Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வருமானத்துக்கு வழி இல்லாத தமிழர்கள் மேல்மாகாணத்தில் எப்படிக் குடியேற முடியும்? கேட்கிறார் - கோத்தபாய: வடக்கு, கிழக்கிலிருந்து வந்து மக்கள் மேல்மாகாணத்தில் குடியேறும் செயற்பாடு விடுதலைப் புலிகளின் திட்டமிட்டலுடன் இடம்பெறுகிறதா என்று பார்க்கவேண்டியிருக்கிறது. வருமானத்துக்கு எந்த வழிகளும் இல்லாத இவர்கள் பெருந்தொகைப் பணத்தைக் கொடுத்து இங்கு வந்து குடியேறுகின்றனர். இவர்களுக்கு எங்கிருந்து இந்தப் பணம் வருகிறது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கேள்வியெழுப்பியுள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலின் போதே அவர் இக் கேள்வியை எழுப்பியுள்ளார்.; அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கொழும்புக்குள் குண்டு நிரப்பிய வாகனம் நுழைவதைத் தடுப்பது…

  2. காவற்துறையினருக்கு எதிராக சித்திரவதை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை நீதிமன்றில் சுமத்தியிருந்த நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அன்ரன் சுகத் நிஸாந்த பெர்ணான்டோ என்ற இந்த நபர் நீர்கொழும்பு காவல் நிலையத்தைச் சேர்ந்த சில காவற்துறையினருக்கு எதிராக சித்திரவதைக் குற்றச்சாட்டை மேல் நீதிமன்றிலும் , ஊழல் குற்றச்சாட்டை உயர்நீதிமன்றிலும் தொடுத்திருந்தார். சனிக்கிழமை அவர் தனது 11 வயது மகனுடன் வானில் சென்று கொண்டிருக்கும் போது நீர்கொழும்பு தலபொத்த சந்தியில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட நிசாந்த பெர்ணான்டோ தனக்குப் பலமுறை கடுமையான கொலை அச்சுறுத்தல் வந்தாகக் காவற்துறையினருக்கு முறையிட்டிருந்த போதும் அது பயனளிக்கவில்லை என அவருடைய மனைவி பத்மி …

  3. எண்ணிக்கையற்ற விளையாட்டுக்களில் ஈடுபட்டு வரும் இலங்கை இராணுவத் தளபதி இலங்கை இராணுவப்படைத் தளபதி சரத் பொன்சேகா யுத்தம் தொடர்பான தகவல்களை வெளியிடும் போது முன்னுக்குப் பின் முரண்பட்ட தகவல்களை வெளியிட்டு வருவதாக சண்டே லீடர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 162,000 துருப்பினர் அங்கம் வகிக்கும் இலங்கை இராணுவப் படையினர் இவ்வாறான தகவல்களின் மூலம் பிழையாக வழிநடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் கொல்லப்பட்ட எண்ணிக்கை, எஞ்சியிருக்கும் போராளிகளின் தொகை என்பன தொடர்பில் ஓர் எண்ணிக்கை விளையாட்டு நடத்தப்பட்டு வருவதாக அந்தப் பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாள் தோறும் ஊடகங்களுக்கு வழங்கும் செவ்விகளில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள…

  4. சிறிலங்கா படையினரின் பலமுனை முன்நகர்கவுகள் முறியடிப்பு [ஞாயிற்றுக்கிழமை, 21 செப்ரெம்பர் 2008, 05:56 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னிக்களத்தில் சிறிலங்கா படையினர் பலமுனைகளில் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு வருகின்றன. வன்னியின் பலமுனைகளில் முன்நகர்வுத் தாக்குதல்களை நடத்தும் முனைப்பில் இருக்கும் சிறிலங்கா படையினர் மீது முறியடிப்புத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. Puthinam

    • 0 replies
    • 1.7k views
  5. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஒர் விரிசலை ஏற்படுத்தும் முயற்சியில் தமிழர் தேசியக் கூட்டமைப்பு கட்சி இறங்கியுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி மற்றும் ஜே.வி.பி ஆகியன குற்றம் சுமத்தியுள்ளன. கச்சதீவு விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை சீர்குலைக்க வழிகோலும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மையில் தமிழகத்தில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரமைப்பு நிகழ்வுகளில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக மாவை சேனாதிராஜா மற்றும் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்துள்ளனர் என ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளா நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார். …

  6. திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலைய பூசகர் இன்று மாலை 6 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். மேலதிக விபரங்கள் விரைவில். http://www.tamilskynews.com/

  7. "சிறிலங்கா நாள்" நிகழ்வில் கனடா தமிழர்கள் கவனயீர்ப்பு நிகழ்வு சரிந்து செல்லும் சிறிலங்காவின் அந்நியச் செலாவாணியை ஈட்டிக்கொடுக்கும் துறைகளான உல்லாசப் பயணத்துறைஇ தேயிலை ஏற்றுமதி போன்றவற்றை தூக்கி நிறுத்தும் விதமாக கனடாவில் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா அரசின் முயற்சியொன்று தமிழ் மகளிர் அமைப்பும் கனடியத் தமிழ் இளையோர் அமைப்பும் இணைந்து நடத்திய கவனயீர்ப்பு நிகழ்வினால் பெரும் சவால்களை எதிர்கொண்டது. உக்கிரமடைந்து வரும் போரினால் பெரும் சரிவைச் சந்தித்துள்ள சிறிலங்காவின் உல்லாசப்பயணத்துறை மற்றும் ஏற்றுமதித்துறைகளை வெளிநாடுகளில் ஊக்குவிக்கும் முகமாகஇ கனடாஇ ரொறன்ரோவில் உள்ள "ஹாபர் ஃபுரொன்ட் சென்டரில்" (ர்யசடிழரச குசழவெ ஊநவெசந) இல் "சிறிலங்கா நாள்" என்னும் நிகழ்வு இந்த வார இறுத…

  8. இலங்கையில் நீச்சலடிக்க இந்தியாவுக்கு இடமளிக்க முடியாது – சோமவன்ச இந்தியாவிற்குத் தேவையான வகையில் ஆடுவதற்கு இடமளிக்க முடியாது. இலங்கையர்கள் நேராக நின்று நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நேராக நிற்க வேண்டுமானால் நேராக நிற்கும் தலைவர்கள் அவசியம். நேராக நிற்கும் கட்சி ஒன்று அவசியம். நேராக நிற்கும் நாடாக இதனை நிறுத்தினால் இந்த வலயத்தில் எமது நாடு தனிமைப்படாது. இந்தியாவே தனிமைப்படும் எனவும் அவர் தெரிவித்தார். http://www.tamilskynews.com/

  9. மாற்றமடையத் தொடங்கியுள்ள வன்னிக் கள நிலைவரம் விதுரன் வன்னிப் போர் முனையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளது. இதுவரை காலமும் தற்காப்புச் சமரில் மட்டுமே ஈடுபட்டு வந்த விடுதலைப் புலிகள் தற்போது முறியடிப்புச் சமரைத் தொடங்கியுள்ள அதேநேரம் தாக்குதல் சமரையும் ஆரம்பித்துள்ளது போல் தெரிகிறது. கிளிநொச்சியில் நாச்சிக்குடா மற்றும் அக்கராயன் பகுதியில் முறியடிப்புச் சமரை நடத்திய அவர்கள் வவுனியாவில் கூட்டுப் படைத் தலைமையகம் மீது தாக்குதல் சமரைத் தொடுத்தனர். மன்னார் - பூநகரி வீதியைக் கைப்பற்றி கிளிநொச்சியையும் விரைவில் கைப்பற்றிவிட முடியுமென்ற படையினரின் நினைப்பில் அடிவிழத் தொடங்கியுள்ளது. வன்னிக்குள் மேலும் முன்னேறுவதா, கைப்பற்றிய பகுதிகளைத் தக்க வைப்பதா அல்லது ம…

  10. கிளிநொச்சி நகரிலிருந்து ஒரு சில நூற் மீற்றர்களுக்கு அப்பால் கிடுகளால் அமைக்கப்பட்டதும், வன்னியிலேயே மிகப் பெரியதுமான சமயலறை அமைந்திருக்கிறது.புலிகளால் நடத்தப்படும் இந்தச் சமயலறையில் புலிகளுக்கு மட்டுமல்லாமல், அண்மையில் அரசாங்கத்தால் வெளி நாட்டு அரச பிரதிநிதிகளோ அல்லது தனி நபர்களோ வன்னிக்குச் செல்வது தடை செய்யப்படும்வரை அவர்களுக்கும் கூட இங்கிருந்துதான் உணவு வழங்கப்பட்டு வந்தது.நீட்டுக் கைய்யுடைய சேட்டு அணிந்த பணியாட்கள் கடமை புரியும் இந்தச் சமயலறையில் தயாரிக்கப்படும் உண்வு கொழுமிலுள்ள ஐந்து நட்சத்திர விடுதிகளின் உணவின் விலைக்கு ஒத்தது. இந்த வாரம் கிளிநொச்சியின் நகரப்பகுதிக்குள் செல்கள் வந்து விழத் தொடங்கியதால் புலிகள் இந்தச் சமயலறையை கழற்றி அதன் தளபாடங்களையும், உணவ…

  11. இலங்கை இராணுவப்படைத் தளபதி சரத் பொன்சேகா யுத்தம் தொடர்பான தகவல்களை வெளியிடும் போது முன்னுக்குப் பின் முரண்பட்ட தகவல்களை வெளியிட்டு வருவதாக சண்டே லீடர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 162,000 துருப்பினர் அங்கம் வகிக்கும் இலங்கை இராணுவப் படையினர் இவ்வாறான தகவல்களின் மூலம் பிழையாக வழிநடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் கொல்லப்பட்ட எண்ணிக்கை, எஞ்சியிருக்கும் போராளிகளின் தொகை என்பன தொடர்பில் ஓர் எண்ணிக்கை விளையாட்டு நடத்தப்பட்டு வருவதாக அந்தப் பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாள் தோறும் ஊடகங்களுக்கு வழங்கும் செவ்விகளில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் 20ம்…

  12. இந்த மாதம் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் அக்கராயன் தொடக்கம் நாச்சிக் குடா வரையிலுமான 25 கி.மீ முன்னரங்கில் நடைபெற்ற கடுமையான மோதல்கள் படையினரின் முன்னகர்வுகளின் உத்திகளில் பின்னடைவை ஏற்படுத்தியதுடன், படையினரின் நகர்வுகள் மந்த நிலைக்கும் சென்றிருந்தன. இந்த படை நடவடிக்கையில் படையினர் கடும் இழப்புக்களை சந்தித்த நிலையில், வன்னி பகுதி மீது அரசாங்கம் தொடர்ச்சியான வான் தாக்குதல்களை நடத்திவந்தது. இந்த நிலையில் வவுனியா படைத்தலைமையகத்தில் அமைந்திருந்த வான்கண்காணிப்பு நிலை மீது வான்புலிகள், கரும்புலிகள், பீரங்கி படையணிகள் இணைந்து மேற்கொண்ட தாக்குதல் அரசாங்கத்தை ஆட்டங்காண வைத்ததுடன், அரசாங்கத்தினன் வான்பாதுகாப்பு உத்திகள் மற்றும் கட்டளை மையங்களின் பாதுகாப்பு தொடர்பாக …

  13. படையினருக்கு அதிக சேதங்களை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கின்றன. கடந்த முதலாம், இரண்டாம் திகதிகளில் 57ஆவது மற்றும் 58 ஆவது டிவிசன்களால் வன்னேரி, நாச்சிக்குடா, அக்கராயன் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட முன்னகர்வுகள் முறியடிக்கப்பட்டதில் படையினர் பலத்த இழப்புக்களைச் சந்திக்க நேரிட்டது. 30 படையினரின் சடலங்களையும் ஆயுதங்களையும் புலிகள் கைப்பற்றிய சம்பவம் அவர்களுக்குப் பெரும் உளவியல் உற்சாகமாக அமைந்திருக்கும். இந்தத் தாக்குதல்களில் 56 படையினர் கொல்லப்பட்டு 120 பேருக்கும் அதிகமானோர் காயமுற்றதாக படைத்தரப்புடன் நெருங்கிய தரப்புகள் தகவல் வெளியிட்டிருந்தன. ஆனால் புலிகள் தரப்பு இன்னும் கூடுதலான படையினர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்திருந்தது. இதற்குப் பின்னர் படையினர் இந்தக் களமுனைகளி…

  14. இலங்கையைச் சேர்ந்த இலங்கை தமிழர் உள்ளிட்டோர் பயணித்த சரக்கு கப்பல் ஒன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர். குறித்த சரக்குக் கப்பலில் சீனர்களும், இலங்கையரும் பணியாற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது. கப்பலுடன் கடத்திச் செல்லப்பட்ட இலங்கையர் பற்றிய தகவல் முழுமையாக இதுவரையில் வெளியிடப்படவில்லை. கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையில் சுமார் 55 கப்பல்கள் சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கடல் எல்லைப் பிரிவு தெரிவித்துள்ளது. நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மற்றும் சரக்குக் கப்பல்களை சோமாலிய கடற்கொள்ளையர்கள் தொடர்ச்சியாக கடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது http://www.tamilskynews.com/index.php?opti...-09-21-04-31-03

  15. நீதிமன்ற உத்தரவை மீறி மேற்கொள்ளப்படும் வடக்கு தமிழர் பதிவு நடவடிக்கைகள்: உயர் நீதிமன்றம் மற்றும் காவற்துறை மா அதிபரின் உத்தரவுகளை மீறி வடக்குத் தமிழர் தொடர்பான பதிவு நடவடிக்கைகள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பதிவு தொடர்பான ஆவணங்களை காவற்துறை நிலையங்களுக்குச் சென்று ஒப்படைக்கத் தேவையில்லை என உயர் நீதிமன்றமும், காவற்துறை மா அதிபரும் அறிவித்துள்ள நிலையில் காவற்துறையினர் காவற்துறை நிலையங்களில் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு பொதுமக்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தெரியவருகிறது. கொழும்பில் ஐந்து ஆண்டுகளுக்கு குறைவான காலம் வசித்து வரும் வடக்குப் பகுதியைச் சேர்ந்த தமிழர்களை பதிவு செய்யும் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய திட்டம் இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பம…

  16. ஐ.நா.பொதுச்சபை கூட்டத்தின் பின்னர் எஸ்.பி.யின் சிவில் உரிமை பற்றி ஜனாதிபதி தீர்மானம்? ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் எஸ்.பி. திஸாநாயக்கவிற்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி தீர்மானிப்பார் என பிரபல ஆங்கில வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திஸாநாயக்கவின் சிவில் உரிமைகளை மீள வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அண்மையில் கண்டி மல்வத்து பீட மாநாயக்கத் தேரர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். எஸ்.பி.க்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி தீவிரமாக ஆலோசித்து வருவதாக ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் ஏ.எச்.எம். அஸ்வர் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தை அவதூறு…

  17. கடத்தல்களுடன் பாதுகாப்புப் பிரிவினருக்கு நேரடித் தொடர்பு – மனோ கணேசன் இலங்கையில் அண்மைக்காலமாக அதிகரித்துச் செல்லும் கடத்தல்களுடன் பாதுகாப்புப் பிரிவினருக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக மேலக மக்கள் முன்னணியின் தலைவரும், சிவில் கண்காணிப்புக்குழுவின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பல்வேறு கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்களுடன் சம்பந்தப்பட்ட முன்னாள் பாதுகாப்பு உயர் அதிகாரி நிசாந்த கஜநாயக்கவிற்கு எதிராக அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2007ம் ஆண்டு குறித்த நபர் கைது செய்யப்பட்ட போதிலும் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது பிணையில் விடுதலை செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஈராக் மற்றும் டார்பூர் போன்…

  18. ரொட்டியின் இரண்டு பக்கத்தை சட்டியில் இட்டு சுடுவதற்கு மாறாக தமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க ரொட்டியை சட்டியின் இரண்டு பக்கத்திலும் இட்டுச் சுடுவதில் திறமையானவர் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் லக்ஸ்மன் செனவிரத்ன தெரிவித்துள்ளார். சிங்கள வரா இதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சிக்குள் ரணில் விக்கிரமசிங்க தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என போராட்டம் நடத்தும் அணியின் தலைவராக லக்ஸ்மன் செனவிரத்ன செயற்பட்டு வருகிறார். இந்தியாவின் சோனியா காந்தியைப் போல இருக்குமாறு தாம் உள்ளிட்டோh,; ரணில் விக்கிரமசிங்கவிடம் கோருவதாகவும் தூசுபடிந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியை சுத்தமாக்கவே தமது அணியினர் முயற்சிப்பதாகவும் லக்ஸ…

  19. இந்த வருடத்தின் இறுதிப்பகுதிக்குள் சிறிலங்கா அரச படைகள் கிளிநொச்சியை கைப்பற்றினால் அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

  20. விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணிகளிற்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையே கிளிநொச்சியின் தென்மேற்குப் பகுதிகளான வன்னேரி அக்கராயன் மற்றும் முறிகண்டிப் பகுதிகளில் கடுமையான சமர் வெடித்துள்ளது. அதிகாலை 5.50 மணிக்குத் இரு தரப்பினருக்குமிடையே கடுமையான மோதல்கள் வெடித்துள்ளன. சமர் தொடங்கியது முதல் கடுமையான துப்பாக்கிச் சூட்டு மற்றும் ஆட்டிலறி எறிகணைகளின் வெடிப்புச் சத்தங்கள் தொடர்ச்சியாகக் கேட்டுவருவதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Heavy fighting breaks out in southwest frontiers of Ki'linochchi district [TamilNet, Sunday, 21 September 2008, 01:06 GMT] Heavy fighting has broke out between the Sri Lanka Army (SLA) and the fighting formations of the Liberat…

  21. பாகிஸ்தானில் நேற்று இரவு நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் சிறிலங்கா தூதரகமும் கடுமையாக சேதமடைந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  22. கனடா வானம்பாடிகளின் 27 மணி நேர தொடர்ச்சியான இசை நிகழ்ச்சி இடம் கனடா கந்தசுவாமி கோவில் நேரம் செப்ரம்பர் 20 ம் திகதி மாலை 5 மணி முதல் இன்று மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகியது பெருமளவான மக்கள் வருகை தந்த வண்ணமுள்ளனர் நீங்களும் உங்கள் பங்களிப்பை நல்குங்கள் http://tamilthesiyam.blogspot.com/2008/09/27.html

  23. தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு தொகுதி ஆயுதங்களை தருவித்துள்ளனர் என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  24. வன்னிவிளாங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் 15 படையினர் கொல்லப்பட்டனர். 18 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து வாசிக்க

  25. கஞ்சிகுடிச்சாறில் புலிகளின் பொறிவெடியில் சிக்கி படைத்தரப்பைச் சேர்ந்தவர் பலி; மூவர் படுகாயம் [சனிக்கிழமை, 20 செப்ரெம்பர் 2008, 09:08 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மூவர் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பாக அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்ததாவது: விடுதலைப் புலிகளை தேடி அழிக்கும் நோக்குடன் கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் பாரிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தனர். நேற்று காலை முதல் பிற்பகல் வரை நூற்றுக்கணக்கான எறிகணை த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.