ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143671 topics in this forum
-
விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தவதற்கான இந்தியாவின் அரசியல் அழுத்தம் இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தில் அதிகளவு மாற்றத்தை ஏற்படுத்தாது. ஏனெனில் ஆசியாவின் நீண்ட காலக் கிளர்ச்சிகளில் ஒன்றான இந்தப்பிரச்சினையைத் தன்னால் முடிவுக்குக் கொண்டு வர முடியுமென்று இலங்கை அரசு அதிகளவு நம்புகின்றது என ரொய்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. ஏனென்றால் இதுவே அரசாங்கத்தின் முக்க்யமான நிகழ்ச்சி நிரல் என யூரேசியா குறூப்பின் ஆய்வாளர் மரியா கூசிஸ்ரோ தெரிவித்துள்ளார். இந்தளவு தூரத்திற்கு அவர்கள் போயிருக்கும் போது பின்னோக்கிச் செல்வது எதிர்மறையானதாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் மோதல் அதிகரித்திருப்பதைய…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான பிரச்சினைகள் குறித்து இந்திய-இலங்கைத் தரப்புக்களிடையே இந்தியாவிலும், இலங்கையிலும் வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் சி.ஆர்.ஜயசிங்கவை அழைத்து, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் இலங்கையின் நிலைமை குறித்த இந்தியாவின் அக்கறைகளை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கையில் உள்ள மனிதாபிமான பிரச்சினைகள் குறித்த இந்தியாவின் கவலைகளைக் கருத்தில் கொண்டு இலங்கை அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும், இந்திய மீனவர்களை கொல்வதையும், துன்புறுத்துவதையும் நிறுத்தவேண்டும் எனவும் மேனன் இந்தச் சந்திப்பின்போது தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தியாவின் அச்சுறுத்தலுக்கு அடிபணியலாகாது. அவர்களால் எம்மை என்ன செய்து விட முடியும். மிஞ்சினால் வான் பரப்பில் இருந்து பருப்பு மூடைகளையே போட முடியும். இவ்வாறு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளரான விமல் வீரவன்ஸ தெரிவித்தார். தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் கூறியவை வருமாறு: வேலுப்பிள்ளை பிரபாகரனை பாதுகாப்பதற்காக வாஷிங்டனும் புதுடில்லியும் மேற்கொள்ளும் சதித்திட்டத்தை தோல்லியுறச் செய்ய தேசப்பற்றாளர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். இந்தியாவின் அச்சுறுத்தலுக்கு அடிபணியலாகாது. அவர்களால் எம்மை என்ன செய்ய முடியும். மிஞ்சினால் வான் பரப்பில் இருந்து பருப்பு முடைகளைமட்டுமே போ…
-
- 0 replies
- 781 views
-
-
தி.மு.க மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் முதலமைச்சர் கருணாநிதியிடம் தமது ராஜீனாமா கடிதங்களை நேற்றிரவு கையளித்துள்ளனர். இதனையடுத்து டில்லி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவையை பிரதிநிதிப்படுத்தும் தி.மு.க.வின் 16 உறுப்பினர்களும் தமது ராஜனாமாக் கடிதங்களை தி.மு.க. தலைவரிடம் கையளித்துள்ளதாக கட்சித் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவர்களுள் மத்திய அரசு அமைச்சர்களாக பதவி வகித்தவர்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். நன்றி வீரகேசரி
-
- 0 replies
- 1.4k views
-
-
துப்பாக்கியின் மீது அரசியல் ஆணை செலுத்த வேண்டுமே தவிர, அரசியல் மீது துப்பாக்க ஆணை செலுத்தக்கூடாது" என்றார் மாசேதுங். பிரபாகரனின் அண்மைக்கால அரசியல் நகர்வுகளும் எதிர்த்தாக்குதல் சமரும் மாவோவின் புரட்சி உத்தியை நினைவு படுத்துகின்றன. சுருக்கமாகச் சொன்னால், அரசியல் களத்தில் தாக்குதல் தந்திரத்தையும் படைநகர்வில் எதிர்த்தாக்குதல் தந்திரத்தையும் அவா கடைபிடிக்கிறார். அரசியல் களத்தில் எதிரியை முன்னேறித் தாக்குகிறார். போர் களத்தில் எதிரியின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கிறார். அண்மையில் நடந்த சார்க் மாநாட்டின் பாதுகாப்பு கருதி, தாமாக முன்வந்து பத்து நாள் போர் நிறுத்தத்தை விடுதலைப்புலிகள் அறிவித்தனர். ஆனால் சிங்களக் குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபட்ச இந்தப் போர் நிறு…
-
- 3 replies
- 2.4k views
-
-
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் பட்டினிப்போராட்டம் மேற்கொண்டனர். மதுரையில் நடந்த பட்டினிப்போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்றார். இலங்கையில் சிங்கள ராணுவம் தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஏராளமான தமிழர்கள் உயிரிழந்தனர். இதற்கு தமிழகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. வருகிற 21ந் தேதி சென்னையில் மாபெரும் மனித சங்கிலி நடத்த முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். நவம்பர் 1ந் தேதி திரைப்பட நடிகர் நடிகைகள் சென்னையில் பட்டினிப்போராட்டம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், தமிழர்கள் மீது இலங்கை ராணுவத்தின் தாக்குதலை கண்டி…
-
- 2 replies
- 750 views
-
-
தமிழர்கள் மீது தனக்குப் பரிவு அதிகம் என்பதைப் பறைசாற்ற, பந்தாவாக ஐ.நாவில் தமிழில் உரையாற்றியிருக்கின்றார் சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. இது ஐ.நாவில் அமர்ந்திருந்த அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும், அரசாங்க முதல்வர்களுக்கும் மகிழ்ச்சி தரலாம். ஆனால் தலைமுறைக் கணக்கில் சிங்கள்ப் பேரினவாதிகளின் பேதம்நிறை இப் பெரும்பாசம் பாதியும் உண்மையில்லை எனப் பலமாகவே புரியும். காலங் காலங்காலமாக கயமைத்தனத்துடன் அவர்கள் கழித்த கோலங்கள்தான் எத்தனை. புலம்பெயர் சூழலில் வாழும் தமிழர்களின் நிகழ்ச்சிகளில் உரையாற்ற வரும் வெளிநாட்டவர்கள், எம்மோடு உறவாடுதாகக் காட்டிக்கொள்ள, மரியாதைக்குச் சொல்லும் ஒருவார்த்தையை, மற்க்காது பாடமாக்கி வந்து மழலைத் தமிழில் சொல்லிவிட்டுச் செல்வார்கள். …
-
- 14 replies
- 4.1k views
-
-
ஈழத் தமிழரைக் காக்க மனித சங்கிலிக்கு அணி திரள்வீர்: மு.க. ஸ்டாலின் [சனிக்கிழமை, 18 ஒக்ரோபர் 2008, 01:07 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] ஈழத் தமிழரைக் காக்க சென்னையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21.10.08) நடத்தப்படவுள்ள மனித சங்கிலிக்கு அணி திரள்வீர் என்று தமிழ்நாடு உள்ளாட்சித்துறை அமைச்சரும் தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளருமான மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: சிறிலங்கா இராணுவத் தாக்குதல்களிலிருந்து இலங்கை வாழ் தமிழ் இனத்தாரைப் பாதுகாத்திட, அங்கே உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு சுமூக தீர்வு ஏற்பட, தமிழர்கள் அனைவரும் ஒரே உணர்வில் நின்று விடை காண வேண்டும் என்ற வேண்ட…
-
- 0 replies
- 587 views
-
-
பழ. நெடுமாறனின் அறிக்கை ஆறுதலளிக்கிறது- கிளம்பிற்றுக் காண் தமிழ் சிங்கக் கூட்டமென மனித சங்கிலிக்கு வாரீரி: கருணாநிதி [சனிக்கிழமை, 18 ஒக்ரோபர் 2008, 12:30 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] தமிழக அனைத்து கட்சிக்கூட்டத்தை கேவலமாக விமர்சித்த ஜெயலலிதாவுக்கு கண்டனம் தெரிவித்து தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை ஆறுதலளிப்பதாகவும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள மனித சங்கிலி அணிவகுப்புக்கு "கிளம்பிற்றுக் காண் தமிழ் சிங்கக் கூட்டமென" தமிழர்கள் அணிதிரண்டு வர வேண்டும் என்றும் தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் கலைஞர் விடுத்துள்ள அறிக்கை: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழகத்த…
-
- 1 reply
- 1.1k views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளனர்: தி.மு.க. [சனிக்கிழமை, 18 ஒக்ரோபர் 2008, 12:09 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] ஈழத் தமிழர்களை இந்திய அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பதவி விலக தயாராக உள்ளோம் என்பதை அறிவிக்கும் வகையில் தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல் கடிதங்களை கையளித்து வருவதாக தி.மு.க. அறிவித்துள்ளது. தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை (14.10.08) தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நடந்த அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இலங்கையில் இனப்படுகொலை கொடுமைக்கு உள்ளாகி ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்களில் பூவும்…
-
- 0 replies
- 678 views
-
-
இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் சிவசங்கர் மேனன் புதுடில்லியில் உள்ள இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் ஆர் ஜெயசிங்கவை சந்தித்து கலந்துரையாடியதாக புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 838 views
-
-
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் எழுந்துள்ள தமிழர் எழுச்சியை கொச்சைப்படுத்தும் விதமாக 'இந்து' நாளேடு நேற்று முன்தினம் தலையங்கக் கட்டுரை ஒன்றை எழுதியது. அக்கட்டுரை தமிழகத்தில் தமிழ் இன உணர்வாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இன்று(16.10.2008) காலை ஈரோட்டில் "இந்து"வின் அக்கட்டுரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 'இந்து' நாளேட்டை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி & பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் தீவைத்துக் கொளுத்தினார்கள். இது தொடர்பாக தமிழகக் காவல்துறை 2 பேரை கைது செய்ததுடன் த.தே.பொ.க.வைச் சேர்ந்த செய பாஸ்கரன், பெரியார்.தி.க.வைச் சேர்ந்த குமரகுரு உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கும் பதிவு செய்துள்ளது. http://www.tamil…
-
- 15 replies
- 1.6k views
-
-
ஈழத்தமிழர் பிரச்சனையில் இருந்தாற் போல் திடீர் அக்கறையும் பாசமும் கொண்டு தமிழக அரசியற்கட்சிகள் களங் குதித்திருப்பது, கனவு போலத் தோன்றினாலும்இதுவொன்றும் புதுமையில்லை. ஏனென்றால் தமிழகத்தின் அடிமட்டத் தொழிலாளிப் பாமரனிடம், அன்று முதல் இன்றுவரை, என்றும் மாறாமல் நிறைந்திருக்கிறதுஈழத்தமிழர
-
- 0 replies
- 1.4k views
-
-
http://vimbamkal.blogspot.com/2008/10/tami...du-support.html
-
- 1 reply
- 1.6k views
-
-
இலங்கை இராணுவம் நடத்தி வரும் தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்திடக் கோரியும், தமிழக மீனவர்களை கண்மூடித்தனமாகத் தாக்கும் இலங்கை கடற்படையினரின் செயலுக்கு நிரந்தர தீர்வுகான கோரி வரும் 21ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் இளைஞரணியினர் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். webdunia photo FILE இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை இராணுவத் தாக்குதல்களிலிருந்து இலங்கைவாழ் தமிழ் இனத்தாரைப் பாதுகாத்திட, அங்கே உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு சுமூக தீர்வு ஏற்பட, தமிழர்கள் அனை…
-
- 0 replies
- 895 views
-
-
பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவரும், எழுத்தளாரும், பத்திரிகையாளரும், நவீன பாணி அரசியல் கட்டுரைகளின் முன்னோடியுமான குத்தூசி குருசாமி, இந்து நாளிதழை 1930களிலேயே, மவுண்டரோடு மகா விஷ்ணு என்றுதான் குறிப்பிடுவார். அந்த மகாவிஷ்ணு சமீபத்தில் வராக அவதாரம் எடுத்திருந்தது. அதைப் பற்றி பெரியார் திராவிடர் கழக வார ஏடான புரட்சி பெரியார் முழுக்கம் இப்படி குறிப்பிட்டு இருக்கிறதுது: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகம் கிளர்ந்தெழுவதை தாங்கிக் கொள்ள முடியாத பார்ப்பன 'இந்து' ஏடு அக்.14 அன்று நஞ்சை கக்கும் தரம் தாழ்ந்த கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்துவின் ஆசிரியர் குழுவைச் சார்ந்த மாலினி பார்த்தசாரதி என்ற பார்ப்பனப் பெண் எழுதியுள்ள அக்கட்டுரையில் விரக்தியடைந்த விடுதலைப் புலிகள் தூண்டு…
-
- 0 replies
- 1.7k views
-
-
அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இலங்கை ராணுவத் தாக்குதல்களிலிருந்து இலங்கைவாழ் தமிழ் இனத்தாரைப் பாதுகாத் திட, அங்கே உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு சுமூக தீர்வு ஏற்பட, தமிழர்கள் அனைவரும் ஒரே உணர்வில் நின்று விடை காண வேண்டும் என்ற வேண்டுகோளை- தலைமைக் கழகத்தின் சார்பில் ``இலங்கைப் பிரச்சினையில் கழகத்தின் நிலையும்- மத்திய அரசுக்கு வேண்டுகோளும'' எனும் பொருளில் சென்னையில் நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் வேண்டுகோள் விடுத்த தோடு, இலங்கை ராணுவத் தாக்குதல் தமிழினப் படுகொலை இவைகளை தடுத்து நிறுத்திட, தமிழர்கள் அனைவரும் பிரதமருக்கு தந்தி அனுப்பிட வேண்டு மெனவும் கேட்டுக் கொ…
-
- 0 replies
- 598 views
-
-
இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியா ஒரு ஆதிக்கச் சக்தியாகத் திகழவே இலங்கைக்கு இந்தியா இராணுவ உதவி அளிக்கிறது என நடுவணரசு விளக்கம் அளித்துள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு அளிக்கப்படும் இராணுவ உதவிகளை முதல் முறையாக வெளிப்படையாக அறிவித்துள்ளது இந்திய அரசு. இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் இராணுவ உதவியை நிறுத்தக் கோரி, முதல்வர் கருணாநிதி தலைமையில் கடந்த 14ம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கர்நாடக மாநில பெங்களூருக்கு நேற்று வந்திருந்த மத்திய இராணுவ அரசாங்க அமைச்சர் எம்.எம்.பல்லம் ராஜுவிடம் இந்த தீர்மானம் குறித்து நடுவணரசின் நிலை என்ன? என நிருபர்கள் கேட்டனர். அதற்கு எம்.எம்.பல்லம் ராஜு கூறியதாவது: இலங்கைக்கு உதவிகளும்,…
-
- 0 replies
- 706 views
-
-
இலங்கைக்கு ராணுவ உதவி ஏன்?-மத்திய அரசு விளக்கம் பெங்களூர்: இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியா ஒரு ஆதிக்க சக்தியாகத் திகழவே இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி அளிக்கிறது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு அளிக்கப்படும் ராணுவ உதவிகளை முதல் முறையாக வெளிப்படையாக அறிவித்துள்ளது இந்திய அரசு. இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் ராணுவ உதவியை நிறுத்தக் கோரி, முதல்வர் கருணாநிதி தலைமையில் கடந்த 14ம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நேற்று பெங்களூருக்கு வந்திருந்த மத்திய ராணுவ ராஜாங்க அமைச்சர் எம்.எம்.பல்லம் ராஜுவிடம் இந்த தீர்மானம் குறித்து மத்திய அரசின் நிலை என்ன? என நிருபர்கள் கேட்டனர். அதற்கு எம்.எம்.பல…
-
- 5 replies
- 3.1k views
-
-
அம்பாந்தோட்டையில் சிறிலங்கா இராணுவம் - ஆயுததாரிகள் கடும் மோதல் [வெள்ளிக்கிழமை, 17 ஒக்ரோபர் 2008, 06:00 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள யால - 2 வனப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளுக்கும் இடையில் நீண்ட நேரம் இடம்பெற்ற கடுமையான மோதலில் இராணுவத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பலர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: யால - 2 வனப்பகுதியில் உள்ள மாணிக்கை கங்கையிலிருந்து திஸ்ஸமகராகம பக்கமாக செல்லும் கடற்கரை வீதிப்பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4:30 நிமிடமளவில் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளுக்கும் இடையில் கடுமை…
-
- 0 replies
- 1.3k views
-
-
தென்னிந்திய தமிழ் தலைவர்களுக்கு அகண்ட தமிழீழத்தை உருவாக்கும் கனவு இருப்பதாக அல்லி மலர் அமைப்பின் தலைவர் குணதாச அமரசேகர குறிப்பிட்டுள்ளார். இதன் முன்னோடியாக இலங்கையின் வடக்கு கிழக்கில், பிரபாகரனின் ஊடாக ஈழத்தை உருவாக்குவதே அவர்களின் நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் இலங்கைப் படையினரால் பிரபாகரன் தோல்வியடைந்தால், அவர்களின் அகண்ட ஈழநாடு என்ற கனவு சீர்குலையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் இந்திய மத்திய அரசாங்கம் எவ்வாறு செயற்படப் போகிறது என்பதே இலங்கைக்கு முக்கியமான ஒன்றாக இருக்கும். எனினும் இந்தியாவுக்கு இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட எந்த உரிமையும் இல்லை எனவும் குணதாச அமரசேகர குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று நடை…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிப்பாய் ஒருவன் உயர்ந்த கம்பத்தில் ஏறிக் கட்டிய சிங்கக்கொடி பறக்க கீழே குழுமி நின்ற படைச்சிப்பாய்கள் உணர்ச்சிப் பரவாகத்தில் கைதட்டி ஆர்ப்பரிக்கின்றனர். கூடுவிட்டு ஆவிபிரிந்த காட்சியாய் தமிழர் வாழ்விடங்கள் உயிர்ப்பிழந்து கிடக்கின்றன. அவற்றையும் பதிவாக்கி பெருமிதத்தோடு சிங்களத்தின் ரூபவாகினித் தொலைக்காட்சி அடிக்கடி காட்சிப்படுத்திக்கொண்டிருக
-
- 0 replies
- 939 views
-
-
ஈழத் தமிழர்களின் பிரச்னைக்காக தி.மு.க. அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தமிழ் இனம் என்ற ஒரே மையத்தில் அனைவரும் இணையாமல், அரசியல் காரணங்களுக்காக சில கட்சிகள் புறக்கணித்ததால் பிரபாகரன் வருத்தம் அடைந்துள்ளதாகக் கூறுகிறார் இயக்குநர் சீமான். அவரைச் சந்தித்தோம். ``ஈழத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆராய, தி.மு.க. அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. `இது கண்துடைப்பு நாடகம்' என்று பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. புறக்கணித்தது. இதனைத் தொடர்ந்து ம.தி.மு.க., தே.மு.தி.க. பா.ஜ.க. ஆகிய கட்சிகளும் புறக்கணித்தன. அ.தி.மு.க. எப்போதுமே ஈழத் தமிழர் பிரச்னையில் எதிர்ப்பு நிலையில்தான் இருந்துள்ளது. அவர்களோடு இணைந்…
-
- 11 replies
- 3.1k views
-
-
ஈழத்தில் தமிழர்கள் மீதான இனப்படுகொலை நிறுத்தப்பட்டு அமைதி காண சென்னையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிரமாண்ட மனித சங்கிலி அணிவகுப்பு நடத்தப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.2k views
-
-
இலங்கை இனப்பிரச்சினை தீர்வில் இந்திய மத்திய அரசாங்கம் தலையிடவேண்டும் என்ற கோரிக்கையை தீவிரப்படுத்தும் வகையில் தமிழகத்தில் இருந்து மத்திய அரசாங்க அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 7 அமைச்சர்கள் தமது பதிவி விலகல் கடிதத்தை இன்று கையளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. திராவிட முன்னேற்றக் கழக தலைவரும் தமிழக முதல்வருமான முத்துவேல் கருணாநிதியிடம் இதற்கான கடிதம் கையளிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழ் நாட்டின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரின் தகவலின் படி மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் டி.ஆர். பாலு ஏ. ராஜா எஸ்.எஸ். பாலமாணிக்கம் சுப்புலக்சுமி ஜெகதீசன் எஸ். ரகுபதி வீ. வெங்கடாபதி மற்றும் ராதிகா செல்வி ஆகியோர் பதவி விலகியுள்ளார்கள் என தெரிவிக்கப்படுகிறது. இ…
-
- 0 replies
- 1.8k views
-