ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
சிறிலங்க ராணுவத்திற்கு பயிற்சி அளிக்க இந்திய ராணுவ வீரர்களை மறைமுகமாக அனுப்பியிருப்பது இந்திய அரசின் தமிழன விரோத போக்காகும் என்று தெரிவித்துள்ள தொல். திருமாவளவன், அவர்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்! இந்த அரசின் இப்படிப்பட்ட மறைமுக நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று திருமாவளவன் கூறியுள்ளார். சிறிலங்காவின் வவுனியாவில் உள்ள படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் விமானம் மற்றும் தரை வழித் தாக்குதல்களை நடத்தி இரண்டு ராடார்களை அழித்தனர். இதில், ராடார்களை இயக்கிய இந்திய வீரர்கள் இருவர் காயமடைந்துள்ளனர். இதனைக் குறிப்பிட்டு இன்று அறிக்கை வெளியிட்டுள்ள திருமாவளவன், சிங்கள படையினருக்கு எதிராக விடுதலைப…
-
- 2 replies
- 1.7k views
-
-
இலங்கை அரசாங்கம் தமிழீழக் கோரிக்கையை ஏற்று, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் பாராளுமன்றத்தில் கூறினார். தமிழர்களைக் கொல்வதற்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் யுத்தத்துக்கு இந்தியா ஆயுத உதவிகள் மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், இந்தியாவின் உதவியைப் பெற்றுக்கொண்டு இலங்கை அரசாங்கம் தமிழர்களைக் கொன்றொழித்துவருவதாகத் தெரிவித்தார். இதற்காக ‘சொவ்ட் லோன்’ திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு இந்தியா நிதியுதவி வழங்குகிறது என்றார் அவர். மன்னார் பகுதியில் இந்தியாவுக்குச் சொந்தமான நிறுவனம் எண்ணெய் அகழ்வை மேற்கொள்வதற்கு வழங்கப்பட்ட அனுமதி தொடர்பாக இன்று புதன்கிழமை இடம்பெற்ற…
-
- 2 replies
- 1.3k views
-
-
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒரு மாணவர் உயிரிழந்துடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள டி.எம்.வி.பியினரின் அலுவலகத்திற்கு முன்னால் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 18வயதான முருகப்பன் கேதீஸ் என்ற மாணவரே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்தவர் 19வயதான அல்லிராஜ் காமராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. கேதீஸ் என்பவர் சாதாரண தரப்பரீட்சையை எழுதிவிட்டு, கட்டிடத் தொழிலாளியாக வேலைசெய்து வந்துள்ளார். கமராஜ் என்ற இளைஞர் பரீட்சை ஒன்றுக்காக தயாராகி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆலையடிவேம்பு முருகன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டு விட்டு திரும்பி…
-
- 0 replies
- 672 views
-
-
மொழியும் இன்றய தமிழர் பண்பாடுகளும் - சாண்டில்யன் அன்றய காலத்தினில் அதாவது மனித வாழ்க்கை ஆரம்பமாகிய காலத்தினில் ஒரு தலைவன் உருவாகி ஒரு சமுதாயத்தை உருவாக்கி அதற்கு தானே அரசனென்று பிரகடனப்படுத்தி இனங்கள் உருவாக்கப் பட்டிருக்கின்றன. நாளடைவில் மொழிகள் மேம்படுத்தப்பட்டு தம் மொழிதான் சிறந்ததென்று இனத்தலைவர்கள் தம்பட்டம் அடித்தார்கள், அடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதற்காக போராடியும் இருக்கின்றார்கள். மொழியென்பது ஒருவருக்கொருவர் உரையாடுவதற்கு தொடர்பு கொள்ளும் தொட்டு அறியக்கூடிய சின்னங்கள். ஆதி காலத்தினில் ஒரு சில இனங்கள் உரையாடுவதற்கு படங்களை வரைந்தார்கள். மனிதர்கள் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகள் அவசியம். அத்தோடு முன்னேற்றத்திற்கு விஞ்ஞானம் அவசியம். இதன் அடிப்படையில் ஐ…
-
- 4 replies
- 1.4k views
-
-
இலங்கையின் வடபகுதியில் அதிகரித்திருக்கும் மோதல்கள் மற்றும் அவற்றால் மனிதநேயப் பணிகளுக்கு ஏற்பட்டிருக்கும் தடைகளால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீமூன் கலை தெரிவித்துள்ளார். மோதல்கள் இடம்பெறும் வன்னிப் பகுதியிலிலிருந்து ஐக்கிய நாடுகள் நிறுவனங்கள் உட்பட அரசசார்பற்ற நிறுவனங்கள் அனைத்தையும் வெளியேறுமாறு அரசாங்கம் பணித்துள்ள நிலையிலேயே பான்கீமூன் கவலை வெளியிட்டுள்ளார். “இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்தை உரிய அதிகாரிகள் உறுதிப்படுத்தவேண்டும். மனிதநேயப் பணியாளர்கள் தமது பணிகளைச் சுதந்திரமாகப் பாதுகாப்புடன் முன்னெடுப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்” என பான்கீமூன் விடுத்துள்…
-
- 13 replies
- 1.8k views
-
-
புலிகளின் விமானம் வீழ்த்தப்பட்டது உண்மை எங்கே, எப்படி என்று எவரும் கேட்கக் கூடாது! இது அமைச்சர் கெஹலியவின் விளக்கம் வுவனியா இராணுவ முகாமைத் தாக்க வந்த புலிகளின் இரண்டு விமானங்களில் ஒன்று தாக்கியழிக்கப்பட்டமை உண்மை என்றும் அது எப்படித் தாக்கியழிக்கப்பட்டது, எங்கு வைத்துத் தாக்கியழிக்கப்பட்டது என்ற கேள்வியெல்லாம் எவரும் கேட்கக்கூடாது என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று நாடாளுமன்றில் கூறினார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உøயாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: வவுனியா இராணுவ முகாம்மீது புலிகளால் நடத்தப்பட்ட விமானத்தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. புலிகளின் இரண்டு விம…
-
- 8 replies
- 3.9k views
-
-
வவுனியாவில் உள்ள வன்னிப் பாதுகாப்புப் படைகளின் தலைமையகம் மீது நேற்று அதிகாலை மூன்று வழிகளில் விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித்தாக்குதல்களில் அந்தத் தளத்துக்குப் பெரும் சேதம் ஏற்பட்டிருகின்றது தமது விமானங்கள் மூலம் குண்டு வீசியும், ஆட்லறிகள் மூலம் ஷெல் குண்டுகளை ஏவியும், கரும்புலிப் படை அணி மூலம் ஊடுருவியும் புலிகள் இந்தத் தாக்குதல்களை நேற்று விடியும்வேளை நடத்தியிருக்கிறார்கள். வன்னியில், புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசம் ஒன்றிலிருந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு சற்றுப் பின்னாக புறப்பட்ட புலிகளின் இரண்டு மர்ம விமானங்கள் வன்னிப் படைத்தலையகத்துடன் இருந்த விமானத்தளத்தில் பொருத்தப்பட்டிருந்த ராடர் கட்டமைப்பை இலக்குவைத்து அடுத்தடுத்து நான்கு குண்டுகளை வீசின. புலிக…
-
- 0 replies
- 3.5k views
-
-
இலங்கையில் இருந்து அமைதி காக்கும் படையினர் 1990 ஆம் ஆண்டில் வெளியேறிய பின்னர், 18 வருடங்களின் பின்னர் புலிகளின் தாக்குதலில், அதுவும் விமானத் தாக்குதலில் இந்தியப் படையினர் இருவர் காயமடைந்துள்ளனர் என்று இந்தியாவின் பிரபல பத்திரிகைகளில் ஒன்றான ஹிந்துஸ்தான் ரைம்ஸ் விமர்சித்துள்ளது. வவுனியாவில் உள்ள இலங்கை விமானப்படை ராடர் தளத்தை இலக்கு வைத்து புலிகள் நேற்று நடத்திய தாக்குதலில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்திய விமானப் படைத் தொழில்நுட்பவியலாளர்களும் காயமடைந்திருக்கின்றனர். இந்திய விமானப் படையின் சார்ஜண்ட் தர நிலையைச் சேர்ந்த சிந்தாமணி ரவூத் மற்றும் ஏ.கே.தாக்கூர் ஆகியோரே இத்தாக்குதலில் காயமடைந்திருக்கின்றனர். சம்பந்தப்பட்ட இந்திரா II ரக ராடரை இந்தியாவே இலங்கைக…
-
- 0 replies
- 1.9k views
-
-
புலிகளுக்கு நிதி வழங்கும் வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களைத் திருப்பதிப்படுத்தவே புலிகள் வவுனியாவில் விமானத் தாக்குதலை நடத்தியுள்ளார்கள் என தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற, நாட்டின் பாதுகாப்பு நிலைவரங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் புலிகளுக்கு நிதி உதவி வழங்குதில் இப்போது தயக்கம் காட்டுகின்றனர். இதன் காரணமாக புலிகளின் வெளிநாட்டு வருவாய் வெகுவாகக் குறைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். புலிகள் தமது நிலப்பரப்புக்களை இழந்துவரும் நிலையிலும் நாளுக்கு நாள் படையினரால் புலிகள்…
-
- 2 replies
- 1.9k views
-
-
SLAF bombs Ki'linochchi town [TamilNet, Wednesday, 10 September 2008, 01:46 GMT] Sri Lanka Air Force (SLAF) Kfir bombers attacked Ki'linochchi town Wednesday around 7:00 a.m., destroying 3 houses close to the Pachchilaippa'l'li Divisional Secretariat, which is located in the heart of the town. Casualty details are not known. The SLAF bombardment on Ki'linohchci comes after Gotabhaya Rajapaksa, the Sri Lankan Defence Secretary and the brother of SL President, publicly threatening the foreign NGOs to leave LTTE controlled region of Vanni, which is overcrowded with displaced people, and after the devastating LTTE attack on Sri Lankan forces Vanni HQ. Meanwhile, the…
-
- 0 replies
- 1.3k views
-
-
வவுனியா படைத்தளத்தில் இந்திய அதிகாரிகள் பணியாற்றியதனை ஒப்புக்கொண்டது இந்திய தூதரகம் [புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2008, 06:24 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] வவுனியா சிறிலங்கா படைத் தலைமையகம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு படை நடவடிக்கையின் போது இந்திய அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளனர் என்று கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் இந்திய தூதரகத்தின் ஊடகத்துறை பேச்சாளர் தின்கர் அஸ்த்தான தெரிவித்துள்ளதாவது: வவுனியா படைத் தலைமையகம் மீது நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலின் போது இந்திய அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளனர். வவுனியாவில் உள்ள சிறிலங்கா படையினரின் தளத்தில் பொருத்தப்பட்டிருந்த ராடரின் …
-
- 6 replies
- 2.1k views
-
-
வன்னியில் மக்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ள நிலையில், நேபாளத்திற்கு 25 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவித் தொகையை சிறீலங்கா அரசாங்கம் வழங்கியுள்ளது. நோபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருகில் பாதிக்கப்பட்ட மக்ளுக்கான உதவித் தொகைக்குரிய காசோலையை காத்மண்டுவிலுள்ள சிறீலங்கா தூதுவர் ரணவீர, அந்த நாட்டின் தலைமை அமைச்சர் புஸ்பா கமல் தாலிடம் கையளித்துள்ளார். பருவப்பெயர்ச்சி காலநிலையால் 60 ஆயிரம் மக்கள் இடப்பெயர்வு அவலத்தை எதிர்நோக்கியிருப்பதாகவும், அவர்களுக்கே இந்த உதவி வழங்கப்பட்டிருப்பதாகவும் சிறீலங்கா அரசு கூறுகின்றது. வன்னியில் இடம்பெயர்ந்துள்ள இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களுக்குரிய உதவிகளைத் தடை செய்துள்ள சிறீலங்கா அரசாங்கம், அங்குள்ள மனிதநேய …
-
- 0 replies
- 908 views
-
-
வவுனியா விமானப்படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் ஆட்டிலறி தாக்குதல்களைமேற்கொண்டுள்ளன
-
- 19 replies
- 5.5k views
-
-
ஜெனீவா போரியல் விதிகளின் கீழ் பொதுமக்களுக்கும் அவர்களின் வாழிடங்களுக்கும் பாதிப்பை உண்டு பண்ணாத வகையில்.. அல்லது அதைத் தவிர்க்கும் வகையில் இராணுவம் நடந்து கொள்ள வேண்டும் என்பது நியமம். ஆனால் தனது இராணுவத் தேவைகளுக்காக மக்கள் சொந்த இடங்களில் இருந்தே விரட்டி வரும் சிறீலங்கா அரச பயங்கரவாதப்படைகளின் கோரிக்கையை ஏற்று ஐநா சபை உட்பட சர்வதேச தொண்டு அமைப்புக்கள் வன்னியை விட்டு வெளியேற உள்ள இந்த நேரத்தில்.. ஓர் ஆறுதல் தரும் விடயமாக.. சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் எக்கட்டத்திலும் தான் வன்னியை விட்டு வெளியேறப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறது. இதனால் சிறீலங்கா அரசுடன் முரண்படும் நிலைக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சென்றுள்ளது. இருப்பினும் வன்னி மக்கள் மீதான அதன் மனிதாபிம…
-
- 6 replies
- 2.3k views
-
-
இந்திய அரசாங்கத்தின் இரட்டை வேடத்தினை தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதல் அம்பலப்படுத்தியுள்ளது என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: வவுனியாவில் உள்ள சிங்கள இராணுவத் தலைமையகத்தின் மீது வான் புலிகளும் கரும்புலிகளும் நடத்திய தாக்குதல்களின் விளைவாக இந்தியா வழங்கியிருந்த ராடர் கருவி முற்றிலுமாக அழிக்கப்பட்டதுடன் அதனை இயக்கிய இந்திய இராணுவ அதிகாரிகள் இருவர் காயமடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி இந்திய அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திவிட்டது. சிங்கள அரசுக்கு ஆயுத உதவி மட்டுமல்ல ஆள் உதவியையும்…
-
- 7 replies
- 2.6k views
-
-
CNN தொலைக்காட்சியில் சிறுபான்மை இனம் தேசிய இனமாகும் சாத்தியம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பறீட் சக்காரியாவின் (Fareed Zakaria') "GPS" என்ற வாராந்த நிகழ்ச்சியில் கடந்த 7ஆம் நாள் நிகழ்ச்சியின் நிறைவில், உலகில் எந்த சிறுபான்மை இனம் தேசிய இனமாகுவதற்குரிய வாய்ப்பு இருக்கின்றது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேசிய இனமாக ஏற்கனவே இருக்கும் ஈழத்தமிழ் மக்கள் தமது தனிநாட்டுக் கோரிக்கையை அங்கீகரிக்குமாறு கோரி இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பாளருக்கு மின்னஞ்சல் அனுப்பி வருகின்றனர். FareedZakariaGPS@cnn.comThis e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தமிழ் மக்கள் தமது வேணவா…
-
- 3 replies
- 3.2k views
-
-
வவுனியா சிறிலங்கா படைத் தலைமையகம் மீது தமிழீழ விடுதலை புலிகள் இன்று அதிகாலை நடத்திய ஆட்லறி மற்றும் வான் தாக்குதல்களினாலான மரபு வழி தாக்குதலில் இந்தியா வழங்கிய இந்திரா ராடர் அதற்கான கட்டுப்பாட்டு அறை ஆகியவை சேதமடைந்தமை தொடர்பில் ஆராய்வதற்காக இந்திய இராணுவ பொறியியல் தொழில்நுட்பவியலாளர் குழு ஓன்று கொழும்புக்கு வரவுள்ளதாக இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, சிறிலங்கா வான்படைக்கு புதிய ராடர் வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது குறித்தும் சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளுடன் இக்குழு பேச்சு நடத்தவுள்ளதாகவும் இந்திய தூதரக வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்பு தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. வவுனியா படைத் தலைமையகம் அமைந்துள்ள ஜோசப் இராணுவ முகாமின் ராடர் கட்டுப்பாட்டு அற…
-
- 9 replies
- 2.3k views
-
-
கல்விப் பொதுத் தராதர உயர்தர விடைத்தாள் திருத்தும் பணியில் கலந்தாராய்வுகளை மேற்கொள்ளாமல் விரிவுரையாளர்களின் புள்ளியியல் திட்டத்தின் அடிப்படையிலே மட்டும் விடைத்தாள்கள் திருத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் தமிழ் மொழி மூல மாணவர்களுக்குப் பதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இலஙகைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கடும் விசனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த ச.சரவணபவானந்தன் கருத்துத் தெரிவிக்கையி;ல், உயர்தரப்பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியின் போது வழமையாக வினாப்பத்திரங்களைத் தயாரித்த பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் புள்ளியிடும் முறை வழங்கப்படும். இதன் பின்னர் பொறுப்பான உயர் அதிகாரிகளும் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்தாலோசித்து புள்ளியியல் தொடர்பான மாற…
-
- 0 replies
- 978 views
-
-
அம்பாறை வக்குமுட்டியாவ பகுதியில் சுற்றுக்காவல் கடமையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடித்தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைநதவர்களில் மூவர் ஆபத்தான நிலையில் உள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 752 views
-
-
தமிழக மீனவர்களின் மீதான தாக்குதல்: புதுடில்லி இராஜதந்திரத்துக்குத் தோல்வி! 09.09.2008 தமிழர் விவகாரத்தில் எடுத்ததற்கெல்லாம் பலாத்காரத்தையும் அடக்குமுறையையும் பிரயோகித்து, துப்பாக்கி முனையில் பதில் கூறிப் பழகிக் கொண்டுவிட்ட இலங்கைப் படைகளுக்கு அந்தப் போக்கை மாற்றிக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் தமிழக மீனவர்களைக் கையாளும் விடயத்திலும் அதே திமிர்த்தனம் தொடர்கின்றது. இதை சகிக்கமுடியாமல் இப்போதாவது சற்று சீறிப் பாயும் கட்டத்துக்குத் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி வந்திருக்கின்றமை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கடலில் இறங்கும் தமிழக மீனவர்களுக்கு சற்று ஆறுதல் தரும் விடயம்தான். "சார்க்' மாநாட்டுக்காகக் கொழும்புக்கு வந்திருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், இலங்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒரு மாதத்தில் 157 படையினர் பலி, 983 பேர் காயம் வவுனியா நிருபர் 9/9/2008 3:08:12 PM - ஆகஸ்ட் முதலாம் திகதிலிருந்து செப்டெம்பர் முதலாம் திகதி வரையிலான ஒரு மாதத்தில் படைத் தரப்பில் 157 பேர் பலியாகியுள்ளனர் எனவும், 983 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க இன்று பாராளுமன்றில் தெரிவித்தார். அவசர கால சட்டம் தொடர்பான அறிக்கை பாராளுமன்றில் சமர்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவசர கால சட்டத்திற்கு வாக்களிப்பதிலிருந்து விலகியிருப்பது பயங்கரவாதத்திற்கு துணை போகும் செயல் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
-
- 6 replies
- 1.4k views
-
-
இன்று வவுனியா இராணுவத் தலைமையத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் ரடர்கள் ஒழிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ன இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் கூறினார். வடபகுதியில் இடம்பெறும் யுத்தம் தொடர்பான பொய்யான தகவல்களே வெளியில் வருவதாகவும், உண்மைத் தகவல்கள் வெளியாவதில்லையெனவும் அவர் குறிப்பிட்டார். அங்கு இடம்பெற்ற மோதல்களில் பாதுகாப்புத் தரப்பில் பலர் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார். “உதாரணமாக, 2006ஆம் ஆண்டு முதல் இதுவரை 1851 படையினர் கொல்லப்பட்டதுடன், 9901 பேர் காயமடைந்துள்ளனர். இவை உத்தியோகப்பற்றற்ற தகவல். இதுவே இவ்வாறாயின் உத்தியோகபூர்வ தகவல் இதனைவிட அதிகமாகவே இருக்கும்” என்றார் அவர…
-
- 0 replies
- 887 views
-
-
கிட்டு பீரங்கிப் படையணியின் சூட்டாதரவுடனும், வான்புலிகளின் குண்டு வீச்சுத் தாக்குதல் ஒத்துழைப்புடனும் விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியொன்று இன்று அதிகாலை வவுனியாவில் உள்ள வன்னி கூட்டுப்படைத் தளம் மீது அதிரடித் தாக்குதல் ஒன்றை நடாத்தி படைத் தரப்பிற்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. பத்துப் படையினரும் ஒரு காவல்துறையினனும் கொல்லப்பட்டதாகவும், 15 படையினரும், 5 வான் படையினரும், எட்டு கால்துறையினரும் காயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கா படைத்தரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பு எந்தத் தவல்களையும் இதுவரை வெளியிடவில்லை.
-
- 29 replies
- 9.4k views
-
-
புதுக்குடியிருப்பு நகர் மீது சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல்: 5 கடைகள் முற்றாக அழிவு [செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2008, 06:13 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு நகர் மற்றும் பாடசாலை ஆகியனவற்றின் மீது சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இன்று அதிகாலை குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன. புதுக்குடியிருப்பு நகரப்பகுதி மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4:30 முதல் 5:00 மணிவரை சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தின. மூன்று தடவைகள் அடுத்தடுத்து வீசப்பட்ட குண்டுகளில் புதுக்குடியிருப்பு நகரில் உள்ள சிறீ சுப்பிரமணிய வித்தியாசாலை சேதமடைந்துள்ளது. நகரில் உள்ள ஐந்து கடைகள் முற்றாக அழிந்துள்ள…
-
- 4 replies
- 1.2k views
-
-
வவுனியா நகருக்கு அண்மையாக உள்ள சிறிலங்கா படையினரின் முன்னணி நிலைகள் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி இன்று குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூன்று வானூர்திகள் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ராடரில் தென்பட்டதாகவும் வவுனியாவுக்கு மேலாக பறந்த வானூர்தி ஒன்று சிறிலங்கா படையினரின் முன்னணி நிலைகள் மீது குண்டுத் தாக்குதலை நடத்திவிட்டுச் சென்றதாகவும் அதனைத் தொடர்ந்து புலிகள் வவுனியாவை நோக்கி ஆட்லறி எறிகணைத்தாக்குதல் நடத்தியதாகவும் சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. -puthinam- அர்ரா சக்கை!!
-
- 96 replies
- 21.1k views
-