Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: DIGITAL DESK 5 25 APR, 2023 | 03:12 PM (எம்.மனோசித்ரா) சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டு ஒப்பந்தத்திற்கமைய கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதமாக ஆரம்பிக்க வேண்டியுள்ளது. அதற்கமைய சர்வதேச நாணய நிதியம் , உலக வங்கி , மத்திய வங்கி , நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினரால் கடன் மறுசீரமைப்பிற்கான திட்டமிடல்கள் மே மாதத்தில் உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (25) இடம்பெற்ற போது அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப…

  2. Published By: T. SARANYA 25 APR, 2023 | 03:08 PM (எம்.மனோசித்ரா) பொருளாதார நிலைபேற்று வேலைத்திட்டத்துக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட விசேட கடன் வசதியைப் பெற்றுக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்ட நீடிக்கப்பட்ட நிதிவசதிகளுக்கு இணையாக இலங்கையின் நிலைபேற்றுத்தன்மை மற்றும் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்திவங்கியால் 350 மில்லியன் டொலர்கள் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட விசேட கடன்வசதி மற்றும் 1.5 மில்லியன் டொலர்கள் தொழிநுட்ப உதவித் தொகையை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த கடன் தொகையை பெ…

  3. Published By: DIGITAL DESK 5 25 APR, 2023 | 03:17 PM யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வயோதிப பெண்மணியை வீட்டின் அறையொன்றினுள் வைத்து பூட்டி விட்டு , வீட்டினுள் சல்லடை போட்டு தேடிய நபர் ஒருவரை ஊரவர்கள் மடக்கி பிடித்துள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, திருநெல்வேலியில் வயோதிப பெண்மணி வசிக்கும் வீடொன்றினுள் செவ்வாய்க்கிழமை (25) காலை அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர், வீட்டில் இருந்த வயோதிப பெண்ணை வீட்டினுள் உள்ள அறை ஒன்றினுள் வைத்து பூட்டி விட்டு, வீட்டினுள் சல்லடை போட்டு தேடுதல் நடாத்தியுள்ளார். அவ்வேளை அறையினுள் பூட்டப்பட்டு இருந்த பெண்மணி அபாய குரல் எழுப்பவே , அயலவர்கள் வீட்டிற்கு சென்ற போது , வீட்டி…

  4. Published By: T. SARANYA 25 APR, 2023 | 02:47 PM (எம்.மனோசித்ரா) நாட்டின் பொருளாதார நிலைபேற்றுத் தன்மையை அடையும் செயன்முறையில் துரிதமாக மறுசீரமைப்புக்களை அறிமுகப்படுத்த வேண்டிய முக்கிய துறையாக கல்வித்துறையை அரசு அடையாளங் கண்டுள்ளது. அதற்கமைய, குறித்த அனைத்துப் பங்கீட்டாளர்களின் ஒத்துழைப்புடன் புதிய கல்விக் கொள்கைச் சட்டகத்தை தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. அடுத்துவரும் 25 ஆண்டுகளுக்கான தேசியக் கல்விக் கொள்கைச் சட்டகம் மற்றும் ஏற்புடைய அனைத்து மறுசீரமைப்புக்களையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து முன்னுரிமை அடிப்படையில் அமுல்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்குவதற்காக ஜனாதிபத…

  5. Published By: T. SARANYA 25 APR, 2023 | 02:35 PM (எம்.மனோசித்ரா) சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமானவகையில் 1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக சட்டத்தைத் திருத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய சட்ட விரோதமாக வெளிநாட்டு வேலைவாய்ப்புத் தொழிலுக்குப் பிரவேசித்துள்ள தரப்பினர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, உப முகவர்கள் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக இணைத்துக் கொள்கின்ற செயன்முறையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் புலம்பெயர் தொழிலாளர்களை ஆபத்துக்குள்ளாக்குகின்ற பாரியளவிலான மோசடிகள் மற்றும் ஊழல்களைக் குறைப்பதற்கு இயலுமைகிட்…

  6. Published By: T. SARANYA 25 APR, 2023 | 02:35 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) மாவட்ட ரீதியான பிரச்சினைகளை சபையில் எடுத்துரைக்கும் போது புலிகள் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாராளுமன்றத்தில் உரையாற்றும் வழிமுறைகளை ஆளும் தரப்பு அமைச்சர் கற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவை நோக்கி குறிப்பிட்டார். அமைச்சர் ஆற்றிய உரையில் 'புலிகள்' என குறிப்பிடப்பட்டிருக்குமாயின் அந்த சொல்லை ஹென்சாட்டில் இருந்து நீக்க வேண்டும் என சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த சபையில் தெரிவித்தார். ப…

  7. Published By: T. SARANYA 25 APR, 2023 | 12:54 PM வவுனியா, கட்டையர்குளம் பகுதியில் 12 ஏக்கர் காடு சட்டவிரோதமாக அழிக்கப்பட்டுள்ள போதும் இது தொடர்பில் பொலிஸாரும், வன இலாகாவும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வவுனியா, ஈச்சங்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள கட்டையர்குளம் பகுதியில் வனஇலாகாவுக்கு சொந்தமான காட்டுப்பகுதி 12 ஏக்கர் கடந்த சில நாட்களாக அழிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து அரச அதிகாரிகள் பலருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னரே மக்கள் முறையிட்டும் குறித்த காடழிப்பு தடுத்து நிறுத்தப்படவில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழ…

  8. Published By: DIGITAL DESK 5 25 APR, 2023 | 02:27 PM ஹப்புத்தளை பகுதியில் பெய்த அடை மழையுடன் ஏற்பட்ட மின்னல் தாக்கியதில் அதிர்ச்சியடைந்த தம்பேதன்ன மஹகந்த பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் ஹப்புத்தளை பங்கெட்டிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் மூவரும் வீட்டிலிருந்தபோதே மின்னல் தாக்கியதில் அதிர்ச்சியடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 42, 21 மற்றும் 17 வயதுடைய மூவரே மின்னல் தாக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/153716

  9. Published By: T. SARANYA 25 APR, 2023 | 09:59 AM மட்டக்களப்பு சித்தாண்டியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்த இளைஞனின் 5 உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்ட நெகிழ்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வயல்வேலை முடித்து கிரான் பகுதியிலிருந்து சித்தாண்டியிலுள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது பிரதான வீதியில் கிரானுக்கும் சித்தாண்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இந்திரசேன ரேனுஜன் (வயது 29) படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை …

  10. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், கத்தோலிக்க ஆயர்கள் பேரவையிடம் சமர்ப்பித்துள்ளார். கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் குருணாகல் மறைமாவட்ட ஆயர் ஹெரல்ட் அன்டனி ஆண்டகையிடம் அறிக்கை கையளிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் அனுமதியுடன், ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையிடம் கையளிக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/250630

  11. Published By: DIGITAL DESK 5 25 APR, 2023 | 11:41 AM கொழும்பு 15, மோதரவில் உள்ள சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி நிலையமொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அதன் உரிமையாளரின் வீட்டிலிருந்து மருந்து வகைகள் மற்றும் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிகப்படும் மூலப்பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் உணவு மற்றும் மருந்துகள் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த நபர் வலி நிவாரணி மாத்திரைகளை தயாரித்துள்ளதாகவும், இந்திய மருந்து வகைகளுக்கு நிகரான மருந்துகளை அவர் தயாரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப…

  12. Published By: DIGITAL DESK 5 25 APR, 2023 | 11:49 AM இலங்கையில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் மலேரியாவினால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. மாணிக்கக்கல் தொடர்பான வர்த்தக நோக்கத்துக்காக தன்சானியாவுக்குச் சென்று திரும்பிய களுத்துறை பேருவளை சீனன்கோட்டை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் நேற்று திங்கட்கிழமை (24) தெரிவித்தன. அவர் ஏப்ரல் 10 ஆம் திகதி அன்று இலங்கைக்குத் திரும்பினார். பின்னர் நான்கு நாட்கள் காய்ச்சலுடன் தனது வீட்டில் இருந்தார். ஏப்ரல் 14 ஆம் திகதி தனியார் வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஏப்ரல் 15 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளதாக தெரிய வந…

  13. Published By: T. SARANYA 25 APR, 2023 | 11:38 AM ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பொறியியல் பிரிவில் 25 வல்லுநர்கள் பற்றாக்குறையாக உள்ளதாகவும், ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட தொழில் வல்லுநர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக நாட்டை விட்டு வெளியேறி வருவதாகவும் தெரிய வந்துள்ளது. ஸ்ரீலங்கன் விமானங்களில் அண்மையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் தொடர்பில் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் நேற்று திங்கட்கிழமை (24) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவையின் உயர்மட்ட முகாமைத்துவம், பொறியியல் திணைக்களம், சிவில் விமான போக்குவரத்து அதிகாரசப…

  14. Published By: RAJEEBAN 25 APR, 2023 | 09:51 AM ஐடிஎன்னின் முன்னாள் பெண் ஊடகவியலாளர் பாலியல் துன்புறுத்தல்களிற்குள்ளானமை குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு பொதுமுகாமையாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக ஐடிஎன்னின் தலைவர் சுதர்சன குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான அதிகாரியை நியமிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசதொலைக்காட்சியொன்றின் பெண் ஊடகவியலாளர் பாலியல்துன்புறுத்தல்கள் குறித்து தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என ஊடக ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்;துள்ளது. …

  15. Published By: DIGITAL DESK 5 25 APR, 2023 | 11:12 AM கொழும்பு, பேலியகொடயிலுள்ள களஞ்சியம் ஒன்றில் பணிபுரியும் சுங்க அதிகாரிகள் குழுவொன்று 'குஷ்' என அழைக்கப்படும் அமெரிக்க கஞ்சாவை இன்று (25) கைப்பற்றியுள்ளது. இந்தக் கஞ்சா இரண்டு மரப்பெட்டிகளில் மறைத்து கனடாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக அந்த அதிகாரிகள் கூறினர். குறித்த மரப்பெட்டிகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முகவரியிடப்படடிருந்த இந்தப் பெட்டிகளைத் திறந்து பார்த்தபோது அவற்றில் அமெரிக்க கஞ்சா காணப்பட்டதகையடுத்து அவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் சந்தேகத்…

  16. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை தேடிச் சென்ற 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட குழுவினரிடம், வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட பெறுமதியான பொருட்களை பூமிக்கு அடியில் தேடுவதற்கு பயன்படுத்தப்படும் ஸ்கேனர் இயந்திரமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் புதுக்குடியிருப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழு ஆனந்தபுரம் பகுதியிலுள்ள வனப்பகுதியில் சோதனை நடத்தி சம்பந்தப்பட்ட குழுவினரை கைது செய்தனர். …

  17. வட, கிழக்கில் இன்று கதவடைப்பு போராட்டம் ! Published By: T. Saranya 25 Apr, 2023 | 09:45 AM பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கைவிட வேண்டும், வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்னும் கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கதவடைப்பு போராட்டம் இடம்பெறுகின்றது. தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில், வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் இன்று 25ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள பொது முடக்கம் ஊடான எதிர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ் மக்களும், சிவில் சமூக அமைப்புக்களும், மக்கள் பிரத…

  18. Published By: VISHNU 24 APR, 2023 | 06:02 PM (இராஜதுரை ஹஷான்) நல்லாட்சி அரசாங்கத்தினால் வீழ்ச்சி நிலைக்கு தள்ளப்பட்ட பொருளாதாரத்தையே 2019 ஆம் ஆண்டு பொறுப்பேற்றோம். அரசியல் இலாபத்துக்காகவே ராஜபக்ஷர்கள் திருடர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். மோசடி செய்யப்பட்ட அரச நிதியை அரசுடமையாக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். மாத்தளை பகுதியில் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, சேதன பச…

  19. 54 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த தருணத்தில், அதற்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளைய தினம் பூரண ஹர்த்தால் (முழு கடையடைப்பு) போராட்டத்தை நடத்த தமிழர் தரப்பு தீர்மானித்துள்ளது. 1979ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவினால் கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு பதிலாக, தற்போதைய அரசாங்கத்தினால் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக ப…

  20. 2023 முதல் காலாண்டில் அரச வரி வருவாய் 216% அதிகரித்து 316 பில்லியன் ரூபா வருமானமாக பெறப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் முதல் காலாண்டிற்கான வரி வருவாயின் விபரத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், வருமான வரி மற்றும் பெறுமதி சேர் வரி வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது. https://thinakkural.lk/article/250526

  21. மருதானை துணை மின்நிலைய மின் கம்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கொழும்பு 4, 5, 7, 8, 10, 12 மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள பல பகுதிகளில் தற்போது மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மருதானை துணை மின்நிலையத்தில் கேபிள் வெடித்ததனால் மின் தடை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொலன்னாவையில் உள்ள 132 KV துணை மின்நிலையத்திலும் கேபிள் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், கொழும்பு 4, 5 மற்றும் 7 ஆகிய இடங்களில் தற்போது மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/250528

  22. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 30.8% ஆக குறைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. குறைந்த நீர்மட்டம் நாட்டின் மின் உற்பத்தியை கணிசமாக பாதித்துள்ளது. குறிப்பாக காசல்ரீ, கொத்மலை மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களில் மிகக் குறைந்த நீர்மட்டம் பதிவாகியுள்ளது. காசல்ரீ நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு இப்போது 13% ஆகவும், கொத்மலை நீர்த்தேக்கம் மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கம் முறையே 13.3% மற்றும் 15% கொள்ளளவாகவும் உள்ளது. இதேவேளை விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 34% ஆகவும், ரந்தெனிகல நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 84% ஆகவும், சமன் வெவ நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 38% …

  23. Published By: DIGITAL DESK 5 24 APR, 2023 | 12:33 PM கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (24) காலை தெருநாய்கள் சுற்றித் திரிந்ததமை அவதானிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்துக்குள் நுழையும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை அந்த நாய்கள் சிரமப்படுத்தும் வகையில் நடந்துகொண்டிருந்தன. இது குறித்து ஊழியர்களிடம் கேட்டபோது, விமான நிலைய முனைய கட்டிடத்தின் நுழைவு வாயில்களுக்கு அருகில் உள்ள விமான நிலைய வளாகத்தில் இந்த நாய்கள் சுற்றித் திரிவதாக தெரிவித்தனர். இந்த நாய்கள் எப்படியாவது விமான நிலைய ஓடுபாதையிலோ அல்லது விமானக் கட்டடத்திலோ நுழைந்தால், கடுமையான விபத்துகள் ஏற்பட வாய…

  24. பாகிஸ்தானில் உள்ள உயிரியல் பூங்காக்களுக்கு இரண்டு யானைகளை பரிசளிக்க இலங்கை தீர்மானித்துள்ளது. கராச்சி மிருகக்காட்சிசாலையில் நூர் ஜெஹான் என்ற ஆப்பிரிக்க யானை இறந்ததைத் தொடர்ந்து, நல்லெண்ணத்தின் அடையாளமாக பாகிஸ்தானுக்கு இரண்டு யானைகளை வழங்குவதற்கு இலங்கை உறுதியளித்துள்ளதாக இரண்டு பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திடம் இரண்டு யானைகளுக்கு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, இலங்கை இரண்டு யானைகளை பாகிஸ்தானுக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது – ஒன்று கராச்சி மிருகக்காட்சிசாலைக்கும் மற்றைய யானை லாகூருக்கும் அனுப்படவுள்ளன. https://thinakkural.lk/article/250458

  25. Published By: T. SARANYA 24 APR, 2023 | 01:48 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணம் தீவகத்தில் முறையற்ற வகையில் பரம்பரை காணியை மோசடியான முறையில் தனது பெயருக்கு உரிமம் மாற்றிய குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மோசடிக்கு துணை நின்றனர் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 12 சகோதரங்கள் இடையே பிரிவிடல் செய்யப்பட்டவேண்டிய ஆதனத்தை ஒரு சகோதரர் மட்டும் முறையற்ற வகையில் தனது பெயருக்கு மாற்றிய குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தார்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.