தயக்கம் இருந்தது. ஆனால் அனைத் துக் கட்சிகளின் வற்புறுத்தலின் பேரிலேயே அவ்வாறு அவர் அத் தீர்மானத்தை நிறை…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வீதிச்சோதனை சாவடியில் கடமையில் நிற்கும் காவல்துறையினரும் படையினரும் தமிழர்களை பார்த்து பூநகரி வரையான ஏ-32 பாதை திறக்கப்பட்டுள்ளது யாழ்ப்பாணம் செல்வதற்கு தயாராகுங்கள் என்று கூறி பகிடிவதை புரிந்து வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.4k views
-
-
வன்னியில் இடம்பெயர்ந்த 3,27,790 பேரில் 60 வீதமானோருக்கு அடிப்படை வசதிகள் இல்லை [16 - November - 2008] வன்னியில் இடம்பெயர்ந்துள்ள சுமார் மூன்று இலட்சத்து 27 ஆயிரத்து 790 பேரில் 60 வீதமானோருக்கு அடிப்படை வசதிகளில்லை என தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தெரிவித்துள்ளது. முக்கியமாக கூடாரங்கள் எதுவுமின்றி இந்த மக்கள் மரநிழல்களில் வாழ்ந்து வருகின்றனர். ஏற்கனவே கடள்கோளின் போது இடம்பெயர்ந்த சுமார் 90 ஆயிரம் மக்களுடன் சேர்த்து 320 ஆயிரம் பேர் கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களில் 40 வீதமான மக்களுக்கு உணவுப் பற்றாக்குறை நிலவுவதாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் குறிப்பிட்டுள்ளது. உணவு விநியோகம் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. பாதைகள் சீரின்ம…
-
- 2 replies
- 767 views
-
-
புலிகள் பலவீனமடைந்துள்ளனரா? [16 - November - 2008] தாயகன் விடுதலைப் புலிகள் மிகவும் பலவீன மடைந்து விட்டனர். அவர்களால் இனி இராணுவத்தினரின் தாக்குதல்களை எதிர் கொள்ள முடியாது. எனவே, யுத்தம் இறுதிக் கட்டத்தையடைந்து விட்டது. இதில் இராணுவத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. இவ்வாறான கருத்துகள் அண்மைக்காலமாக தென்னிலங்கையில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. போர் நிறுத்தத்திற்குத் தாம் எந்த நேரத்திலும் தயார் என்ற விடுதலைப் புலிகளின் அறிவிப்பும் வன்னி பெரு நிலப்பரப்பில் அவர்கள் இழந்துவரும் நிலப்பரப்புகளின் அளவுகளுமே விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக மிகவும் பலவீனமடைந்துவிட்டனரென்ற தோற்றப்பாட்டை வலுவாக ஏற்படுத்தியுள்ளது. இது தவிர்க்கமு…
-
- 4 replies
- 2.1k views
-
-
வன்னிப் போரை தொடர இலங்கை அரசுக்கு இந்தியாவின் அங்கீகாரம் கிடைத்து விட்டது. தனது சகோதரர் பசில் ராஜபக்ஷவை தனது விஷேட தூதராக டில்லிக்கு அனுப்பி இலங்கையில் போர் நிறுத்தக் கோரிக்கையை நிராகரிக்கச் செய்த ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஷ தற்போது தானே டில்லிக்கு நேரில் சென்று இந்தியப் பிரதமரைச் சந்தித்து வன்னிப் போரைத் தொடர்வதற்கான அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார். இதன் மூலம் ஈழத்தமிழர் விடயத்தில் தலையிடும் தார்மீக உரிமையையும் இந்தியா இழந்துவிட்டது. விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதுதான் இந்தியாவின் நோக்கமுமாகும். இதனால் தான் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு என்ன யோசனையை இலங்கை அரசு முன் வைக்கவுள்ளது என்பதைக் கூட கேட்காது பாகிஸ்தான், சீனா மற்றும் ஈரானுடன் போட்டி போட்டு இலங்கை படைகளுக்கு …
-
- 2 replies
- 2.5k views
-
-
ஈழத்தில் நடைபெறும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலையை கண்டித்தும் இந்திய அரசு போரை நிறுத்த வற்புறுத்தக் கோரியும் புதுவை மாநில அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தெருமுனைக் கூட்டங்கள் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. படங்கள், மேலதிக செய்திகள் உள்ளே............. http://www.tamilseythi.com/tamilnaadu/pudh...2008-11-16.html
-
- 0 replies
- 795 views
-
-
இலங்கையில் யுத்தநிறுத்தம் அமுலாக்கம் செய்யப்படும் வரை திராவிட முன்னேற்றக் கழகம் திருப்தி கொள்ளாது என தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி இன்று தெரிவித்துள்ளார். இதுவே தமது நிலைப்பாடு என்றும் அனைத்துக் கட்சி மாநாட்டிலும் இந்த தீர்மானமே எடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ள கருணாநிதி, இலங்கையில் உள்ள தமிழர்களைப் பாதுகாக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இலங்கைப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என கூறி,தமிழ் மக்களுக்கு எதிரான பிரச்சினையை ஏற்படுத்துவதாக கருணாநிதி தெரிவித்துள்ளார். இலங்கைப் படையினரின் தாக்குதலில் அப்பாவி தமிழ் மக்கள் பாரிய பாதிப்புக்குள்ளாக்கியுள்ளத
-
- 0 replies
- 898 views
-
-
யாழ். வடபோர்முனையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 25 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 105 படையினர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 838 views
-
-
பிரிவினைவாதத்தை யுத்த, அரசியல் ரீதியாக தோற்கடித்தால் மாத்திரமே படையினரின் வெற்றி நிரந்தரம் - ஜே.வீ.பீ : பிரிவினைவாதத்தை யுத்த ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தோற்கடித்தால் மாத்திரமே பாதுகாப்பு படையினர் பெற்று வரும் வெற்றிகள் நிரந்த வெற்றிகளாக அமையும் என ஜே.வீ.பீ குறிப்பிட்டுள்ளது. போர் ரீதியாக பயங்கரவாதத்தை தோற்படிப்பது குறித்து முனைப்புடன் செயற்பட்ட போதும், அரசியல் ரீதியாக பிரிவினைவாதத்தை வெற்றிபெறச் செய்யும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜே.வீ.பீ. விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மாகாண சபைகளுக்கு காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை வழங்குதல், 13வது அரசியல் சாசன திருத்திற்கு அப்பால் சென்ற அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குதல் போன்ற பிரிவினை…
-
- 0 replies
- 567 views
-
-
நாடு முழுவதும் இலங்கை தேசிய கொடியை ஏற்றும் காலம் வெகு தூரத்தி;ல் இல்லை – கருஜெயசூரிய: http://www.globaltamilnews.net/tamil_news....=2243&cat=1 நாடு முழுவதும் இலங்கை தேசிய கொடியை ஏற்றும் காலம் வெகு தூரத்தி;ல் இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் ஜனநாயக அணியின் தலைவர் அமைச்சர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாள் மாநாட்டில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்தை நாட்டில் இருந்து ஒழிக்கும் நோக்கிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனநாயக அணியினர் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியதாகவும் பூநகரியை படையினர் கைப்பற்றியது குறித்தும் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் கருஜயசூரிய கூறியுள்ளார். மூன்று தசாப்பதங்களாக நாட்டில்…
-
- 0 replies
- 603 views
-
-
அத்துருகிரிய பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் செயலாளர் குமாரசுவாமி நந்தகோபன் இந்திய றோ உளவுப் பிரிவின் முகவராக இருக்கலாம் என புலனாய்வுத் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். நான்கு தினங்களுக்கு முன்னர் நந்தகோபன் மலேசியாவிலிருந்து இலங்கைக்கு திரும்பியிருந்ததாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். எனினும், பிள்ளையானிடம் அவர் இந்தியா செல்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. படுகொலை செய்யப்பட்ட நந்தகோபன் என்ன காரணத்திற்காக இரகசியமாக மலேசியா சென்றார் அவர் அங்கு யாரை சந்தித்தார் என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நந்தகோபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என கருணா தரப்பு குற்றம் சாட்டியிருந…
-
- 1 reply
- 2.3k views
-
-
13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு மேல் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை எந்த அரசுகளும் வழங்கப் போவதில்லை – தர்மலிங்கம் சித்தார்த்தன் GTN ற்கு வழங்கிய செவ்வி ஒலிவடிவில்: http://www.globaltamilnews.net/tamil_news....=2221&cat=1 தந்தை செல்வநாயகம் கூறினார் தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று. ஆனால் கடவுள் வந்தாலும் தமிழ் மக்களைக் காப்பாற்ற முடியாது என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் GTN ற்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார்.
-
- 0 replies
- 548 views
-
-
தமிழச் சிவிலியன்கள் மீதான வான் தாக்குல்களை ஏற்றுக்கொள்ள முடியாது – முன்னாள் இந்திய பிரதம நீதியரசர்: http://www.globaltamilnews.net/tamil_news....=2228&cat=1 இலங்கை விமானப்படையினரால் வன்னியில் உள்ள தமிழ்ச் சிவிலியன்கள் மீது மேற்கொள்ளப்படும் வான் தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவை அல்ல என முன்னாள் புது டெல்லியின் பிரதம நீதியரசர் ரஜிந்தர் செச்சர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுடனான யுத்தம் என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் இனஒடுக்குமுறை கண்டிக்கப்பட வேண்டியதென அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் அடையாளம், தேசியவாத பிரச்சினை மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் நடைபெற்ற மாநாடொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு நிலையிலும…
-
- 0 replies
- 442 views
-
-
18 SLA killed, 29 wounded in Northern Front - LTTE [TamilNet, Sunday, 16 November 2008, 11:56 GMT] A four-pronged attempt by the Sri Lanka Army (SLA) to break the Liberation Tigers of Tamileelam (LTTE) Forward Defence Line in Mukamaalai, Ki'laali and Ka'ndal in the Northern Front on was thwarted Saturday after 6 hours of stiff resistance, according to LTTE Northern Command. 18 SLA soldiers were killed and 29 wounded in the fighting, the Tigers said. The fighting broke out at 5:00 a.m. and lasted till 12:10 p.m. Saturday till the SLA forces were pushed back to their positions, according to the LTTE. Sri Lanka Air Force (SLAF) Kfir fighter jets carried out b…
-
- 0 replies
- 1.3k views
-
-
ரகு படுகொலையுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பில்லை – பிள்ளையான் - மட்டக்களப்பு நகரில் ஹர்த்தால்: கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலளார் குமாரசுவாமி நந்தகோபன் எனப்படும் ரகுவின் படுகொலையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடபில்லை என பிள்ளையான் தெரிவித்துள்ளார். கொழும்பின் புறநகர்ப் பகுதி அத்துருகிரியவில் வைத்து பிள்ளையானின் செயலாளர் ரகு மற்றும் அசாத் மௌலானாவின் சாரதி ஆகியோர் இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பு நகரில் ஹர்த்தால் - சுட்டுக் கொல்லப்பட்ட இருவரின் சடலங்கள் அஞ்சலிப்பு வைப்பு: சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ தலைவர் ரகு எனப்படும் குமாரசுவாமி நந்தகோப…
-
- 8 replies
- 3k views
-
-
அப்படி இப்படி என ஒருவழியாக இந்தபூனைக்கும் மணி கட்டியாகிவிட்டது யாரு கட்டினாங்க என்பது முக்கியமல்ல ஆனா ரொம்ப நல்லதுங்க இந்த விசயம். நம்ம தாய் திருநாடான தமிழ்நாட்டின் ஒவ்வொரு தெருவிலும் ஏதோ ஒருவகையில் இலங்கையில் வாழும் அப்பாவி தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இப்ப என்ன பிரச்சனையினா எல்லோரும் சேர்ந்து கதவை தட்டுறோம் ஆனா ஏனோ கதவு திறக்கமாட்டேங்குது. மூட்டை தூக்கும் சுப்பன் முதல் சூப்பர் ஸ்டார் வரை அனைவரும் தட்டியாயிற்று. தமிழனும் தட்டியாச்சு, இந்தியனும் தட்டியாச்சு, முதல்ல நான் இந்தியன் அப்புறம்தான் தமிழன்கறவனும் தட்டியாச்சு ஒன்னும் முடியலை. திரைப்படத்துல ஒரு நகைச்சுவை காட்சி ஒன்னு வரும் அடிவாங்குபவன் முகத்துல சோடாவை தெள…
-
- 0 replies
- 1.3k views
-
-
புத்தளம் கற்பிட்டி பகுதியில் விடுதலைப்புலிகளின் இலகு ரக விமானம் ஒன்று இன்று அதிகாலை தரையிறக்கப்பட்டதாக பரவிய தகவலினால், கற்பிட்டிப் பகுதியில் பதற்றம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இலகுரக விமானம் இன்று அதிகாலை 2 மணியளவில் கற்பிட்டிப் பகுதியில் தரையிறங்கியதாகவே தகவல்கள் பரவியிருந்தன. இதனையடுத்து கடற்படையினரும் கற்பிட்டிக் காவற்துறையினரும் இணைந்து தேடுதல்களை மேற்கொண்ட போதிலும் எதனையும் கண்டறியவில்லை. கொழும்பில் அண்மையில் தாக்குதல் நடத்திய விடுதலைப்புலிகளின் விமானம் கற்பிட்டிக் குடாவுக்கு மேலாக பறந்து சென்றதாக உள்ளுர்வாசிகள் தெரிவிக்கின்றனர். http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=103
-
- 0 replies
- 2k views
-
-
சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு நேற்று சுவிஸ் பேர்ன் நாடாளுமன்றத்தின் முன்பாக நடாத்திய "உண்மைக்காய் எழுவோம்" நிகழ்வில், விடுதலைப்புலிகளின் உறுப்பினர், அல்பேர்ட் அவர்கள் ஆற்றிய உணர்ச்சிபூர்வமான உரையில், தமிழர் தலைநகரம் திருமலையில் தமிழீழத் தேசியக் கொடி நிச்சயம் ஏற்றபடும். 43 ஆயிரம் இராணுவமும் ஓடுவதற்குத் திறக்கப்பட்டிருக்கும் பாதையே A32. பேரங்களுக்குச் சோரம் போகாத தலைவன் பிரபாகரன் எனக் குறிப்பிட்டார்.உரையின் முழுமையான ஒளிப்பதிவினை இங்கே காணலாம். http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=266
-
- 1 reply
- 2k views
-
-
வன்னிக்களமுனை பயணிக்கப்போகும் பாதை என்ன? - வேல்ஸிலிருந்து அருஷ் ஞாயிறு, 16 நவம்பர் 2008, 06:00 மணி தமிழீழம் [] தற்போது கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களும் எதிர்பார்ப்புக்களையும், ஏக்கங்களையும் தமிழ் மக்களின் மனங்களில் விட்டுச்செல்லும் நாட்களாகவே இருக்கின்றன.வன்னிக்களமுனை ஒருபுறம் பல மாற்றங்களுடன் நகர்ந்து செல்கையில் தமிழகத்தில் ஏற்பட்டுவரும் மாற்றம் பல வாதப்பிரதிவாதங்களை தென்னிலங்கையிலும், அரசியல் வட்டாரங்களிலும் தோற்றுவித்து வருகின்றது. இலங்கை அரசை போரை நிறுத்தக்கோரி தமிழகம் எங்கும் பல எதிர்ப்புப் போராட்டங்கள் முனைப்பு பெற்றுவரும் நிலையில் அரசு மட்டும் முடிவெடுத்து போரை நிறுத்தமுடியுமா என்ற வாதத்தை தமிழ் மக்களுக்கு எதிரான சில சக்திகள் முன்வைத்திருந்தன. எனவே வ…
-
- 2 replies
- 2.2k views
-
-
யாழ் முகமாலைப் பகுதியில் வலிந்த தாக்குதல்களை முன்னெடுத்த படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இன்று சனிக்கிழமை காலை 6.30 முதல் வலிந்த தாக்குதல்களை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுள்ளனர். இவர்களுக்கு பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலறி எறிகணைகள், மிக் மற்றும் எம்.ஜ 24 வானூர்திகளிலிருந்து தாக்குதல்களைப் படையினர் நடத்தியுள்ளனர். படையினரின் தாக்குதல்களுக்கு பதிலடியாக 3 மணி நேரம் விடுதலைப் புலிகளும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன்போது படையினருக்க பலத்த ஆளணி சேதாரங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. pathivu.com -------------- By Iqbal Athas There are strong indications that the Tiger guerrillas are com…
-
- 1 reply
- 1.6k views
-
-
வீரகேசரி வாரவெளியீடு 11/16/2008 10:35:27 AM - யாழ்ப்பாணத்துக்கான தரைவழிப் பாதை ஒருசில தினங்களில் உத்தியோக பூர்வமாகத் திறந்துவிடப்படும் என்ற படைத்துறைப் பேச்சாளரின் கூற்றும், புலிகளை அழித்த பின்னரே அரசியல் பேச்சுவார்த்தை என்ற அரசுத்தலைவரின் போக்கும், வட போர் அரங்கில் யுத்த நிறுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் தற்போதைக்கு இல்லை என்றே கருத வைக்கின்றன. கடந்த வாரம் வட போர்அரங்கில் பல முனைகளில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளுக்கு எதிராகப் புலிகள் மேற்கொண்ட எதிர்த் தாக்குதல்கள் மிகக் கடுமையானதாக இருந்ததோடு படைத்தரப்புக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தியிருந்த போதிலும் படைத்தரப்பு இந்த இழப்புக்களையும் தாண்டி முன்னேறுவதற்கு கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டிருந்தது. இதன் விளைவுதான…
-
- 0 replies
- 2.1k views
-
-
சுவிற்சர்லாந்து தலைநகர் பர்னில் உள்ள சுவிஸ் நாடாளுமன்றத்தின் முன் தமிழ் இளையோர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள "உண்மைக்காய் எழுவோம்" நிகழ்வு தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற
-
- 4 replies
- 1.3k views
-