ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143412 topics in this forum
-
இலங்கையில் தமிழர்களைப் பாதுகாப்பதற்காக தனது இயக்கத்தின் 21,000 பேரை பலிகொடுத்த விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல. அவர்கள் மீதான தடையை இந்திய அரசு உடனே நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இயக்குனர் சீமான். இலங்கையில் தமிழர் படுகொலையை கண்டித்து ராமேஸ்வரத்தில் திரையுலகத்தினர் நடத்திய போராட்டத்தில் டைரக்டர்கள் சீமான், அமீர் ஆகியோர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கண்டனம் தெரிவித்தார். அதற்கு பதில் அளித்து சீமான் அளித்துள்ள ஒரு பேட்டியில், விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கமா என்று கருத்து கணிப்பு நடத்தப்பட்டுஉள்ளது. 86 சதவீதம் மக்கள் அவர்களை தீவிரவாத இயக்கம் அல்ல என்று கூறியுள்ளனர். ஆட்சியையே மக்கள்தான் தீர்மானிக்கிறார்…
-
- 12 replies
- 2k views
-
-
தமிழ் திரைப்பட இயக்குனர்களான சீமான், சேரன் மற்றும் அமீர் ஆகியோரை தமிழக காவற்துறையினர் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை ராமேஸ்வரத்தில் நடைபெற்ற தமிழ் திரையுலகின், ஈழ தமிழர்களுக்கு ஆதரவான பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில், இந்த இயக்குனர்கள், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை புகழ்ந்து பேசியதாகவும் இந்திய காங்கிரஸ் கட்சி குற்றம்சுமத்தியுள்ளது. அத்துடன் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அந்த கட்சி வலியுறுத்தியுள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று கைதுசெய்யப்பட்டதை அடுத்து, சீமான், சேரன், அமீர் ஆகியோரும் கைதுசெய்யப்படலாம் என தமிழக காவற்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்து…
-
- 1 reply
- 1.8k views
-
-
ஜே.வி.பி. யின் பாராளுமன்றக் குழுத் தலைவரான அநுரகுமார திஸாநாயக்கவும் அக்கட்சியின் உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரனும் 10 நாட்கள் விஜயமாக கனடா சென்றுள்ளனர். கனடா நோக்கி புறப்பட்ட இவர்கள் இருவரும் அங்கு தங்கியிருக்கும் நாட்களில் இலங்கையின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பாக தமிழ், சிங்கள மாநாடொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஜே.வி.பி. வட்டாரங்கள் தெரிவித்தன. அத்துடன், கனடாவிலுள்ள ஜே.வி.பி.யின் கிளைக் காரியாலய அங்கத்தவர்களையும் இந்த விஜயத்தின் போது ஜே.வி.பி. எம்.பி.க்கள் இருவரும் சந்தித்து பேசவிருக்கின்றனராம். ஏற்கனவே கனேடிய தமிழ் மக்கள் கொதித்துப்போய்யுள்ள இன்நிலையில் ,JVP உறுப்பினர்கள் தர்மடி வாங்காமல் நாடுதிரும்புவது கடினம். http…
-
- 7 replies
- 1.3k views
-
-
தனித்தமிழ்நாடு கோரி பேசியதாக மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அக்கட்சியின் அவைத்தலைவர் கண்ணப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நாளை மறுநாள் சனிக்கிழமை (25.10.08) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ம.தி.மு.க. அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 646 views
-
-
ஆயுதம் ஏந்திப் போராடுவேன் என்று சொன்னதில் மாற்றுக் கருத்து இல்லை: கைதுக்குப் பின் வைகோ [வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2008, 10:08 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] ஈழத் தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு ஆயுதங்கள் வழங்கி வருவதால், தேவைப்பட்டால் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக கையில் ஆயுதம் ஏந்தி போராடுவேன் என்று தான் சொன்னேன். இதில் மாற்றுக்கருத்து இல்லை என்று சென்னையில் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்ட பின் ஊடகவியலாளர்களிடம் வைகோ பேசியதாவது: இந்திய அரசு, இலங்கை தமிழர்களுக்கு எதிராக ஆயுதம் மற்றும் ராடர் கருவிகளை சிங்கள அரசுக்கு வழங்கி, இனப்படுகொலையை ஊக்குவித்து வருகிறது. இதற்கு, நான்க…
-
- 0 replies
- 712 views
-
-
3ம் இணைப்பு)எனது அறிக்கையால்தான் வைகோ கைது- திருமா, பாரதிராஜா- சீமானையும் கைது செய்க: ஜெயலலிதா [வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2008, 09:39 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] தான் வெளியிட்ட அறிக்கையால்தான் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அவைத்தலைவர் கண்ணப்பன் உள்ளிட்டோரை கைது செய்த தமிழக முதல்வர் கருணாநிதி, புலிகளை ஆதரிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாளவன், இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான், அமீர் உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: எந்தப் பிரச்சினையானாலும் அதை அரசியலாக்கி ஆதாயம் தேடுவதில் கருணாநிதி கைதேர்ந்தவர் என்பதைத் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். இலங்கைத் தமிழர் படுகொ…
-
- 1 reply
- 1k views
-
-
சிறீலங்காவின் அரச பயங்கரவாதம் அப்பாவித் தமிழர்கள் மீது எப்படி கட்டவிள்த்து விட்டிருக்கிறது என்பதை தமிழ்நாட்டில் உலாவும் காணொளிகள் மூலம் அறிந்திருப்பீர்கள். முன்னறிவித்தல் படங்கள் கோரமானவை! http://www.sinhala.net/LocalNews/SinhalaNe...=795#NewsViewBM http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23582 இந்தியாவில் தடை செய்யப்பட்டதாகவும் கொடுமையான பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படும் புலிகள் சிறீலங்காவோடு போராடி மரணமடையும் பொழுது எவ்வாறு அவர்களது உடலங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாட்டின் படைகளால் அதன் நிர்வாக கட்டமைப்பால் கைய்யாளப்படுகின்றன என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசு எப்படி இயங்கக் கூடாதே அதற்கு உதாரணமாக இருக்கிறது ச…
-
- 3 replies
- 1.6k views
-
-
வைகோவை விடுவிக்க வேண்டும்: பழ.நெடுமாறன் [வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2008, 09:51 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] தனித்தமிழ்நாடு கோரத் தூண்டியதாக கைது செய்யப்பட்டுள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார். பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய காலக்கட்டம் இது. தமிழ்ப்பகைவர்கள் சிலர் கூச்சல் போடுகிறார்கள் என்பதற்காக இத்தகைய கைது நடவடிக்கைகளை தொடர்வது ஜனநாயக விரோத செயலாகும். உடனடியாக அவரை விடுதலை செய்யும்படி வற்புறுத்துகிறேன்…
-
- 0 replies
- 538 views
-
-
சென்னை சிறிலங்கா துணைத் தூதரகம் முற்றுகை- மாணவர்கள் ஆவேசத் தாக்குதல்- காவல்துறை துப்பாக்கிச்சூடு [வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2008, 09:44 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தை தமிழக மாணவர்கள் முற்றுகையிட்டு இன்று ஆவேசத் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈழத் தமிழர்கள் மீதான சிறிலங்காவின் படுகொலையைக் கண்டித்து சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தை முற்றுகையிட சட்டக் கல்லூரி மாணவர்கள் முடிவு செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை முற்பகலில் நூற்றுக்கணக்கான சட்டக் கல்லூரி மாணவர்கள் தூதரகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்தும் தூதரகத்துக்குள் நுழைந்த…
-
- 0 replies
- 704 views
-
-
ஈழத்தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று வியாழக்கிழமை தொடருந்து மறியல் போராட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 519 views
-
-
http://vimbamkal.blogspot.com/2008/10/gtv-spl.html
-
- 0 replies
- 943 views
-
-
சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகாராலயக் காரியாலயம் மீது சற்று முன்னர் கல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காரணமாக உயர்ஸ்தானிகராலயக் கட்டடத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மாணவர் குழுவொன்றினால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழக முதல்வர் மு.கருணாநிதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா ஜெயராம் ஆகியோரின் வாசஸ்தலங்களிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த பிரதேசத்தில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற போது பிரதி உயர்ஸ்தானிகர் ரி.எம்.ஹம்ஸா காரியாலயத்தில் இருக்கவில்லை எனத் தெரிவிக்…
-
- 0 replies
- 826 views
-
-
சீமானும் கைது செய்யப் பட்டதாக தற்போது தமிழக நண்பர் ஒருவர் சொன்னார். ஏதேனும் தகவல்கள்?
-
- 3 replies
- 2.4k views
-
-
யுத்தத்தை முடித்துவிட்டு சமாதானம் குறித்து பேசுவோம் என்பது அத்தனை தமிழர்களையும் அடக்கி ஒடுக்கி மண்டியிட வைத்துவிட்டு இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்பதைப் போன்றே அமையும். இந்த நிலைப்பாட்டை சிறுபான்மை சமுகத்தைச் சேர்ந்தவன் என்ற ரீதியில் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சமுக அநீதி ஒழிப்பு அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான பெ.சந்திரசேகரன் தெரிவித்தார். இனப்பிரச் சினைக்குதீர்வு காண்பதில் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கவே இந்தியா விரும்புகின்றது என்றும் அவர் தெரிவித்தார். அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களையும் இல்லாமல் செய்ய முயலலாம். ஆனால், இதனைவிட வலிமையான தலைமைத்துவம் ஒன்று விஸ்வரூபம் எடுப்பதை எவரா…
-
- 0 replies
- 776 views
-
-
ஈழத்தமிழ்மக்கள் பிரச்சனையில், இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து, இன்று காலைமுதல் தமிழகமெங்கும் விடுதலைச்சிறுத்தைகளால் மேற்கொள்ளப்பட்ட மேற்கொள்ளப்பட்ட தொடரூந்து மறியற் போராட்டங்களில் பல்லாயிரக்கணக்கான விடுதலைச்சிறுத்தை கட்சி உறுப்பினர்கள் கைதாகியுள்ளனர். கைதாகும் இவர்களைக் காவலில் வைப்பதற்கு, காவல் நிலையங்களில் பொதுமான இடங்கள் இல்லாத காரணத்தால், பெரியளவிலான மண்டபங்களில் வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இப்போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவனும், கைதாகிக் காவலில் வைக்கபட்டுள்ளார். கைதாகியுள்ள நிலையில், 4தமிழ்மீடியாவிற்கு வழங்கிய சிறப்புச்செவ்வி. http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=267
-
- 0 replies
- 1.3k views
-
-
அம்பாறையில் நேரடி மோதல். இரு ராணுவம் பலி ! அம்பாறையில் சிறிலங்கா இராணுவம் - புலிகள் நேரடி மோதல்: 2 இராணுவத்தினர் பலி [வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2008, 03:23 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டத்தில் உள்ள வக்குமுட்டியா பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற நேரடி மோதலில் இராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: வக்குமுட்டியா பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை முற்பகல் 11:05 நிமிடமளவில் நேரடி மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் சிறிலங்கா …
-
- 1 reply
- 792 views
-
-
http://www.4tamilmedia.com/index.php?optio...tlink&id=25
-
- 5 replies
- 1.7k views
-
-
திருவாரூர்: இலங்கை தமிழர் பிரச்சனையில் தமிழக அரசு பதவி விலக முன் வர வேண்டும் என்று மதுரை ஆதினம் கூறியுள்ளார். திருவாரூர் வந்த மதுரை ஆதினம் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு கொடுத்துள்ள நெருக்கடி சரியான முடிவாகும். 28ம் தேதி மத்திய அரசு சரியான முடிவு எடுக்காவிட்டால் தமிழக அரசு பதவி விலக வேண்டும். இலங்கை தமிழர் பிரச்சனையில் ஜாதி, மதம், அரசியல் பாராமல் அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து போராட முன் வரவேண்டும். இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தேவைப்படும் உணவு, உடை, மருந்துகள் அனுப்ப மத்திய அரசு விதிகளை தளர்த்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். யாழ்பாணத்தில், திரிகோணமலையில், திருச்சேரத்தில்…
-
- 7 replies
- 2.6k views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணாவுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானுக்கும் இடையிலான முறுகல் நிலை மேலும் மேலும் உக்கிரமடைந்து செல்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கருணாவை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளாக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என நேற்றைய தினம் கட்சி தகவல் வெளியிட்டுள்ளது. இதேவேளை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருக்கும் சில உறுப்பினர்கள் தம்மை தலைமைப் பதவிலிருந்து விலக்க முயற்சி மேற்கொள்தாகவும், அதற்கு மக்கள் இடமளிக்க மாட்டார்கள் எனவும் கருணா குறிப்பிட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பின் போது கருணா வெளியிட்ட கருத்துக்கள் கிழக்கில் பெரும் எதிர்ப்பலையை ஏற்ப…
-
- 3 replies
- 2.1k views
-
-
இறையாண்மை உள்ள நாடு ஒன்றின் மீது மற்றுமொரு இறைமையுள்ள நாடு தலையீடுகளை மேற்கொள்ள முடியாது எனவும் இலங்கையின் தேசிய பிரச்சினையில் இந்தியாவின் தலையீடானது, விடுதலைப்புலிகளின் ஈழக் கனவையும் பயங்கரவாதத்தையும் போஷிக்கும் நடவடிக்கை எனவும் கூறி, புது பல சேனா (புத்தரின் படை) என்ற பௌத்த அமைப்பு இந்திய உயர்ஸ்தானிகரிடம் மகஜர் ஒன்றை இன்று கையளித்துள்ளது. இந்த அமைப்பை சேர்ந்த பௌத்த பிக்குகள் கொழும்பு கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து, இந்திய தூதரகம் வரை ஊர்வலமாக சென்று இந்த மகஜரை கையளிக்க திட்டமிட்டிருந்தனர். எனினும் பாதுகாப்புத் தரப்பினர், அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, வாகனங்களில் சென்று இந்திய உயர்ஸ்தானிகரிடம் மகஜரை கையளித்துள்ளனர். மகஜரைக் கையளிக்க முன்னர், கருத்து த…
-
- 8 replies
- 2.4k views
-
-
காங்கேசன் துறை கடற்பரப்பில் கடற்புலிகளின் கரும்புலிகளால் தாக்கியழிக்கப்பட்ட இரு கப்பல்கள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஹர்த்தால் அனுஸ்டிக்கக் கோரி அழைப்பு விடுத்து துரோகக் கும்பல் ஈ.பி.டி.பி நேற்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. யாழுக்கு அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும் கப்பல் மூலமாகவே அனுப்பப்படுகின்றன. யாழ் குடாவிற்கு அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது எனவும், விலையுயர்வு ஏற்பட்டு வருகின்றது எனவும் வெறும் வாய்ப்பிரசாரம் செய்தவர்க்ள மக்களின் அவலங்களை எப்போதும் வேடிக்கi பார்த்ததே வரலாறு. ஈ.பி.டி.பியாகிய நாம் வேடிக்கை பாhக்காமல் மக்களின் துயரங்களைப் போக்கும் ஆக்கபூர்வமான முயற்சிகளை அயராது எடுத்ததன் பயனாக பொருட்களின் தட்டுப்ப…
-
- 9 replies
- 2.3k views
-
-
உலக நாடுகள் எம் பின்னால் இருக்கும் வரை இராணுவ முன்னெடுப்புக்கள் தொடரும் - அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிப்பு பயங்கரவாதத்தை ஒழிப்போம் என்ற ஒரேயொரு தொனிப்பொருளின் கீழ் செயற்பட்டு வரும் உலக நாடுகள் அனைத்தும் நமது பின்னால் இருக்கும் வரையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ முன்னெடுப்புக்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும். கடந்த 30 வருடகால போர் வரலாற்றில் பலவீனமடைந்த விடுதலைப் புலிகள் இயக்கம் அவ்வாறான ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் போதும் மனிதநேயத்தை முன்னிலைப்படுத்தி உலக நாடுகளின் அனுதாபத்தினைப் பெற்றுக்கொள்கிறது. ஆனால் அவ்வாறான முயற்சிகள் இனிவரும் காலங்களில் அவர்களுக்கு ஒருபோதும் கைகொடுக்கப் போவதில்லை என்று அமைச்சரும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளருமா…
-
- 0 replies
- 668 views
-
-
தற்போது வந்த செய்தி:தமிழ்நநாட்டின் பல பகுதிகளிலும், ஈழத்தமிழர் பிரச்சனைக்கு ஆதரவாக, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் தொடரூந்து மறியற் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள். ஆயிரக் கணக்கானோர் கைதாகியுள்ளனர். தொடர்ந்தும் வெவ்வேறு இடங்களில் மறியற் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறத
-
- 0 replies
- 735 views
-
-
எட்டாவது முறையாக குற்றுயிரும் கொலையுயிருமாக வாழ்ந்த மண்ணில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் ஈழத் தமிழ் மக்கள். வன்னிக் காடுகளில் இலங்கை விமானத்தின் குண்டு விழாத இடத்தை தேடிக்கொண்டிருக்கிறார்கள் துன்பத்தையே உயிர் மூச்சாகக் கொண்டு அலையும் அந்த மக்கள். விடுதலைப் புலிகளை அழிப்பது என்ற பெயரில் தமிழ் மக்களை சுவடு இல்லாமல் அழித்தொழிக்கும் மூர்க்கமான போரைத் தொடுத்திருக்கிறது இலங்கை சிங்கள வெறி அரசு. “தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும் கிளிநொச்சியை பிடித்துவிடுவோம்” என்று கொக்கரிக்கிறார் ராணுவத் தளபதி பொன்சேகா. மேலும் படிக்க http://vinavu.wordpress.com
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து பணியாற்றுவதாக 10 ஊடகவியலாளர்களின் பெயர்களை இலங்கையின் அரசாங்க ஊடகம் வெளியிட்டமை குறித்து சுதந்திர ஊடக இயக்கம் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. தேசிய புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ளதாக கூறியே அரசாங்க ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த 10 பேரும் செய்திகள் மற்றும் புகைப்படங்களை சர்வதேச ரீதியாக அனுப்பி வருவதாக அரசாங்க ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்தநிலையில் குறித்த ஊடகவியலாளர்கள் யுத்தம் தொடர்பான சரியான தகவல்களையும் புகைப்படங்களையுமே சர்வதேச ரீதியாக வழங்கி வருகின்றனர் என தாம் நம்புவதாக சுதந்திர ஊடக இயக்கம் குறிப்பிட்டுள்ளது. ஊடகம் என்பது அரசாங்கத்துக்கோ,தீவிரவாதிகள
-
- 0 replies
- 1.2k views
-