ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143323 topics in this forum
-
Published By: DIGITAL DESK 5 26 MAY, 2023 | 01:25 PM பேலியகொட பிரதேசத்தில் 24 கிலோ கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் குறித்த கார் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் சப்-இன்ஸ்பெக்டர் உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட மற்றைய இருவரும் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் என பொலிஸார் தெரிவித்தனர். 24 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் காரில் தப்பிச் செல்லும் போது கைதுசெய்ய முயற்சிக்காத காரணத்தினாலேயே இவர்கள் மூவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/15…
-
- 0 replies
- 179 views
- 1 follower
-
-
வடக்கு - கிழக்கு மீனவர்களுக்கு விரைவில் சீனாவின் மண்ணெண்ணெய் - அமைச்சர் டக்ளஸ் Published By: Digital Desk 5 25 May, 2023 | 10:50 AM சீன அரசாங்கத்தினால் கடத்தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற மண்ணெண்ணை விரைவில் வடக்கு கிழக்கில் உள்ள ஏழு கடை தொழில் மாவட்டங்களுக்கும் வழங்கப்படும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை முழுவதுமான கடற்தொழில் அமைச்சர் என்ற வகையில் மீனவ மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிவேன். மீனவ மக்களின் வாழ்வாதாரம் அன்றாட தொழில் நடவடிக்கை வீட்டு வசதிகள் என…
-
- 3 replies
- 267 views
-
-
சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்தார் வடக்கு ஆளுநர் Published By: DIGITAL DESK 5 25 MAY, 2023 | 10:14 AM ( எம்.நியூட்டன்) வடக்கு மாகாணத்தில் காணப்படும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண புதிய வேலைத்திட்டத்தைத் தயாரிக்கும் பணிகளை, வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆரம்பித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் ஆளுநர் பதவியை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்ற பின்னர் தமது முதல் பணியாக அவர் இந்த வேலைத்திட்டத்தை உருவாக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளார். மே 22 திங்கட்கிழமை காலை 9.30க்கு உத்தியோகபூர்வமாக தமது பணிகளைப் பொறுப்பேற்ற ஆளுர் அன்றையதினம் மதியமே தெ…
-
- 2 replies
- 369 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 5 25 MAY, 2023 | 05:27 PM இலங்கை கடற்பரப்புக்குள் வளங்களை அழிக்கும் எவ்விதமான நடவடிக்களையும் அனுமதிக்கப் போவதில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள தமிழ்நாடு அரச சார்பற்ற நிறுவனத்தின் மீன்பிடி முகாமைத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் திரு. விவேகானந்தன் இன்று (25) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அமைச்சு அலுவலகத்தில் சந்தித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் இச்சந்திப்பின்போது கருத்து தெரிவித்த அமைச்சர், இலங்கை கடற்பரப்புகளில் இந்திய மீனவர்களின் அத்துமீறி எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் முறையை சுமூகமான முறையில் தடுத்த…
-
- 1 reply
- 204 views
- 1 follower
-
-
சோழர்காலத்தில் கட்டப்பட்ட உருத்திரபுரீஸ்வரர் சிவாலயக் காணியிலும் தொல்பொருட்களாம் !! கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயம் அமைந்துள்ள காணியில் தொல்பொருட்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தியுள்ளது. இந்துக்களின் பொற்காலமாகக் கருதப்படும் சோழர்காலத்தில் முற்றுமுழுதாக திராவிடக் கட்டடக் கலைமரபை பின்பற்றி உருத்திரபுரீஸ்வரர் சிவாலயம் கட்டப்பட்டது. வரலாற்றுத் தொன்மையும், பழமையும் வாய்ந்த சிவாலயத்தை அபகரிப்பதற்கான முயற்சிகள் தொல்பொருளியல் திணைக்களத்தினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உருத்திரபுரஸ்வரபுரம் ஆலயம் அமைந்துள்ள காணியில் புராதன தொல்லியல் சின்னங்கள் அமைந்துள்ளதாக தொல்லியல் திணைக்களம் கூறியுள்ள…
-
- 41 replies
- 2.1k views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 5 25 MAY, 2023 | 11:14 AM முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுக்கப்ப முயற்சி அப் பகுதி மக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும் வியாழக்கிழமை (25) தடுத்து நிறுத்தப்பட்டது. குறிப்பாக நில அளவை திணைக்களத்தினர் மற்றும், கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தர் உள்ளிட்டவர்கள், குறித்த மாவீரர்துயிலுமில்லக் காணியினை அளவீடு செய்ய வருகைதந்திருந்தனர். இந் நிலையில் மாவீரர்களின் பெற்றோர், அப்பகுதிமக்கள் மற்றும், மக்கள் பிரதிநிதிகள் சிலரும் குறித்த காணிசுவீகரிப்பு நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தனர். அத்த…
-
- 1 reply
- 465 views
- 1 follower
-
-
32 பில்லியன் நஷ்டத்தை ஏற்படுத்திய நபருக்கு ஆதரவா? – சஜித்திடம் நிமல் லான்சா கேள்வி !! ஐ.எம்.எப். நிதியுதவியை தாமதப்படுத்தி, திறைச்சேறிக்கு 32 பில்லியன் நஷ்டத்தை ஏற்படுத்திய நபருக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்ட கருத்துக்கு ஆளும்கட்சி உறுப்பினர் நிமல் லான்சா அதிருப்தி வெளியிட்டுள்ளார். மின்சாரத்தை உற்பத்தி செய்வதும், விநியோகிப்பதும், மின்சாரசபை ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதோ பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் கிடையாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக செயற்பட்டே ஆணைக்குழுவின் தலைவராக ஜனக ரத்நாயக்க நியமிக்கப்பட்டார் என்றும் நிமல் லான்சா தெரிவித்துள்ளார். மேலும் மக்களி…
-
- 0 replies
- 186 views
-
-
கனடாவில் ஈழத்தை ஸ்தாபித்துக் கொள்ளலாம் - சரத் வீரசேகர Published By: Digital Desk 5 24 May, 2023 | 10:10 AM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) கனடாவில் வாழும் இலங்கை தமிழர்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்ளும் அரசியல் நோக்கத்துடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ இலங்கை தொடர்பில் தவறான கருத்தை தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர்கள் தொடர்பில் அவருக்கு உண்மையில் கரிசனை இருக்குமாயின் கனடாவில் ஈழத்தை ஸ்தாபித்துக் கொள்ளலாம். மனித உரிமைகள் என்ற போர்வையில் விடுதலை புலிகள் அமைப்பின் இலக்கை அடைய டயஸ்போராக்கல் செயற்படுகிறார்கள் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அட்…
-
- 11 replies
- 664 views
-
-
23 MAY, 2023 | 05:30 PM தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து இன்று (23) தீர்ப்பளித்துள்ளது. தங்கவேலு நிமலன் என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கொழும்பில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்துவதற்காக வெடிபொருட்கள் மற்றும் 2 மைக்ரோ ரக கைத்துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு இரத்மலானை பிரதேசத்தில் இரண்டு மைக்ரோ பிஸ்டல்கள், சி-4 ரக உயர் வெடிமருந்துகள் மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார். …
-
- 6 replies
- 794 views
- 1 follower
-
-
தவறு செய்யவில்லையெனில் சர்வதேச விசாரணைக்கு முகங்கொடுங்கள் : இன அழிப்புக்கு உள்ளானவர்களின் ஆத்மா நிம்மதியாக வாழ விடாது - சிறிதரன் Published By: Digital Desk 5 24 May, 2023 | 10:20 AM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) இறுதிக்கட்ட யுத்தத்தில் தமிழர்கள் மீது இனப்படுகொலை கட்டவிழ்க்கப்படவில்லை,இரசாயன குண்டு தாக்குதல் நடத்தப்படவில்லை என்றால் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு தாராளமாக முகம் கொடுக்கலாம். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட்டோம் என சிங்கள பெரும்பான்மை அரசாங்கம் மார்புத்தட்டிக் கொள்கிறது. கடந்த 14 ஆண்டுகளில் நிம்மதியாக வாழ்கின்றீர்களா. இன அழிப்புக்…
-
- 7 replies
- 362 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கனடா நாடாளுமன்றத்தில் அதன் எம்.பிக்களால் நிறைவேற்றப்பட்ட தமிழர் இனப்படுகொலை தினம் கடைப்பிடிப்பு (மே 18) முன்மொழிவு தொடர்பான அறிவிப்பை கனடா பிரதமர் ஜெஸ்டீன் ட்ரூடோ வெளியிட்ட விவகாரத்தில் தனது கடுமையான எதிர்ப்பை இலங்கை தெரிவித்துள்ளது. இது தற்போது அந்த இரு நாடுகளுக்கும் இடையில் ராஜீய அளவிலான மோதலாக உருப்பெற்றுள்ளது. கனடா பிரதமர் தமிழர் இனப்படுகொலை தினமாக மே 18ஆம் தேதி கடைப்பிடிக்கப்படும் என்ற அறிவிப்பை மே 23ஆம் தேதி வெளியிட்ட பிறகு, இலங்கை வெளிவிவகார அமைச்சர் …
-
- 0 replies
- 189 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 5 24 MAY, 2023 | 04:22 PM அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து கொழும்பு மத்திய தபால் நிலையத்துக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்ட 34.75 மில்லியன் ரூபா பெறுமதியான அமெரிக்க "குஷ்" போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்கத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் (சட்ட விவகாரங்கள்) சுதத்த சில்வா இன்று புதன்கிழமை (24) தெரிவித்தார். பொரலஸ்கமுவ, வெள்ளவத்தை, மினுவாங்கொட, வெலிசர, நுவரெலியா மற்றும் தலங்கம ஆகிய இடங்களில் உள்ள வீடுகளுக்கு முகவரியிடப்பட்டு அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து 10 பொதிகள் விமான தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், இந்த பொதிகளை பெற்றுக் கொள்வதற்கு கொழும்பு மத்திய தபால் …
-
- 0 replies
- 232 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 5 24 MAY, 2023 | 03:04 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணங்கள் 23 சதவீதத்தாலும் உல்லாச விடுதிகளுக்கான மின் கட்டணங்கள் 40 சதவீதத்தாலும் குறைக்கப்படும். நிலையான கட்டணத்தை 400 ரூபாவிலிருந்து 250 ரூபாவாக குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கும் பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, …
-
- 1 reply
- 286 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 5 24 MAY, 2023 | 04:05 PM யாழ்ப்பாணத்திலுள்ள கல்லூரியொன்றில் பயிற்சி ஆசிரியரொருவர் மீது மாணவன் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று செவ்வாய்க்கிழமை (24) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த கல்லூரியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதமும் இதே மாணவனால் பிரச்சினை ஏற்பட்டு ஆசிரியரொருவர் மீது குறித்த மாணவனின் தந்தை தாக்குதல் மேற்கொண்டாரென தெரிவிக்கப்படுகிறது. முன்னர் நடந்த சம்பவம் தொடர்பாக காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படாமை காரணமாக தொடர்ச்சியாக ஆசிரியர் மீதான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் இது ஆசிரியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் ச…
-
- 0 replies
- 374 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 24 MAY, 2023 | 11:51 AM உயிர்த்தஞாயிறு குண்டுதாக்குதல்களை பலம்பொருந்திய சில சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார் அல்சுஹிரியா அரபுக்கல்லூரியில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கில் சாட்சிகள் என கருதப்படக்கூடியவர்கள் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்த டுவிட்டர் பதிவிற்கு அளித்துள்ள பதிலில் முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். இது முஸ்லீம்களிற்கு எதிரானநடவடிக்கை இந்த நடவடிக்கை 2013 இல் அவர்களிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை போன்றது அது மீண்டும் நிகழ்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பலம்பொருந்திய …
-
- 4 replies
- 365 views
- 1 follower
-
-
ஹபாயா அணியலாம்: நல்லிணக்கத்தின் சமிஞ்சை என்கிறார் இம்ரான் எம்.பி எப்.முபாரக் திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு எதிர்காலத்தில் ஹபாயா ஆடை தொடர்பில் எவ்வித பிரச்சினைகளையும் ஏற்படுத்தப்படமாட்டாது என்றும் கூறி நல்லெண்ண அடிப்படையில் வழக்குகளை இணக்கமாக முடித்துக்கொள்ள விரும்புவதாக சண்முகா வித்தியாலயத்தின் அதிபர் தரப்பானது நீதிமன்றில் முன்மொழிந்தமை மகிழ்ச்சியழிப்பதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். அத்தோடு, இவ்விடயமானது தமிழ் பேசும் மக்களிடையே நல்லதொரு நல்லிணக்கத்துக்கான சமிஞ்சையாக தென்படுவதாகவும் இரு தரப்பாரும் விட்டுக்கொடுப்போடும் இணங்கியும் செல்வதன் மூலம் பலம் பெற முடியும் என்றும் இம்ரான் எம்.பி. தெரிவித்து…
-
- 4 replies
- 565 views
-
-
சீனக் கப்பலில் இருந்து 14 சடலங்கள் மீட்பு- இலங்கை கடற்படை! இந்தியப் பெருங்கடலில் கடந்த வாரம் கவிழ்ந்த சீனக் கப்பலில் இருந்து மொத்தம் 14 சடலங்களை கண்டுபிடித்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கையின் தெற்கே உள்ள கடற்பரப்பில் கடந்த 16ஆம் திகதி பதிவாகியிருந்த இந்த விபத்தை அடுத்து மீட்பு நடவடிக்கைகளுக்கு இலங்கை கடற்படையினரும் உதவிபுரிந்து வருகிறனனர். கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரையின் பேரில் கண்காணிப்பு கப்பலான எஸ்.எல்.என்.எஸ்.விஜயபாகு பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில், இலங்கை கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினர், முன்னதாக 2 சடலங்களை கண்டெடுத்த நிலையில் தற்போது 12 பணியாளர்களின் சடலங்களை கடற்படையினர…
-
- 0 replies
- 243 views
-
-
முகமாலை பகுதியில் இன்று காலை விபத்து : ஒருவர் உயிரிழப்பு கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்துடன், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உயிரிழந்ததுடன், அதில் பயணித்த சிறுவர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர…
-
- 0 replies
- 315 views
-
-
22 தமிழ் அரசியல் கைதிகளே உள்ளனர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 22 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமே தற்போது சிறைகளில் உள்ளனர் என்றும் அவர்களையும் விடுதலை செய்வது தொடர்பான சட்ட நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான சார்ள்ஸ் நிர்மலநாதன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறைக்கை…
-
- 0 replies
- 256 views
-
-
ஆளுநர்களை மக்கள் நியமிக்கும் காலம் உதயமாக வேண்டும் - அருட்தந்தை மா.சத்திவேல் Published By: Digital Desk 3 19 May, 2023 | 10:53 AM ஆளுநர்களை மக்கள் நியமிக்கும் காலம் உதயமாக வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று வெள்ளிக்கிழமை (19) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு ,கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு ஜனாதிபதியால் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு…
-
- 15 replies
- 695 views
-
-
இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு-மத்திய வங்கி இலங்கை ரூபாயின் பெறுமதி 18.7 வீதத்தால் அதிகரித்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இம்மாதம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது. மேலும் இந்த காலகட்டத்தில், இலங்கை ரூபாய் பல முக்கிய வெளிநாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பை காட்டியுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதே காலப்பகுதியில் ஜப்பானிய யெனுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாயின் மதிப்பு 24.1 வீதத்தாலும் ஸ்டெர்லிங் பவுண்டுடன் 15.4 வீதத்தாலும் அதிகரித்துள்ளது. இதேநேரம் யூரோ நாணயத்துடன் ஒப்பிடும்போது 17.5 வீதத்தாலும் இந்திய ரூபாயுடன் ஒப்பிடும்போது 18.7வீதத்தாலும் ரூபாயின் …
-
- 1 reply
- 260 views
-
-
கொழும்பில் நினைவுத் தூபி அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையில் இடம்பெற்ற ஆயுத மோதல்கள், அரசியல் மற்றும் உள்நாட்டுக் கலவரங்களினால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் கொழும்பில் நினைவுத் தூபியை நிர்மாணிப்பதற்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அமைச்சரவை ஊடக பேச்சாளர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, ஆயுதப்படை மற்றும் காவல்துறை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் உட்பட அனைத்து பொதுமக்களையும் நினைவு கூறும் வகையில் இந்த நினைவுச்சின்னம் நிர்மாணிக்கப்படவுள்ளது. https://at…
-
- 6 replies
- 495 views
-
-
மாலியில் மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு சாதனம் (IED) வெடித்ததில் இலங்கையைச் சேர்ந்த நான்கு ஐநா அமைதி காக்கும் படையினர் காயமடைந்துள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அறிக்கையின்படி, ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் திங்களன்று காயங்கள் பெரிதாக இல்லை என தெரிவித்துள்ளார். மினுஸ்மா எனப்படும் மாலியில் உள்ள ஐ.நா தூதரகத்தைச் சேர்ந்த அமைதி காக்கும் படையினர் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை கிடால் பிராந்தியத்தில் உள்ள டெஸ்ஸாலிட்டில் உள்ள அவர்களின் முகாமுக்கு வடமேற்கே 12 கிமீ தொலைவில் நடந்துள்ளது.குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது, அவர்கள் ஒரு கவச வாகனத்தி…
-
- 1 reply
- 322 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 23 MAY, 2023 | 06:48 PM எல்லை தாண்டிச் சென்று இந்திய கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் ஐந்து பேரை இந்திய கடலோர காவல் படையினர் நேற்று திங்கட்கிழமை (22) கைதுசெய்துள்ளனர். இந்தியாவின் தூத்துக்குடியை சேர்ந்த இந்திய கடலோர காவல் படையினர் நேற்று மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திய கடல் எல்லைக்குள் 60 மைல் நாட்டிகல் தூரம் இலங்கையைச் சேர்ந்த படகில் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். இதையடுத்து உடனடியாக கடலோர காவல் படையினர் விரைந்து சென்று, அந்த படகை மடக்கிப் பிடித்தனர். அப்போது IMUL A-0635-NBO என்…
-
- 1 reply
- 205 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 23 MAY, 2023 | 05:37 PM நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி வந்துகொண்டிருந்த சமுத்திரதேவா படகின் சுக்கான் உடைந்து, பயணிகள் நடுக்கடலில் தத்தளித்த நிலையில், மீனவர்களின் உதவியுடன் அப்பயணிகள் மீட்கப்பட்டு படகுக் கரைக்கு அழைத்துவரப்பட்டனர். நெடுந்தீவில் இருந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (23) காலை குறிகாட்டுவான் நோக்கி பயணித்த சமுத்திரதேவா படகின் சுக்கான் உடைந்தமையால் நெடுந்தீவுக்கான போக்குவரத்து தடைப்பட்டது. சுமார் 70 பயணிகளுடன் பயணித்த சமுத்திரதேவா, மலையடிப் பகுதியை அண்மித்தபோது அதன் சுக்கான் உடைந்துள்ளது. அந்தப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணத்தை ச…
-
- 0 replies
- 174 views
- 1 follower
-