Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இந்திய பல்கலைக்கழகமொன்று டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்க உள்ளது. பெனரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தினால் ஜனாதிபதி மஹிந்த கௌரவிக்கப்படவுள்ளார்.எதிர்வ

  2. காங்கேசன்துறையில் காவியமான கரும்புலி லெப்.கேணல் இலக்கியாவின் காணொளி நேர்காணல். இணைப்பு http://www.tamilkathir.com/news/348/58//d,view_video.aspx

  3. புலிகளின் ஆயுதங்களை களைந்த பின்னரே பேச்சுவார்த்தை" என்ற மஹிந்தவின் கூற்றை அமெரிக்கா நிராகரித்துள்ளது இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது வரையில் காத்திருக்காமல் அனைத்துத் தரப்பும் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு சென்று இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதர் ரொபட் ஓ பிளக் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறிவரும் "தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை களைந்த பின்னரே அவர்களுடன் பேச்சுவார்த்தை"என்ற கருத்தை நிராகரித்தார். இராணுவ வெற்றி என்பது மிகமிக கடினமான ஒன்றாகும். எனக் குறிப்பிட்ட அவர் வடக்கை இராணுவத்தினர் முழுமைக் …

    • 0 replies
    • 622 views
  4. மனித சங்கிலி அணிவகுப்பில் பங்கேற்று ஊர் திரும்பும் வழியில் விபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் மாவட்டம், வானூர் ஒன்றியத்தைச் சேர்ந்த அய்யப்பன் குடும்பத்திற்கு ‌தி.மு.க.சா‌ர்‌பி‌ல் ரூ.50,000 ந‌ி‌தியுத‌வி வழ‌ங்க‌ப்ப‌ட்டது. இது தொட‌ர்பாக தி.மு.க தலைமை‌க் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கையில் தமிழினப் படுகொலை நிறுத்தப்பட்டு, நிலையான அமைதி காண மத்திய அரசை வலியுறுத்தி நேற்று நடைபெற்ற மாபெரும் மனித சங்கிலி அணி வகுப்பில் பங்கேற்று ஊர் திரும்பும் வழியில் விபத்தில் சிக்கி உயிரிழந்த விழுப்புரம் மாவட்டம், வானூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கழகத் தோழர் அய்யப்பன் குடும்பத்திற்கு உதவி நிதியாக ரூபாய் 50 ஆயிரமும். காயமடைந்த வி.புதுப்பாக்கத்தை சேர்ந்த ஜானகிராமன், கிளாம்பாக்கத…

  5. ஞாயிறு,26 அக்டோபர் 2008 இலங்கையில் நடைபெறும் தமிழினப் படுகொலையைக் கண்டித்து தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் தமிழகத்தில் வரும் 31ஆம் தேதி முழு கடையடைப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக வணிகர் சங்கப் பேரவையின் தலைவர் வெள்ளையன் நேற்று வெளியிட்ட அறிக்கையில்இ சிறீலங்கா அரசின் ஈவு இரக்கமற்ற இனப் படுகொலையைக் கண்டித்தும்இ தமிழக மீனவர்களைப் பாதுகாக்கக் கோரியும் இந்தக் கடையடைப்பு நடத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இது தமிழ் மக்களின் உயிரோடும்இ உணர்வோடும் தொடர்புடைய போராட்டம் என்பதால் இந்தக் கடையடைப்பு போராட்டத்தில் எந்த வர்த்தகப் பிரிவுக்கும் விதிவிலக்கு வழங்கப்படாது. மிகச் சிறிய டீக்கடை முதல் மிகப்பெரிய நகைக்கடைகள் வரை தமிழகத்தில் …

  6. சென்னை(ஏஜென்சி) வைகோவை கைது செய்ய முதலில் அறிக்கை விட்டவர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதான் தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேள்வி: வைகோ கைதானதைக் கண்டித்து டெல்லி மாநிலங்கள் அவையில் அதிமுக வெளிநடப்பு செய்ததைப் பற்றி? பதில்: விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், நான் ஆட்சியிலே இருந்திருந்தால் அவர்கள் எல்லாம் அப்படிப் பேசியிருப்பார்களா?. நான் உடனடியாக கைது செய்திருப்பேனே என்றெல்லாம் அங்கலாய்த்து முதன் முதலாக அறிக்கை விட்டவரே ஜெயலலிதா தான்!. அவர் பேச்சை ஆதரிக்காமல் அவர் தலைமையில் உள்ள கட்சியினர் மாநிலங்களவையில் வெளிநடப்பு செய்திருப்பது வேடிக்கை…

  7. தமிழ் உணர்வாளர்களான வைகோ, கண்ணப்பன், சீமான், அமீர் ஆகியோர் தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதற்கு தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 567 views
  8. மனிதப் பேரவலத்துக்கு உள்ளாகியிருக்கும் ஈழத்தமிழர்களின் உயிருக்கான போராட்டத்தை வெளிக்கொணர்வதில் முன்னின்று செயற்படும் இந்திய ஊடகங்களுக்குப் பொதுவாகவும், தமிழக ஊடகங்களுக்குச் சிறப்பாகவும் நன்றிகளைத் தெரிவிப்பதுடன் இந்தப் பணி தொடர்ந்து ஈழ மக்கள் தமது உரிமையுடன் வாழும் விடுதலை வாழ்வு கிடைக்க வழியமைக்க வேண்டுமெனவும் கோருகின்றோம் என்று கனடியத் தமிழ் ஊடகங்களின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 513 views
  9. ஈழத் தமிழர்களின் தேசியமாக தமிழீழம் அங்கிகரிக்கப்பட வேண்டும் என்றும் உரிமைக்குரல் எழுப்புங்கள் என்று யேர்மனியில் உள்ள தமிழ் உயர்கல்வி மாணவர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 615 views
  10. தேசியத் தலைவரின் நோக்கத்தினை நிறைவேற்றும் மயூரன் சிறப்பு பதுங்கிச் சூட்டணி: தளபதி ஜெரி [ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்ரோபர் 2008, 03:31 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் நோக்கத்தினை லெப். மயூரன் சிறப்பு பதுங்கிச் சூட்டணி நிறைவேற்றி வருகின்றது என்று வடபோர்முனை தளபதி ஜெரி தெரிவித்துள்ளார். களத்தில் சிறப்பாக செயற்பட்ட லெப். மயூரன் சிறப்பு பதுங்கிச் சூட்டணி போராளிகளை மதிப்பளிக்கும் நிகழ்வில் கருத்துரையாற்றிய போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: லெப். மயூரன் சிறப்பு பதுங்கிச் சூட்டணியை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் எந்த நோக்கத்துக்காக உருவாக்கினாரோ அந்த நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றி வருகின்றது. எதிரிகளை…

    • 0 replies
    • 1.1k views
  11. குண்டு விழாத வீடுகளில், அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள், இடைஞ்சலான நேரத்தில் கடிதம் எழுதுகிறேனா? எனக்குத் தெரியும், என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்கள விமானத்தின் குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க் குழந்தைகளை அநாதை ஆக்கிய போது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக் கரைந்திருப்பீர்கள்...... என் அம்மாவும் அப்பாவும் அரைகுறையாய் வெந்துவீழ்ந்தபோது, உங்கள் வீட்டு வரவேற்பறைகளில் அரைகுறை ஆடைகளுடன் அக்காமாரெல்லாம் ஆடும் "மஸ்தானா, மஸ்தானாவின்" அரையிறுதிச் சுற்று முடிவுக்கு வந்திருக்கும். அண்ணனும், தம்பியும் நன்றாகப் படிக்கிறார்களா? அம்மா, அப்பாவின் மறைவுக்குப் பின்னால், எனக்…

  12. இலங்கை தமிழர் விவகாரம் குறித்து இந்திய மத்திய அரசாங்கம் போதுமான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவில்லை என தமிழக முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்ற கழகத்தினால் நேற்று முன்னெடுக்கப்பட்ட மனித சங்கிலி போராட்டம் குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொள்ளாதது, அவர்கள் இலங்கை தமிழர்கள் மீது கொண்டுள்ள அக்கறையின்மையை எடுத்துக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை மத்திய அரசினால் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் உரிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படாவிட்டால் தமிழக அமைச்சர்கள் பதவி விலகுவதாக கூறியிருந்தமை பிழையானது என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சி. ஞானசேக…

  13. ஈழத்தமிழர்களுக்காக நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரதத்தில் நான் வரமாட்டேன் என்று கூறவில்லை என நடிகர் அர்ஜீன் தெரிவித்துள்ளார். தனக்கும் தமிழ் பற்று உள்ளது என்றும், நான் தமிழ் மண்ணில் வாழ்கின்றேன்,எனக்கும் ஈழத் தமிழர்கள் மீது பாசம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நான் கூறியதாக வந்த தகவலை,தான் இணையத்தளங்களில் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் அவர் தெரிவித்தார். நான் கட்டாயமாக நடைபெற இருக்கும் உண்ணாவிரதத்தில் பங்குபெற்றுவேன் என்றும் கூறினார். http://www.tamilseythi.com/tamilnaadu/arjun-2008-10-25.html -தமிழ் செய்தி நிருபர்

  14. சீமான்- அமீர் கைதினைக் கண்டித்து உதவி இயக்குநர்கள் ஆர்ப்பாட்டம் [சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2008, 09:52 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] ஈழத் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசு கட்டவிழ்த்துள்ள காண்டுமிராண்டித்தனமான போரை நிறுத்தக் கோரியும் தமிழகத்தில் எழுந்துள்ள கொந்த‌ளிப்பை திசை திருப்பும் காங்கிர‌ஸ் க‌ட்சியையும், ஜெய‌ல‌லிதாவையும் க‌ண்டித்தும், இயக்குநர்களான சீமான், அமீர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நூற்றுக‌ண‌க்கான‌ உத‌வி இய‌க்குந‌ர்க‌ள் ஒன்றுதிர‌ண்டு இன்று சனிக்கிழமை சென்னை வ‌ட‌ப‌ழ‌னியில் ஆர்ப்பாடடம் ந‌ட‌த்தின‌ர். - ஆத‌ரிப்போம் ஆத‌ரிப்போம் ஈழ‌ விடுத‌லையை ஆத‌ரிப்போம் - நிறுத்து நிறுத்து ஈழ‌ ம‌க்க‌ள் மீதான‌ கொடூர‌ போரினை நிறுத்து - இந்திய‌ இந்திய‌ அர‌சே ஈழ‌…

    • 0 replies
    • 586 views
  15. சீமான், அமீர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், ஆர்வலர்கள் மறியல் [சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2008, 10:06 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] இயக்குநர்களான சீமான் மற்றும் அமீர் ஆகியோரை கைது செய்வதை எதிர்த்து பாரதிராஜா, பாலுமகேந்திரா தலைமையில் இயக்குநர்களும், உதவி இயக்குநர்களும், பெரும் திரளான இரசிகர்களும் காவல்துறையினரை தடுத்து மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு சீமானும், அமீரும் கைது செய்யப்பட்டனர். இந்தத் தகவல் அறிந்ததும், இயக்குநர்களான பாரதிராஜா, பாலுமகேந்திரா, ஆர்.கே.செல்வமணி, தங்கர்பச்சான், விக்கிரமன், லிங்குச்சாமி, கரு.பழனியப்பன், சேரன், ராம், ஜெகன், பாலாஜி சக்திவேல் மற்றும் ஏராளமான உதவி இயக்குநர்கள் மற்றும் க…

    • 0 replies
    • 808 views
  16. கிளிநொச்சி பொது மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 777 views
  17. நடிகர் வடிவேலுவின் உருக்கமான உரை இயக்குனர் சீமான் ஆவேச பேச்சு இயக்குனர் சேரன் ஆவேச பேச்சு இயக்குனர் பாரதிராஜாவின் ஈழம் பற்றிய உரை

    • 0 replies
    • 2.8k views
  18. கடந்த 75 நாட்களில் அம்பாறையில் 65 படையினர் பலி- 98 பேர் படுகாயம்: விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறை [சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2008, 01:36 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] கடந்த 75 நாட்களில் அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா படையினர் 65 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 98 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விடுதலைப்புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறையினர் இன்று சனிக்கிழமை விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- விடுதலைப்போருக்கு தோள் கொடுங்கள் உரிமைக்குரல் - 2 24.10.2008 அன்பார்ந்த அம்பாறை மாவட்ட வாழ் முஸ்லிம் - தமிழ் உறவுகளே! …

    • 0 replies
    • 741 views
  19. மட்டக்களப்பில் சிறப்பு அதிரடிப்படையினரின் காவலரண் மீது தாக்குதல்: ஒருவர் பலி [சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2008, 06:52 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டம் கோப்பாவெளிப் பகுதியில் உள்ள சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் காவலரண் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இருவர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: மட்டக்களப்பில் உள்ள ஏ-5 பிரதான வீதியில் உள்ள கோப்பாவெளி பிரதேசத்தில் அமைந்திருந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் காவலரண் மீது நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7:10 நிமிடமளவில் விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில்…

    • 0 replies
    • 479 views
  20. சிறிலங்கா படையினரின் ஆழ ஊடுருவும் தாக்குதல் நடவடிக்கை முறியடிப்பு: 2 உடலங்கள் மீட்பு [சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2008, 06:32 பி.ப ஈழம்] [வி.நவராஜன்] சிறிலங்கா படையினரின் ஆழ ஊடுருவும் தாக்குதல் நடவடிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளதுடன் அவர்களின் இரு உடலங்களையும் கைப்பற்றியுள்ளனர். வன்னியில் சிறிலங்கா படையினர் நேற்று வெள்ளிக்கிழமை ஆழ ஊடுருவும் தாக்குதலை மேற்கொண்ட நிலையில் அதனை விடுதலைப் புலிகள் முறியடித்தனர். இம்முறியடிப்பில் இரு படையினர் கொல்லப்பட்டதுடன் அவர்களின் உடலங்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட இரு உடலங்களும் விடுதலைப் புலிகளால் இன்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. புதினம்

    • 0 replies
    • 1.2k views
  21. சென்னை: இந்தப் பிள்ளைகள் (சீமான், அமீர்) எந்தத் தவறும் செய்யவில்லை. இவர்கள் விடுதலையாகும் வரை தமிழ் இன உணர்வுள்ள எந்த இயக்குவரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார். இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாரதிராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த இரண்டு பிள்ளைகளும் எந்தத் தவறும் செய்யவில்லை. பதவிக்காக இவர்கள் போராடவில்லை. தமிழர்களுக்காக, தமிழ் உணர்வுடன் போராடினார்கள். உலகில் எந்த நாட்டிலும் ராமேஸ்வரம் போராட்டத்தைப் போல திரைப்பட இயக்குநர்கள் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியதில்லை. இவர்கள் இருவரும் சிறையிலிருந்து விடுதலையாகும் வரை தமிழ் இன உணர்வுள்ள எந்த இயக்குநரும் படப்பிடிப்பில் கலந்து கொள்…

  22. கருணா என்று அழைக்கப்படும்.. தமிழ் ஒட்டுக்குழு ஆயுததாரியும் சர்வதேச மன்னிப்புச்சபை பிரகடனம் செய்த படுகொலைதாரியும் போர்க்குற்றவாளியுமான வி. முரளிதரன் அவர் சார்ந்த ஒட்டுக்குழுவின் தலைமைப் பதவியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். ஆனால் சன நாய் அக நீரோட்டத்துக்குள் புகுந்துவிட்டதாகச் சொல்லும் அந்த குறிப்பிட்ட சிங்கள அரசு மற்றும் அமெரிக்க சார்பு ஒட்டுக்குழு தனது இராணுவப் பிரிவுக்கு அவரே தலைவராக தொடர்ந்தும் இருப்பார் என்று கூறுகிறது. உலகிலேயே அமெரிக்காவின் ஜனநாயகத்தில் சிறீலங்காவில் தான் ஜனநாயகம் என்பது பகிரங்கமாக ஆயுதம் தாங்கிய கட்சிகளால் (TMVP,EPDP,PLOTE,EPRLF(Varathar),ENDLF) நடத்தப்படுகிறது. அதுவும் ஜனநாயக நீரோட்டத்துக்குள் குருதியோட்டம் காட்ட என்று...இராணுவப் பிரிவுத…

  23. இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவும், சிங்களவர்களுக்கு நிரந்தர அடிமைகளாகவும் இருக்க வேண்டுமென்ற ஆதிக்க வெறியும், சிங்கள இன வெறியும் அறவே அகற்றப்படும் என்ற நம்பிக்கை நமக்கு ஏற்பட்டாக வேண்டும். என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களை மத்திய அரசு ஏற்று நடவடிக்கை எடுக்கும் என தங்களுக்கு இருந்த நம்பிக்கை வீண் போகவில்லை என்றும் தாய்த் தமிழக மக்களின் நீண்ட காலக் கனவு படிப்படியாக நிறைவேறி வருகிறது என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அனைத்துக் கட்சிக் கூட்டம் நடப்பதற்கு ஒரு வாரம் முன்னதாகவே மயிலை மாங்கொல்லை…

  24. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எதிர்வரும் நவம்பர் 1ம் தேதி சென்னையில் நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் நாங்கள் ஏன் கலந்துகொள்ள வேண்டும் என நடிகர்களான அஜீத், அர்ஜீன் நிர்வாகிகளிடம் கேட்டிருந்தனர். நேற்று தமிழ்வின் இணையதளத்தில் ஈழத்தமிழருக்காக ஆதரவு வழங்க மறுத்த அஜித் கூறிய இச்செய்தி வெளியான சில மணிநேரங்களில் உலகத்தமிழர்கள் கொந்தளித்ததுடன், அஜித் நடித்த ஏகன் திரைப்பட இறுவட்டை கொள்வனவு செய்த புலத்தில் வாழும் தமிழ்த்திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். பிரான்ஸ், ஜேர்மன் உள்ளிட்ட நாடுகளில் இந்நடிகர்களுக்கு எதிராக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. "ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு வழங்க மறுத்த நடிகர் அஜீத் நடித்து வெளியாகும் ஏகன் திரைப்படத்தை திரையிட விடமாட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.