ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று வன்னிப் பிராந்தியத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.வன்னிப் பாதுகாப்புப் படைத் தளபதி மற்றும் விசேட படைப்பிரிவின் வீரர்கள் ஆகியோருடன் இராணுவத் தளபதி விசேட கலந்துரையாடலொன்றை இவ் விஜயத்தின்போது நடத்தினார். வன்னி கூட்டுப்படைத் தலையகத்தின் மீது கரும்புலிகள் மேற்கொண்ட தாக்குதலை முறியடித்த விசேட படைப்பிரிவுடன் இராணுவத் தளபதி மேற்கொள்ளும் இரண்டாவது கலந்துரையாடல் இதுவாகும். கரும்புலிகளின் தாக்குதலுக்குள்ளான படைத் தலைமையகத்தின் கட்டிடங்கள், தாக்குதல் இடம்பெற்ற பிரதேசங்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் தாக்குதலை முறியடித்த விசேட படையணியின் முகாம் என்பவற்றையும் அவர் பார்வையிட்டார். …
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈழத் தமிழர்களின் துயர் நீக்க தம்மால் இயன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாட்டில் இயங்கும் தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி ஒரு தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 775 views
-
-
சிறிலங்கா படைகளின் இராணுவ நெருக்குவாரங்களினால் பாரிய மனித பேரவலத்தை எதிர்நோக்கியிருக்கும் வன்னி மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளும் படியும் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்படியும் கோரி அவுஸ்திரேலியாவில் உள்ள புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் தலைநகர் கன்பராவில் கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 548 views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையகம் நாளை செவ்வாய்க்கிழமை வெளியேறவுள்ளதாக சிறிலங்காவுக்கான வதிவிடப் பிரதிநிதி கோர்டன்வைஸ் இன்றிரவு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 34 replies
- 3.9k views
-
-
கடற்சமரில் காயமடைந்த கடற்படைவீரர் மரணம் மன்னார் நாச்சிக்குடாப் பகுதியில் நேற்று தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகளுடன் இடம்பெற்ற மோதலின் போது காயமடைந்த கடற்படை வீரர் ஒருவர் மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்தார் காயமடைந்த மேலும் மூன்று கடற்படையினர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதேவேளை இந்த மோதலின் பின்னர் தொழில்களில் ஈடுபட்டிருந்த பள்ளிமுனை மீனவர்களைக் கடற்படையினர் கடுமையாகத் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை மு.ப.11.00 மணியளவில் நாச்சிக்குடா பகுதியில் வலைப்பாடு கடற்பரப்பில் விடுதலைப் புலிகளுக்கும் கடற்படையினருக்கும் இடையில் 4 மணித்தியாலங்கள் கடும் சண்டைகள் நடைபெற்றதாகவும், இந்தச் சண்டைகளில் 3 பெரிய படகு…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையில், குறிப்பாக வன்னியில், மனிதாபிமான விவகாரங்கள் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றன எனக் கருதும் இணைத்தலைமை நாடுகள், அவை குறித்து ஆராய்வதற்காக அவசரக் கூட்டம் ஒன்றை அடுத்த வாரத்தில் நியூயோர்க்கில் நடத்துவதற்குத் தீர்மானித்திருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாகவே இந்தக் கூட்டம் அவசர அவசரமாக அழைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது. வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் செயற்பட்ட சர்வதேச உள்நாட்டுத் தொண்டர் அமைப்புகள் மற்றும் ஐ.நா. நிறுவனங்களை குறுகியகால அறிவித்தலோடு அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேற்றிய கொழும்பு அரசின் நடவடிக்கையாலும் அப்பிரதேசங்களில் வெடித்திருக்கும் கொடூர யுத்தத்தாலும் மனிதப் பேரவல நெருக்கட…
-
- 1 reply
- 1.2k views
-
-
http://sites.google.com/site/stopgspplus/Home குழு மின்னஞ்சலில் வந்தது.
-
- 1 reply
- 1.3k views
-
-
பதவி ஆசையில் தமிழனே தமிழனுக்கு இரண்டகம் இழைத்தான்! -காசி ஆனந்தன் -நக்கீரன் பதவி ஆசையில் தமிழனே தமிழனுக்கு இரண்டகம் இழைத்தான்!'' உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் நேர்காணல் "பத்து தடவை பாடை வராது! பதுங்கிக் கிடக்கும் புலியே தமிழா! செத்து மடிதல் ஒரேமுறைதான் சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா!' -தமிழீழ விடுதலைப் போராட்டக்களத்தில், துப்பாக்கியோடு, ஒவ்வொரு போராளியும் ஏந்திச் செல்லும் காசி ஆனந்தனின் கவிதை ஆயுதம் இது. "ஈழத் தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்தத் தூண்டியது இவரது இலக்கியம்' என்று சிங்கள அரசால் வழக்குத் தொடுக்கப்பட்டு, கொடிய சிறை வாழ்வு அனுபவித்த ஒரே ஈழத் தமிழ்க் கவிஞர். பாவேந்தர் பாரதிதாசனின் தொடர்ச்சி யாக எழுதி வருபவர் என தமிழ்க்கவிதை மரபில் மேலோ…
-
- 1 reply
- 3.3k views
-
-
ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு தேவையான வகையில் இராணவ நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதென பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வன்னியிலிருந்து வெளியேற்றப்பட்டமை தொடர்பில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். சிவிலியன்களைப் போன்றே தொண்டு நிறுவன பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் கடப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிளிநொச்சியிலிருந்து வெளியேறி, வவுனியாவில் இருந்து இயங்குமாறு ஐக்கிய நாடுகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், இதனை வெளியேற்றமாக கருதக் கூடாது எனவும், ஓர் இடம் நகர்வாகவே கருதப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் பூவியி…
-
- 0 replies
- 1.1k views
-
-
'இந்தி்' யத் தேசிய காங்கிரசின் தோற்றம்: அகில இந்தியம் பேசுவதில் முதன் வரிசையில் நிற்கும் காங்கிரஸ் கட்சி தன்மானமற்ற தமிழர்களின் புகலிடமாக மாறிப்போய்யுள்ளது வருந்தத்தக்கது. வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் பெற பல்வேறு தேசிய இனங்கள் குழுக்குழுக்களாக போராடிய போது அதனை ஒருங்கிணைத்து அதன் மூலம் இந்திய தேசியத்தை எழுப்பி அரசியல் லாபம் பெற்று ஆட்சியை பிடித்தது காங்கிரஸ் கட்சி. வெள்ளையனை வெளியேற்றி விட்டோம் என்ற வெற்று முழுக்கத்தை எழுப்பிக் கொண்டு பெருமுதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் தலைமையில் கட்சியைக் கட்டியெழுப்பி வெள்ளையரிடமிருந்த நிர்வாகத்தை கொள்ளையரிடம் கையளித்து 'சாதனை' படைத்ததும் இதே காங்கிரசு கட்சி தான். வடநாட்டு பனியாக்கள் மற்றும் பெருமுதலாளிகளின் …
-
- 3 replies
- 1.6k views
-
-
வன்னிக்களமுனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நேற்றும் பல இடங்களில் உக்கிர சமர்கள் இடம்பெற்றுள்ளன. விடுதலைப் புலிகளின் பகுதிகளைக் கைப்பற்றும் நோக்குடன் இராணுவத்தினர் தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். வன்னேரிக்குளம் பகுதி நோக்கி நேற்றுக்காலை பெருமெடுப்பில் இராணுவம் முன்னேற முயன்றவேளையில் அங்கு இரு தரப்புகளுக்கும் இடையே போர் மூண்டது. ஏறக்குறைய நான்கு மணித்தியாலயங்கள் நடந்த இந்தச் சண்டையில் குறைந்தது 22 படையினர் கொல்லப்பட்டனர். நாற்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். இராணுவத்தை சற்றுத்தூரம் முன்னேறவிட்டு, பிறகு எமது படையணிகள் தீவிர முறியடிப்புப் பாய்ச்சலை மேற்கொண்டன. அப்போது உயிரிழந்த தமது சகா…
-
- 0 replies
- 2.1k views
-
-
இன்று இலங்கையில் அரசாங்கம் வன்னி நிலத்தை மீட்டு இலங்கையை முற்று முழுதாக தன் வசப்படுத்தும் நோக்கில் தனது படை நடவடிக்கை ஆரம்பித்து பல இடங்களை கைப்பற்றி வரும் இத்தருணத்தில் வன்னி மீதான பாரிய கண்மூடித்தனமான தாக்குதல் ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளது. அந்தப் பாரிய போரில் பல பொதுமக்கள் கொல்லப்பட போகின்றார்கள் என்பது இங்கு நன்றாகவே புரியக்கூடிய உண்மை. அத்தருணத்தில் சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலர் இறக்கும் வாய்ப்பக்களே அதிகம். இந்த பாரிய தாக்குதலில் பொதுமக்கள் இறக்கும் போது வெளிநாடுகளில் இருந்து இலங்கை அரசுக்கு பாரிய அழுத்தங்கள் ஏற்படும் என்பதை கருத்தில்க் கொண்டு உடனடியாக அந்த அழுத்தத்தை மறைப்பதற்காக இலங்கை அரசாங்கம் பல திட்டங்களை தீட்டியதாகவும் அதற்கு தலைமை தா…
-
- 1 reply
- 2.3k views
-
-
விடுதலைப் புலிகளை தோற்கடிக்கும் இறுதிக்கட்ட யுத்தம் இலகுவானதாக இருக்காவிட்டாலும் இது நினைக்கும் அளவில் அச்சமடையக் கூடிய ஒன்றாக இருக்காது என ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான அனுரபிரியதர்ஸன யாப்பா தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வன்னியில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படையினர் மீது விடுதலைப்புலிகள் விஷ வாயுத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ள நிலையில், அரசாங்கம் இதனை மனித நேயத்திற்கான யுத்தம் எனக் குறிப்பிட்ட போதிலும் யுத்தத்தின் இறுதி கட்டத்தில் இரண்டு தரப்புக்கும் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தும், இரத்தம் சிந்தும் மிகவும் கொடூரமாக மா…
-
- 0 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 12 பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இராணுவமும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மட்டக்களப்பு - கல்லடி, உப்போடை, நொச்சிமுனை மற்றும் நாவற்குடா ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட சோதனையின் போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ராசிக் குழு உறுப்பினர் இந்த தேடுதலின் போது, படையினருக்கு உதவியாக செயற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். ஆண்கள் சகலரையும் நாவற்குடா பேச்சியம்மன் ஆலயத்திற்கு அழைத்துச் சென்ற படையினர் விசாரணையின் பின்னர் 12 பேரை கைதுசெய்துள்ளனர். வீடு வீடாகச் சென்று இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. படையினரின் இந்தச் சோதனை காரணமாக கல்முனை - மட்டக்களப்பு வீதியின் போக்குவரத்துக்கள் மூன…
-
- 0 replies
- 1.1k views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் மக்கள் இடம்பெயர்ந்துள்ள அவல நிலைமைகள் தொடர்பாக ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து தூதுவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 543 views
-
-
விசுவமடு மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல்: அப்பாவி பெண் படுகொலை [வெள்ளிக்கிழமை, 19 செப்ரெம்பர் 2008, 06:16 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விசுவமடு மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் அப்பாவி பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பெண்கள் இருவர் காயமடைந்துள்ளனர். விசுவமடு மக்கள் குடியிருப்புக்கள் மீது நேற்று வியாழக்கிழம பிற்பகல் 4:00 மணியளவில் சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதலை நடத்தின. இதில் அழகு கிருஸ்ணவேணி (வயது 47) என்பவர் கொல்லப்பட்டார். கொல்லப்பட்டவர், கிளிநொச்சி உதயநகர் மேற்கிலிருந்து இடம்பெயர்ந்தவர் ஆவார். அன்னலட்…
-
- 0 replies
- 579 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் கடந்த சில நாட்களாக 45 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு காவல் நிலையங்களிலும் இரகசிய தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 572 views
-
-
இந்திய மத்திய அரசசைக் கண்டித்து தொடரூந்து மறியல் போராட்டம் - கி.வீரமணி சிறிலங்கா அரசுக்கு இராணுவ உதவிகளை வழங்கும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து திராவிடர் கழகம் எதிர்வரும் 23ஆம் திகதி தொடரூந்து மறியல் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளது. இதுதொடர்பான தீர்மானம் நேற்று முன்தினம் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இக்கூட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். இக் கூட்டத்தின் போது, அண்ணாவின் நூற்றாண்டு விழா அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்படுவது, சிங்கள அரசுக்கு இராணுவ தளபாடங்களை வழங்குதல் மற்றும் இராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பது போன்ற மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்தும், ஒரிசா சம்பவத்தை கண்டித்தும், வரும் 23ஆம் திகதி தொடருந்த…
-
- 0 replies
- 881 views
-
-
புலிகளுக்கு எதிரான கூட்டில் ஆசிய வல்லாதிக்க சக்திகள் ஆசியப் பிராந்தியத்தில் மிக முக்கிய சிக்கல்களுள் ஒன்றாகியிருக்கும் இலங்கை இனப்பிரச்சினை, அதன் விளைவான பெரும் உள்நாட்டுப் போர் ஆகியவை தொடர்பில் ஆசிய வல்லாதிக்க சக்திகளின் ஈடுபாட்டைத் தொட்டுக்காட்டி ஆய்வுக் கட்டுரை ஒன்று நேற்றுக் கொழும்பு ஆங்கிலத் தினசரி ஒன்றில் வெளியாகியிருக்கின்றது. அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சில அம்சங்கள் சுவாரசியமானவை; கூர்ந்து சிந்திக்கத்தக்க கருத்து நிலைப்பாட்டைக் கொண்டவை. இந்த ஆசியப் பிராந்திய விடயங்களில் தலைமைத்துவத்துக்கு பிராந்திய வல்லாதிக்கச் "சண்டித்தனத்துக்கு' போட்டியிடுகின்ற பிரதான சக்திகள் இந்தியாவும் சீனாவும் என்பது வெளிப்படையாக யாவருக்கும் தெரிந்த உண்மை. அதேபோல, இந்திய உபகண்டப்…
-
- 0 replies
- 955 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறீலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் சீ.எப். விஷவாயு கிரனைட் குண்டுத் தாக்குதலில் இருந்து தப்பிக்கொள்வதற்காக பாதுகாப்பு முன்னரங்கில் உள்ள படையினருக்கு முகமூடிகள் வழங்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறுகையில்... விடுதலைப் புலிகள் இராசன ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை. பணயக்கைதிகளை மீட்கும் நடவடிக்கைகளின்போது இராணுவத்தினர் பயன்படுத்தும் சீ.எப். விஷவாயுவைக் கக்கும் கிரனைட் குண்ட…
-
- 0 replies
- 1.4k views
-
-
கொழும்பிலுள்ள இந்திய உதவிக்தூதுவரின் கருத்து Terrorism should be defeated minimizing damage to civilians, says new Deputy High Commissioner of India (, September 17, 2008, 3.00 AM) There is no answer to terrorism except defeating it but in a way the damage to the civilians will be minimized, said the new Indian Deputy High Commissioner Sri Wikram Misri at a meeting with the media Monday (15) evening held in the Indian High Commission. The function was held to welcome the new Deputy High Commissioner. The Deputy High Commissioner stated that India sees Tamil people and LTTE as two phenomena. Although the military action taken by the government to defeat te…
-
- 16 replies
- 4.8k views
-
-
புலிகளின் வானோடிகள் குறித்து ஆராய்ந்து வரும் சிறிலங்கா புலனாய்வுத்துறை [வியாழக்கிழமை, 18 செப்ரெம்பர் 2008, 07:37 பி.ப ஈழம்] [க.நித்தியா] தமிழீழ விடுதலைப் புலிகளின் வானோடிகளின் திறன் குறித்து அவற்றை கலைத்துச்சென்று தாக்குதல் நடத்த விரைந்த சிறிலங்கா வான் படையினரின் மூலம் தெரிந்து கொண்டுள்ள அரச புலனாய்வு வட்டாரங்கள், இவ்வளவுக்கு புலிகள் எவ்வாறு வானூர்தி ஓட்ட பயிற்சி பெற்றார்கள் என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாக படைத்தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. இது தொடர்பில் அறிய வருவதாவது: வவுனியா படைத்தளம் மீது தாக்குதல் நடத்த வந்த புலிகளின் வானூர்திகளை கலைத்து சென்று தாக்குதவதற்கு கொழும்பிலிருந்து சென்ற சிறிலங்கா வான் படையின் எஃப்-7 வானூர்திகள் அந்த கும…
-
- 2 replies
- 2k views
-
-
வன்னிப்பெரு நிலபரப்பில் இடம்பெயர்ந்து மனிதப் பேரவலத்திற்குள் சிக்கியுள்ள இரண்டு லட்சம் மக்களை காப்பாற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் அனைத்துலக மட்டத்தில் உரத்து குரல் கொடுக்க வேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 716 views
-
-
வலைப்பாட்டில் கடற்புலிகளுக்கும் கடற்படைக்கும் இடையில் பெரும்சமர் நடந்ததாக தீபம் செய்தயில் கூறுகின்றார்கள். வேறு ஒரு இடத்தில் காணவில்லை. யாராவது ஏதாவது அறிந்தீர்களா?
-
- 6 replies
- 3.9k views
-
-
கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் 2005ஆம் ஆண்டு பிற்பகுதியிலிருந்து காணாமல் போனவர்களாகத் தெரிவிக்கப்பட்டவர்களில் 261 பேருக்கு என்ன நடந்தது என்பது பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லையென மக்கள் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இவர்களில் 42 பேர் மாத்திரமே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டிருப்பதா
-
- 0 replies
- 1k views
-