ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143677 topics in this forum
-
அதிகாரப் பகிர்வுத் திட்டமானது இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலானது இல்லையென ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். மனித சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு அதிகாரப் பகிர்வு அவசியமானதாக இருக்கின்றபோதும், அது சரியாகக் கணிக்கப்பட்டு சமநிலையில் பேணப்படவேண்டும் என அமைச்சர் கூறினார். 13வது திருத்தச்சட்டமூலம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக மஹா சங்கத்தினருக்கு விளக்கமளிக்கும் மாநாட்டில் உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “அவ்வாறான திட்டமொன்றைத் தயாரிக்கும்போது உள்நாட்டு பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார விடயங்களைக் கவனத்தில்கொள்ளவேண்டியது அவசியமானது” என்றார் அமைச்சர். அரசியலம…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கையில் அடுத்து வரும் தினங்களில் இடிமின்னல் காரணமாக ஆபத்துகள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. நாட்டில் நிலவும் பருவப் பெயர்ச்சி மழை காரணமாக மாலை மற்றும் இரவு வேளைகளில் பெய்துவரும் இடியுடன் கூடிய மழையில் இந்த ஆபத்து ஏற்படக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். மாலையிலும், இரவு வேளைகளிலும் பெய்யும் சிறியளவிலான மழையுடன் கூடிய காலநிலையிலும் இந்த ஆபத்து ஏற்படக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார். இதேவேளை அதிகம மழை வீழ்ச்சி காரணமாக வெள்ளம் ஏற்படக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார். http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=5…
-
- 0 replies
- 1k views
-
-
போராட்ட வடிவங்கள் மாறுபடலாம் - முரண்படலாம் ஆனால் - சிறுபான்மைச் சமூகங்களின் போராட்டங்கள் நியாயமானது - ஹக்கீம் - விசேட செவ்வி: சாதாரண ஜனநாயகக் கோட்பாடுகளின் அடிப்படையில் குறிப்பாக தற்போதுள்ள வெஸ்ற் மினிஸ்ரர் முறைமையின் கீழ் தனிநபர்கள் வெற்றி பெற்றுக் கொண்டு போகலாம். அவர்கள் பட்டங்கள் பதவிகளையும் பெற்றுக் கொள்ளலாம். எனினும் அங்கே சமூகங்கள் தோற்றுப் போகின்றன. ஆனால் இவை தற்காலிகமானவையே. இந்தத் தனிநபர்கள் எப்பொழுதும் வெற்றி பெற முடியாது, அவ்வாறே சமூகங்களும் அந்த சமூகங்களின் பின்னாலுள்ள இயக்கங்களும் தொடர்ச்சியாக தோல்வி கண்ட வரலாறும் இல்லை. அவ்வாறு தோல்வி காண்பதற்கு இயங்கியல் அனுமதிப்பதும் இல்லை என மனம் திறக்கிறார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவ…
-
- 0 replies
- 1k views
-
-
அரசியல் தீர்வுதிட்டம் - நம்பிக்கை இருக்குமானால் உடனடியாக யுத்தத்தை நிறுத்தி அரசியல் தீர்வு யோசனை ஒன்றை முன்வைக்குமாறு ஜனாதிபதிக்கு மங்கள சவால்: [Full text of the media statement] Media release If President believes in a political solution, a proposal must be tabled now This country has been told many a times by President Rajapaksa that he is for a political solution and every time there after, the war escalated. This time, perhaps not for the last time, the President has told the All Party Conference (APC) held on the morning of 11th October that he believes military offensives are no solutions to the ethnic conflict and peace has to be achieved th…
-
- 0 replies
- 584 views
-
-
இலங்கை ராணுவத்துக்கு, மத்திய அரசு ராணுவ உதவி அளிப்பதைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் இன்று சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் தீவிர தாக்குதல் நடத்துவதைக் கண்டித்தும், இலங்கை அரசுக்கு ராணுவ உதவி அளிப்பதை கண்டித்தும் பா.ம.க. ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்நிலையில், இன்று சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இலங்கை அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனையடுத்து, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. பின்னர், அவர்களை காவல்துறையினர் கைது செ…
-
- 0 replies
- 734 views
-
-
சுமாத்திராப் பகுதியில் ஏற்படக்கூடிய கடல் அதிர்வின் காரணமாக இலங்கையில் மீண்டுமொரு சுனாமித் தாக்கம் ஏற்படக்கூடுமென இலங்கையின் சிரேஷ்ட விஞ்ஞானி ஒருவர் எதிர்வுகூறியுள்ளார். எதிர்வரும் சில தினங்களில் கடல் அதிர்வு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக தேசநிர்மாண ஆய்வு நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானியான எச்.ஜீ.எஸ்.ஆரியரட்ண தெரிவித்தார். சுமாத்திரா கடற்பரப்பில் காணப்படும் மீன்கள் இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் பரந்தளவில் காணப்படுவதாகவும், மீன்களின் இடப்பெயர்வானது கடற்பரப்பில் ஏற்படக்கூடிய மாற்றத்தைப் பிரதிபலிக்குமெனவும் அவர் கூறியுள்ளார். “பூமியதிர்வு ஏற்படும் பட்சத்தில் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் ஒரு முயற்சியாக இது அமையும்” என ஆரியரட்ண குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 1.1k views
-
-
மீண்டும் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கித் தாக்குதல்... தொடரும் உயிர் இழப்பு... மீனவர்களின் ஸ்டிரைக்... கலெக்டரின் சமாதானக் கூட்டம் என்று ராமேஸ்வரம் தீவு மறுபடியும் தகிக்க ஆரம்பித்துவிட்டது. கடந்த மாதம் 28-ம் தேதி மதுரை தத்தனேரி பாக்கியநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர் முருகன் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு பிணமாக ராமேஸ்வரம் கரைக்கு வந்தபோது, ஒட்டுமொத்த மீனவ சமுதாய மக்களும் அதிர்ந்துவிட்டனர். காரணம், கடந்த ஜூலை மாதத்தில்தான் தமிழக மீனவர்களுக்காக கிட்டத்தட்ட எல்லாக் கட்சிகளுமே பெரிய அளவில் குரல் கொடுத்து, தனித்தனியாக ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை நடத்தி, பிரதமரின் கவனத்தை ஈர்த்தன. ஆகஸ்ட் மாதத்தில…
-
- 3 replies
- 1.5k views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் மணலாறில் தண்ணிமுறிப்புக்குளம் பகுதியில் சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.. இத்தாக்குதலின்போது 19 படையினர் கொல்லப்பட்டனர். மேலும் 35 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதல் பற்றி விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:- கடந்த வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் ஆட்டிலறித் தாக்குதல் பல்குழல் பீரங்கித் தாக்குதல் மற்றும் ரொக்கட் லோஞ்சர் தாக்குதல் சூட்டாதரவுடன் சிறிலங்கா படையினர் பாரிய முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுக்கு எதிராக தழிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய அகோர எதிர்த்தாக்குதலினால் படையினரின் முன்னேற்ற முயற்சி கைவிடப்பட்ட நிலையில் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.இம்ம
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கை விவகாரத்தில் மத்தியஸ்தம் வகிப்பதற்கு இந்தியா தயாராக இருந்தால் அது குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புலிகளுடன் பேசும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். சென்னையில் தற்போதுள்ள சிவாஜிலிங்கம் எம்.பி. இந்தோ ஆசிய செய்திச் சேவைக்கு வழங்கியுள்ள தொலைபேசி பேட்டியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். "விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சுகளுக்கு வருவதற்குத் தயார் என்ற உத்தரவாதத்தை இந்தியா பெற விரும்பினால் இது தொடர்பாக வன்னிக்குச் சென்று விடுதலைப் புலிகளின் தலைவர்களுடன் பேச்சுகளை மேற்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவுள்ளது. இந்தியாவுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே பாலமாக செயற்படத் தயாராகவுள்ளோம். விடுதலைப…
-
- 0 replies
- 780 views
-
-
ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினை தமிழக அரசியலில் சூடுபிடித்திருக்கும் தற்போதைய சூழலில், அங்குள்ள பல கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஈழத் தமிழர்கள் இலங்கையில் எதிர்கொள்ளும் அவல நிலை குறித்தும் கள நிலைமைகள் பற்றியும் அவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றனர் என சென்னைச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து ஆராய்வதற்காகக் கூட்டியுள்ள சர்வகட்சி மாநாடு நாளை சென்னையில் நடைபெற இருக்கையில் அங்கு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் காத்திரமான முடிவு ஒன்று எடுக்கப்படுவதற்கான தூண்டுதல் செயற்பாடாக அந்த மாநாட்டில் பங்குபற்றும் கட்சிகளின் தலைவர்களை, தமிழ்த…
-
- 0 replies
- 924 views
-
-
இராணுவத்தின் கொடுந்தாக்குதலைச் சந்தித்துவரும் இலங்கைத் தமிழர்களின் இன்னலைத் தீர்க்க மத்திய, மாநில அரசுகள் மேலும் அக்கறை காட்ட வேண்டும், இராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளான தமிழர்களுக்கு உணவு, மருந்து, உடைகள் போன்றவற்றை உடனடியாக அனுப்பி உதவ வேண்டும், இதற்குத் தடங்கல்கள் வருமானால் மத்திய அரசிலிருந்து திமுக விலக வேண்டும் என்று தமிழ்நாட்டின் 10 பெரிய நகரங்களில் நடத்திய கருத்துக் கணிப்பிலிருந்து தெரிகிறது. சென்னை, கோயமுத்தூர், ஈரோடு, சேலம், மதுரை, வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய ஊர்களில் இம் மாதம் 6 முதல் 11 வரையில் 1,031 பேர்களிடம் கருத்து கேட்டபோது இந்தத் தகவல்கள் கிடைத்தன. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக் குழுமம் சார்பில், சமூகத்தின் அனைத…
-
- 5 replies
- 1.4k views
-
-
திருமலையில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கும் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் [திங்கட்கிழமை, 13 ஒக்ரோபர் 2008, 09:45 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் கிழக்கு கட்டைப்பறிச்சான் தெற்கு, கட்டைப்பறிச்சான் வடக்கு கிராம சேவகர் பிரிவுகளில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். 159 குடும்பங்களைச் சேர்ந்த 461 பேருக்கு அடிப்படை வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கத்திடம் பாதிக்கப்பட்ட மக்கள் முறையிட்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற போர் நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்கள் திருகோணமலை, மட்டக்களப்பு நலன்புரி நிலை…
-
- 0 replies
- 420 views
-
-
களுவாஞ்சிக்குடியில் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த இருவர் சுட்டுக்கொலை [திங்கட்கிழமை, 13 ஒக்ரோபர் 2008, 09:44 மு.ப ஈழம்] [சுவிஸ் நிருபர்] மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் பிள்ளையான் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த இருவர் அடையாளம் தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ளுவாஞ்சிக்குடி எருவில் பகுதியில் உள்ள மதுபானச்சாலை ஒன்றின் மேல் மாடியில் நேற்று முன்நாள் சனிக்கிழமை மாலை 6:15 நிமிடமளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த இருவர் அங்கிருந்த போது உந்துருளியில் வந்த இருவர் மேல்மாடிக்குச் சென்று இருவர் மீதும் ரி-56 ரக துப்பாக்கியால் சுட்டனர். இதில், அந்த இகுழுவின் களுவாஞ்சிக்குடி…
-
- 0 replies
- 706 views
-
-
தற்கொலை குண்டுதாரியின் படத்தை காண்பித்து தேடுதல் நடத்திய காவல்துறையினர் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள வெள்ளவத்தை பகுதியில் தற்கொலை குண்டுதாரி என சந்தேகிக்கும் பெண்ணொருவரின் படத்தை காண்பித்து காவல்துறையினர் தேடுதல் நடத்தினர். அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பயணம் செய்த வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரி எனக்கூறப்படும் பெண்ணின் படத்தை காண்பித்தே வெள்ளவத்தை காவல்துறையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சோதனை நடத்தியதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளவத்தையில் உள்ள வீடுகள், தொடர்மாடிகள் ஆகியவற்றிற்கு சென்ற காவல்துறையினர் மக்களிடம் குறித்த பெண்ணின் படத்தை மாத்திரம் காண்பித்து இவரை தெரியுமா எனக்கேட்டுள்ளனர். கறுப்பு- வெள்ளை படம…
-
- 1 reply
- 1.2k views
-
-
அரசாங்கத்திற்கும் TMVP க்கும் இடையிலான இரகசிய ஒப்பந்தம் அம்பலப்படுத்தப்பட வேண்டும் -UNP: ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கும், கருணா தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இரகசிய ஒப்பந்தம் அம்பலப்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். சிறுவர் போராளிகளை இணைத்துக் கொள்ளல் முகாம்களை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் சார்பில் பல்வேறு வன்முறைச் செயல்களை கருணா தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்டவிழ்த்துவிடுவதாக அவர் சுட்டிக்காட்டியு…
-
- 2 replies
- 935 views
-
-
ஈழத்தமிழர் பிரச்சினையில் அ.தி.மு.க.வும் ம.தி.மு.க.வும் தனிமைப்பட்டு விட்டன என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளதாவது : தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் எந்த பொதுப் பிரச்சினைகளிலும் கூட ஒன்று சேர மறுத்து, எங்கும் அரசியல், எதிலும் அரசியல் என்று செயற்படுவது மிகவும் வேதனையும் வெட்கமும் அடைய வேண்டிய ஒன்றாகும். கருணாநிதி குரல் கொடுத்ததோடு றிறுத்திக் கொள்ளாமல், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்;ட முயற்சி எடுத்துள்ளார். ஈழத்தமிழர் பிரச்சினையில் உண்மையான அக்கறையும், கவலையும் இன உணர்வும் உள்ள எவரும் இதனை வரவேற்கவே செய்வார். ஆனால் அ.தி.மு.க.வும் ம.தி.மு.கவும் கருணாநிதி கூட்டவிருக்கும் அனைத்து…
-
- 6 replies
- 1.5k views
-
-
விடுதலைப்புலிகளை தோல்வியில் இருந்து காப்பற்றும் முயற்சியில் ஐ.தே.க – சிங்கள ஊடகம் கூறுகிறது: விடுதலைப்புலிகள் அமைப்பை தோல்வியில் இருந்து காப்பற்றும் நோக்கில் ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து இலங்கை கிடைக்கும் உதவிகளை நிறுத்தும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியினரும்- புலிகளின் ஆதரவாளர்களும் இத்தாலியில் மேற்கொண்ட சூழ்ச்சி தொடர்பான தகவல்கள் வெளியாகி இருப்பதாக அரசாங்கத்தின் சிங்கள நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. இத்தாலியில் வாழும் இலங்கையர்கள், அங்கு இயங்கும் சிங்கள தொலைக்காட்சி ஆகியவற்றின் உதவியுடன் இந்த சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஒரு நடவடிக்கையாக மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேராவின் கொலை தொடர்பில் சர்வதேச விசாரணைகளை கோரி கத்தோலிக்க குருமார் ஊடாக பாப்பரசருக்கு மகஜர் வழங்க…
-
- 0 replies
- 785 views
-
-
EU கொசோவோவில் செய்தது போலவே, இலங்கையின் போர்த் தலைவர்களையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முனைகிறது – விமல்: ஆணையிறவு, பூநகரி பிரதேசங்களில் புலிகளின் பலத்தை அழிக்கும் முன்னர், ஐக்கிய தேசிய கட்சியும், சர்வதேச சக்திகளும் இணைந்து கொழும்பைக் கேந்திரமாக கொண்டுள்ள அரசியலை வீழ்த்தி, நாடாளுமன்றத்தை நிலைகுலைய வைக்கும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். குருணாகலில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் கொசோவோ நாட்டுக்கு செய்தது போலவே, இலங்கையின் போர்த் தலைவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதேவேளை சில நாடாளுமன்ற உறுப்பினர்…
-
- 0 replies
- 1.1k views
-
-
குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்க வேண்டுமென வெளிநாட்டு தூதுவர்களிடம் கருணா கோரத் திட்டம் - தகவல்கள் வெளியாகி உள்ளன: மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து சர்வதேச சமூகத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்குமாறு கருணா வெளிநாட்டு தூதுவர்களிடம் கோரிக்கை விடுக்கத் தீர்மானித்துள்ளார். குறிப்பாக பிரித்தானிய உயர்ஸ்தானிகரைச் சந்தித்து தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு, பாராளுமன்ற உறுப்பினர் கருணா கோர உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவோ அல்லது பிரித்தானியோ தமக்கு வீசா வழங்க மறுப்பு தெரிவிக்காது என்பதில் பூரண நம்பிக்கை இருப்பதாக கருணா குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு த…
-
- 0 replies
- 768 views
-
-
ஈழத்தமிழர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு காண வலியுறுத்தி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்பாக ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பான தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியின் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ள அவர், அதேநாளில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வை.கோபாலசாமியும் இந்தப் போராட்டத்துக்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார். கலைஞர் கருணாநிதியின் அனைத்துக்கட்சிக் கூட்டம் ஒரு கண்துடைப்பு நடவடிக்கை எனவும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து அவர் மத்தியில் ஆளும் கூட்டணியிலிருந்து விலகவேண்டும் என்றும் செ…
-
- 6 replies
- 1.8k views
-
-
இலங்கை தமிழருக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் திரையுலகம் போராட்டம் ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தமிழ்த் திரையுலகத்தினர் நேற்று முதல் கறுப்புப் பட்டி அணிந்து தமது பணிகளை மேற்கொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் திரையுலகின் பல்வேறு இயக்கங்களின் கூட்டு ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இதன் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அடுத்த கட்டப் போராட்டம் தொடர்பாக மீண்டும் ஆலோசனைக்கூட்டம் கூட்டப்பட்டதாகவும் தமிழ்த் திரையுலகினர் தெரிவித்துள்ளனர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டுள்ள நிலையில் திரைத்துறையினரும் தமது ஆதரவை வெளிப்படுத்த வேண்டும் என்று மூத்த திரைப்பட இயக்குநர் பாரதிராஜா அ…
-
- 7 replies
- 1.5k views
-
-
ஒன்று சேர்வோம்; குரல் கொடுப்போம்! வெகு அபூர்வமாகத் தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒருசேர இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக குரல் கொடுத்திருக்கின்றன. எதிர்க்கட்சிகள் உண்ணாவிரதத்துடன் தங்கள் எதிர்ப்பைக் காட்டின. தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய அரசு உடனடியாகத் தலையிடக் கோரியதுடன் - `தி.மு.க. அரசு தேவையா என்பதற்கு விடை காணவேண்டும்' என்று உணர்வுபூர்வமாகப் பேசியிருக்கிறார். இலங்கையின் முற்றிவரும் போர் நெருக்கடியும் கிளிநொச்சி போன்ற பகுதிகளில் தொடர்ந்து நடக்கும் தாக்குதல்களும், இந்திய மீனவர்கள் மீது நடக்கும் அத்துமீறல்களும் இலங்கை அரசின் வரம்பற்ற சர்வாதிகாரத்தையே வெளிப்படுத்துகின்றன. ஏற்கெனவே சுமார் 70000 பேர் வரை தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் நிரம்ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஈழத்தமிழர்கள் மீது இன அழிப்பு மேற்கொள்ளும் சிறிலங்கா அரசைக் கண்டித்து சென்னையில் நடந் மறியற் போராட்டத்தின் போது வை.கோ ஆற்றியஉரையில், இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பதாக எண்ணி, இந்திய ஒருமைப்பாட்டைக் குலைத்துவிடாதீர்கள் எனக்குறிப்பிட்டார். உரையின் முழுமையான ஒலிவடிவம் இணைக்கப்பட்டுள்ளது. உரையின் ஒலிவடிம்
-
- 0 replies
- 885 views
-
-
ஆயுதங்களைக் களைந்து விட்டுச் சரண் அடையுமாறு மிகத் தெளிவாக விடுதலைப் புலிகளை மீண்டும் அழைக்கின்றேன். அவர்கள் அவ்வாறு செய்துவிட்டு, ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துகொள்ள வேண்டும். தமிழ்ச் சகோதரர்களின் ஜனநாயக அரசியல் உரிமைகளை வழங்குவதை நாம் நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். நேற்று அலரிமாளிகையில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் வைத்து ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்தார். எந்தளவு கடினமாக இருப்பினும், அரசி யல் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர் வுகள் காணப்பட வேண்டும், அதற்கான வழி முறைகள் தொடரப்பட வேண்டும் என்பதே எனது நம்பிக்கையாகும். அரசியல் பிரச்சினைகளுக்கு இராணு வத் தீர்வுகள் இல்லை என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. மக்கள் தமது நோக் கங்களையும் அபிலாசைகளையும் உணர்ந்து அதற்காகப் பணி…
-
- 0 replies
- 806 views
-