ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143638 topics in this forum
-
பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்டமாக 100 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான நிவாரணப் பொருள்களை அனுப்பிவைக்க இந்தியா தீர்மானித்துள்ளது. இலங்கையின் வன்னிப் பகுதியில் இடம்பெறும் மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்காகத் தமிழகத்தில் நிதி சேகரிக்கப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 100 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான நிவாரணப் பொருள்கள் கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்படவிருப்பதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் டி.பி.திவாரட்ண கூறினார். வன்னியிலுள்ள மக்களுக்கு எந்த வகையிலான பொருள்கள் தேவையொன இந்தியா தம்மிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகக் குறிப்பிட்ட திவாரட்ண, வீட்டுக் கூரைவிரிப்புக்கள், சமைப்பதற்கான கருவிகள், உடுதுணிகள், தற்காலிக கூடாரங்கள் போன்ற பொருள்கள…
-
- 0 replies
- 790 views
-
-
உலகத்தில் பூச்சிகொல்லிகளை தெளிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்ற சிறிய ரக விமானங்களையே புலிகள் பயன்படுத்துகின்றனர். புலிகளின் அவ்வாறானதொரு விமானமொன்றை ஒரு மாதத்திற்கு முன்னர் விமானப்படையினர் தாக்கியழித்துள்ளனர். ஏனைய வற்றையும் தாக்கியழிப்பதற்கான தந்திரோபாயங்களை கையாள்கின்றோம் என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாளருமான அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக சகலரும் ஒத்துழைக்கவேண்டும் அதைவிடுத்து கோப்பிக்கடை பேச்சுவார்த்தைகளுக்கெல்லாம
-
- 0 replies
- 916 views
-
-
கடந்த சில நாட்களாக தமிழக தலைவர் கலைஞர் மு.க.கருணாநிதியின் முயற்சியினால் திரட்டப்படும் நிதியின் மூலம் சிங்களத்தின் கொலை வெறிக்கரங்களினால் பாதிக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களுக்காக, தமிழக உறவுகளால் அனுப்பி வைக்கப்பட இருக்கும் உணவு, மருத்துவ அத்தியாவசிய பொருட்டகளை தடுத்து, சுருட்டுவதற்கு, சிங்களவர்களினாலும் 10% கொமிஷன் அமைச்சர் என அழைக்கப்படும் பசில் ராஜபக்ஸவுடன் இணைந்து சதி செய்வதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது: http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1&
-
- 3 replies
- 1.2k views
-
-
பகுதி-1
-
- 10 replies
- 1.7k views
-
-
பகுதி-1
-
- 0 replies
- 562 views
-
-
"உல்லாசப்பயணிகளின் சொர்க்கமாக விளங்கிவரும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள்" எனும் தலைப்பில் ஜேர்மனியில் உள்ள சுட்காட் நகரில் விவாத அரங்கொன்று கடந்த புதன்கிழமை (29.10.08) மாலை நடைபெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 547 views
-
-
ஐக்கியப்பட்ட நடவடிக்கையே தமிழகத்திலிருந்து எதிர்பார்ப்பு [02 நவம்பர் 2008, ஞாயிற்றுக்கிழமை 9:20 மு.ப இலங்கை] வீரியத்தை விட, காரியம்தான் முக்கியமானது. வேகத்தை விடவும் விவேகம்தான் முக்கிய மானது. எண்ணிக்கையில் அதிகமானவர்களான பெரும் பான்மையினரால் ஈவு, இரக்கமற்ற அடக்கு முறைக்கு ஆளாகியிருக்கின்ற சொற்ப எண்ணிக் கையினரான- சிறுபான்மையினரான-ஈழத் தமிழர்களுக்கும் அவர்க ளது தலைமைத்துவங்களுக்கும் ஆதரவு சக்திக ளுக்கும் இதுதான் பிரதான விடயமாகும். வேகம் காரணமாக விவேகத்தையோ, வீரியம் காரணமாக காரியத்தையோ கோட்டை விட்டுவிட லாகாது. ஈழத் தமிழ் மண்ணில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பேரவலத்திலிருந்து அவர்களை விடுவிக்கும் முயற் சியில் இந்த விவேகச் செயற்பாடும் காரியத்தில் கண்ணும் அவசி…
-
- 0 replies
- 741 views
-
-
தடுக்க முடியாது போகும் புலிகளின் விமானத் தாக்குதல் [02 - November - 2008] விதுரன் கிளிநொச்சி மற்றும் பூநகரிக்கான இறுதிப் போரைத் தொடங்கப் போவதாக படைத்தரப்பு கூறுகின்றது. இந்தப் பகுதிகளுக்கான படை நகர்வைத் தடுப்பதற்காக புலிகளால் இதுவரை போடப்பட்டிருந்த தடைகளெல்லாம் தகர்த்தெறியப்பட்டுவிட்டதால
-
- 0 replies
- 799 views
-
-
விடுதலைப் புலிகளின் விமானப்படை 9 ஆவது தடவையாகவும் தாக்குதல் நடத்தி விட் டுப் பத்திரமாக தரையிறங்கியிருப்பது அரச, பாதுகாப்பு வட்டாரங்களைப் பெரும் திகைப் புக்குள்ளாக்கியிருக்கிறது. கடந்த 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 10.15 மணியளவில் இரணைமடுவில் உள்ள புலிகளின் விமான ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட இரண்டு இலகு ரக விமா னங்கள் ஐந்தே நிமிடங்களில் மன்னார் வான் பரப்பை அடைந்தன. இரவு 10.20 மணியளவில் முதலாவது குண்டு தள்ளாடிப் படைத்தளத்தின் மீது வீசப் பட்டது. அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வீசப் பட்டன. தள்ளாடியில் இருந்த 58 ஆவது டிவிசன் தலைமையகத்தின் ஆட்லறி ,பல்குழல் பீரங்கி களே இந்த விமானங்களின் இலக்காக இருந் தன எனக்கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் படையினர் தரப்பில்…
-
- 0 replies
- 778 views
-
-
மூதூரில் இருந்து இடம்பெயர்ந்தோர் சொந்த இடங்களில் மீள் குடியேற்றம் வீரகேசரி இணையம் 11/2/2008 9:57:34 AM - மூதூர் பிரதேச செயலக பிரிவில் இருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பில் தங்கியிருந்த மக்களில் ஒரு தொகுதியினர் கடந்த வியாழக்கிழமை மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். 61 குடும்பங்களைச் சேர்ந்த 204 பேர் வெருகல் ஊடாக அவர்களது சொந்த இடங்களில் இவ்வாறு மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.
-
- 0 replies
- 430 views
-
-
இரணைமடுப் பகுதியில் வான் தாக்குதல்கள் ஞாயிறு, 02 நவம்பர் 2008, 08:01 மணி தமிழீழம் [செய்தியாளர் செந்தமிழ்] கிளிநொச்சி இரணைப் பகுதியில் சிறீலங்கா வான்படையினர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் வன்னி வான்பரப்பினுள் நுழைந்த மிகையொலி யுத்த வானூர்கள் இரணைமடுப் பகுதியிலிருந்து 2.5 கிலோமீற்றர் தொலைவில் உள்ள வனப் பகுதியில் குண்டுகளை வீசிச் சென்றுள்ளன. பதிவு
-
- 0 replies
- 577 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் விடுதலைக்கு உரமாகி ஓராண்டு ஆகிறது. விமானக்குண்டு வீச்சிற்கு இலக்காகி, வீர மரணமுற்ற தமிழ்ச்செல்வனிற்கு, கலைஞர் கருணாநிதி இரங்கற்பாபாடியும் ஒருவருடகாலமாகிவிட்டது. இடம்பெயரும் மக்கள் பாதிக்கப்படுவது நிறுத்தப்படவில்லை. அவை நிறுத்தப்படுமெனக் கூறிய ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும், இளைய சகோதரருமான பசில் ராஜபக்ஷவின் உறுதிமொழியை வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், கருணாநிதியும் ஏற்றுக்கொண்டு மத்திய அரசைக் காப்பாற்றி விட்டார்கள்.எந்த மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த, தமிழகமெங்கும் போராட்டத்தை தனது தலைமையின்கீழ் முன்னின்று கருணாநிதி நடத்தினாரோ அந்நோக்கம் நிறைவேற்றப்படவில்லை.…
-
- 0 replies
- 591 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக திரைப்பட தொழிலாளர்கள் உண்ணாநிலைப் போராட்டம் [ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2008, 08:52 மு.ப ஈழம்] [ந.ரகுராம்] ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக திரைப்படத் தொழிலாளர்கள் எதிர்வரும் புதன்கிழமை உண்ணாநிலைப் போராட்டத்தினை (05.11.08) நடத்தவுள்ளனர். இது தொடர்பில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் விஜயன், பொதுச் செயலாளர் உமாசங்கர் பாபு ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை கண்டித்தும், அப்பாவி மீனவர்கள் சுடப்படுவதை கண்டித்தும் 5 ஆம் நாள் காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை சம்மேளனத்தைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் …
-
- 3 replies
- 1.2k views
-
-
ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயற்படும் அனைவரும் ஈனத்தனமானவர்கள்: நடிகர் சத்யராஜ் [ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2008, 08:54 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்] ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயற்படும் அனைவரும் ஈனத்தனமானவர்கள் ஆவர் என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று சனிக்கிழமை நடிகர்கள் நடத்திய உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கேற்று நடிகர் சத்தியராஜ் உரையாற்றிய போது மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் யாரும் குண்டுவீசி கொல்லப்படவில்லை. எல்லோரும் சர்க்கரை நோய் போன்ற உடல்நலம் இல்லாமல்தான் இறந்து போயிருக்கிறார்கள். செஞ்சோலை என்கிற இடத்தில் பள்ளிக்கூடத்தின் மீது குண்டுவீசியபோது கூட போராளிகள் பதுங்கியிருந்ததால் குண்டு வீசினோம் என்று சிங்கள அரசு தெரிவித்தது. அதைக…
-
- 0 replies
- 677 views
-
-
வான்புலிகள் பயன்படுத்திய புதிய குண்டுகள்: "சண்டே ரைம்ஸ்" [ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2008, 08:29 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] வான்புலிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலின் போது வீசப்பட்ட குண்டுகள் முன்னயை குண்டுகளில் இருந்து வேறுபட்டவை. இந்த குண்டுகள் வானிலேயே வெடிக்கும் தன்மை கொண்டவை என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: கடந்த வாரம் விடுதலைப் புலிகளின் இரு தளங்களுக்கு இடையில் நடைபெற்ற உரையாடலில் கறுப்பு பறவைகள், கறுப்பு காற்று என்னும் சொற்பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததை படையினரின் புலனாய்வுத்துறை அவதானித்திருந்தது. …
-
- 1 reply
- 993 views
-
-
வன்னி படை நடவடிக்கையின் விளைவுகள் எதிர்காலத்தில் நிகழப் போகின்ற போரின் விளைவுகள் எப்படியிருக்கும் என்பதற்கான ஆரம்ப அறிகுறிகளாகவே கடந்தவார நிகழ்வுகள் தென்படுகின்றன. ஏனெனில் மேற்கு வன்னியின் வடக்குப்புறம் நிகழ்ந்த முன்னகர்வின் போது ஏற்பட்ட மூர்க்கமான சண்டைகளும், அதனால் ஏற்பட்ட பாரிய இழப்புகளும் மற்றும் வான்வழித் தாக்குதலில் புலிகள் கடைப்பிடித்த நவீன உத்திகளும். இப்போரின் இன்னொரு பரிணாமத்துக்குள் இட்டுச் சென்றிருக்கிறது. அரசபடைகள் கிளிநொச்சியை நோக்கி நகருவதாகவும் அதே வேளை மாங்குளத்திற்கும் முறிகண்டிக்கும் இடைப்பட்ட ஏ9 வீதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்காகவும் மிகக் கடும் பிரயத்தனத்தைப் பிரயோகித்து ஏ9 வீதிக்கு சமாந்தரமாக ஆனால் நெருக்கமாக நிலை கொண்டிருக்கின்ற…
-
- 1 reply
- 1.2k views
-
-
வடமராட்சி கடற்பரப்பில் கடற்புலிகள் தாக்குதல்: டோறா பீரங்கிப் படகு, கூகர் படகு மூழ்கடிப்பு; நீருந்து விசைப்படகு சேதம்; 20 படையினர் பலி [சனிக்கிழமை, 01 நவம்பர் 2008, 09:29 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] யாழ். வடமராட்சி கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அணியின் தாக்குதலில் சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகும் கூகர் படகும் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளன. நீருந்து விசைப்படகு கடுமையாகச் சேதமாக்கப்பட்டுள்ளது. மேலும் படகுகள் சேதமாகியுள்ளன. 20 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: வடமராட்சி கிழக்கில் உள்ள மணற்காட்டுக்கு நேரான கடற்பரப்பில் இன்று சனிக்கிழமை அதிகாலை 4:00 மணியளவில் சுற…
-
- 6 replies
- 1.5k views
-
-
வன்னி மக்களுக்கான தமிழக உதவிகளை சுருட்ட பசில் ராஜபக்ஸவுடன் சதி செய்யும் ஒட்டுக்கும்பல் ஆயுததாரி டக்லஸ் கடந்த சில நாட்களாக தமிழக தலைவர் கலைஞர் மு.க.கருணாநிதியின் முயற்சியினால் திரட்டப்படும் நிதியின் மூலம் சிங்களத்தின் கொலை வெறிக்கரங்களினால் பாதிக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களுக்காக, தமிழக உறவுகளால் அனுப்பி வைக்கப்பட இருக்கும் உணவு, மருத்துவ அத்தியாவசிய பொருட்டகளை தடுத்து, சுருட்டுவதற்கு, சிங்களவர்களினாலும் 10% கொமிஷன் அமைச்சர் என அழைக்கப்படும் பசில் ராஜபக்ஸவுடன் இணைந்து சதி செய்வதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
- 1 reply
- 1.1k views
-
-
வான்புலிகளின் தாக்குதல் அச்சத்தினால் பதுங்கு குழிக்குள் ஓடிய மகிந்த [ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2008, 05:07 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் வான் பரப்பில் வான்புலிகள் கடந்த செவ்வாய்க்கிழமை பறப்பினை மேற்கொண்ட போது தனது பாதுகாப்புக் கருதி சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழிக்குள் சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பதுங்கியதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: களனிதிச அனல் மின் உற்பத்தி நிலையத்தை கடந்த செவ்வாய்கிழமை வான்புலிகள் தாக்கிய போது கொழும்பின் பல பகுதிகளுக்கு மேலாக வான் புலிகள் பறப்பில் ஈடுபட்டிருந்தனர். எனவே வான்புலி…
-
- 7 replies
- 1.8k views
-
-
புலிகளின் விமானங்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய துப்பாக்கிதாரிகள் - லக்பிம வார ஏடு கடந்த வாரம் கொழும்பின் களனிதிச்ச மின் உற்பத்தி நிலையம் மீது தாக்குதல் நடத்திவிட்டு கிளிநொச்சி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த புலிகளின் விமானங்கள் மீது கொழும்பு காலி முகத் திடல் பகுதியில் அமைந்துள்ள இந்திய உயர் ஸ்த்தானிகராலயத்திலிருந்து கடுமையான விமான எதிர்ப்புத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இத்தாக்குதலால் அருகிலிருந்த பல கட்டடங்கள் அதிர்ந்ததாக பலர் தெரிவித்துள்ளனர். காலிமுகத்திடலுக்கு அருகில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த முக்கிய புள்ளி ஒருவர் இதுபற்றிக் கூறுகையில், " அதுபோன்ற துப்பாக்கிச் சத்தத்தை நான் இதுவரை கேட்டதில்லை, எனது அறையெல்லாம் இதனால் அதிர்ந்து கொண்டிருந்தத…
-
- 3 replies
- 1.8k views
-
-
தமிழர்களின் துயரைத் திசைதிருப்பும் துதிபாடிகள் - பழ.நெடுமாறன் கடந்த 30 ஆண்டு காலத் திற்கு மேலாக அண்டை நாடான இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இனவெறிப் படுகொலைகள் குறித்த பிரச்சனையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் வரவேற்கத்தக்க பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த 14.10.2008 அன்று தமிழக முதல்வர் திரு.கருணாநிதி அவர்கள் தலைமையில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இந்தியாவில் மட்டுமல்ல - உலகெங்கும் உள்ள தமிழர்கள் நடுவில் பெரும் உற்சாகத்தை ஊட்டியுள்ளது. அக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்துத் தலைவர்களுமே இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்படுவது குறித்துப் பெரும் கவலை தெரிவித்தனர். போரை உடனடியாக நிறுத்தி…
-
- 0 replies
- 1.4k views
-
-
புலிகளின் புதிய தடுப்பரண் சிங்களருக்கு நெருக்கடி இந்திய இராணுவம் முன்பு பயன்படுத்திய தடுப்பரண்களைப் போல் விடுதலைப்புலிகள் ஏற்படுத்தி வைத்துள்ள தடுப்பரண்களால், தரை மார்க்கமாக முன்னேற முடியாமல் சிங்கள இராணுவம் பெரும் தவிப்புக் குள்ளாகியுள்ளதாக இந்திய இணையதளமொன்று தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகள் குறித்து பல்வேறு விதமான கருத்துகள் நிலவி வந்தாலும், அவர்களின் இராணுவ உத்திகள் பெரும் வியப்பளிப் பவையாகவே உள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு நாட்டின் இராணுவத்திடம் இருக்க வேண்டிய அத்தனை வசதியும் சாதுரியமும், புத்திசாலித்தனமும் ஆயுத, ஆள் பலமும் புலிகளிடம் உள்ளது. இந்த நிலையில், புலிகள் ஏற்படுத்தி வைத் துள்ள பாதுகாப்பு அரண்கள…
-
- 1 reply
- 2.5k views
-
-
தனது கண்ணையே தனது விரலால் குத்திக்கொள்ளும் இந்தியா? - மு. திருநாவுக்கரசு (யாழ் பேராசிரியர்) சிங்கள ஆட்சியாளர் தமது பிர தான பாரம்பரிய எதிரியாக கருதுவது இந்தியாவையே. இந்த வகையில் சிங்கள அரசியல் வாதிகள் ஈழத்தமிழரை இந்திய விரிவாக் கத்திற்கான கருவியாகக் கண்டு அச்சமடைகிறார்கள். ஆதலால் ஈழத்தமிழரை தோற் கடிப்பதிலிருந்தே இந்தியாவிற்கு எதிரான தமது போரை சிங்கள ஆட்சியாளர் ஆரம்பித்துள்ளார்கள். இந்த விடயத்தில் இந்திய மத்திய அரசு ஈழத்தமிழரை ஒடுக்குவதற்கு சிங் கள அரசுக்கு உதவுவதன் மூலம் அது தனக்கு எதிராகத் தானே போர் புரியும் நிலைக்குப் போய்விட்டது எனலாம். இதனை சற்று விரிவாக நோக்குவோம். ஈழத்தமிழரை தமிழகத்தின் நீட்ட மாகவே சிங்கள அரசியல்வாதிகளும் சிங்க…
-
- 1 reply
- 1.1k views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மீது வழக்கு தொடர ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 681 views
-
-
ஓர் தரம் பாருங்கள் http://www.lankasriads.com/pages/vaddakkachchi/
-
- 4 replies
- 2k views
-