Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இராமேஸ்வரம் பேரணியில் 2 ஆயிரம் பேர் பங்கேற்பு- சென்ன மனித சங்கிலிக்கும் ஆதரவு: இயக்குநர் பாரதிராஜா [சனிக்கிழமை, 18 ஒக்ரோபர் 2008, 12:55 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கைத் தமிழர்களைப் படுகொலை செய்யும் சிறிலங்கா இராணுவத்தை கண்டித்து இராமேஸ்வரத்தில் எதிர்வரும் 19 ஆம் நாள் நடைபெறும் பேரணியில் 2 ஆயிரம் திரையுலகத்தினர் பங்கேற்பர் என்றும் சென்னையில் 21 ஆம் நாள் நடைபெறும் மனித சங்கிலி அணிவகுப்பிலும் தமிழ்த் திரையுலகத்தினர் பங்கேற்க உள்ளனர் என்றும் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா அறிவித்துள்ளார். சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் பாரதிராஜா கூறியதாவது: இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். இதை கண்டித்து வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு நிற்கிற…

  2. ஈழத் தமிழரைக் காக்க மனித சங்கிலிக்கு அணி திரள்வீர்: மு.க. ஸ்டாலின் [சனிக்கிழமை, 18 ஒக்ரோபர் 2008, 01:07 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] ஈழத் தமிழரைக் காக்க சென்னையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21.10.08) நடத்தப்படவுள்ள மனித சங்கிலிக்கு அணி திரள்வீர் என்று தமிழ்நாடு உள்ளாட்சித்துறை அமைச்சரும் தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளருமான மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: சிறிலங்கா இராணுவத் தாக்குதல்களிலிருந்து இலங்கை வாழ் தமிழ் இனத்தாரைப் பாதுகாத்திட, அங்கே உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு சுமூக தீர்வு ஏற்பட, தமிழர்கள் அனைவரும் ஒரே உணர்வில் நின்று விடை காண வேண்டும் என்ற வேண்ட…

    • 0 replies
    • 587 views
  3. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளனர்: தி.மு.க. [சனிக்கிழமை, 18 ஒக்ரோபர் 2008, 12:09 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] ஈழத் தமிழர்களை இந்திய அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பதவி விலக தயாராக உள்ளோம் என்பதை அறிவிக்கும் வகையில் தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல் கடிதங்களை கையளித்து வருவதாக தி.மு.க. அறிவித்துள்ளது. தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை (14.10.08) தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நடந்த அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இலங்கையில் இனப்படுகொலை கொடுமைக்கு உள்ளாகி ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்களில் பூவும்…

    • 0 replies
    • 677 views
  4. பழ. நெடுமாறனின் அறிக்கை ஆறுதலளிக்கிறது- கிளம்பிற்றுக் காண் தமிழ் சிங்கக் கூட்டமென மனித சங்கிலிக்கு வாரீரி: கருணாநிதி [சனிக்கிழமை, 18 ஒக்ரோபர் 2008, 12:30 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] தமிழக அனைத்து கட்சிக்கூட்டத்தை கேவலமாக விமர்சித்த ஜெயலலிதாவுக்கு கண்டனம் தெரிவித்து தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை ஆறுதலளிப்பதாகவும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள மனித சங்கிலி அணிவகுப்புக்கு "கிளம்பிற்றுக் காண் தமிழ் சிங்கக் கூட்டமென" தமிழர்கள் அணிதிரண்டு வர வேண்டும் என்றும் தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் கலைஞர் விடுத்துள்ள அறிக்கை: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழகத்த…

  5. இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் சிவசங்கர் மேனன் புதுடில்லியில் உள்ள இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் ஆர் ஜெயசிங்கவை சந்தித்து கலந்துரையாடியதாக புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 838 views
  6. ஈழத்தமிழர் பிரச்சனையில் இருந்தாற் போல் திடீர் அக்கறையும் பாசமும் கொண்டு தமிழக அரசியற்கட்சிகள் களங் குதித்திருப்பது, கனவு போலத் தோன்றினாலும்இதுவொன்றும் புதுமையில்லை. ஏனென்றால் தமிழகத்தின் அடிமட்டத் தொழிலாளிப் பாமரனிடம், அன்று முதல் இன்றுவரை, என்றும் மாறாமல் நிறைந்திருக்கிறதுஈழத்தமிழர

  7. இல‌ங்கை இராணுவ‌‌ம் நட‌த்‌தி வரு‌ம் த‌மி‌ழின‌ப் படுகொலையை தடு‌த்து ‌‌நிறு‌த்‌திட‌க் கோ‌ரியு‌ம், தமிழக மீனவர்களை கண்மூடித்தனமாகத் தாக்கும் இலங்கை கடற்படையினரின் செயலுக்கு நிரந்தர தீர்வுகான‌ கோ‌‌ரி வரு‌ம் 21ஆ‌ம் தே‌தி செ‌‌ன்னை‌யி‌ல் நடைபெறு‌ம் ம‌னித‌ச் ச‌ங்‌கி‌லி போரா‌ட்ட‌த்த‌ி‌ல் இளைஞர‌ணி‌யின‌ர் பெருமள‌வி‌ல் கல‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழை‌ப்பு ‌விடு‌த்து‌ள்ளா‌ர். webdunia photo FILE இதுதொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், இலங்கை இராணுவத் தாக்குதல்களிலிருந்து இலங்கைவாழ் தமிழ் இனத்தாரைப் பாதுகாத்திட, அங்கே உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு சுமூக தீர்வு ஏற்பட, தமிழர்கள் அனை…

  8. ஹிட்லரது படைக்கு எதிராக ரஸ்யர்கள் போராடியதைப்போல புலிகள் தாக்குதலை நடாத்தக்கூடும் - ஹரிஹரன் [ வெள்ளிக்கிழமை, 17 ஒக்ரோபர் 2008, 07:02.27 AM GMT +05:30 ] ஹிட்லரது படையினால் 872 நாட்கள் சிறைவைக்கப்பட்டிருந்த ரஸ்ய போராளிகள் திடீரென தாக்குதல்களை மேற்கொண்டு வெற்றி கண்டதனைப் போன்று தமிழீழ விடுதலைப் புலிகளும் அதிர்ச்சித் தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என கேணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்த ரீதியான வெற்றி கொண்டதன் பின்னர் அரசியல் ரீதியான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவாதத்தை தமிழக அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் நிலையான அமைதியை ஏற்படுத்த முடியு…

    • 9 replies
    • 2.8k views
  9. பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவரும், எழுத்தளாரும், பத்திரிகையாளரும், நவீன பாணி அரசியல் கட்டுரைகளின் முன்னோடியுமான குத்தூசி குருசாமி, இந்து நாளிதழை 1930களிலேயே, மவுண்டரோடு மகா விஷ்ணு என்றுதான் குறிப்பிடுவார். அந்த மகாவிஷ்ணு சமீபத்தில் வராக அவதாரம் எடுத்திருந்தது. அதைப் பற்றி பெரியார் திராவிடர் கழக வார ஏடான புரட்சி பெரியார் முழுக்கம் இப்படி குறிப்பிட்டு இருக்கிறதுது: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகம் கிளர்ந்தெழுவதை தாங்கிக் கொள்ள முடியாத பார்ப்பன 'இந்து' ஏடு அக்.14 அன்று நஞ்சை கக்கும் தரம் தாழ்ந்த கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்துவின் ஆசிரியர் குழுவைச் சார்ந்த மாலினி பார்த்தசாரதி என்ற பார்ப்பனப் பெண் எழுதியுள்ள அக்கட்டுரையில் விரக்தியடைந்த விடுதலைப் புலிகள் தூண்டு…

    • 0 replies
    • 1.7k views
  10. அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இலங்கை ராணுவத் தாக்குதல்களிலிருந்து இலங்கைவாழ் தமிழ் இனத்தாரைப் பாதுகாத் திட, அங்கே உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு சுமூக தீர்வு ஏற்பட, தமிழர்கள் அனைவரும் ஒரே உணர்வில் நின்று விடை காண வேண்டும் என்ற வேண்டுகோளை- தலைமைக் கழகத்தின் சார்பில் ``இலங்கைப் பிரச்சினையில் கழகத்தின் நிலையும்- மத்திய அரசுக்கு வேண்டுகோளும'' எனும் பொருளில் சென்னையில் நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் வேண்டுகோள் விடுத்த தோடு, இலங்கை ராணுவத் தாக்குதல் தமிழினப் படுகொலை இவைகளை தடுத்து நிறுத்திட, தமிழர்கள் அனைவரும் பிரதமருக்கு தந்தி அனுப்பிட வேண்டு மெனவும் கேட்டுக் கொ…

  11. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் பட்டினிப்போராட்டம் மேற்கொண்டனர். மதுரையில் நடந்த பட்டினிப்போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்றார். இலங்கையில் சிங்கள ராணுவம் தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஏராளமான தமிழர்கள் உயிரிழந்தனர். இதற்கு தமிழகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. வருகிற 21ந் தேதி சென்னையில் மாபெரும் மனித சங்கிலி நடத்த முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். நவம்பர் 1ந் தேதி திரைப்பட நடிகர் நடிகைகள் சென்னையில் பட்டினிப்போராட்டம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், தமிழர்கள் மீது இலங்கை ராணுவத்தின் தாக்குதலை கண்டி…

  12. இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியா ஒரு ஆதிக்கச் சக்தியாகத் திகழவே இலங்கைக்கு இந்தியா இராணுவ உதவி அளிக்கிறது என நடுவணரசு விளக்கம் அளித்துள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு அளிக்கப்படும் இராணுவ உதவிகளை முதல் முறையாக வெளிப்படையாக அறிவித்துள்ளது இந்திய அரசு. இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் இராணுவ உதவியை நிறுத்தக் கோரி, முதல்வர் கருணாநிதி தலைமையில் கடந்த 14ம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கர்நாடக மாநில பெங்களூருக்கு நேற்று வந்திருந்த மத்திய இராணுவ அரசாங்க அமைச்சர் எம்.எம்.பல்லம் ராஜுவிடம் இந்த தீர்மானம் குறித்து நடுவணரசின் நிலை என்ன? என நிருபர்கள் கேட்டனர். அதற்கு எம்.எம்.பல்லம் ராஜு கூறியதாவது: இலங்கைக்கு உதவிகளும்,…

  13. அம்பாந்தோட்டையில் சிறிலங்கா இராணுவம் - ஆயுததாரிகள் கடும் மோதல் [வெள்ளிக்கிழமை, 17 ஒக்ரோபர் 2008, 06:00 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள யால - 2 வனப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளுக்கும் இடையில் நீண்ட நேரம் இடம்பெற்ற கடுமையான மோதலில் இராணுவத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பலர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: யால - 2 வனப்பகுதியில் உள்ள மாணிக்கை கங்கையிலிருந்து திஸ்ஸமகராகம பக்கமாக செல்லும் கடற்கரை வீதிப்பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4:30 நிமிடமளவில் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளுக்கும் இடையில் கடுமை…

    • 0 replies
    • 1.3k views
  14. தென்னிந்திய தமிழ் தலைவர்களுக்கு அகண்ட தமிழீழத்தை உருவாக்கும் கனவு இருப்பதாக அல்லி மலர் அமைப்பின் தலைவர் குணதாச அமரசேகர குறிப்பிட்டுள்ளார். இதன் முன்னோடியாக இலங்கையின் வடக்கு கிழக்கில், பிரபாகரனின் ஊடாக ஈழத்தை உருவாக்குவதே அவர்களின் நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் இலங்கைப் படையினரால் பிரபாகரன் தோல்வியடைந்தால், அவர்களின் அகண்ட ஈழநாடு என்ற கனவு சீர்குலையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் இந்திய மத்திய அரசாங்கம் எவ்வாறு செயற்படப் போகிறது என்பதே இலங்கைக்கு முக்கியமான ஒன்றாக இருக்கும். எனினும் இந்தியாவுக்கு இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட எந்த உரிமையும் இல்லை எனவும் குணதாச அமரசேகர குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று நடை…

  15. சிப்பாய் ஒருவன் உயர்ந்த கம்பத்தில் ஏறிக் கட்டிய சிங்கக்கொடி பறக்க கீழே குழுமி நின்ற படைச்சிப்பாய்கள் உணர்ச்சிப் பரவாகத்தில் கைதட்டி ஆர்ப்பரிக்கின்றனர். கூடுவிட்டு ஆவிபிரிந்த காட்சியாய் தமிழர் வாழ்விடங்கள் உயிர்ப்பிழந்து கிடக்கின்றன. அவற்றையும் பதிவாக்கி பெருமிதத்தோடு சிங்களத்தின் ரூபவாகினித் தொலைக்காட்சி அடிக்கடி காட்சிப்படுத்திக்கொண்டிருக

  16. ஆயுததாரி முதலமைச்சர் பிள்ளையானின் காரியாலயம் கருணா குழுவால் சூரையாடல் மட்டக்களப்பு கோவிந்தன் வீதியில் இயங்கிவந்த கூலிக்குழு முதலமைச்சர் பிள்ளையானின் காரியாலயம் இன்று கருணா குழு கூலிப்படையால் முற்றுகையிடப்பட்டுச் சூரையாடப்பட்டது. இதன்போது அங்கிருந்த பிள்ளையான் ஆயுதக்குழுவின் 13 பேர் கருணா குழுவால் சிறைப்பிடிக்கப்பட்டதோடு அவர்களிடமிருந்த டி - 56 ரக தானியங்கித் துப்பாக்கிகளும் தாக்குதல் நடத்தியவர்களால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. நன்றி தமிழ்நெட். கிழக்கு நல்லாத்தான் வெளிக்குதுபோல !?

    • 16 replies
    • 3.2k views
  17. இலங்கை இனப்பிரச்சினை தீர்வில் இந்திய மத்திய அரசாங்கம் தலையிடவேண்டும் என்ற கோரிக்கையை தீவிரப்படுத்தும் வகையில் தமிழகத்தில் இருந்து மத்திய அரசாங்க அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 7 அமைச்சர்கள் தமது பதிவி விலகல் கடிதத்தை இன்று கையளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. திராவிட முன்னேற்றக் கழக தலைவரும் தமிழக முதல்வருமான முத்துவேல் கருணாநிதியிடம் இதற்கான கடிதம் கையளிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழ் நாட்டின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரின் தகவலின் படி மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் டி.ஆர். பாலு ஏ. ராஜா எஸ்.எஸ். பாலமாணிக்கம் சுப்புலக்சுமி ஜெகதீசன் எஸ். ரகுபதி வீ. வெங்கடாபதி மற்றும் ராதிகா செல்வி ஆகியோர் பதவி விலகியுள்ளார்கள் என தெரிவிக்கப்படுகிறது. இ…

  18. இலங்கைக்கு ராணுவ உதவி ஏன்?-மத்திய அரசு விளக்கம் பெங்களூர்: இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியா ஒரு ஆதிக்க சக்தியாகத் திகழவே இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி அளிக்கிறது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு அளிக்கப்படும் ராணுவ உதவிகளை முதல் முறையாக வெளிப்படையாக அறிவித்துள்ளது இந்திய அரசு. இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் ராணுவ உதவியை நிறுத்தக் கோரி, முதல்வர் கருணாநிதி தலைமையில் கடந்த 14ம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நேற்று பெங்களூருக்கு வந்திருந்த மத்திய ராணுவ ராஜாங்க அமைச்சர் எம்.எம்.பல்லம் ராஜுவிடம் இந்த தீர்மானம் குறித்து மத்திய அரசின் நிலை என்ன? என நிருபர்கள் கேட்டனர். அதற்கு எம்.எம்.பல…

    • 5 replies
    • 3.1k views
  19. தமிழர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் இலங்கைக்கான இந்தியாவின் இராணுவ உதவிகளை நிறுத்தக் கோரியும் நடிகர், நடிகைகள் எதிர்வரும் 1ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்தவுள்ளனர். இந்த உண்ணாவிரதத்தில் ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர், நடிகைகளும் பங்கேற்கவுள்ளனர் எனவும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது. புலிகளின் ஆதிக்கத்தில் உள்ள கிளிநொச்சியைப் பிடிக்க அப்பாவித் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை அப்பகுதியிலிருந்தே வெளியேறி வருகிற இலங்கை இராணுவம். ஏராளமான தமிழர்கள் இதில் பலியாகி வருகின்றனர…

  20. இனப்பிரச்சினைக்கான தீர்வினை சமாதான பேச்சு வார்த்தைகள் மூலம் எடுப்பததற்கு இந்தியா தன்னாலான சகல முயற்சிகளையும் மேற்கொள்ளுமென என இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவரம் தொடர்பில் இந்தியா ஆழ்ந்த கவனம் செலுத்தியுள்ளது.மேதல்களில் பொதுமக்கள சிக்கிக்கொள்வது குறித்து கவலையடைகின்றோம்.மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியது முக்கியம். அவர்களுக்கான உணவுகள் ,மற்றும் பாதுகாப்பு உரிய சமயத்தில் கிடைக்க வேண்டியது அவசியம். இலங்கையில் சகல சமூகத்தவரும் ஒன்றிணைந்து வாழ்வதற்கான அரசியல் தீர்வு சமாதான பேச்சு வார்த்தைகள் மூலம் எட்டப்பட வேண்டியது அவசியம்.அதற்கான சகல நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும் என அவ் அறிக்கையில் மேலும் த…

  21. ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை இலங்கைக்குத் தொடர்ந்து கிடைக்கும் எனத் தாம் நம்புகிறார் என கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதுவர் பீற்றர் ஹெயிஸ் தெரிவித்தார். குறிப்பிட்ட சில விடயங்களை நிறைவேற்ற வேண்டும் என விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அரசு உரிய முறையில் செயற்படுத்தும் என்று தாம் எதிர்பார்க்கின்றார் எனவும் அவர் தெரிவித்தார். கெழும்பில் நேற்று இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக சம்மேளனத்தின் வைபவம் ஒன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரித்தானியத் தூதுவர பீற்றர்ஹெயிஸ் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்திய அவர் மேலும் தெரிவிக்கையில், ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்பி. வரிச்சலுகை மிகவும் முக்கியமானது. …

  22. இலங்கையில் தொடர்ந்து நடைபெறும் மோதல்களின் காரணமாக பொதுமக்கள் மீது ஏற்படும் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து இந்திய மீண்டும் கவலை தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பவை வருமாறு:- அத்தியாவசியப் பொருட்கள் வன்னி மக்களை சென்றடைய அனுமதிக்கப்பட வேண்டும். இராணுவத் தீர்வு பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் ரீதியான தீர்வே காணப்பட வேண்டும். இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் உடனடியாக நிறுத்தப்பட வேண…

  23. ஈழத் தமிழர் விவகாரத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா கபடம் நாடகம் ஆடி வருகின்றார் என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 751 views
  24. வடபகுதி மோதல்களை நிறுத்துவதற்காக, தமிழக அரசியல்வாதிகளுக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் நடவடிக்கையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமே மேற்கொண்டதாக அறிய முடிகிறதென சிங்ளடகம் குறிப்பிட்டுள்ளது. தற்போது சென்னையில் தங்கிருக்கும் சிவாஜிலிங்கம், அண்மையில் தமிழகத்தின் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களான வைகோ, ராமதாஸ் ஆகியோரைச் சந்தித்து, இலங்கையின் வடக்கு தனிநாடாக வேண்டும் என கூறுமாறு கேட்டுள்ளதுடன், பெரியார் திராவிட கழகத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடி உள்ளார். அத்துடன் சிவாஜிலிங்கம் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரையும் சந்தித்துள்ளதாக இலங்கையின் புலனாய்வுதுறையினருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.